Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துகளில் மாற்றங்கள் [2012]

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"புதினப்பலகை" எனும் தலைப்பில் ஒரு கருத்து மறைக்கப்பட்டதுடன் இன்னுமொரு கருத்தில் ஒரு சொற்பிரயோகம் நீக்கப்பட்டுள்ளது.

  • Replies 187
  • Views 27.3k
  • Created
  • Last Reply

பிரித்தானிய மாவீரர் நாள் நிகழ்வு எக்செல் (Excel) மண்டபம் எனும் திரியில் தனிநபர் தாக்குதல் கருத்துக்கள் பல நீக்கப்பட்டுள்ளன.

ஏன்பள்ளி கொண்டீர் ஐயா ???????? எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

தமிழரின் வாழ்வியல் கருவூலம் எனும் திரியில் இருந்து சீண்டும் வகையில் அமைந்த கருத்துக்கள், பதில் கருத்துக்கள் அகற்றப்பட்டுள்ளன.

திரிகளில் சீண்டல்கள், நேரடி/மறைமுக தனிநபர் தாக்குதல் கருத்துக்கள் காவப்படுவது, பதியப்படுவது தவிர்க்கப்படவேண்டும்.

  • தொடங்கியவர்

'ஏன்பள்ளி கொண்டீர் ஐயா ???????? ' என்றதலைப்பிலிருந்து இறுதியாகப் பதியப்பட்ட சில கருத்துக்கள் நீக்கப்பட்டு, திரி பூட்டப்பட்டுள்ளது.

வண்டு முருகன் நாற்சந்தியில் தான் ஆரம்பித்த தலைப்பையும் மாற்றி அத்திரியில் இருந்து தனது கருத்துக்களையும் நீக்கியதால் அத்திரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

இப்படியான கருத்துக்கள விதிமுறைகளை மீறும் செயற்பாடுகள் தவிர்க்கப்படவேண்டும்.

கருத்துகளை திருத்துதல்: ஒருவர் தனது பதிவில் கருத்துகளில் உள்ள எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் மற்றும் தவறான மூலம் என்பனவற்றை மட்டுமே திருத்தலாம். இது தொடர்பான மேலதிக உப விதிகள்

  • ஏனைய உறுப்பினர்கள் தமது பதில்களை எழுதியபின் தாம் எழுதிய கருத்துகளை நீக்குவதோ அல்லது பிரதான கருத்தில் மாற்றத்தையோ செய்யக் கூடாது
  • நிர்வாகத்தின் அனுமதி இன்றி திரியில் எழுதியவற்றை அழிக்க கூடாது
  • தன்னால் ஆரம்பிக்கப்பட்ட திரி ஒன்றை பூட்ட வேண்டுமாயின் மட்டுறுத்தினர்களுக்கு தனிமடலில் அறியத் தரலாம். மட்டுறுத்தினர்களின் இறுதி முடிவே செயல்படுத்தப்படும்

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி மூலம் இணைக்கப்படாத செய்திகள் அனைத்தும் நீக்கப்படும்.நன்றி.

"மாணவ சமூகத்திற்கு ஆதரவான புலம்பெயர் போராட்டங்கள் " எனும் திரியில் இருந்த அநாவசியமான கருத்துகள் நீக்கப்பட்டன.

"மிருகங்களும் மனிதர்களும்" என்ற திரியில் இருந்து திரிக்கு பொருத்தமில்லாத சில பதில்கள் நீக்கப்பட்டன.

கோமகன் நாற்சந்தியில் தான் ஆரம்பித்த திரி நீக்கப்பட்டுள்ளது.

 

களவிதி: கருத்துக்கள உறுப்பினர்கள் பற்றிய குறைகளையும், விமர்சனங்களையும் நேரடியாக நிர்வாகத்துக்கு முறைப்பாட்டு (Report) மூலமாகவோ அல்லது தனிமடல் மூலமோ அறியத்தரல் வேண்டும். (அதற்கான தனித் தலைப்புகள் தொடக்கப்படல் ஆகாது.)

 

  • தொடங்கியவர்

'கருணாநிதியின் உடல் நலம் குறித்து வதந்தி' என்ற தலைப்பில் எழுதப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

பங்கு பிரிப்புக்களும் படுகொலையும் பாகம் 2 எனும் திரியில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

 

MAX முதல் பரிசு 50 மில்லியன் யாருக்கு? எனும் திரியில் இருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற பல அரட்டைகள் அகற்றப்பட்டுள்ளன.
 

