Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா அதிரடி: சசிகலாவை அதிமுவில் இருந்து நீக்கினார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா அதிரடி முடிவு: சசிகலாவை அதிமுவில் இருந்து நீக்கினார்...

மேலதிக செய்திகள் விரைவில்......

செய்தியின் மூலம் நக்கீரன், தற்ஸ் தமிழ்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே சோ.ராமசாமியையும் தூக்கி எறிஞ்சீங்கன்னா.. எம் ஜி ஆர் வழியில்.. போக.. நீங்க உருப்பட இன்னும்.. வழி பிறக்கும்..! நீங்க நல்லவங்களாக் கூட இருக்கலாம்.. உங்களை சுத்தி உள்ளவங்களே உங்கள கெடுக்கிறாங்க..! அந்த வகையில் சோ ஒரு விசக் கிருமி. அதையேன் பக்கத்தில வைச்சிருக்கீங்களோ.. தெரியல்ல..! :lol::icon_idea:

ஜெயலலிதா அதிரடி முடிவு: சசிகலாவை அதிமுவில் இருந்து நீக்கினார்

jeya_sasi.jpg

அதிமுகவில் இருந்து வி.கே.சசிகலா, ம.நடராஜன், திவாகர் (மன்னார்குடி), டிடிவி. தினகரன், வி.பாஸ்கரன், வி.என்.சுதாகரன், டாக்டர். எஸ்.வெங்கடேஷ், எம்.ராமச்சந்திரன், இராவணன், மோகன் (அடையாறு), குலோத்துங்கன், ராஜராஜன் உள்ளிட்ட 12 பேர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர் என்றும், அஇஅதிமுகவினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் அஇஅதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

நன்றி: நக்கீரன்.கொம்

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பெப்சி கோலா, கொக்கோ கோலா... கேள்விப்பட்டிருக்கேன்...!

இதென்ன புதுசா 'சசி கோலா'?

கும்பகோணக் குமரிகளின் கோலாகல 'திருவிழா'வில் பலியானோரின் புகைச்சலால் கூட இது நிகழ்ந்திருக்கலாம். :rolleyes:

j-sasi.jpg

.

Edited by ராஜவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே சோ.ராமசாமியையும் தூக்கி எறிஞ்சீங்கன்னா.. எம் ஜி ஆர் வழியில்.. போக.. நீங்க உருப்பட இன்னும்.. வழி பிறக்கும்..! நீங்க நல்லவங்களாக் கூட இருக்கலாம்.. உங்களை சுத்தி உள்ளவங்களே உங்கள கெடுக்கிறாங்க..! அந்த வகையில் சோ ஒரு விசக் கிருமி. அதையேன் பக்கத்தில வைச்சிருக்கீங்களோ.. தெரியல்ல..! :lol::icon_idea:

சோ.ராமசாமி அவாளுடைய ஆள். சசிகலாவை நீக்கிய மாதிரி... இலேசில் நீக்கமாட்டார். :D

Sasikala.jpg

மேலதிக இணைப்பிற்கு நன்றி நெடுக்ஸ். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெப்சி கோலா, கொக்கோ கோலா... கேள்விப்பட்டிருக்கேன்...!

இதென்ன புதுசா 'சசி கோலா'?

கும்பகோணக் குமரிகளின் கோலாகல 'திருவிழா'வில் பலியானோரின் புகைச்சலால் கூட இது நிகழ்ந்திருக்கலாம். :rolleyes:

j-sasi.jpg

.

13-natarajan1-200.jpg

இனியாவது.... நடராஜனுடன் இணைந்து, குடும்பம் நடத்த நாம் வாழ்த்துவோம்.

பாவம் அவரும் கலியாணம் கட்டியும், பிரமச்சாரி என்ற மாதிரி... எத்தனை நாள் தனியே... வாழ்வது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

JayaSasi1507_01.jpg

சென்னை: அதிமுகவினர் தங்களது கனவிலும் எதிர்பார்க்க முடியாத ஒரு செயலை முதல்வர் ஜெயலலிதா

இன்று செய்துள்ளார். தனது ஆருயிர்த் தோழியான சசிகலாவை அதிமுகவை விட்டு அதிரடியாக தூக்கி எறிந்துள்ளார். சசிகலா மட்டுமல்லாமல் அவரது மன்னார்குடி குடும்ப வகையறாவையே ஒட்டுமொத்தமாக கட்சியை விட்டு தூக்கி விட்டார்.

