Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருக் குழந்தையும், கனவு காணும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

15-human-foetus.jpeg

கருக் குழந்தையும் கனவு காணும்–கர்ப்பிணிகள் கவனிக்க !

ஒரு கரு உருவாகி, முழுவளர்ச்சியடைந்து உலகத்தைக் காண 270 நாட்கள் எடுத்துக்கொள்வதாக மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கர்ப்பப்பையில் குழந்தையின் படிப்படியான வளர்ச்சி குறித்தும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கருவில் வளரும் குழந்தைகளும் கனவு காணும் என்றும் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கருவாகி உருவாகி

ஆணும், பெண்ணும் இணைகளில் உயிர் உருவாக காரணமான விந்தணுவும் சினைமுட்டையும் இணையும் நிகழ்வே கருக்கட்டல் என அழைக்கப்படுகிறது. கருக்கட்டப்பட்ட முட்டை கர்பப்பை குழாய் என அழைக்கப்படும் பலோப்பியன் குளாய் பெல்லோபியன் டியூப் வழியாக கருப்பையை சென்றடைகிறது. பின்னர் கர்ப்பப்பையினுள் அது படிப்படியாக வளரத் தொடங்குகிறது.

இதயத்துடிப்பு

ஒரு பெண் கர்ப்பம்தரித்த 21 அல்லது 24-ம் நாளிலிருந்து அந்த கருவுக்குள் இதயத்துடிப்பு நிகழ்கிறது. இதன்மூலமாக அந்த கருவுக்குள் இரத்த ஒட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது

கருதரித்த 28ம் நாள் முதல் அந்த கருவுக்குள் கை, கால்கள், காதுகள் மற்றும் முதுகுத்தண்டுவடம் ஆகியன வளர ஆரம்பிக்கின்றன. ர்ப்பம் தரித்த 30ம் நாள் கருவுக்குள் மூளை வளர ஆரம்பிக்கின்றன

மூளை செயல்பாடு

கர்ப்பம் தரித்த 35ம் நாள் விரல்கள் வளர ஆரம்பிக்கின்றன. கர்ப்பம் தரித்த 40ம் நாள் மூளை செயல்பட தொடங்குகிறது . கருவுற்ற 6-வது வாரம் முதல் கருவின் மூளை கருவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறது.

கருவுற்ற 7-வது வாரம் முதல் பற்களின் தாடைகள் வளர ஆரம்பிக்கின்றன. மேலும் பால்பற்கள் முளைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். கருவுற்ற 8-வது வாரத்தில் கரு மனித உருவத்தில் தென்படும். மேலும் அனைத்து அங்கங்களும் உறுப்புக்களும் கண்டறியப்படுகிறது

கைவிரல் ரேகை

கருவுற்ற 9-வது வாரத்தில் குழந்தையின் கை விரல்களில் ரேகைகள் படர ஆரம்பிக்கிறது. பின்னர் குழந்தை தன் விரல்களை அசைக்க முற்படுகிறது. கருவுற்ற 10-வது வாரத்தில் குழந்தை கர்ப்பப் பையில் உள்ள அமிலங்களை பருக முற்படுகிறது.

கருவுற்ற 11-வது வாரத்தில் குழந்தை உறங்க கற்றுக் கொள்கிறது. பிறகு விழிக்க கற்றுக்கொள்கிறது. இறுதியாக சிறுநீர் கூட கழிகக் ஆரம்பிக்கிறது. அதே சமயம் சுவாச உறுப்புகளை இயக்குவதற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் இந்த குழந்தை பயிற்சி எடுக்கிறது!

ருசி உணரும் காலம்

கருவுற்ற 13-வது வாரத்தில் குழந்தையின் மர்மஸ்தான உறுப்புகள் தெரிய ஆரம்பிக்கின்றன. மேலும் நாக்கில் ருசியை அறியக்கூடிய நரம்புகள் வேலை செய்கின்றன. கருவுற்ற 14-வது வாரத்தில் குழந்தையின் செவிப்புலன்கள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றது.

கனவு காணும் காலம்

கருவுற்ற 17-வது வாரத்தில் கண்களில் அசைவுகள் தென்படுகின்றன. குழந்தை கனவு காண முற்படுவதாக அறிவியல் வல்லுனர்கள் தங்கள் ஆய்வில் கூறுகிறார்கள். கருவுற்ற 20-வது வாரத்தில் குழந்தை வெளிச்சத்தை உணர ஆரம்பிக்கிறது. தாயின் வயிற்றினுள் ஏற்படக்கூடிய சப்தங்களை காது கொடுத்து கேட்கிறது. என அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அசைவுகள் ஆரம்பம்

கருவுற்ற 5-வது மாதத்தில் குழந்தையின் அசைவுகள் நன்றாக வெளிப்படுகின்றது. கருவுற்ற 6-வது மாதத்தில் வியர்வை சுரப்பிகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. மேலும் உடலில் முடிகள் முளைப் பதற்கான செயல்பாடுகள் நடைபெறுகின்றன

கருவுற்ற 7-வது மாதத்தில் விழிகள் திறந்து மூடுகிறது, குழந்தை சுற்றுமுற்றும் பார்க்கிறது, சுவையை அறிகிறது, தாயின் கர்ப்பப் பையை மெதுவாக தொட்டு உணருகிறது.

