செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வளர்ப்பு நாய் கடித்ததில் நீர்வெறுப்பு நோய்க்குள்ளான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி தோப்பு பகுதியைச் சேர்ந்த வைரமுத்து வசந்தராசா (வயது44) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபரை கடந்த மாதம் வளர்ப்பு நாய் கடித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தடுமாற்றம், தண்ணீரை கண்டால் பயம் போன்ற நிலை உருவானதால், அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று வியாழக்கிழமை அவர் உயிரிழந்துள்ளார். நாய் கடித்த நிலையில் உரிய தடுப்பூசியை பெறாமையால் நீர் வெறுப்பு நோய்க்குள்ளாகி…
-
- 1 reply
- 370 views
-
-
நிர்வாண கோலத்தில் சலவை இயந்திரத்திற்குள் ஒளிந்துகொண்ட நபர் ஒருவர் அரைமணி போராட்டத்தின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவமொன்று அவுஸ்திரேலியாவின் வடக்கு மெல்போர்னில் நகரில் இடம்பெற்றுள்ளது. காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காகவே மேற்படி நபர் இவ்வாறு நிர்வாண கோலத்தில் சலவை இயந்திரத்திற்குள் நுழைந்துகொண்டுள்ளார். இதன்போது சலவை இயந்திரத்தினுள் சிக்கிக்கொண்ட இந்நபர் வெளியில் வருவதற்கு மிகவும் சிரமப்பட்டுள்ளார். முயற்சி தோல்வியடையவே தீயணைப்பு பிரிவினர், பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் குறித்த நபர் மீது ஒலிவ் எண்ணெயை தடவி அரை மணி போராட்டத்தின் பின்னர் மீட்டுள்ளனர். இதேபோல், அண்மையில் அமெர…
-
- 1 reply
- 303 views
-
-
99 'ஐபோன் 6' கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி இருதய வடிவான அலங்கார தோற்றத்தை உருவாக்கி அதன் நடுவில் நின்றவாறு தனது காதலியிடம் திருமணம் செய்வதற்கான விருப்பத்தை வெளியிட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. குவாங்ஸொயு மாகாணத்தை சேர்ந்த பெயரை வெளியிட விரும்பாத கணினி பொறியியலாளரான காதலர் தனது காதலியிடம் வித்தியாசமான முறையில் திருமணம் செய்வதற்கான விருப்பத்தை வெளியிட தீர்மானித்தார். இதன் பிரகாரம் அவர் 53000 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பணத்தைச் செலவிட்டு 99 'ஐபோன் 6' கையடக்கத் தொலைபேசிகளைக் கொள்வனவு செய்து தனது திருமண விருப்பத்தை காதலியிடம் வெளியிட்டார். இன்ப அதிர்ச்சிக்குள்ளான காதலி அவரது விருப்பத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளார். http://www.virakesari.lk/articles/2014/…
-
- 1 reply
- 550 views
-
-
அமிர்தசரஸ்: பாஞ்சாப் மாநிலத்தில் 500 ரூபாய் காணாமல் போனதற்காக வகுப்பு மாணவிகளை நிர்வாணமாக்கி சோதனையிட்டுள்ளார் ஆசிரியை ஒருவர். இந்த சம்பவத்தால் கொதித்து போன பெற்றோர்கள் போலீசில் புகார் தெரிவிக்கவே ஆசிரியர் தலைமறைவாகிவிட்டார். பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் மாதியாலாவில் உள்ள அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியையாக பணியாற்றுபவர் ஹர்ஜித்கவுர். இவர், 7 ஆம் வகுப்புக்கு பாடம் நடத்த சென்றபோது அவரது பர்சில் இருந்த 500 ரூபாய் காணாமல் போயுள்ளது. அந்த பணத்தை வகுப்பு மாணவிகளில் யாரோ தான் திருடியிருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்ட ஹர்ஜித்கவுர் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். ஆனால், அந்த பணத்தை தாங்கள் யாரும் எடுக்கவில்லை என்று மாணவிகள் மறுத்தனர். ஆனாலும் அதை விடாத ஆசிரியை 1…
