Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதைக் களம்

கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. நான் செய்யும் குறும்புகளுக்கு அளவே இருக்காது அப்படி குழப்படி சிறுவயதில் ஒவ்வரு நாளும் காயம் இல்லாமல் இரத்தம் சிந்தாமல் வீடு போனது கிடையாது அப்படி விளையாடி வரும் காயங்களுக்கு மருந்து போட்டு விடுவதில் இருந்து சுடுதண்ணீ ஒத்தனம் கொடுத்து பழைய நிலைக்கு வரும்வரை கிழவி உறங்காது .சும்மா பஞ்சி பட்டு படுத்து இருந்தாலே கிழவி குழற தொடங்கிடும் ஒருநிமிடம் சும்மா இருக்க மாட்டான் இன்னும் எழும்பாமல் படுத்து இருக்கிறான் என்ன எண்டு கேளண்டி மகளே என்று அம்மாவை நச்சரித்து எடுக்கும் . மாதுளம் பழம் மரத்துக்கு மாதுளைக்கு அணில் கடிக்காமல் அங்கர் பை எடுத்து கட்டி விடுவா பழம் நல்லா முற்றிய பின் பை இருக்கும் பழம் இருக்காது நானு ஆட்டையை போட்டு பள்ளிக்கூடம் கொண்டு போயிடுவன் ,அந்த நேரங்களில் யாரவது…

  2. மீண்டும் சிறுகதை எழுத ஆர்வம் வந்துள்ளது. இக் கதை எனது 20வது வயதில் எழுதப்பட்டது. கருத்தியல்ரீதியில் பிழைகள் இருக்கலாம். சரி பிழைகளை சுட்டிக்காட்டடினால் புதிதாக மீண்டும் எழுத முயற்சிக்கும் எனக்கு உந்துசக்தியாக இருக்கும். நன்றி உறவுகளே. மறுபக்கம் காலை 5.00 மணி துயிலெழுப்பி தனது கடமையைச் சரிவரச் செய்தது. துடித்தெழுந்த காயத்திரி மேலும் 10 நிமிடங்களுக்குத் துயிலெழுப்பியின் நேரத்தை அதிகரித்து வைத்து விட்டு இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்தாள். நாம் வேகமாக இயங்குகிறோமோ இல்லையோ சுவிஸ் நாட்டுக் கடிகாரங்கள் வேகமாகத்தான் தமது கடமையைச் செய்து கொண்டிருக்கின்றன. அடுத்து 10 நிமிடமும் 10 வினாடிகளாகக் கரைய, துயிலெழுப்பி மீண்டும் அலறியது. காயத்திரிக்கு இன்றைக்கு வேலைக்குப் போகாமல் …

    • 9 replies
    • 2.4k views
  3. Started by ஜீவா,

    ஆளையே அடையாளம் காணமுடியாதளவுக்கு பயங்கர இருட்டு, கையில் அரிக்கன் லாம்புடன் அருகில் இருக்கும் வைரவர் கோயிலுக்கு தனிய நான் போய்க்கொண்டிருக்கிறேன். பென்னாம் பெரிய புளியமரம் அது கீழே ஒரே ஒரு சூலம் அதற்கு நாற்புறமும் சூழ சீமெந்தால் சுற்றிக்கட்டிய அரைச் சுவர். பனங்குற்றியாலான தூண், ஓட்டுக்கூரை நேர் எதிரே ஒற்றைப்பனை மரம் ஒன்று. கீழே ஒரு நடுகல் அது காளியின் சிலை. இது தான் அந்தக் கோயிலுக்குரிய அடையாளம். சற்று அகன்ற ஒற்றையடிப் பாதையும், சுற்றி வர பனங்கூடலும்,சிறுபற்றைக்காடுகளும் ஆங்காங்கே தெரியும் சிறு வீடுகளும் பகலில் கூட அமானுஸ்யத்தை உணர்த்தும். அரிக்கன் லாம்பை வைத்து விட்டு வைரவருக்கு விளக்கை ஏற்றிவிட்டு காளிக்கும் கற்பூரம் ஏற்றி விட்டு வருகிறேன். என்றைக்குமில்லாதவாறு அன்ற…