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சி அலைகளையும் ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கை படு வேகமாக பரப்பியுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா இதுதொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அதிமுக தலைமைக் கழக செயலாளர் சசிகலா, எம்.நடராஜன் (சசியின் கணவர்), வி.என்.சுதாகரன் (சசியின் அக்காள் மகன்), வி.என். திவாகரன் (சசியின் அக்காள் மகன்), டிடிவி தினகரன் (சசியின் அக்காள் மகன்), பாஸ்கரன் (சசியின் அக்காள் மகன்), டாக்டர் வெங்கடேஷ் (சசியின் உறவினர்), ராவணன் (சசியின் உறவினர்), அடையார் மோகன், குலோத்துங்கன், ராமச்சந்திரன், ராஜராஜன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து நீக்கப்படுகின்றனர்.

இவர்கள் யாரோடும் கட்சியினர் எந்த நிலையிலும் எந்தவிதமான தொடர்புகளையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

நன்றி தற்ஸ்தமிழ்

.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீடியோ கடையிலிருந்து போயஸ் தோட்டத்துக்குள் சசிகலா புகுந்தது எப்படி?

சென்னை: இவர்கள் பிரிய மாட்டார்கள் என்று நினைத்திருந்த அத்தனை பேருக்கும் சசிகலாவை ஜெயலலிதா அதிரடியாக நீக்கிய உத்தரவு பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவினரே கூட இதை நம்ப மறுக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் அரசியல் மற்றும் தனி வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் சசிகலா. அப்படி ஒரு நட்பை இருவரும் பேணிக் காத்து வந்தனர். இவர்களின் நட்பு உருவான கதை சுவாரஸ்யமானது.

தமிழக அரசில், மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்து வந்தவர் எம்.நடராஜன். இவரது மனைவிதான் சசிகலா. சாதாரணமான பெண்மணியாக, வீடியோ கடை நடத்தி வந்தவர் சசிகலா. 1982ம் ஆண்டு அப்போதைய தென் ஆற்காடு மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றி வந்தார் நடராஜன். அப்போது மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த சந்திரலேகாவுடன் நல்ல நட்பை வைத்திருந்தார்.

அப்போது எம்.ஜி.ஆர் ஆட்சி தமிழகத்தில் நடந்து வந்தது. சந்திரலேகாவிடம் தனது மனைவியை நடராஜன் அறிமுகம் செய்து வைத்தார். அவர் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவுக்கு சசியை அறிமுகப்படுத்தினார். இப்படித்தான் ஜெயலலிதாவின் நட்பு வளையத்திற்குள் புகுந்தார் சசிகலா.

வீட்டில் தனியே இருந்த ஜெயலலிதாவுக்கு வீடியோ கேசட்களை கொண்டு சென்று கொடுத்து வந்தார் சசிகலா. அந்த நட்பு இறுகி இருவரும் பிரிய முடியாத தோழிகளாயினர்.

அதன் பிறகு அவருக்கு உதவியாளர் போல செயல்பட்டார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின் கட்சியில் உறுப்பினரானார் சசிகலா. அதிமுகவில் பெரும் செல்வாக்கு மிக்கவராக உயர்ந்தார். அவருக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியும் தந்தார் ஜெயலலிதா.

அவரது அக்காள் மகனான டி.டி.வி.தினகரன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் கட்சியின் பொருளாளராகவும் பின்னர் அமைப்பு செயலாளராகவும் ஆக்கப்பட்டார்.

வீட்டுக்குள் நுழைய நடராஜனுக்கு ஜெயலலிதா தடை விதித்த போது தனது வீட்டை விட்டுவிட்டு, கணவரைப் பிரிந்து, போயஸ் தோட்டத்துக்கே வந்துவிட்டார் சசிகலா. கடந்த 29 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் வீடடில் தான் வசித்து வந்தார் சசிகலா.

