Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் இன்னுமொரு 15 வருடத்துக்கு முந்திய கவிதை: நிழலி

Featured Replies

'வாழ்தல் எனும் மரணிப்பு' எனும் இந்தக் கவிதை சரிநிகரில் என் சொந்தப் பெயரில் வெளியாகி இருந்தது. அந்தப் பெயரை மறைப்பு செய்து இதில் கவிதையை மட்டும் ஒட்டி உள்ளேன்

அன்று சிங்களவர்களுக்கு மத்தியில் இருந்து சொந்தப் பெயரில் எழுதும் போது இருந்த அச்சமில்லா மனவுணர்வு, இன்று போலித் தமிழ் தேசியவாதிகள் மலிந்து போன காலத்தில் இல்லை என்பது ஒரு வெட்கப்படவேண்டிய முரண்நகை

sarinikarkavithai1copy.png

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, உங்கள் அந்த நேரத்துக் கவிதைகள் மிகவும் நன்றாக இருக்கின்றன!

ஆனால், அந்தக்கவிதைகளின் ஆழத்தில் ஒரு விதமான, ஏக்கமும் இயலாமையும் இழையோடுகின்றன!

கவிதைக்கு நன்றிகள், நிழலி!

உங்கள் கவிதை காலத்தை (15 வருடங்களை) வென்று நிற்கின்றது என்று மட்டும் உறுதியாகக் கூறமுடியும்!!! :D >>>

  • தொடங்கியவர்

நிழலி, உங்கள் அந்த நேரத்துக் கவிதைகள் மிகவும் நன்றாக இருக்கின்றன!

ஆனால், அந்தக்கவிதைகளின் ஆழத்தில் ஒரு விதமான, ஏக்கமும் இயலாமையும் இழையோடுகின்றன!

கவிதைக்கு நன்றிகள், நிழலி!

உங்கள் கவிதை காலத்தை (15 வருடங்களை) வென்று நிற்கின்றது என்று மட்டும் உறுதியாகக் கூறமுடியும்!!! :D >>>

நன்றி புங்கையூரன்,

அன்று நடந்த பல அரசியல் நிகழ்வுகளாலும், புலிகளின் இராணுவமயப்படுத்தப்பட்ட சிந்தனைகளாலும் தமிழ் ஈழம் பற்றிய நம்பிக்கை மிகவும் கேள்விக்குறியாகி போனதை முதலில் உணர்ந்த காலகட்டம் அது. நான் எழுதிக்கொண்டு இருந்த சரிநிகர் பத்திரிகை போராட்டத்தின் போக்கை பற்றி விருப்பு வெறுப்பற்று விமர்சித்த காரணத்தினால் புலிகளால் குறிப்பிட்ட காலத்துக்கு வடக்கில் முற்றாக தடை செய்யப்பட்டு இருந்தது (பின் பெண் போராளிகளே சரிநிகரில் ராதிகா குமாரசாமிக்கு பல பதில்களை எழுதி வந்ததும் நடந்தது)...

இப்ப பார்க்கும் போது என் அன்றைய கவிதைகள் என் இத்தகைய உணர்வுகள் வெளிக்காட்டி இருக்கின்றன என தெரிகின்றது

  • தொடங்கியவர்

...தப்பிலி நான் முதல் பதிந்த 15 வருடம் முந்திய கவிதையை பாத்து விட்டு "நிழலியின் எழுத்துக்களில் (படைப்புகளில்) மரணத்தைக் குறித்த உணர்வு ஓங்கியிருக்கும்" என்று குறிப்பிட்டு இருந்தார்.... இக்கவிதையின் தலைப்பை மீண்டும் பார்க்கும் போது, அதிலும் 'மரணம்' என்ற வார்த்தை இருப்பதை ஆச்சரியமுடன் கவனித்தேன்.

