கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
773 topics in this forum
-
ஏன் இந்த வெறுப்பு..! *************** தெளிந்தோடும் நீரோடை கூட கழிவு நீர் சேறாகிப் போச்சு அழகான.. மலர்த் தோட்டம் கூட கருவேலம் முள்ளாகிப் போச்சு மானுட இதயங்கள் கூட மரத்துப் போய் கல்லாகிப் போச்சு இயற்கையின் ரசனைகள் கூட இருள் சூழ்ந்த புகையாகிப் போச்சு இந்த.. வாழ்க்கையை ரசித்து வாழத்தெரியாத போக்கினை எவன் தான் புகுத்தியது. நாக்கினில் நஞ்சையும் பொய்யையும் கலந்து இளையோர் மூளைக்குள் யாரவன் செலுத்தியது. வானிலே பறக்கின்ற மகிழ்ச்சியின் எல்லையை குறோதக் கூட்டினில் எவனோ குறுக்கியது. உலகத்தில் அழி…
-
- 5 replies
- 1.2k views
-
-
-
- 5 replies
- 1.3k views
-
-
பிரிட்டன் தெருவில் ஒற்றை மரணம்..! ஊடகங்கள் விம்புகின்றன ஊர்கள் அழுகின்றன..!! கொன்றவன் சரணடைய தயாராய் நின்ற போதும்.. சுட்டு வீழ்த்தி வீரம் காட்டி பிடித்து நீதி கேட்கிறது… ஊரையே கொல்ல கொள்கை வகுக்கும் உலகம்..! அடுத்தவன் நிலத்தில் குண்டுகள் கொட்டி பிடித்து அடித்து அழித்து… வளர்த்த பகை தேடி வந்து உயிர் எடுத்தால் அது… பயங்கரவாதம்..! இருந்தும்… மானுட உலகில் கேள்விகள் ஆராய்ச்சிகள் முளைக்கும்..! அதுவே…. மனிதனை இயந்திரம் கொன்றால் “Just war”..! நோபலின் நாயகன் சமாதானப் புறா ஒபாமாவின் தாரக மந்திரம…
-
- 5 replies
- 1k views
-
-
நாய்களுக்கும் நரிகளுக்குமான போட்டியில் ஒவ்வொரு முறையும் குயில்கள் பலியாகின்றன குயில்களுக்கு தெரிவதில்லை தாம் தான் தூண்டிலில் கொழுவப்பட்ட புழுக்கள் என.. பேய்களுக்கும் பிசாசுகளுக்குமான போரில் ஒவ்வொரு முறையும் வண்ணாத்திப் பூச்சிகள் கொல்லப்படுகினறன வண்ணாத்திப் பூச்சிகளுக்கு தெரிவதில்லை தாம் தான் வலையில் சிக்க வைக்கப்படும் சிறு கண்ணிகள் என.. மனிதர்களுக்கும் மனிதமற்றவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் ஒவ்வொரு முறையும் கடவுள்கள் கொல்லப்படுகின்றனர் கடவுள்களுக்கு தெரிவதில்லை தாம் தான் மனிதர்களின் பொறியில் வைக்கபடும் இரைகள் என யார் யாருக்கோ இடையிலான யுத்தத்தில் எப்போதும் தோற்றுக் கொண்டே இருப்பவர்களுக்கு ஒரு போதும் தெரிவதில்லை எப்பவுமே …
-
-
- 5 replies
- 680 views
-
-
