Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. வாய் துர்நாற்றம் அகல வேண்டுமா...? நன்றாக பல் துலக்காததும், அடிக்கடி காபி, டீ என எதையாவது குடித்துக் கொண்டும், தின்று கொண்டும் இருந்தால் வாய் துர்நாற்றம் வீசும். மேலும் வயிற்றில் புண் இருந்தாலும் இதற்கு வாய்ப்பிருக்கிறது. வாய் துர்நாற்றம் காரணமாக, பிறரிடம் அருகில் சென்று பேசக் கூட தயக்கம் காட்டுகிறோம். வாய்நாற்றத்தை குறைப்பது எப்படி ? வாய்துர்நாற்றம் உள்ளவர்கள், தினமும் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குறைந்தது நாலு ட்ம்ளர் தண்ணீர் குடித்து வர வேண்டும். இது வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து வயிற்றை சுத்தப்படுத்தும். மேலும் எலுமிச்சம் பழச் சாற்றை தண்ணீரில் கலந்து அதில் தினமும் வாய் கொப்பளித்து வர வாய்துர்நாற்றம் நீங்கும். முடிந்தவரை…

    • 16 replies
    • 9.1k views
  2. [size=4]உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால், அது மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைக்கும் சிறந்த 5 எண்ணெய் பற்றி தெரியும். அதிலும் மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றும் அனைவருக்கும் தெரியும். அதிலும் மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும். ஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன்களைப் பற்றி தெரியாது. நமது முன்னோர்கள் சொல்வார்கள் என்று தான் இன்றும் சாப்பிடுகிறார்களே தவிர, இதனைப் பற்றி முழுவதும் தெரிந்து சாப்பிடவில்லை. ஆகவே இனிமேல் அவ்வாறு தெரியாமல் சாப்பிடாமல், அதைப் பற்றி தெரிந்து கொண்ட…

  3. கை நடுக்கம் உடல் நடுக்கம் நடுக்கம் என்றால் என்ன? பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு. மலேரியா சிறுநீர்த் தொற்று, செலுலைடிஸ் போன்றவை அதற்கு உதாரணங்களாகும். இந்த வகை நடுக்கத்தை ஆங்கிலத்தில் shivering என்பார்கள்.. பயத்தினால் நடுங்குவது மற்றொன்று. இவற்றைத் தவிர மற்றொரு நடுக்கமும் உண்டு. விரல்களும் கைகளும் நடுங்குவது. கோப்பை பிடித்தால் கிடுகிடுவென நடுங்கி தேநீர் தரையில் சிந்தும், சேவ் செய்யும்போது கை நடுங்கி சொக்கையை ரணமாக்கிவிடும், சமையலறையில் பாட்டியின் கை நடுங்கி பாத்திரங்கள் பொத் பொத்தென விழுங்கி நொருங்கும். பொதுவாக வயதானவர்களில் கண்டிருப்பீர்கள். சில நோய்களாலும் வருவதுண்டு. மருத்துவத்த…

    • 0 replies
    • 9.1k views
  4. மூலிகையே மருந்து! 01: பாடாத நாவும் பாடும்! ‘ஆடாதோடையைக் கண்டால் பாடாத நாவும் பாடுமே’ என்ற மருத்துவப் பழமொழி, ஆடாதோடையின் மூலம் குரல் ஒலி கரகரப்பின்றி இனிமையாகும் என்பதை அழுத்தமாகச் சொல்கிறது. கூடவே குரல்வளைப் பகுதியில் மையமிடும் நுண்கிருமிகளை அழிக்கும் என்ற அறிவியல் உண்மையை மறைமுகமாக எடுத்துரைக்கிறது. சளி, இருமல் போன்ற கபம் சார்ந்த நோய்களுக்கு ஆடாதோடை முக்கியமான எதிரி. ‘இருமல் போக்கும் ஆடாதோடை’ என்ற வாய்மொழியின் நீட்சியாக, கிராமங்களில் இதன் பயன்பாடு இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. கைப்பு சுவையைக் கொண்டிருந்தாலும் இதனால் கிடைக்கும் பயன்களோ மிகவும் இனிமையானவை. கப நோய்களைப் போக்குவதற்கு இயற்…

