யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு,
எதிர்வரும் 30.03.2017 அன்று யாழ் இணையம் தனது 19ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது.
யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம்.
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.
எனினும் இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 19ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது.
எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் கள உறவுகள் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம்.
யாழ் களம் 19 ஆவது அகவைக்குள் காலடி வைக்கும் 30.03.2017 அன்று யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கத்தை வெளியிடுவோம். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு மாத காலம்தான் இருக்கின்றது. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள்.
விதிமுறைகள்:
- யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம்.
- ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும்.
- கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.
- கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம்.
- கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம்.
- ஆக்கங்கள் யாழ் களத்திற்கென எழுதப்பட்டதாக/தயாரிக்கப்பட்டதாக இருக்கவேண்டும்.
- ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும்.
- ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும்.
- யாழ் களத்தில் பிரசுரம் செய்து ஒரு வாரம் தாண்டும் வரையிலும் வேறெங்கும் பிரசுரம் செய்யலாகாது.
"நாமார்க்கும் குடியல்லோம்"
நன்றி
யாழ் இணைய நிர்வாகம்
53 topics in this forum
-
நண்பர்கள் என்பவர்கள் எம்மோடு இரண்டரக்கலந்தவர்கள் எம்மை அறிந்தவர்கள் புரிந்தவர்கள் என்பதையும் தாண்டி முகம்தெரியாமலேயே நட்பு வைத்துக்கொள்ளலாம் அதனாலும் பல நல்லது செய்யலாம் பல அரிய விடயங்களை பெறலாம் என்பதை எனக்கு அறிமுகமாக்கியது யாழ் தான். அதன் தொடர்ச்சியாக முகநூலிலும் பயணம் தொடர்கிறது கருத்து எழுதுவதில் யாழ் தந்த அனுபவம் மற்றும் அறிமுகங்களோடு முகநூல் பாவனையும் எனக்கு மேலும் நல்ல சிறந்த நட்புக்களையும் தேடல்களையும் தொடர்புகளையும் தந்திருக்கிறது. அது மேலும் மேலும் வளரும் சாத்தியமுள்ளது. எமது இலக்கிலும் நண்பர்களை சேர்ப்பதில் அவதானமாகவும் தொடர்ச்சியாக இருந்தால் முகநூலும் எமக்கு ஒரு வரப்பிரசாதமே. …
-
- 34 replies
- 12.4k views
- 2 followers
-
-
-
- 120 replies
- 14.7k views
-
-
