யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
அன்பின் இனையவன் அண்ணா எதற்காக எனது கருத்துக்கள் நீக்கப்பட்டது சொன்னால் நல்லம் திருத்தி எழுத உதவியாஇருக்கும்.... ஹிஸ்புல்லா மிரட்டினார் என்ற தலைப்பிற்கு எழுதியது....
-
- 11 replies
- 2.4k views
-
-
இப்ப கொஞ்ச நாளா எனக்கு ஒரு பிரச்சினை. நான் வடிவால் பந்தி பிரிஞ்சு எழுதிப் போட்டு இங்கை கொண்டு வந்து போட்டால் எல்லாம் ஒரே குண்டக்க மண்டக்கவா அரியண்டமா வந்து நிக்குது. கீழை திருத்திற அழுத்தியையோ பச்சைகளைப் பாக்கிற இடத்தையோ காணேல்லை. ஆராவது ச+னியம் கீனியம் வைச்சிட்டினமோ. அல்லது ஆரின்ரையாவது கண்ணூறு பட்டிட்டுதோ தெரியேல்லை. ஆராவது விசயம் தெரிஞ:ச ஆக்கள் வந்து சொல்லுங்கோ பிள்ளையள்....
-
- 19 replies
- 2.4k views
-
-
பொதுவாக சர்ச்சைக்குரிய கருத்துகளாக இருந்தாலோ அல்லது தனி நபர் வசைபாடல் இருந்தாலோ அவை நிர்வாகம் பகுதிக்க நகர்த்தப்படும் அல்லது நீக்கப்படும்... ஆனால் இப்போது மட்டும் ஒரு பகுதி மூன்றாக பிரிக்கப்பட்டு ஒன்று புலம் பகுதிக்கும், ஒன்று நிர்வாக பகுதிக்கும், ஒன்று 'பார்வையாளர் வசதிக்காக' கள உறுப்பினருக்கு மட்டும் என்று பிரிக்கப்பட்டுள்ளது... அந்த கருத்துகளை எல்லா பார்வையாளர்களும் பார்க்க வேண்டியதின் அவசியமென்ன?
-
- 12 replies
- 2.3k views
-
-
அன்பான யாழ்கள உறவுகளே எனது நண்பர் ஒருவருக்கு மின்அஞ்சல் மூலம் கிடைக்கப்பெற்ற இந்த தகவலின் நம்பகத்தன்மையைப்பற்றி உங்களில் யாருக்கேனும் தெரிந்திருந்தால் கூற முடியுமா? இந்த தகவல் உண்மையானதா அல்லது போலியானதா என்று??? :unsure: U.S. Department of State U.S. Department of State sent this message to xxxxxxxxxxxxxxxxxxxx Your registered name is included to show this message originated from U.S. Department of State. Congratulations, you've won ! Dear xxxxxxxxxxxxxxxxx Congratulations ! You are among those randomly selected and registered for further consideration in the diversity immigrant program. Selection guarantees that you will receive a United States Per…
-
- 13 replies
- 2.3k views
-
-
சொல்லிப் பார் கேட்காவிடின் விட்டுப் போ! கானலைப் பார்த்து இரசிக்கலாம். தொட்டு அனுபவிக்க முடியாது சொந்த மண்ணில் கண்ட இன்பம் அந்த மண்ணில் அனுபவித்த துன்பம் சொந்தம் சூழ வாழ்ந்து கண்ட வாழ்க்கையின் அனுபவங்கள் அவை தழுவ விட்ட சமூக இணைவுத் தென்றல்கள் நட்புறவுகள் அறிமுகங்கள் அனைத்திற்கும் மேலாக சொந்த மொழியைச் சுதந்திரமாய்ப் பேசி மகிழ்ந்துஇ அலைந்து மகிழ்ந்த அந்த நித்திய தென்றலையொப்ப உள்ள இன்பம். அத்தனையையும் இழந்து விட்டு வந்த நாட்டில் சொந்தம் தேடி நொந்து வாழும் அனுபவம் இருக்கிறதே! இதனை உங்களுக்கு எனது எழுத்தாலும் பேச்சாலும் விளக்கங்களாலும் புரிய வைத்துவிடல் சாத்தியமா என்றுதான் நானும் முயற்சித்துப் பார்க்கிறேன். அந்த முயற்சியில் தோல்வி எனக்கு முன்பாக நின்று…
