Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும் நயமும்

இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. "கடலில் விடம்என அமுதுஎன மதனவேள் கருதி வழிபடு படையோடு கருதுவோர் உடலின் உயிரையும் உணர்வையும் நடுவு போய் உருவும் மதர்விழி உடையவர்! திறமினோ! " - கலிங்கத்துப் பரணி பாற்கடலின் நஞ்சு போலவும் அமுதுபோலவும் இருக்கின்றன மங்கையின் விழிப் பார்வைகள். காமனின் கணைகள் நினைப்பவரின் உயிரையும் உணர்வையும் ஊடுருவி அழிக்கும். அதுபோல பார்ப்போரின் உயிரையும், உணர்வையும் உருவிச் செல்லும் செருக்குடைய விழிப் பார்வைகளைக் கொண்டவர்களே கதவை திறவுங்கள்!! ஒரு பார்வை நோய் செய்கின்றது அக்கணமே மற்றொரு பார்வை மருந்தாக அமைகிறது.. கண நேரத்தில் வீசப்பட்ட ஓர் விழி வீச்சில் சாய்க்கப்பட்ட கோட்டைகள் எத்தனையோ??!!

  2. ஆனைக்கொரு கலாம் வந்தால் பூனைக்குமொரு காலம் உண்டு ... இதில் ஆனை பூனை என ஒரே சந்தத்தில் வருகிறது . எனக்கும் ஒரு காலம் வராமலா போகும் என கருத்துக் கொண்டது எண்ணியிருந்தேன். நேற்றைய ஒரு காணொளியில் .... ஆனை .....ஆ + நெய் மற்றும் பூ + நெய் இங்கு ஆ நெய் என்பது ...பசு நெய் . நெய் சேர்த்த உணவுகள் ருசியானவை . இலகுவில் இளையோருக்கு சமிபாடடையும். பூனை என்பது தேன், தேன் சுவையானது . முதுமையில் மருந்து மாத்திரை தேனில் உரைத்து கொடுப்பார். நெய் ஆகாது . இலகுவில் செமிபாடடையது. எனவே பசு நெய்யையும் தேனையும் தான் பெரியவர்கள் கருதி இவ்வாறு சொல்லி இருக்கிறார்கள் என கொள்ளலாம். இளமை என்ற ஒரு காலம் வந்தால் முதுமைக்கும் ஒரு காலம் வர…

  3. "தமிழுடன் ஒரு விளையாட்டு" - 01 கைத்தொலை பேசி, முகநூல் போன்ற எந்த வசதியும் இல்லாத பண்டைய தமிழ் நகரம் ஒன்றில், ஒரு இளைஞன், தனது காதலை ஒரு இளம் பெண்ணிடம் தனிமையில் சந்தித்து சொல்ல விரும்பினான். அவளோ அவளின் தந்தையுடன் சென்று கொண்டிருந்தாள். தந்தைக்கும் மற்றும் வீதியால் செல்லும் மற்றவர்களுக்கும் தெரியாமல் தனது விருப்பத்தை அவளிடம், அவளின் பின் நடந்து கொண்டே உரையாடலாக கூறினான். அவளும் அதை நன்றாக விளங்கிக்கொண்டு, தானும் தமிழில் சளைத்தவள் இல்லை என்பது போல, விடுகதை யாகவே பதிலைக் கூறினாள். அதை புரிந்துகொண்டு, "நான் எப்போது வரட்டும்? " என்ற அவனின் அடுத்த கேள்விக்கும் அவள் மீண்டும் விடுகதையாகவே தமிழுடன் அழகாக விளையா…

  4. தமிழர் பண்பாட்டில் கள் .. திருமணம் முடித்து குடும்பத்துடன் நலமாய் வாழ்பவனை ‘அவன் குடியும் குடித்தனமுமாய்’ இருக்கின்றான் என்று கூறும் வழக்கம் நம்மிடையே மரபாக உள்ளது. அதேபோன்று குடிக்கு அடிமையான ஒருவனைக் கூறுவதற்கும் மேற்கண்ட வாசகத்தையேக் கிண்டலாகச் சொல்வதும் உண்டு. இன்று மதுவிலக்கு பற்றிப் பரவலாகப் பேசப்படுகிறது. அவற்றால் ஏற்படும் சமூகச் சீர்கேடுகள் குறித்துப் பல ஆர்வலர்களும், அமைப்பினரும் குரல் கொடுக்கின்றனர். பெண்களேக் கூட பல மதுக்கடைகளின் முன் நின்று போராடுவது குடி எத்தனை குடிகளை மூழ்கடிக்கின்றது, மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றது என்பதற்கு அடையாளம். இந்தச் சூழலில் தமிழரின் குடி கலாச்சாரம் குறித்துப் பேசுவது அவசியமாகிறது. அதாவது சங்ககாலத்தில் இருந்த குடி கலாச்…

