Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற 22 நாடுகள் முழுஆதரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

un.meat.jpg

ஜெனிவா மாநாட்டில் தமக்கு எதிரான பிரேரணையைத் தோற்கடிப்பதற்கு இலங்கை அரசு என்றுமில்லாதவாறு இராஜதந்திர மட்டத்திலான காய்நகர்த்தல்களை முழுவீச்சுடன் முன்னெடுத்து வரும் தற்போதைய சூழ்நிலையில், கொழும்புக்கு எதிரான பிரேரணையை ஆதரிப்பதற்கு 22 நாடுகள் அமெரிக்காவிடம் கூட்டாக இணக்கம் தெரிவித்துள்ளன என அறியமுடிகின்றது.

ஜெனிவாவில் அமெரிக்கா முதல்கட்டமாக முன்னெடுத்த இராஜதந்திர நகர்வுகளில் இதுவரை 22 உறுப்பு நாடுகள் பச்சைக்கொடி காட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று ஜெனிவாவில் இரண்டாம் கட்டமாக நடைபெறவிருக்கும் இராஜதந்திர சந்திப்புகளில் மேலும் பல நாடுகள் பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டை எடுக்கும் என நம்பப்படுகின்றது.

இதனால், இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியப்பாடுகளே அங்கு மேலோங்கிக் காணப்படுவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்புநாடுகளிடம் இலங்கைக்கு எதிரான பிரேரணையின் சாராம்சத்தைக் கையளித்து தெளிவுபடுத்தல் நடவடிக்கையொன்றை அமெரிக்கா ஜெனிவாவில் ஆரம்பித்தது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளுள் 24 நாடுகளின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றமுடியுமென நம்பப்படுகிறது. அந்த அடிப்படையில், ஜெனிவாவில் அமெரிக்காவுக்கு ஆதரவு வலுத்துவருவதால் இலங்கைக்கு எதிரான பிரேரணை அறுதிப்பெரும்பான்மையோடு நிறேவேற்றப்படும் என்று மேற்குலக இராஜதந்திரிகள் எதிர்வுகூறியுள்ளனர்.

அதேவேளை, ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் 10ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் உறுப்புநாடொன்று பிரேரணையொன்றை சபை அமர்வில் சமர்ப்பிக்கவேண்டுமாயின் மாநாடு நிறைவடைவதற்கு 72 மணித்தியாலயங்களுக்கு முன்னரே அறிவித்தல் விடுக்கவேண்டும்.

அந்த அடிப்படையில் பார்த்தால் இலங்கைக்கு எதிரான பிரேரணை எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் சபை அமர்வில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், இலங்கைக்கு எதிரான பிரேரணையை கெமரூன்,பொட்ஸ்வானா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்று ஆகியன கூட்டாக இணைந்து சமர்ப்பிக்கவுள்ளனவென்றும் மிகவும் நம்பகரமாகத் தெரியவருகின்றது.

http://www.eeladhesa...chten&Itemid=50

47 நாடுகளின் ஆதரவையும் பெறவேண்டும் என நினைத்து செயல்படுவதே வெற்றியை தரும்.

Edited by akootha

இருக்கிற கோவணம் பறி போக முன் இதையாவது நடைமுறைபடத்தட்டும். முக்கியமனாது சிங்கள இராணுவத்தை வடக்கு கிழக்கில் இருந்து கலைக்கவேண்டும்

அப்ப தான் கருணாவையும் டக்கிளசையும் ஒரு வழிபார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிற கோவணம் பறி போக முன் இதையாவது நடைமுறைபடத்தட்டும். முக்கியமனாது சிங்கள இராணுவத்தை வடக்கு கிழக்கில் இருந்து கலைக்கவேண்டும்

அப்ப தான் கருணாவையும் டக்கிளசையும் ஒரு வழிபார்க்கலாம்.

அமெரிக்காவின் தீர்மானம் வடக்கிலிருந்துமட்டுமே இராணுவத்தை விலக்கிக்கொள்ள வேண்டுமென்று கேட்டிருக்கிறது. கிழக்கின் நிலையில் மாற்றமில்லை. தொடர்ந்தும் ஆக்க்ரமிப்பில்தான் இருக்கப்போகிறது.