-
- 8 replies
- 2.3k views
-
-
யாழ் களத்தில் இடைப்பட்ட காலத்தில் பச்சைப் புள்ளி மற்றும் சிவப்பு புள்ளி வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. பின்னைய காலங்களில் புள்ளி வழங்கும் முறைமைகள் தவறான முறையில் பாவிக்கப்பட்டமையினால் பல அறிவுறுத்தல்களின் பின்னர் சிவப்பு புள்ளி வழற்கும் முறை முற்றாக நிறுத்தப்பட்டது. பின்னைய காலங்களில் பச்சைப்புள்ளி வழங்கும் முறையிலும் சிலரால் விடயத்திற்கு புள்ளிகள் வழங்கப்படாது எழுதியவருக்கு என்று / இணைத்தவருக்கே புள்ளி வழங்கப்பட்டதை பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிந்தும் புரிந்தும் கொண்டமையால் புள்ளிகள் வழங்கியவர் விபரங்களை மறைக்க வேண்டிய நிலைமைக்கு வந்திருந்தோம். தற்போது மீண்டும் பழைய நிலைக்கு பச்சைப் புள்ளிகள் வழங்கியவர்களை பார்வையிடும் வசதியையும் சிவப்பு புள்ளி…
-
-
- 25 replies
- 2.3k views
- 1 follower
-
-
கருத்துக்களத்தில் ஒருசில பகுதிகளில் எனது கருத்துக்களைப் பதிவு செய்வதற்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காரணம் என்னவெனத் தெரியவில்லை. உறவாடும் ஊடகங்கள் பகுதியில் என்னால் பதிவு செய்யமுடியவில்லை. இச்சிக்கலை எவ்வாறு தீர்ப்பது?
-
- 8 replies
- 2.3k views
-
-
களத்தில் 31-08-2006 இல் வைக்கப்பட்ட நாரதர் என்பவரின் குருவிகள் மீதான சுத்த தனிநபர் மேலான வசைபாடல் காழ்புணர்ச்சிக் கருத்து..அநாகரிக்கத்தின் எல்லைக்கே சென்றிருப்பதால்...மேலும் இவரின் அநாகரியத்தைக் குருவிகளின் பெயரால் இங்கு நிலைநிறுத்துவதைத் தவிர்க்கும் பொருட்டு...அவருடனும்..அவருடைய அநாகரிகத்தைப் பிரதி பண்ணி இன்னும் மிக அநாகரிகமா கருத்தெழுதுவோருடனும் கருத்தாடல்கள் அனைத்தும் முடிவுறுத்தப்படுகின்றன. இங்கு அவரவருக்கு..கள விதிக்கு அமைய அவரவரின் கருத்துக்களை எழுத இடமுண்டு.யாரும் யாருக்காகவும் கருத்தெழுத வேண்டிய அவசியமில்லை. அந்த வகையில் சுதந்திரமாக எங்கள் கருத்துக்களை வைப்பதின் மீது அநாகரிகமான கருத்துக்களால் வரும் பதில்களை கள நிர்வாகம் சில இடங்களில் பார்த்தும் பாராமலும் அனும…
-
- 12 replies
- 2.3k views
-
-