டிக் என்று வந்து விழுந்த மெசெஞ்சரின் சத்தம் அவளைத் திடுக்கிட்டு எழ வைத்தது. பதட்டத்துடன் கணவனை எட்டிப் பார்த்தவளுக்கு அவன் விழிக்கவில்லை என்று தெரிந்து நின்மதிப் பெருமூச்சு ஒன்று எழுந்தது. நல்ல காலம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார். இல்லை எனில் ஆரவன் உனக்கு இந்த நேரத்தில மெசேச் அனுப்புறான் என்று .......... எதேதோ கேட்டுப் பிரச்சனையாகியிருக்கும். போனை எடுத்து சத்தத்தை நிறுத்திவிட்டு மீண்டும் போர்வையைப் போர்த்தியவளுக்கு மனதில் சொல்லவொண்ணாத் துயரம் ஏற்பட்டது. முன்னர் இவளின் முகநூலில் 1300 பேர் நட்பில் இணைந்திருந்தனர். அவர்களில் பலரை இவளுக்கு தெரியாதுதான். ஆனால் அவர்கள் போடும் பதிவுகளைப் பார்த்தது, பிரச்சனை இல்லாதவர்கள் என்று மனதில் பட்டதில் நட்பில் இணைத்திருந்தாள். ஆனாலு…
-
- 75 replies
- 8.5k views
- 1 follower
-
-
துருச்சாமி . சாமியுடன் ஒருநாள். (நகைச்சுவை). என்னுரை: இந்தக் காவியத்தில் பாலகர் காண்டம், வாலிபர் காண்டம் என இரு காண்டங்கள் உள்ளன. பாலகர் காண்டத்தில் ஆறு படலங்கள் இருக்கின்றன. அவையாவன: 1) வழித்தேங்காயைத் தெருப் பிள்ளையாருக்கு உடைத்தல் படலம். 2) பாதயாத்திரைப் படலம். 3) அற்புதங்கள் அருளாசி வழங்கும் படலம். 4) நினைவேந்தல் படலம். (பிளாஷ்பேக் வாசகர் சிரமம் தவிர்க்க). 5) பந்திபோஜனப் படலம். 6) நீதிவழங்கும் படலம். இந்த ஆறு காண்டங்களும் பத்து மாதத்தில் இருந்து நூறு வயதுவரை வாழ்பவர்கள் படித்துப் பயன்பெற வேண்டியது. அடுத்து வாலிபர் காண்டம். இதில் இரண்டு படலங்கள் இருக்கின்றன. இதை வாசிக்க சில கட்டுப்பாடுகளை கம்பெனி விதித்துள்ளது. அ…
-
- 104 replies
- 14.8k views
- 1 follower
-
-
கூடைப்பந்து மைதானத்தில் நாலு பக்கம் கோடு போட்ட - நான்முகன் நடுவில் இட்ட புள்ளி நீயே ! காதிலும் வளையம் மூக்கிலும் வளையம் நாக்கிலும் வளையம் -நாபி உன்னிலும் மின்னுது வளையம் ! கண் இமைக்கு கருமை கைகளுக்கு மருதாணி - தொப்புள் உன்னிலும் ஒளிருது ஸ்டிக்கர் ! கோடிகள் கொட்டும் திரையிலும் கொடியிடை அசைவினில் - குளோசப் முழுதும் கொள்ளையடிக்கின்றாய் ! நடிகைக்கு தரும் நான்கு கோடியில் மூன்று கோடி - முழுதும் முகம் காட்டி முழுங்குகின்றாய் ! எதிர்த்து வரும் வாலிபர் வெறித்த கண்கள் கருத்தாய் மேயும் - தாவணியில் மின்னும் ஆவணியும் நீதானே ! காலையில் கல்லூர…
-
- 20 replies
- 3.5k views
- 1 follower
-
-
