சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
985 topics in this forum
-
“சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு” என்ற சினிமாப் பாடலில், “இடையின் பின்னழகில் இரண்டு குடத்தை கொண்ட புதிய தம்புராவை மீட்டிச் சென்றாய் கலைநிலா மேனியிலே சுளை பலா சுவையைக் கண்டேன் அந்தக் கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி மதிதன்னில் கவி சேர்க்குது” என்ற ரி.ராஜேந்தரின் அழகிய கற்பனை இருக்கும். சமீபத்தில் நான் வாசித்த செய்தி ஒன்று இந்தப் பாடல் வரிகளை நினைவுக்கு கொண்டு வந்ததோடு என்னை இசையோடு அசை போடவும் வைத்தது. ஆர்ஜென்டீனா மொடல் அழகி (Silvina Luna) சில்வின லூன(43)வுக்கு பெரிய பின்னழகுக்கு ஆசை வந்தது. அந்த ஆசைக்கு விலையாக இந்த வருடம் ஆவணி 31ந் திகதி அவர் தனது உயிரைத் தர வேண்டி இருந்தது. Brazilian Butt Luft என்று அழைக்கப்படும…
-
- 2 replies
- 694 views
-
-
-
Ajith Kumarapathy ஜேர்மன் Köln நகரானது அனைத்து இன மக்களும் வந்து செல்லும் சுற்றுலாத்தலமாகும். அங்கே நபர் ஒருவர் நாள்தோறும் அனைத்து நாட்டுக் கொடியையும் நிலத்திலே வரைந்து மக்கள் பார்வைக்கா வைக்கின்றார்.தங்களது நாட்டுக்கொடியை பார்ப்பவர்கள் மகிழ்ச்சியில் தங்கள் கொடி இருக்கும் இடத்தில் தங்களால் இயன்ற பணத்தை அதன் அருகில் வைக்கின்றனர் அப்படி கிடைக்கும் பணத்தை தனது நாளாந்த செலவுக்காக அந்நபர் எடுத்துக்கொள்கின்றார். சுற்றுலா சென்ற வாறண்டோர்வ் நண்பர் ஒருவர் தமிழீழ தேசியக் கொடியினை காண்பித்து வரையமுடியுமா என வினவியுள்ளளார்? சம்மதித்த அந்நபர் 20 நிமிடங்களில் தேசியக்கொடியினை வரைகின்றேன் சுற்றிவிட்டு வாருங்கள் என்று அனிப்பிவைத்துள்ளார்.40 நிமிடங்கள் கழித்து அவ்விடத்துக்கு சென்ற நண்பர்…
-
- 2 replies
- 1.6k views
-
-
”மற்ற மாநில மக்களைவிட தமிழ்ச்சமூகத்துக்கு இசையறிவு அதிகம். காரணம், ராஜாவும் ரகுமானும்” - நிவாஸ் கே பிரசன்னாவைப் பேட்டி எடுத்திருந்தபோது இப்படிச் சொன்னார். தமிழர்களுக்கு இசையறிவைவிட நகைச்சுவை உணர்வு ரொம்ப அதிகம். அதற்குச் சமீபத்திய உதாரணம் மீம்ஸ். வேறு எந்த மொழியிலும் இவ்வளவு கிரியேட்டிவாக மீம்ஸ் வருவதில்லை. இதற்குக் காரனமென என்.எஸ்.கேவில் தொடங்கி யோகி பாபு வரை பலருக்கும் கிரெடிட் தரலாம். முக்கியமாக, வடிவேலுவையும் கவுண்டமணியையும் சொல்வார்கள். ஆனால், இந்தப் பட்டியலில் தவறாமல், முக்கியமான இடத்தில் இடம்பிடிக்க வேண்டிய பெயர் கிரேஸி மோகன். நகைச்சுவை பல விதம். எந்த வசனமுமில்லாமல் வெடித்துச் சிரிக்க வைத்த சார்லி சாப்ளின், சூழலை வைத்து காமெடி செய்த விவேக், உடல்மொழியால் மட்டும…
-
- 2 replies
- 1.3k views
-
-
