Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்கிரஸுடன் இனிமேல் கூட்டணி வைத்தால் என்னைப் போன்ற பைத்தியக்காரன் வேறு யாரும் இருக்க முடியாது - கருணாநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

03.jpg 12.02.12 ஹாட் டாபிக் மிகுந்த எதிர்பார்ப்போடு துவங்கிய தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடைசியில் முட்டல், மோதல்களுடன் நடந்து முடிந்திருக்கிறது. ‘ஒருவேளை இந்த மோதல் காட்சிகள் நடக்காமல் இருந்திருந்தால் அடுத்த தலைமைப் பொறுப்பை ஏற்க இருப்பது யார் என்பதை நிச்சயமாக தலைவர் அறிவித்திருப்பார். ஆனால் அது நடக்காமல் போய்விட, மனம் நொந்து போய்விட்டார் தலைவர்’ என்கிறார்கள் சில சீனியர் தலைவர்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உட்கட்சித் தேர்தல் குறித்து விவாதிக்க தி.மு.க. பொதுக்குழு பிப்ரவரி 3-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்து இருந்தது. இந்தப் பொதுக்குழுவில் கனிமொழிக்கு மாநில அளவில் பதவி கிடைக்கும் என்றும், ஸ்டாலினுக்கு செயல்தலைவர் பதவி கிடைக்கும் என்று அவரது ஆதரவாளர்களும் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

இந்நிலையில், கட்சியின் சட்டவிதிகளைத் திருத்தி மூன்று முறைக்கு மேல் உள்ள மாவட்டச் செயலாளர்களை மாற்ற சட்டத் திருத்தமும், செயல்தலைவர் பதவியைக் கொண்டுவருவதற்கு தலை03a.jpgவருக்கு அதிகாரம் கொடுக்கும் வகையிலும் கட்சியின் பைலாவை மாற்றியமைத்தனர். இதுகுறித்து விவாதிக்க உயர்மட்டக் குழு கூட்டம் கடந்த 2 -ம் தேதி கூடியது.

தி.மு.க.வின் சட்டவிதிகளில் என்னென்ன மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது என்பதை டி,கே.எஸ்.இளங்கோவன் வாசித்த போது, மூன்று முறைக்கு மேல் பதவி வகிக்கும் மாவட்டச் செயலாளர்களை மாற்ற வேண்டும் என்ற சட்டவிதிக்கு வீரபாண்டி ஆறுமுகம், கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார். ‘ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் பொய் வழக்கில் சிறைக்குச் சென்றுள்ளனர், அவர்களுக்கு கட்சி ஆறுதலாக இருக்க வேண்டிய நேரத்தில், பதவியை பறிக்கப் போகிறீர்களா?’ என்று காரசாரமாகப் பேச, அத்திட் டத்தைக் கைவிட்டுவிட்டு, ஒன்றிய, நகர அளவில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

மறுநாள் காலையில் பத்து மணிக்குத் துவங்க இருந்த பொதுக்குழு கூட்டத்திற்கு பத்து நிமிடம் தாமதமாக ஸ்டாலின் வந்தார். அடுத்தடுத்த ஐந்து நிமிட இடைவெளியில் அழகிரி, தயாநிதி, கனிமொழி, தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் வந்தனர். வசந்தி ஸ்டாலின் எம்.பி. முன்வரிசையில் உட்கார இடம் இல்லாததால், வெளியே, மகளிர் போலீஸார் உட்கார்ந்து இருந்த சேரில் இருந்து அவர்களை எழுப்பி, அந்த சேரை தூக்கிச் சென்று முன்வரிசையில் அமர்ந்தார். கனிமொழிக்காக தனியாக சேரை எடுத்து வைத்திருந்து, அவர் வந்ததும் தூக்கிக் கொண்டு ஓடி முன்வரிசையில் இடம் போட்டுக்கொடுத்தார் விஜயா தாயன்பன். கூட்டம் துவங்கிய பின்னர் வந்த டி.ஆர்.பாலு, தங்கம்தென்னரசு ஆகியோர் முன்வரிசையில் இடம் இல்லாமல் கடைசி வரிசையில் உட்கார, இவர்களுக்கும் பின்பு வந்த நடிகை குஷ்புவிற்கு மட்டும் முன்வரிசையில் இடம் கிடைத்துவிட்டது!

வக்கீல் ஜோதி பேசும்போது, ‘‘அன்றைக்கு இருந்த இந்திரா காங்கிரஸ் வேறு.03b.jpg இன்றைக்கு உள்ள சோனியா காங்கிரஸ் வேறு. 2ஜி விவகாரத்தில் திட்டமிட்டே நம்மை பலிகடாவாக்கிவிட்டனர். அவர்கள் நினைத்திருந்தால், இதனை நீதிமன்றத்திற்குச் செல்லாமல் தடுத்திருக்க முடியும். ஃபோபர்ஸ் வழக்கை இழுத்தடிக்கத் தெரிந்தவர்களுக்கு, இந்த வழக்கை திசைதிருப்பத் தெரியாதா?’’ என்று பேச, ‘2-ஜி பற்றி பேச வேண்டாம்’ என்று துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்தார்.