முதன் முதலில் 22 வயதில் ஸ்டூடியோ ஒன்றில் வேலை பார்க்கத்தொடங்கி முதல் சம்பளம் வந்த உடனே இடையில செத்துப்போனா அப்பா அம்மா பாவம் என்று ஆயுள் காப்புறுதி எடுத்துக் கொண்டதற்கும் இதற்கும் கூட ஒரு தொடர்பு இருப்பதாக நினைக்கின்றேன் இப்போது. மரணம் பற்றிய என் பிரக்ஞை என் வாழ்க்கையில் பல முடிவுகளை (மிகவும் அதிர்ச்சியான முடிவுகளைக் கூட) எடுக்க தூண்டி இருக்கு என்று நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ண....மரணம் பற்றிய சிந்தனைகள்,இல்லை 'மரணம்" பற்றிய நினைவு இல்லாமல் எழுதிய ஒன்றை சொல்லுங்கள் பார்க்கலாம்..மனிதனுக்கு பிறப்பு எப்படியோ அதே போல் இறப்பும் நிட்சயமான ஒன்று தான் ஆனாலும் உங்கள் வயதுக்கு இது கொஞ்சம் அதிகமான சிந்தனை என்று எண்ணத் தோன்றுகிறது..உங்களுக்கு நான் அறிவுரை சொல்ல வர இல்லை..

96 காலப்பகுதியில் சரி நிகரை பிரதானமாக வசித்தேன். ஆனால் மிக முரண்பட்ட கருத்துடன் இருந்தேன். ஆனால் காலம் பல முரண்பாடுகளை இணைக்கின்றது பல இணைப்புகளை முரண்படவைக்கின்றது.

அக்காலத்தின் கனதியை அக்காலத்திலேயே கவிதையாக பதிவுசெய்தது இக்கலத்திலும் பெறுமதியாகத் தெரிகின்றது காரணம் கவிதையில் உணர்வுகள் காலம் சார்ந்து உயிர்ப்புடன் இருக்கின்றது. சூழ்நிலை மற்றும் சம்பவங்கள் சார்ந்து சில வரிகளை எழுதுவதே எனது ஆகக் கூடிய எல்லை. உங்களது ஆற்றல் காலம் சார்ந்து இருக்கின்றது. உங்கள் எழுத்தாற்றல் தொடரவேண்டும்.

  • தொடங்கியவர்

96 காலப்பகுதியில் சரி நிகரை பிரதானமாக வசித்தேன். ஆனால் மிக முரண்பட்ட கருத்துடன் இருந்தேன். ஆனால் காலம் பல முரண்பாடுகளை இணைக்கின்றது பல இணைப்புகளை முரண்படவைக்கின்றது.

அண்மைக்காலங்களில் எனக்கு அதிகமாக நடப்பதும் நாங்கள் அனைவரும் எதிர்கொள்வதும் இப்படிப்பட்ட இணைவுகளையும் முரண்படல்களையும் தான். காலம் ஒரு பெரிய சுழல்

நிழலி,

உங்களது கவிதைகள் தத்ரூபமாக வெளிப்படுகின்றன. உங்களிற்குள் எழுகின்ற உணர்வை உங்கள் எழுத்து அப்படியே வாசகருள் தொற்றச் செய்கிறது. காற்று சுமந்து வந்த ஒரு மகரந்தமணி, பூவோ மரமோ உணரத்தேவையின்றி காயினை உருவாக்கி விடுவதைப் போல, நீங்கள் வாழ்ந்த சூழல் உங்களிற்குள் இந்த ஏக்கத்தையும் வியாக்கியானம் இன்றி விதைத்திருக்கிறது. ரூம் போட்டு யோசிக்த்தேவையின்றி, நடைபாதையில் நடந்துபோகையில் சூழல் உள்ளிற்குள் கருவுறச் செய்திருந்த கவிதையினை இயல்பாகப் பிரசவித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, உங்கள் கவிதைகளைத் தேடி எடுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டால் என்ன?

இப்படியான கவிதைளை வாசிக்கும் போது மனம் வெறுமையாகிவிடுகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.