படக்குறிப்பு, வலுவான உடலமைப்பைக் கொண்டிருந்த கோபிநாத், உடல் தகுதியைப் பராமரிப்பதில் மிகுந்த ஆர்வமாக இருந்தார் என்று அவரது பெற்றோர் தெரிவித்தனர். கட்டுரை தகவல் சம்பத் திஸாநாயக்க & ஷெர்லி உபுல் குமார, கிளிநொச்சியில் இருந்து பிபிசி சிங்கள சேவை 3 செப்டெம்பர் 2025, 01:43 GMT புதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர் ''பிள்ளைகளுக்கு மாத்திரம் என்ன நடந்தது என்பதை எங்களுக்குச் சொல்லுங்கள். நாங்கள் உயிருடன் அல்லவா கையளித்தோம். சடலத்தைக் கொடுக்கவில்லையே'' என கிளிநொச்சியைச் சேர்ந்த செல்வதுரை பத்மா பிரியதர்ஷனி பிபிசி சிங்கள சேவையிடம் கூறினார். செல்வதுரை கோபிநாத் என்ற அவரது மகன், பள்ளி ஆசிரியராக இருந்ததோடு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆங்கில செய்தி வாசிப்பாளராகக் கடமையாற…
-
-
- 2 replies
- 623 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 12 AUG, 2024 | 02:18 PM மியா லு ரூக்ஸ் என்ற செவித்திறன் குறைபாடுடைய பெண்ணொருவர் முதன் முறையாக தென்னாபிரிக்காவில் அழகு ராணி பட்டத்தை சூடியுள்ளார். சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள் என்னைப் போலவே வெறித்தனமான கனவுகளை அடைய தனது வெற்றி உதவும் என்று நம்புகிறேன். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ விரும்புகிறேன் என மியா லு ரூக்ஸ் தெரிவித்துள்ளார். 28 வயதுடைய மியா லு ரூக்ஸ்க்கு ஒரு வயதில் ஆழ்ந்த செவித்திறன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பின்பு அவரது காதில் கோக்லியர் மின்னணு சாதனம் பொறுத்தப்பட்டது. அத்துடன், முதல் வார்த்தையை பேசுவதற்கு இரண்டு வருடங்கள் பேச்சு திறன் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளத…
-
- 2 replies
- 447 views
- 1 follower
-
-
தீவான் தொடர்பில் கல்வி அமைச்சின் செயற்திட்ட பணிப்பாளர் கந்தையா பத்மானந்தன் https://m.facebook.com/story.php?story_fbid=108910681546888&id=108075654963724&sfnsn=scwspwa
-
- 2 replies
- 696 views
-
-
நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பாளர் திரு. சீமான் அவர்கள் சாதனை மனிதன் விருது 2022
-
- 2 replies
- 1.4k views
- 1 follower
-
-
இலக்கை நோக்கி பெலரூஸ் December 2022 மைக்கின்டை சுருட்டை பாதி வாங்கிப் பத்தின அன்ரனோவ் கண்ணை telescope இல இருந்து எடுக்காம சுத்திப் பாத்துக்கொண்டிருந்தான். அதை வாயில் வைக்க முதல் காட்டுப்பக்கம் வந்த சலசலப்பு என்ன எண்டு பாக்க பெரிய focus light ஐத் திருப்ப , “உது கரடி தான்” எண்டு மைக் சொல்ல , “இல்லை இந்த நேரம் கரடி திரியாது , அதோட இது மரத்தின்டையோ , கிளையின்டயோ சலசலப்பு இல்லை நிலத்தோட வாறது” எண்டு சொல்லித் திருப்பியிம் பாத்திட்டு ஒண்டையும் காணேல்லை எண்டு போட்டு கடைசியா ரெண்டு தரம் நல்லா உள்ள இழுத்து நெஞ்சு முட்ட நிறைச்சு வைச்சு மூச்சைக் கொஞ்சம் கொஞ்சமா வெளீல மூக்கால விட்டிட்டு, கடைசிக் காத்தோட காறி எச்சிலைத் துப்பீட்டு ஒரு chewing gum ஐ வாயில போட்டான். Al ja…