யாழ்களத்தின் 8ஆவது ஆண்டுக் கொண்டாட்டங்கள் ஓய்ந்த நிலையில் களத்தை அடுத்த நிலை வளர்ச்சிக்கு எவ்வாறு கொண்டு செல்லலாம் என்று எமது கருத்துக்கள் மூலம் நிர்வாகத்திற்கு உதவுவோம். யாழ்களத்தின் நாளாந்த வாசகர் வருகையானது ஒரு தரமான தமிழ் இணையச் செய்தித்தளத்தின் எண்ணிக்கையோடு ஒப்பிடப்படக்கூடியது. அதாவது கிட்டத்தட்ட ஒரு இணையச் செய்தித்தளத்தினால் வெளியிடப்படும் கருத்துக்களின் தாக்கத்ததை எற்படுத்தக்கூடிய ஒருகளத்தில் நாம் கருத்தாளர்களாக எழுத்தாளர்களாக இருக்கிறோம். அந்தச் சிறப்புரிமையை களநிர்வாகத்தின் அர்ப்பணிப்பை நாங்கள் இங்கு செலவிடும் நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்கிறோமா? களத்தில் தவறான வார்த்தைப் பிரயோகம், தனிநபர் வசைபாடல் மற்றும் அரட்டை என்பவற்றை தவிர்த்து ஆக்கபூர்வமான கர…
-
- 8 replies
- 2.2k views
-
-
வணக்கம், எனக்கு சிறிது காலமாக (சுமார் ஆறு மாதம் என்று நினைக்கின்றேன்..) சுரதா கீமானை பாவிப்பதற்கு டூல் பாரில் உள்ள சாம்பல் நிற ஐக்கொன்மீது கிளிக் செய்யும்போது தேவையான தமிழ் எழுத்துருக்கள் (Suratha-Romanished2Unicode) தோன்றிது இல்லை. எழுத்துரு மாற்றம் அடையாமல் அப்பாடியே No Keyman Keyboard இல் நிற்கிது. கீமானை டூல் பாரில் இருந்து அகற்றியபின் திரும்பவும் ஸ்டார்ட் செய்து பார்க்கும்போது டொங் எண்டு ஒரு பெரிய சத்தத்துடன் ஒரு பொப் அப் விண்டோ ஓப்பின் செய்து ஏதோ சொல்கின்றது. இதனால், அடிக்கடி எனது கணணியை மீண்டும், மீண்டும் சட் டவுன் பண்ணி பிறகு திரும்பவும் ஓப்பி செய்யவேண்டி உள்ளது. வழமையாக கணணியை ஒப்பின் செய்யும்போது ஏன் கீமான் வேலை செய்யுது இல்லை? இடைக்கிடை ஏன்…
-
- 11 replies
- 2.2k views
-
-
puthu yarlil tamil eppadi eluthirathu , ariyatharungal... puthu yarlil ellam vidthiyasamai irukku....
-
- 6 replies
- 2.2k views
-
-
நம்ம கறுப்பியார் நமது நட்பு வட்டத்தின் மூலம் தொடர்பு கொண்டு தனக்கு யாழில் செய்திகளை பதிவிட்டு போஸ்ட் செய்ய முடியவில்லை என்று தெரிவிக்கிறார். திண்ணையில் எழுத முடிகிறதாம். மோகன் அண்ணாவோடு தன்னை தடை செய்திருக்கா என்று வினவியதில் அப்படி எதுவும் இல்லை என்று மோகன் அண்ணாவும் அறியத் தந்திருக்கிறாராம். கறுப்பி பாவித்த பயர் பொக்ஸ் இணைய உலாவி தவிர்ந்த ஏனையவற்றினூடும் யாழில் பதிவிட முனைந்து தோல்வி கண்டிருக்கிறார். கணணியையும் மாற்றி முயற்சி செய்திருக்கிறார்... அதுவும் தோல்வியில் முடிந்துள்ளது. இப்போ யாழ் வர முடிந்தும் பதிவிட முடியவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறார். யாழில் அவரின் கணக்கில் ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்து அவர் பதிவிடுவதில் தவறுதல்கள் நடந்திருக்க வாய்ப்பிருக்கா என்பதை …
-
- 30 replies
- 2.2k views
-
-
யான் இங்கு வந்து என் கருத்துகளை சொட்ட வழிமுறை என்ன என்று விழிப்பீர்களா? யான் என்ன கடை செய்தால் என் கருத்துகளையும் நீவீர் எற்பீர்கள் என எனக்கு சிறு ஆலாசனை வழங்க தாழ்மையுடன் வியம்பி நிற்கிறேன்!