  4. நெரிசலில் ஓர் மோகம் மத்திய இலண்டனில் உள்ள தலைமை அலுவலகத்தின் பாரிய சுழல் கதவுகளினூடாக வெளியே வந்தபோது டிசம்பர் மாதக் குளிர் வேகமான காற்றினால் சுழன்றடித்து ஊசிகளாக காது மடல்களினூடு உள்ளிறங்கிக் குத்தத் தொடங்கியது. அவசர அவசரமாக ஜக்கற்றின் zipபைக் கழுத்து வரை உயர்த்தி பொத்தான்களை பூட்டிக்கொண்டு லண்டன் பிரிட்ஜ் ரியூப் (சுரங்க ரயில்) ஸ்ரேசனை நோக்கி விரைந்து நடக்கும்போது அருகிலிருந்த அதியுயர் கட்டடத்தில் இருந்த கடிகாரம் ஐந்துமுறை அடித்து ஓய்ந்தது. நெரிசல் மிகுந்த பயணங்களைத் தவிர்க்க வேண்டுமென்று காலையில் புறப்படும்போது நினைத்திருந்தாலும் அலுவலகத்தில் முக்கியமான மேலாளர்களுடன் நடந்த கூட்டம் விரும்பியமாதிரி குறித்த நேரத்திற்கே முடிந்திருக்கவில்லை. அலுவலக வேலைகள் முடியும் ஐந்து ம…

  5. வித்தியாசமான வீரன் கப்டன் ஊரான் அல்லது கௌதமன் அழியாச்சுடர் ஓவ்வொரு குழந்தையும் மண்ணில் பிறக்கின்ற போது அந்தக் குழந்தையைப் பெற்ற குடும்பத்தின் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் வித்தியாசமானவை. ஒவ்வொரு அம்மாக்களும் உலகின் பெருமைகளையெல்லாம் தன் பிள்ளை பெற்றுச் சிறப்படைய வேண்டுமென்றே கனவுகள் காண்பார்கள். அத்தகைய கனவுகள் ஊரான் அல்லது கௌதமனின் அம்மாவுக்கும் நிச்சயம் இருந்திருக்கும். 2அக்காக்களுக்குப் பிறகு திரு.திருமதி.அடைக்கலம் தம்பதிகளுக்கு 01.05.1974 அன்று பிறந்தான் இன்பசோதி. அந்தக் குடும்பத்தின் ஒரேயொரு ஆண் பிள்ளையும் அவனே. இன்பசோதியின் பிறப்பு வீட்டாருக்கு மட்டுமல்ல ஒருநாள் தாய்நாட்டிற்கும் பெருமை சேர்த்துப் புலியாவான் என்று யார் அன்று நினைத்திருப்பார்கள் ? இன்பசோதிய…

    • 5 replies
    • 1.3k views
  6. சாவை வென்ற தளபதி லெப்.கேணல்.விமலன்/அன்பழகன் லெப்.கேணல் அன்பழகன் (பலாலி – கைலாயபிள்ளை ஜெயகாந்தன்) விவசாயமும் கடல் வளமும் மிக்க அழகான நிலம் பலாலி. இராணுவ கேந்திர மையமாக அறியப்பட்ட பலாலியென்ற கிராமத்தை உலகில் அறியாதவர்களே இருக்க முடியாது. இந்தப் பலாலி இராணுவ முகாமானது இலங்கையின் பிரதான முகாம்களில் ஒன்றாகவும் இலங்கை இராணுவத்தின் யாழ் மாவட்டத்துக்கான வழங்கலுக்கான பிரதான தளமாகவும் அமைந்தது. யாழ் கோட்டை முகாம் புலிகளால் முடக்கப்பட்ட நேரத்தில் கோட்டை இராணுவத்திற்கான உணவு முதல் அனைத்து வழங்கலுக்கும் பலாலியே தளமாகியிருந்தது. எத்தனை வசதிகளை வளத்தை பலாலியில் இருந்த படைகள் கொண்டிருந்தாலும் புலிகளின் உறுதியின் முன்னால் எல்லாமே தூசாகிப்போனது தான் விடுதலைப்புலிகளின் வெற்றியின் …