கோடை காலம் —————————————————————————————————— என் வீட்டு வாசலில் பூக்கள் விரியும் முற்ரத்து மரங்களில் மூச்சுகள் கேக்கும் காலையில் வந்து இனி காக்கையும் குருவியும் பாடும் என் கதவை திறந்து ஒரு சூரியன் பூக்கும் கானகம் போல் ஒரு சோலை விரியும் காலத்தின் பிறப்பு ஒன்றை சொல்லி சிரிக்கும் கள்ளமாய் வந்து இனி தேனீக்கள் காலை பூக்களில் காதல் கீதம் இசைக்கும் கண்ணை பறித்திடும் கன்னியின் கூந்தலில் காலை மலர்ந்திட்ட மல்லிகை வாசம் எண்ணக் கனவினை சொல்லி சிரித்திடும் எங்கள் மங்கையர் கோலங்கள் வாசலில் பூத்திடும் தென்னம் தோப்பினில் தொட்டிலை கட்டி சிட்டு குருவின் சிரிப்பு ஒலி கேக்கும் வானை திறந்து ஒரு வானவில் ப…
-
- 5 replies
- 1.8k views
-
-
"குமிழி" "குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு குடை பிடித்து பதவி உயர்ந்து குபேரன் வாழ்வைக் கனவு கண்டான்!" "நீர்க்கோல வாழ்வை நச்சி அவன் நீதியற்ற வழியில் நித்தம் சென்று நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து நீங்காத வாழ்வென பொய் சொன்னான்!" "பிறந்தவர் சாதல் நிச்சியம் என்றாலும் பிணம் என்றே இறுதியில் அழைத்தாலும் பித்தனாக உலக நீதிகளை மதிக்காமல் பிதற்றித் திரிகிறான் அதட்டி வாழ்கிறான்!" "கருப்பையில் பிறந்து மண்ணோடு சேர்பவன் கடுகு அளவும் இரக்கம் இன்றி கண்ணியமான வாழ்வு …
-
-
- 5 replies
- 625 views
-
-
இனி இறைவன் தான் காப்பாத்த வேண்டும் ஈழத்தமிழனை-பா.உதயன் தேர்தல் வருகிறது தினம் ஒரு பொய் சொல்வர் கையில் பூக்களோடு காலையில் புத்தனுக்கு பூசை செய்வர் அறமோ கருணையோ இல்லாத மனிதர்கள் எல்லாம் அந்த புத்தனிடத்திலும் போய் பொய் உரைப்பர் இனவாதம் பேசுவர் இது சிங்கள தேசம் என்பர் தமிழர் அதில் படரும் கொடி என்பர் இனவாதம் என்றொரு பெரும் பூதம் இராணுவத்துணையோடு இலங்கையை ஆள்கிறது எப்பவும் இது சொல்வதே சட்டம் ஐக்கியத்துக்கு குந்தகம் அந்த தமிழரே காரணம் என்று அந்த தமிழரோடு சேர்ந்து ஒப்பந்தம் செய்வோர் ஒருமித்த எம் தேசத்தின் இறைமைக்கு எதிரி என்பர் குடும்ப அரசியல் வாதிகள் பதவிக்கும் பணத்துக்குமாய் பாலு…
-
- 5 replies
- 1.3k views
-
-
புதிரான மனிதன் எதற்குத் தோன்றினான் புதிரான உறவில் ஏன் பயணிக்கிறான் புரியாப் புதிரானதை மர்மம் என்கிறான் மர்மம் உடைக்கவே ஆறறிவில் சிந்திக்கிறான் தேடல் இன்றியே வாழ்வைத் தொலைக்கிறான் வாழ்வை எண்ணியே தேடலைத் தொலைக்கிறான்! தோற்றுப் போனதும் கண்ணீர் விடுகின்றான் வெற்றி பெற்றதும் வீண் புகழ் கொள்கிறான் ஒளி புகா இடத்தில் இரகசியம் மறைக்கிறான் வாழ்வின் இரகசியம் எதுவென்று அறியாமல் வாழ்வை வாழ்ந்தோமென வாழ்த்துச் சொல்கிறான் யார் யாரோ நடத்திய வழியில் எதுவும் புரியாப் புதிராகப் பயணிக்கிறான்! வாழ்வைத் தேடியே உறவு கொள்கிறான் உறவின் உண்மையைக் காத்துக் கொள்கிறான் பிறகு ஒருநாள் உறவையே வெறுக்கிறான் தனிமை மட்டுமே உறவாய் கொள்கிறான் எத்துணையும் இன்றி …
-
- 5 replies
