Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும் நயமும்

இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஆரியப் புரட்டும் அயிரமீனும் பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி சமஸ்கிருதத்திலிருந்தே பல தமிழ்ச் சொற்கள் உருவாயின என்று ஆரியர்கள் காலம் காலமாகப் புளுகி வருகின்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக அவர்கள் பயன்படுத்தும் சொற்களில் மிகவும் முக்கியமான சொல் தமிழில் நாம் புழங்கிவரும் "ஆயிரம்" என்னும் சொல்லாகும். ஆயிரம் என்னும் சொல் 'ஸகஸ்ர' என்னும் வடசொல்லில் இருந்தே பெறப்பட்டதாகக் காட்டுவர் ஆரியர்கள். தரம் உயர்ந்த வைரம், தரம் குறைந்த வைரம் என்று வைரக்கற்களின் தரத்தைச் சோதித்து அறிய சாமானியனால் இயலாது; ஆனால், 'மணிநோட்டகன்' எனப்படும் வைரப் பரிசோதகன் எளிதில் கண்டுபிடித்துவிடுவான். அதுபோல், சொற்களின் வேர், சொற்பொருள் காரணம் போன்றவை மொழிநூல் இலக்கணம்…

  2. ஆற்றுப்படை காட்டும் தமிழர் பழக்க வழக்கங்கள்.. தமிழரின் மரபையும் தொன்மையையும் அறிவதற்கான வரலாற்றுச் சான்றாகச் சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. அவற்றுள் ஆற்றுப்படை இலக்கியங்கள், ‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்ற பரந்துபட்ட மனத்துடன் வாழ்ந்த பழந்தமிழனை அடையாளம் காட்டுவதாய் உள்ளன. அறிவியல் வளர்ச்சி, பொருளாதார ஏற்றத்தாழ்வு, மேற்கத்தியத் தாக்கம் போன்றவற்றால் தமிழரின் தனித்துவமான அடையாளங்களை இழந்தும், மறந்தும், தவிர்த்தும் வரும் நிலையில் சங்க இலக்கியங்களில் தமிழர் பழக்க வழக்கங்கள் அன்றும் இன்றும் என்ற பொருண்மையிலான சிந்தனை ‘காலத்தின் கட்டாயம்’ என்றே கூறலாம். ஆற்றுப்படை இலக்கியம் பத்துப்பாட்டில் பெரும்பான்மை பெற்றதாக ‘ஆற்றுப்படை’ இலக்கியங்கள் உள்ளன. ‘பகிர…

  3. தூரக்கிழக்கு கரை ஓரந்தான் தாழப்பறந்து வரும் மேகந்தான் உங்கிட்டே சேராதோ !! எம்பாட்ட கூறதோ !! ஒண்ணாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ !! ஏகாந்த அமைதியில் சுழலும் இன்னிசையும் என்னவளின் நினைவுகளும் இணைந்துவிட்ட ஒர் இனிய இரவில், கற்பனையெனும் காற்றுக் குதிரை ஏறி பால்ம வீதிகளில் பாய்ந்தோடிக் கொண்டிருந்த கணத்தில் எழுந்த ஒரு சின்ன சிந்தையே இந்தப் பதிவின் மூலம்... கற்பனை என்ற சொல்லுக்கும் சிந்தனை என்ற சொல்லுக்கும் அதிக வேறுபாடு கிடையாது என்றே நினைக்கிறேன். ஒழுங்குபடுத்தப் படாத எண்ண ஓட்டங்களை கற்பனை என்றும் சீர்படுத்தப்பட்ட எண்ண ஓட்டங்களை சிந்தனை எனலாம் என்று நினைக்கிறேன். நாளைய பற்றிய ஏக்கங்களும், எண்ணங்களும்தான் மனிதனை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் புது புதிதாக எதையா…