    • 10 replies
    • 2.8k views
  7. வெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை. விடுதலை வரலாற்றில் பலருக்கு விலாசம் இருந்ததில்லை விளம்பரம் இருந்ததில்லை முகம் இருந்ததில்லை முகவரி இருந்ததில்லை. ஏன் அவர்களது முடிவுகள் கூட யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் அவர்களின் ஆளுமையின் இயங்கு சக்தி மட்டும் என்றென்றும் உயிரோடு வாழ்ந்து பல்லாயிரம் பேரை இயக்கிக் கொண்டிருக்கும் பெரும் தீயாகி வியாபித்திருக்கும். இத்தகைய அடையாளங்களுக்குச் சொந்தக்காரனாக இருந்த ஒருவர் றட்ணம் என்ற இயக்கப் பெயரைக் கொண்ட தெய்வேந்திரம் ஜெயதீபன் என்ற இயற்பெயரோடு நெருப்பின் சக்தியாக இருந்ததை காலம் ஒரு போதும் அடையாளப்படுத்தியதில்லை. 1974ம் ஆண்டு உரும்பிராய் மண்ணில் தெய்வேந்திரம் தம்பதிகளின் 2வது குழந்தையாகப் பிறந்த ஜெயதீபன் ஒரு சாதா…

    • 10 replies
    • 7k views
  8. புன்னாலைக்கட்டுவன் பெற்ற புலிவீரன் மேஜர் தமிழரசன் (டொச்சன்) நவம்பர் 15, 2013 | ஒரு போராளியின் குருதிச் சுவடுகள். Edit Post (இயற்பெயர் - கந்தசாமி.ஜெயக்குமார்) வீரப்பிறப்பு- 21.06.1966 – வீரச்சாவு – 24.11.1992 வடக்குப்புன்னாலைக்கட்டுவன் 80களில் விடுதலைப்புலிகளை ஆதரித்த ஊர்களில் ஒன்று. இங்கு பல ஆரம்பகால விடுதலைப்புலிகளின் வரலாறும் பலரது வரலாற்றின் வேர்களும் பரவியிருக்கிறது. தலைவர் பிரபாகரன் வந்து தங்கி வாழ்ந்து அவரைப் பாதுகாத்த ஊர்களில் வடக்குப்புன்னாலைக்கட்டுவனும் ஒன்று. தலைவருடன் வாழ்ந்த போராளிகளில் ஒருவர் தலைவர் நன்றியுடன் ஞாபகம் கொள்ளும் ஒருவர் பற்றி ஒருமுறை உரையாடிய போது சொன்னவை :- புன்னாலைக்கட்டுவனில் தலைவரை பாதுகாத்த குடும்பங்களில் ஒன்று சுவிஸ் குல…

  9. எனது சிறுவயது முதல் என்னை அதிகமா நேசித்த மனிதர்களில் எனது அப்பாச்சி முன்னணியில் உள்ளார் அம்மாவை விட அவர் மேல பாசம் அன்பு கொள்ளை பிரியம் எனக்கு ஒரு நெடியெனும் என்னை காணமல் இருப்பது அப்பாச்சிக்கு எதோ தொலைத்து விட்ட சோகம் இருக்கும் எங்க போட்டான் இன்னும் காணவில்லை சுற்றிக்கொண்டு வருவான் ஆளை காணம் செக்கல் பட்டுடு விளக்கு வைக்கும் நேரம் ஆகுது இவனை காணம் என தனியா விட்டின் திண்ணையில் இருந்து கதைப்பார் . அம்மா பேசியபடி இருப்ப அவன் வருவான் நீங்க வந்து தேத்தண்ணிய குடியுங்க எங்க போகபோறான் எங்காவது பெடியலோடா நிப்பான் இப்ப வந்திடுவான் என்று சொன்னாலும் அப்பாச்சி கேளாது நாலுதரம் ரோட்டுக்கு வந்து எட்டி பார்க்கும் சிலவேளை அப்பொழுதுகளில் நான் வருவேன் ......'என்ன கிழவி ரோட்டில யாரை சயிட…