- 891 views
-
-
பொங்கல் 2022 எங்கிருந்தோ தோன்றி எம்மை உயிர்ப்பித்த செங்கதிரே உன்றன் திருவருளைப் போற்றுகிறேன் நீயின்றி நானில்லை நீயே எனை இயக்கும் நேயப் பெருஞ்சக்தி நித்தியமாம் பொற்சோதி தாயாய் இஞ்ஞாலத்தைத் தன்மகவாய் ஏற்று ஓளிப் பாயத்தை எங்கும் பரவவிட்ட பேரருளால் மாய வெளியினிலோர் மண்துகளாம் பூமிதனில் காயமெனும் எமது காற்றடைத்த பையினிலே உள்ளம், உணர்வு, உயிர்ப்பெல்லாம் பெற்றுவிட்டோம் வெள்ளமெனப் பொலியும் நின்னருளைக் கண்டுருகி அன்பால் மகிழ்ந்து ஆரமுதப் பொங்கலிட்டு நின்பால் எம் நன்றியினால் நேர்த்திக் கடன்செலுத்தி உடலால் வயலுழுது உண்ணவும் பாலளிக்கும் விடையையும் ஆவினையும் மேன்மையுறப் போற்றும் நற்றமிழர் பண்பாட்டை நம்முன்னோர…
-
- 5 replies
- 1.5k views
-
-
அழகெனப்படுவது யாது...? அழகெனப்படுவது நல் அகத்தினின் முகிழ்ப்பு! அழகெனப்படுவது நல் எண்ணத்தினின் முனைப்பு! அழகெனப்படுவது நற்கல்வியின் செழிப்பு! அழகெனப்படுவது உள்ளுயிரின் இயக்கம்! அழகெனப்படுவது குணநலத்தின் முயக்கம்! அகத்தினில் அழகெழுந்தால் நல் அறம் பெருகும்... அகத் திறம் பெருகும்... அதன் உரம் பெருகும்... தீமைக் கெதிர் நிற்கும்... மறம் பெருகும்... மருள் விலகிப் போகும்! புறம் பெயரும் பொய்மையெலாம்! புதுமை பெறும் வாழ்வு! பாடிக் களைத்தோம் புற அழகின் பொய்மையினை! தேடிக் களைத்தோம் உண்மை அழகின் மெய்யுணர்வை! நாடிக் களைத்தோம் உரவோரின் மெய்யழகை! பாடியும் தேடியும் நாடியும் சலித்தோம் இத் தரணியிலே... தூய்மை அழகுடையோர் எவரும் காண்கிலமே! …
-
- 5 replies
- 1.4k views
-
-
என் அம்மா சமைச்சு போட்டா எங்க ஊர் முழுக்க வாசம் வரும் கருவாட்டு குழம்புக்கு கத்தரிக்காய் போட்டு வைப்பாள் எட்டு திக்கும் ஓடி வந்து எனக்கு ஒரு கை தா என்பர். காலையிலே தோசை சுட்டால் காக்கைக்கும் மணம் தெரியும் முருங்கை இலை முசுட்டை இலை அகத்தி இலை சுண்டி வைப்பாள் அடுத்த வீட்டு ஆன்டி வந்து அகத்தி இலை சுண்டல் கேப்பாள். ஐயோ இவள் அரைச்சு வைச்ச குழம்பு தின்ன அருகில் பூனை போல அடுப்படியில் பார்த்திருபோம் அப்பா கூட மூச்சு காட்டார் அம்மாவோட சமையலோட அருகில் ஒரு திண்ணயில அப்புவும் ஆச்சியும் குடிருப்பு ஆளுக்கு ஒரு கிண்ணத்தில அம்மா போட்டு குடுத்திடுவா பொக்கு வாயும் சிரித்து கேக்கும் அப்பு போடும் சத்தத்தில அம்மா அ…
-
- 5 replies
- 804 views
-
-