  4. இடக்கரடக்கல் என்பது பேச்சு வழக்கில் நாம் அன்றாடம் பயன்படுத்திவரும் ஒரு தகுதி வழக்கு. இடர்பாடாகத் தோன்றும் சொற்கள் அல்லது சொற்றொடர்களைக் குறிப்பிடும்போது அதற்குரிய இயல்பான சொற்களைக் கொண்டு நேரடியாகக் கூறாமல், நாகரிகம் கருதி மாற்றுச் சொல் கொண்டு குறிப்பிடுவது இடக்கரடக்கல் என்பதாகும். இத்தகைய பழக்கத்தை இலக்கணம் வகுத்து நெறிப்படுத்தியிருப்பது தமிழ்ப் பண்பாட்டின் உயர்வைச் சுட்டுகிறது. இடக்கர்+அடக்கல் => இடக்கர் என்பது “சொல்லத்தகாத”, இடக்கு அடக்கல் என்பது “அடக்கி” அவையில் அல்லது பிறருக்கு மத்தியில் சொல்லத்தகாத சொல்லைக் கூறாமல் அதை அடக்கி, அதற்குரிய மாற்றுச் சொல்லைப் பயன்படுத்துதல். அதாவது ‘நாசுக்காக’ …

  5. அண்மையில் தாயகத்தில் ஒரு புத்தக கடையில் கண்டேன்.

    • 15 replies
    • 2.2k views
  6. வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன? இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை? - மங்காத சீரகத்தைத் தந்தீரேல், தேடேன் பெருங்காயம்! ஏரகத்துச் செட்டியாரே! இது சித்தர்களின் பரிபாஷையில் எழுதப்பட்டதொரு பாடல். புலவர்களில் சிலர், மறைமுகச்சித்தர்களாக விளங்கினார்கள். சித்தர்கள், ரிஷிகளில் பல மாதிரியான மனப்பான்மை,குறிக்கோள்கள்,நடைமுறை,சித்தாந்தம் முதலியவற்றைக் கொண்டவர்களாக விளங்கினர். சிற்சில அடிப்படைகளில் அவர்களை வகைப்படுத்திப் பிரித்து விடமுடியும். சிலர், உடலைப்பக்குவப்படுத்தி மூப்பு, நரை, நோய், நொடி,இல்லாமல் நீண்டகாலம் இருக்கப் பார்ப்பார்கள். சிலரோ இறக்காமலேயே இருந்து விடவேண்டும் என்று எண்ணுவர். பலவகையான உணவுக்கட்டுப்பாடுகள், ஹடயோக, ராஜயோகப் பயிற்சிகள், சமாதிநிலைகள், ம…

  7. Proud To Be Tamil இது போன்ற ஒரு பாடலை நான் பார்த்ததும் இல்லை, கேட்டதும் இல்லை.!! தயவு செய்து இதைப் படித்து விட்டுக் கடைக்கோடித் தமிழன் வரை பகிரவும்.!!! வில்லிப்புத்தூரார் என்னும் புலவர் ஒருவர் இருந்தார். நல்ல தமிழ்ப்புலமை கொண்டவர். ஆனால் புலவர்க்கே உரிய ஆணவமும் கொண்டவர். ... அவர் வருவோர் போவோர் எல்லாரையும் வாதத்திற்கு அழைப்பார். அதில் தோற்பவர் பாடு திண்டாட்டம் தான். தோற்றுவிட்டால் தோற்றவர்களின் காதை தன் கையில் வைத்திருக்கும் காதறுக்கும் துரட்டியால் ஒட்ட அறுத்து விடுவார். இதனால் காது இல்லாதவரைக் கண்டால் இவர் வில்லிப்பூத்தூராரிடம் வாதில் தோற்றவர் என தெரிந்து கொள்ளலாம். இதனால் புலவர்கள் அவர் முன்னிலையில் செல்ல அஞ்சியிருந்தனர். எந்த வில்லனுக்கும் அதி வில்லன் ஒ…

