Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்து சிவனாலயங்கள் பாகம் 4

Featured Replies

மதுரையம்பதி எனவும், பெருங்காடு சிவன் ஆலயம் எனவும், கிராஞ்சியம்பதி சிவன் ஆலயம் எனவும் அழைக்கப்படும் புங்குடுதீவு கிராஞ்சியம்பதி சிறீ மீனாட்சியம்பாள் சமேத சோமசுந்தரேஸ்வர சுவாமி திருக்கோவில்.

யாழ்ப்பாணத்தின் மேலைத்திசையில் அமைந்த சப்ததீவுகளில் பொன்விளங்கு பூமியாக திகழ்வது புங்குடுதீவு. இப்புங்குடுதீவிலே கோவில்கள் நிறைந்து காணப்படும் பிரதேசம் பெருங்காடு எனும் அழகிய கிராமம். இங்கே வாழ்ந்து வந்த சிவப்பிராமணராகிய மார்க்கண்டேய குருக்கள் இப்பெருங்காடு சிவன் ஆலயத்தை தாபிதம் செய்ததாக கூறுவர். இங்கே எழுந்தருளியிருக்கும் சிவலிங்கம் காசியிலிருந்தும், அருளாட்சி கொடுக்கும் அம்பிகையின் சிலை மதுரையிலிருந்தும் கொண்டு வரப்பட்டவை. ஆலயத்தின் திருப்பணிகள் முடியுமுன்னரே மார்க்கண்டேயக் குருக்கள் கதிர்காமத்திலே இறைவனடி சேர்ந்தார்.

அதன் பின்னர் குருக்களின் மனைவியாரும் அவரின் சகோதரர்களும் சேர்ந்து உர்மக்களின் உதவியோடு பிள்ளையார் கோயில், நவக்கிரக கோயில், வைரவர் கோயில் ஆகியவற்றோடு கூடிய ஆலயத்தின் திருப்பணிவேலைகளை நிறைவு செய்து சிறப்பாக கும்பாபிடேகத்தினையும் செய்தார்கள்.

இரண்டாவது கும்பாபிடேகமும் சிறிது காலத்திலேயே இடம்பெற்றது. இதன்பின் 1977ம் ஆண்டு பஞ்சலிங்க கோயில், மகாவிட்டுணு கோயில் என்பனவும் அமைக்கப்பட்டு மூன்றாவது கும்பாபிடேகமும் சிறப்பாய் நடைபெற்றது. இதன்பின் 1991இலும் பின் 2005இலும் கும்பாபிடேகங்கள் நடைபெற்றன.

இவ்வாலயத்திலே வருடாந்த மகோற்சவம் பங்குனி மாதத்தில் நடைபெறும். இதைவிடவும் சங்கிராந்தி பூசை, பிரதோசம், நால்வர் பூசை, நவராத்திரி பூசை, நடராஜர் அபிசேகம், கேதாரகௌரி நோன்பு, இலட்சார்ச்சனை, மார்கழி திருவாதிரை, ஏகாதசி போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

புங்குடுதீவிலே இரண்டு இராச கோபுரங்களுடனம் அமைந்து சிறப்பைக்கொடுப்பதாய் இவ்வாலயம் அமைந்துள்ளது.

http://www.thejaffna.com/jaffna/temples/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/

  • கருத்துக்கள உறவுகள்

கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்

அதேபோல யாழிலும் கோவில்களைப் பற்றிய

உங்கள் இணைப்புக்கள் தொடரட்டும் கோமகன்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்புக்கு கோ

என் ஊரையும் நினைவுகளையும் மீண்டும் அசைபோட உதவியுள்ளது.

ஆனால் நான் முருகபக்தன்.

அருகில் இதை ஒட்டியபடி இருக்கும் கிராஞ்சியம்பதி முருகன் தான் என் கடவுள்.

அது எனது கோயிலும் கூட. அங்கிருந்தால் அதன் தர்மகர்த்தா நான்தான்.

என் அப்பர் நாடு பொது என்று வெளிக்கிட்டு பொதுவில் விட்டுவிட்டார் :( :( :(

  • தொடங்கியவர்

நன்றி இணைப்புக்கு கோ

என் ஊரையும் நினைவுகளையும் மீண்டும் அசைபோட உதவியுள்ளது.

ஆனால் நான் முருகபக்தன்.

அருகில் இதை ஒட்டியபடி இருக்கும் கிராஞ்சியம்பதி முருகன் தான் என் கடவுள்.

அது எனது கோயிலும் கூட. அங்கிருந்தால் அதன் தர்மகர்த்தா நான்தான்.

என் அப்பர் நாடு பொது என்று வெளிக்கிட்டு பொதுவில் விட்டுவிட்டார்

மிக்க நன்றிகள் விசுக்கு உங்கள் நேரத்திற்கும் கருத்துப்பகிர்வுகளுக்கும் . இங்கேயுமா பேதம் :unsure::unsure: ? இறைபக்தன் என்பதே பொருத்தமானது :):icon_idea: .

கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்

அதேபோல யாழிலும் கோவில்களைப் பற்றிய

உங்கள் இணைப்புக்கள் தொடரட்டும் கோமகன்.

நன்றி

மிக்க நன்றிகள் வாத்தியார் உங்கள் நேரத்திற்கும் கருத்துப் பகிர்வுகளிற்கும்

:):):) .