-
- 1 reply
- 579 views
-
-
உணவுப்பொருட்களில் மிதக்கும் உயிரினங்கள்: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் [ சனிக்கிழமை, 30 மே 2015, 04:12.46 பி.ப GMT ] கனடாவில் உணவு பொருட்களின் தரம் மற்றும் சுகாதாரம் மிகவும் குறைந்துவிட்டதாகவும் அவற்றில் பல உயிரினங்கள் கலந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவற்றில் முக்கியமான சில நிகழ்வுகள: நியு பவுன்லாந்து (New foundland) பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மளிகை கடை யில் இருந்து வாங்கிய உறைந்த புறொக்கோலி பைக்குள் பல்லியின் தலை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார். இதேபோல் சென்.ஜோன்சை (St.Jones) சேர்ந்த பெண் புளு டயமன்ட் என்ற பாதாம் பாலை வாங்கியுள்ளார். அதற்குள் 10முதல் 12 அங்கு…
-
- 1 reply
- 399 views
-
-
மணக்கும் தண்டனை . Tuesday, 04 March, 2008 04:24 PM . டெஹரான், மார்ச்.4: ஈரான் நாட்டில் மனைவிக்கு ஒரு லட்சத்து 24 ஆயிரம் ரோஜா மலர்களை வாங்கி தர வேண்டும் என்று கணவனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாம். . ஈரான் நாட்டில் மனைவிகளுக்கு கணவன்மார்கள் வரதட்சணை அளிக்கும் பழக்கம் இருக்கிறதாம். திருமணத்தின் போது கணவன்கள் வரதட்சணை பற்றி உறுதி அளிப்பார்களாம். இதே போல பெண்மணியின் கணவன் ஒருவர் அவருக்கு ரோஜா மலர்களை வாங்கி தருவதாக கூறியிருக்கிறாராம். திருமணத்திற்கு பிறகு மிகவும் கஞ்சனாகி விட்டாராம். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருந்த கணவனால் வெறுத்துப் போன அந்த பெண்மணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறாராம். நீதிபதி ஒரு லட்சத்து 24 ஆயிரம் …
-
- 1 reply
- 971 views
-
-
உலகின் 'ஏழ்மை'யான அதிபர்! ஆடம்பர மாளிகை, அணிவகுக்கும் கார்கள், எந்நேரமும் சூழ்ந்திருக்கும் பாதுகாப்பு படை, எல்லாவற்றுக்கும் வேலையாட்கள்... ஒரு நாட்டின் அதிபர் என்றவுடன் அவர்பற்றி நம் மனதில் விரியும் ‘இமேஜ்’ இப்படித்தானே இருக்கும். ஆனால், பழைய பண்ணை வீட்டில் சாதாரண விவசாயி போல வலம்வருகிறார் உருகுவே நாட்டின் அதிபர் ஜோஸ் முஜிக்கா. அவரை ‘ஏழை அதிபர்’ என்றே சர்வதேச ஊடகங்கள் வருணிக்கின்றன. உருகுவே அரசால் வழங்கப்படும் மாளிகையை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு, சரியான சாலை வசதிகூட இல்லாத பண்ணை வீட்டில் வசித்துக்கொண்டே நாட்டை நிர்வகிக்கிறார், அதிபர் முஜிக்கா. தன் மனைவியுடன் இணைந்து பூந்தோட்டங்களை வளர்ப்பது தினசரிக் கடமைகளுள் ஒன்று. கூடவே, ஒற்றைக்காலை இழந்த நாயைப் பராம…
-
- 1 reply
- 799 views
-
-
ஆணுறைகள் தீர்ந்ததால் குளிர்கால ஒலிம்பிக் வீரர்கள் நெருக்கடியில் 14 February 2026 இத்தாலியில் நடைபெற்று வரும் 2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி சில நாட்களிலேயே, வீரர்களின் குடியிருப்பில் வழங்கப்பட்ட இலவச ஆணுறைகள் தீர்ந்துப்போனதால் எதிர்பாராத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. போட்டிகள் ஆரம்பமான மூன்று நாட்களிலேயே ஏற்பாட்டாளர்களால் வழங்கப்பட்ட 10,000 பொதிகள் முழுமையாகத் தீர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் தமக்குத் தேவையான விநியோகம் இல்லை என வீரர்கள் முறைப்பாடு அளிக்கத் தொடங்கியுள்ளனர். "மூன்றே நாட்களில் இருப்பு முடிந்துவிட்டது. மேலதிக கையிருப்புகள் வரும் என உறுதியளித்துள்ளனர், ஆனால் அது எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது" என பெயர் குறிப்பிட விரும்பாத வீரர் ஒரு…