நத்தார் அன்று பரிசிலிருந்து 100 கிலோமீற்றரிலுள்ள Chartres தேவாலயத்துக்கு குடும்பமாக செல்வது கிட்டத்தட்ட 30 வருடப்பழக்கம். 2016 நத்தார் அன்றும் அப்படித்தான் மக்கள் எல்லோரையும் கூட்டிக்கொண்டு தேவாலயத்துக்கு போனோம் சுத்தி வணங்கி மெழுகு திரியை கொழுத்திவிட்டு வெளியில் வந்து கொஞ்ச நேரம் இருந்து விட்டு அடுத்த புரோக்கிறாம் என்ன என்று கேட்டபோது மக்கள் சொன்னார்கள் இன்று நீங்க எங்களுக்கு பின்னால வாருங்கள் என்று. கூட்டிக்கொண்டு ஒரு உணவகத்துக்குள் நுளைந்தார்கள் அங்கு ஏற்கனவே எமக்காக மேசை ஒதுக்கப்பட்டிருப்பது தெரிந்தது அது ஒரு பிரேசில் உணவகம் சாப்பிட்டு விட்டு பில் வந்தபோது மக்கள் அதை எடுத்துக்கொண்டு க…
-
- 18 replies
- 2.7k views
-
-
என்ன அண்ண ஆஸ்பத்திரி பக்கம் கந்தசாமியரோ கால்கிலோ கத்தரிக்காயும் கருவாடும் வாங்கிட்டு போக வந்தேன் இந்த குசும்பு தானே வேணாங்கிறது பின்ன ஆஸ்பத்திருக்கு வருவது என்னத்துக்காக இல்லை நீங்கள் ஆஸ்பத்திரி பக்கமே வாரது கிடையாது அதான் கேட்டேன் என்றார் விமலன் ஒன்றும் இல்லை லேசான தலைச்சுற்றாக இருந்தது அதுதான் வந்தன் என்றார் கந்தசாமியர் . ஓ அப்படியா உங்களுக்கு பிரசர் வந்திருக்கிறது சுகர், கொலஸ்ரோல் எல்லாம் செக் பண்ணுன நீங்களோ ?? இல்லை அந்த வருத்தங்கள் எல்லாம் இல்லையடா எனக்கு நீங்கள் சொல்லுவியள் ஆனால் உடம்ப செக் பண்ணுனால் தானே தெரியும் டகித்தர் வந்த பிறகு நான் கூட்டிக்கொண்டு கதைச்சு விடுறன் நீங்கள் இந்த வாங்கில இருங்கோ என்றுசொல்லி போனார் விமலன். விமலன் சொன்ன கதையை கேட்டு கந்தசாம…
-
- 17 replies
- 2.7k views
-
-
வந்தனா கொஞ்சம் நில்லுங்கோ, இன்று எனக்கொரு பதிலைச் சொல்லி விட்டுப் போங்கோ. நான் என்ன சொல்ல வேண்டும் என்று எதிர் பார்க்குறீங்கள் சந்திரன். பிள்ளைகள் பள்ளிகூடத்தால வந்திருப்பினம், இனித்தான் நான் போய் சமைக்க வேண்டும். வந்தனா எத்தனை நாட்கள் நாங்கள் இந்தக் கந்தோரில இரவுப் பணியாற்றி இருக்கிறோம். என்னுடைய ஆசையை நான் கூறிவிட்டேன் , நீங்கள்தான் பிடிகொடுக்காமல் நழுவுறீங்கள். என் நிலைமையை புரிந்து கொள்ளுங்கோ சந்திரன். தெரியும் வந்தனா, உங்களுக்கு இந்த வேலைகூட நான்தானே வாங்கித் தந்தனான். வாறகிழமை 30ம் தேதி விடுமுறையும் கூட ஒருமுறை என்ன சொல்லுங்கோ. என்னால் வரமுடியாது சந்திரன். ஆனால் நான் உங்களுக்கு ஒரு உதவி செய்யலாம். என்ன என்ன உதவி, ஆசையாய் இருக்கு கெதியாய் சொல்லுங்கோ. சும்மா ப…
-
- 33 replies
- 4.7k views
- 1 follower
-
-
நம்பிக்கையும் ஏமாற்றமும். “என் மகன்மீதா பழிபோடுகிறாய்…! என்ன திமிரடி உனக்கு…!!