Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. சின்ன சின்ன முத்துக்களாக, உண்ணக்கூடிய வகையில் இருக்கும் ஒரு பொருளை கண்டு வியக்காதவர்களே இருக்க முடியாது. சமைக்கும் முன் வெண்ணிறத்தில் பளிச்சிடும் இது சமைத்த பின் கிட்டத்தட்ட ஒளிஊடுருவும் வடிவத்தை பெற்றுவிடும். ஆம், நீங்கள் யூகித்தது சரியே - இந்த சின்ன முத்துக்களை நாம் 'ஜவ்வரிசி' என்று அழைப்போம். பொதுவாக விரதம் இருக்கும் போது எடுத்து கொள்ளும் உணவு வகைகளில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை பல வகை உணவு தயாரிப்பின் போது பயன்படுத்தப்படுகிறது. இனிப்பு மற்றும் காரம் என இரண்டு வகையான பலகாரங்களிலும் இது சேர்க்கப்படுகிறது. மேலும் அனைவராலும் ரசித்து ருசித்து உண்ணப்படும் பொருளாகவும் இது விளங்குகிறது. ஜவ்வரிசி பாயாசம் என்றால் யாருக்காவது எச்சில் ஊறாமல் இருக்குமா? ஆம், குழந்தைகள் முத…

  2. புற்றுநோய்களுக்குக் காரணமாகும் உடற்பருமன்! பிரித்தானியாவில் புகைபிடிப்பதைவிட நான்கு பொதுவான புற்றுநோய்களுக்கு உடற்பருமனே காரணமாகிறது என தொண்டு நிறுவனமொன்றின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. புகையிலை புகைப்பதை விட அதிக எடை கொண்டிருப்பதால் குடல், சிறுநீரகம், கருப்பை மற்றும் கல்லீரல் புற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என கான்ஸர் ரிசேர்ச் தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மில்லியன் கணக்கானவர்கள் தங்கள் எடை காரணமாக புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் புகைப்பதை விட உடற்பருமன் காரணமாக ஒருவர் அதிகமாக பாதிக்கப்படுவதாகவும் இந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக புற்றுநோயைத் தடுக்கக்கூடிய முக்கிய காரணியாக புகைபிடித்தல் உள்ளது. உட…

    • 1 reply
    • 640 views
  3. பரசிட்டமோல்(paracetamol) எனப்படும் மாத்திரை எங்கும் எப்போதும் எவராலும் வாங்கிக் கொள்ளக் கூடிய மாத்திரை. மிகவும் குறைந்த பின்விளைவோடு காய்ச்சலைக் குறைக்கும் மற்றும் வலியினைக் குறைக்கும் வல்லமை இந்த மாத்திரைக்கு இருக்கிறது. உண்மையில் இந்த மாத்திரை மனிதனுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் கூட. இந்த மாத்திரையை தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் உட்கொள்ளாத நபர்கள் எவருமே இருக்க சந்தர்ப்பம் இல்லை. இதற்குக் காரணமே இந்த மாத்திரையால் ஏற்படுகிற பின்விளைவுகள் குறைவு என்பதே. இந்த பரசிட்டமோல் சில நாடுகளில் acetaminophen என்று அழைக்கப்படும். paracetamol அல்லது acetaminophen என்பது இந்த மாத்திரையின் விஞ்ஞானப் பெயராகும். வெவ்வேறு நிறுவனங்களால் இந்த மாத்திரை தயாரிக்கப்படும்போது அந்தத் தயாரி…

  4. உடல் பருமன்: எடையை அதிகரிக்க செய்யும் 5 காரணிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,கிர்ஸ்டி ப்ரூவர் பதவி,பிபிசி 8 மார்ச் 2023 உடல் எடையைக் குறைப்பது வெறும் மன உறுதி சார்ந்த விஷயம் என்று நம்மில் பலர் நினைக்கலாம். ஆனால், அதன் பின்னணியில் வேறு சில காரணங்கள் இருப்பதாகக் கூறுகின்றன மருத்துவ ஆய்வுகள். உடல் பருமனுக்கான மற்ற ஐந்து காரணங்களை பிபிசியின் ’The truth about obesity’ என்ற நிகழ்ச்சி கண்டறிந்தது. இந்த ஐந்து காரணங்களும் உங்களுக்கு ஆச்சரியத்தைத் தரலாம். குடல் நுண்ணுயிரிகள் கில்லியனும் ஜாக்கியும் இரட்டையர்கள். ஆனால், இவர்க…

