தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
695 topics in this forum
-
-
தமிழின் சொல்வளமையும் செறிவான சொற்சிக்கனமும் பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி எந்த ஒரு மொழியின் செறிவான வளமை என்பது அம்மொழியின் "தனிச்சொற்கள் தொகுதி" எண்ணிக்கை அன்று. அம்மொழியின் செறிவான கருத்துக் குறியீட்டு வளமே உண்மையான வளம் ஆகும். தமிழ்மொழியின் சொல்வளமை! உயர்தனிச் செம்மொழியான தமிழ் செறிவான கருத்துக் குறியீட்டு வளத்தைத் தன்னகத்தே கொண்டு விளங்கி வருகின்றது. உதாரணமாக, தந்தையின் உடன்பிறந்தவர்கள் பெரியப்பா, சித்தப்பா என்றும், அன்னையின் உடன்பிறந்தவர் அம்மான்(தாய்மாமன்) என்றும் அவரவரின் தனிச்சிறப்புகளுடன் வழங்குகிறது தமிழ் மொழி; இச்சொல்லாற்றல்கள் தமிழ்மொழியின் இனச்செறிவைப் பறைசாற்றுகின்றன. ஆங்கிலமொழியின் சொல்வ…
-
- 1 reply
- 1.3k views
-
-
மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் இராமன், பவ்யமாக , அவன் காலடியில் நின்று உபதேசம் கேட்டான். உங்கள் ஞானம் உங்களோடு அழிந்து விடக் கூடாது , என் மூலம் இந்த உலகம் பயன் பெற உங்கள் ஞானத்தை உபதேசிக்க வேண்டும் , என வேண்டினான் . இராவணன் உபதேசித்தான் ... 1 . உன் சாரதியிடமோ , வாயிற் காப்போனிடமோ, சகோதரனிடமோ பகை கொள்ளாதே . உடனிருந்தே கொல்வர். 2 .தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் , எப்போதும் வெல்வோம் என எண்ணாதே . 3 .உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு . 4 .நான் அனுமனை சிறியவன் என எடைபோட்டது போல் , எதிரியை எளியவன் என எடை போட்டு விடாதே . 5 . வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என நம்பாதே , ஏனெனில் அவை உன் வழிகாட்டிகள். 6 . இறைவனை , விரும்பினாலும் மறுத்தா…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஓரு படைப்பாளன், தன் சிந்தனையில் தோன்றும் காட்சிகளைப் படிப்பவர்களின் மனக்கண் முன்பே கொண்டுவரும் உத்திதான் வருணனை முறை. கற்பனையும் வருணனையும் இல்லாத எந்தவொரு படைப்பும் சிறந்த இலக்கியமாகாது. அந்த வகையில், சங்க இலக்கியங்களில் இவ்வருணனைகள் பொக்கிஷமாகக் கொட்டிக்கிடக்கின்றன. அவை வைரமாய் நம் கண்முன்னே மின்னிக் கொண்டிருக்கின்றன. இவ்வருணனையை, ஆள் வருணனை, இயற்கை வருணனை என்றும் இடம், காலம், நிகழ்ச்சி, கலை முதலிய பெயர்களிலும் வகைப்படுத்துவர். பாலைக்கலியில் உள்ள ஒரு பாடல், தலைவன் கூற்றின் மூலம் பாலை நிலத்தின் வெம்மை அழகாக வருணனை செய்யப்பட்டுள்ளது. ""அடிதாங்கு மளவின்றி யழலன்ன வெம்மையாற் கடியவே கனங்குழா அய் காடென்றார் அக்காட்டுள் துடியடிக் கயந்தலைக் கலக்கிய சின்னீரைப் பிடியூட்ட…
-
- 0 replies
- 1.3k views
-
-
"கல்லும் கதை சொல்லும்" என்ற முற்றிலும் வித்தியாசமானதொரு தலைப்பில் ஈரோடு புத்தகத் திருவிழாவில் தா.பாண்டியன் அவர்கள் நிகழ்த்திய அழகிய சிற்பம்போல் செதுக்கப்பட்ட நேர்த்தியான உரை.