இந்த நீண்ட கால நட்புக்கு வித்திட்ட சந்திரேலகா பின்னர் அப்போதைய ஆளுங்கட்சியினரால் தாக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். முகம் கருகிப் போய் படுகாயமடைந்த சந்திரலேகா பின்னர் தனது பணியை ராஜினமா செய்தார். ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமியுடன் இணைந்து அரசியலில் குதித்தார்.

சாதாரண பெண்மணியாக வலம் வந்து கொண்டிருந்த சசிகலா, போயஸ் தோட்டத்திற்குள் புகுந்த பின்னர் ஜெயலலிதாவின் ஆசியுடன் சக்தி வாய்ந்தவராக வலம் வந்தார். தனது தோழியை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் பேசி வந்தார் ஜெயலலிதாவும். சசிகலா மீது பல புகார்கள் வருகிறதே, ஏன் அவரை உங்களுடனேயே வைத்துள்ளீர்கள் என்று பலமுறை பல தரப்பிலும் கேட்கப்பட்டபோதும், சசிகலா எனது தோழி என்று அழுத்தம் திருத்தமாக கூறி அவருடன் தனது நட்பை விட்டுக் கொடுக்காமல் இருந்தவர் ஜெயலலிதா.

ஆனால் பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பாக மாறி தன்னையே பதம் பார்க்க சசிகலா நினைத்ததால்தான் இன்று அவரை நீக்கும் முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளார் ஜெயலலிதா.

ஆட்சியில் அராஜக தலையீடு:

கடந்த 2 அதிமுக ஆட்சியில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவில், தற்போதைய 3வது அதிமுக ஆட்சியில் சசிகலாவின் தலையீடுகள் அராஜகமாக இருந்ததாக தலைமைச் செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக ஐஏஎஸ் அதிகாரிகளை மிகப் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்த முற்பட்டார் சசிகலா. நான் முதல்வரா யார் முதல்வர் என்று ஜெயலலிதாவே கொதித்தெழுந்து கேட்கும் அளவுக்கு சசிகலாவின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

தனக்குப் பணியாத பல ஐஏஎஸ் அதிகாரிகளை மிரட்டி நீண்ட விடுப்பில் போக வைத்தார் சசிகலா என்று கூறுகிறார்கள். எந்த அதிகாரியாக இருந்தாலும் தன்னைத் தாண்டி ஜெயலலிதாவிடம் போகக் கூடாது என்றும் சசிகலா உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

சசிகலாவின் செயல்பாடுகள் எல்லை மீறிப் போனதால்தான் கொதித்தெழுந்து அவரை தூக்கி எறிந்துள்ளார் ஜெயலலிதா என்கிறார்கள்.

நன்றி தற்ஸ்தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவை கவிழ்த்து விட்டு ஆட்சியைப் பிடிக்க சசி தரப்பு சதி?- நீக்கத்திற்கு அதுவே காரணம்??

19-jaya-sasi1300.jpg

சென்னை: ஜெயலலிதாவுக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கில் ஒரு வேளை பாதகமாக தீர்ப்பு வந்தால் அதைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்க சசிகலா தரப்பு திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதனால்தான் ஜெயலலிதா, ஒட்டுமொத்தமாக அத்தனை பேரையும் அதிமுகவை விட்டு விரட்டி விட்டதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

என்ன நடந்தது என்று யோசிப்பதற்குள் என்னவெல்லாமோ நடந்து விட்டது என்று ஒரு வார்த்தை சொல்வார்கள். ஜெயலலிதா விஷயத்தில் அதுதான் நடந்திருக்கிறது. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை யோசித்துப் பார்ப்பதற்குள் என்னவெல்லாமோ நடந்தேறி விட்டதை பார்த்து அதிர்ந்து போய்த்தான் சசிகலா கும்பலை விரட்டி விட்டுள்ளார் ஜெயலலிதா என்கிறார்கள்.

விஷயம் ரொம்ப சிம்பிள். பெங்களூர் கோர்ட்டில் கடந்த 14 வருடங்களுக்கும் மேலாக நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கை மையமாக வைத்து சசிகலா தரப்பு ஒரு அபாரமான திட்டத்தை வகுத்து செயல்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதாவது இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு பாதகமாக நிச்சயம் தீர்ப்பு வரும். எனவே அவர் பதவி விலக நேரிடலாம். அப்படி நடந்தால், ஆட்சியைப் பிடிப்பது என்பதுதான் இந்த சதித் திட்டத்தின் மையப் புள்ளி என்கிறார்கள் 'கார்டனுக்கு' நெருக்கமானவர்கள்.

