Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகவியலாளர்களின் கைகால்களை உடைப்பேன் - மேர்வன் சில்வா –

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிகிரியாவில் சுனாமியானாலும் மகிந்தவிடம் இருந்து சுனாமி ஏற்படாது - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

ஊடகவியலாளர்களின் கை கால்களை உடைக்கப் போவதாக பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சில ஊடகவியலாளர்களின் கை கால்களை உடைக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளுக்குச் சென்று நாட்டுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் ஊடகவியலாளர்களுக்கு எதிராகவே அமைச்சர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று கிரிபத்கொட பிரதேசத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் போத்தல ஜயந்தவை நானே இந்த நாட்டை விட்டு வெளியேற்றினேன் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் மீண்டும் கால் பதித்தால் குறித்த ஊடவியலாளர்ளின் கால்களை தாமே உடைக்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சிகிரியாவில் சுனாமி ஏற்பட்டாலும், ஜனாதிபதியிடமிருந்து தமக்கு எதிராக சுனாமி ஏற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவினால் மட்டுமே என்னை பணி நீக்கம் செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேறு எந்த பெரும் புள்ளியும் தம்மை பணி நீக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

டி.ஏ. ராஜபக்ஷவின் பிள்ளைகளை சிறு வயது முதலே தமக்குத் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் மன்னர் தம்மை நேசிப்பதாகவும், அவர் தம்மீது நம்பிக்கைக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மரணிப்பதற்கு தாம் அஞ்சவில்லை எனவும், களினியிலிருந்து தம்மை எவராலும் விரட்ட முடியாதுஎ னவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பைச் சேர்ந்த இரண்டு போதைப் பொருள் வர்த்தகர்கள் தம்மை விரட்டியடிக்க முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்கா தலைமையிலான ஐரோப்பிய நாடுகள் இலங்கை தொடர்பாக கொண்டு வந்த யோசனை ஒரு மேலதிக வாக்குகளின் மூலமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு ஆதரவாக 15 நாடுகள் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனடிப்படையில் ஒரு வாக்கு மூலமே யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை மீது கைவைக்க எவருக்கும் முடியாது எனவும் மேர்வின் சில்வா கூறியுள்ளார். மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு எதிராக கிரிபத்கொடவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சுனந்த தேசப்பிரிய, நிமால்கா பெர்ணான்டோ, போத்தல ஜெயந்த, பாக்கியசோதி சரவணமுத்து போன்றோர் ஜெனிவாவுக்கு சென்று இலங்கை தொடர்பாக சாட்சியமளித்துள்ளதாகவும் மேர்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அதை முதலில் செய்யும் ராசா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில ஊடகவியலாளர்களின் கை கால்களை உடைக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்யும் தொழிலே தெய்வம் எண்டு சும்மாவே சொன்னவை? :icon_idea:

BBC இல் இவரது பேச்சு போனது ,

நேற்றைய நிகழ்வு சிங்களத்தை உளரீதியாக மிகவும் பாதித்துவிட்டது என்று அனைவரினதும் பேச்சுகளில் இருந்து தெரிகின்றது ,அவங்களே எரிகிற கூரையில எண்ணையை ஊத்துவாங்கள் போல கிடக்கு .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

BBC இல் இவரது பேச்சு போனது ,

நேற்றைய நிகழ்வு சிங்களத்தை உளரீதியாக மிகவும் பாதித்துவிட்டது என்று அனைவரினதும் பேச்சுகளில் இருந்து தெரிகின்றது ,அவங்களே எரிகிற கூரையில எண்ணையை ஊத்துவாங்கள் போல கிடக்கு .

அண்ணை கேக்கிறனெண்டு குறைநினைக்கக்கூடாது.......இப்ப நீங்கள் ஆர்ற்ரை பக்கம்?தயவுசெய்து தமிழர்பக்கமெண்டு மொட்டையாய் சொல்லக்கூடாது :D

  • கருத்துக்கள உறவுகள்

BBC இல் இவரது பேச்சு போனது ,

நேற்றைய நிகழ்வு சிங்களத்தை உளரீதியாக மிகவும் பாதித்துவிட்டது என்று அனைவரினதும் பேச்சுகளில் இருந்து தெரிகின்றது ,அவங்களே எரிகிற கூரையில எண்ணையை ஊத்துவாங்கள் போல கிடக்கு .