47நாடுகளில் 22 தானே ஆதரவாக உள்ளது மிகுதி நாடுகளிடம் கூட்டமைப்பு கடிதமூலம் ஆதரவு திரட்டலாம்

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் தீர்மானம் வடக்கிலிருந்துமட்டுமே இராணுவத்தை விலக்கிக்கொள்ள வேண்டுமென்று கேட்டிருக்கிறது. கிழக்கின் நிலையில் மாற்றமில்லை. தொடர்ந்தும் ஆக்க்ரமிப்பில்தான் இருக்கப்போகிறது.

தீர்மானம் நிறைவேறினாலும் சிங்களவன் விடமாட்டான்..! இதையெல்லாம் நிறைவேற்றி அரசியல் தற்கொலை செய்ய மகிந்த அவ்வளவு முட்டாளில்லை..! :D

இது இன்னும் கிடந்து இழுபடவேண்டியதுதான்..! ஒருகாலத்தில் ஏதாவது நடக்கும்..! :rolleyes:

அமெரிக்காவின் தீர்மானம் வடக்கிலிருந்துமட்டுமே இராணுவத்தை விலக்கிக்கொள்ள வேண்டுமென்று கேட்டிருக்கிறது. கிழக்கின் நிலையில் மாற்றமில்லை. தொடர்ந்தும் ஆக்க்ரமிப்பில்தான் இருக்கப்போகிறது.

அது கூட நல்லது தான் ஏன் எனில் வடக்கில் ஏற்படும் சுந்தந்திர காற்று கிழக்கை நோக்கி வீசட்டும்.

தீர்மானம் நிறைவேறினாலும் சிங்களவன் விடமாட்டான்..! இதையெல்லாம் நிறைவேற்றி அரசியல் தற்கொலை செய்ய மகிந்த அவ்வளவு முட்டாளில்லை..! :D

இது இன்னும் கிடந்து இழுபடவேண்டியதுதான்..! ஒருகாலத்தில் ஏதாவது நடக்கும்..! :rolleyes:

நிச்சயமாக.

ஏனென்றால் இப்பவே ஆமியில் சிலருக்கு போலிஸ் வேலையும் சிலருக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் வேலையும் கொடுத்து சிலரை காணி துப்பரவாக்கவும் சிலரை சிவில் ஆக இருக்கவும் பணிக்கிறார்கள்.

அப்படியிருக்கும் போது ஆமி வடக்கிலிருந்து வெளியில் போகாது. அங்கேயே தான் வேறு வேறு உடையுடன் இருப்பார்கள். ஆனால் மிச்சம் இருக்கிற ஆமியை மட்டும் காட்டி தாங்கள் வடக்கில் இராணுவத்தினரை குறைத்து விட்டோம் என்று வெளிக்கு காட்டுவார்கள்.

ஏமாற்றுவதில் மஹிந்த கூட்டத்தை யாரும் வெல்ல முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

This is someone's personal analysis:

UNHRC Membership seats are:
  1. African States: 13 seats

  2. Asian States: 13 seats

  3. Latin American and Caribbean States: 8 seats

  4. Western European and other States: 7 seats

  5. Eastern European States: 6 seats”

There are total of 34 non-western states and 13 European and North American states.

Current Membership of the Human Rights Council 20 June 2011 - 31 December 2012 by regional groups

AFRICAN STATES

Angola 2013

Benin 2014

Botswana 2014

Burkina Faso 2014

Cameroon 2012

Congo 2014

Djibouti 2012

Libya 2013

Mauritania 2013

Mauritius 2012

Nigeria 2012

Senegal 2012

Uganda 2013

LATIN AMERICAN & CARIBBEAN STATES

Chile 2014

Costa Rica 2014

Cuba 2012

Ecuador 2013

Guatemala 2013

Mexico 2012

Peru 2014

Uruguay 2012

ASIAN STATES

Bangladesh 2012

China 2012

India 2014

Indonesia 2014

Jordan 2012

Kuwait 2014

Kyrgyzstan 2012

Malaysia 2013

Maldives 2013

Philippines 2014

Qatar 2013

Saudi Arabia 2012

Thailand 2013

WESTERN EUROPE & OTHER STATES

Austria 2014

Belgium 2012

Italy 2014

Norway 2012

Spain 2013

Switzerland 2013

United States 2012

EASTERN EUROPEAN STATES

Czech Republic 2014

Hungary 2012

Poland 2013

Republic of Moldova 2013

Romania 2014

Russian Federation 2012

Most likely Yes votes (marked in italics) - 16

Most likely No votes (marked) - 20

Remaining African states - 11

க்யீன்,

ஆபிரிக்க நாடுகள் மீது தான் எமது பரப்புரை இருக்கவேண்டும் போலுள்ளதே?