  5. தலை முடி நன்கு வளர...தினமும் முருங்கைக்கீரையை சூப் செய்து சாப்பிட்டால் தலை முடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். நல்ல பலன் கிடைக்கும்(தொடர்ந்து 3 மாதங்கள்)இது அனுபவத்தில் கண்டது. முருங்கைகீரை சூப் செய்யும் முறை: முருங்கைகீரை - 2 கப் வெண்ணெய் 1 - டீ ஸ்பூன் கார்ன் ஃப்ளோர் - 1 டீ ஸ்பூன் உப்புத்தூள், மிளகுத்தூள் - சிறிதளவு முதலில் 2 டம்ளர் தண்­ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்­ணீரில் இறங்கி விட்டிருக்கும். அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் எ…

  6. சில வயது வந்த அனுபவஸ்தர்கள் தாங்கள் மது அருந்தும்போது இது மருந்திற்காக அருந்துவது என்பார்கள்.ஆனால் அது உண்மை என பலருக்கும் தெரிவதில்லை.எதையுமே அளவாகப் பாவித்தால் அவை உடல் நலத்திற்குக் கேடாக அமைவது குறைவு. அதே போல நீங்கள் விஸ்கிப் பிரியர்களாக இருந்தால் இந்த இணைப்பு உங்களுக்கு ஓரளவு உதவியாக இருக்கலாம் விஸ்கியின் மருத்துவக் குணங்கள் ஆல்கஹால் குடிப்பது எப்போதுமே தீங்கு என்று நினைப்பது தவறானது. ஏனெனில் அவற்றிலும் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதற்காக நிறைய குடிக்கலாம் என்று நினைக்க வேண்டாம். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு தான். அதிலும் இதுவரை ஆல்கஹாலிலேயே ஒயின் மற்றும் பிராந்தி போன்றவற்றை சாப்பிட்டால் தான் ஆரோக்கியம் என்பது தெரியும். ஆனால் விஸ்கியை…

    • 15 replies
    • 9k views
  7. நீங்களும் ரெகுலரா பியர் அடிச்சிட்டு வந்திங்கன்னா இப்படித்தான் வரூவீங்க..! :P :idea: மேலதிக தகவல் ஆங்கிலத்தில்..இணைப்பில் காண்க..! http://news.bbc.co.uk/1/hi/health/5179178.stm (தமிழில் வழங்க அவகாசமில்லாததற்கு வருந்துகின்றோம்)

    • 56 replies
    • 9k views
  8. பார்ப்பவர்களை சட்டென்று கவரும் உதடுகளுக்குத் தேவை லிப்ஸ்டிக். உங்கள் மூடு, உடை, விருப்பம் ஆகியவற்றிற்கு ஏற்ப நிறத்தை பயன்படுத்த சிறந்த இடம் உதடுகள்தான்! இளஞ்சிவப்பு முதல் பிரவுன் வரை, வைலெட் முதல் கறுப்பு வரை எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்! லிப்ஸ்டிக் வெவ்வேறு வகைகளில் கிடைக்கும். · கிளாஸ்:- இது பளபளப்பானது, அதே நேரத்தில் மிகக் குறைந்த அளவில் நிறத்தை தரக் கூடியது. லேசான நிறம் பெற சிறந்தது. ஆனால் அதிக நேரம் நீடிக்காது. குறிப்பு:- லிப் பென்ஸிலால் உதடுகளில் நிறத்தை பூசிவிட்டு லிப் கிளாஸ் தடவினால், நீண்ட நேரம் நீடிக்கும். · மெட்டாலிக் (ஷிம்மர்):- இதைப் பார்த்தால் அதிக நிறம் கொண்டது என்று தோன்றலாம் ஆனால் இதைத் தடவினால் லேசான நிறத்தைத் தரும். வெளிச்சத்தில…

    • 50 replies
    • 8.9k views
  9. வசியம் உண்டாக்கும் காமவர்த்தினி மூலிகை! தொட்ட உடன் தன்னை சுருக்கிக் கொள்ளும் தொட்டாற்சுருங்கி காந்த சக்தி உடைய மூலிகையாகும். இதனை தொடுகின்ற போடு அதனுள் இருக்கும் சக்தி மின்சாரம் போல நம்முள் பாயும். நாற்பத்தெட்டுநாள் தவறாமல் தொட்டு வர மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக்குமாம். நினைத்தது நடக்குமாம். இதனை நமஸ்காரி என்றும் அழைக்கின்றனர். மனதில் உணர்ச்சியை அதிகரித்து சிற்றின்பத்தை ஊட்டுவதால் காமவர்த்தினி என்றும் அழைக்கின்றனர். செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் சிட்டோ, ஸ்டிரால், பினிடால்,நார்எபிநெப்ரைன், மிமோலைன், டேனின் உள்ளன. விதைகள் மியூசிலேஜ் கொண்டவை. இதில் குளுக்கோனிக் அமிலம் ஆகியவை காணப்படுகின்றன. மாந்தீரிக மூலிகை தொட்டாற்சுருங்…

