Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை விவகாரத்தைக் கையாளும் கொள்கையை மாற்றுகிறது இந்தியா- புதுடில்லியின் அதிரடி

Featured Replies

இலங்கை விவகாரங்களைக் கையாள்வது தொடர்பில் இதுவரை காலமும் பின் பற்றிவந்த கொள்கையில் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களைச் செய்வதற்கு இந்திய மத்திய அரசு தீர்மானித்திருக்கிறது என உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றன.

காங்கிரஸின் இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் இலங்கை அரசின் உயர் மட்டத்திற்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது எனவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு இந்தியா ஆதரவளித்த பின்னர் இலங்கை அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரைச் சந்தித்து மிக நீண்டநேரம் பேச்சு நடத்தி இலங்கையின் கவலையை வெளியிட்டிருந்தார். அதேசமயம், தற்போதைய நிலைமைகள் குறித்து இந்திய மத்திய அரசின் உயர்மட்டப்பிரமுகர்களுடன் அவசர சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யுமாறும் இந்தச்சந்திப்பின் போது சம்பந்தப்பட்ட அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.

அமைச்சரின் இந்தக் கோரிக்கை உடனடியாக இந்திய அரசுக்கு அறிவிக்கப்பட்டது. என்றாலும், அதற்குச் சாதகமான பதில் கிடைக்கவில்லையென நம்பகரமாக அறியமுடிந்தது. இலங்கை அரசின் உயர்மட்டத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிவந்த இந்தியா அந்தத் தலைவர்கள் வழங்கிவந்த ஆக்கபூர்வமான உறுதிமொழிகள் எதுவும் நிறைவேற்றப்படாத காரணத்தால் அவர்களை உடனடியாக சந்திப்பதைத் தவிர்த்துவிட்டதாக இந்தியாவின் மூத்த இராஜதந்திரிஒருவர் "சுடர் ஒளி'யிடம் தெரிவித்தார்.

"இலங்கை அரசின் குறிப்பிட்ட சில தலைவர்கள் இந்தியாவுக்கு வழங்கிவந்த உறுதிமொழிகள் எதுவுமே இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனால் அவர்களிடம் பேசுவதில் இனியும் பலன் இல்லை என்று புதுடில்லி கருதுகிறது. ஆனாலும், அரசியற் தீர்வு தொடர்பான ஆக்கபூர்வமான பேச்சுகளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் நடத்துவதற்கு இந்தியா திட்டமிட்டிருக்கிறது'' என்றும் அந்த இந்திய இராஜதந்திரி குறிப்பிட்டார்.

இதற்கிடையில் இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையில் ஏற்பட்டிருக்கும் இந்தத் திடீர் மாற்றம் கொழும்பு அரசியலில் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. ஜெனிவா மாநாட்டிற்குப் பின்னர் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் ஏற்பட்டிருக்கும் மனக்கசப்பும் இதன் பின்னணியில் மேலும் மோசமடையக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

நன்றி : உதயன்

http://akkinikkunchu.com/new/index.php

  • கருத்துக்கள உறவுகள்

உதயன் செய்திகளை யாரும் நம்பாதீர்கள். உதயன் சரவணபவானுக்கும் யாழில் உள்ள இந்தியத்தூதரக அலுவலகத்திற்கும் நிறையவே தொட்டர்புகள் இருக்கின்றன. மகாலிங்கம் கூறுவதை அப்படியே செய்தியாகப் போட்டு உதயனின்மூலம் தமிழர் தலையில் மீண்டும் மிளாகாய் அரைக்க இந்தியா தயாராகின்றது. இந்தியதேசம் தமிழர்விரோததேசம்.

  • கருத்துக்கள உறவுகள்

தோல்வியின்பின் நீரில் மூழ்கித் ததளிக்கும் ஈழ களத்தில் வாழும் மக்கள் சிறு துரும்பையும் பற்றிக் கொள்வதில் தெளிவாக உள்ளனர்.

இந்த விடயத்தை புலம்பெயர்ந்த தமிழர் மத்தியில் உள்ள அரசியல் ஆர்வலர்களும் புரிந்து கொண்டு செயல்ப் படவேண்டும்.