-
- 2 replies
- 713 views
- 1 follower
-
-
இன்று உண்மையான கல்வியின் அதிபதிக்கு பிறந்தநாள் ! இந்தியர்களுக்கு கல்வி கொடுத்தவர். ஆம் இந்தியர்களின் கல்விக்கு அதிபதியான லார்ட் மெக்கலே (Thomas Babington Macaulay)அவர்களின் பிறந்த நாள். அவரை நமக்கு ஒரு வில்லனாகத்தான் அறிமுகப்படுத்தினார்கள். “இந்தியாவின் பாரம்பரிய கல்வி முறையை சிதைத்து, வெள்ளைக்காரனுக்கு பியூன் வேலைப்பார்க்க ஆங்கிலத்தை கற்பித்த கயவன்” என்று தான் எனக்கும் அவர் அறிமுகம். அப்புறம் நானே யோசித்தேன். என் பாட்டியும் கொள்ளுப்பாட்டியும் எப்படி படித்த பெண்களாக முடிந்தது? அதுவும் பெண்கள் படிக்கவே கூடாது, குருக்குலக்கல்வி என்பது பிராமண மாணவர்களுக்கு மட்டும் தான் என்றிருந்த அந்தக் காலத்தில் இந்த பெண்கள் எப்படி கல்வி பெற்றார்கள்? என் குடும்ப…
-
- 2 replies
- 1.4k views
-
-
இசையில் ஆர்வம் கொண்ட ஒரு இளம் பெண்... தன் சகோதரியோடு இணைந்து ஒரு பாடலை பாடி வெளியிட நினைத்து .. பல கிராமபோன் ரிகார்டு [இசைத்தட்டு ] கம்பெனிகளை கேட்டுப் பார்த்தாராம்.. ஆனால் இசைத்தட்டு கம்பெனிகள் இதற்கு மறுத்து விட்டார்களாம்.. அவர்கள் சொன்ன ஒரே காரணம் ‘‘ஓதுவார்கள் பலர் பாடியும் அது மக்களைச் சரியாக சென்றடையவில்லை. வேண்டாம் இந்த வீண்வேலை, விட்டு விடுங்கள்..’’ விடவில்லை அந்த சகோதரிகள்.. இசைத்தட்டு சுழல்வது போல் இசைத்தட்டு கம்பெனிகளை சுற்றி சுழன்று வந்து முயற்சித்தும்... கீறல் விழுந்த இசைத்தட்டாக “முடியாது “ என்ற பதிலே திரும்ப திரும்ப வந்ததாம்... ஆனாலும் மனம் தளராத அந்த சகோதரிகள் அந்தப் பாடலை பல ராகங்களில் டியூன் போட்டுப் பாடிப் பார்த்தார்களாம்... முதலில் ‘ஆபேரி’ அட…
-
-
- 2 replies
- 455 views
-
-
போராளிகளாக வாழ்ந்தவர்களுக்கு இயக்கம் சம்பளம் தரவில்லை தான். ஆனால், தலைக்கு வைக்கும் எண்ணெய் தொடக்கம் காலுக்குப் போடும் செருப்பு வரைக்கும் இரு பின்னல்களையும் இணைத்து மாட்டும் ஒற்றைக் கிளிப் தொடக்கம் சட்டை ஊசி வரை மூன்று மாதங்களுக் கொருமுறை பற்தூரிகை தொடக்கம் உள்ளாடைகள் வரை போட்டு குளிக்க சோப் தொடக்கம் துடைப்பதற்கு சரம் வரை ஐயோ என்றால் மருத்துவத் தோழர்களும் பசி என்றால் வழங்கல் பகுதியினரும் பயணம் என்றால் "சிறப்புப் பணி" பேருந்துகளும் எங்களுக்கிருந்தன. இப்போது அப்படி எதுவுமில்லாத போதும் மக்கள் பணியை செய்யும் #எங்களை #உங்கள்_பெயர் விளங்க #உழைப்புச்_சுரண்டல்_செய்…
-
- 2 replies
- 1k views
-
-