-
- 1 reply
- 1.3k views
-
-
MultiTier cropping reference in சீவக சிந்தாமணி தற்போதைய விவசாய தொழில் நுட்பத்தில் பயிர்களின் திண்மத்தை (Crop Intensity) அதிகரிக்க Multi-Tier Cropping என்னும் தொழிற்நுட்பத்தை கடைபிடிக்க பரிந்துரைக்கிறார்கள். Multi-Tier Cropping என்பது வெவ்வேறு உயரமுடைய மற்றும் மாறுபடும் தன்மை வாய்ந்த பயிர்களை அடுக்காக வளர்ப்பது ஆகும் முக்கியமாக மலை பகுதிகளில் அரிதாக கிடைக்கும் சூரிய ஒளியை முறையாக அறுவடை செய்து குறைந்த இடத்தில் அதிக செடிகளை வளர்க்க உதவும். சூரிய ஒளி மட்டுமில்லாமல், மண் வளம் காக்கவும், களை கட்டுப்பாட்டுக்கும் உதவுகிறது. நவீன அறிவியலில் வேரில் வளரும் மைக்கோரைசா பூஞ்சானம் போன்றவை மாறுபட்ட பயிர்களிடையே உணவுப்பொருள் பரிமாற்றத்திற்கும் உதவுவதாக நிருபிக்க பட்டுள்ளது. …
-
- 0 replies
- 1.3k views
- 1 follower
-
-
தற்கொலைகளைத் தடுக்கும் ஆற்றல். நாள்தோறும் தற்கொலைகள் பெருகிவருகின்றன. பசி, நோய், பணம், காதல், ஏமாற்றம், அவமானம், மனநலபாதிப்பு என தற்கொலைக்கான காரணங்கள் பலவாக இருந்தாலும் எல்லோருக்குமான உயிர்வலி ஒன்றாகத்தான் உள்ளது. மனத்தடுமாற்றம் என்பது யாவருக்கும் பொதுவானது. அப்போது மனதை தடுத்து மாற்றம் செய்யும் ஆற்றல் யாருக்கு இருக்கிறதோ அவர் தற்கொலையைத் தடுக்கும் ஆற்றலுடையவராவார். அந்த ஆற்றல் யாருக்கெல்லாம் இருக்கும்..? நம் எல்லோருக்கும் அந்த ஆற்றல் உண்டு. ஆனால் நாம் தான் அதனைப் பயன்படுத்துவதில்லை. நம் மனம் தடுமாறும்போது.. நாம் என்ன எதிர்பார்க்கிறோம்..? நம் குறையைக் கேட்க யாராவது இருக்கமாட்டார்களா? என்பது தானே.. அதைதானே தற்கொலை செய்துகொள்பவர்களும் எதிர்பார்க்கி…
-
- 6 replies
- 1.3k views
-
-
தொல்காப்பியரும் சம்ஸ்கிருதமும் தொல்காப்பியம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தியதென்பது ஒரு முடிவு. அது எத்தனை யாயிர வருடங்களுக்கு முந்திய தாயினுமாகுக; அதற்கு முந்தியே தமிழகத்திற் சம்ஸ்கிருதமுண்டு. அது தமிழகத்திற்கு வந்த மொழியென அந்நூல் சொல்லவில்லை. அம்மொழிச் சொற்களைத் தமிழ் நூல்களில் வழங்குவதற்கு அதுவே விதியும் வகுத்தது. அச்சொற்களை திசைச்சொற் கூட்டத்திலும் அது சேர்த்திலது. அம்மொழி வேதமும் அந்நூலில் இடம் பெற்றது. அங்ஙனமாகப் பின்வந்த சங்க நூல்களும் அம்மொழியின் சம்பந்தத்தையும், சகாயத்தையும் பெற்றனவே யென்பதிற் சந்தேகமில்லை. தொல்காப்பியம் என்ற சொல்லுக்கு இலக்கணங் கூற வந்த ஆசிரியர் அதனைக் கூறியதோ டமையாது ஐந்திர முதலிய வடசொற் போல வந்த தென்றுங் கூறி விளக்கினார் சங்கப் …
-
- 1 reply
- 1.3k views
-
-
<p>வட்டத்தின் சுற்றளவில் தமிழர்கள். கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மை இடம் உண்டு. வட்டதிற்கான சுற்றளவை முதலில் கண்டவர்கள் நாம் என்ற வகையில் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.வட்டத்திற்கான சுற்றளவை கணக்கதிகாரம் என்ற தொன்மையான நூல் விளக்குகின்றது. இதில் வட்டதிற்கான சுற்றளவை செய்யுள் வடிவில் கூறியுள்ளார். கணக்கதிகாரப் பாடல் : 50 வட்டத்தின் சுற்றளவில் தமிழர்கள். கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மை இடம் உண்டு. வட்டதிற்கான சுற்றளவை முதலில் கண்டவர்கள் நாம் என்ற வகையில் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.வட்டத்திற்கான சுற்றளவை கணக்கதிகாரம் என்ற தொன்மையான நூல் விளக்குகின்றது. இதில் வட்டதிற்கான சுற்றளவை செய்யுள் வடிவில் கூறியுள்ளார். கணக்கதிகாரப் பாடல் …