ஒரு ஆசியா ஆண்டு தன்னும் எமக்கு ஆதரவா இல்லையா?? - அதற்கு காரணம் இந்தியாவா ? இல்லை எமது பலவீனம்?

அரபு எழுச்சி நடந்தும் இஸ்லாமிய நாடுகள் ஆதரவு இல்லை. இதில் எமது தாயக முஸ்லீம் உறவுகளின் பாத்திரம் சிங்களவனுக்கே முழுக்க முழுக்க உதவி.

தீர்மானம் நிறைவேறினாலும் சிங்களவன் விடமாட்டான்..! இதையெல்லாம் நிறைவேற்றி அரசியல் தற்கொலை செய்ய மகிந்த அவ்வளவு முட்டாளில்லை..! :D

இது இன்னும் கிடந்து இழுபடவேண்டியதுதான்..! ஒருகாலத்தில் ஏதாவது நடக்கும்..! :rolleyes:

எனக்கென்னவோ இந்தத் தீர்மானமே நிறைவேற சிங்களவன் விடமாட்டான் போலத்தான் இருக்கு.

இன்னும் பத்து வருஷம் போனாலும் சிங்கள ஆமியை ஒருத்தராலும் துரத்தேலாது.

அமெரிக்காவை பொறுத்தவரை எதையாவது செய்து வடகிழக்கு சிங்களமயமாகாமல் பார்க்க வேண்டும்.

தமிழ் மக்களுக்கு ஓரளவு அதிகாரம் கொடுத்து மேற்குடன் நல்லுறவைப் பேணவைக்க வேண்டும்.

முழு இலங்கையும் சிங்கள மயமாக்கினால் சீனாவை துரத்த முடியாது. இந்தியாவோ அல்லது மேற்க்கோ இலங்கையை கட்டுப்படுத்த கடினப்பட வேண்டி இருக்கும். இதைக் கையாள்வதுக்கு அமெரிக்காவுக்கு இருக்கும் கருவி தமிழர்கள் தான். ஆக இதை நாங்களும் எங்களுக்கு பயன் தருவதாய் பயன்படுத்த வேண்டும்.

இப்ப இருக்கிற அரசியல் சூழலில் சிங்களவன் சீனாவை விடப்போறதுமில்லை அல்லது சீனாவும் லேசில சிறிலங்காவை விடப்போறதுமில்லை. அப்பிடிப் பார்த்தால் தமிழர்கள் ஓரளவுக்கு அரசியல் அதிகாரத்தோடு இருந்தால் நீண்டகலத்தில ஒருவேளை மேற்கின் நலத்துக்காக எண்டாலும் இலங்கையை இரண்டாக உடைக்க முடியும். அதுக்காக வேண்டாலும் தமிழர்களுக்கு ஏதாவது ஒரு சரசியல் தீர்வுக்கு இலங்கையை தூண்டு கின்றார்கள்.

இது ஒன்றும் மனிதவுரிமையோ எங்களின் மீதுள்ள அக்கறையோ இல்லை. இலங்கையின் சீனா மீதுள்ள காதல்தான் கரணம். வாழ்க சீன சிங்கள உறவு.

இப்போது இருக்கும் நாடுகளில் இலங்கையின் ஆதரவுநாடுகள் கணிசமாக இருக்கிறது. அமெரிக்கா விசையத்தை விளங்கி வைத்திருக்கு. இனி குடியரசுக்கட்சி வந்தாலும் இலங்கை மீது ஒரு கண் இருக்கும். சென்றமுறை இவ்வளவும் செய்த இலங்கையைப்பாராட்டி தீர்மானம் நிறைவேற்றினார்கள். அமெரிக்கா அங்கத்துவத்தை இழக்க முதல் எதாவது ஒன்று செய்துவிட்டுத்தான் போகும். ஒபாமாவின் கைபட்ட ஒன்றும் இதுவரையில் தோல்விகாணவில்லை.

ஒரு காலத்தில் இதை பாதுக்காப்பு சபைக்கு எடுத்து செல்ல இங்கே ஒரு ஆரம்பம் வேண்டும்.

வாழ்க சீன சிங்கள உறவு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.