-
- 8 replies
- 2.2k views
- 1 follower
-
-
வணக்கம்.உறவுகளே.இதை எந்த பகுதியில் பதிவது என்ட குழப்பத்ற்க்கு பின் இங்கு பதிகிறேன்.எனக்கு போஸ்ற்றர் வடிவில் பிறின்ட் பண்ணக்கூடிய தரத்தில் எமது மீன்,மரக்கறி மற்றும் பழ வககைள் உள்ள படங்கள் தேவைப்படுகுது.யாராவது புண்ணியவான்கள் தந்து உதவினால் பேருதவியாக இருக்கும்.நன்றி.ச்சா மிக்க நன்றி
-
- 9 replies
- 2.2k views
-
-
-
இந்த திகதி என்னால் தெரிவுசெய்யப்பட்டது. அதில் ஒரு விசேடமும் இல்லை. எதாவது நடந்தாலும் அதற்கும் எனக்கும் தொடர்பும் இல்லை. யாழ் கருத்துக்களத்தால் தமிழருக்கு ஏதாவது நன்மை ஏற்படுகிறாதா என்று கலைஞன் நேரம் இருந்தால் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தினால் நல்லது. எனது பதில் இல்லை. காரணம் என்ன? எமது கருத்துக்களால் இங்கு மேலும் பிரிந்தே போகின்றோம். தனிப்பட்ட விரோதம் கொள்கின்றோம். கருத்துக்களை கருத்துகளாக பார்காததும் கருத்துக்களை தனிப்பட்ட தாக்குதல்களாக வைப்பதும் காரணமாக இருக்கக் கூடும். ஆரோக்கியமான விவாதம் இங்கு பல காலம் நடைபெறவில்லை. காரணம் என்ன? நான் இந்து நான் பெரியார் மதம் நான் ஆரியம் கலக்காத இந்து நூறு சாதி இலங்கையில் இப்ப சாதி அழியுது…
-
- 12 replies
- 2.2k views
-
-
நடிகர் சிவகுமாரின் மகன் நடிகர் சூர்யா படப்பிடிப்பின் போது மரணம் அடைந்ததாக செய்்திகள் இங்கு வெளியாகியிருந்தன. இது உண்மையா/ பொய்யா என அறிய இங்கு பிரசுரித்திருந்தேன். ஆனால் அந்த செய்தியையே காணவில்லை? தலைப்பு நீக்கப்பட்டிருந்தால் ஏன் எனக்கு தனிமடல் மூலம் அறிவிக்கவில்லை? தயவுசெய்து எனக்கு உடன் இதுபற்றி அறியத்தரவும்.
-
- 15 replies
- 2.2k views
-
-
கள நிர்வாக உறுப்பினர்களின் கவனத்திற்கு! யாழ்களத்தில் அல்லா-கு-அக்பர் எனும் பெயரில் இணைந்துள்ள உறுப்பினர் என்று கூறும் ஒருவர் மிக கேவலமான வார்த்தைகளினால் திட்டி தனிமடல் அனுப்பி வருகிறார். இந்த முஸ்லீமின் பெயரில் இனைந்துள்ள நபர், மிகக் கேவலமான தூசன வார்த்தைகளில் எனக்கும் தனிமடல் அனுப்பியுள்ளார். இவர் நிச்சயமாக முஸ்லீம் அல்ல! ஐரோப்பாவில் இன்று எச்சிலிலைக்கு அலையும் ஒரு கூலியின் மாறுவேடமே, இந்த மூஸ்லீமின் பெயரில் இங்கு வந்துள்ள சக்கடை!! இந்த எச்சிலிலைக் கூலி அனுப்பிய தனிமடலை, நிர்வாகக்குழுவின் சில உறுப்பினர்களுக்கு தனிமடல் மூலம் தெரியப்படுத்தியுள்ளேன்! இவர் போன்ற கேவலம் கெட்ட எச்சிலிலை நக்கும் கூலிகளுக்கு, இத்துடன் யாழ்களத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படு…
-
- 9 replies
- 2.2k views
-
-
அநாமதேயமாக மறைந்து நின்று பார்க்க என்ன வழி? கரத்துக்களத்திற்குள் உள்நுழையும்போதே இதற்கு வழி இருக்கிறது என்று நீங்கள் சொல்லலாம் ஆனால் அதில் நான் எப்படித்தான் முயற்சிசெய்தாலும் மறைக்க முடியவில்லை ஒட்டமெற்றிக்கா நான் நிற்பதை வெளிக்காட்டுகிறது... அதனை மாற்ற என்ன வழி?