“ பத்து வீடுகளுக்குக் கேட்கும் வண்ணம் பெரும் குரலெடுத்துக் கத்தினாள் பவானியம்மாள், பக்கத்துவீட்டு ராதா படபடத்து ஒடிவந்தாள். மிதித்தால் புல்லும்கூடச் சாகாத மென்மையானவள். அந்தத் தாய் பவானியம்மாள். இருமினால்கூட இரண்டாம் ஆளுக்குக் கேட்காது இருமுவாள். அப்படிப்பட்டவளா இன்று.....? அதிர்ந்துபோய் வந்தவள், தன்தோழி நந்தினி பேயறைந்ததுபோல் நிற்க, அவள் மாமியார் பவானியம்மாள் பத்திரகாளியாக நின்றாள். “ஆருக்கடி சொல்லுகிறாய்…! என் மகனுக்கு வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துவைச்சுப் பத்துமாத்திலை என் பேரனைக் கொஞ்சுகிறேனா இல்லையா பாரடி.“ என்று உச்சகட்டத்தில கூச்சலிட்டு ஆடினாள். நந்தினியின் கணவனோ கல்லாய்ச…
-
- 16 replies
- 2.5k views
-
-
அன்று ஐரோப்பிய நாடொன்றுக்கு போய்க்கொண்டிருந்தோம் 2 மணித்தியாலய வாகன ஓட்டத்துக்கு பின் ஒவ்வொருமுறையும் வாகனத்தை நிறுத்தி நடப்பது ஓய்வெடுப்பது ஏதாவது சாப்பிடுவது எனது வழமை. அதன்படி ஒரு உணவகத்துக்கு முன்னால் வாகனத்தை நிறுத்தும் போது எமது வாகனத்துக்கு பக்கத்தில் அதி உயர் விலையான சொகுசு கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது அதன் விலை 3 லட்சம் ஈரோக்களாவது இருக்கும்.. எனவே எமது வாகனத்திலிருந்து இறங்கும் போது பக்கத்து வாகனத்தில் முட்டாதபடி இறங்கினோம் அப்பொழுது தான் ஒரு விடயத்தை கவனித்தோம் காரினுடைய முன் பக்கம் (எஞ்சின் உள்ளபகுதி) திறந்து வைக்கப்பட்டிருந்தது. நான் மக்களுக்கு சொன்னேன் இந்தக்காருடைய சொந்த…
-
- 3 replies
- 1.3k views
-
-
************ சிறு பருவத்திலிருந்து ஒரு பழக்கம் அதை பழக்கமென்பதைவிட கணிப்பு என்று சொல்லலாம் ஒருவர் குடித்திருந்தால் அவருடன் எந்த பேச்சுவார்தையும் அன்று வைப்பதில்லை. இது எனது தகப்பனாரின் குடிக்குப்பின்னாலான நடவடிக்கைகளை பார்த்து வந்து அதன் பின் நண்பர்கள் உறவுகள் என தொடர்ந்து வந்திருக்கிறது எல்லோரது செயலும் எனது கணிப்புக்கு உரமேற்றியிருக்கின்றனவே தவிர ஒரு போதும் வலுவிளக்கச்செய்ததில்லை. நான் தான் இப்படியான கணிப்பு வைத்திருக்கின்றேன் என்றில்லை குடிப்பவர்களே மற்றொரு குடிப்பவரை பார்த்து இவ்வாறு தான் சொல்கிறார்கள் எமது சமுதாயமும் இப்படித்தான் ஒரு கணக்கு போட்டு வைத்துக்கொள்கிறது எனது தகப்பனார் என்னிடம் ஒரு முறை சொன்னார் …
-
- 22 replies
- 2.4k views
-
-
அம்மா….இண்டைக்கு வசதிக்கட்டணம் கட்டட்டாம் ! மூன்று வருஷமாய்ப் பணம் கட்டப்படவில்லையாம் !இல்லாவிட்டால், வாற கிழமை சோதினை எழுத விட மாட்டினமாம்! பரீட்சையுடன் சம்பந்தப்பட்டிருத படியால்...அடுத்த சம்பளம் வரட்டும் என்ற வழமையான பதிலை...அம்மாவால் சொல்ல முடியவில்லை! சரியப்பு...அப்பாவிட்டைச் சொல்லுறன்! ஏன் தான் வசதிக்கட்டனம் எண்டு பேர் வைச்சிருக்கினமோ தெரியாது! வச்தியில்லாததுகளிட்டையும் பலவந்தமாய்ப் பறிக்கினம்...என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள் அம்மா! அன்று காலை அப்பா கொஞ்சம் வழமைக்கு மாறாகக் கடு கடுப்பாகவே இருந்தார்! அவர் ஒரு ஆசிரியர்! அம்மாவும் ஒரு ஆசிரியை! அவர்களது சம்பளத்தில் தான் ஐந்து பேரைக்கொண்ட குடும்பம் நடத்தப்பட வேண்டும்! தனது விரலுக்கு மேலால கொஞ்சம்…
