Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூலறுந்த பட்டங்கள்!

Featured Replies

Old_lady_338.jpg

அடித்த மணியோசையும், தபால்காரரும்.... கொடுத்த சந்தோசம்,

தற்காலிக ஆறுதலாய்... வாசித்து முடிக்கும் வரைக்கும்தான்!

அதன்பின்னர்தான்.... தபால்காரரின் புன்னகைகூட,

உண்மையான புரிதலென்று புரிந்தது!

என் மகனே! அன்றொருநாள் எனக்கென நீயனுப்பிய காசு...

இன்னமும் மிச்சமிருக்கு ராசா...!!!

என் பேரப்பிள்ளைகளுக்கு... என்ன வேணும் சொல்லு ராசா?

வாங்கி அனுப்புறன்... என்னெண்டாலும்!!!

எத்தனை நாளைக்கு நானிருப்பேன்... எனக்கே தெரியாது!

ஆனால் உன் அக்கா தங்கச்சி பிள்ளைகள் ... அவங்களின் வாரிசுகள்,

எல்லாமே இங்குதான் சீவிப்பார்கள்... சிந்தியுங்கள்!

"தாய்" எனும் நிலையிலிருந்து ... தாய் மண்ணிலிருந்து... என் இறுதி வார்த்தைகள்!!!

உன் அப்பா கட்டிய.... எங்கள் வீட்டை வித்துப்போட்டு,

விமானமேறச் சொன்னது.... உனக்கு பாசமாகத் தெரியலாம்!

"முடியாது".... என்று சொன்னதன் பின்னால், பேசாமல் போனியே ராசா!

பாசமென்பதும் காசுக் கணக்குத்தானோ....???

இன்னும் ஒலிக்காத அழைப்போசைகளுக்காக...காத்துக்கிடக்கும்,

ஆசையாய் வாங்கித்தொலைத்த 'கையளவு' பேச்சாளரும்,

வாசல்வந்து மணியடிக்காத தபால்காரரும்.....என் மனவெதும்பல்களில்,

ஊமையாய்... அடங்கிப்போகின்றார்!

சில ஆயிரம் மைல்தூரம் என்பது...

பல்லாயிரம் மாற்றங்களை........ மனித மனதினினுளும்,

ஆழமாய்த்தான் விதைத்து விடுகின்றதோ...???

புலம்பெயர்ந்தபோதே.... உறவுகளும் பெயர்கின்றன போல!

'உறவுகள்' என்பது ... விடைதெரியாத விடுகதையாக,

தொடர்கதையாய் .... தொடரும் நிலையில் ஒருநாள்,

தொப்புள்கொடிகள் அறுந்துபோன... குழந்தைகளும் தாய்மாரும்,

எம் மண்ணிலும்... அநாதையாகக் கிடக்கலாம்!

*************************************************************************************************

சில ஆயிரம் மைல்தூரம் என்பது...

பல்லாயிரம் மாற்றங்களை........ மனித மனதினினுளும்,

ஆழமாய்த்தான் விதைத்து விடுகின்றதோ...???

புலம்பெயர்ந்தபோதே.... உறவுகளும் பெயர்கின்றன போல!

உண்மைதான் கவிதை, மனித இயல்புகள் மாறிப்போகின்றன புலம்பெயர்வுகளால். பாசங்களும் மங்கித்தான் போகின்றன. இந்தத் தாயை போல இன்னும் எத்தனையோ அன்னைகள் இப்பூமியில் உண்டே.. சுயநலமில்லாத தாய்மையை தவிக்க விடல் முறையோ என பொங்குகிறது உள்ளம்..

முதுமையின் முகவரிகளை தாங்கிய ஒரு தாய்மையின் துயரங்களையும் மிக நயம்பட உரைத்திருக்கும் இக்கவிதைக்கு எனது வாழ்த்துக்கள்.

அப்பழுக்கில்லாத தாய்

< என் மகனே! அன்றொருநாள் எனக்கென நீயனுப்பிய காசு...

இன்னமும் மிச்சமிருக்கு ராசா...!!!

என் பேரப்பிள்ளைகளுக்கு... என்ன வேணும் சொல்லு ராசா?

