Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கறை

Featured Replies

ஒரு அழகான கிராமம்.அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்.அவளைப் போல் ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள்.

இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது.இதனால் வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் காணாமலும் போய்விட்டனர். உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.

அதன் பிறகு அவர்கள் அந்த்க் காதலை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர்.அதைப் பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப் பட்ட ஊர் மக்கள் அந்தக் காதல் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க நகரத்திற்குச் சென்றிருந்தனர்.அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு லாரி மோதி அந்த வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே உயிர் துறந்தான். உடனே அந்தப் பெண்னும் மனநிலை பாதிக்கப்பட்டாள்.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு நினைவு திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன் வசித்து வந்தாள். திடீரென்று ஒரு நாள் அப்பெண்னின் தாய் ஒரு கனவு கண்டாள்.

அதில் ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும் இரத்த்க் கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது,இல்லா விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது.

அவள் தாய் கனவை மதிக்கவில்லை. அடுத்த நாள் அதே

தேவதை அந்தப் பெண்னின் தந்தையிடமும் கனவில் எச்சரித்தது.ஆனால் அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை

அடுத்த நாள் அப்பெண்னின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது.அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன் பிறகே அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள். உடனே அந்தப் பெண்னும் அதைத் துவைத்தாள். இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்த நாள் கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை என்று எச்சரித்தது. மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள்.இருந்தும் கறை போகவில்லை.

அடுத்த நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே அந்தப் பெண் கதவைத் திறந்தாள்.அப்போது கனவில் வரும் அதே தேவதை நின்று கொண்டிருந்தாள். அவள் முகம் கனவில் வருவதைப் போல் கனிவாக இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது.உடனே இவள் பயத்தினால் அலறினாள்.

அந்தத் தேவதை கோபத்துடன் கூறியது,"லூசாடி நீ!,மில்க்வைற் சவர்காரம் போடு கறை போயிடும்" என்றது.

Edited by komagan

நான் கதை நன்றாகப் போகிறதே என்று மிக ஆவலுடன் வாசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் முடிவு மில்க்வயிட் சவர்க்கார விளம்பரம் எனச் சொல்லாமல் சொல்லிவிட்டது.

உண்மையில் இந்த நகைச் சுவை மிக நன்றாக இருக்கிறது. என்னை மறந்து நான் சிரித்து விட்டேன்.

வாழ்த்துக்கள். தொடருங்கள் தங்கள் நகைச்சுவை பயணத்தை......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோமகன் அண்ணே கதை சுப்பருங்கோ ஆனால் ஒரு இத்துனோண்டு சந்தேகமண்ணே உந்தக்கதையை நான் கொஞ்சகாலம் முன்னாடி ஒரு தமிழக புளொக்கில பாத்த நாவகமண்ணே. உங்கடை கதையை யாரோ உல்டா பண்ணீட்டாங்களாண்ணா ?

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹி.. நல்ல கதை..! :icon_mrgreen:

ஆனாலும் இடையில ஓரிரு காட்சிகளை அநியாயத்துக்கு வெட்டி விட்டீங்கள்..! :( அதாவது காதலர்களுக்கு எதிர்ப்பு வந்த உடனே காதலன் முதலில் தற்கொலைக்குத்தான் முயற்சி பண்ணினான்..! :unsure: இடையில் ஒரு நல்ல ஆத்மா வந்து தன் தியாகத்தின்மூலம் காதலனைக் காப்பாற்றிவிட்டார்..! :huh: காட்சி கீழே..!! :unsure:

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே கோவுக்கு சொன்னதுபோல்

சனி மாற்றத்துக்கான பலாபலன்களைப்பார்க்கவும். :lol::icon_idea: :icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே கோவுக்கு சொன்னதுபோல்

சனி மாற்றத்துக்கான பலாபலன்களைப்பார்க்கவும். :lol::icon_idea: :icon_idea: :icon_idea:

:o :o :lol: :lol: :lol:

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு யாழில் சில நாட்களாக புரியாத ஒன்று

குளத்தில போட்டா

ஆற்றில இருந்து வருகுது

ஒன்றுக்கு அடித்தா

இன்னொன்று வலிக்குது

யாருக்காவது புரிந்தா சொல்லுங்கப்பா.... :( :( :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அழகான கிராமம்.அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்.அவளைப் போல் ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள்.

இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது.இதனால் வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் காணாமலும் போய்விட்டனர். உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.

அதன் பிறகு அவர்கள் அந்த்க் காதலை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர்.அதைப் பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப் பட்ட ஊர் மக்கள் அந்தக் காதல் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க நகரத்திற்குச் சென்றிருந்தனர்.அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு லாரி மோதி அந்த வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே உயிர் துறந்தான். உடனே அந்தப் பெண்னும் மனநிலை பாதிக்கப்பட்டாள்.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு நினைவு திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன் வசித்து வந்தாள். திடீரென்று ஒரு நாள் அப்பெண்னின் தாய் ஒரு கனவு கண்டாள்.