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழ் மொழி நம் தாய்மொழி தமிழாகும். உலகின் பன்மொழி ஆய்வாளர்களினால் முதலில் தோன்றிய மொழி என்ற சிறப்புப் பெற்ற மொழி. அமிழ்தினும் இனியதெனப் புகழப்படுகின்ற மொழி. 9 கோடி தமிழர்களின் தனித்துவமான மொழி. “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” எனப் பாரதியாரால் போற்றப்பட்ட மொழி. கல்வெட்டிலிருந்து கணிணி வரை பரந்த மொழி. தமிழ் மொழி இதுவரை இழந்தவை அகத்தியம் பெருநாரை பெருங்குருகு முதுநாரை முதுகுருகு பஞ்சமரபு பஞ்சபாரதீயம் பதினாறு படலம் வாய்ப்பியம் இந்திரகாளியம் குலோத்துங்கன் இசைநூல் முதலிய எண்ணற்ற அரிய நூல்களும் கல்வெட்டு முதலிய எண்ணற்ற ஆதாரங்களும் தமிழ் வாழும் இடங்கள் தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர் மலேசியா பர்மா மொரீசியஸ் தென்னாபிரிக்கா கயானா பிஜி சுரீனாம் ட்ரிடாட் டொப…
-
- 5 replies
- 1.2k views
-
-
செம்மொழியாம் எங்கள் தமிழ்மொழி =============================== "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" உலகப்பொதுமறை என வள்ளுவப் பெருந்தகையனார் அமிழ்தினும் இனிதான தமிழ் மொழியினில் அருளிச் சென்ற 1330 குறள்களுள் முதற்குறள். எவ்வாறு உலக எழுத்துக்களுக்கெல்லாம் 'அ'கரம் முதலாவதாக இருக்கின்றதோ அதேப் போல் இந்த உலகத்திற்கு இறைவன் முதல்வனாக இருக்கின்றான் என்ற மாபெரும் கருத்தை எளிமையாக எடுத்துக் கூறிக் கொண்டு இருக்கின்றது. சரி...!!! ஆனால் உண்மையிலேயே உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் அகரமே முதல் எழுத்தாக உள்ளதா என்ற கேள்வி என்னுள் ஒருநாள் எழுந்தது. அதற்குரிய விடையினை அறிந்துக் கொள்ளப் பல மொழிகளின் எழுத்துக்களைப் பற்றித் தேடிய பொழுது அந்தக் கருத்து உண்மைதான் என அறிந்து…
-
- 0 replies
- 1.2k views
-
-
சே, என்னமா சொல்லித்தராரு? “ஏண்டா தினேஷ், இன்னிக்கு ஒரு சில்லறை மேட்டரோட ஆரம்பிக்கலாமா?” “அது என்னடா சில்லறை மேட்டர்?” “போன முறை நாம இந்த ர/ற பத்திப் பேசினோமே. அப்போ சில்லறையா சில்லரையான்னு பேசாம விட்டுட்டோமேன்னு சொல்லி இருக்காரு எழுத்தாளர் இரா முருகன். நியாயப்படி சேர்த்து இருக்க வேண்டிய விஷயம்தான். அதை இப்போ சொல்லிடலாம். சில்லரைன்னா சில அரைகள் அப்படின்னு சொல்லறது மாதிரி ஆகிடும். சில என்றால் இரண்டுக்கும் மேல். உதாரணமா ஒரு நூறு ரூபாயை மாத்தினோமுன்னா, நூறு ரூபாய் மதிப்புதானே திரும்பக் கிடைக்கும். ஆனா சில அரைன்னு சொன்னோமுன்னா நூறு ரூபாய்க்கு மேல கிடைக்கணும்தானே. அதனால அது தப்பு. அதே சமயம் சில்லறைன்னா சில பகுதிகளாக நறுக்குவதால் அறுப்பது என்பது போல அறை என்பது வரும். எனவே…
-
- 4 replies
- 1.2k views
-
-