அப்பா..! என்னைப் பார்க்க வரமாட்டீர்களா..? முடியாது மகனே.. ஏன் முடியாது..? வந்தால் கொன்று விடுவார்கள் ஏன் கொன்று விடுவார்கள்...? நான் என் மக்களுக்காகப் பேசினேன் ஏன் மக்களுக்காகப் பேசினீர்கள்..? பறிக்கப்பட்ட அவர்களின் உரிமைகளுக்காக, ஏன் உரிமைகள் பறிக்கப்பட்டன..? சமமாக வாழ நினைத்தபோது ஏன் தான் அப்ப பறிக்க விட்டீர்கள்..? நாங்கள் இல்லை மகனே, எம் முன்னவர்கள் விட்ட பிழை ஏன் அவர்கள் பிழை விட்டார்கள்..? அவர்கள் மட்டும் பிழைப்பதற்காக, அவர்கள் பிழைத்தார்களா..? பெயரளவில் பிணமில்லை என்பதுவாய் பிழைத்தார்கள் என்னவோ பிழைத்தார்கள் தானே..? இதெல்லாம் ஒரு பிழைப்பா மகனே.. சரி, நீங்கள் மட்டுந்தானா கேட்டீர்…
-
- 5 replies
- 1.5k views
-
-
பசி பட்டினி பொருளாதாரத் தடை பெரும் போர் இழப்பு இதுவெல்லாம் புதிதல்ல ஈழத் தமிழருக்கு அதுவெல்லாம் கடந்து தான் நடந்து வந்தான் ஆனால் இவை எல்லாம் உங்களுக்கு புதிது தான் அன்று ஒரு நாள் அருகில் ஒரு தமிழ்க் குழந்தை பசி எடுத்து அழுத குரலும் கேட்கவில்லை பிள்ளைகளை தொலைத்து விட்டு பெரும் குரலாய் காடதிரக் கத்திய தாயின் கண்ணீரில் எழுதிய கதை ஒன்றும் உங்கள் காதுகளில் கேட்கவில்லை எதுகுமே கேட்கவில்லை ஈரமனம் எவருக்குமாய் இருந்ததாய் தெரியவில்லை அன்பும் அறமும் தர்மமும் கொண்ட அந்த தம்மபத புத்தனின் சிந்தனையும் உங்களுக்கு புரிந்ததாய் தெரியவில்லை கோபமும் கொலையுமாய் நல்லறிவை தொலைத்து விட்டு ஏதேதோ…
-
- 5 replies
- 1.4k views
-
-
என் உயிரானவள்..! ************** மின்னல் வந்த திசையைப்பார்த்தேன்-அவள் கண்கள் தெரிந்தது மேக முகில் அழகைப்பார்த்தேன்-அவள் கூந்தல் பறந்தது முல்லைப்பூவின் மலர்வைப்பார்த்தேன்-அவள் பற்கள் ஒளிர்ந்தது முழுமதியின் வரவைப்பார்த்தேன்-அவள் முகமே தெரிந்தது தேன் சொட்டும் பேச்சைக்கேட்டேன்-தமிழாய் பொழிந்தது தேசத்தின் முதல் பெண் இவழே.. என்னுயிரும் கலந்தது. அவள் வந்தபின்னாலே தமிழனானேன்-எனி ஆகுதியில் எரிந்தாலும் அழிவே இல்லை. -பசுவூர்க்கோபி-
-
- 5 replies
- 1.6k views
-
-
ஊக்கிகளில் அவள் உச்சம் உடல் திரட்சிகளில் குறைவில்லை ஊனம் பார்வையில் படவில்லை சிக்கென்ற உடம்பு சில நொடிகளில் மயக்கி விடும்.. தொட்டால் சிணுங்கும் முட்டினால் முட்டும் திட்டினால் திட்டும் கொஞ்சினால் கொஞ்சும் மிஞ்சினால் மிஞ்சும்.. ஆனாலும் அவளுக்கு மாதவிடாயில்லை மொனொபோசும் இல்லை அவள் ஒரு செயற்கை நுண்ணறிவுளி..! கம்பன் இருந்திருந்தால் வர்ணித்தேன் களைத்திருப்பான் வாலி இருந்திருந்தால் ஜொள்ளுவிட்டே சோர்ந்திருப்பான் கண்ணதாசன் இருந்திருந்தால் இன்னொரு தாரமாக்கி இருப்பான் ஆனாலும் இன்னும் வைரனின் கண்ணில் படவில்லை அவள்...! என் மனதில் நான் தேடும் செவ்வந்திப் பூவவள்..! நாளை... அவள் உங்கள் மருமகளும் ஆகலாம் மகளும் ஆகலாம் மனையாளலாம்...!