  8. [size=4]நற்றினையில் என் உள்ளம் கவர்ந்த ஓர் பாடல். பொருள் தேடப் பிரிந்து சென்ற தலைவன் வருவதாகக் கூறிய பருவம் கடந்து மேலும் ஒரு மாதமாயிற்று. அப்பொழுதும் தலைவன் வரவில்லை. தலைவியின் துன்பம் பல்கிப் பெருகிற்று. தோழி தலைவியின் துன்பத்தை தணிக்க பலவாறு நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளை கூறுகிறாள். அதனிலும் துன்பம் தணியாத தலைவி பின்வருமாறு கூறுகிறாள். என் தோள்களும் மெலிந்து அழிகின்றன. அவன் வருவதாக கூறிய நாட்களும் கடந்து விட்டது. நீண்ட பாலை வழியை நோக்கி நோக்கி என் கண்களும் ஒளியற்று காணும் தன்மையை இழந்தன. எனது அறிவும் மயங்கி என்னை கைவிட்டு பித்துபோல் வேறுபட்டது. நோயும் திரும்பி வருகின்றது. உயிரைப் பெயர்த்தற்குரிய மாலைப் பொழுதும் வந்து விட்டது நான் என்ன ஆவேனோ? இவ்வுலகத்தில்…

  9. சென்னை : ""இந்த ஆண்டு முதல் துவக்கப்பட்டுள்ள தமிழ்வழி பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களில் பெரும்பான்மையினர் நல்ல மதிப்பெண்களை பெறுகின்றனர்,'' என, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல் தமிழ்வழி பொறியியல் படிப்புகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு சிவில், மெக்கானிக்கல் படிப்புகள் தமிழ் பயிற்று மொழியில் வழங்கப்படுகின்றன. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில், தமிழ்வழி பொறியியல் படிப்புகளுக்கான புத்தகங்களை வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் புத்தகங்களை வெளியிட்டார். பொறியியல் இயற்பியல், பொறியியல் வேதியியல், கணி…

    • 0 replies
    • 844 views
  10. இந்த உலகம் இன்னும் இயங்கக் காரணம்? நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் இயற்கைக்கூறுகள் இந்த உலகம் இயங்க அடிப்படையானவையாகும் என்று பாடம் படித்தோம். இருந்தாலும், மக்காத குப்பைகளாலும் வேதியியல் உரங்களாலும் மண்ணை மலடாக்கினோம், காடுகளை அழித்தோம், விவசாய நிலங்களைப் பட்டாப்போட்டு விற்றோம், தொழிற்சாலைக் கழிவுகளால் நீர்நிலைகளை விசமாக்கினோம், நச்சுப் புகையால் காற்றை மாசாக்கினோம் இப்படிப் பல வழிகளில் இயற்கையை அழித்தோம் அதனால், ஆறுகளிலும், குளங்களிலும் தண்ணீர் இல்லை! மழையில்லை, வெயில் வாட்டி வதைக்கிறது! எப்போது மழைவரும்? எப்போது புயல்வரும்? எப்போது கடல்சீற்றம் வரும்? என்பது யாருக்கும் தெரியாது வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இருந்தாலும் உலகம் இன்னும் இயங்கிக்கொண்டுதான் இருக…

  11. ஏழு நிமிடம்தான் இன்தமிழை இரு கரத்தில் ஏந்தி பருகிடலாம். நன்றி தாயே......!

  12. முன்னோர்கள் உரைத்த பல சித்தரெல்லாம் முடிந்திட்டார், மடிந்திட்டார், மண்ணாய்விட்டார் நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்; சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்; தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்; பலர் புகழும் இராமனுமே ஆற்றில் வீழ்ந்தான் நாணத்தை, கவலையை, சினத்தை, பொய்யை அச்சத்தை, வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும். மிச்சத்தைப் பின் சொல்வேன் சினத்தை முன்னே வென்றிடுவீர் பூமியில் மரணமில்லை - பாரதி நாணம், கவலை, சினம் பொய் அச்சம் வேட்கை போன்ற அழுக்குகள் எல்லாம் போய் விட்டால் எஞ்சியிருக்கப்போவது என்ன? சுத்தமான மனது ஒன்றுதானே. சுததமான இதயத்தால் இந்த பூமியில் மரணத்தை வென்றிடலாம்...!! இன்றைய பொழுது இனிதாக அமைய என் வாழ்த…

  13. "இன்சொலால் அன்றி இருநீர் வியன் உலகம் வன்சொலால் என்றும் மகிழாதே - பொன்செய் அதிர் வளையாய் பொங்காது அழல் கதிரால் தண்என் கதிர் வரவால் பொங்கும் கடல ( நன்னெறி- 18)" குளிர்ச்சியான திங்களின் கதிர்கண்டு பொங்கும் கடல், வெம்மையான கதிரவனின் கதிர்களுக்கு பொங்காது. அதுபோல்தான் மானுடமும்.. வன்சொல்லை தவிருங்கள் ..உங்கள் வாழ்க்கை வளமாகும்!! இன்றைய பொழுது இனிதாக அமைய என் வாழ்த்துகள் !!