  5. முதுகு வலி எப்படி - ஏன் வருகிறது? நவீன வாழ்க்கையில் உள்ள அழுத்தம் (Stress) தான் முதுகுவலியின் முதற்பெரும் காரணமாகக் கூறலாம். எப்போதுமே நாம் தலைதெறிக்க ஓடும் அவசரத்திலும் பல்வகைச் சூழ்நிலை அழுத்தங்களுக்கு ஆளாகி இருக்கிறோம். எதிர்பாராமல் அதிகப் பளுவை ஒருவர் தூக்க முயலும்போது முதுகெலும்பை நிலை நிறுத்தியுள்ள தசைகள் போதிய இணக்கத்தைத் தரத் தவறிவிடுகின்றன. அது முதுகைப் பாதித்து வலியில் முடிகிறது. முதுகைக் குனியவைத்த நிலையில் பொருள்களைத் தரையில் இருந்து தூக்க முயற்சிப்பது, அதிக உயரத்தில் இருந்து குதித்து சடாலென்று தரையில் இறங்குவது,இவை இரண்டுமே அபாயகரமானவை. திடீரென்று திரும்புவது, அதுவும் ஒரு கனமான பொருளை வைத்த நிலையில் திரும்புவது முதுகுவலிக்கு வழி வகுக்கும். …

    • 1 reply
    • 1k views
  6. கருப்பு திராட்சையில் வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து அதிகம் காணப்படுகிறது. இதில் போலிக் அமிலம் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. பலர் கர்ப்பகாலங்களில் சாப்பிடக்கூடாது, குழந்தை கருப்பாக பிறக்கும் என்பார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, நீங்கள் சாப்பிடுவது குழந்தைக்கும் நல்லது தாய்க்கும் நல்லது. தர்பூசணி பழத்தில் தண்ணீர்ச்சத்து அதிகம் இருக்கும். வைட்டமின் ஏ சத்து மற்றும் போலிக் அமிலம் அதிகம் காணப்படுவதால் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிகவும் நல்லது. தாய்மார்கள் விரும்பிச் சாப்பிடலாம். அத்திப் பழச்சாறு ஆண்களைவிட பெண்கள் மிக முக்கியமாக சாப்பிட வேண்டிய சாறு. ஏனெனில் பெண்களுக்கு ஏற்படும் சத்துக்குறைவு(இரத்தசோகை) பிரச்சனைகளை சரி செய்கிறது. உடலி…

  7. 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி? வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது. பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்களை அழிக்கிறது. குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி. "பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்". டைலோ சின் போஸ்பேட், டி…

  8. சிறுநீரகப் பாதிப்பு : ஆரம்பத்திலேயே கண்டறிவதன் அவசியத்தை வலியுறுத்தும் சுகாதாரத் துறை 14 Feb, 2026 | 03:36 PM இலங்கையில் உள்ள சிறுநீரக நோயாளர்களில் சுமார் 10 சதவீதமானோர் தமக்கு அந்த நோய் இருப்பதனை அறியாமலேயே இருப்பதாக நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுநீரகவியல், டயாலிசிஸ் மற்றும் மாற்று அறுவை சிகிச்சைக்கான தேசிய நிறுவனத்தின் (National Institute for Nephrology, Dialysis and Transplantation) விசேட நிபுணர் வைத்தியர் அர்ஜுன மாரசிங்க இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோயை முறையாகக் கட்டுப்படுத்தாத நபர்களுக்கு சிறுநீரக நோய் ஏற்படும் அபாயம் மிக அதிகமாக உள்ளது. பல நோயாளர்கள் தமக்கு நோய் இருப்பதை அறியாமல் இருப்பதாலும், நோய…

  9. ஆரோக்கியமான குழந்தை பிறக்க குங்குமப்பூ உதவும் என்பது அழுத்தமான உண்மை . ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாகவும், கொழுகொழுவென்றும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பே.. இதற்காக குங்குமப் பூவை பசும்பாலில் கலந்து அருந்துவார்கள். இது ஒரு சம்பிரதாயம்போல் அனைத்து இடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த குங்குமப்பூ உண்மையிலேயே குழந்தைக்கு நல்ல நிறத்தையும் போஷாக்கையும் தருகிறதா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவதுண்டு. குங்குமப்பூவானது குழந்தைக்கு நிறத்தைக் கொடுக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. ஆனால் கருவுற்ற 5 மாதத்திலிருந்து 9வது மாதம் வரை குங்குமப் பூவை பாலில் கலந்து…