  10. மலரும் நினைவுகளில் மறக்காத மனிதர்கள் அங்கம் - 1 13வருடங்கள் கழித்து பிறந்த ஊரையடைந்திருந்தாள். பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட எல்லைக்குள் யாரையும் அனுமதிக்கமாட்டார்களென்ற உறவினர்களின் சொல்லையும் மீறி தான் பிறந்த வீட்டையும் நடந்த தெருவையும் பார்க்கப் போவதாய் அடம்பிடித்தாள். அவள் நடந்து திரிந்த நிலத்தைப் பிள்ளைகளுக்கு காட்ட வேணுமென்ற கனவோடு போயிருந்தவளுக்கு உறவினர் சொன்ன காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒற்றையடிப்பாதையளவு தான் போகலாம்...கொஞ்சம் அரக்கினாலும் மிதிவெடியள் ஏன் இந்த வில்லங்கத்தை குழந்தையளோடை ? அம்மா புறுபுறுத்தா. அவள் தனது முடிவை மாற்றுவதாக இல்லை. கட்டாயம் பிறந்த வீட்டைப் பார்க்க வேணுமென்றே நின்றாள். கடைசியில் அவள்தான் வென்றாள். அன்று …

    • 19 replies
    • 3.8k views
  11. அவனுடைய கையில் UK வீசா அலுவலகத்தால் கொடுக்கப்பட்ட ஆவண உறை இருந்தது. அந்த மூடிய உறைக்குள்தான் வீசா கிடைத்திருக்கின்றதா இல்லையா? என்ற அவனதும் அஞ்சலியினதும் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் முடிவும் அடங்கியிருந்தது. ஒருவித படபடப்போடு அதைத் திறந்தவனுக்கு அதிர்ச்சியுடன் கூடிய மிகப் பெரும் ஏமாற்றமே காத்திருந்தது. சில அநாவசியக் காரணங்களை வீசா நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களாகக் கூறி அதை மூன்று பக்கத்தாள்களில் விளக்கமாகக் குறிப்பிட்டிருந்தனர். 'அஞ்சலியுடன் கூடிய விரைவில் சேரப்போகிறோம்' என்ற கனவில் இருந்தவனுக்கு.... 'அது இப்போதைக்கு இல்லை' என்பது... மிகப்பெரும் ஏமாற்றத்தையும் கவலையையும் கொடுத்திருந்தது. இவன் தன்னை நினைத்து கவலைப்பட்டதைவிட... அஞ்சலி இந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள…

  12. மூன்றாவது காலை விடிந்திருக்கின்றது. காய்ச்சல் கொஞசம் குறைந்திருக்கிறது. இன்னமும் எழுந்து நிற்க முடியவில்லை. எனது அணியோடு தொடர்பில்லை. திசையும் சரியாகத் தெரியவில்லை. சாதுவாகப் பசிக்கிறது. மனிதநடமாட்டம் மருந்திற்கும் இல்லை. நகர்ப்புற மக்கள், வேடர்களைக் கதைகளிற் தான் கேட்டிருப்பர். ஆனால் கதிர்காமத்திலிருந்து தென்தமிழீழம் வழியாக வன்னியை இணைக்கும் பிரதேக்காடுகளிற்குள் வேடர்கள் இன்னமும் வாழ்கி;றார்கள். அவர்களை முன்னர் நான் கண்டுள்ளேன் என்பது மட்;டுமன்றி, ஒரு வேலைத்திட்டத்தில் வேடர்களோடு வேடர்களாக நான் எதிரி நாட்டிற்குப் பயணித்தும் உள்ளேன். என்னால் வேடர்போன்று பேசமுடியும். வேடர்களோடு பேசமுடியும். ஆனால் நான் பேசுவதற்கு வேடர் எவரையும் தற்போது காணவில்லை. காடு முற்றாக விழித்திரு…