  14. இன்னும் எத்தனை சொற்களின் ‘சோலியை முடி’ப்பார்கள்? மின்னம்பலம் -இலக்குவனார் திருவள்ளுவன் ஒரு சொல்லுக்கான பொருள் என்பது அதனை மற்றவர் புரிந்து கொள்வதன் அடிப்படையில்தான் அமைகிறது. இதனால், சொல்லின் பொருள் இடத்திற்கேற்ப மாறும் நிலையும் ஏற்படுகிறது. அதே நேரம், சொல் அல்லது சொல்லின் தொடரான சொற்றொடர் வெளிப்படையாக உணர்த்தும் பொருள் ஒன்றாக இருக்கும். பயன்படுத்தும் இடத்தில் உணர்த்தும் பொருள் வேறாக இருக்கும். இவ்வாறான தொடரை மரபுத் தொடர் என்கிறோம். சில நேரங்களில் சொலவடை, மொழி மரபு, வட்டார வழக்கு, இலக்கணத் தொடர் என்றெல்லாம் குறிப்பிடுகிறோம். இவ்வாறு மரபுத் தொடர் பயன்படுத்தப்படும் பொழுது அச்சொல்லின் வெளிப்படையான பொருளுக்கு முதன்மை அளிக்காமல் சொல்ல வரும் உண்மைப் பொருளையே நா…

  15. Started by vijivenki,

    இன்பமாக வாழ மனிதனுடைய மனதிலே ஒரு நிறைவு வேண்டும். அந்த நிறைவிலிருந்து எழக்கூடியதுதான் இன்பமான வாழ்வு என்பதாகும். மனிதனுக்கு உண்மையிலே வறுமை என்பது இல்லை. பிறந்த மனிதனுக்கு இயற்கையிலேயே, கடைசி வரையிலே எல்லா வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மனிதன் ஒருவரைப் பார்த்து அவரைப்போல் நாம் இல்லையே என்று நினைத்து தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு துன்புறுகிறான். அவன் தன்னிடம் உள்ள ஆற்றலை உணர்ந்து, வளர்த்துக் கொள்ளும் திறமை பெறாமையும், செயல்படுத்திக் கொள்ளக் கூடிய வாய்ப்பு கிட்டாமையுமே, சோர்வு, வறுமை உண்டாவதற்குரிய காரணங்களாம். மனத்தைக் களங்கப்படுத்திக் கொண்டும், தனக்குத் தானே ஒரு எல்லை கட்டிக் கொண்டும், அதிலேயே மனதை சிக்க வைத்துக் கொண்டும் இது வேண்டும், அது வேண்டும் என…

  16. கொஞ்சம் பெரிய கவிதை தான். ஆனாலும் இதை எழுதியவரின் திறமையும், தமிழின் இனிமையையும் மெச்சித்தான் ஆக வேண்டும்.. இன்பம் - ஐம்பது அன்பொடு இகத்தினில் வாழுதல் இன்பம்; அறிவொடு நிலத்தினில் ஆளுதல் இன்பம்; பண்புடை மாந்தராய்த் திகழுதல் இன்பம்; பணிவுடை மனிதரைப் புகழுதல் இன்பம்; தென்றலில் மழையினில் நனைதல் இன்பம்; சந்தனக் காற்றினில் தவழுதல் இன்பம்; வெண்மதி வானில் உலவுதல் இன்பம்; நிம்மதி நெஞ்சினில் நிலவுதல் இன்பம்; இரவினில் காதலில் கொஞ்சுதல் இன்பம்; உறவினில் களிப்பினில் கெஞ்சுதல் இன்பம்; அருகினில் சிறகினில் துஞ்சுதல் இன்பம்; அருமையில் பெருமையில் மிஞ்சுதல் இன்பம்; திரையினில் மறைவினில் அஞ்சுதல் இன்பம்; திறமையில் கடமையில் விஞ்சுதல் இன்ப…

  17. Kural: 929 களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று. Like him who, lamp in hand, would seek one sunk beneath the wave. Is he who strives to sober drunken man with reasonings grave.