  10. மாரடைப்பு - இதய நோய் தாக்காமல் தடுக்க உலகின் மிகக் கொடிய உயிர்க் கொல்லி நோய்களில் முக்கியமானது மாரடைப்பு (Heart attack) நோய் ஆகும்! என்னங்க சற்று நேரத்திற்கு முன்தான் என்னிடம் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றோம். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு வழி யிலேயே உயிர் பிரிந்து விட்டது என்று கூறினர் என்று சொல்லி கோவென அழும் உறவினர்கள் ஏராளம்! இரவெல்லாம் எங்களிடம் நன்றாக பேசிக் கொண்டிருந்து தூங்கப் போனவர்; விடியற்காலை எழுந்து விடும் பழக்கம் உடையவர், பொழுது விடிந்தும் இவ்வளவு நேரமா தூங்குகிறார் என்று எழுப்பப் போனால், எழும்பவில்லை; தூங்கும் போதே சில மணி நேரங்கள் முன்பே அவர் இறந்து விட்டார் என்…

  11. Started by ஆரதி,

    [size=5]சோம்பு (Anise Seeds)[/size] அறிவிலும் ஆக்கத்திலும் மேன்மை கொண்ட நம் முன்னோர்கள் தங்களுடைய வாழ்வில் ஆரோக்கியத்திற்கே முதலிடம் கொடுத்தனர். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்ற பழமொழியை உலகிற்கு உணரச் செய்தவர்கள் தான் சித்தர்களும் ஞானிகளும். நம் வீட்டு சமையல் அறைகளுக்குள்ளேயே மாபெரும் மருத்துவக் களஞ்சியத்தை வைத்துள்ளனர். ஒரு மனிதனின் உணவு மூலமே அவனுடைய நோய்க்கு மருந்தை கண்டறிந்து சொன்னவர்கள் சித்தர்கள். வீட்டுச் சமையலில் ஏதோ வாசனைக்காக சீரகம், சோம்பு, இலவங்கம், வெந்தயம், கடுகு இவற்றை பயன்படுத்துகிறார்கள் என்று எண்ண வேண்டாம். ஒவ்வொரு பொருளும் தலைசிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்டது. சோம்பு: பொதுவாக உணவு விடுதிகளில் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு ச…

  12. நபர்1: "என்ன சுப்பண்ணை கண்டவுடனை விறுக்கு விறுக்கு என்டு நடையை காட்டுறியல் போல." நபர்2: "அட தம்பி சுந்தரம் அங்கேயா இருகியாய். சுந்தரம் சத்தியமாய் நான் உன்னை காணவில்லை. கொழும்பில் மகளை கொண்டுபோய் பயணம் அனுப்ப போய்விட்டாய் என்று கதைத்தார்கள். எப்போ திரும்பி வந்தாய் ?" ந1: "அது போன கிழமையெல்லோ. இப்பபோய் கேக்கிறியல் அதைபற்றி. அவளும் வந்து நின்டுட்டு, தான் ஊருகள் டூர் போய் பாக்க வேணும் என்டு உங்கை எல்லாம் சுத்தி திரிஞ்சு போட்டு என்னோடை இருந்து கதைக்க நேரம் இல்லை என்டு கொழும்பு போய் பயணம் போட்டாள். கொழும்பிலையும் சனங்கள் இருந்து கதைக்க நேரம் இல்லாமல் ஒரே பறப்பாய் பறந்து திரியுதுகள். இஞ்சவந்தால் இதுகளும் அப்படித்தானே குண்டியிலை காலடிக்க ஒடித்திரியுதுகள். என்ன அவதியில…