வாங்கி அனுப்புறன்... என்னெண்டாலும்!!! >

உறைக்கும் உண்மை

< 'உறவுகள்' என்பது ... விடைதெரியாத விடுகதையாக,

தொடர்கதையாய் .... தொடரும் நிலையில் ஒருநாள்,

தொப்புள்கொடிகள் அறுந்துபோன... குழந்தைகளும் தாய்மாரும்,

எம் மண்ணிலும்... அநாதையாகக் கிடக்கலாம்! >

:( 3 .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதே போல பிள்ளைகளைத் தவிக்கவிடும் தாய்மார்களும் உண்டு தானே? :(

நன்றி அண்ணா கவிதைக்கு :)

  • கருத்துக்கள உறவுகள்

என் மகனே! அன்றொருநாள் எனக்கென நீயனுப்பிய காசு...

இன்னமும் மிச்சமிருக்கு ராசா...!!!

என் பேரப்பிள்ளைகளுக்கு... என்ன வேணும் சொல்லு ராசா?

வாங்கி அனுப்புறன்... என்னெண்டாலும்!!!

நல்ல வார்த்தைகள் ஆனால் விகிதாசாரம் குறைவு என்றாலும் ஒரு பச்சை

  • கருத்துக்கள உறவுகள்

"தாய்" எனும் நிலையிலிருந்து ... தாய் மண்ணிலிருந்து... என் இறுதி வார்த்தைகள்!!!

என் உள்ளத்தை தொட்டு விட்டீர்கள், நிறைய எழுதவேண்டும் போல் உள்ளது

ஆனால் ஏதோ ஒன்று தடுக்கின்றது ........ !

  • தொடங்கியவர்

சில ஆயிரம் மைல்தூரம் என்பது...

பல்லாயிரம் மாற்றங்களை........ மனித மனதினினுளும்,

ஆழமாய்த்தான் விதைத்து விடுகின்றதோ...???

புலம்பெயர்ந்தபோதே.... உறவுகளும் பெயர்கின்றன போல!

உண்மைதான் கவிதை, மனித இயல்புகள் மாறிப்போகின்றன புலம்பெயர்வுகளால். பாசங்களும் மங்கித்தான் போகின்றன. இந்தத் தாயை போல இன்னும் எத்தனையோ அன்னைகள் இப்பூமியில் உண்டே.. சுயநலமில்லாத தாய்மையை தவிக்க விடல் முறையோ என பொங்குகிறது உள்ளம்..

முதுமையின் முகவரிகளை தாங்கிய ஒரு தாய்மையின் துயரங்களையும் மிக நயம்பட உரைத்திருக்கும் இக்கவிதைக்கு எனது வாழ்த்துக்கள்.

தாயை மறந்து... தாய்மண்ணை மறந்து வாழும் வாழ்க்கையில் அர்த்தம் இருக்காது.

என்றாவது ஒருநாளேனும் அதை உணர்ந்துதேடி வரவேண்டிய நிலைமை வந்தே தீரும்!

மிக்க நன்றி கல்கி!

Edited by கவிதை

  • தொடங்கியவர்

அப்பழுக்கில்லாத தாய்

< என் மகனே! அன்றொருநாள் எனக்கென நீயனுப்பிய காசு...

இன்னமும் மிச்சமிருக்கு ராசா...!!!

என் பேரப்பிள்ளைகளுக்கு... என்ன வேணும் சொல்லு ராசா?

வாங்கி அனுப்புறன்... என்னெண்டாலும்!!! >

உறைக்கும் உண்மை

< 'உறவுகள்' என்பது ... விடைதெரியாத விடுகதையாக,

தொடர்கதையாய் .... தொடரும் நிலையில் ஒருநாள்,

தொப்புள்கொடிகள் அறுந்துபோன... குழந்தைகளும் தாய்மாரும்,

எம் மண்ணிலும்... அநாதையாகக் கிடக்கலாம்! >

:( 3 .

நன்றி கோ....!

அப்பழுக்கில்லாத உறவுகளின் உண்மையான அன்பினையும்...

காசுக் கணக்குப்பார்த்து ஒதுக்கும் உறவுகளும் இருக்கின்றார்கள் என்பது,

உறைக்கும் உண்மைதான்!!!

  • கருத்துக்கள உறவுகள்

வஞ்சகம் இல்லாத தாயின் கனிவு,

நெஞ்சில் நெருப்பூதுகின்றது!

