கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
-
கவிதையோடு வாழ்பவனும் கவிதையாக வாழ்பவனுமே கவிஞன் & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்
-
- 233 replies
- 43.5k views
-
-
ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 99 எனக்குப் பேய் பிடித்திருக்கிறது அவளுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்கிறார்கள் இருக்கிறதா இல்லையாவென்று தெரியாவிட்டாலும் எனக்கும் பேய் பிடித்திருக்கிறது அவளுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக மட்டுமின்றி, பேய்களுக்குக் கோயில் இல்லை வேளா வேளைக்குப் பூஜை இல்லை அபிஷேகம் அலங்காரம் காணிக்கை உண்டியல் அறவே இல்லை தேர் இல்லை திருவிழா இல்லை சப்பார பவனி கூட இல்லை கடவுளைப் போல் பேய்கள் சாதி மதம் பார்ப்பதில்லை. ஓட்டத்தான் வேண்டுமெனில் கடவுள்களை ஓட்டிவிட்டு பேய்களை ஓட்டுங்கள் ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 98 பாத்திரமறிந்து பிச்சையிடுகிறது தெய்வம் தங்கத்தட்டில் வைரக்கற்களையும் அலுமினியத் தட்டில் சில்லர…
-
- 228 replies
- 34k views
-
-
உன் இதயத்தில் நான் என்னை கொல்ல காதலை நிறுத்து ...!!! நீ கடந்து வந்த பாதை கவிதையானது காதலில் இணைந்த பெற்றோர் காதலை வெறுக்கிறார்கள் காதல் சிரிகிறது ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;780 +++++++++++++++ நான் .. காதலுக்காக ஏங்குகிறேன் ... நீ காதல் சொல்ல தயங்குகிறாய் ... வயிறு பசியில் அழுகிறது ... கண் கண்ணீருக்காக அழுகிறது .. மனம் காதலுக்காக அழுகிறது ... மன காயப்படும் போது ... யார் ஆறுதல் சொல்வார்கள் .. என்று எங்கும் மனம் போல் .. உன்னை தேடுகிறேன் ...!!! + கஸல் கவிதை ++++++++++++++++ இதயத்தை நானே வெட்கப்படுகிறேன் என்னை தூக்கி எறிந்து உன்னை வைத்திருப்பதற்காக .... உனக்காகவே வாழ்கிறேன் எனக்காக நீ எப்போது வாழ்வாய் ...? கடிகாரத்…
-
- 219 replies
- 25.9k views
-
-
நெ - போ கவிதைகள்.. இரண்டு சொல்லுக்குள் (பெயர் - வினை.. பெயர் - பெயர்.. வினை - வினை.. பெயர் எச்சம் - பெயர்.. வினை எச்சம் - வினை.. வினை எச்சம் - பெயர்.. பெயர் எச்சம்.. வினை எச்சம்... இப்படி எல்லாம் கலந்து வரும்) ஒரு கவிதை. அடைப்புக்குள் கவிக்கான கரு அமையும். உங்களின் கற்பனை திறனுக்கு ஏற்ப அது நெடுத்து.. நெடுக்கால போய்க்கிட்டே இருக்கும்... அதனால்... அதுக்கு நெ - போ கவிதைகள் என்று பெயரிடப்படுகிறது. (முழுக்க முழுக்க யாழுக்கு என்று யாழில் ஆரம்பமாகிறது.) நீங்களும் கவிதைகளை வார்க்கலாம்... தொடக்கம்.. கவிதை -1 யாழ்... தொடக்கம்... ( இசையின் தொடக்கம்) கவிதை 2.. சொல்... மழை.. (கவிதை)
-
- 176 replies
- 16.9k views
-
-
மாயபிம்பம் ------------------ ஆரம்பத்தில் தூரத்திலிருந்து அது ஒரு சிலையாக சிற்பமாக தெரிந்தது அப்படித்தான் அது ஒரு அழகு மிளிரும் சிலை என்றும் சொல்லியிருந்தனர் அதுவும் ஒரு காரணம் கொஞ்சம் நெருங்க அது சிற்பம் இல்லை அதில் அங்கங்கே சில செதுக்கல்கள் மட்டும் தெரிந்தது சிலையாக இல்லாவிட்டாலும் வெறும் பாறாங்கல்லாக அப்படியே படுத்தே இருக்காமல் செதுக்கல்கள் இருக்குதே இதுவே இந்நாளில் அரிது என்று இன்னும் இன்னும் நெருங்க பூமியுடன் தோன்றிய அதே கல்லுத் தான் இதுவும் என்று புரிந்தது.