  13. வழுக்கையை தடுக்கும் பூசணி விதை அடர்ந்த கூந்தல் என்பது பெண்களின் ஆசைக்கனவாக இருக்கிறது. ஆனால் முடி உதிர்வு பிரச்சினை கூந்தல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு விடுகிறது. முடி உதிர்வை கட்டுப்படுத்துவதோடு கூந்தல் வளர்ச்சிக்கு சில வகை விதைகள் துணைபுரிகின்றன. அவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் ஆரோக்கியத்துடன் கூந்தல் நலனும் மேம்படும். கருப்பு எள் மற்றும் வெள்ளை எள் இரண்டுமே கூந்தலுக்கு ஆரோக்கியமும், பளபளப்பு தன்மையும் ஏற்படுத்தக்கூடியவை. அவற்றுள் தாதுக்கள், வைட்டமின்கள், பாலி அன்சச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், கொழுப்பை குறைக்கும் பைட்டோஸ்டெரால் போன்றவை இருக்கின்றன. அவை இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டவை. ஹார்மோன்கள…

    • 1 reply
    • 647 views
  14. அடிக்கடி பாப்கான் சாப்பிடுகிறீர்களா? : நுரையீரல் பாதிப்பு வரலாம் உஷார்! "பாப்கானுக்கு சுவை தர பயன்படுத்தப்படும் ரசாயனத்தால், நுரையீரல் பாதிக்கப்படலாம்' என, அமெரிக்க நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர். அமெரிக்காவின் தேசிய சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் கூறியுள்ளதாவது: பாப்கானுக்கு வெண்ணெய்யின் சுவையை தர, "டையாசெடில்' என்ற செயற்கையான நறுமணப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரசாயனத்தால், "லிம்போசைடிக் பிரான்கியோலிட்டீஸ்' என்ற நுரையீரல் நோய் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, மைக்ரோவேவ் பாப்கான் பேக்கேஜிங் யூனிட்டுகளில் பணியாற்றும் தொழிலாளர்களும், "டையாசெடில்' ரசாயனம் கலக்கப்பட்ட பாப்கானை அடிக்கடி சாப்பிட்டவர்களும், நுரையீரல் பாதிப…

  15. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ஜானெட் ரோட்ரிக்ஸ் பல்லேரஸ் பதவி,தி கான்வர்சேஷன்* 3 மணி நேரங்களுக்கு முன்னர் 1970 ஆம் ஆண்டு மார்ச் மாதம்… அமெரிக்காவின் பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான ராபர்ட் ஜே. ஒயிட், கிளீவ்லேண்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் வழக்கத்திற்கு மாறான அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டார். குரங்கு ஒன்றின் தலையை எடுத்து மற்றொன்றின் உடலில் பொருத்துவதுதான் அது. சிக்கலான அந்த அறுவை சிகிச்சை, கிட்டத்தட்ட 18 மணி நேரம் நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அந்த குரங்கு கண் விழித்தவுடன் அதனால் பார்க்கவும், நுகரவும், ஏன் கடிக்கவும் கூட முடிந்தது. குரங்கிற்கு மேற்கொள…

  16. உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. ஏனெனில் இதில் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும். எனவே உடலை குறைக்க இனிமேல் ஜிம்மிற்கு சென்று குறைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த பச்சை மிளகாயை சாப்பிட்டாலே, இதில் உள்ள கேப்சைசின் (capsaicin), உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து, கலோரிகளை கரைத்துவிடுகிறது. மேலும் கேப்சைசின் என்பது ஒரு வெப்ப ஊட்ட பொருள். ஆகவே இந்த பச்சை மிளகாயை சேர்த்திருக்கும் உணவுகளை சாப்பிடுவதால், 20 நிமிடங்களிலேயே, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைத்துவிடும். http://www.seithy.co...&language=tamil

  17. குட்டி தூக்கத்தால் அதிக பயன்கள் - வல்லுர்கள் வழங்கும் ஆச்சரிய தகவல்கள் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நீண்ட வேலை நேரம் - அதில் சில பணிகளை நாம் விரும்பி செய்கிறோம் சிலவற்றை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும், எது எப்படியோ நமது பணிகளின் பட்டியல் நீண்டு கொண்டுதான் செல்கிறது. எனவே நாள் முழுவதும் நமது ஆற்றலை தக்க வைத்து கொள்வது சிரமம்தான். கணினியில் இருப்பது போல நமது ஆற்றல் குறையும்போது ஒரு 'ரீஸ்டார்ட் பட்டனை' அழுத்தி மீண்டும் 'சார்ஜ்' செய்து கொண்டால் எப்படியிருக்கும்? இம்மாதிரியான ஒரு ரீஸ்டார்ட் பட்டனாக 'நாப்' எனப்படும் 'குட்டித்தூக்கம்' இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றன…