முழு வளர்ச்சி

கருவுற்ற 8-வது மாதத்தில் குழந்தையின் மிருதுவான தோல் சருமங்கள் சற்று மேம்பட ஆரம்பிக்கிறது.

கருவுற்ற 9-வது மாதம் முடிவில் அல்லது 270ம் நிறைவில் கருவளர்ச்சியை முழுவதுமாக அடைந்து குழந்தை இந்த உலகில் காலடி எடுத்துவைக்க தயாராகிவிடுகிறது. இது ஒரு சில நாட்கள் முன்னதாகவும் நிகழலாம். ஒருசில தாய்மார்களுக்கு பின்னதாகவும் நிகழலாம்.

எனவே கர்ப்பகாலத்தில் தாய் தனக்கு மட்டும் உணவினை உட்கொள்ளலாமல் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப உணவு உட்கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் பல்வேறு படிநிலைகளை கடந்து வளரும் குழந்தை ஆரோக்கியமாக இந்த உலகத்தை பார்க்க முடியும் என்பது மருத்துவர்களின் ஆலோசனையாகும். ஏனெனில் கடைசி நிமிடத்தில் கூட எதுவும் நிகழலாம் என்பதால் கருவில் உள்ள குழந்தை இந்த உலகத்தை பார்க்கும் வரை கவனம் அவசியம் என்பதும் மகப்பேறு மருத்துவர்களின் அறிவுரையாகும்.

நன்றி தற்ஸ்தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கோ உதைக்கின்றது, தமிழ் சிறி!

கனவுகளின் அடித்தளம், அனுபவங்கள்!

அனுபவங்களை வைத்து, ஆசைகளைச் சேர்த்து கனவுகள் வருகின்றன!

கருவில் உள்ள குழந்தை, எந்த முன்னனுபவங்களைத், தனது கனவுகளின் அடிப்படையாகக் கொள்ளும்?

முற்பிறவி அனுபவங்களையா அல்லது தாயின் சத்தங்கள், அசைவுகளையா?

நீங்கள் உங்கள் திரியின் மூலம், ஒரு நல்ல ஆய்வு ஒன்றுக்கான அத்திவாரத்தைப் போட்டுள்ளீர்கள்?

நெடுக்கர், ஜஸ்டின், மற்றும் துறை சார்ந்த உறவுகள், விளக்கமளிக்கவும்!>

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கோ உதைக்கின்றது, தமிழ் சிறி!

கனவுகளின் அடித்தளம், அனுபவங்கள்!

அனுபவங்களை வைத்து, ஆசைகளைச் சேர்த்து கனவுகள் வருகின்றன!

கருவில் உள்ள குழந்தை, எந்த முன்னனுபவங்களைத், தனது கனவுகளின் அடிப்படையாகக் கொள்ளும்?

முற்பிறவி அனுபவங்களையா அல்லது தாயின் சத்தங்கள், அசைவுகளையா?

நீங்கள் உங்கள் திரியின் மூலம், ஒரு நல்ல ஆய்வு ஒன்றுக்கான அத்திவாரத்தைப் போட்டுள்ளீர்கள்?

நெடுக்கர், ஜஸ்டின், மற்றும் துறை சார்ந்த உறவுகள், விளக்கமளிக்கவும்!>

புங்கையூரான் உங்கள் கேள்விகள், மேலும் சிந்திக்க வைக்கின்றன.

குழந்தையின் பசி கூட... கனவாக வர சந்தர்ப்பம் இருக்கலாம் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நாம், சில வேளைகளில் மரத்தின் கிளையொன்றில் இருந்து தவறி விழுவது போலக் கனவு காண்கின்றோம்!

ஆனால் மரத்தில் இருந்து விழுந்த அனுபவம் எங்களுக்கு இல்லை!

இது நாங்கள் குரங்காக இருந்த காலத்தில் நடந்திருக்கலாம் என்றும், அந்த நினைவுகள் எங்கள் மனதில் எங்கோ பதிந்திருக்கின்றன என்றும் சிலரது கருத்து!

அதனால் தான் முற்பிறப்பு பற்றிக் குறிப்பிட்டேன்!

அத்துடன் சுபேசின் 'நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டு இருக்காமல்' திரியில் வந்த ஒரு படமும், எனது சிந்தனையைத் தூண்டியதால், மேலுள்ள கருத்தைப் பதிந்தேன்!