அர்ஜுன், நேற்றும் இன்றும் நீங்கள் நல்லவராக தென்படுகிறீர்கள். உண்மையில் நீங்கள் நல்லவரா கெட்டவரா?? :D

... இக்காலத்தில் யாராவது சில நல்லவர்கள், இலங்கையில் ஒன்றிரண்டி ஊடகவியலாளர்களை பதம் பார்க்க மாட்டார்களா?????? :o ... எங்கள் ஆதரவு மேர்வின் அன்ட் கோவிற்கு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

BBC இல் இவரது பேச்சு போனது ,

நேற்றைய நிகழ்வு சிங்களத்தை உளரீதியாக மிகவும் பாதித்துவிட்டது என்று அனைவரினதும் பேச்சுகளில் இருந்து தெரிகின்றது ,அவங்களே எரிகிற கூரையில எண்ணையை ஊத்துவாங்கள் போல கிடக்கு .

உங்களிலும் மாற்றம் தெரிகிறதே ! :lol:

மகிழ்ச்சியாக இருக்கின்றது சேர்ந்து பயணிப்போம். :)

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குலைக்கிற நாய் கடிக்காது. இதை மகிந்தவின் காலோட கட்டி டென்காக் வாறநேரம் அனுப்ப வேணும். வரவேற்க அனைத்து ஐரோப்பிய தமிழர்களும் ரெடி!!

அர்ஜுன், நேற்றும் இன்றும் நீங்கள் நல்லவராக தென்படுகிறீர்கள். உண்மையில் நீங்கள் நல்லவரா கெட்டவரா?? :D

குழப்பம் என்னில் இல்லை, உங்கள் மீதுதான்.

இன்று அரசு திட்டி தீர்க்கும் அத்தனை சமூக ஆர்வலர்களும்(பலர் சிங்களவர்கள் ) அரசு சொல்வது போல்,

-புலிகளிடம் பணம் வாங்கியவர்களா ?

-இனத்துரோகிகளா ?

-நாட்டை காட்டி கொடுத்துவிட்டார்களா ?

அதற்கான உமது பதில் தான் நான் நல்லவரா? கெட்டவரா? என்பது.

இன்று சிங்கள பகுதியில் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்தினால் ராஜபக்சா கட்டாயம் அமோக வெற்றி பெறுவார்.அதைத்தான் அவரும் விரும்புகின்றார் .உலகம் என்ன சொல்கின்றது? சிறுபான்மை மக்களுக்கு நான் செய்தது,செய்வது சரியா என்பது பற்றி அவருக்கு எதுவித அக்கறையுமில்லை .தான் தன் இனத்திற்காத்தான் இவையெல்லாம் செய்தேன் இனத்திற்காக உயிரையும் விட தயார் என்கின்றார்.

சிங்கள அரசுகள் செய்வது பிழை,சிறு பான்மையினருக்கு செய்வது துரோகம் என்று சொல்லும் அந்த குறிப்பிட்ட சிறுபகுதி சிங்களவர்கள் பெரும்பான்மையினரின் பார்வையில் துரோகிகளே?

இதே பிரச்சனை தான் தமிழர் பக்கமும், தங்களுடன் இல்லாதர்களை துரோகி என்பது?

என்னை பொறுத்த வரை புலிகள் பிழை விடும் போது அதை சுட்டிக்காட்டாமல் மவுனமாகவோ அல்லது ஆமாம் போட்டதாலோ தான் புலிகள்பயங்கரவாதிகளாகி அழிந்தனர்.ஒபரே தேவனை சுட்டது தொடக்கம் முள்ளிவாய்காலில் பொதுமக்களை கேடயமாக வைத்து சுட்டதுவரை புலிகளும் எனக்கு எதிரிகள் தான் .

அரசு அல்லது புலிகள் என்ற நிலைப்பாடு தான் எடுக்க வேண்டுமா என்ன ?

பிழை விட்டால் அது யார் விட்டாலும் பிழை தான் .(அதுவும் வகை தொகையாக கொலைகள்).

புலிகள் பிழை விட்டாலும் நாம் இன்று இருக்கும் கால கட்டத்தில் எமது இனத்தின் விடுதலையின் தேவை கருதி அவர்களை ஆதரிக்க வேண்டும்என்பதே பலரின் கருத்தாக இருந்தது ,அதையே இன்று அரசும் சொல்லுகின்றது .ஆனால் தன் இனத்திடம் கிடைக்கும் ஆதரவிற்காக சர்வதேசத்தை உதாசீனப்படுத்தினால் புலிகளுக்கு நடந்ததுதான் சிங்களத்திற்கும் நடக்கும் .