    • 1 reply
    • 2.3k views
  5. "புயல்காட்டுங் கூந்தல் சிறுபுறங்காட்டப் புனமயிலின் இயல்காட்டி இடைஒதுங்க வினங்காட்டு முழத்தியர்கள் முயல்காட்டு மதிதோற்கு முகங்காட்ட கண்மூரிக் கயல்காட்டுந் தடங்கள்பல கதிர் காட்டுந் தடம் பணைகள்" - தேவாரம் புயல்காட்டுங் கூந்தல் சிறுபுறங்காட்டப் - பிடரியில் படர்ந்து அலைந்து திரியும் கூந்தல் புயல் உருவாகும் முன் அலைந்து திரியும் மேகங்களைக் காட்ட புனமயிலின் இயல்காட்டி இடைஒதுங்க - அவள் நடக்கும்போது அசையும் இடையானது நிலத்தில் இருக்கும் மயில்களின் சாயலை ஒத்து அசைய வினங்காட்டு உழத்தியர்கள் முயல்காட்டு மதிதோற்கு முகங்காட்ட - கூட்டமாக அங்கு இருக்கும் உழத்தியர்களின் முகம் நிலவு போன்றதாயினும் நிலவில் உள்ள கறை இவள் முகத்தில் இல்லாமையால் அம்மதியானது…

  6. காதலினால் தும்மல் செய்வீர் உலகத்தீரே ! பொதுவாக தும்மல் நுரையீரலில் நேர்ந்த சிறிய / பெரிய அசௌகரியத்துக்கான அடையாளமே. எனவே நான் தொடர்ச்சியாய் தும்மும் போது என் ஆச்சி ('பாட்டி'க்கான என் வட்டார வழக்கு; வட்டார வழக்கு அவரவர்க்குரிய பெருமையான அடையாளம்தானே!), அம்மா, அத்தை போன்ற மூத்தோர் நூறு, இருநூறு......என வாழ்த்துவர். அதற்குப் பொருள் 'குறையொன்றுமில்லை. நீ நூறு வருடங்கள் வாழ்வாய்! இருநூறு வருடங்கள் வாழ்வாய்!....' என்பதாம். எனது ஒவ்வாமை காரணமாய் நான் இவர்களிடம் இரண்டாயிரத்து ஐநூறு வருடங்கள் ஆயுள் பெற்றுள்ளேன் என்பது ஒரு புறம் இருக்கட்டும். தும்மல் தொடர்பாக வேறொரு நம்பிக்கையும் உண்டு. அது 'யாரோ உன்னை நினைக்கிறார்' என்பது. அது இலக்கிய மரபாகக் கூட தோன்றியிருக்கலாம். எவ்வாற…

  7. சான்றாண்மை - சுப. சோமசுந்தரம் தற்காலத்தில் சான்றாண்மை எனும் சொல் அறிவுக் களத்தில் சிறந்து நிற்றலையே குறிக்கிறது. பரிமேலழகர் காலத்திலேயே இப்பொருள் மட்டும் குறிக்கும் வழக்கம் பரவலாக ஏற்பட்டிருக்க வேண்டும். "ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்" (குறள் 69; அதிகாரம்: மக்கட்பேறு) எனும் பொய்யாமொழிக்கு உரை சொல்ல வந்த பரிமேலழகர் "தன் மகன் கல்வி கேள்விகளால் நிறைந்தான் என்று அறிவுடையார் சொல்லக் கேட்ட தாய் தான் அவனைப் பெற்ற பொழுதை விட மகிழ்வாள்" என்றுரைக்கக் காணலாம். மணக்குடவர் 'சான்றோன்' என்பதனை விரித்துரையாமல் குறளில் உள்ளவாற…

  8. நெஞ்சை அள்ளும் சிலம்பு - வைகோ உரை 26:30 ல் இருந்து கல்கியின் பொன்னியின் செல்வன் கம்பனில் பண்பாடு எனும் தலைப்பில் பிரான்சு கம்பன் கழகம் நடத்திய 10 ஆம் ஆண்டு விழாவில் 12.11.2011 சனிக்கிழமை அன்று ஐயா தமிழருவி மணியம் ஆற்றிய உரை.