அவளுடைய வாழ்வில் மறக்க முடியாத ஒரு இனிய நாளாக இருந்திருக்க வேண்டியநாள். ஆனால் மாறாக அந்தநாள் அவள் வாழ்வில் ஒரு பயங்கரமான நாளாகிப் போனது. திருமணம் நடந்து ஒரு மணித்தியாலத்தில் இதயத்தில் இரத்தம் உறைந்து போனதால் அவளது கணவன் மரணித்துப் போனான். அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாநிலத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. Johnnie Mae Davis, Toraze († 48) இருவரும் அன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். அவர்கள் முகங்களில் புன்னகைகள் பூத்திருந்தன. இருவரதும் குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் பலர் அவர்களுக்கு வாழ்த்துகளையும் மகிழ்ச்சிகளையும் தெரிவிப்பதற்காக தேவாலயத்தில் கூடி இருந்தார்கள். அருட்தந்தையிடம் திருமணத்துக்கு “சரி” என்று இருவரும் ஒப்புக் கொடுத்ததன் பின்னர் ப…
-
- 2 replies
- 1.1k views
-
-
நோம் சொம்ஸ்கி பேசுகிறார்... * * * தமிழாக்கம் Niyas Ahmed * கொரோனா வைரஸ் புதிதல்ல… கோவிட் 19 வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஏன் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படவில்லை? காரணம் ‘சந்தை. எல்லாவற்றையும் சந்தையே தீர்மானிக்குமென்றால் நாம் சாக வேண்டியதுதான். கொரோனாவை தடுத்திருக்க முடியும். ஆனால், சந்தை வேறு திசையில் பயணித்ததுதான் இப்போது ஏற்பட்டிருக்கும் பேரழிவுக்குக் காரணம் என்கிறார் நோம் சாம்ஸ்கி. Noam Chomsky: 'Coronavirus pandemic could have been prevented’ என்ற தலைப்பில் அல்ஜசீராவில் வந்த கட்டுரையை தமிழாக்கம் செய்திருக்கிறேன். ஐந்து நிமிட வாசிப்புதான், வாசியுங்கள். _______________________________________ …
-
- 2 replies
- 790 views
-
-
பிறவிப் பெருங்கடல் விடிய எழும்ப Google calendar இல வந்த alert ஐப் பாத்து, முதல் வேலையா fb இல தேடி ஒரு photo ஐ எடுத்து what’s app குறூப்பில birthday day wish போட்டிட்டு status இல “ HBD to ……..” எண்டு முழுசாக்கூட எழுதாமல் சுருக்கிப் போட்டிட்டு தன்டை admin வேலையையும் காலைக் கடமையை வடிவாச் செய்திட்டன் என்ற திருப்பதியோட நாளை ஆரம்பித்தார் நம்பி. அவுஸ்திரேலியாவில விடிஞ்சாலும் அல்பேட்டாக்காரன், இரவுக் குளிருக்க ரெண்டு பெக்கைப் போட்டுக்கொண்டிருந்தவன், உடனயே தன்டை பங்குக்கு ஒரு பலூன் படத்தைப் போட்டான். மூத்திரம் போக வேளைக்கு எழும்பி நித்திரை வராமப் போஃனைப் பாத்திட்டு ஆரா இருக்கும் எண்டு யோசிச்சிட்டு , ஏன் பிரச்சினை எதுக்கும் ஒரு வாழ்த்துத் தானே எண்டு தன்டை பங்குக்கு கண்ட…
-
- 2 replies
- 687 views
- 1 follower
-
-
மகாவலி நில ஆக்கிரமிப்புத் திட்டமும் - தமிழர் மகா வலியும் - நேரு குணரத்தினம் - மகாவலி ஆற்றுத்திட்டம் தமிழர் இருப்பை அவர்கள் தாயகப் பூமியில் அழிக்க உருவாக்கப்பட்ட திட்டம் என்பது அவ்அவ்போது ஏனோ எம்மவர்களுக்கு மறந்து போகிறது. தமிழர் தம் வாழ்வுரிமைகளுக்காக தம் தாயக இருப்பின் உரிமையை முன்னிறுத்தி போராட ஆரம்பித்ததும்இ இனவாத அரசியலே சிங்களத்தின் இதயநாத அரசியலானதும் 50களின் கதை. ஏனோ எம்மவர்களுக்கு அவ்அவ்ப்போது ஏற்படும் அம்னீசியாவால் அனைத்தும் மறந்துபோவது வாடிக்கையாகிவிட்டது. பின்னர் வரலாறு எவ்வாறு எமக்கு வழிகாட்டியாகும்?? வரலாறு எம்மை விடுவிக்கும்??? 1961இல் சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரால் கருக்கொண்டது தான இவ்மகாவலி ஆக்கிரமிப்புத் திட்டம். அதற்கு ஐ.நா அப…