-
- 17 replies
- 3.1k views
-
-
அன்பர் ஒருவர் நன்றாக மது அருந்துவார் வேலை முடிய சனி ஞாயிறு எப்பொழுதும் மது தேவை அதே நேரம் அவருக்கு எப்பொழுதும் ஒருவர் துணையாக மது அருந்தணும் இவரே செலவளிப்பார்... இவ்வாறு தான் அந்த நரி இவர் வீட்டுக்குள் வந்தது.... இவரை மதுவில் மயங்க வைத்து அல்லது வெளியில் அனுப்பிவிட்டு அவரது மூத்தமகள் மீது அது வெறிகொண்டது சகல வித மாயங்களுக்கும் மயங்க மறுத்த அவள் மீது பலாத்காரத்தை பயன்படுத்தி இச்சையை தீர்த்துக்கொண்டது நாளாக நாளாக அடுத்தவள் மீது பாய்ந்தது இறுமாப்போடு தொடர்ந்தது ஒரு நாள் இதைக்கண்ணுற்ற மூத்தவள் தற்கொலை செய்ய முனைந்து இறுதி நேரத்தில் காப்பாற்றப்பட்டு நிரந்தரமாக வலது குறைந்தவளானாள். காவல்த்துறை வரை ச…
-
- 4 replies
- 1.2k views
-
-
கிராமத்தில் வாழும் மக்களுக்கு கிடைக்கும் பல சுக போகங்கள் நகரத்து மக்களுக்கு கிடைப்பதில்லை.அதிலே ஒன்றை எடுத்து விடலாம் என்று தொடங்குகின்றேன். எந்தக் காலங்களாலும் சரி ஏதோ ஒரு திருவிழா சன சமூக நிலையம் திறப்பு விழா அல்லது ஆண்டுவிழாஎன்று ஏதோ ஓர் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கும்.கோவில்களில் திருவிழா தொடங்கினால் கொடியேற்றத்தில் இருந்து பூங்காவனம் வரைக்கும் ஏட்டிக்கு போட்டியாக சிகரம்கள் கட்டி பெரிய மேளம் சின்னமேளம் கண்ணன் கோஸ்டி என்று விடிய விடிய கூத்துக்கள் நடக்கும்.இந்தக் காலங்களில் ஒவ்வொரு திருவிழாகாரரினதும் கூத்துக்களை விலாவாரியாக அச்சடித்து கார்களில் ஒலி பெருக்கி கட்டி காலையில் இருந்து மாலை வரை இடை இடையே பாட்டு சத்தங்களின் நடுவே அன்றைய நிகழ்ச்சி நிரலையும் சொல்லிக் கொண…
-
- 44 replies
- 7k views
- 1 follower
-
-
ஆனந்தம் விளையாடும் வீடு இது ஆனந்தம் விளையாடும் வீடு 5 அன்றில்கள் ஒன்றான கூடு இது தான் அவர்களால் அவர்கள் வீட்டில் அநேகம் பாடப்பட்ட பாடல். அன்பான அம்மா அடித்தே இருக்காத அப்பா வசதியான நாடு திறமையான பிள்ளைகள் மேல் படிப்புக்கள்...என எல்லாமே நன்றாகவே போய்க்கொண்டிருந்தன பட்டப்படிப்பு முடிக்கும் தருணம் அவனுக்கு காதல் ஒன்று அரங்கேறியது சாதி வந்து குறுக்கிட்டது குடும்பம் சின்னாபின்னமாகியது தகப்பனார் கோமா நிலையில் வைத்தியசாலையிலிருந்தார் கோமா நிலையிலிருந்த தகப்பனை காட்டி அவர் பெற்ற பிள்ளை பாசமாக வளர்ந்த வளர்த்த படித்த பிள்ளை சொன்னது சாதி வெறியன் ஒருவன் சாகக்கிடக்கிறார் என்று.