  9. பொருட்குற்றம் தவிர்ப்போம் கா.மு.சிதம்பரம்First Published : 12 Jul 2009 01:27:00 AM IST Last Updated : அருந்தமிழில் உள்ள சொற்கள் அனைத்தும் ஆழமான பொருள் உடையவை. அத்தகைய சொற்களுள் ஒன்று "அல்குல்' என்பது. இச்சொல் பெண்ணின் உறுப்புகளுள் ஒன்றைக் குறிக்கிறது. ஐந்து தமிழ் அகரமுதலிகளில் அல்குல் என்னும் சொல்லுக்கு "பெண்குறி' என்று பொருள் தரப்பட்டுள்ளன. இப்பொருள் மிகவும் தவறானது.உரைவேந்தர் ஒüவை.சு.துரைசாமிப்பிள்ளை, புறநானூறு 344-ஆம் பாடலுக்கு எழுதியுள்ள உரையில், ""அல்குல் என்பது இடைக்கும் முழந்தாளுக்கும் இடைப்பகுதி ஆகும்'' என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள "சங்க இலக்கியப் பொருட் களஞ்சியம்' என்னும் நூலிலும் இச்சொல்லுக்கு "இடுப்பு உறுப்பு' என…

    • 1 reply
    • 1.2k views
  10. இலக்கியமும் உணவுக் குறிப்புகளும் தொல்காப்பியம், பத்துப் பாட்டு, எட்டுத் தொகை என அமையும் சங்க நூற்களில் உணவு முறை பற்றிய பல்வேறு குறிப்புகள், புலவர்களால் வருணனைகளாகவும், உவமைகளாகவும் பாடல் களில் கூறப்பட்டுள்ளன. கவிதை போன்ற இலக்கியப் படைப்புகளில் உணவு முறை போன்ற குறிப்புகள் முழுவதுமாக எதிர்பார்க்க இயலாது. எனினும் இலக்கியம் என்பது சமூக வாழ்வை விவரிக்கும் போக்குடையதால், அதிலும் குறிப்பாக, நாகரிகம் வாய்ந்த சங்க காலத்து மக்களின் வாழ்வைச் சங்க இலக்கியங்கள் படம்பிடித்துக் காட்டுவதால், சங்க இலக்கியங்களிலிருந்து அக்கால மக்களின் உணவு முறைகளும், பழக்கங்களும் தெளிவாகத் தெரிகின்றன. தொல்காப்பியம் தரும் உணவுக் குறிப்புகள் : தொல்காப்பியத்தின் இலக்கண நூற்பாக்களில் சில, அக…

  11. தொல் தமிழர் கொடையும் மடமும்.. செவ்விலக்கியங்களில் பல வள்ளல்கள் பற்றிய குறிப்புகள் பரந்த அளவில் இடம் பெற்றுள்ளன. அவர்கள் வாழ்ந்த காலத்தைக் கணக்கில் கொண்டு வள்ளல்கள் முதலேழு, இடையேழு, கடையேழு என்று பகுத்துள்ளனர். ஆனால் முதலேழு மற்றும் இடையேழு வள்ளல்களுடைய பெயர்கள் அவ்வளவு எளிதாக யாருக்கும் தெரிந்திருப்பதில்லை, கர்ணனை தவிர்த்து. அவர்களைப் பற்றியத் தரவுகள் கூட மிகவும் அரிதாக இருக்கின்றன. பழங்காலத்தில் ஈகையையும் கொடையையும் ஒன்றாகப் பார்த்தனர். உண்டாட்டுக் கொடையென (தொல். பொ 58). இல்லான் கொடையே கொடைப்பயன் (நாலடி,65). என்கிறது பாடல். நுணுகிப் பார்க்கும்போது பொதுவாக ஈகையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது கொடையாகும். கொடை விளக்கம் கொடை என்ற சொல்லிற்குத் தியாகம், பு…