ஐ.நா.முன் தமிழர்களை படம் எடுக்கும் சட்டவிரோத சிங்கள பயங்கரவாத புலனாய்வுத்துறை

531217_268419173243341_100002257821998_614830_1644284991_n.jpg

அமைச்சரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம்: பாக்கியசோதி சரவணமுத்து

ஐநா மன்றத்திற்கு சென்ற தனது கை கால்களை உடைப்பதாக கூறும் இலங்கை அமைச்சர் மெர்வின் சில்வாவின் அச்சுறுத்தலுக்கு அஞ்சப்போவதில்லை என்று மனித உரிமை செயற்பாட்டாளர் பாக்கியசோதி சரவணமுத்து கூறுகிறார்.

http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/03/120323_mervinsilvathreathractivists.shtml

BBC இல் இவரது பேச்சு போனது ,

நேற்றைய நிகழ்வு சிங்களத்தை உளரீதியாக மிகவும் பாதித்துவிட்டது என்று அனைவரினதும் பேச்சுகளில் இருந்து தெரிகின்றது ,அவங்களே எரிகிற கூரையில எண்ணையை ஊத்துவாங்கள் போல கிடக்கு .

இன்று அரசு திட்டி தீர்க்கும் அத்தனை சமூக ஆர்வலர்களும்(பலர் சிங்களவர்கள் ) அரசு சொல்வது போல்,

-புலிகளிடம் பணம் வாங்கியவர்களா ?

-இனத்துரோகிகளா ?

-நாட்டை காட்டி கொடுத்துவிட்டார்களா ?

இன்று சிங்கள பகுதியில் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்தினால் ராஜபக்சா கட்டாயம் அமோக வெற்றி பெறுவார்.அதைத்தான் அவரும் விரும்புகின்றார் .உலகம் என்ன சொல்கின்றது? சிறுபான்மை மக்களுக்கு நான் செய்தது,செய்வது சரியா என்பது பற்றி அவருக்கு எதுவித அக்கறையுமில்லை .தான் தன் இனத்திற்காத்தான் இவையெல்லாம் செய்தேன் இனத்திற்காக உயிரையும் விட தயார் என்கின்றார்.

சிங்கள அரசுகள் செய்வது பிழை,சிறு பான்மையினருக்கு செய்வது துரோகம் என்று சொல்லும் அந்த குறிப்பிட்ட சிறுபகுதி சிங்களவர்கள் பெரும்பான்மையினரின் பார்வையில் துரோகிகளே?

இதே பிரச்சனை தான் தமிழர் பக்கமும், தங்களுடன் இல்லாதர்களை துரோகி என்பது?

என்னை பொறுத்த வரை புலிகள் பிழை விடும் போது அதை சுட்டிக்காட்டாமல் மவுனமாகவோ அல்லது ஆமாம் போட்டதாலோ தான் புலிகள்பயங்கரவாதிகளாகி அழிந்தனர்.ஒபரே தேவனை சுட்டது தொடக்கம் முள்ளிவாய்காலில் பொதுமக்களை கேடயமாக வைத்து சுட்டதுவரை புலிகளும் எனக்கு எதிரிகள் தான் .

அரசு அல்லது புலிகள் என்ற நிலைப்பாடு தான் எடுக்க வேண்டுமா என்ன ?

பிழை விட்டால் அது யார் விட்டாலும் பிழை தான் .(அதுவும் வகை தொகையாக கொலைகள்).

புலிகள் பிழை விட்டாலும் நாம் இன்று இருக்கும் கால கட்டத்தில் எமது இனத்தின் விடுதலையின் தேவை கருதி அவர்களை ஆதரிக்க வேண்டும்என்பதே பலரின் கருத்தாக இருந்தது ,அதையே இன்று அரசும் சொல்லுகின்றது .ஆனால் தன் இனத்திடம் கிடைக்கும் ஆதரவிற்காக சர்வதேசத்தை உதாசீனப்படுத்தினால் புலிகளுக்கு நடந்ததுதான் சிங்களத்திற்கும் நடக்கும் .

அர்ஜுன் அண்ணா, எது எப்படியோ.... புலிகளை மட்டுமே குறை கூறி வந்த நீங்கள் இப்ப தான் அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்ட தொடங்கியிருக்கிறீர்கள்..... அந்த விதத்தில் எமக்கு மகிழ்ச்சியே.....

கடும் வெய்யிலில் கருணா கோட்- சூட்டு உடன் தர்ணா நடத்தினார் !