  18. நானும் பீட்சாவும், துரித உணவில் சிக்கித் தவிக்கும் சமூகமும் – ந.சர்மியா… February 16, 2019 அம்மா…. நான் இண்டைக்கு பீட்சா சாப்பிட்டே ஆகனும். பீட்சா இல்லாட்டிக்கு இண்டைக்கு சாப்பிட மாட்டன்….. என அம்மாவிடம் அடம் பிடித்து விட்டு பீட்சா சாப்பிட காசை வாங்கிக் கொண்டு சாப்பாட்டுக் கடைக்கு அவாவாடு சென்றேன்… கடைக்குள் சென்றதும் வட்ட வடிவில் மேசை கதிரை போடப்பட்டு அழகாக இருந்தது. நானும் அக் கடையின் அலங்காரங்களை ரசித்துக் கொண்டு நாற்காலியில் போய் உட்காந்தேன். ஏதோ சாதித்தது போல் ஒரு சந்தோசம் அந்த பெருமிதத்தோடு இருக்க சிவப்பு நிற மேற்சட்டையும் கறுப்பு நிற பான்ட் போட்டு அங்கு பணிபுரியும் அழகான பையன் என் அருகில் வந்தான். “மேடம் ஓடர் ஃப்ளீஸ்” என கேட்க நானும் …

  19. உளுந்து (Black Gram) இந்திய உணவு வகைகள் உலக உணவு வகைகளில் முதன்மையானது. சீன உணவு வகைகளில் பெரும்பாலும் அசைவம் நிறைந்திருக்கும். ஆனால் முழுக்க முழுக்க மூலிகைகள் நிறைந்த சைவ உணவே இந்திய உணவாகும். இந்திய உணவில் இரண்டு வகை உண்டு. ... 1. தென்னிந்திய உணவு வகை, 2. வட இந்திய உணவு வகை. தென்னிந்திய உணவுகளை விருந்தோம்பல் உணவு என்பார்கள். அறுசுவை கொண்ட உணவு இதுதான். குறிப்பாக தமிழக மக்களின் பிரசித்திபெற்ற உணவு இட்லிதான். தமிழக இட்லியை விரும்பி உண்ணாதவர் உலகில் எவரும் இருக்க முடியாது. குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இட்லிதான். இவை உடலுக்கு தெம்பையும் புத்துணர்ச்சியையும் கொடுத்து உடலை பாதுகாக்கிறது. இந்த இட்லியில் இவ்வளவு மருத்துவ…

  20. எடை கூடிய சிறுவர் சிறுமியருக்கும் இருதய நோய் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.எடை அதிகமாகவுள்ள மூன்று வயது குழந்தைகளுக்கு கூட எதிர்காலத்தில் இருதய நோய் தாக்கம் ஏற்படக் கூடிய வாய்ப்பு இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர். 16000 சிறுவர் சிறுமியரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அனேகமான எடை கூடிய குழந்தைகளுக்கு இருதயத்துடன் தொடர்புடை நோய்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்த ஆய்வினை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், இன்னமும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட வேண்டும் எனவும் மற்றுமொரு சாரார் கருத்து வெளியிட்டுள்ளனர். குழந்தைப் பருவம் முதல் ஆரோக்கியமான உடல் எடையைப் பேண வ…

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,சுஷீலா சிங் பதவி,பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் வீட்டிற்கு வரும் விருந்தினருக்குத் தேநீர் வழங்குவது இந்தியாவில் வழக்கம். அந்த சமயத்தில் சர்க்கரை எவ்வளவு போட வேண்டும் அல்லது சர்க்கரை போடலாமா என்ற கேள்வி எழும். “என் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு நான் முன்பிலிருந்தே சர்க்கரை சேர்த்துக்கொள்வதைத் தவிர்த்து வருகிறேன்” என்று விருந்தினர் சிலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள். ஆனால், சர்க்கரையைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் எடையைக் குறைக்கலாம் என்றோ உடல் தகுதியை மேம்படுத்தலாம் என்றோ நினைத்தால்…