இந்தியா தீர்மானத்தை எதிர்த்திருந்தால் 2009 போன்று இம்முறையும் இலங்கை வெற்றி பெறும் வாய்ப்பு உருவாகி இருக்கும்

டெல்கியில் எற்பட்டு வரும் மாறங்களை கரிசனையுடன் அவதானிப்பதும் சாதகமானவற்றை வரவேற்ப்பதும் முக்கியம்

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதாவது இந்தியாவின் ஒரு சில முடிவுகள் தமிழர் சார்பானதாக இருந்தாலும் அது எம்மக்களின் மேலுள்ள கரிசனையில் எடுத்த முடிவாக கருத முடியாது. இந்தியாவின் முடிவுகள் எப்போதும் சுயநலமான முடிவுகள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஆளுகையின் (எனக்குறுப்பிடப்படும்) எல்லைக்குள் வாழும் அசாம், நாகலாந்து, மணிப்பூர், மேற்குவங்கப் பழங்குடியினம் என இன்ணோரன்ன தனது சொந்தப் பிரஜைகள்மீதே அம்பானிகளதும் அரசியல் வியாபாரிகளதும் சொல்கேட்டு மனித வரலாற்றில் இல்லாத கொடுங்கோள்களை நிறைவேற்றும் தமிழர் விரோத தேசம் இந்தியா,

சப்றா யுனிக்கோ புகழ் சரவணபவனையும், தென்னிந்தியத் திருச்சபைமூலம் உள்நுழைத்த சுமந்திரனையும் வைத்துத் திருகுதாளம் செய்யும், கொலைகாரன் டக்ளசுடன் கைலாகு கொடுக்கும், பரந்தன் ராஜனை அரவணைத்து வைத்திருக்கும், வரதராஜருக்கு விசுவாசியாகவிருக்கும். தமிழர் விரோத தேசமாம் இந்தியாவை நம்பினால், இன்னுமொரு முள்ளிவாய்க்காலுக்கு, இன்றோ நாளையோ அன்றேல் இன்னுமோரிரு பதிண்வருடங்கள் தாண்டியோ தமிழினம் தயாரக இருத்தல் வேண்டும்.

ஹனுமான் அன்றழித்தான் இலங்கையைச் சீதைக்காக

இன்று சீதையே (?) இலங்கையை எரித்தாள் ராமனெனும் மாயைக்காக.

ஒரு சிலர் வாய்ச் சவடால் விடுவதில் மன்னர்.

இந்திய அரசியல் கோமாளிகளின் இந்த மாதிரியான ஏமாற்று வித்தைகள் பலதை நீண்டகாலம் மீண்டும் மீண்டும் நம்பியவர்கள் கொடிபிடித்து ஏமாந்ததுதான் மிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

indian-parlia.jpg

இலங்கை விவகாரங்களைக் கையாள்வது தொடர்பில் இதுவரை காலமும் பின் பற்றிவந்த கொள்கையில் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களைச் செய்வதற்கு இந்திய மத்திய அரசு தீர்மானித்திருக்கிறது என உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றன.

காங்கிரஸின் இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் இலங்கை அரசின் உயர் மட்டத்திற்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது எனவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு இந்தியா ஆதரவளித்த பின்னர் இலங்கை அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரைச் சந்தித்து மிக நீண்டநேரம் பேச்சு நடத்தி இலங்கையின் கவலையை வெளியிட்டிருந்தார். அதேசமயம், தற்போதைய நிலைமைகள் குறித்து இந்திய மத்திய அரசின் உயர்மட்டப்பிரமுகர்களுடன் அவசர சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யுமாறும் இந்தச்சந்திப்பின் போது சம்பந்தப்பட்ட அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.