25 March, 2012 by admin

829932666papro2.jpg

நேற்றைய தினம்(24) கருணா, மற்றும் ஏனைய அமைச்சர்கள் சிலர் சேர்ந்து அமெரிக்காவுக்கு எதிராக போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இதில் கலந்துகொண்ட சில அமைச்சர்கள் சாதாரண உடை அனிந்திருந்தனர். ஆனால் கருணாவோ கோட் சூட் போட்டு வந்து கொழுத்தும் வெய்யிலில் வெந்து போனாராம். இருப்பினும் அமெரிக்காவுக்கு எதிராக கோஷமிட்டுள்ளார். போதக்குறைக்கு பதாதைகளையும் தாங்கி நின்று தனது எதிர்ப்பைக் காட்டியுள்ளார். (புகைப்படம் இணைப்பு)

கடும் வெய்யிலில் கருணா கோட்- சூட்டு உடன் தர்ணா நடத்தினார் !

829932666papro2.jpg

நேற்றைய தினம்(24) கருணா, மற்றும் ஏனைய அமைச்சர்கள் சிலர் சேர்ந்து அமெரிக்காவுக்கு எதிராக போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இதில் கலந்துகொண்ட சில அமைச்சர்கள் சாதாரண உடை அனிந்திருந்தனர். ஆனால் கருணாவோ கோட் சூட் போட்டு வந்து கொழுத்தும் வெய்யிலில் வெந்து போனாராம். இருப்பினும் அமெரிக்காவுக்கு எதிராக கோஷமிட்டுள்ளார். போதக்குறைக்கு பதாதைகளையும் தாங்கி நின்று தனது எதிர்ப்பைக் காட்டியுள்ளார். (புகைப்படம் இணைப்பு)

இது கருனாவிர வாழ்க்கைப் பிரச்சனை. அவர் அப்படிக் கத்தத்தான் வேண்டும்.

அவருடைய பாவத்தின் கூலிகளில் இதுவும் ஒன்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது கருனாவிர வாழ்க்கைப் பிரச்சனை. அவர் அப்படிக் கத்தத்தான் வேண்டும்.

அவருடைய பாவத்தின் கூலிகளில் இதுவும் ஒன்று.

இதைதான் சொல்வார்களோ .....

நாய்க்கு வாழ்க்கைப்பட்டால் (குரைத்துத்தான்) குலைத்து ஆகவேண்டும் என்று ....... :lol:

கடும் வெய்யிலில் கருணா கோட்- சூட்டு உடன் தர்ணா நடத்தினார் !

என்றாலும் இது கொஞ்ச்சம் ஓவர் தான்............. :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

மேர்வின் சில்வாவின் உரை குறித்து விசாரணை: பொலிஸார்

பொதுமக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வா உரையின் உள்ளடக்கங்கள் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக, பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

துரோகி என தான் குறிப்பிட்ட ஊடகவியலாளர் ஒருவரின் கை கால்களை உடைப்பேன் என அண்மையில் அமைச்சர் மேர்வின் சில்வா கூறிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஊடகவியலாளர் பொத்தலஜயந்தவை நாட்டை விட்டு துரத்தியமைக்கும் தானே பொறுப்பு என அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக தமிழ் மிரரின் சகோதர ஆங்கில இதழான டெய்லி மிரருக்கு பொலிஸ் பேச்சாளர் கூறுகையில், அமைச்சர் மேர்வின் சில்வாவின் கருத்துகள் குறித்து பொலிஸாரால் விசாரிக்கப்படுவதாக கூறினார்.இந்த கருத்தின் நோக்கம் தெளிவில்லாத நிலையில் நான்கு விடயங்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

இத்தகைய கருத்தை கூறிய நபர் மனநிலை ஸ்திரமற்றவரா, அல்லது உண்மையிலேயே இந்நடவடிக்கையை தான் மேற்கொண்டதால் அவர் இதை தெரிவித்தாரா, அல்லது மற்றொரு நபரை பாதுகாப்பதற்காக இப்படி கூறினாரா, அல்லது பிரசித்தமடைவதற்காக இத்தகைய கருத்தை கூறினாரா என்பதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது என அவர் தெரிவித்தார்.

அமைச்சரால் குறிப்பிடப்பட்ட ஊடகவியலாளர் சில வருடங்களுக்கு முன்னர் அத்துருகிரியவில் வைத்து தாக்கப்பட்டதாகவும் இது தொடர்பாக தகவல்கள் திரட்டப்படுவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

அதேவேளை அமைச்சரின் கூற்று குறித்து விசாரணை நடத்த கோரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் ஆனால் இந்த உரையின் உள்ளடக்கம் காரணமாக பொலிஸார் தானாக விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண மேலும் கூறினார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.