    • 23 replies
    • 3k views
  18. சங்​கப் பாடல்​க​ளின் முக்​கிய சிறப்​பி​யல்பு மானிட வாழ்​வின் மீது,​​ அதன் இன்ப,​​ துன்​பங்​க​ளின் மீது அதற்​குள்ள அக்​க​றையே ஆகும்.​ ஆனால்,​​ எந்த ஒரு பாட​லும் இயற்​கையை விட்டு முற்​றி​லும் விலகி நிற்க இய​லாது.​ இயற்கை மானிட வாழ்​வின் ஒரு நாட​கம் அரங்​கே​றும் மேடை​யா​க​வும்,​​ பின்​ன​ணி​யா​க​வும் சங்க இலக்​கி​யத்​தில் இடம் பெறு​கி​றது.​ இ​யற்கை அதன் எல்​லாத் தன்​மை​க​ளி​லும் முக்​கி​யத்​து​வம் பெற்று,​​ மனித வாழ்க்​கையை வண்​ண​ம​ய​மாக்​கு​கி​றது.​ அதா​வது,​​ இயற்​கை​யின் முன்​னி​லை​யில் மனி​தன் பெறும் உணர்ச்​சி​க​ளைத் தெளி​வா​கக் காட்​டு​கி​றது.​ காத​ல​னைப் பிரிந்து துய​ரு​றும் தலை​விக்கு கடல்​நீ​ரின் "இழும்' எனும் ஓசை,​​ தன் சொந்த அழு​கு​ர​லைப் போலவே கேட்​கி​றது ​(கலி.…

  19. இயல் வழி நாடகம் - சுப. சோமசுந்தரம் வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா என அடுக்கி முறையே செப்பலோசை, அகவலோசை, தூங்கலோசை, துள்ளலோசை என்று ஓசைநயம் பகரும் முறையே சொல்கிறது இயல் வழி இசையுண்டு என்று. காணாததற்கு மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை எனப் பண்வகைகள் வேறு. குறிப்பாக மரபுப் பாடலெதுவும் இசையின்றி இயங்குவதில்லை. இக்கட்டுரை இங்கே பேச வந்தது இயல் வழி நாடகம் பற்றி. மேலும் இங்கு நாம் இயல் எனக் குறித்தது மரபுப் பாடலேயாம். உள்ளார்ந்த நாடகம் (Implicit Drama) அனைத்து மரபுப் பாடலிலும் அமையலாம். உள்ளார்ந்த நாடகமாக ஒரே பாடல் வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு காட்சி…

  20. Started by Shakana,

    உங்களுக்காக "இயேசு காவியம்" கவிஞர் கண்ணதாசனின் கைவண்ணத்தால் மிளிரும் இறாவக் காவியம். இதன் முதற்பதிப்பு 1982ஆம் ஆண்டு வெளியானது. இது வெளியான குறுகிய காலத்தில் அச்சடிக்கப்பட்ட 28,000 பிரதிகளும் புத்தகத்தின் விலை அதிகமாயிருந்தாலும் விற்று போயின. இயேசுவின் வாழ்வும் வாக்கும் கவிஞரின் இக்காவியத்தின் வழியாக எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இராண்டாம் பதிப்பு மலிவுப் பதிப்பாக 1985ஆம் ஆண்டு 50,000 பிரதிகள் அச்சடிக்கப்பட்டன. அவையும் விரைவில் விற்றுவிட்டன. தமிழ் கூறும் நல்லுலகில் கவியரசர் கண்ணதாசனின் செல்வாக்கு எத்தகையது என்பதை இஃது எடுத்துக் கூறுகிறது. கவிஞரின் கவிநயத்தையும் இறை இயேசுவின் நற்செய்திக் கருத்துக்களையும் இயம் உள்ளங்கள் ரசித்து, சுவைக்க வ…