ஜெயலலிதா 3வது முறையாக முதல்வர் பதவிக்கு வந்த நாள் முதலே இந்த சதித் திட்டத்தை படிப்படியாக அமல்படுத்த ஆரம்பித்து விட்டது சசிகலா தரப்பு என்கிறது விவரம் அறிந்த வட்டாரங்கள்.

முதலில் ஜெயலலிதாவுக்கு அரசு நிர்வாகத் தகவல்கள், முக்கியத் தகவல்கள் எதுவும் போகாமல் தடுக்க ஆரம்பித்துள்ளது இந்த 'குரூப்'. உளவுத்துறைத் தகவல்களை ஜெயலலிதாவிடம் போகாமல் திட்டமிட்டு தடுத்துள்ளது. இதற்கு வசதியாகவே நேர்மையான அதிகாரியாக அறியப்பட்ட கூடுதல் டிஜிபி ராஜேந்திரனை உளவுத்துறை பொறுப்பிலிருந்து திட்டமிட்டு அகற்றியுள்ளனர். அவருக்குப் பதில், ஐஜியான பொன்.மாணிக்கவேலை கொண்டு வந்துள்ளனர்.

பொன்.மாணிக்கவேல் உளவுத்துறை தகவல் எதையும் நேரடியாக ஜெயலலிதாவுக்குக் கொண்டு போகவே இல்லை என்கிறார்கள். மாறாக சசிகலாவிடமே நேரடியாக உளவுத் தகவல்களை கொடுத்து வந்துள்ளார். இதில் சந்தேகம் வந்து விடக் கூடாது என்பதற்காகவே மாலைக்கு மேல் ஜெயலலிதாவை யாரும் சந்திக்காத வகையில் திட்டமிட்டு ஜெயலலிதாவையே குழப்பி வைத்துள்ளனர்.

இதனால் மாலைக்கு மேல் ஜெயலலிதாவை உளவுத்துறையினர் மட்டுமல்லாமல் யாருமே தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், கட்சித் தலைவர்கள் என யாருமே ஜெயலலிதாவை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அத்தனை பேருமே சசிகலாவை பார்க்க வேண்டிய நிலையை செட்டப் செய்து உருவாக்கியுள்ளனர். அதாவது திட்டமிட்டு செய்துள்ளனர்.

இதெல்லாம் ஆரம்பத்தில் ஜெயலலிதாவுக்குப் புரியவில்லை என்கிறார்கள். பொன்.மாணிக்கவேலின் செயல்பாடுகள் குறித்து ஜெயலலிதாவுக்குச் சந்தேகம் வந்தபோதுதான் நடந்தது, நடக்கிறது, நடந்து கொண்டிருப்பது என்ன என்பது லேசாக அவருக்குப் புரிந்திருக்கிறது. இதனால்தான் பொன்.மாணிக்கவேலை அவர் தூக்கினார்.

இதையடுத்து சசி தரப்பில் என்ன நடக்கிறது என்பதை அவர் சற்று சீரியஸாகவே கண்காணிக்க ஆரம்பித்தார். அப்போதுதான் தன்னைச் சுற்றி எவ்வளவு பெரிய சதி வலை பின்னப்பட்டுள்ளது என்பது அவருக்குப் புரிந்து அதிர்ந்திருக்கிறார். அதாவது கடந்த 6 மாதமாக தான் பெயரளவுக்கே முதல்வராக இருந்திருப்பதையும், உண்மையில் நிர்வாகத்தில் முழு அளவில் சசிகலாவே தலையிட்டு வந்திருப்பதும் அவருக்குப் புரிந்திருக்கிறது.