-
-
- 2 replies
- 8.2k views
- 1 follower
-
-
இருள் கலந்த சாலையில் ஒரு சிறு வளைவில் எனக்கான மரணம் இன்று காத்திருந்தது ஒரு கணப் பொழுதில் தீர்மானம் மாற்றி இன்னொரு நாளை குறித்து விட்டு திரும்பிச் சென்றது பனியில் பெய்த மழையில் வீதியின் ஓரத்தில் மரணம் காத்திருந்ததையும் என்னை பார்த்து புன்னகைத்ததையும் பின் மனம் மாறி திரும்பிச் சென்றதையும் நானும் பார்த்திருந்தேன் தூரத்தில் ஒலி எழுப்பும் வாகனம் ஒன்றில் அது ஏறி சென்றதையும் ஏறிச் செல்ல முன் தலை திருப்பி மீண்டும் என்னை பார்த்ததையும் நான் கண்டிருந்தேன் எல்லாக் காலங்களிலும் ஏதோ ஒரு புள்ளியில் நானும் அதுவும் அடிக்கடி சந்திக்க முயல்வதும் பின் சந்திக்காது பிரிவதும் அதன் பின் இன்னொரு சந்திப்பிற்காக காத்திருப…
-
- 14 replies
- 7k views
-
-
விண்ணை அளந்திடும் புள்ளினம் போல் மனம் எண்ணிலா எண்ணம் கொண்டு மிதந்திடும்; மண்ணில் சூரியக் வெளிச்சமும் விழு முன்னே கண்ணும் விழித்த கணமே துள்ளி எழ வைக்கும்; திண்ணிய மனதுடன் எண்ணிய கருமத்தை வண்ணமுறச் செய்திடும் துணிவையும் தந்திடும்; தன்னைக் கற்றுணர்ந்து கொண்ட இலட்சியம் உண்மையென நம்பி உழைக்கும் மனிதர்க்கு! *** எழிலினை எதனிலும் கண்டு நயந்திடும் பார்வையும் முழுமையிலா அவனியின் தன்மை உணர் புன்னகையும் அழுக்காறு களைந்து பிறரை வாழ்த்திடும் உள்ளமும் ஆழ்மனம் சொல்லும் வழி விலகாத வாழ்வும் கொள்ள அளவில்லாக் களிப்பில் ஆன்மா முழுமை கொள்ளும்! *** எல்லைகள் தெரியா விரிந்த வான வெளி - ஆங்கே எல்லையாய் உந்தன் மனம் இடும் வேலி. வண்ணங்கள் ஏழு அழகு வானவிலில் - உன் எண்ணக் கனவின் வண்ணங்கள் எண்ணில; க…
-
- 19 replies
- 6.2k views
-
-
உடைப்பு மழைக்காடு வறண்டதென்று வரி புனையும் வண்ணம் சக்கரவாகம் மழை தின்றதெவ்வாறு? எண்ண எரிவுகளில் பினீக்ஸ் பிறப்பு மட்டும் கன்னம் வருடி நின்று கனிவது எங்ஙனம்? பூமி காலடிக்குள் புதைந்து மறைவதாக வானுலகம் வியாபித்து விரிந்தது எக்கணம்? வல்லமையின் பொழுதொன்றை அல்லதென்றாக்கும் வனையப்படாத வினையூக்கி எது? நெருஞ்சின்முட்களை நொறுக்கி சிரிக்கின்ற பூக்களை அள்ளி வந்த காற்றின் முகவரி யாது?