அமைச்சரின் இந்தக் கோரிக்கை உடனடியாக இந்திய அரசுக்கு அறிவிக்கப்பட்டது. என்றாலும், அதற்குச் சாதகமான பதில் கிடைக்கவில்லையென நம்பகரமாக அறியமுடிந்தது. இலங்கை அரசின் உயர்மட்டத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிவந்த இந்தியா அந்தத் தலைவர்கள் வழங்கிவந்த ஆக்கபூர்வமான உறுதிமொழிகள் எதுவும் நிறைவேற்றப்படாத காரணத்தால் அவர்களை உடனடியாக சந்திப்பதைத் தவிர்த்துவிட்டதாக இந்தியாவின் மூத்த இராஜதந்திரிஒருவர் “சுடர் ஒளி’யிடம் தெரிவித்தார்.

“இலங்கை அரசின் குறிப்பிட்ட சில தலைவர்கள் இந்தியாவுக்கு வழங்கிவந்த உறுதிமொழிகள் எதுவுமே இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனால் அவர்களிடம் பேசுவதில் இனியும் பலன் இல்லை என்று புதுடில்லி கருதுகிறது. ஆனாலும், அரசியற் தீர்வு தொடர்பான ஆக்கபூர்வமான பேச்சுகளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் நடத்துவதற்கு இந்தியா திட்டமிட்டிருக்கிறது” என்றும் அந்த இந்திய இராஜதந்திரி குறிப்பிட்டார்.

இதற்கிடையில் இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையில் ஏற்பட்டிருக்கும் இந்தத் திடீர் மாற்றம் கொழும்பு அரசியலில் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. ஜெனிவா மாநாட்டிற்குப் பின்னர் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் ஏற்பட்டிருக்கும் மனக்கசப்பும் இதன் பின்னணியில் மேலும் மோசமடையக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

http://www.saritham.com/?p=55236

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தொடர்பிலான கொள்கைகளில் மாற்றம் கொண்டுவருகிறது இந்தியா!

யாழ் கருத்துக்களம அது தொடர்பிலான கொள்கைகளில் பாரிய மாற்றங்களை கொண்டுவருகிறது!

  • கருத்துக்கள உறவுகள்

கண்டிப்பாக அப்படி ஒரு மாற்றத்தின் மூலமே இதுவரை விட்ட தவறுகளுக்கு பரிகாரம் தேடமுடியும், அத்துடன் இந்தியாவுக்கான வளமான எதிர்காலத்தையும் உருவாக்க முடியும்.

இதற்கு தமிழர்களின் பங்கு முக்கியமானது அதை கருத்தில் கொண்டு செயல்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றுவருடம் பொறுத்துப் பார்த்துவிட்டார்கள்..! சிங்களவனை வளைக்கும் பொறிமுறை ஒன்றும் அகப்படவில்லை..! இப்போது கொள்கைமாற்றம் தேவையாக் உள்ளது..! :D

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றத்துக்கான காரணம்

1. சர்வதேசம்

2. தமிழகம்

3.சுயலாபம்

முத்துமாலை மணிகள் கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கத்தொடங்கி விட்டது. வெளிவிவகார கொள்கையில் மாற்றம் ஏற்படாவிட்டால் இந்த டைனோசர் அழிவது திண்ணம்.

இந்திய ஆளுகையின் (எனக்குறுப்பிடப்படும்) எல்லைக்குள் வாழும் அசாம், நாகலாந்து, மணிப்பூர், மேற்குவங்கப் பழங்குடியினம் என இன்ணோரன்ன தனது சொந்தப் பிரஜைகள்மீதே அம்பானிகளதும் அரசியல் வியாபாரிகளதும் சொல்கேட்டு மனித வரலாற்றில் இல்லாத கொடுங்கோள்களை நிறைவேற்றும் தமிழர் விரோத தேசம் இந்தியா,

சப்றா யுனிக்கோ புகழ் சரவணபவனையும், தென்னிந்தியத் திருச்சபைமூலம் உள்நுழைத்த சுமந்திரனையும் வைத்துத் திருகுதாளம் செய்யும், கொலைகாரன் டக்ளசுடன் கைலாகு கொடுக்கும், பரந்தன் ராஜனை அரவணைத்து வைத்திருக்கும், வரதராஜருக்கு விசுவாசியாகவிருக்கும். தமிழர் விரோத தேசமாம் இந்தியாவை நம்பினால், இன்னுமொரு முள்ளிவாய்க்காலுக்கு, இன்றோ நாளையோ அன்றேல் இன்னுமோரிரு பதிண்வருடங்கள் தாண்டியோ தமிழினம் தயாரக இருத்தல் வேண்டும்.