  12. ஒருவனுக்கு பசி தோன்றிய போது அவனிடத்தில் உள்ள சிறந்த குணங்கள் அனைத்தும் போய்விடும். இதை தான் "பசி வந்தால் பத்தும் பறக்கும்" என்பார்கள். அவை மானம், குலப்பெருமை, கல்வி, வலிமை, அறிவு, பிறருக்கு கொடுக்கும் குணம், தவம், பெருந்தன்மை, தளராத முயற்சி, தேன் போல் பேசும் மங்கையர் மேல் உள்ள ஆசை ஆகிய பத்தும் பறந்து போகும்.

  13. தமிழ் மொழியின் இந்தச் சகரச் சிக்கலுக்கு தீர்வே இல்லையா? கொஞ்ச நாளாகவே, இங்கு வெளிநாட்டிலேயே பிறந்த வளரும் தமிழ் சிறுமி ஒருத்திக்கு தமிழ் கற்றுக் கொடுத்து வருகின்றேன். உண்மையில், கற்பிக்கத் தொடங்கும் போதே உண்மையான ஆசிரியன் ஒருவன் உருவாகுகின்றான் என்பதை நான் உணர்ந்தேன். அவளுக்கு தமிழ் எழுத்துக்களைக் காட்டி கற்பிக்கத் தொடங்கிய போது தான், அவள் கேட்ட கேள்வி ஒன்றினால்? எனக்கே சில விடயங்கள் புரிந்தன. உலகத்தில் ஏழாயிரம் மொழிகள் இருக்கிறதாம், ஒவ்வொரு மொழியும் ஒருவிதத்தில் அழகு தான். உலகத்தில் எத்தனையோ தாய் இருந்தாலும், அவங்கவங்களுக்கு அவங்கவங்க தாய் தானே ஒசத்தி. அது போலத் ஒவ்வொரு மொழி பேசுகிற மக்களுக்கும் அவரவர் மொழி ஒசத்தி தான். நமக்கு நம் தமிழ் மொழி எப்போதுமே ஒசத்த…

    • 3 replies
    • 4.5k views
  14. திராவிடத் திரிபுவாதம் சங்க இலக்கியத்தில் மொகஞ்சொதாரோ – அரப்பா இருக்கிறதா? எதிர்வினை: ‘திராவிடமும் இந்தியமும் உடன் கட்டை ஏறவேண்டும்’ என்றும், ‘சங்க இலக்கியத்தில், காப்பிய இலக்கியத்தில் பக்தி இலக்கியங்களில் திராவிடர் என்ற சொல் இல்லை’ என்றும் பெ.மணியரசன் பேசியதைத் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டத்தில் (ஏப்ரல் 16‡30,2012) வெளியிட்டிருந்தீர்கள். ‘திராவிடம்’ என்ற சொல் தமிழனை, தமிழை, தமிழ் இனத்தைக் குறிக்கத் திரித்துச் சொல்லப்பட்ட சொல்தான். திரிந்த தமிழ்ச் சொல்லே தவிர வடசொல் அல்ல. தமிழன் என்று சொன்னால் தமிழனை மட்டும் குறிக்கும். திராவிடன் என்று சொன்னால் தமிழனையும் குறிக்கும், மொழியால் தெலுங்கராக, கன்னடராக, மலையாளியாக, துளுவராகத் திரிந்துபோனவர்களைய…

    • 0 replies
    • 1.8k views
  15. ஆங்கிலம்+ஆரியத்துடன் ஒரு அக்கப்போர்! மொழிகளின் இயற்கை புரிந்துவிடு! மனிதர்க்குத் தமிழே ஆதிமொழி!-2 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் "என்னப்பா! நேத்தே வந்துருவேன்னு சொன்ன! இப்பத்தான் ஊர்லந்து வர்றாப்ல இருக்கு! ஆங்கில உயிர்மெய் எழுத்து எப்படி இருக்கும் என்ற மண்டக் கொடைச்சல் தாங்கலப்பா! க்+அ=க மாதிரி b+a=ba, c+a=ca-ன்னுட்டு என்னென்னவோ கற்பனை செஞ்சு பாத்துட்டேன். கூகிள் பண்ணியும் பாத்துட்டேன்! எங்கயும் ஆங்கில உயிர்மெய் எழுத்துன்னு ஒண்ணக் கூடக் காணவே இல்லயே!", என்று அங்கலாய்த்தபடி வந்தார் நண்பர். "வாப்பா! இப்படி யோசிப்பமே! தமிழ்-ல உய…