429093_361274940563701_311919005499295_1318933_839612075_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கனவு காணும் காலம்

கருவுற்ற 17-வது வாரத்தில் கண்களில் அசைவுகள் தென்படுகின்றன. குழந்தை கனவு காண முற்படுவதாக அறிவியல் வல்லுனர்கள் தங்கள் ஆய்வில் கூறுகிறார்கள். கருவுற்ற 20-வது வாரத்தில் குழந்தை வெளிச்சத்தை உணர ஆரம்பிக்கிறது. தாயின் வயிற்றினுள் ஏற்படக்கூடிய சப்தங்களை காது கொடுத்து கேட்கிறது. என அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

நன்றி தற்ஸ்தமிழ்.

கனவு காணுதலுக்கு வாழ்க்கை அனுபவங்கள் மட்டும் தான் காரணமா என எனக்குத் தெரியாது. இது மனோவியல் சார்ந்த விளக்கம். நரம்பியல் சார்ந்த விளக்கங்கள் சில இருக்கக் கூடும்.

மேலும், கனவு காணுதலை சிசுவின் கண்ணசைவை வைத்து இங்கே கண்டு பிடித்திருப்பது கொஞ்சம் சர்ச்சைக்குரிய விடயம். இந்தக் கண்ணசைவை "சடுதியான கண்ணசைவு" (Rapid Eye Movements -REM) என்று அழைக்கிறார்கள். மனிதர்கள் கனவு காணும் போது மூடிய கண்மடல்களுக்குள் விழிகள் வேகமாக அசைவதை கனவுக் கான ஒரு அறிகுறியாக நம்புகிறார்கள். உண்மையில், சடுதியான கண்ணசைவு நடைபெறும் போது கனவு காணுகிறோம் என்பதை விட எங்கள் தூக்கத்தின் ஆழம் குறைகிறது என்பதே உண்மை. ஆழம் குறைந்த தூக்கத்தின் ஒரு விளைவாக கனவு இருக்கக் கூடும். கண்ணசைவை வைத்துக் கொண்டு சிசு ஆழம் குறைந்த தூக்கத்தில் இருக்கிறது என்று மட்டுமே உறுதியாகச் சொல்ல முடியும். கனவு காணுவதைப் பற்றி உறுதியாகச் சொல்ல இயலாது என்பது என் கருத்து.

அதிகாலைக் கனவு பற்றிய ஒரு நம்பிக்கை பற்றியும் இங்கே சொல்ல வேண்டும். அதிகாலையில் காணும் கனவு பலிக்கும் என்பார்கள்-ஆனால் அதிகாலையில் நாம் துயிலெழ முன்னர் எங்கள் தூக்கத்தின் ஆழம் குறைகிறது-இதனால் அனேகமான கனவுகள் அந்த நேரம் தான் வருகின்றன. மேலும் தூக்கத்தில் பல கனவுகளை நாங்கள் கண்டாலும் துயிலெழ முன்னர் காணும் கனவு தான் எமது நினைவில் நிற்கும்.இதனால் அதிகாலைக் கனவு பலிக்கும் என்பது ஓரு ஆதாரமும் இல்லாத நம்பிக்கை மட்டுமே!

  • கருத்துக்கள உறவுகள்

எங்கோ உதைக்கின்றது, தமிழ் சிறி!

கனவுகளின் அடித்தளம், அனுபவங்கள்!

அனுபவங்களை வைத்து, ஆசைகளைச் சேர்த்து கனவுகள் வருகின்றன!

கருவில் உள்ள குழந்தை, எந்த முன்னனுபவங்களைத், தனது கனவுகளின் அடிப்படையாகக் கொள்ளும்?

முற்பிறவி அனுபவங்களையா அல்லது தாயின் சத்தங்கள், அசைவுகளையா?

நீங்கள் உங்கள் திரியின் மூலம், ஒரு நல்ல ஆய்வு ஒன்றுக்கான அத்திவாரத்தைப் போட்டுள்ளீர்கள்?

நெடுக்கர், ஜஸ்டின், மற்றும் துறை சார்ந்த உறவுகள், விளக்கமளிக்கவும்!>

புங்கை இதற்கு விளக்கம் RajTV இல் வந்த போன ஜென்மம் என்ற தொடரை YouTubeஇல் தேடி பார்க்கவும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தகவல்களுக்கு நன்றி ஜஸ்ரின். உடையார் தந்த தலைப்பை, இணையத்தில் தேடிப் பார்த்தேன் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆறுதலாக மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கின்றேன்.

பிறந்த ஒரு வாரக் குழந்தை கூட சில நேரங்களில் நித்திரையில் சிரிக்கும் அதனை நரி வெருட்டுகின்றது என்று சொல்வார்கள்.