-
- 1 reply
- 133 views
-
-
பிறக்கும்போதே இதயகுறைபாடுகளுடன் பிறந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இரண்டு வயது சிறுவன் ஒருவர், உயிருக்காக போராடி கொண்டிருக்கின்றான். அவன் கொண்டாடும் கடைசி கிறிஸ்துமஸ் இதுதான் என நினைத்து அவனது பெற்றோர்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர். பிரிட்டனில் உள்ள Chestnut Tree House என்ற இடத்தில் வாழும் Zoe Granger என்ற இரண்டு வயது குழந்தைக்கு பிறக்கும்போதே இதயத்தின் நான்கு அறைகளில் ஒன்று இல்லாமலேயே பிறந்துள்ளது. எனவே இரத்த சுத்திகரிப்பு பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தது. மூன்று அறுவை சிகிச்சை மற்றும் செயற்கை இதயம் போன்றவற்றின் காரணமாக இறப்பை தற்காலிகமாக மருத்துவர்கள் ஒத்திவைத்தனர். எந்த நேரமும் இதயம் செயலிழந்து போகலாம் என்ற அபாய கட்டத்தில் இருக்கும் சிறுவன் கொண்ட…
-
- 1 reply
- 505 views
-
-
உண்மையைச் சொல்லுங்கள்: அசத்தும் வீடியோ வெளியாகியுள்ளது ! 04 September, 2013 by admin உண்மையச் சொல்லுங்கள் ! என்ற தலைப்பில் சர்வதேச மன்னிப்புச் சபை ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுலா செல்லும் நபர்களை இது குறிவைத்து எடுக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தீவு ஒரு சொர்க்க பூமி, அங்கே வந்தால் சொகத்தைப் பார்க்கலாம் என்று எல்லாம் இலங்கை அரசு பெரும் பணத்தை செலவழித்து விளம்பரப்படுத்தி வருகிறது. எனினும் சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள இந்த சிறிய வீடியோவால் இவை அனைத்தும் ஆட்டம் கண்டுள்ளது. வீடியோவைப் பாருங்கள் .http://www.youtube.com/watch?v=Lx_CGTjPDOU
-
- 1 reply
- 702 views
-
-
இரவில் மாடுகளால் ஏற்படும் விபத்தை தடுக்க சூப்பர் பிளான் போட்ட உ.பி. அரசு ! ஐடியாவை கண்டு அசந்து போன மக்கள் ! பொதுவாக இரவு நேரங்களில், கார், பைக், லாரி, பஸ் போன்ற வாகனங்கள் அதிகமாக இயக்கப்படுவது இல்லை. இரவு நேர பேருந்துகள், மற்றும் சொந்த பயணங்களை மேற்கொள்ளுபவர்கள் மட்டுமே பயணம் செய்வார்கள். அதுவும் இரவு நேரங்களில் டிராபிக் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதால், 100 கிலோ மீட்டருக்கு குறைவாக வாகனங்கள் செல்வதில்லை. இப்படி செல்லும் போது, அடிக்கடி... நாய்கள் மற்றும் மாடுகள் விபத்துக்குள்ளாகிறது. குறிப்பாக மாடுகளால் ஏகப்பட்ட விபத்துகள் நடப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தில், இது போல் நடு ரோடுகளில் அலைந்து கொண்டிருக்கும் மாட…
-
- 1 reply
- 749 views
-
-
ஜேர்மனியில் பேய் ஓட்டும் நடவடிக்கை : பெண் உயிரிழப்பு ஜேர்மனிய பிராங்போட் நகரிலுள்ள ஹோட்டல் அறையொன்றில் இடம்பெற்ற பேய் ஓட்டும் நடவடிக்கையின் போது கொரிய பெண்ணொருவர் உயிரிழந்ததையடுத்து அவரது 15 வயது மகன் உட்பட 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பிராங்போட் நகரிலுள்ள இன்டர்கொன்ரினென்டல் ஹோட்டலில் இரவொன்றுக்கு 200 ஸ்ரேலிங் பவுண் வாடகைக்கு அறையொன்றை பெற்றே இந்தப் பேய் ஓட்டும் செயற்கிரமம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் இரு மணி நேரம் நீடித்த இந்த செயற்கிரமத்தின் போது குறிப்பிட்ட பெண் கட்டிலில் கட்டி வைக்கப்பட்டு மோசமாக அடித்து உதைக்கப்பட்டுள்ளார். இதன்போது அந்தப் பெண்ணின் கூச்சல் வெளியி…