  10. அசைவ உணவுகளில் ஒன்றான மாட்டுக் கறியில், புரோட்டீன் மற்றும் தாதுப்பொருட்கள் அதிகம் உள்ளன. அதேசமயம், கொலஸ்டிராலும் நிறைய உள்ளது. மாட்டுக்கறியை அதிகமாக உண்பதால் நமது வாழ்நாள் குறையும் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக அளவு மாட்டுக்கறியை உண்பதால் இதய நோய் வருமாம். ஏனெனில் அந்த இறைச்சியில் அதிகமான அளவு கொழுப்புகள் நிறைந்துள்ளது. அதனால் தமனிகளில் செல்லும் இரத்தத்தின் அளவு குறைவதோடு, வீரியம் குறைந்து நாள்பட்ட நோயையும் ஏற்படுத்தும். அதேசமயம், மற்ற இறைச்சிகளைப் போல இதையும் அளவோடு எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்கள். அரிசி, வெண்ணெய், சீஸ் போன்றவற்றில் கூட கொழுப்புகள் உள்ளன. இருப்பினும் அவற்றை எவ்வாறு சாப்பிடுகிறோமோ, அது போலவே அந்த மாட்டுக்கற…

  11. நெற்றியில் குங்குமம் வைப்பது எதற்காக? மங்கையர்கள் திலகம் வைத்து கொள்வது மங்களத்தின் அடையாளமாக கருதப்படுகிறது ஆனால் திலகமிடுவது மங்கள குறியீடு மட்டுமல்ல அதனுள் வேறு சில அர்த்தங்களும் பொதிந்துள்ளது மனிதனது மூளையின் மையப்புள்ளி இரண்டு புருவங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது இதன் வழியாக பிரபஞ்ச ஈர்ப்பு விசையும் வேறு மனிதர்களின் என்ன பதிவுகளும் நேரடியாக மூளையில் பதிந்து அதற்கான அதிர்வுகளை உருவாக்குகிறது அந்த அதிர்வுகள் நல்லதாக இருக்கும் பட்சத்தில் சிக்கல்கள் இல்லை வேறுமாதிரியாக அமைந்தால் பிரச்சனை தான் வேறு மாதிரியான அதாவது எதிர்மறையான பதிவுகள் மூளையை அண்டாமல் புருவங்களுக்கு மத்தியில் வைக்கப்படும் திலகமோ விபூதி மற்றும் சந்தனமோ தடுத்துவிடுகிறது இதனால் நமது மூளையானது எப்போத…

  12. பைல்ஸ் (Piles ) எனப்படும் மூலவியாதி. மலக்குடற் குதத்தின் அருகில் ஏற்படும் வீக்கம் மூலவியாதி என்று அழைக்கப்படுகிறது. வலி, இரத்தக் கசிவு, மலம் இறுகுதல், உட்காரும் போது வலி என்பன இந்த நோயின் அறிகுறிகளாகும். மல வாசலில் நல்ல இரத்தத்தைக் கொண்டுவரும் குழாய்கள், அசுத்தமான இரத்தத்தைக் வெளியேற்றும் குழாய்கள் இருக்கின்றன. அசுத்த இரத்தத்தை வெளியேற்றும் குழாய்களில் ஏற்படும் வீக்கம் மூல நோயாக இடம் பெறுகிறது. மூல நோய் இரு வகைப் படும் -உள் மூலம், வெளி மூலம், உள் மூலத்தில் மேல் பகுதி இரத்தக் குழாய்களும் வெளி மூலத்தில் கீழ்ப் பகுதி இரத்தக் குழாய்களும் வீக்கத்தால் பாதிக்கப்படுகின்றன.மூல நோயின் காரணங்களாகப் பின்வருவன குறிப்பிடப்படுகின்றன. 1. வயிற்றுப் பகுதியில் அ…