வாழையிலை போலவந்த செல்லம்மா! தாழையாம் பூமுடிந்து தடம்பார்த்து நடைநடந்து வாழையிலை போலவந்த செல்லம்மா! என்வாசலுக்கு வாங்கிவந்தது என்னம்மா? கவியரசன் கண்ணதாசன் எழுதிய பாடல்வரிகள் இவை. 'வாழையிலை போலவந்த செல்லம்மா!' என்ற வரிகளில் புகுந்த வீட்டிற்கு வரும் மருமகளை ஏன் 'வாழையிலை' என்று வருணித்தான் கண்ணதாசன் என்ற விவாதம் எங்கள் நண்பர்களுக்குள் எழுந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கத்தைக் கொடுத்தார்கள். நண்பர்களின் ஒவ்வொரு விளக்கமும் நம் சிந்தனையைத் தூண்டுவதாகவே இருந்தது. எங்களின் வாதத்தில் இடம்பெற்ற சில விளக்கங்களை இக்கட்டுரையில் பதிவு செய்கிறேன். "வாழைக் கன்றைப் பிடுங்கி அதன் தலையைச் சீவிவிட்டுக் கிழங்கோடு கூடிய தண்டுப் பாகத்தை மட்டுமே நடுவது வழக்கம்…
-
- 3 replies
- 1.2k views
-
-
நாலடியாரில் பனையும் கரும்பும்… ! 1. பனைமரம் 1.1.பனைமரத்தின் சிறப்பு ‘கடையாயர் நட்பிற் கமுகனையர் ஏனை இடையாயார் தெங்கின் அனையர்- தலையாயார் எண்ணரும் பெண்ணைபோன்(று) இட்டஞான்றிட்டதே தொன்மை யுடையார் தொடர்பு.’ (216) இதற்குரிய உரையில் கமுகு, தென்னை, பெண்ணை இவற்றைப் பற்றி பதுமனார் கூறுவதைக் காண்போம். கமுகுக்கு நாள்தோறும் இறைக்கவும் மேற்றலையில் குற்றமாய புழுக்கடியும் பார்த்துப் பேணினாற்போல் இவனுக்கு நாள் தோறும் செய்யும் ……..அருஷதஞ் செய்ய வேண்டும். அது ஒழிந்தால் கமுகு தலைகெட்டு விழுந்தாற்போல இவனும் விழுமளவும் தீனகு விசாரிப்பான் என்றவாறு. இடையாயார் தெங்கின் அனையர்- தெங்கிற்குத் தலையாலே தண்ணீர் சுமந்து அடியிலே வார்க்கப் பின் தலையாலே நீ…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழில் இத்தனை அடிகளா ?இதச் சொன்னா அடிக்க வருவீங்க
-
- 2 replies
- 1.2k views
-
-
ஆங்கிலம்+ஆரியத்துடன் ஒரு அக்கப்போர்! மொழிகளின் இயற்கை புரிந்துவிடு! மனிதர்க்குத் தமிழே ஆதிமொழி!-3 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் "என்னப்பா! ஆளையே காணோம்! ஆங்கில - ஐரோப்பிய மொழிகளில் ஒலி எழுத்துக்கள் உருவான கதைய எப்பத்தான் முழுசாச் சொல்லப் போற? தெளிவாச் சொல்லு!", என்று படபடத்தவாறே உள்ளே நுழைந்தார் நண்பர். "கண்டிப்பா சொல்லிர்றேன்பா! நூற்றாண்டுகளாகவே இலக்கியம் மற்றும் உரைநடைகளில் vowels தனியாகவும் Consonants தனியாகவும் எழுதியே பழகிய ஆங்கிலேய, ஐரோப்பிய முறையை அடியோடு மாத்தி, புதிய உயிர்மெய் ஒலிஎழுத்துக்களை உருவாக்குவது…
-
- 0 replies
- 1.2k views
-
-
மக்களின் பேச்சுத் தமிழை, ‘நல்ல தமிழ்’ வாதத்தைக் கூறிப் புறக்கணித்துவிடக் கூடாது. தமிழ் மொழிக்கு அடைமொழிகள் தந்து பாராட்டுவது புலவர்களின் மரபு. மொழிக்கு மட்டுமல்லாமல், மனிதர்களுக்கும் மற்றவற்றுக்கும் அடை கொடுப்பது தமிழ்க் கலாச்சாரத்தின் ஓர் அம்சம் என்றுகூடச் சொல்லலாம். நல்ல என்ற சொல் தமிழுக்கு உள்ள பழமையான அடைகளில் ஒன்று. ‘நற்றமிழ்’ என்னும் வழக்கைப் புறநானூற்றில் காண்கிறோம். தமிழ் நல்ல மொழி என்பது இதன் பொருள். இந்த வழக்கு மற்ற மொழிகள் கெட்ட மொழிகள் என்று சொல்ல வரவில்லை. நமக்கு நம் பிள்ளை நல்ல பிள்ளை என்பது போல, நமக்குத் தமிழ் நல்ல மொழி என்கிறது. நல்ல என்ற சொல்லின் பொருள் நல்ல என்ற சொல்லுக்குத் தமிழில் பல பொருள்கள் உண்டு. அந்தப் பொருள்கள் தமிழரின் கலாச்சாரப் பா…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறப்பான ஆய்வு. வாழ்த்துக்கள் ஏழாம் அறிவில் சொன்ன மாதிரி தமிழனுக்கு இதை விளங்கப்படுத்துவது கடினம். வேற்று மொழி ஆட்கள் இலகுவில் ஏற்றுக் கொள்வார்கள்.