தேவைகளைத் தூரத் துப்பிவிட்டவள்,

திருப்பித்தரத் துடிக்கிறாள்!

தடுமாறும் தாய்களின் நடுவில்,

விடுகதையாய் இவள்!

நன்றிகள், கவிதை!!!>>>>>>

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'உறவுகள்' என்பது ... விடைதெரியாத விடுகதையாக,

தொடர்கதையாய் .... தொடரும் நிலையில் ஒருநாள்,

தொப்புள்கொடிகள் அறுந்துபோன... குழந்தைகளும் தாய்மாரும்,

எம் மண்ணிலும்... அநாதையாகக் கிடக்கலாம்!

சிறப்பான கவிதை

  • தொடங்கியவர்

வஞ்சகம் இல்லாத தாயின் கனிவு,

நெஞ்சில் நெருப்பூதுகின்றது!

தேவைகளைத் தூரத் துப்பிவிட்டவள்,

திருப்பித்தரத் துடிக்கிறாள்!

தடுமாறும் தாய்களின் நடுவில்,

விடுகதையாய் இவள்!

நன்றிகள், கவிதை!!!>>>>>>

தாய்மையும்... தாய்மண்ணும்தான் நாம் என்ன செய்தாலும் எமை கடைசிவரைக்கும் தாங்கும் உள்ளங் கொண்டவை!

அவைகளின் ஏக்கங்களை புரிந்து கொள்ளாமல் ஒதுக்குதல் என்பது...

எம்மை நாமே கேவலப்படுத்துவதற்குச் சமன்.

தங்களின் கருத்துக்கும்... அர்த்தமுடைய வரிகளுக்கும் மிக்க நன்றி புங்கையூரன்!

  • தொடங்கியவர்

இதே போல பிள்ளைகளைத் தவிக்கவிடும் தாய்மார்களும் உண்டு தானே? :(

நன்றி அண்ணா கவிதைக்கு :)

இல்லையென்று சொல்வதற்கில்லை... உண்டுதான்! ஆனால் தாய்மையின் குணம் என்பது தன் குழந்தை எப்பவுமே கஷ்டப்படக் கூடாது என்று மட்டுந்தான் ஏங்கும். நீங்கள் சொன்னதற்கு அதுகூட சிலவேளைகளில் காரணமாக அமைந்துவிடுகின்றது ஜீவா!

நன்றிகள் பல!

  • தொடங்கியவர்

நல்ல வார்த்தைகள் ஆனால் விகிதாசாரம் குறைவு என்றாலும் ஒரு பச்சை

மிகவும் நன்றி சாத்ஸ் அண்ணை! தங்களின் கருத்தினை நிச்சயமாகக் கருத்திற் கொள்கின்றேன்!

கவிதைப் பகுதிக்குள் தங்களை நுழைய வைப்பதே... பெரும் பாடாய்க் கிடக்கிறது...! :) என்ன பண்ண ராசா???? :lol::rolleyes::lol:

  • தொடங்கியவர்

"தாய்" எனும் நிலையிலிருந்து ... தாய் மண்ணிலிருந்து... என் இறுதி வார்த்தைகள்!!!

என் உள்ளத்தை தொட்டு விட்டீர்கள், நிறைய எழுதவேண்டும் போல் உள்ளது

ஆனால் ஏதோ ஒன்று தடுக்கின்றது ........ !

தடைபடும் வார்த்தைகளில்தான்.... நிறைய விடயங்கள் தங்கியிருக்கும் தமிழரசு..!

சுயதடை போடாமல் வெளிக்கொணருங்கள்! அதன் தாக்கம் அதிகமாக இருந்தாலும்.... மாற்றங்கள் தன்னும் நடந்தேறும்!

நன்றி தங்கள் கருத்துக்கு! :)

  • தொடங்கியவர்

'உறவுகள்' என்பது ... விடைதெரியாத விடுகதையாக,

தொடர்கதையாய் .... தொடரும் நிலையில் ஒருநாள்,

தொப்புள்கொடிகள் அறுந்துபோன... குழந்தைகளும் தாய்மாரும்,

எம் மண்ணிலும்... அநாதையாகக் கிடக்கலாம்!

சிறப்பான கவிதை

மிகவும் நன்றி பகீ...! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.