இதையடுத்து சசிகலாவுக்கு நெருக்கமான மூத்த ஐஏஎஸ் அதிகாரி பன்னீர்செல்வத்தை திட்ட செயலாக்கல் துறை செயலாளர் பதவியிலிருந்து தூக்கினார். இந்தத் துறைதான், அதிமுக அரசின் இலவச திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்த இலவசத் திட்டங்களை இந்த துறை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனது குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவரான பன்னீர்செல்வத்தை வைத்து பெரிய அளவில் விளையாடியுள்ளார் சசிகலா என்கிறார்கள். மேலும் பன்னீரை வைத்து நடராஜனும் பெருமளவில் காரியங்கள் சாதித்துள்ளாராம். பல முக்கிய நியமனங்களில் தனக்கு வேண்டியவர்களை போட்டிருக்கிறார் நடராஜன் என்கிறார்கள்.

மேலும் தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கியிடமே சசிகலா தரப்பு நேரடியாக உரச, விஷயம் ஜெயலலிதாவுக்கு போயுள்ளது. சாரங்கியே இதுகுறித்து நேரடியாக புகார் தர கோபமான ஜெயலலிதா, பன்னீர்செல்வத்தைத் தூக்க முடிவு செய்தார். இதை உணர்ந்து பன்னீரே பதவியை விட்டு போய் விட்டார்.

மொத்தத்தில் ஆட்சியைப் பிடிக்கும் சதி, அவர்களை மீறி நாம் நடந்து விடக் கூடாது என்று நடராஜனுடன் சேர்ந்து சசிகலா போட்ட திட்டம் உள்ளிட்டவைதான் ஜெயலலிதாவின் விஸ்வரூப கோபத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

போயஸ் தோட்டத்தை மையமாக வைத்து நடந்துள்ள இந்த ரகசிய செயல்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

http://tamil.oneindia.in/news/2011/12/19/tamilnadu-did-sasi-natrajan-plot-capture-jaya-govt-aid0090.html

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

இல்வாழ்க்கையில் ஊடல் கூடல் இரண்டுமே சகஜம்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இருவருக்கும் இடையில் உள்ள பல இரகசியங்கள் அம்பலத்துக்கு வரப்போகுதே !

இருப்பினும் ஜெயலலிதா, சசிகலாவை கட்சியை விட்டு தள்ளி வைப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் 1997ம் ஆண்டு ஒருமுறை அவர் கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. அப்போது 11 மாதங்களுக்கு போயஸ் கார்டன் பக்கமே வராமல் இருந்தார் சசிகலா. பின்னர் ஜெயலலிதாவே, சசிகலாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.

எனவே இன்றைய நீக்கம் எந்த அளவுக்கு வீரியம் மிகுந்தது என்பதை போகப் போகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.

http://www.alaikal.com/news/?p=91353

  • கருத்துக்கள உறவுகள்

இது ஜெயும்,சசியும் சேர்ந்து போடும் நாடகம்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெரிய பட்டாளமே உள்ளே இருந்திருக்கின்றது

சென்னையிலிருந்து, 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் ஜெ.

24 மணி நேரம் கெடு?: சசிகலா, நடராஜன் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் சென்னையிலிருந்து, 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என, ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ராவணன், மோகன் ஆகியோர் வீடுகளில் போலீசார் நடத்திய ரெய்டில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிகிறது.

அ.தி.மு.க., அரசு பதவியேற்றதும், அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கப் பிரிவில், சிறப்பு அலுவலர் அந்தஸ்தில் நியமிக்கப்பட்ட, ஏ.பன்னீர்செல்வம், கடந்த வாரம், அப்பணியிலிருந்து ராஜினாமா செய்தார்; இதிலிருந்து பிரச்னைகள் வெளிப்படத் துவங்கின. பன்னீர்செல்வம், நடராஜனுக்கு மிகவும் நெருக்கமாவனர். ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக ஓய்வு பெற்ற இவர், சிறப்பு அலுவலராகப் பணியில் அமர்த்தப்பட்டார்.கோட்டையில், அதிகார மையமாக விளங்கிய இவர், அதிகாரிகள் மாற்றம், அமைச்சர்கள் மாற்றம், அரசு டெண்டர்களை முடிவு செய்தல் என, அனைத்திலும் தலையிட்டு வந்தார் என குற்றச்சாட்டு எழுந்தது. அமைச்சர்களும், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும், கோட்டையில் உள்ள இவரது அறைக்கு வந்து, இவரை சந்தித்து விட்டு செல்லும் நிலையில் இவர் இருந்தார்.