அந்த நேரம் குழந்தை கனவு காணுகின்றதா அல்லது நரி வெருட்டுகின்றதா?

  • கருத்துக்கள உறவுகள்

தகவல்களுக்கு நன்றி ஜஸ்ரின். உடையார் தந்த தலைப்பை, இணையத்தில் தேடிப் பார்த்தேன் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆறுதலாக மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கின்றேன்.

பிறந்த ஒரு வாரக் குழந்தை கூட சில நேரங்களில் நித்திரையில் சிரிக்கும் அதனை நரி வெருட்டுகின்றது என்று சொல்வார்கள்.

அந்த நேரம் குழந்தை கனவு காணுகின்றதா அல்லது நரி வெருட்டுகின்றதா?

என் மகள் பிறந்த நேரம் அவள் இப்படி தூக்கத்தில் சிரிப்பது பார்க்கவே நான் அவள் தூங்குவதைப் பார்த்துக் கொண்டிருப்பேன். அழகாக இருக்கும். எங்கள் வீட்டு முதியோர் குழந்தைகள் சம்மனசுகளுடன் பேசும் போது இப்படிச் சிரிப்பதாகச் சொல்வார்கள். நான் எங்கள் குழந்தை மருத்துவ நிபுணரிடம் கேட்டேன். அவர் சொன்ன விளக்கத்தின் படி: பிறந்த குழந்தையின் மூளை வேகமாக வளர்ந்து வரும் ஒரு உறுப்பு. இங்கே வளர்ச்சி என்பது மூளையின் நரம்புக் கலங்கள் ஒன்றோடொன்று தொடர்புகளை ஏற்படுத்துவதேயாகும். இந்த மூளை வளர்ச்சியின் போது எல்லாம் சரியாக நடக்கிறதா என்று அடிக்கடி "ரெஸ்ரிங்" நடைபெறுமாம். இந்த ரெஸ்ரிங் நடை பெறும் போது தான் தூக்கத்தில் சிரிப்பது அழுவது எல்லாம் நடைபெறுகிறதாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் மகள் பிறந்த நேரம் அவள் இப்படி தூக்கத்தில் சிரிப்பது பார்க்கவே நான் அவள் தூங்குவதைப் பார்த்துக் கொண்டிருப்பேன். அழகாக இருக்கும். எங்கள் வீட்டு முதியோர் குழந்தைகள் சம்மனசுகளுடன் பேசும் போது இப்படிச் சிரிப்பதாகச் சொல்வார்கள். நான் எங்கள் குழந்தை மருத்துவ நிபுணரிடம் கேட்டேன். அவர் சொன்ன விளக்கத்தின் படி: பிறந்த குழந்தையின் மூளை வேகமாக வளர்ந்து வரும் ஒரு உறுப்பு. இங்கே வளர்ச்சி என்பது மூளையின் நரம்புக் கலங்கள் ஒன்றோடொன்று தொடர்புகளை ஏற்படுத்துவதேயாகும். இந்த மூளை வளர்ச்சியின் போது எல்லாம் சரியாக நடக்கிறதா என்று அடிக்கடி "ரெஸ்ரிங்" நடைபெறுமாம். இந்த ரெஸ்ரிங் நடை பெறும் போது தான் தூக்கத்தில் சிரிப்பது அழுவது எல்லாம் நடைபெறுகிறதாம்.

வயிற்றில் வளரும் சிசு... ஏன் தாயின், வயிற்றை உதைக்கின்றது.

உன்னை உருவாக்கிய அந்த ஒன்பது மாதங்கள்

ஒரு வில்லங்கமான விவரண தொடர்

இவர் கூறும் எதிர்வுகூறல் சரியா தவறா என்பது உங்கள் தீர்மானத்திற்கு .....

தமிழ்சிறியின் கேள்விக்கு பதில் கிடைக்காத போதிலும் கருவறையில் உள்ள அந்த காலத்தில் நல்ல ஊட்ட சத்துள்ள உணவுகளையும் நல்ல உள நம்பிக்கையையும் வழங்குவது சால சிறந்தது.

A BBC documentary

part 1

part 2

part 3

part4

part5

Edited by kssson

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்களுக்கு நன்றி உடையார் & கிஸான்.

.

நல்ல இணைப்பு Ksson . உடையாரின் இணைப்பு இன்னும் பார்க்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கருவில எப்படியான கனவு வந்திருக்கும். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான் அருமை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருவில எப்படியான கனவு வந்திருக்கும். :rolleyes:

மில்லியன் டொலர் கேள்வி சஜீவன். :)

வயிற்றுக்குள் சிரிப்பு, கொட்டாவி, கைவிரல்களை மடக்கி உடற்பயிற்சி எல்லாம் நடக்குது. இணைப்பிற்கு நன்றி நுணாவிலான். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்களுக்கு நன்றி கிஸான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.