  13. எனக்கு லண்டன் நிலக்கீழ்த்தொடருந்தில் பயணம் செய்வதுதான் பிடிக்கவே பிடிக்காத விடயம். ஆனாலும் சிலவேளைகளில் பயணம் செய்தே தீரவேண்டிய நிர்ப்பந்தம். ஏறிக் கொஞ்ச நேரத்திலேயே பார்த்தவற்றை மீண்டும் மீண்டும் பார்ப்பதனால் தூக்கமும் விரைவில் வந்துவிடும். இதற்கு முன்னொருமுறை பயணம் செய்தபோது தூக்கம் எப்படித்தான் என்னைத் தழுவியதோ கண்விழித்துப் பார்த்தபோது நான் இறங்கவேண்டிய இடம் கடந்து பதினைந்து நிமிடம் ஆகியிருந்தது. பிறகென்ன அடுத்த தரிப்பிடத்தில் இறங்கி மற்றத் தொடருந்து பிடித்து வீடுவந்து சேர ஒரு மணிநேரம் தாமதம். இன்று தூங்காது எப்பிடியாவது சரியான நேரத்துக்குப் போய்ச் சேர வேண்டும் என்று மனதுள் தீர்மானித்தபடி சுற்றுமுற்றும் பார்க்கிறேன். பலர் செய்தித்தாள்களில் மூழ்கிப்போய் உள்ளனர். ஒர…

  14. நினைவெல்லாம் நீயே.. 1996ம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த நேரம், வழமைக்கு மாறான நாய்களின் ஊளையும், புலன்களுக்குப் புலப்படாத இயந்திரங்களின் இரைச்சலும் கலவரத்தையே எமக்குள் உருவாக்கி விட்டிருந்தது. பரீட்சை எழுதும் மனநிலையில் நாம் யாரும் இருக்கவில்லை. ஆம்,வடமராட்சியில் இலங்கை ராணுவம் நுழைந்த நாள் அன்று. பட்டாம் பூச்சிகளாய் பறந்தவர்களின் வாழ்வெலாம் திறந்தவெளிச் சிறைகளுக்குள் அடைபடப்போகிறது என்பதைக் கட்டியம் கூறிய நாள். தினம் தினம் நடக்கும் சுற்றிவளைப்புகளும், தேடுதல் வேட்டைகளும், இராணுவ ஊர்திகளின் அணிவகுப்பும் இயல்வாழ்க்கையை முற்றிலும் சிதைத்திருந்தது. அப்படியான ஒரு நாளில் அறிமுகமானவர் தான் ராஜு அண்ணா. மாமி வீட்டுக் கிணற்றில் குளித்த…

  15. நம்ம ஊருல இரண்டு பேர் இருப்பாங்க எப்பவும் அவங்களால் ஒரே சிரிப்பு தான்... மற்றவனை ஏமாற்றுவது இவங்களின் வேலையா இருக்கும்.. ஒருநாள் பனையை பார்த்து இருவரும் மிக கவனமா அவதானமா பேசிக்கொண்டு இருந்தாங்கள்.. அக்கம் பக்கம் உள்ளவனுக்கு எல்லாம் குழப்பம் என்ன இப்படி கதைக்குறாங்க என.. பக்கத்தில் போய் பார்த்தா ஒன்னும் இல்லை.. அப்பொழுது முதல் ஆள் கேட்டான் எப்படி ஐந்து காலால் நடக்குது என்று.. மற்றவன் கேட்டான் ஓம் ஒரு காலை தூக்கிட்டு ஊருது பாரு எறும்புக்கு எவ்வளவு துணிவு என.. சுற்றி நின்டவனுக்கு அனைவருக்கும் கடுப்பாகும்.. பேசிட்டு போயிடுவாங்க அப்படி அவங்களின் அலப்பரை கொஞ்சம் இல்லை . ஒரு முறை இருவரும் சைக்கிளில் தூரம் பயணம் போயிட்டு இருந்தாங்க.. அப்பொழுது காட்டு பாதையில் போனவர்களுக்…

  16. Started by வாலி,

    புலிகளை வன்மையாகச் சாடுவேர் பற்றி நினைக்கையில் எனது பெரிய தந்தையார்தான் நினைவுக்கு வந்து போவார். முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவாளராக இருந்தவர். புலிகளின் காலத்தில் எதுவுமே அவர்களுக்கு எதிராகப் பேசமாட்டார். ஒருமுறை வவுனியாவுக்குச் சென்று வந்ததன் பின்னர். புலிகளுக்கெதிராக வீட்டில் கடுமையாக பேசத் தொடங்கிவிட்டார். ஆனால் (ஒன்றுவிட்ட)அண்ணன்மார் இருவரும் புலிகளின் பயங்கர ஆதரவாளர்கள். இதனால் அடிக்கடி அவர்களுக்குள் கொள்கைரீதியான முரண்பாடுகள் வரும். சிலவேளகளில் பேசாமல் கூட இருப்பார்கள். பெரியப்பாவின் மாற்றம் குறித்து சின்னண்ணாவும் நானும் ஆராயத் தொடங்கினோம். கடைசியில் எங்களுக்குத் தெரிந்த ஆசிரியர் ஒருவர்,வவுனியா செல்லும்போது புலிகளின் செக்பொயின்டில் பெரியப்பாவுக்…