-
- 14 replies
- 1.4k views
-
-
ஞாயிற்றுக்கிழமை காலையில் நீச்சல் தடாகத்திற்கு செல்வது சுரேஸின் வழக்கம்..தடாகத்திலிருந்து வெளியே வந்து நீச்சல் உடை அழகிகளை ரசித்தபடி உடை மாற்றும் அறைக்கு செல்ல தயாரானான். "சுரேஸ்"குரல் வந்த திசை திரும்பி பார்த்தான் கந்தர் டெனிஸ் விளையாடுற உடுப்போடு கறுத்த கண்ணாடியுணிந்து அமர்ந்திருந்தார். "என்னடா ,எப்ப தொடக்கம் நீச்சலுக்கு வார எல்லா வகை நீச்சலும் இப்ப பழகிட்டியோ" "நீச்சலுக்கு வரயில்லை" "பின்ன என்னத்துக்கு ஐசே தடாகத்துக்கு வாரீர் சுவிமிங் சூட் போட்ட பெட்டைகளை பார்க்கவே" "சும்மா போங்கண்ணே உங்களுக்கு எப்பவும் லொள்ளுதான், அதுசரி நீங்கள் கறுத்த கண்ணாடி போட்டுங்கொண்டு ரசிக்கிறியள் போலகிடக்கு" "என்னதான் வயசு போனாலும் உந்த விசயத்தில் மன…
-
- 19 replies
- 2.1k views
-
-
அ ன்பு உள்ளங்களே..... அ ன்பு காலை வணக்கம் ..... அ திகாலை எழுத்தவன் ...... அ திசக்தி ஆதவ்னையே..... அ ருகில் வரவைப்பான்......! அ ன்பினால் ... அ கிலத்தையே வெல்லலாம் .... அ ங்கிகள் தொடக்கம் ... அ ருகில் உள்ள உயிர்வரை ... அ ன்பு செலுத்துங்கள் .....! அ ற்புதங்கள் என்பது .... அ திசயம் செய்வதல்ல ... அ ன்புக்கு கட்டுபட்டு ... அ ண்ட சராசரத்தோடு .... அ டக்கமாவதே .........! அ ன்று சொன்னதை செய்ததை .... அ ன்றே மறப்பவனே .... அ தி உயர் மனிதன் .... அ தையே நினைத்துகொண்டிருந்தால் ... அ ன்றைய இன்பத்தை இழப்பாய் ....! அ ந்தி சாயும் நேரம் .... அ ன்றைய நிகழ்சிகளை ... அ சைபோட்டுபாருங்கள் .... அ ருவருப்பான செயல் …
-
- 25 replies
- 13.5k views
-
-
உன்......... கதவில்லாதா ...... உறங்கும் அறைபோல் ...... என் இதய அறைக்குள் .... நீ .................................! உன் .......... கூந்தல் காற்றில் ஆடும் ...... கண பொழுதெல்லாம் ....... இதயம் படும் வேதனையை ....... எப்போது அறிவாயோ ......? உன்னை நினைத்து ....... எழுதும் கவிதையை ....... காதல் தெரியாதவர்கள் ....... காதல் பித்தன் என்பார்கள் ...... உனக்கு புரிந்தால் போதும் ..... நான் உன் காதல் சித்தன் .......! & கவிப்புயல் இனியவன் ஏனடி காதலால் கொல்லுகிறாய்
-
- 21 replies
- 4.2k views
-
-