இத்தகவல்கள் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதால், பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த திருமலைச்சாமி மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இது போன்ற நடவடிக்கைகள் நடந்து கொண்டு இருக்கையில், சசிகலா போயஸ் தோட்டத்தில் தங்குவதில்லை என்றும், இளவரசியின் வீட்டில் அவர் தங்குகிறார் என்றும் தகவல்கள் வெளியானது. இதனால், ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் அதிகமாகி, எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என பரபரப்பாகப் பேசப்பட்டது. அதன் எதிரொலியாக, சசிகலா, நடராஜன் மற்றும் இவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என, 14 பேரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்து நீக்கி, ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார்.முதல்வரின் நடவடிக்கை மூலம், இனி மன்னார்குடி கும்பலின் அட்டூழியம் முடிவுக்கு வந்ததாக, அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர். கட்சியிலிருந்து, சசிகலா குடும்பத்தினர் நீக்கப்பட்டதை வரவேற்று, அ.தி.மு.க.,வினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அப்போது, அவர்களில் சிலர் கூறும் போது, “சசிகலா கும்பலை விரட்டியடித்து ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் மூலம், அவருக்கு ஏற்படவிருந்த அவப்பெயர் தடுக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

http://www.alaikal.com/news/?p=91419

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19-sasi-jewels300.jpg

போயஸ் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டார் சசிகலா- கணவருடன் இணைந்தார்?

கட்சியை விட்டு நீக்குவதற்கு சில நாட்களுக்கு முன்பே சசிகலாவை தனது போயஸ் தோட்ட வீட்டிலிருந்து முதல்வர் ஜெயலலிதா துரத்தி விட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவர் எங்கு தங்கியுள்ளார் என்பது உறுதியாகத் தெரியவில்லை. கணவர் நடராஜனுடன் அவர் இணைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட சசிகலா, சில நாட்களுக்கு முன்பே போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டு விட்டார் என்று தகவல்கள் கூறுகின்றன. டிசம்பர் 14ம் தேதி முதல் அவர் போயஸ் தோட்டத்தில் தங்கவில்லை என்று அத்தகவல் தெரிவிக்கிறது.

அதற்கு முன்பே மூத்த அமைச்சர்களை அழைத்து சசிகலா உள்ளிட்டோருடன் இனி நேரடித் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று ஜெயலலிதா அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. எனவே அப்போதே அவர் சசிகலாவை நீக்கும் முடிவுக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அனைத்து அமைச்சர்களிடமும் அவர் முக்கிய உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளார். அதன்படி, இனிமேல் நீங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். எந்த உத்தரவாக இருந்தாலும் துறைச் செயலாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கலாம். சந்தேகம் இருந்தால் என்னை அணுகலாம் என்றும் கூறப்படுகிறது.

இதை அறிந்து கொண்ட சசிகலா, டிசம்பர் 14ம் தேதி பெங்களூர் கோர்ட்டில் ஆஜரான பின்னர் போயஸ் தோட்டத்துக்குத் திரும்பாமல் ஜெயக்குமார் என்பவருக்குச் சொந்தமான கெஸ்ட் ஹவுஸுக்குப் போய் விட்டாராம். இந்த கெஸ்ட்ஹவுஸின் உரிமையாளரான ஜெயக்குமார் சிங்கப்பூரைச் சேர்ந்தவர். இவர்தான் மோனோ ரயில் காண்டிராக்டைப் பிடிக்க சசிகலா மூலம் கடுமையாக முயன்றவர் என்று கூறப்படுகிறது.

தற்போது சசிகலா அதே கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருக்கிறாரா என்பது தெரியவில்லை. அதேசமயம், அவர் பெசன்ட் நகர் கலாஷேத்திரா காலனியில் உள்ள தனது கணவர் நடராஜன் வீட்டுக்குப் போயிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

சசிகலாவின் நீக்கம் அவரது ஆதரவு வட்டாரத்தை பெரும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

நன்றி தற்ஸ்தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

இது அவர்களின் குடும்ப பிரச்சினை

இதில் தமிழர்கள் நாம் அமைதி காப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.