தயாநிதி மாறன் பேசும்போது, ‘இன்டர்நெட் மூலம் கட்சி பிரசாரத்தைச் செய்ய தனியாக ஓர் அணியை உருவாக்க வேண்டும்’ என்றார். இதற்குப் பதிலடி கொடுக்க வந்தார் திருச்சி சிவா. ‘‘89 வயதுள்ள தலைவரும், 90 வயதுள்ள பேராசிரியரும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்று இங்கு ஆலோசனை சொல்லப்பட்ட து. இந்த வயதில் அவர்கள் உழைத்து அந்தப் பலனை நாம் அடையவேண்டுமா? அதற்குத் தான் தளபதி இருக்கிறாரே?’’ என்று எடுத்த எடுப்பிலேயே அப்ளாஸ் வாங்கிக்கொண்டு, ‘‘தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களைக் கவர, ஓர் அணி தொடங்க வேண்டும் என்று தயாநிதி மாறன் ஐடியா சொன்னார். இளைஞரணியினர் ஃபேஸ்புக்கில் அப்பணியைச் செய்து வருகின்றனர். கலைஞர் டி.வி.போன்று, சன் டி.வி.யையும் கட்சிக்காகப் பயன்படுத்துங்கள்’’ என்று கொட்டு வைத்தார்.

அதுவரை பெரிய சலசலப்புகள் எதுவும் இல்லாமல் சென்றுகொண்டிருந்த நிலையில், வீரபாண்டி ஆறுமுகம் பேச ஆரம்பிக்கவும் அதற்கு அச்சாரம் போடப்பட்டது... ‘‘தலைவர் இருக்கும் போதே, ஒரு சிலர் அடுத்த தலைமை பற்றி இங்கு பேசினார்கள். அப்படிப் பேச இங்கு அனுமதியளித்து இருக்கக் கூடாது’’ என்று சொன்னதும், ஸ்டாலின் ஆதரவாளர்கள் வி.எஸ்.ராஜு, ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் அன்பு போன்றவர்கள் எழுந்து எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். இதையடுத்து பதிலுக்கு அவர்களை அடக்கும் வகையில் வீரபாண்டியார் குரல் கொடுக்க, ஒருகட்டத்தில் சிலர் சேர்களைத் தூக்கிவிட்டனர். ஏதோ வன்முறை நிகழப் போகிறது என பெண்கள் எ ல்லாம் பயந்து சிதறி ஓடினர். கனிமொழி, டி.03c.jpgஆர்.பாலு போன்றோர் சமரசப்படுத்தப் பார்த்தும் அமைதி ஏற்படவில்லை. இதனையெல்லாம், மிரட்சியுடன் பார்த்துக்கொண்டி ருந்தார் கருணாநிதி. கடைசியில் பேராசிரியர் எழுந்து பேசிய பிறகே அமைதி ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கரகரத்த குரலில் கருணாநிதி மைக் பிடித்தார்.

‘‘நான் உடல்நிலை சரியில்லாமல் இரண்டு நாட்களாக கஷ்டப்பட்டு, தீர்மானங்களைத் தயாரித்து அமைதியாக பொதுக்குழுவை நடத்தத் திட்டமிட்டு இருந்தேன். சிலர் சதி செய்து, நான் பட்ட கஷ்டத்தை எல்லாம் வீணாக்கிவிட்டனர். தி.மு.க.வில் மோதல், ரகளை, அமளிதுமளி ஏற்பட்டது என்று தலைப்புச் செய்தி வரும் அளவிற்கு நிகழ்வு களை ஏற்படுத்திவிட்டனர். ஸ்டாலினுக்கு நல்லது செய்வதாக எண்ணி, அவருக்கு கெடுதல் செய்துவிட்டனர்’’ என்று கண்கலங்கினார். அடுத்த தலைவர் யார் என்பதற்கு அடுத்து பெரிதும் பேசப்பட்ட விவகாரமான கூட்டணி குறித்துப் பேசிய கருணாநிதி, ‘‘காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால் என்னைப் போன்ற பைத்தியக்காரன் வேறு யாரும் இருக்க முடியாது. இந்திய இறையாண்மையைக் காக்கக் கூடிய வகையில் நம் கூட்டணி இருக்கவேண்டும். எனவே, யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று ஒரு வார காலத்திற்குள் பதில் சொல்லுங்கள்’’ என்று சொல்லி முடித்துக் கொண்டார்.

கூட்டம் முடிந்து வெளியே வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தது, ‘ஒரு கலைஞர், ஒரு கமாண்டர்’ என்ற போஸ்டர்!

படங்கள்: ம. செந்தில்நாதன்.