நன்றி கோமகன் அண்ணா ,பிரஜோசனமான தகவல்கள் . குறைந்த பட்சம்எல்லா தீவுகளையும் சுற்றி பார்க்கும் எனது ஆசை வெறும் நிராசையாக போய்விடுமோ என்று பயமா இருக்கு.

முயற்சி செய்து படங்களையும் இணைத்தால் நன்றாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோமி அண்ணா..இந்த ஆலயத்தின் சொந்தக்காரப்பிள்ளையும் பார்த்துட்டு ரொம்ப சந்தோசபட்டவா.தொடர்ந்து எழுதுங்கோ கொள்ளை அடிக்க நான் இருக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோமி அண்ணா..இந்த ஆலயத்தின் சொந்தக்காரப்பிள்ளையும் பார்த்துட்டு ரொம்ப சந்தோசபட்டவா.தொடர்ந்து எழுதுங்கோ கொள்ளை அடிக்க நான் இருக்கிறன்.

புரியுது :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

புரியுது :icon_idea:

எனக்கு ஒன்றுமே புரிய இல்லை... :rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒன்றுமே புரிய இல்லை... :rolleyes::lol:

நல்ல பிள்ளைக்கு அதுதான் அழகு

தெரிந்தாலும் காடடிக்கொள்ளக்கூடாது

:lol::icon_idea: :icon_idea:

  • தொடங்கியவர்

நன்றி கோமகன் அண்ணா ,பிரஜோசனமான தகவல்கள் . குறைந்த பட்சம்எல்லா தீவுகளையும் சுற்றி பார்க்கும் எனது ஆசை வெறும் நிராசையாக போய்விடுமோ என்று பயமா இருக்கு.

முயற்சி செய்து படங்களையும் இணைத்தால் நன்றாக இருக்கும்.

மிக்க நன்றிகள் சுடலைமாடன் உங்கள் நேரத்திற்கும் கருத்துப்பகிர்வுகளுக்ம் . உங்கள் விருப்பத்திற்கு ஏதோ என்னால் முடிஞ்சது :) :) :) .

sivantemle04.jpg

sivantemple01.png

sivantemple02.jpg

sivantemple03.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தகவல்களுக்கும், படங்களின் இணைப்புக்கும் நன்றி கோமகன்!

  • தொடங்கியவர்

நன்றி கோமி அண்ணா..இந்த ஆலயத்தின் சொந்தக்காரப்பிள்ளையும் பார்த்துட்டு ரொம்ப சந்தோசபட்டவா.தொடர்ந்து எழுதுங்கோ கொள்ளை அடிக்க நான் இருக்கிறன்.

மிக்க நன்றிகள் யாயினி உங்கள் நேரத்திற்கும் கருத்துப் பகிர்வுகளுக்கும் . உங்கள் நண்பியையையும் யாழுக்கு அறிமுகப்படுதிறதில் என்ன தயக்கம் :):):) ?

மிக்க நன்றி அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சிவன் கோவிலின் சிறப்பம்சம், பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்!

இங்கு பிரதிஷ்டை செய்யப் பட்ட 'மூல லிங்கமானது' காசியில் இருந்து கொண்டுவரப்பட்டது!

அனேகமாக, இப்படியான லிங்கங்கள், கங்கை அல்லது நர்மதா ஆற்றங்கரைகளில். வித்தியாசமான நிறங்களை உடைய கற்களால், உருவாக்கப் படுகின்றன!

எனக்குத் தெரிய வேறு சிவன் கோவில்களில் இப்படியான லிங்கங்கள் இருப்பதாக, எனக்குத் தெரியவில்லை!

விசுகரின் கிராஞ்சியம்பதி முருகன் கோவில் 'கோபுரம்;', நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, வளர்ந்து கொண்டிருக்கின்றது!

ஊருக்கு என்னை அழைத்துச் சென்றதற்காக, உங்களுக்கொரு பச்சை!

தொடருங்கள், கோமகன்!!!

  • தொடங்கியவர்

இந்தச் சிவன் கோவிலின் சிறப்பம்சம், பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்!

இங்கு பிரதிஷ்டை செய்யப் பட்ட 'மூல லிங்கமானது' காசியில் இருந்து கொண்டுவரப்பட்டது!

அனேகமாக, இப்படியான லிங்கங்கள், கங்கை அல்லது நர்மதா ஆற்றங்கரைகளில். வித்தியாசமான நிறங்களை உடைய கற்களால், உருவாக்கப் படுகின்றன!

எனக்குத் தெரிய வேறு சிவன் கோவில்களில் இப்படியான லிங்கங்கள் இருப்பதாக, எனக்குத் தெரியவில்லை!

விசுகரின் கிராஞ்சியம்பதி முருகன் கோவில் 'கோபுரம்;', நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, வளர்ந்து கொண்டிருக்கின்றது!

ஊருக்கு என்னை அழைத்துச் சென்றதற்காக, உங்களுக்கொரு பச்சை!

தொடருங்கள், கோமகன்!!!

மிக்க நன்றிகள் புங்கையூரான் உங்கள் நேரத்திற்கும் , கருத்துப்பகிர்வுகளுக்கும் :):):) .

  • கருத்துக்கள உறவுகள்

கோணேச்வர‌த்தை தவிர‌ ஊரில் உள்ள எந்த சிவன் கோயிலுக்கும் நான் போகவில்லை...இப்படியான பதிவுகளைப் போட்டு ஊர் ஞாபகத்தை கொண்டு வந்து எரிச்சலூட்டும் கோமகன் ஓழிக <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.