-
- 2 replies
- 1.5k views
-
-
அன்பால் வீழ்ந்த, விலங்கினம்... நாய்! ஏன் “தெரு நாய்கள்” மட்டும் எங்கும் உள்ளது..? இந்த உலகில் உள்ள அனைத்து விலங்கினங்களும் தனக்கான உணவைத் தானே தேடிக் கொள்ளும் அல்லது வேட்டையாடி உண்ணும். ஆடு மாடு உள்ளிட்ட விலங்குகள் மேய்ந்து கொள்ள... புற்கள், இலை, தளைகளை வழங்கி விடுகிறது. ஆனால் இந்த நாய்கள் மட்டும் ஏன் மனிதன் கொடுத்தால் தான் உணவு உண்டு உயிர் வாழ முடியும் என்ற நிலை இருக்கிறது.? உங்கள் வீட்டில் மணக்க மணக்க சமையல் தயாராகிக் கொண்டிருக்கும் போது உங்கள் வீட்டையே ஏக்கத்துடன் சுற்றிச் சுற்றி ஏன் வருகிறது?? வீட்டிற்குள் இருந்து யாராவதும் வந்து அந்த உணவிலிருந்து ஏதாவதும் ஒரு சிறு பங்கை தூக்கி வீச மாட்டார்களா என ஏன் நப்பாசை கொள்கிறது..? சா…
-
- 2 replies
- 947 views
-
-
மறதியாளர்களாகவும், மன்னிப்பவர்களாகவும் இருப்பதை தவிர தமிழர்களுக்கு வேறு வழியில்லையே! Nadarajah Kuruparan யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எடுக்கப்பட்ட இந்தப்படத்தில் முன்னிலையில் இருப்பவர்கள் ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் முக்கியஸ்த்தரும், முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினரும், 43ஆவது படையணியின் இணைப்பாளருமான, பாட்டளி சம்பிக்க ரணவக்க. (Patalee champika ranawaka.) இவர் கடுமையான இனவாதக் கருத்துகளின் முன்னைநாள் சொந்தக்காரராகவும் இருந்தவர். நல்லாட்சி அரசாங்கத்தில் 50 வீத ஞானோதயத்தைப் பெற்றவர். மற்றையவர் சிறிலால் லக்திலக (Shiral Lakthilaka) 9…
-
- 2 replies
- 789 views
-
-
👉 https://www.facebook.com/watch?v=1355781698240847 👈 பாராளுமன்றில், கண்ணீர் விட்டு அழுத... ஹாபீஸ் நஸீர் அஹமட்.
-
- 2 replies
- 607 views
-
-
மீனுக்கு மேலும் சிக்கல், கீழும் சிக்கல். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். Between the devil and the deep blue sea. அதாவது, தமிழில், ஒருபுறம் வேடன் மறுபுறம் நாகம் இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான் என்று ஒரு பாடல் சொல்லும் கருத்தே அந்த ஆங்கில பழமொழியின் அர்த்தம். இது ஒரு பறக்கும் மீன். அதன் மூலம், பெரிய மீன்கள் பிடித்து தின்ன வரும் போது பறந்து, தப்பி விடும். ஆனால் அதுவே வேறு பிரச்சனையை கொடுக்கிறது.... அவ்வாறு பறக்கும் போது, மேலே பறக்கும் பறவைகளிடம் சிக்கி இரையாகும் நிலை உண்டாகிறது. ஆகவே, மேலும் சிக்கல், கீழும் சிக்கல்.