அதில் ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும் இரத்த்க் கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது,இல்லா விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது.

அவள் தாய் கனவை மதிக்கவில்லை. அடுத்த நாள் அதே

தேவதை அந்தப் பெண்னின் தந்தையிடமும் கனவில் எச்சரித்தது.ஆனால் அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை

அடுத்த நாள் அப்பெண்னின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது.அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன் பிறகே அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள். உடனே அந்தப் பெண்னும் அதைத் துவைத்தாள். இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்த நாள் கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை என்று எச்சரித்தது. மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள்.இருந்தும் கறை போகவில்லை.

அடுத்த நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே அந்தப் பெண் கதவைத் திறந்தாள்.அப்போது கனவில் வரும் அதே தேவதை  நின்று கொண்டிருந்தாள். அவள் முகம் கனவில் வருவதைப் போல் கனிவாக இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது.உடனே இவள் பயத்தினால் அலறினாள்.

அந்தத் தேவதை கோபத்துடன் கூறியது,"லூசாடி நீ!,மில்க்வைற் சவர்காரம் போடு கறை போயிடும்" என்றது.

:lol: :lol: :lol:

  • தொடங்கியவர்

நான் கதை நன்றாகப் போகிறதே என்று மிக ஆவலுடன் வாசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் முடிவு மில்க்வயிட் சவர்க்கார விளம்பரம் எனச் சொல்லாமல் சொல்லிவிட்டது.

உண்மையில் இந்த நகைச் சுவை மிக நன்றாக இருக்கிறது. என்னை மறந்து நான் சிரித்து விட்டேன்.

வாழ்த்துக்கள். தொடருங்கள் தங்கள் நகைச்சுவை பயணத்தை......

மிக்க நன்றிகள் கல்கி உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு :):):) .

  • தொடங்கியவர்

கோமகன் அண்ணே கதை சுப்பருங்கோ ஆனால் ஒரு இத்துனோண்டு சந்தேகமண்ணே உந்தக்கதையை நான் கொஞ்சகாலம் முன்னாடி ஒரு தமிழக புளொக்கில பாத்த நாவகமண்ணே. உங்கடை கதையை யாரோ உல்டா பண்ணீட்டாங்களாண்ணா ?

மிக்க நன்றிகள் அஸ்வினி உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு . மேலும் , நான் படிக்கும் காலங்களில் நண்பர்கள் பம்பலுக்கு சொன்ன கதை இது . ஒரு கதையின் கருவை , பலர் தங்கள் பார்வையிலும் , மாறுபட்ட கோணத்திலும் எழுதுவது உள்ள விடையமே :) :) :) .

ஹிஹி.. நல்ல கதை..! :icon_mrgreen:

ஆனாலும் இடையில ஓரிரு காட்சிகளை அநியாயத்துக்கு வெட்டி விட்டீங்கள்..! அதாவது காதலர்களுக்கு எதிர்ப்பு வந்த உடனே காதலன் முதலில் தற்கொலைக்குத்தான் முயற்சி பண்ணினான்..! இடையில் ஒரு நல்ல ஆத்மா வந்து தன் தியாகத்தின்மூலம் காதலனைக் காப்பாற்றிவிட்டார்..! காட்சி கீழே..!!

:lol:

இந்த விழையாட்டுத்தானே வேணாங்கிறது டங்கு :D:D .மிக்க நன்றிகள் உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு :) :) .

ஏற்கனவே கோவுக்கு சொன்னதுபோல்

சனி மாற்றத்துக்கான பலாபலன்களைப்பார்க்கவும்.

ஏன் விசுகர் ???????? எனக்கு ( அத்தம் ) ஏழரை முடிஞ்சுது , வெருட்டாதையுங்கோ :D .

  • தொடங்கியவர்

எனக்கு யாழில் சில நாட்களாக புரியாத ஒன்று

குளத்தில போட்டா

ஆற்றில இருந்து வருகுது

ஒன்றுக்கு அடித்தா

இன்னொன்று வலிக்குது

யாருக்காவது புரிந்தா சொல்லுங்கப்பா.... :( :( :(

யாரங்கே !!!!!!!! அரசவை உறுப்பினர் தலைமையில் அரசவை கூடட்டும் . எல்லோரும் விசுகருடன் கபே குடிப்போம் !!!!!!!!!!!

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

விசர்க் கதை! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடந்தது கோமகன் நீங்களுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோமகன் அண்ணா 2011 எழுதிய கதையை 2009ம் ஆண்டு இன்னொருவர் உல்டா பண்ணீட்டாங்கப்பா. கோமகன் அண்ணாவின் கதையை உல்டாபண்ணிய ஆளின் கதை லிங்கு இதுதான் கோமகன் அண்ணா பாருங்கோ. :o

http://www.eegarai.net/t3841-topic

கதையை அப்பிடியே காவீண்டு வந்து தர முயற்சித்தேன். முடியவில்லை. தொழில்நுட்பம் தெரிந்த விண்ணர்கள் யாராவது உதவி செய்யுங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.