-
- 1 reply
- 405 views
-
-
மெக்சிகோ நாட்டை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர், ஒன்பது சிசுக்களை சுமந்து கொண்டிருக்கிறார். அடுத்த மாதம் 20ம் தேதி இவருக்கு பிரசவ தேதி குறிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த பெண், கடந்த 2009ல் ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளை பெற்றது தான் உலக சாதனையாக கருதப்பட்டது. இதேபோல, தற்போது மெக்சிகோ நாட்டின் கோயஹுய்லா பகுதியை சேர்ந்த கர்லா வனிசா என்ற பெண், ஒன்பது குழந்தைகளை சுமந்து கொண்டிருக்கிறார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் எல்லை பகுதிக்கு அருகே இவரது ஊர் உள்ளது.இந்த பெண்ணின் வயது குறிப்பிடப்படவில்லை. தற்போது இந்த பெண் சால்டிலோ நகர மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம், 20ம்தேதி இவரது பிரசவ தேதி குறிக்கப்பட்டுள்ளது. இவரது கர்…
-
- 1 reply
- 771 views
-
-
வடக்கில் பௌத்த மதத்தினையும் மதக்கடவுளின் சிலைகளையும் வலுக்கட்டாயமாக திணித்து வருகின்றது சிறீலங்கா அரசு இதைத் தடுப்பதற்கு இந்துகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கைலாசபிள்ளை தெரிவித்தார். அகில இலங்கை இந்து மாமன்றத்தின் யாழ்ப்பாண பணிமனையில் இன்று திங்கள் ´வடக்கில் துளிர்விடும் பௌத்தம்´ என்ற தொனிப்பொருளில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்தஅகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கைலாசபிள்ளை, வடக்கில் தற்போது புத்தர் சிலையினுடைய ஆக்கிரமிப்பு அதிகளவில் ஏற்பட்டு வருகின்றது. இதற்காக நாம் ஏற்கனவே கண்டனங்களைத் தெரிவித்திருந்தோம் அதன்பிரகாரம் தற்போது அது இடை நிறுத்தப்பட்டுள்ளது. வடக்கில் …
-
- 1 reply
- 585 views
-
-
முற்பிறவியில் கோடாரியால் வெட்டிக் கொன்றவனைக் காட்டிக் கொடுத்த 3 வயது 'சிரிய' குழந்தை Posted by: Jayachitra Updated: [iST] டமாஸ்கஸ்: சிரியாவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தன்னை முற்பிறவியில் கொலை செய்தவனைக் காட்டிக் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. சிரியாவில் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியை சேர்ந்த 3 வயது ஆண் குழந்தை பிறக்கும் போதே தலையில் சிறிய கோடு போன்ற அடையாளத்துடன் பிறந்ததாகக் கூறப்படுகிறது. அவ்வாறு பிறக்கும் குழந்தைகள் தங்களது முற்பிறவியை நினைவில் கொண்டிருப்பார்கள் என்பது ட்ருஸ் தனி இனக்குழுவின் நம்பிக்கையாம். அதை உண்மையென்று நிரூபிக்கும் விதமாக அந்த சிறுவன் பேசும் வயதை எட்டியவுடன் தனது முற்பிறவி ரகசியங்களை கூறியுள்ளான். அதன்படி, முற்பிறவியில் தன்னுடைய…
-
- 1 reply
- 539 views
-
-