-
- 26 replies
- 6.1k views
-
-
கவிதை ஆர்வலர்களே அடியேன் அறிந்த கவிதை வகைகளும் அதற்கான சிறுவிளக்கமும் அவற்றுக்கு அடியேன் எழுதிய கவிதைகளும் தொடர்ந்து பதியப்போகிறேன். இது தற்கால எதிர்கால கவிதை ஆர்வலருக்கு சிறு தீனி போடும் என நம்புறேன் @ கவிப்புயல் இனியவன் 1) ஹைக்கூ 2) சென்றியு 3) லிமரைக்கூ 4) ஹைபுன் 5) குறள்கூ 6) சீர்க்கூ 7) கஸல் என்பவை முதலில் வருகின்றன
-
- 43 replies
- 5.8k views
-
-
வலிசுமந்த வரிகளுடன் அம்மாவுக்கு மகள் எழுதும் ஓர் மடல். உங்கள் விமர்சனங்களிற்காக https://youtu.be/MsPzmh_uYog
-
- 11 replies
- 5.8k views
-
-
யாத்து யாக்கை தந்தவள் யார் என அடையாளம் தந்தவள் யான் எனும் இருப்பை யனன வலி தான் சுமந்து யாத்த அன்னை.. யாதுமாய் விளங்கி யாவரும் காத்தவள்.. யாரும் அறியா உருவில் காற்றில் கலந்திட்டாள் யாக்கை அழியலாம்..எரியலாம் யாதும் நிறைவாய் அம்மா யாரும் அழிக்கா நினைவாய் நிலைப்பாய்...!! அன்னையின் ஈடினையற்ற நினைவுகள் என்றும் வாழும்.. யாதுமாய் விளங்கிய எங்கள் அம்மாவிற்காக.
-
- 45 replies
- 5.3k views
- 2 followers
-
-
பலவருடங்களின்பின்னர் மீண்டும் ஒரு மார்கழி மாதத்தில் ஒஸ்லோ வந்திருக்கிறேன். கொட்டும் பனியும் கடும் குளிரும் என்னை முடக்கிபோட கங்கனம் கட்டியபடி. 1990 ஆண்டு டிசம்பர் மாதமும் இப்படித்தான் இருந்தது. அப்ப நான் நோர்வீஜிய அபிவிருத்தி நிறுவனமான நோறாட் அமைப்பில் பகுதிநேர ஆலோசகராகப் பணியாற்றினேன். நிறைமாதமாக இருந்த மனைவிக்கும் இரண்டு வயசுப் பயனான என் மகனுக்கும் இன்னும் விசா கிடைக்கவில்லை என்கிற கவலை மனசில். அந்த சமயத்தில் எழுதிய கவிதை. இக்கவிதையை எனது நண்பர் பேராசிரியர் ஒய்வின் புக்ளரூட் நோர்வீஜிஜ மொழி ஆக்கம் செய்தார். கவிதை நோராட் சஞ்சிகையில் வெளிவந்தது. குடிவரவு அலுவலக்த்தில் புதிதாக பதவிக்கு வந்திருந்த செல்வி.நினிரொப் அவர்களை இக்கவிதை கவர்ந்தது. அவர் நோர்வீஜிய மொழியாக்கம் செய்ய…
-
- 2 replies
- 5.3k views
-
-
ஒரு முறை பிறந்து பல முறை இறந்து பட்டப் பகலில் பார்வை இழந்து பசியோடு அலைகிறோம் பார்பவன் யாரும் இல்லை போர் ஒன்று வந்து புயல் போல் வீச அங்கும் இங்குமாக அலைகிறோம் ஆற்றில் கிடக்கும் ஆல இலைபோல மனிதப் பிறவியை மதிக்காத இந் நாட்டில் மனிதப் பிறவியே வேண்டாமையா என்று மனது உறுத்துகிறது மறுயென்மம் இருந்தால் பிறப்போம் நல்ல மனிதர்களாக …
-
- 32 replies
- 5.2k views
-
-