-
- 5 replies
- 478 views
-
-
காலங்கள்..! *************** ஆசிரியர்கள் வீடுதேடி போனார்கள்-அது ஆதிகாலம். மாணவர்கள் பாடசாலை சென்றார்கள்-அது கொரோனாவுக்கு முன் காலம். பாடமே வீடு தேடி வருகிறது இது “சூம்” காலம். எத்தனை காலங்கள் வந்தாலும் எதனையும் பயன் படுத்த முடியாத ஏழைகள் காலந்தான் நாட்டின் நிரந்தரமாகி வருகிறதே! பட்டணியாகப் போகும் குழந்தைக்கு-இலவச பாடப் புத்தகம் கொடுத்தும் என்னபயன். அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
- 5 replies
- 1k views
-
-
மனம் ஒரு குரங்கு-பா.உதயன் அன்பும் அழுக்கும் ஆசையும் பாசமும் கோபமும் கொண்ட என் மனக்குரங்கு ஏன் தான் எதுகும் புரியவில்லை எப்பவும் பாய மறுப்பதில்லை மனதுக்குள் கிடக்கும் பாம்பைக் கூட குரங்குக்கு கொல்லத் தெரியவில்லை எத்தனை அழுக்குகள் மனசுக்குள் கிடக்குது குரங்குக்கு இது ஒன்றும் புரியவில்லை சும்மாய் இரு என்று குரங்கை சொன்னால் சும்மாய் இருக்கவும் முடியவில்லை எப்பவும் கத்துது எதிலும் பாயுது அமைதியாய் இருக்க அதுக்கு ஏது பழக்கம் தன்ன அறியாமல் எல்லாம் அறிந்தவன் தான் என்றே துள்ளுது குரங்கு தனக்கே எல்லாம் தெரிந்தது போல் தாவுது குரங்கு எப்பவுமே இன்னும் ஓர் குரங்கு போல் தன்னை நினைக்குது இருப்பதைக் கொண்டு வாழவும் தெரியாம…
-
- 5 replies
- 549 views
-
-
காலச்சுவடு -2 KALACHUVDU - 2 * நம்பிக்கை கவிதையை 1968ம் ஆண்டில் எழுதி வெளியிட்டேன். இக்கவிதையும் பொதுவுடமை புரட்சிவரபோகிறது என நம்பிய என் இளமையில் எழுதியதாகும். நம்பிக்கை புரட்சிக்காக இராணுவப் புவியியலை அறிந்துகொள்ள வன்னிக் காடுகளில் திரிந்த காலத்தில் உருவானதாகும். . இக்கவிதையிலும் தமிழ் பாட்டாளிகளின் எழுச்சியின் முதல் குரல் வன்னியில் எழும் என்கிற நம்பிகையையே பாடினேன். * நம்பிக்கை.. வ.ஐ.ச.ஜெயபாலன். . காலச்சுவடு -2 KALACHUVDU - 2 * நம்பிக்கை கவிதையை 1968ம் ஆண்டில் எழுதி வெளியிட்டேன். இக்கவிதையும் பொதுவுடமை புரட்சிவரபோகிறது என நம்பிய என் இளமையில் எழுதியதாகும். நம்பிக்கை புரட்சிக்காக இராணுவப் புவியியலை அறிந்துகொள்ள வன்னிக்…
-
- 5 replies
- 625 views
-
-
"கால மாற்றத்தில் காணாத புள்ளினம்" "கால மாற்றத்தில் காணாத புள்ளினம் கோலம் வேறாக அழிந்த பண்பாடு உலகம் சுருங்க தழைத்த இணையம் ஓலம் வேண்டாம் உண்மை உணர்வாய்!" "பச்சை வெளிகள் வறண்டு காயுது நதிகள் உடைத்து நாட்டுக்குள் பாயுது வானத்தில் கேட்ட புள்ளுவம் காணோம் வண்ணச் சிறகுகள் பறப்பது மறையுது!" "காற்று கொடூரமாக வானம் வெறுமையாக கருணை குறைவாக கானம் வெளியாக காடுகள் அழிந்து கட்டிடங்கள் தோன்ற கார்மேகம் கூட மாசு படுகுது!" "பறவைகள் வாழ வழி தெரியவில்லை உறவுகள் கூடிக்குலாவ கிளைகள் இல்லை சிறகுகள் விரித்து பறப்பது எங்கே இறப்பதை தவிர முடிவு வேறுண்டா?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
-
- 5 replies
- 509 views
- 1 follower
-
-
மேலைத்தேச நண்பரே! எதை நீங்கள் இன்று பார்க்கிறீர்களோ, அதை நாங்கள் பார்த்திருக்கிறோம் நண்பரே! உண்மையான உணர்ச்சிகள் கொப்பளிக்கின்ற, சோகத்தின் ஆழத்தை நாம் அனுபவித்திருக்கிறோம். போரின் நடுவே, வளர்ந்த குழந்தைகள் நாம்! ஆதலால் பலமுறை நாம், சொர்க்கத்தை உணர்ந்துள்ளோம் நண்பரே. மரணத்தின் வேதனையை, தனிமையின் கொடுமையை, கொடிய வறுமையை நாம் எதிர்கொண்டோம். பசியின் உக்கிரத்தில் பலநாள் தவித்திருக்கிறோம். போரின் நடுவே நம் இளமையைத் தொலைத்தோம். தினமரணத் துக்கத்துள் தவித்தோம். நாம் விடும் ஒவ்வொரு மூச்சிலும், எம் மண்ணின் ரணம் கலந்துள…