  16. சிறப்பான ஆய்வு. வாழ்த்துக்கள் ஏழாம் அறிவில் சொன்ன மாதிரி தமிழனுக்கு இதை விளங்கப்படுத்துவது கடினம். வேற்று மொழி ஆட்கள் இலகுவில் ஏற்றுக் கொள்வார்கள்.

    • 3 replies
    • 1.2k views
  17. புனைவு என்னும் புதிர்: ஷோபா சக்தி - வெள்ளிக்கிழமையின் விசேஷம் ஷோபாசக்தி கலையின் முக்கியமான அம்சம், வெளிப்பாடுதான்; கருத்தன்று. அதி அற்புதமான கருத்துகளை அரிய கண்டுபிடிப்பு போல் அநேக மேதைகள் என்றைக்கோ எழுதிவைத்துச் சென்றுவிட்டனர். ஆனால் அவற்றைக் கலையாக வெளிப்படுத்தும் விதத்தில் கிறங்கடிக்கிறான் கலைஞன். இனி பிறக்கப்போகும் எவருக்கும் அகண்டாகாரமாய்த் திறந்து கிடக்கும் வெளி அது. ஷோபாசக்தி, தமது கதைகளில் அரசியல்தான் பேசுகிறார். அவர் பேசும் அரசியலைக் கடுமையாக மறுப்போர்கூட அவர் கதைகளின் கலைத் தரத்தை மறுக்க சிரமப்படுவார்கள். வாசகனின் பார்வைத் திறனுக்கேற்ப, பல அடுக்குகளைக் கொண்ட கதைகளே, பெரிய எழுத்து என இலக்கியவாதிகளால் கொண்டாடப்படுகி…

  18. தமிழின் 247 எழுத்துக்களில் பயன் படாத எழுத்துக்கள் உள்ளனவா? எனக்கு தமிழ் மொழி குறித்து நீண்ட நாட்களாக இருந்து வரும் சில ஐயப்பாடுகளுக்கு விடைத் தேடும் வகையில் தமிழறிஞர் ஒருவரிடம் ஒரு வினாவினை தொடுத்தேன்.... அய்யா... தமிழில் *உயிர் எழுத்துகள் 12 *மெய் எழுத்துகள் 18 *உயிர்மெய் எழுத்துகள் 216 *ஆய்த எழுத்து 1 என மொத்தம் 247 எழுத்துகள் உள்ளன. இந்த 247 எழுத்துகளில் பல எழுத்துகள் பயன்பாடற்ற எழுத்துகளாகவே உள்ளனவே ... குறிப்பாக *உயிர்மெய் எழுத்துகளில் உள்ள "ங"கர வரிசை எழுத்துகளில் ,"ங" என்ற எழுத்து மட்டுமே அதிக அளவில் பயன்படுகிறது! மற்றுமுள்ள 17 ஙகர வரிசை எழுத்துகள் பயனற்றே உள்ளன.! அதேபோன்று *ஞ கர வரிசை எழுத்துகளிலும் *ஞ -ஞா ஆகிய இரண்டு எழுத…

  19. விழிபட்ட இடம் இன்று உளிபட்ட சிலையாக இது தானோ காதல் என்றறிந்தேனடி புது பார்வை நீ பார்த்து புது வார்த்தை நீ பேசி இதயத்தை இடம் மாற செய்தாயடி!! மெல்லிடை கொண்டு நடைகள் போடும் அழகான பெண்ணே முப்படை கொண்டு என்னை சுற்றி வளைத்தாயடி!! என் உறக்கத்தை திருடி சென்று உறவாடும் பூவே உன் சிரிப்புக்குள் சிறை வைக்கிறாய்... இசையோடு சேர்ந்த இந்தப் பாடல் வரிகள் என் இதய வார்ப்புகளை எப்பொழுதும் கீறிச் செல்லும். காதலிப்பதை விட நாம் காதலிக்கப்படுகிறோம் என்பதை உணரும் தருணம் இருக்கிறதே.....!! உணர்வற்ற உடலாய் உயிரற்ற சடமாய் ஏகாந்த வெளிகளில் சஞ்சரிக்கும் அந்த போதையை என்னவென்று சொல்வது !! எழுத்துக்களில் அடக்க முடியாத உயிரை அறுக்கும் உணர்வுகளின் தொகுப்பு அது.. ஐந்திணை…