-
- 25 replies
- 2.1k views
-
-
கடந்த கிழமை யாழ்கள உறவுகளாள் கேட்கபட்ட கேள்விகளிற்கு..............சிலந்தி அவர்களாள் அளிக்கபட்ட பதில்கள்!! சிலந்தியின் கேள்வி பதில் நேரம்!! 1)சுண்டல் எத்தனை பேருக்கு கடலை போட்டார்?அவர்களிள் முக்கியமானவர் யார்? தயா இங்கிலாந்து பதில் -என்ன கதை இது?சுண்டல் மட்டுமா கடலை போடுகிறார்? 2)சிலந்தி நீங்கள் நல்லவரா?கெட்டவரா? ஈழவன் 85 அவுஸ்ரெலியா பதில்- சிலந்தி எப்போதும் மனிதனாக இருப்பவன் அதுவும் மனசாட்சியுள்ள மனிதனாக இருப்பவன் ஈழவன் . 3)சிலந்தி அண்ணே,சைவசமயத்தின் சிறப்பை எடுத்துச் சொல்வீர்களா?இந்த கேள்வி பிடிகலை என்றால் கனடா நாட்டில் பெரியார் மன்றம் அமைக்க என்ன செய்ய வேண்டும்? சபேஷ் கனடா பதில்-பெரியார் மன்றமெல்ல…
-
- 3 replies
- 2.1k views
-
-
வணக்கம் மதன் அண்ணா. நான் ஒரு நாடகத்தை யாழில் இணைக்கவுள்ளேன்.நாடகத்தின் தலைப்பு 'முதலாம் விடிவெள்ளி' உங்கள் பதில்................
-
- 10 replies
- 2.1k views
-
-
யாழ் இணையத்தில் சாத்திரி 15 நாட்கள் தடை செய்பட்டதற்கான விளக்கம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. http://www.yarl.com/forum3/index.php?showtopic=99423&view=findpost&p=740107 தற்போது ஒரு கள உறுப்பினர் சில நடவடிக்கைக்காக ஆட்களைத் தனிமடல் மூலம் சிலரைத் தொடர்பு கொண்டு யாழுக்கு வராமல் விடுவோம் என்ற ரீதியில் பரப்புரையில் ஈடுபடுவதாக அறியத் தரப்பட்டுள்ளது. அவ் உறுப்பினருக்கு யாழில் இருப்பது கடினம் எனில் தயவு செய்து விலகிக் கொள்ளுங்கள் என்ற வேண்டுகோளுடன் ஏனைய உறுப்பினர்களிடையே குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என்ற அறிவுறுத்தலும் இத்தால் பகிரங்கமாக வழங்கப்படுகின்றது. நன்றி மோகன்
-
- 20 replies
- 2.1k views
-
-
நிழலியை மட்டறுத்துனராக நியமித்து இருப்பது நல்லதொரு விசயம். கனடாவில் இருந்து யாழுக்கு அதிகளவு வாசகர்கள், உறவுகள் வருகைதருகின்றபோது கனடாவில் யாழ் உறவுகள் பலருக்கும் நன்கு அறிமுகமான நிழலியும் கருத்துக்கள நிருவாகத்தில் இணைக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்க விசயம், மகிழ்ச்சியை தருகின்றது. யாழ் உறவுகள் மட்டறுத்துனர்களுக்கு வழங்குகின்ற வழமையான உபசரிப்பை நிழலிக்கும் வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்போம்.
-
- 29 replies
- 2.1k views
-
-
யாழ் திண்ணையில் அரட்டை அடிக்கும்.. குடும்ப ஆண்களே.. பெண்களே.. இளசுகளே.. தற்போது உங்கள் அரட்டைகளை யாழ் களத்தில் அங்கத்துவம் பெறாதவர்களும் பார்க்க முடிகிறது. அந்த வகையில்.. உங்கள் மனைவியர்.. கணவன்மார்.. காதலிகள்.. காதலன்கள்.. இவற்றை கண்ணுற்றுவிட்டு உங்களை போட்டு சாத்து சாத்தென்று சாத்தினால்.. அதற்கு யாழை குறை சொல்லக் கூடாது. நன்றி. வணக்கம்.
-
- 26 replies
- 2.1k views
-
-
அரட்டைப் பகுதி நல்ல முடிவு. சிலர் அதிக பதிவுகளை பதித்து சாதனை செய்வதாக நினைத்து எல்லா இடத்திலும் குப்பைக்ளைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள
-
- 12 replies
- 2.1k views
-