  13. நெல்லிக்காய் சாறு குடிப்பதால் என்ன நன்மை? உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் உணவுப் பொருட்களும், பழக்கவழக்கங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக உணவுப் பொருட்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவை பெரிதும் உதவியாக உள்ளன. அவற்றில் ஒன்று தான் நெல்லிக்காய். பொதுவாக நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. அதனால் தான் ஆயுர்வேதத்தில் நெல்லிக்காயை அதிகம் பயன்படுத்துகின்றனர். மேலும் நெல்லிக்காயால் செய்யப்படும் ஜூஸானது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால்…

  14. எனக்கு மிகவும் பிடித்த பழங்களில் ஒன்று அன்னாசி. அன்னாசி என்றவுடன் என் ஞாபகத்திற்கு முதலில் வருவது சிறுவயதில் கோல்வேஸ் ( Galle Face ) கடற்கரையில் வாங்கி உண்ட அந்த மிளாகாய்தூள் உப்பு போட்ட அன்னாசித்துண்டுகள் தான். இங்கு என்னதான் சுவையான அன்னாசி கிடைத்தாலும் அந்த ருசிக்கு கிட்ட வராது :lol: அன்னாசி சுவையாக உள்ளதென்றுதான் சாப்பிட்டேன் ஆனால் இன்று தான் அன்னாசி சாப்பிடுவதால் நாம் அடையும் நன்மைகளை வாசித்தேன். நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள் அன்னாசியின் அருமை பெருமைகளை அன்னாசி நாம் அனைவரும் ருசித்து உண்ணும், இந்நாட்டில் எப்போதும் கிடைக்கும் அன்னாசிப் பழத்தின் சிறப்பையும், மருத்துவப் பயனையும் அறிந்துகொள்வோம். மருத்துவத் துறையில் இன்று ஏற்பட்டுள்ள …

    • 20 replies
    • 8.5k views
  15. Started by Rasikai,

    மனச்சோர்விற்கு என்ன காரணம்??? மனச்சோர்வு என்பது ஒவ்வொருவது வாழ்க்கையிலும் ஏதோ ஒரு சமயத்தில் உணரப்படுவது உண்டு. நெருங்கிய நண்பர் அல்லது உறவினர்களின் எதிர்பாராத பிரிவு, இழப்பு போன்ற சந்தர்ப்பங்களில் உடல் மற்றும் உள்ளத்தில் ஏற்படும் மாற்றங்களினால் வராலாம் மற்றும் தோல்வி மன்ப்பான்மை போன்ற உணர்வுகளோடும் மனம் சோர்ந்து மனச்சோர்வு ஏற்படலாம். நிரந்தரமற்ற பல நிகழ்வுகளின் பாதிப்பு பெரிதாக மனச்சோர்வை உண்டாக்குவதில்லை. சில நாட்கள் சிறிய தாக்கம் இருந்து மறைந்து விடும். சில வருத்தங்கள், கஷ்டங்கள் அன்றாடம் மாறி மாறி நம் வாழ்க்கையில் வரும். அவற்றை எல்லாம் நாம் மனச்சோர்வு எனக் கொள்ளக்கூடாது. திடீரென ஏற்படும் இழப்புக்களால் தூக்கமின்மை, பசியின்மை வழக்கமான உற்சா…

  16. தமிழ் இலக்கியத்தில் சித்த மருத்துவம். சித்த வைத்தியம் தமிழ் வைத்தியமாகும். தொன்மையுள் தொன்மையான, நம் தமிழர்க்கே உரிய தனிச் சிறப்பு வாய்ந்தது. தமிழ் நாட்டுப் பண்டைச் சித்தர்கள் இதனைத் தமிழ் மொழியில் உருவாக்கித் தந்துள்ளார்கள். உண்மைத் தவநெறியில் பிறழாது உன்னத நிலையில் வாழ்ந்த சித்தர்கள் தங்கள் அருள் ஞான அறிவால் அதனை நன்குணர்ந்து மிகவும் துல்லியமாக கூறியுள்ளனர். அவர்கள் கூற்றுக்கள் அனுமானங்கள், அல்ல; மறுக்கமுடியாத அனுபவ உண்மைகள். நாளுக்கு நாள் மாறக்கூடியவைகள் அல்ல; நாள் எல்லைக்குள்ளும் நாழிகை வரையறைக்குள்ளும் தீர்க்கக் கூடியவை. இயற்கையில் கிடைக்ககூடிய எண்ணற்ற புல், பூண்டு,மரம்,செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, முதலியவைகளைத் கொண்…