ஹனுமான் அன்றழித்தான் இலங்கையைச் சீதைக்காக

இன்று சீதையே (?) இலங்கையை எரித்தாள் ராமனெனும் மாயைக்காக.

இப்பிடி நீங்கள் பச்சையா எழுதிறதைப் பார்த்தால் உங்களிட்ட நிறைய விஷயம் இருக்கும் போல கிடக்கு?..

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஏதோ மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைத்தே இலங்கைக்கு எதிராக வாக்களித்தது.அதில் அவர்களின் சுயநலம் நிச்சயமாக உண்டு.ஆனால் தமிழர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும்.யூதரை விட கெட்டிக்காரர் என தம்பட்டம் அடிக்காமல் செயலில் காட்ட வேண்டும்.சிங்களவர்கள் இதே இந்தியாவை வைத்துத்தான் எம்மை அழித்தார்கள்.அதே இந்தியாவை சிங்களவருக்கு எதிராக நாம் மாற்ற வேண்டியது எம்மில் தான் தங்கி உள்ளது."எடுத்தேன் கவிழ்த்தேன்" என செயற்பட்டால் உள்ள தமிழினமும் அழிவது தவிர்க்க முடியாதது.

..நாமெல்லாம் இந்தியாவின் கொள்கை மாறாதா? மாற வேண்டும்? மாறும்? மாறி விட்டது? என்ற கனவுகளில் இருக்கிறோம். எமது தேசத்தின் புவியியல் நிலையால்! ... ஆனால் இந்தியாவின் கொள்கையில் எப்படியான மாற்றம் ஏற்பட்டது? ஜெனிவாவில் நிறைவேறிய பிரேரணையில் இந்தியா என்ன வேலை செய்தது? என்பதனை ... ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடருக்கு சென்றிருந்த BTF அமைப்பை சேர்ந்த ஒருவர் சிறிது நேரத்துக்கு முன் ILCTAMIL வானொலியில் விளக்கிக் கொண்டிருந்தார் ...

... கூட்டத்தொடர் தொடங்கிய நாளிலிருந்து இறுதி நாளை தவிர்ந்த அனைத்து நாட்களிலும், ஜெனிவாவிற்கான இந்திய தூதர் சமூகமளிக்கவில்லையாம்! மாறாக இந்திய முதல், இரண்டாம் செயலாளர்கள் மட்டும் பங்குபற்றிக் கொண்டிருந்தனராம், அதற்கு மேல் அவர்கள் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாகவே பகிரங்கமாக கூறிக்கொண்டிருந்தனராம், முக்கிய பிரச்சாரங்களிலும் ஈடுபட்டிருந்தனராம். ஆனால் இறுதி நாளில் இந்திய தூதர் வந்து ஆதரவாக வாக்களித்தது தெரிந்ததே!

... உண்மையில் ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணையை தோற்கடிக்கவே திரைமறைவில் வேலை செய்தது, தான் ஆதரவாக வாக்களிக்க இருப்பது தெரிந்தும்! .. அப்போது ஏன் ஆதரவாக வாக்களித்தது ...

1) காங்கரசின் தொடர் தோல்விகள்

2) தமிழக கட்ட்சிகளின் கடும் எதிர்ப்பு ... போன்றவற்றால் இருக்கலாம்!

... இந்திய லோக்சபா தேர்தல்கள் அனேகம் அடுத்த வருடம் வர இருக்கும் நிலையில், தமிழக மக்களை ஏமாற்ற நாடகங்கள் ஆடப்படுகின்றது? ... எம் பத்திரிகைகள்/வானொலிகளும் இந்திய கொள்கையில் மாற்றம் ... என்ற தொடர் செய்திகள்!!!!!!!!!

இந்தியா புலம் பெயர்ந்தவனுக்கு பயந்து போச்சு,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.