  17. மாலை 5 மணி காவல்துறைக்கு ஒரு அம்மா வருகின்றார். நானும் எனது பெண்பிள்ளையும் பூங்காவுக்கு போனோம். மகள் 5 வயசு விளையாடிக்கொண்டிருந்தாள். நான் (6 மாதக்கர்ப்பிணி) சற்று அயர்ந்து விட்டேன். கண் முழித்துப்பார்த்தால் என் பிள்ளையைக்காணவில்லை. ஐயோ ஐயோ உடனே தேடுங்கள் கண்டு பிடியுங்கள் எல்லோரும் உதவுங்கள்............... இப்படித்தான் இந்தக்கதை ஆரம்பமாகிறது............. நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறை அவசரப்பிரிவுகள் அத்துடன் அந்த ஊரில் ஒரு அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு தேடுதல் தீவிரப்படுத்தப்படுகிறது............ தொடரும்.....

  18. நாகரிகத்தின் அனைத்து விழுமியங்களையும் கூவிக்காட்டும் கனவான்களும் சீமாட்டிகளும் நடந்துகொண்டிருந்த ஒரு மதியப்பொழுது. ரொறன்ரோவின் டவுன்ரவுன் தனக்கேயான சுறுசுறுப்புடன் துடித்துக் கொண்டிருந்தது. கூட்டத்தோடு கூட்டமாக கற்பனைகளில் நடந்து சென்ற எனக்குப் பாதையோரம் ஒரு புதினம் காத்திருந்தது. சாக்கு விரித்து அமர்ந்திருந்த ஒரு பிச்சைக்காரன். அழுக்கு உடுப்பு, பாசிபடர்ந்த பல்லு, ஒரு சாதாரண ரொறன்ரோ நகரப் பிச்சைக்காரன். ஆனால் அவனருகில் இரு நூல்கள் இருந்ததே புதினம். ஓன்று ஹேர்மன் ஹெஸ்ஸியின் 'சித்தார்த்தா', மற்றையது றே பிறாட்பறியின் 'பரனைற் 451'. பிச்சைக்காரனோடு நூல்களைச் சமூகம் சம்பந்தப்படுத்திப் பழக்கியிராததால் அக்காட்சி எனக்குப் புதினமாக இருந்தது. புதினத்தைக் கண்டால் நின்று பார்க்கும்…

    • 13 replies
    • 1.4k views
  19. முதற்பாகத்தைப் பார்வையிட.... http://www.yarl.com/forum3/index.php?showtopic=130316 ஏதோ, ஒரு காரணத்தினால், அல்லது பல காரணங்களினால், அவன் வாழ்க்கையில் எத்தனையோ பெண்கள் குறுக்கிட்ட போதும், நிரந்தரமான வலிகளோ, வடுக்களோ இன்றி, இது வரை அவனால் விலகிச் செல்ல முடிந்திருக்கின்றது! அப்படியானால், காதலே சந்திரனுக்கு ஏற்படவில்லையா? என்ற கேள்விக்கும் அவனால் பதில் சொல்ல முடியாது! ஒவ்வொன்றிலும் இனம், மதம், மொழி என்று பல தடைகள் குறுக்கிட்டன!அவனைக் காதலிப்பதாகக் கூறியவர்கள், எவருக்கும் காதலுக்காக, அவற்றைக் கடந்து செல்லும் தைரியம் இருக்கவில்லை! அவற்றைக் கடந்து வரத் துணிந்த ஒருத்தியையும் விட்டுவைக்கக் காலனுக்கும் கருணையில்லை! நீ விரும்பும் பெண்ணிலும் பார்க்க, உன்னை விரும்பும் பெ…