அப்பு என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்..! சர்க்கரை வியாதியில்லை சருமத்தில் தொந்தல் இல்லை பக்கத்தில் வாதமில்லை பாழ்பட்ட கொழுப்புமில்லை. கண்கள் விழிக்கூர்மை காதுரெண்டும் பழுதில்லை பற்கள் எல்லாம் பத்திரமாய் பயமற்ற நெஞ்சுரமாய் கைத்தடி இல்லாமல் கால் எழுந்து நடைபயிலும் அப்புவென்று சொன்னால் ஆச்சரியப் படுவீர்கள். கிட்டப் போய் ஒருநாள் கேட்டேன் அவர் வயதை தொண்நூறு தாண்டி தொடப் போறேன் நூறென்றார். அந்தக் காலத்து.. அதிசிறந்த உணவென்றார் வரகரிசி சாமையுடன் வாய்க்கினிய தினைச்சோறு குரக்கன் மா றொட்டி-மீன் கூழ் எங்கள் அமிர்தம் பகல் முழுதும் உடல் உளைப்பு பனாட்டொடியல் பழம்கஞ்சி தூதுவளைச் சம்பல் தும்பங்காய்ப் பிரட்டல் கொவ…
-
- 35 replies
- 4.7k views
-
-
நிராகரிப்பு என்பது வேதனைக்கு உரியது ஆனால் நிராகரிப்பினால் ஏற்படும் அனுபவம் வலிமையானது பல நிராகரிப்புகளில் ஏற்படும் அனுபவங்கள் கற்றலுக்கான வாய்ப்பாகிறது முகிலின் நிராகரிப்பால் மழை உருவாகிறது மழையின் நிராகரிப்பால் மண் ஈரமாகிறது விதை நிராகரிக்கப்படுவதால் நிழல் கொடுக்கும் பெரு விருட்சமாகிறது நிராகரிப்பு என்பது தோல்வியின் கடைசி ஆயுதம் நிராகரிப்பு என்பது உடைந்து போன பின்னும் எழத் துடிப்பது நிராகரிப்பு என்பது உடைந்து போகாமல் இருக்க உள்ளூர எழுந்து மறையும் ஓராயுதத் தோற்றங்களில் ஒன்று யாரோ ஒருவரின் நிராகரிப்பு இன்னொருவரால் நேசிக்கப்படுகின்றது யாரோ ஒருவரின் நிராகரிப்பால் நிராகரிக்கப்பட்டவரின் திறமை உயர் கணிப்புக்குள்ளாகிறது நிராகரிக்கப்பட…
-
- 11 replies
- 4.4k views
-
-
பிறத்தல் என்பது புண்ணியமானதே வாழ்தல் என்பது பாவமானதே இறத்தல் என்பது தவமானதே பாவத்தில் இருந்து விடுபடும் தவமாய் இறப்பினைப் பார்த்தால் இறப்பும் இங்கு மகிழ்வானதே! துன்பத்தில் துவள்வதும் துளிர்ப்பதற்காகுமே தோல்வியால் வீழ்வதும் எழுவதற்காகுமே துவள்வதும் வீழ்வதும் வாழ்வதற்காகுமே என எண்ணித் துணிந்தால் தோல்வியும் இங்கு அழகானதே! துணை வந்த உறவும் தொலைந்து போனாலும் தோள் கொடுத்த தோழமையும் விட்டு விலகிப் போனாலும் நடந்த நினைவுகளோடு கடந்து செல்ல பழகிக்கொண்டால் தனிமையும் இங்கு துணையானதே! துன்பம் என்று ஒன்றும் இல்லையே இங்கு துவண்டு போக தேவை இல்லையே நிஜம் என்று ஏதும் இல்லையே இங்கு உன் நிழலும் கூட உனக்குச் சொந்தமில்லையே! பா…
-
- 4 replies
- 4.2k views
-
-
என்னை நானே வாசிக்கிறேன் என்ற தலைப்பின் கீழ் சின்னச்சின்னதாய் கவிதையில் படையல். இங்கே போர்முகம் இருக்காது...காதல் , நட்பு , சோகம், சுகம், தவிப்பு, அணைப்பு ,அழுகை , கனவு என்று பலதும் பத்துமாக அநுபவமும் இருக்கு அதி உச்ச கற்பனையும் மிதக்கும். வாசியுங்கள் சேர்ந்து அழுங்கள், சிரியுங்கள், என்னைப்போல தவியுங்கள் , காதல் கொண்டு கிறங்குங்கள், நட்பால் அணையுங்கள், சோகத்தில் சுகம் காணுங்கள். கவிதைகளை வாசித்து நீங்கள் குழம்பினால் நான் பொறுப்பில்லை.?