இரா.முருகேசன்

- குமுதம் ரிப்போட்டர்

கமாண்டர் தான் போனதும் கட்சிக்கு என்ன நடக்கும் என்பதை கண்முன்னே கண்டுள்ளார்.

எல்லாம் முள்ளிவாய்க்கால் சாபம்தான்.

சோனியா மட்டும் கிறுங்கவில்லை. குடும்பமே உ.பி.யில் நிற்கிறது. கருணாநிதியின் களவுக் கையை பிடித்து ஈழத்தமிழர்களை அழித்துவிட்டு தன் மகனுக்குப் பதவி உ.பி தேசத்திலிருந்து வரப்போவதாக நினைக்கிறா போலிருக்கு. மகன் தேர்தல் நேரம் தமிழ் நாட்டுக்கு வந்து இளைஞர் காங்கிரஸ் என்று ஒரு ஏமாத்து தொடக்கப் பார்த்தவர். எடுபடவில்லை. கூட்டணி உடைய ஆரம்பித்து விட்டது. தேரதல் நேரம் காந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து தப்ப யாராவது கட்சியையும் உடைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பல கூத்துக்களை.... கருணாநிதி தனது கண்ணால் காணவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓநாய் அழுகிறது அடுத்த தேர்தலுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸுடன் இனிமேல் கூட்டணி வைத்தால் என்னைப் போன்ற பைத்தியக்காரன் வேறு யாரும் இருக்க முடியாது

இப்ப மட்டும் என்னவாம்...பெரிய புத்திசாலி என்ட நினைப்போ?அதே பைத்தியம்தான்...

ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் பொய் வழக்கில் சிறைக்குச் சென்றுள்ளனர், அவர்களுக்கு கட்சி ஆறுதலாக இருக்க வேண்டிய நேரத்தில், பதவியை பறிக்கப் போகிறீர்களா?

ஆமா இவங்க பெரிய தியாகிகள் நாட்டுக்காக சிறைக்கு போய்ட்டு வந்திருக்கினம் இவைக்கு ஆறுதலா இருக்கிறதுக்கு. வெட்கம்கெட்ட நாயிங்க பொய் வழக்கு என்டு வேற கதை கட்டுதுவள்.

வசந்தி ஸ்டாலின் எம்.பி. முன்வரிசையில் உட்கார இடம் இல்லாததால், வெளியே, மகளிர் போலீஸார் உட்கார்ந்து இருந்த சேரில் இருந்து அவர்களை எழுப்பி, அந்த சேரை தூக்கிச் சென்று முன்வரிசையில் அமர்ந்தார்.

அப்ப அம்மணி மேல அந்த மகளிர் போலீஸார் பயங்கர கடுப்பில இருப்பினம். கிழட்டு ஆமை செத்த பிறகு பழைய கறள் வெளிவரலாம்.

இவர்களுக்கும் பின்பு வந்த நடிகை குஷ்புவிற்கு மட்டும் முன்வரிசையில் இடம் கிடைத்துவிட்டது!

தப்பிதவறி கனிமொழி தலைவி ஆகிட்ட குசுப்பு மேடத்துக்கு ப்றாத்தல் வழக்கு தான் :D

‘‘89 வயதுள்ள தலைவரும், 90 வயதுள்ள பேராசிரியரும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்று இங்கு ஆலோசனை சொல்லப்பட்ட து. இந்த வயதில் அவர்கள் உழைத்து அந்தப் பலனை நாம் அடையவேண்டுமா?

இந்த ஆமை எப்படி சுற்றுப்பயணம் போகும்? கட்டில்ல படுத்துக்கொண்டா? அல்லது குசுப்புவின் மடியில் படுத்துக்கொண்டா? ஒருத்தனுக்கு எழும்பி நிக்கவே வக்கில்லையாம் அவனுக்கு ஒன்பது பொண்டாட்டி கேட்குதாம் :unsure:

என்று கண்கலங்கினார்

உலக மகா நடிகன்டா நீ!

‘‘காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால் என்னைப் போன்ற பைத்தியக்காரன் வேறு யாரும் இருக்க முடியாது. இந்திய இறையாண்மையைக் காக்கக் கூடிய வகையில் நம் கூட்டணி இருக்கவேண்டும். எனவே, யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று ஒரு வார காலத்திற்குள் பதில் சொல்லுங்கள்’’

அட நாதாரிக்கு பிறந்த நாதாரி நாயே முதல்ல இனி உங்களை யாரு தான் சேத்துக்கப்போறா?? டேய் தயவு செய்து பைத்தியக்காரங்கள கொச்சைப்படுத்தாதே!

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி எப்போதுமே எழுதியதையோ சொல்லியதையோ பேசியதையோ செய்வதில்லை. செய்ததில்லை.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என்க் கட்சியை நான்காகப் பிரிக்க

உள்வேலைகள் பலமாக நடக்கின்றது.

இந்தாள் கூட்டணிக் கனவில் இருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.