    • 4 replies
    • 8.4k views
  17. மூட்டு வலியை விரட்டும் விளக்கெண்ணெய்! 21:31:15 Sunday 2015-01-11 HAVE COMPLETED THE FULL CIRCLE OF W... வயது முதிர்வு அடைந்தவர்களுக்கு பெரும் வேதனையாக இருப்பது மூட்டு வலி. தற்போது நச்சு கலந்த உணவு வகைகளால், இயற்கையில் விளையும் பொருளை உட்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. இதன்மூலம் பல்வேறு நோய்களும் ஏற்படுகிறது. இதனால் இளைஞர்களும் மூட்டுவலியால் அவதிப்படுகின்றனர். மூட்டுகளில் வீக்கத்துடன் கடுமையான வலியும் ஏற்படும். இத்தகைய மூட்டு வலி வருவதற்கு முக்கிய காரணம் உடலில் யூரிக் ஆசிட்டின் அளவு அதிகமாக இருப்பதே ஆகும். நாளடைவில் இதுவே பெரிய நோயாக மாறும். இந்த மூட்டு வலியை நீக்க நமது அன்றாட உணவு முறைகளே போதுமானது. இயற்கையான சத்து நிறைந்த பொருட்களை சாப்ப…

  18. ஆரோக்கியமான வாழ்வு . இயற்கையான முறையில் தொப்பையைக் குறைக்க வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்! தட்டையான வயிற்றைப் பெற யாருக்குத் தான் ஆசை இருக்காது. ஆனால் இன்றைய காலத்தில் கடைகளில் விற்கப்படும் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுப் பொருட்களால்இ இளமையிலேயே பானை போன்று தொப்பை வர ஆரம்பித்துஇ திருமணம் என்று வரும் போது 'அங்கிள்' போன்று காட்சியளிக்க நேரிடுகிறது. வெந்நீருடன் தேன் சாப்பிட்டு எடையை குறைக்கலாம் வாருங்கள்! இப்படி கண்ட கண்ட உணவுப் பொருட்களால் வந்த தொப்பையை குறைக்க ஜங்க் உணவுகள் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பதோடுஇ ஒருசில செயல்களை அன்றாடம் பின்பற்றி வந்தால்இ விரைவில் பானை போன்ற தொப்பையைக் குறைத்துவிடலாம். இங்கு இயற்கையான முறையில் தொப்பையைக் குறைக்க சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்…

  19. நாரிப்பிடிப்பிலிருந்து விடுதலை பெறுங்கள் முதுகை ஒரு புறம் வளைத்து, கால்களைப் பரப்பி, அடி மேல் அடி வைத்து அவதானமாக நடந்து வந்தார். அவரைப் பார்த்ததும், இவரது பிரச்சனை நாரிப் பிடிப்புத்தான் என்று சொல்வதற்கு வைத்தியர்கள் தேவையில்லை. நீங்கள் கூட உடனே சொல்லி விடுவீர்கள். காலையில் குளித்துவிட்டு, குனிந்து உடுப்பு அலம்பிக் கொண்டிருந்தபோது இவ்வாறு பிடித்தததாம். இன்னொருவன் மாணவன். கால்பந்து விளையாடும் திடீரெனப் பிடித்ததாம். என்னிடம் வந்து ஊசி போட்டு மருந்தும் சாப்பிட்ட பின்தான் அவனது முதுகு நிமிர்ந்தது. மற்றொருவருக்கு ஏன் வந்தது எப்படி நேர்ந்தது ஒன்றும் புரியவில்லை. காலையில் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவே முடியவில்லையாம். எப்படி ஆனதோ? நாரிப்பிடிப்பு ஏன…