-
- 12 replies
- 4.1k views
-
-
அ ன்பு உள்ளங்களே..... அ ன்பு காலை வணக்கம் .....அ திகாலை எழுத்தவன் ......அ திசக்தி ஆதவ்னையே.....அ ருகில் வரவைப்பான்......!!!அ ன்பினால் ...அ கிலத்தையே வெல்லலாம் ....அ ங்கிகள் தொடக்கம் ...அ ருகில் உள்ள உயிர்வரை ...அ ன்பு செலுத்துங்கள் .....!!!அ ற்புதங்கள் என்பது ....அ திசயம் செய்வதல்ல ...அ ன்புக்கு கட்டுபட்டு ...அ ண்ட சராசரத்தோடு ....அ டக்கமாவதே .........!!!அ ன்று சொன்னதை செய்ததை ....அ ன்றே மறப்பவனே ....அ தி உயர் மனிதன் ....அ தையே நினைத்துகொண்டிருந்தால் ...அ ன்றைய இன்பத்தை இழப்பாய் ....!!!அ ந்தி சாயும் நேரம் ....அ ன்றைய நிகழ்சிகளை ...அ சைபோட்டுபாருங்கள் ....அ ருவருப்பான செயல் எது ...?அ ரவணைப்பு செயல் எதுவென...! @ கவிப்புயல் இனியவன் ஆதவன் துயில…
-
- 30 replies
- 4.1k views
-
-
சரகலை என்பது மூச்சுக்கலை "சரம் " என்பது "மூச்சு"ஆகும். இந்த மூச்சு சூரியகலை, சந்திரகலை, சுழுமுனை, என்று நடைபெறும். இந்த ஓட்டத்தை எம் விருப்பம் போல் மற்றும் பயிற்சியே சரகலை ஆகும். இதை ஒரு குரு மூலம் கற்பதே சிறந்தது. அடியேன் தமிழ்நாடு சித்த வைத்திய வித்தர் S. காந்தி என்பவரிடம் கற்றேன். இதில் என்ன பயன்? என்று நீங்கள் கேட்டால். இன்றைய கொரோனா வுக்கு தற்பாதுகாப்பே இது தான்.. .... பேச்சை குறை மூச்சை பிடி.. எல்லாம் வெற்றி..... .... என்னால் முடிந்த அளவு சுருக்கமா இதை கவிதை வடிவில் முயற்சி செய்கிறேன். தொடர்ந்து பாருங்கள்..... கவிப்புயல் இனியவன்
-
- 15 replies
- 4.1k views
-
-
தாத்தாவுக்கு பேரன் எழுதும் கடிதம்-பா.உதயன் அன்பின் தாத்தாவுக்கு உங்கள் பேரன் எழுதுவது தாத்தா சுகமா தாத்தா எங்கள் வீட்டல் முன்பு போல் யாரும் நத்தார் கொண்டாடுவது இல்லை எங்கள் வீட்டு பூ மரம் பூக்க மறந்து விட்டது தாத்தா அப்பா அம்மா யுத்தம் முடிவு இல்லாமல் தொடர்கிறது நானும் சமரசம் செய்து களைத்து விட்டேன் காலைச் சூரியன் எங்கள் கதவடியில் வந்து கன காலம் ஆகிவிட்டது தாத்தா நத்தார் இம்முறை உங்களோடு கொண்டாட முடியுமா தாத்தா உங்களுக்கு பிடித்தமான காந்தி சிலையை நத்தார் பரிசாக கொண்டு வருகிறேன் தேவன் வருகையை உங்களோடு பாடி மகிழ்வதில் எத்தனை சந்தோசம் தாத்தா எல்லாக் கடவுளுமே சொல்லும் …
-
- 8 replies
- 4k views
- 1 follower
-
-