தமிழனத்தைக் கருவறுக்க நினைக்கும் இலங்கைக்கு வரமாட்டேன்! புரட்சித்தமிழன் சத்யராஜ். எனும் திரியில் ஆரோக்கியமற்ற மறைமுக சீண்டல் கருத்துக்கள் பல வைக்கப்பட்டு கருத்தாடல் திசை மாறுவதால் திரி பூட்டப்படுகின்றது.

  • தொடங்கியவர்

'பங்கு பிரிப்பும் படுகெலையும் பாகம் 3' என்ற தலைப்பு தற்காலிகமாகப் பூட்டப்பட்டுள்ளது.

பங்கு பிரிப்பும் படுகெலையும் பாகம் 3 திரி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

 

கள உறவுகள் நாகரிகமாகவும் ஆரோக்கியமான முறையிலும் கருத்தாடலைத் தொடருங்கள். கருத்தாடலுக்கான கள விதிகளை மீறுபவர்கள் மீது இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

பங்கு பிரிப்பும் படுகெலையும் பாகம் 3 திரியிலிருந்து பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. கள உறவுகள் ஊகங்களின் அடிப்படையிலும் கருத்துக்கள் வைப்பதையும், தனிப்பட்ட விபரங்களை கருத்துக்களில் பகிர்வதையும் தவிர்த்தல் வேண்டும்.

பங்கு பிரிப்பும் படுகெலையும் பாகம் 3 திரியிலிருந்து மேலும் பல கருத்துக்கள் நீக்கப்படுகின்றன. தலைப்புக்கு பொருத்தமற்ற தனிப்பட்ட விடயங்கள் கருத்துக்களத்தில் அனுமதிக்கப்படமாட்டாது.

 

பங்கு பிரிப்பும் படுகெலையும் பாகம் 3 திரி ஆரோக்கியமான கருத்தாடலுக்கு வழிவகுக்காததால் பூட்டப்படுகின்றது.

பங்கு பிரிப்புக்களும் படுகொலையும் பாகம் 2 எனும் திரியில் இருந்து இறுதியாகப் பதிந்த சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

 

கள உறவுகள் தங்களது சொந்தக் கருத்து/ஆக்கம் இல்லையென்றால் மூலத்தைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

  • தொடங்கியவர்

'சம்பந்தரின் பாராளுமன்ற உரை: சொன்னதும் விளங்கிக் கொள்ளப்பட்டதும் யதீந்திரா' என்றதலைப்பிலிருந்து அநாகரீகமான உரையாடல்கள், தலைப்புடன் தொடர்பற்ற கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

2 அடி ஆழத்துடன் 60 அடி நீளத்திற்கு பூமி பிளவு: உலகம் அழிந்துவிடுமோ என மக்கள் பீதி!! எனும் திரியில் ஒருமையில் எழுதப்பட்ட கருத்தொன்று நீக்கப்பட்டது.

பலர் தம் மனம் புண்படுவதாகக் குறிப்பிட்டதாலும், விளையாட்டுக்கேனும் இவ்வாறான விடயங்கள் நகைச்சுவைக்குரியதாக எடுப்பது சரியில்லை என்பதாலும் தமிழ்சிறியால் ஆரம்பிக்கப்பட்ட " தமிழ்சிறியின் மரண அறிவித்தல்." எனும் திரி அகற்றப்படுகின்றது.

" பிரித்தானியாவில் கேணல் பரிதி அவர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு அணிதிரள்வோம் வாரீர்..!! " எனும் திரியில் எழுதப்பட்ட மிக மோசமான பிரதேசவாதக் கருத்துகளும், சாதிகளை இழுத்து எழுதிய கருத்துகளும் நீக்கப்பட்டதுடன், இதில் ஈடுபட்ட அனைவருக்கும் எச்சரிக்கப் புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன.

 

தொடர்ந்து யாழில் பிரதேசவாதம் கதைக்கின்றவர்கள் மீது, கதைக்க தூண்டுகின்றவர்கள் மீதும், சாதி வேறுபாடுகளை தூண்டுகின்றவர்கள் மீதும் கண்டிப்பாக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

 

நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.