-
- 3 replies
- 1.2k views
-
-
இயல் வழி நாடகம் - சுப. சோமசுந்தரம் வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா என அடுக்கி முறையே செப்பலோசை, அகவலோசை, தூங்கலோசை, துள்ளலோசை என்று ஓசைநயம் பகரும் முறையே சொல்கிறது இயல் வழி இசையுண்டு என்று. காணாததற்கு மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை எனப் பண்வகைகள் வேறு. குறிப்பாக மரபுப் பாடலெதுவும் இசையின்றி இயங்குவதில்லை. இக்கட்டுரை இங்கே பேச வந்தது இயல் வழி நாடகம் பற்றி. மேலும் இங்கு நாம் இயல் எனக் குறித்தது மரபுப் பாடலேயாம். உள்ளார்ந்த நாடகம் (Implicit Drama) அனைத்து மரபுப் பாடலிலும் அமையலாம். உள்ளார்ந்த நாடகமாக ஒரே பாடல் வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு காட்சி…
-
- 3 replies
- 1.2k views
- 1 follower
-
-
"ஓரெழுத்து சொற்கள்" / "ONE-LETTER WORDS" The total letters in Tamil are 247, out of these 45 letters are one letter word. That means these 45 letters have a separate meaning. Let us know them!! / 247 தமிழ் எழுத்துக் களில் 45 க்கும் மேலான எழுத்துக்களுக்கு தனியாக பொருள் உண்டு என்பது எத்தனை பேருக்கு தெரியும்? தமிழில் உள்ள அந்த ஓரெழுத்து வார்த்தைகளும் பொருளும் கிழே தரப்பட்டுள்ளன. வாசித்து மகிழவும். ஆங்கில மொழியில் அப்படி ஒரு 2 அல்லது 3 சொல் மட்டுமே உண்டு. அவை: 'A' – used when mentioning someone or something for the first time in a text or conversation. 'I' – Used to refer to oneself as speaker or writer. 'O' – Used to express surprise or strong emotion, …
-
-
- 2 replies
- 1.2k views
-
-
குறுந்தொகை பாடியவர் : செம்புலப் பெய்நீரார் பாடல் : ” யாயும் ஞாயும் யாராகியரோ! எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்? யானும் நீயும் எவ்வழி அறிதும் ? செம்புலப் பெய்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.” எத்தனை சுவை மிகுந்த பாட்டு? காதலின் கண்ணியம் உணர்த்தும் பாட்டு.மனம் கொள்ளை கொண்டவளை தன் வானாள் முழுதுக்கும் துணைவியாய் மனதளவில் ஏற்றுக் கொண்ட ஒரு தூய்மையான காதலன் தன் உள்ளத்து உறுதியை காதலிக்குச் சொல்லுவதாய் அமைந்தது இப்பாடல். காட்சி இப்படி விரிகிறது , தலைவனும் தலைவியும் தனித்திருக்கிறார்கள்.அவன் தன்னை கை விட்டு விடுவானோ என்கிற பயம் அவளுக்கு. கூடலுக்கு பின் பிறந்த ஞானோதயம். வார்த்தையாய் கேட்டும் அவன் தரும் நம்பிக்கை அவளுக்கு போதுமானதாயில்லை. சஞ்சலத்துடன் அ…
-
- 1 reply
- 1.2k views
-
-