  22. மூளை வளர என்ன சாப்பிடலாம்? ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா? எதிலும் அதிக கவனத்துடன் ஈடுபட முடியவில்லையா? மூளை சரியாகச் செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்குக் காரணம். காரட், தக்காளி, திராட்சை. ஆரஞ்சு, செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந் துள்ளன. ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்தபோது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இந்த உணவுகள் மூலம் மூளையில் செரேட்டனின், அ…

  23. பால், சர்க்கரை, பரோட்டா, பாக்கெட் மாவு வேண்டாம்: முன்னாள் பொறியாளர் சொல்கிறார் ஆலோசனை... லட்சக்கணக்கில் சம்பாதித்தாலும், சாப்பிடும் உணவில் விஷமும், ஆரோக்கியமற்ற தன்மையும் இருப்பதை அறிந்து, மென்பொருள் பொறியாளர் பணியை உதறிவிட்டு, சிறுதானிய வியாபாரத்தை துவக்கி உள்ளார் ஒருவர். இயற்கை அங்காடி: தண்டையார்பேட்டை, அகஸ்தீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் காளிராஜன், 42. பட்டப்படிப்பு முடித்து விட்டு, மென்பொருள் துறையில், 16 ஆண்டுகள் வேலைபார்த்தார். உணவு குறித்து ஆராய்ந்த அவர், சாப்பாடு சத்து இல்லாமலும், மெல்ல கொல்லும் விஷமாகவும் இருந்ததை உணர்ந்தார். அதையடுத்து, உணவு முறையில் மாற்றம் கொண்டு வர யோசித்து, முதற்கட்டமாக, தான் பார்த்து வந்த மென்பொருள் பொறியாளர் வேலையை உதறி…

  24. பெண்களுக்கு உடலுறவில் ஏற்படும் அசௌகரியம் - அறுவை சிகிச்சை மூலம் தீர்வு கண்ட பிரேசில் பெண் பட மூலாதாரம்,GETTY IMAGES 21 நிமிடங்களுக்கு முன்னர் க்ளிட்டோரியஸ் எனும் பெண்களின் பாலியல் உறுப்புக்கு வெளியில் இருக்கும் பகுதி அளவில் பெரியதாக இருப்பது நோயல்ல. இதற்கு மரபியல் தொடங்கி ஹார்மோன் குறைபாடுவரை பல விஷயங்கள் காரணமாக இருக்கலாம். பிரேசிலில் உள்ள சாரா ஃபெடரல் பல்கலைக்கழக மருத்துவமனை வளாகத்துடன் இணைந்துள்ள அசிஸ் சாட்டௌப்ரியண்ட் மகப்பேறு பள்ளி, க்ளிட்டோரியஸ் அளவை சரி செய்யும் இரண்டு க்ளிட்டோரோ பிளாஸ்டி அறுவை சிகிச்சைகளை அண்மையில் செய்தது. அந்த சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களில் ஒருவரா…

  25. உண்ணாவிரதம். [size=3][size=4]உலகத்தில் அதிகம் சாப்பிட்டுச் செத்தவர்கள் உண்டே தவிர, குறைத்துச் சாப்பிட்டு மாண்டவர்கள் குறைவு.[/size][/size] [size=3][size=4]ஒரு மகாராஜா சாப்பாட்டில் ஆழாக்கு நெய் ஊற்றிக் கொள்வார். ஆட்டுத் தலை தான் அதிகம் சாப்பிடுவார். கொழுப்புச் சத்துக்களை மிக அதிமாகச் சேர்த்துக் கொள்வார். ஆனால், வருஷத்தில் ஒரு மாதம் லங்கணம்![/size][/size] [size=3][size=4]உடம்பில் உள்ள கொழுப்பை இறக்குவதற்கு, அந்த ஒரு மாதத்தைப் பயன்படுத்திக் கொள்வார்.[/size][/size] [size=3][size=4]இரண்டு பேர் தினமும் ஒருவகை எண்ணெய் போட்டு உடம்பைத் தேய்ப்பார்கள். இரண்டு வேளை உணவு. இரண்டு வேளையும் அரைக்கிலோ வெங்காயம் சாப்பிடுவார்கள்.[/size][/size] [size=3][size=4]வெங்காயத்திற்கு இர…

    • 1 reply
    • 716 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.