போர்ப்பரிசு மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த சுமதிபால அங்கேயிருந்த சீமேந்தாலான இருக்கையிலிருந்து வானத்தை வெறித்துப் பார்த்தபடி, தனது முழங்காலைத் தடவிக்கொண்டு பெருமூச்செறிந்தவாறு சிந்தனையில் ஆழ்ந்தான். அம்மா! என்ற சத்தம் அவனது சிந்தனையை சிதறடிக்க சத்தம் வந்த திசையைப் பார்க்கிறான். அங்கே வெள்ளைப் பிரம்போடு ஒருவர் எழும்பமுயன்றுகொண்டிருந்தார். அருகே சென்ற சுமதிபால, அவரைத் தாங்கிக் கொண்டு வந்து தானிருந்த இருக்கையில் இருத்திவிட்டு, "வத்துறு பொனவத,, என்று கேட்டான். வெள்ளைப் பிரம்போடிருந்தவர் வேண்டமென்று தலையசைத்தார்.இவனே பேச்சைத் தொடர்த்தான். "கொய்த யன்ன,, என்று கேட்கவும், நான் தமிழ் என்று கூறிவிட்டு அமைதியாக, ஒரு சில மணித்துளிகள் அமைதியாகக் கழிந்தன. சுமதிபாலாவோ கொச்சைத…
-
- 15 replies
- 3.4k views
-
-
நெகிழி குணாளனுக்கு சலிப்பே ஏற்பட்டுவிட்டது. குணாளனின் தந்தையார் கந்தையருக்கும் கடுப்பேறிப் பேசிக்கொண்டே துப்பரவு செய்துகொண்டிருந்தார். கந்தையற்றை துணைவி பாக்கியமக்காவும் விடுவித்தகாணியைப் பழைய நிலைமைக்குக் கொண்டு வந்திட வேணுமெண்ட அவாவிலை ஷஷ துலைவாங்கள் நிலமெல்லாத்தையும் நாசமாக்கிப் போட்டாங்கள்,, என்று புறுபுறுத்தவாறு குப்பைவாரியால் குப்பைகளை இழுத்து ஒன்றாக்குவதில் முனைப்போடு நின்றார். ஆனால் இழுக்க இழுக்க வளவுக்குளாலை ஒரே பொலித்தீனாகவே வந்துகொண்டிருந்தது.. " உவங்கள் கண்ணிவெடியை எடுத்து முடிச்சாலும் இது முடியாதுபோல கிடக்கென்று,, அங்கலாய்த்தவாறு இழுத்துக்கொண்டு நிற்க, அடுத்த வளவு அன்னம்மாக்காவும் தனது காணியை நோக்கி நடந்தவாறு " என்ன பாக்கியமக்கா மண்ணோட சண்டையோ! என்…
-
- 16 replies
- 3.9k views
-
-
நான் அந்தக் கட்டடத்தின் பெரிய அறை ஒன்றைத் திறந்து கொண்டு உள்நுழைகிறேன். "நான் ஆர்? நான் ஆர்? நான் ஒருத்தனுக்குத்தான் மூண்டு பிள்ளையளையும் பெத்தனான். ஒருத்தன் என்னைப் பாத்து என் நடத்தையில பிழை எண்டு சொல்லட்டும். அவன்ர வாயைக் கிழிச்சு வச்சுத் தச்சுப்போடுவன். எளிய நாய் அவன். எளிய நாய். என்னோட படுத்து மூண்டு பிள்ளைப் பெத்த பிறகும் என்னைப்பற்றி கூடாமல் சொல்லிக்கொண்டு திரியிறான்" என்ற பெரிய கூச்சலைக் கேட்டபடி தொடர்ந்து உள்ளே செல்வோமா அல்லது இப்பிடியே நிர்ப்போமா என்று மனதில் குழப்பத்துடன் நின்ற என்னைப் பார்த்து "வாங்கோ வந்து இருங்கோ" என்று விட்டு " அமைதியாய் இருங்கோ. ஆக்களுக்கு முன்னால உப்பிடிக் கத்தக் கூடாது என்று கத்திய பெண்ணை முதுகில் தடவி அமைதிப்படுத்தியபடி என்னைப் பார்க்…
-
- 33 replies
- 4k views
-
-
சிதிலமான தபால் பெட்டி - காங்கேசன்துறை
-
- 53 replies