  20. முற்றத்துக் கவிஞன் புதுவை இரத்தினதுரையின் முல்லைத்தீவு முற்றத்தில் ஒருநாள் நினைவில்....! ஊர்முற்றக்கவிஞன் புதுவையின் முற்றத்தில் கரைந்த இனிய பொழுதொன்று. எங்களோடு பகிடி விட்டு , எங்களோடு அரசியல் பேசி , எங்களோடு கவிதைபேசி , எங்களோடு ஒருவனாய் கவிஞனாய் வாழ்ந்து காலநதிக்கரையில் புதுவையென்ற பெயரை மட்டும் ஞாபகம் தந்துவிட்டுக் காணாமற்போன புதுவை இரத்தினதுரை இன்றில்லை. அந்தக் கலைஞனின் முற்றத்தில் கண்ணகையம்மன் உற்வச காலத்தில் நடந்த சந்திப்பின் நினைவோடு கரையும் நாட்களிது. 2003ஆண்டு சமாதான காலத்துச் சந்தோசங்களில் கலந்திருந்த பொழுது. வற்றாப்பளை கண்ணகையம்மனின் உற்சவ காலம். வன்னி நிலத்தின் பெரும்பகுதி மக்கள் மச்சம் தவிர்த்து கண்ணகைக்கு விரதமிருக்கும் மாதம். எங்கும் கண்ணகையின் கதைகளை…

    • 13 replies
    • 4.6k views
  21. சந்திரனுக்கு அது ஒரு குறுகுறுத்த பருவம்! பாவாடை, சட்டையோட என்னத்தைப் பார்த்தாலும் வடிவாத் தெரியிற காலம்! அண்டைக்கும் சரசு வழக்கம் போல, படலையைக் கடந்து சென்றாள். ஒரு கொஞ்ச தூரம் நடந்து போய்த் திரும்பிப் பார்த்து, கழுத்தைத் திருப்பி ஒரு சின்ன “‘வெட்டு"! சும்மா ‘வெட்டு' எண்டு எழுதமட்டுமே முடியுமே தவிர, அதை எழுதி விளங்கப்படுத்திறது கொஞ்சம் கடினமான காரியம்! ஆனால், அடி வளவுக்குள்ள பனங்காய் பொறுக்கிக் கொண்டிருந்த ஆச்சிக்கு, அந்த ‘வெட்டின்' அர்த்தம் தெளிவாகப் புரிந்திருக்க வேண்டும்! மனுசி நேர சந்திரனிட்டை வந்து, ஒரு ஒளிவு மறைவுமில்லாமல், தம்பி, உனக்கும் அந்தப் பெடிச்சிக்கும் இடையில ஏதாவது இருக்கோ? என்று கேட்கவும், இப்படியான நேரடித்தாக்குதலைச் சற்றும் எதிர்பார்க்காத சந…

  22. ஒருத்தரும் குழம்பாதேங்கோ எல்லாரும் நல்லாக் கதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் தொடர்கள் எழுதிக் கலக்குகிறார்கள் சரி நானும் எழுதிப் பார்ப்போம் என்று வந்திருக்கிறேன். கடியுங்கோ கல்லெறியாதேங்கோ அன்புள்ள மன்னவனே. குறுந்தொடர்தொடர் 1 நரேனினதும் அம்மாவினதும் உரையாடலை கூர்ந்து கேட்டபடி சுமி தன் குழந்தையை அவதானித்துக் கொண்டிருந்தாள். அவள் அவதானிப்பதை கவனியாதவன்போல நரேனும் சுமியின் அம்மா பத்மாவுடன் பேசிக் கொண்டிருந்தான். இயக்க அலுவல்கள் நிமித்தம் கிழக்கு மாகாணத்தில் நின்றிருந்தவன் நீண்ட நாட்களுக்குப்பின்னர் இங்கு வந்திருந்தான் “அந்தக் கரனைக் கட்ட குடுத்தெல்லோ வச்சிருக்கோணும். நரேன் உங்கட இயக்கத்தில நாலு வருசம் இருந்த ஆட்கள் கல்யாணம் கட்டலாம் என்று சட்டம் இரு…