எடுக்கவோ.....கோர்க்கவோ. அரவக்கொடியோனின் அரண்மனைதனில் பரவித் தொடுத்த முத்தாடை அணிந்து இரவியின் பெயருடை பானுமதியாள் புரவித் தேருடை மன்னனுடன் கரத்தில் தாயக் கட்டைகளோடு உருட்டி ஆடுகின்றாள் சதுரங்கம். அங்கதேசத்து மன்னனாம் கர்ணன் தங்கக் கவச குண்டலத்துடன் பிறந்தோன் இங்கு மாமன்னன் துரியனைக் காணவந்தவன் தங்கையனைய மங்கை வேண்ட --- சதுர் அங்கம் ஆட மஞ்சத்தில் எழுந்தருளி சிங்கம் போலவும் வீற்றிருந்தனன். ஆட்ட சுவாரசியத்தில் மலர்ந்திருந்தவள் இட்ட இலக்கங்கள் இல்லாமலாகி வாட்டமுடன் கட்டைகளை க…
-
- 11 replies
- 4k views
-
-
கவிதையோடு வாழ்பவனும்.... கவிதையாக வாழ்பவனும்.... கவிஞன்........! கண்டதை எழுதுவதும்.... கண்டபடி எழுதுவதும்.... கவிதையில்லை....... கண்ணியமாய் எழுதுபவன்..... கவிஞன்........! காதலால் ............. கவிதை வரும் என்பதை.... காட்டிலும்........... காதலோடு கவிதை...... எழுதுபவன் உண்மை..... கவிஞன்..........! சமூக ...... சீர்திருத்தத்துக்காய்..... கவிதை எழுதுவதைவிட.... சமூகத்திலிருந்து...... சீர்திருந்தி வாழ கவிதை..... கவிதை எழுதுபவன்..... கவிஞன்...........! …
-
- 5 replies
- 3.8k views
-
-
துடிப்பில்லாத இதயமும் சில எலும்புத்துண்டுகளும் துடிப்பில்லாத இதயமும் சில எலும்புத்துண்டுகளும் போர்த்தியிருக்க ஒரு துண்டுத் தோலும் போதும் என்கிறதுமனம் உணர்வெல்லாம் விற்று வெறுமை வாங்கி சாம்பல் வெளியொன்றில்-அது புரண்டிடத் துடிக்கிறது விழி திறந்த வேளைகளில் வெறுமைகள் தேடி பிரபஞ்சம் எல்லாம் அலைந்து - அது சலித்துக் கொள்கிறது போதும்...போதும் என்று ஆர்ப்பரித்து புழுதி புரண்டழுகிறது வர்ணமெல்லாம் சேறுபூசி தூரவெறிந்த தூரிகைகளை தேடியெடுத்து கோபத்தோடு எரிக்கிறது குருடனனான உனக்கு வர்ணம் ஒரு கேடாவென்று- எள்ளி நகையாடி கெக்காளமிட்டுதச் சிரிக்கிறது இந்…
-
- 12 replies
- 3.5k views
-
-
எல்லா இரவுகளையும் போல சில இரவுகள் இருப்பதில்லை வானில் அலையும் ஒற்றைக் குருவியின் துயர் அப்பிய குரலை போல சில இரவுகள் காரணமின்றி துயரால் நிரம்புகின்றன எங்கோ அறுந்து போன ஒரு இழை ஞாபகத்தில் வந்திருக்கலாம் என்றோ காணாமல் போன நண்பனின் குரல் மீண்டும் கேட்டு இருக்கலாம் அல்லது எப்போதோ எவருமற்று தனித்து விடப்பட்டதின் துயரம் தீண்டி இருக்கலாம் புரண்டு படுக்கையில் நிரடிப் போகும் ஒரு நொடி நினைவுத் துளியால் சில இரவுகள் காரணமின்றி துயரத்தில் மூழ்கி விடுகின்றன ரயில் பயணங்களில் இரா வேளையில் குளிர் காற்றிடை பாடும் விழியற்ற பாடகனின் குரலில் வழியும் வேதனையைப் போல இருக்கின்றன இந்த இரவுகள் பின்னிரவொன்றில் விளக்கற்ற வீதி ஒன்றில் விற்று முடிந்து செ…
-
- 12 replies
- 3.5k views
-