  21. இராவணன் இயற்றிய நூல்கள் என அறியப்பட்டுள்ள நூல்கள் விபரம் 1. உடற்கூறு நூல் 2. மலை வாகடம் 3. மாதர் மருத்துவம் 4. இராவணன் – 12000 5. நாடி, எண்வகை பரிசோதனை நூல் 6. இராவணன் வைத்திய சிந்தாமணி 7. இராவணன் மருந்துகள் - 12000 8. இராவணன் நோய் நிதானம் - 72 000 9. இராவணன் – கியாழங்கள் – 7000 10. இராவணன் வாலை வாகடம் – 40000 11. இராவணன் வர்ம ஆதி நூல் 12. வர்ம திறவுகோல் நூல்கள் 13. யாழ்பாணம் – மூலிகை அகராதி 14. யாழ்பாணன் – பொது அகராதி 15. பெரிய மாட்டு வாகடம் 16. நச்சு மருத்துவம் 17. அகால மரண நூல் 18. உடல் தொழில் நூல் 19. தத்துவ விளக்க நூல் 20. இராவணன் பொது மருத்துவம் 21. இராவணன் சுகாதார மருத்துவம் 22. இராவணன் திராவக தீநீர் நூல் – அர்க்க பிரகாசம் 23. இராவணன் அறுவை ம…

  22. இருக்க வேண்டிய - கூடாத ஆமைகள் 'ஆமை புகுந்த வீடு உருப்படாது' என்பார்கள் முன்னோர். சீனர்களோ ஆமையை அதிர்ஷடத்திற்குரியது என்றுவளர்க்கிறார்கள். எந்த ஆமை கூடாதது? ஆமைகளில் இருவகை. அதில் எந்த ஆமை இருக்க வேண்டியது? 'கல்லாமை, இல்லாமை' கூடாது! அழுக்காறாமை, பொய்யாமை பிறனில் விழையாமை போன்ற ஆமைகள்இருக்க வேண்டியது! வள்ளுவர் மிக எரிச்சல் படும்போது 'பாவி' என்ற சொல்லைப் பயன்படுத்துவார். 'வறுமை என்ற ஒரு பாவி'. 'அழுக்காறு என ஒரு பாவி' என்றார். அந்த பாவி நம் செல்வத்தை அழிக்கும்; நரகத்தில் நம்மைச் சேர்க்கும்! இந்த (ஆமை) பொறாமை எப்படியோ நம் மனதில் வந்து புகுந்து விடுகிறது. நம் வீட்டு மின்சாரம் தடைப்பட்டுஎதிர்வீட்டில் விளக்கு எரிந்தால் பொறாமை. நம் பிள்ளை தேர்வில் தோற்று எதிர் வீட்டுப்…

    • 0 replies
    • 1.1k views
  23. ஏதோ ஒரு திரியில் கிருபன் எழுதிய பின்னோட்டத்தில் “இரும்பைத் தின்று கசாசயம் குடிப்பவர்” என்ற சொற்றொடரைப் பார்த்தேன். இதற்கு முன்னர் இதனைக் கேள்விப்பட்டதில்லை. மிகவும் சுவாரசியமானதும் வினைத்திறன் மிக்கதும் ஆன இநதச் சொற்றொடர் வாசிக்க வாசிக்க அர்ததம் கிளம்பும் ஆழம் மிக்கதாய் மலைப்பேற்படுத்துகிறது. இது ஏதேனும் குறிப்பிட்ட ஒரு வட்டார வழக்கா, அல்லது இலக்கியத்தில் எழுந்ததா என்று தெரிய ஆவலாக உள்ளது. நிச்சயமாக இது ஈழத்தமிழரின் பாவனையில் உருவான சொற்றொடராயே இருக்கும் என்று எனக்குப் படுகிறது. யாரும் அறிந்தால் அறியத் தாருங்கள். அது போல், இவ்வாறான அரிதாகப் பாவனையில் இருக்கும் ஆழமான இனிமைனயான சொற்றொடர்கள் பேச்சு வழக்குகள் அறிந்தவர்கள் இத்திரியில் பின்னூட்டம் இடுங்கள். நாங்களும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.