ஒரு லீற்றர் சூரியகாந்தி எண்ணெய் வழங்கினால் ஒரு லீற்றர் பியரை பெற்றுக்கொள்ளலாம் என ஜேர்மனியிலுள்ள பிரபல உணவகம் ஒன்று பண்டமாற்று முறை திரும்பியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா போரின் தாக்கம் உலகம் முழுவதும் பல பொருளாதார பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் பயன்படுத்தும் சூரியகாந்தி எண்ணெய் 80சதவீதம் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின்னர் சூரியகாந்தி எண்ணெய் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதனால் ஜேர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகள் சமையல் எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பற்றாக்குறையால் தத்தளிக்கின்றது. இந்தநிலையில் சமையல் எண்ணெய் தட்டுப்பாட்டை சமாளிக்க, ஜேர்மனியில் உள்ள உணவகம் ஒன்று வித்தியாசமான ப…
-
- 1 reply
- 336 views
-
-
பிரித்தானியாவில் சுழலும் படுக்கையறைகளை கொண்ட மிக பிராமண்டமான வீடு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில், போடோபெலொ நகரில் இவ்வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவ்வீட்டில் நான்கு படுக்கையறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மாஸ்டர் படுக்கையறையானது 360 பாகைக்கு சுழலக்கூடிய வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதில் உறங்குவர்கள் நான்கு பக்கமும் சுழன்றபடியே உறங்க முடியும். வானவில் வர்ணங்களை கொண்டு இவ்வீட்டின் சுவர்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மாடிக்கு செல்வதற்கான படிக்கட்டுகள் சாதாரண படிக்கட்டுக்கள் போன்றில்லாமல் சுழலும் படிக்கட்டுக்களாக அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த வீட்டை நிர்மாணிப்பதற்கு திட்டமிட்பட்படுள்ளது. எ.பி.ரோகர்ஸ் எனும் கட்டட வடிவமைப்பாளரே இவ்வீட்டை நிர்மாண…
-
- 1 reply
- 580 views
-
-
பாலியல் தொழிலாளிகளுக்கு பணம் கொடுப்பதை குற்றமாக அறிவிக்கும் புதிய சட்டமொன்றை பிரெஞ்சு நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இந்த புதிய சட்டத்தின் கீழ் பாலியல் தொழிலாளியின் சேவைகளுக்குப் பணம் கொடுப்பதாக கைது செய்யப்படும் நபர் முதன்முறை கைது செய்யப்படும் போது அவருக்கு 1,700 டொலர் வரை அபராதம் விதிக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸில் இருக்கும் சுமார் 30,000 பாலியல் தொழிலாளிகளை இந்த புதிய சட்டம் பாதிக்கும் என்று கருதப்படுகிறது. இவர்களில் பெரும்பான்மையினர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். இன்னொருவரின் உடம்பை பணம் கொடுத்து வாங்குவதில் தவறில்லை என்கிற எண்ணப்போக்கை மாற்றவேண்டி…
-
- 1 reply
- 321 views
-
-
அரசியலுக்கு வருகிறாரா கோத்தா? நான் அரசியலுக்கு வந்தால், இரண்டாவதாக (பிரதமர்) என்ன, முதலாவதாயே (ஜனாதிபதி) வர முடியும் என்றார் கோத்தா. சுதந்திர கட்சியின், கருணா அம்மான் வகித்த, உபதலைவர் பதவிக்கு, நாட்டைக் காத்த, கோத்தா ஏன் வரக் கூடாது என சில சு.க காரர்கள், தேரை இழுத்து தெருவில விட்டதோட வெடி கொளுத்திப் போட்டுள்ளனர். அக மகிழ்ந்து போன கோத்தா, தேசப்பற்று வசனங்களுடன் மேலே சொன்னதையும் உதிர்த்தார். அதே வேளை, இவர் எல்லாம், சு.கட்சிக்குள் வந்தால், தாம் வெளியேறுவேன் என்று சொன்னார் சந்திரிக்கா. தம்பியின் பதவி ஆசை பற்றி, அண்ணர் மகிந்த இன்னும் ஒண்டும் சொல்லேல்லை. முலம்: டெயிலி மிரர் (மோபைலில, லிங் பிடிச்சப் போடேலாம இருக்குது, கண்டியளோ)
-
- 1 reply
- 371 views
-
-