    • 29 replies
    • 2.8k views
  23. இழப்பின் துயரிலும் இழக்காத மனவுறுதியோடு...! தொலைபேசியழைப்பு வருவதும் தொடர்பு அறுபடுவதுமாக இருந்தது. அந்த அழைப்பு 15வருடங்கள் தொடர்பறுந்து போனவளின் அழைப்பாக இருக்குமென்பதை அறியாத 01.10.2013 இன் தொடக்க நாள். நீங்கள் என்னோடை படிச்சனீங்கள் நீங்களும் மேனகாவும் தான் என்னை இயக்கத்துக்கு எடுத்தனீங்கள் என்ரை பேர்.....! இந்த நம்பருக்கு ஒருக்கா எடுங்கோ நான் உங்களோடை கனக்கக் கதைக்க வேணும். நானிப்ப வேலையில நிக்கிறேன் இரவு எங்கடை நேரம் 9மணிக்குத்தான் வீட்டை போவன் நாளைக்கு பகல் எடுக்கிறனே....? புறவாயில்லை நான் முளிச்சிருப்பன் மறக்காமல் எடுங்கோ. அவளது குரலில் பதட்டமும் ஏதோவொரு கதையைச் சொல்லத் துடிப்பது போலவும் அவசரமாகச் சொல்லிவிட்டு தொடர்பை அறுத்தாள். முளிச்சிருப்பேன் என்ற …

    • 4 replies
    • 879 views
  24. Started by Innumoruvan,

    இவள் இப்போது சில மாதங்களாய் என் இருக்கைக்கு முன்னதாய் உள்ள இருக்கையில் புகையிரதத்தில் ஒவ்வொருநாளும் அமர்கிறாள். தமிழ் தான் சந்தேகமில்லை. ஏனோ இவளை எனக்குத் தெரிந்தது போன்று ஒரு உள்ளுணர்வு. எங்கே பாத்திருக்கிறேன்? ஞாபகமில்லை. எத்தனை தரம் எப்படி இருந்து யோசித்தும் ஞாபகமில்லை. தமிழ் பெண்ணென்றால் தெரியாத ஆம்பிளையளைப் பாத்தாச் சிரிக்கக்கூடாது என்று அம்மா சொல்லி வழர்த்திருப்பா போல. மாதக்கணக்காய் முன்னிருக்கையில் இருந்தும் ஒரு முறுவல் தன்னும் இன்னும் இல்லை. அதற்காக, நிழல் நிஜமாகிறது படத்தில வந்த சுமித்திரா அவளும் இல்லை, கமல் நானுமில்லை இது 1978ம் ஆண்டுமில்லை. பிள்ளைக்குக் கொஞ்சம் கூச்ச சுபாவம். அவ்வளவு தான். இந்த மனிதன் என்ற விசயம் இருக்கே, இதில புரிந்ததைக் காட்டிலும் புரியா…

    • 29 replies
    • 2.3k views
  25. ஜெயசுக்குறு ராணுவ நடவடிக்கை நடைபெற்ற காலம் வன்னியின் மேற்கு கிழக்கை கிழமைக்கு கிழமை மாறி மாறி திரிந்தவண்ணம் இருந்தோம்... எமது அணி விஷேட வேவு பிரிவு என்பதால் நாளாந்தம் எதிரி நிலை கண்காணித்து அறிக்கை கொடுக்க வேண்டிய பணியாக இருந்தது.. எமக்கு என்று ஒரு காப்பரண் எல்லை கிடையாது. வன்னியின் கிழக்கு பகுதியில் நின்ற எமக்கு அழைப்பு உடனும் கிளம்பி வரும்படி.. இரவுப் பயணம்.. வந்தவேகத்தில் நித்திரை தூக்கம் நல்லாய் உறங்கீட்டம்.. ஆனாலும் காதுகளில் பெண்களின் குரல் கூடுதால கேட்டபடி இருந்தது.. அதிகாலை விடியலை தேட கண்விழித்து பார்த்து பொறுப்பாளருக்கு தொடர்பை எடுத்தோம்.. எங்க வரணும்..? அவர் நீங்க நில்லுங்க நான் வந்து கூடி வாறன் என் பதில் சொல்லி தொடர்பை துண்டித்தார் . சரி எழும்பி முகம் கழுவ போவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.