  20. திருமணத்துக்கு பிறகு மூன்று மாதத்தில் இருந்தே கணவனிடமும், மனைவியிடமும் கேட்கத் தொடங்கப்படும் கேள்விகள்தான்.. "விசேஷம் ஏதாவது உண்டா?", "இது வரையிலும் ஒன்றுமில்லையா?" போன்றவை. "அதெல்லாம் ஒரு வருஷம் பொறுத்துதான்," என்று நழுவுவதுக்கு ஒரு பதில் சொல்லி நாம் சமாளிப்பது வழக்கம். ஆனால், நாளடைவில் நம்முடைய மனதிலும் ஒரு குழந்தையைக் கொஞ்சிப் பார்க்க ஆசையும், அதற்கு தமதமாவதினால் வருத்தமும் உண்டாக தொடங்குகிறது. அதோடு, நம் மனதிலும் டென்ஷன் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படும். கடைசியில், மருத்துவமனைகளில் ஏறி இறங்கத் தொடங்குவோம். இங்கேயும் ஆரம்பிக்கின்றது புதிய பிரச்னைகள்... ஆணுக்கும் பெண்ணுக்கும்... குழந்தைப் பேறுக்காக சிகிச்சை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் போது, யாருக்கு முதல…

  21. சலரோகம் - நீரழிவு நோய் என்றால் என்ன? இந்த நோய் ஏற்படுவதற்கான காரணம் என்ன? நம் உடலில் உள்ள திசுக்களில் தேவையான சக்தியை, இரத்தத்தில் உள்ள ”குளுக்கோஸ்” வழங்குகின்றது. இரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸை திசுக்களில் பெற்றுக் கொள்வதற்கு ”இன்சுலின்” என்ற ஹார்மோன் தேவைப்படுகிறது. வயிற்றின் பின் பகுதியில் கணையம் என்னும் சுரப்பி அமைந்துள்ளது. இங்கு இருந்து தான் இன்சுலின் உற்பத்தியாகிறது. இன்சுலின் அளவு குறையும்போது, உடலில் உள்ள திசுக்களுக்கு தேவையான குளுக்கோஸை இரத்தத்தில் இருந்து பெற முடியாது போகின்றது. இதனால் இரத்த ஓட்டத்தில் குளுக்கோசின் அளவு அதிகமாகிறது. இரத்த ஓட்டத்தில் சேரும் அதிகப்படியான சக்கரையானது இதயம், சிறு நீரகங்கள், கண்கள், மற்றும் நரம்பு மண்டலம் மற்றும் இரத்த நா…

  22. குறுந்தொடர்- 1: புரதச் சுரங்கம் நீயென்ன பெரிய பருப்பா?‘ என்று உதிரியாகத் திரிபவர்கள், சிறுரவுடி களைப் பார்த்துச் சினிமாவில் கேட்பதைப் பார்த்திருக்கலாம். மனிதர்கள் எப்படியோ தெரியாது, நிச்சயமாகச் சாப்பிடப்படும் ‘பருப்பு’, பார்க்கச் சிறிதாக இருந்தாலும் பெரிதுதான். காரணம் அதில் இருக்கும் அபரிமிதச் சத்து, அதிலும் தசைகளையும் உடலையும் ஊட்டி வளர்க்கும் புரதச் சத்து. பருப்பு வகைத் தாவரங்களின் காய்களையும் விதைகளையும் மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சாப்பிட்டு வருகிறார்கள். குழந்தைக்குச் செரிமானத் திறன் மேம்பட்டவுடன், முதலில் தரப்படுவது சோறும் மசிக்கப்பட்ட பருப்பும் சேர்ந்த பருப்புச்சோறுதான் (கொங்கு பகுதி அரிசி பருப்பு சாதம் கதை தனி). அதேபோலத் …

  23. உடல் வளர்த்தேன்... உயிர் வளர்த்தேனே!- 1: சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும் டாக்டர் புவனேஸ்வரி - படம்: எல்.சீனிவாசன் சு வர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும். அதுபோல, நமது தேகத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால்தான், வாழ்க்கையில் நம் குறிக்கோள்களை எளிதில் அடைய முடியும். நல்ல உணவு உண்ணுதல், நல்ல பழக்க வழக்கங்களைக் கடைபிடித்தல், தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் ஆகியவை உடல் ஆரோக்கியத்தைப் பேணும் வழிகளில் முக்கியமானவை. இவை அல்லாது, நமது பாரத தேசத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பதஞ்சலி முனிவர், ‘யோகாசனம்’ என்ற ஒரு பயிற்சி வகையைத் தோற்றுவித்தார். அது வம்ச…

  24. வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைட் என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், விட்டமின் கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத் தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள். வெங்காயத்தை எப்படி பயன்படுத் தினால், என்ன பலன்கள் கிடைக்கும்? 1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.