கனடிய தமிழர் சுரேஷ் ஜோக்கிம்12 நாட்களில் தயாரித்து, நடித்த சிவப்பு மழை என்ற திரைப்படம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. கின்னஸ் புத்தக நிறுவனத்திடமிருந்து இதற்கான சான்றிதழ் சமீபத்தில் சிவப்பு மழை குழுவினருக்கு அனுப்பப்பட்டது. அதை முதல்வர் கருணாநிதியிடம் காட்டி வாழ்த்துப் பெற்றுள்ளது சிவப்பு மழை படக்குழு. சுரேஷ் ஜோக்கிம், மீரா ஜாஸ்மின், இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, மக்கள் தொடர்பாளர் நெல்லை சுந்தர்ராஜன் உள்ளிட்டோரை முதல்வர் வாழ்த்தினார். இந்தப் படத்தில் மீரா ஜாஸ்மின் நாயகியாக நடித்திருக்கிறார். தேவா இசையமைத்துள்ளார். 1990ம் ஆண்டு பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்று 13 நாள்களில் ஒரு படத்தை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தது. ஆனால் சிவப்பு மழை படம்…
-
- 1 reply
- 607 views
-
-
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை! உகாண்டாவில் ‘கில் த கேஸ்’ என்ற பெயரில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள உகாண்டாவின் நீதி நெறி மற்றும் ஒருமைப்பாட்டுத்துறை அமைச்சர் சைமன் லோகோடோ, ‘தற்போதைய தண்டனைச் சட்டம் சில குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டது. இது ஓரினச் சேர்க்கையை குற்றப்படுத்துவதாக மட்டுமே அமைந்துள்ளது. ஓரினச் சேர்க்கையை ஊக்குவித்தல், அவர்களை பணிக்கு எடுத்தல் ஆகிய செயலில் ஈடுபடுவோரும் குற்றவாளிகளாகக் கருதப்படுவர். ஓரினச் சேர்க்கை போன்ற கடும் செயலில் ஈட…
-
- 1 reply
- 607 views
-
-
13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தாரா ட்ரம்ப்?! - எப்ஸ்டீன் ஆவணங்களில் வெளியான புதிய திடுக்கிடும் தகவல்கள்! 03 Feb, 2026 | 11:42 AM சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் நியூஜெர்சியில் 13 வயது சிறுமியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட புதிய எப்ஸ்டீன் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டு வருகின்றன. அமெரிக்காவின் பிரபல தொழிலதிபராக வலம் வந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein), சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாகவும் பெண்கள், சிறுமியரை விநியோகித்து, மறைமுகமாக வியாபாரத் தொடர்பு பேணிவந்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, 2019ஆம் ஆண்…
-
-
- 1 reply
- 177 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 570 views
-
-
இந்த ஆண்டு கோடையில், இத்தாலி-அட்ரியா கடற்கரை நீல நிற நண்டுகளால் திண்டாடுகிறது. நீல நிற நண்டுகள், சிறு மீன்பிடி தொழிலில் ஈடுபடும் கரையோர மீனவர்களின் வலைகளை அறுத்து, வலையில் சிக்கிய மீன்களைச் சிதைத்து மீனவர்களை அதிக எரிச்சல் அடைய வைக்கின்றன. அத்தோடு உல்லாசப் பயணிகள் விரும்பி உட்காரும் கடற்கரைகளில், அவர்களுக்குப் பயத்தையும் ஏற்படுத்துகின்றன. கடல் நீர் சூடாகி வருவதால்தான் நீல நிற நண்டுகள் இத்தாலிக்கு இடம் பெயர்ந்து வந்திருக்கின்றன என்று சொல்கிறார்கள். ஏறக்குறைய 20 செ.மீ. அகலமும் 10செ.மீ. நீளமும் உள்ள ஒரு கிலோ அளவிலான நீல நண்டுகள் கடல்வாழ் மட்டிகளையும் அழித்து வருகின்றன. இதனால் ‘கடலின் கொலையாளி’ என்று இத்தாலியில் இவற்றை விழிக்கிறார்கள். நீல நண்டுகளால் மனிதருக…
-
- 1 reply
- 338 views
-
-