-
- 2 replies
- 757 views
-
-
விகாரை தென்பட்டால் அது சிங்களவர்களினுடையதா ?? வரலாற்றை நோக்குகின்ற பொழுது விகாரைகள் தென்பட்டால் அது சிங்களவர்களினுடையது என்று தமிழர்களுக்கு இருக்கும் பார்வையும், சிங்களவர்களு நாம் உருவாக்கிய அந்த பார்வையும் மிக பிழையானது. சமயத்தின் கொள்கைகளுக்கான யுத்தம், குடிகளுக்கான யுத்தம், சாதிகளுக்கான யுத்தம் என்பது ஆரம்ப காலம் தொட்டே இருந்து வருகிறது. இன்றைய காலத்தில் இருந்து ஒரு விடையத்தை அணுகுகின்ற பொழுது இன்று இருக்கும் மனநிலை, பழக்கவழக்கம், நடைமுறை மற்றும் அரசியல் நிலை கொண்டு நாம் வரலாற்றை அணுகுகிறோம். இது உண்மையில் பிழையான ஒரு விடையத்தையே தருகின்றது. ஒரு விடையத்தை நாம் பொது மேடையில் வைக்கின்ற பொழுது அதன் உண்மை தன்மையை எந்தவொரு தரப்பும் கேள்வி கேற்கும் வண்ணம் அம…
-
- 2 replies
- 1.5k views
-
-
அபிவிருத்தி என்றால் என்ன? எம்.பி யாகி அமைச்சுப் பதவி பெறுவதன் மூலம் அபிவிருத்தி அடைய முடியுமென்றால் இன்று மிகவும் அபிவிருத்தி அடைந்த பிரதேசங்களாக சிங்களப்பிரதேசங்கள் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் சிங்கள பிரதிநிதிகளே அதிகளவு அமைச்சு பதவிகளை இதுவரை கொண்டிருக்கிறார்கள். இனியும் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் பிரதேசம் அபிவிருத்தி அடையவில்லை என்பதே உண்மை. உண்மை இவ்வாறு இருக்கும்போது அமைச்சு பதவி பெறுவதால் எப்படி தமிழ் பிரதேசம் அபிவிருத்தி அடைய முடியும் என சிலர் நம்புகிறார்கள்? றோட்டு போடுவது, சிலருக்கு வேலை வாய்ப்பு பெறுவதுதான் அபிவிருத்தி என்றால் ஆங்கிலேயர் ஆட்சியிலேயே இவை எல்லாம் கிடைத்தனவே. பேசாமல் அவர்களின் கீழ் அடிமையாக இருந்திருக…
-
-
- 2 replies
- 492 views
-
-
டிரான்ஸ்னிஸ்ட்ரியா பகுதிக்குள் கிரனேற் லோஞ்சர் தாக்குதல்கள் ரஷ்யா - உக்ரைன் யுத்தம் மூன்றாம் நாட்டுக்கு விரிவு உக்ரைன் எல்லையோரம் மோல்டோவா வுக்குள் அமைந்துள்ள டிரான்ஸ்னிஸ்ட் ரியா பிராந்தியத்தில் திங்கள், செவ்வாய் இரு தினங்களும் அடுத்தடுத்துத் தாக்கு தல்கள் நடந்திருக்கின்றன.மர்மமான விதத்தில் கிறனேட் லோஞ்சர்கள் மூலம் நடத்தப்பட்ட அத் தாக்குதல்களில் ரஷ்யா வின் ஒளி,ஒலிபரப்பு சேவையை வழங்கு கின்ற அன்ரனா கோபுரங்கள் சேதமடைந் துள்ளன. ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சி அரசினால் நிர் வகிக்கப்படுகின்ற டிரான்ஸ்னிஸ்ட்ரியா வின் பாதுகாப்புப் பணிமனை ஒன்றும் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளது. இத் தாக்குதல்களை அடுத்து மோல்டோவா அரசு அதன் பாதுகாப்புச் சபையைக்…
-
- 2 replies
- 746 views
-
-
இலங்கையை ஈழமென்றே முன்பு அழைத்தனர்.
-
- 2 replies
- 1.7k views
-
-
மணி(யம்)வீடு ——————— வந்து வரைபடம் கீறி வடிவாய்க் கட்டிய வசதியான வீடு ஹோலின் நடுவே குசினி குசினிக்கடுத்து குளியலறை பேசிய படியே பெரியறை எங்கோ சின்னறையானது நீரும் நெருப்பும் மேலும் கீழும் பாரும் இது பழுதாகலாம் யாருமொரு சாத்திரி பார்த்தால் பறவாயில்லை பக்கத்து வீட்டவர் பலமுறை சொன்னார் மூன்று கோடி முழுதாய் முடிந்ததாம் கடைசிமகன் பிரான்சும் கனடா மகளும் கடைமணியத்தார்க்கு கட்டிக்கொடுத்த வீடு குடிபூரல் என்று குடும்பத்தோடு வந்து கூத்தும் கும்மாளம் ஆறறை மேலே ஐந்தறை கீழே வேறறையிரண்டு வெளியில் போறறையெல்லாம் போக்கிடம் தொடுப்பு விளக்குகள் பற்றி விளக்கவே வேண்டாம் ஏறினால் எரியும் இறங்கினால் அணையும் …
-
- 2 replies
- 777 views
-