  20. நவராத்திரி பூசையின் போது, சகலகலாவல்லி மாலை பாடப்படும் என்பதை அறியாத சிலருக்கும், அது கிடைக்காமல் இருப்பவர்களுக்குமான தேடலில் கிடைத்தது. இதுகளைக் கொஞ்சம் பாடி புண்ணியத்தைச் சேருங்கள் பாடல் 1 வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ளத் தண்தாமரைக்குத் தகாது கொலோ? சகம் ஏழும் அளித்து உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே! பாடல் 2 நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில் கூடும் பசும்பொற் கொடியே கனதனக்குன்றும் ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பே சகலகலாவல்லியே பாடல் 3 அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து உன் அருட்கடலில்…

    • 32 replies
    • 12.8k views
  21. மாமலையும் ஓர் கடுகாம் ! கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் என்பார் கவிஞர் பாரதிதாசன். மாமலைகூட ஓர் கடுகாகத் தெரியும் இந்தக் காதலர்களுக்கு, பெற்றோரிடம் அனுமதி பெறுவது என்பது மாமலையைத் தூக்குவது போல கடினமாகத் தெரிவதுதான் காதலின் விந்தை! தன் காதலைப் பெற்றோருக்குப் புரியவைத்து அவர்களின் அனுமதியோடு திருமணம் செய்துகொள்பவர்களுக்கு தம் வாழ்வில் எதிர்கொள்ளும் மலையளவு துன்பங்கள் கூட கடுகளவாகத் தெரியும்! வாழ்க்கையிலிருந்து வந்ததுதான் இலக்கியம் என்றாலும் இலக்கியத்துக்கும் வாழ்க்கைக்குமான இடைவெளி மிகவும் பெரிது. இலக்கியத்தையும் - வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த உண்மை புலப்படும். ஒரு காதலர் புலம…

  22. தமிழின் சொல்வளமையும் செறிவான சொற்சிக்கனமும் பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி எந்த ஒரு மொழியின் செறிவான வளமை என்பது அம்மொழியின் "தனிச்சொற்கள் தொகுதி" எண்ணிக்கை அன்று. அம்மொழியின் செறிவான கருத்துக் குறியீட்டு வளமே உண்மையான வளம் ஆகும். தமிழ்மொழியின் சொல்வளமை! உயர்தனிச் செம்மொழியான தமிழ் செறிவான கருத்துக் குறியீட்டு வளத்தைத் தன்னகத்தே கொண்டு விளங்கி வருகின்றது. உதாரணமாக, தந்தையின் உடன்பிறந்தவர்கள் பெரியப்பா, சித்தப்பா என்றும், அன்னையின் உடன்பிறந்தவர் அம்மான்(தாய்மாமன்) என்றும் அவரவரின் தனிச்சிறப்புகளுடன் வழங்குகிறது தமிழ் மொழி; இச்சொல்லாற்றல்கள் தமிழ்மொழியின் இனச்செறிவைப் பறைசாற்றுகின்றன. ஆங்கிலமொழியின் சொல்வ…

  23. தமிழர்தம் உடம்பொடு உயிரிடையென்ன வள்ளுவம் -சுப.சோமசுந்தரம் இப்போதெல்லாம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வள்ளுவம் தமிழர்தம் வாசிப்பில் கலந்ததோ என்னவோ, சுவாசிப்பில் கலந்தாற் போன்ற உணர்வு. இதற்கெல்லாம் தமிழ் உணர்வாளர்க்கு நன்றி சொல்ல வேண்டியதில்லை; அவர்கள் எக்காலத்தும் வாழ்ந்தவர்தாமே! நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களாய், திடீரென உறவாடிக் கெடுக்க நினைக்கும் உன்மத்தர்க்கே நம் நன்றி உறித்தாகுக! ‘ மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.