- 6.8k views
-
-
கைபேசியில் அலாரமாக இந்த அழகான பாடல் காற்றில் மிதந்து காதில் வருட இன்று என்னவோ காலையில் எழுந்திருக்க மனமில்லாமல் மிகவும் அசதியுடன் தன் அதிகாலை பணிகளை நினைத்தவாறே திரும்பி நேரத்தை பார்க்கின்றாள் வைதேகி. இன்னும் சிறிது நேரம் செல்ல எழும்பலாம் என்று நினைத்து திரும்பி படுக்கும் போது அவளின் மன ஓட்டம் 30 வருடங்களை பின்நோக்கி இழுத்துசெல்கின்றது. என்ன அழகான ஒரு வாழ்க்கை! சிட்டுக்குருவிகளை போல் நண்பிகளுடன் சிறகடித்து எந்த கவலையும் இல்லாமல் பாடசாலை, மாலைநேர வகுப்பு என்று இனிமையான காலங்கள். அந்த இனிமைக்காலத்தில்தான் தன்னோடு படித்த வாமனை சந்திக்க நேர்ந்தது. அவனின் அமைதியும் அறிவும் இவளை காதலில் விழவைத்தது. அதே போன்று வாமனும் வைதேகியின் அன்பான குணத்தாலும் அழகாலும் தைதேகி மேல் கா…
-
- 26 replies
- 3.5k views
-
-
ஈஸ்டர் கவிதை பாரஞ்சுமந்தவரை பக்கமழைத்து - இன்ப பரலோக ராச்சியத்தைக் காட்டு மன்பனாய் ஈரமனத்தினொடு பாவிகட்கெல்லாம் - தன்றன் இரட்சிப்பை ஈந்தவரை ஏற்கும் சுதனாய் நானே வழி எனது சத்தியத்திலே - நின்றால் நமது பிதாவினை நீர் சென்றடைகுவீர் வீணே வழிதவறிச் சென்றிடாமலே - எந்தன் வௌ்ளாட்டு மந்தைக்குள்ளே வந்திணைகுவீர் செய்திட்ட பாவெமெ்ல்லாம் கொண்டுவருவீர் - எந்தன் சேவடி தன்னிலதை ஒப்புக் கொடுப்பீர் உய்ய மனந்திரும்பி வாருமன்பரே - நான் உங்களுக்காக என்றன் உயிர்கொடுப்பேன் பாவத்தின் சம்பளமே மரணமதாம் - அந்தப் பாவத்தை ஏற்கிறேன் பயமொழிவீர் தேவன் எமது பிதா சன்னதியிலே - நித்ய ஜீவன் உமக்குண்டு நீள் புவியிலே ஆக்கினையை உங்களுக்காய் அனுபவ…
-
- 7 replies
- 5.1k views
-
-
இரும்பாய் கனத்த என் இதயம் துடுப்பிழந்த படகைப்போல் அலைகளால் இழுத்து செல்லப்பட்டு அன்னிய தேசத்தில் அனாதையாய் எங்கெங்கோ புலப்படும் ஒளி இழந்த மின் விளக்குகள் போல் தெரிகிறேன் கொஞ்சம் கொஞ்சமாய் ! என்னுள் அன்று இழந்தவையோ இருக்கின்றன இன்னும் அணையாமல் நினைவெனும் நினைவிடத்தில் ! என் நிதர்சனத்தின் நீண்ட பயணத்தில் நீங்காது நீள்கின்றன நீறு பூத்த ஆறாத ரணங்களாய் எட்டாண்டின் நினைவுகள் ! காலச்சுழற்சியில் கற்பனைகளும் கலைந்துப்போக வன்னி மண் நினைவுகள் மட்டும் என் உணர்வை விலை பேசியதாய் ஏன் தானோ நிலையாய் நிற்கின்றன? உணர்வுகள் உருக்குலைந்தன உறவுகளும் உடைந்துபோகின நிதானமான என்னை நிர்கதியாக்கின அன்றைய நாள்... என்னை நித்தமும் ந…
-
- 4 replies
- 2.6k views
-