வட கலிங்கத்தின் மீது முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தலைவன் கருணாகரத் தொண்டைமான் படையெடுத்துச் சென்று பெறுவெற்றி கொள்கிறான். அவன் போரில் ஆயிரம் யானைகளை கொன்று, வென்ற செய்தியை செயங்கொண்டார் என்னும் புலவர் கலிங்கத்துப் பரணியில் பாடுகிறார். பரணி என்பது போரில் ஆயிரம் யானைகளை வென்ற வீரனைப் பாடும் சிற்றிலக்கிய நூலாகும். இந்நூலில் பல பகுதிகளில் ஒன்றான "கடை திறப்பு" பகுதியில், கலிங்கத்தின் மேல் போர்தொடுத்துச் சென்ற வீரர்கள் வீடு திரும்ப தாமதம் ஆனதால் அதனைக் கண்டு மகளிர் ஊடல் கொண்டு கதவை அடைத்ததாகவும், அப்பெண்கள் மகிழுமாறும் புலவி நீங்கிக் கதவைத் திறக்கச் செய்ய, தாம் வெற்றி பெற்ற கலிங்கப்போர் பற்றி பாடுவதாக அமைந்தது. இந்தப் போர் பற்றி அறிய இங்கே செல்லவும் www.tamilvu.org/c…
-
- 2 replies
- 1.2k views
-
-
பொருட்குற்றம் தவிர்ப்போம் கா.மு.சிதம்பரம்First Published : 12 Jul 2009 01:27:00 AM IST Last Updated : அருந்தமிழில் உள்ள சொற்கள் அனைத்தும் ஆழமான பொருள் உடையவை. அத்தகைய சொற்களுள் ஒன்று "அல்குல்' என்பது. இச்சொல் பெண்ணின் உறுப்புகளுள் ஒன்றைக் குறிக்கிறது. ஐந்து தமிழ் அகரமுதலிகளில் அல்குல் என்னும் சொல்லுக்கு "பெண்குறி' என்று பொருள் தரப்பட்டுள்ளன. இப்பொருள் மிகவும் தவறானது.உரைவேந்தர் ஒüவை.சு.துரைசாமிப்பிள்ளை, புறநானூறு 344-ஆம் பாடலுக்கு எழுதியுள்ள உரையில், ""அல்குல் என்பது இடைக்கும் முழந்தாளுக்கும் இடைப்பகுதி ஆகும்'' என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள "சங்க இலக்கியப் பொருட் களஞ்சியம்' என்னும் நூலிலும் இச்சொல்லுக்கு "இடுப்பு உறுப்பு' என…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழினம் பிறப்பு முதல் இறப்பு வரை இசையோடு ஒன்றிய வாழ்வைக் கொண்டிருந்த பெருமைக்குரியதாகும். பண்டைத் தமிழ் நூல்களான * அகத்தியம், * செயிற்றியம், * சயந்தம், * குணநூல் போன்ற நூல்களில் தமிழ்க் கூத்து வகைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இசையும், கூத்தும், பிரிக்க இயலாத வகையில் பின்னிப் பிணைந்தே மக்களை மகிழ்வித்து வருவதாகக் கூறலாம். இசை, ஆட்டம், தாளம் ஆகிய மூன்றும் சேர்ந்ததன் தொகுப்பே "கூத்து" எனலாம். பொதுவாக சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு கூத்தினை, வேந்தியல் (மன்னர்களுக்காக ஆடுவது), பொதுவியல் (பொது மக்களுக்காக ஆடுவது) என இருவகைப்படுத்தலாம். சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக்காதை "அபிநயம்" பற்றி விளக்குகிறது. பெண்கள் ஐந்து வயதிலிருந்து பன்னிரெண்டு…
-
- 2 replies
- 1.2k views
-
-
14 பிப்ரவரி 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES இன்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் காதல் கவிதைகளையும் திரைப்பாடல்களையும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், தமிழில் காதலைப் பேசும் பாடல்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வருகின்றன. குறுந்தொகையில் காதலைப் பாடும் அழகிய பத்து பாடல்களை பொருளுடன் இங்கே படிக்கலாம். 1. யாயு ஞாயும் யாரா கியரோ எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர் யானு நீயு மெவ்வழி யறிதும் செம்புலப் பெயனீர் போல அன்பு…
-
- 0 replies
- 1.2k views
- 1 follower
-