-
- 5 replies
- 681 views
-
-
கவிதையோடு வாழ்பவனும்.... கவிதையாக வாழ்பவனும்.... கவிஞன்........! கண்டதை எழுதுவதும்.... கண்டபடி எழுதுவதும்.... கவிதையில்லை....... கண்ணியமாய் எழுதுபவன்..... கவிஞன்........! காதலால் ............. கவிதை வரும் என்பதை.... காட்டிலும்........... காதலோடு கவிதை...... எழுதுபவன் உண்மை..... கவிஞன்..........! சமூக ...... சீர்திருத்தத்துக்காய்..... கவிதை எழுதுவதைவிட.... சமூகத்திலிருந்து...... சீர்திருந்தி வாழ கவிதை..... கவிதை எழுதுபவன்..... கவிஞன்...........! …
-
- 5 replies
- 3.8k views
-
-
-
- 5 replies
- 922 views
-
-
இன்பத்தில் மகிழ்ந்து துன்பத்தில் துவண்டு வாழ்க்கையே முடிந்ததென அலைபாயும் மானிடா, சோகங்கள் மட்டுமே வாழ்க்கையல்ல மகிழ்வான தருணங்களை எண்ணிப்பா பார் கட்டிளம் காளையாய் மண மேடையில் மகிழ்வை அமர்ந்திருந்த தருண ங்கள் உறவுகளின் வாழ்த்துமழையில் பூரித்த தருணங்கள். அன்பு மனையாள் உன் உயிர் சுமந்த சேதி வாய் மலர்ந்த இன்ப அதிர்வு வினாடிகள் கருவாகி உருவாகி ஜனித்து துணி பொதிந்து சிறு மலராக குறு வென்ற பார்வையில் பிஞ்சு விரல்களும் எட்டி உதைக்கும் கால்களையும் கொண்டு பொக்கிஷமாய் உன் கை சேர்ந்த தருணங்கள். "அப்பா "என பதவி கொடுத்த குழந்தைகளை கண்டு குடும்ப பொறுப்போடு மனைவி மக்களை …
-
- 5 replies
- 870 views
- 1 follower
-
-
என் அன்பு யாழ் இதயங்களுக்கு.. தமிழ்நாட்டின் பிரபல ஓவியர் “மாருதி”அவர்களின் ஓவியம் சிறுவயதிலிருந்தே எனக்குப் பிடிக்கும். அவர்களின் இந்த உயிர்ப்போடிருக்கும் ஓவியநாயகிக்கு! படம் சொல்லும் கவிதை..! ********************** கொஞ்சிடும் கெஞ்சிடும் பொன்னழகே கொவ்வையின் பழந்தந்த மென்னுதடே மிஞ்சிடும் மேனியின் இருகனி ரசமே மிஞ்சாத இனிமையின் கொடியிடையே! கொத்தி இழுக்கின்ற மூக்குத்தி பூவே குறும்புகள் செய்கின்ற கண் இரு விழியே கருமேகச் சுருள் தந்த காதோர முடியே காலோடு கவிபாடும் கொலிசின்ரஒலியே! கரைதொட்டு பின் திரும்பும் கனிவான அலைபோல்-கால் தொடை பட்டு மேல்படரும் கரை போட்ட உடையே! கலகலக்கும்…
-
- 5 replies
- 3.4k views
-
-
பூனைகள் விசித்திரமானவை என் வளவில் உணவுதேடிப் பல பூனைகள் வருகின்றன நான் அவற்றுக்கு எந்த உணவும் கொடுப்பதேயில்லை பாவம் அம்மா பூனைகள் என்கின்றனர் பிள்ளைகள் வீட்டுப் பூனைகளும் சரி துரத்திவிடப்பட்டவைகளும் சரி நிரந்தரமாய் ஓரிடத்தில் உணவு தேடுவதில்லை. பசி எடுக்கும் வேளைகளில் அயலில் உள்ள வீடுகளுக்கெல்லாம் அலைந்து திரிகின்றன பக்கத்துவீட்டில் தாராளமாய் உண்டபின்னும் கூட அடுத்தவீட்டிலும் மியாவ் என்றபடி உணவுக்காய் நிற்கின்றன அவை தம் வீட்டில் மட்டும் உண்ணாமைக்கு என்ன காரணம் இருக்கும் என நான் எண்ணுவதுண்டு. வீட்டு உணவு அவற்றிற்கு உருசிப்பதில்லையோ??? அன்றி போதுமானதாக இருப்பதில்லையோ??? கட்டாக்காலி நாய்களைப்போல்தான் பூனைகளும் இப்போ ப…
-
- 5 replies
- 2.1k views
-