சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
தாயிடமிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்து, அவரை அடித்து துரத்திய மகனிடம் இருந்த நிலத்தை மீட்டு தாயிடம் தமிழகத்தின் உத்தமபாளையம் உதவி ஆட்சியாளர் ஒப்படைத்துள்ளார். தமிழகத்தின் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள உப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் சின்னத்துரை மனைவி முத்துப்பேச்சி (75). இவருக்கு, மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னத்துரை இறந்துவிட்டார். இதையடுத்து, உப்புக்கோட்டை கிராமத்திலிருந்த 60 சென்ட் நிலத்தை 7 கோடியே 89 இலட்சம் ரூபாய்க்கு விற்று, அந்த பணத்தை பிள்ளைகளுக்கு சம பங்காக பிரித்து வழங்கியுள்ளார் முத்துப்பேச்சி. இந்நிலையில், அந்த நிலத்தின் பத்திரப் பதிவிற்கா…
-
- 1 reply
- 1k views
-
-
பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் பிராமணர் அல்லாதோர் படுத்து புரண்டால் பாவம் தீரும் என்று சொல்லப்பட்ட மூடநம்பிக்கையை நம்பி அறியாமையின் உச்சத்தில் மக்கள் புரளுவதைப் பாருங்கள்
-
- 32 replies
- 4.1k views
- 2 followers
-
-
புத்தகங்களின் எதிர்காலம் 2019 - ஷான் கருப்பசாமி · கட்டுரை ஏப்ரல் 23 உலக புத்தக தினம். புத்தக வாசிப்பை ஊக்குவிக்க யுனெஸ்கோஅமைப்பால் ஏற்படுத்தப்பட்ட தினம். புத்தகங்களின் அருமை குறித்து நினைவுகூர்ந்து பல நண்பர்கள் பதிவிடுவதைக் காண முடிகிறது. அதே நேரத்தில் இன்னும் சில ஆண்டுகளில் புத்தகங்கள் வாசிப்பதையே மக்கள் நிறுத்தி விடுவார்களோ என்ற பொதுவான ஒரு அச்சம் இங்கே நிலவுவதையும் உணர முடிகிறது. உண்மையிலேயே புத்தக வாசிப்பு குறைந்திருக்கிறதா, அப்படிக் குறைந்திருந்தால் அது குறித்து அறிவார்ந்த சமுதாயம் என்ன செய்ய வேண்டும், புத்தகங்களின் எதிர்காலம் என்ன என்பது போன்ற உரையாடல்கள் இந்தக் காலகட்டத்தில் அவசியமானவை. நெட்ஃபிளிக்ஸ், கணினி விளையாட்டுகள், யூடியூப், ஸ்ம்யூல், ட…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஆகா என்ன பொருத்தம் ! - சுப.சோமசுந்தரம் வகுப்பில் மாணவர்களிடம் பேசும்போதும், மேடையில் பேசும் போதும் என்னிடம் நகைச்சுவை உணர்வு உள்ளதாக சமூகம் சொல்லக் கேள்வி. பலர் பல இடங்களில் சொன்னதால் ஓரளவு உண்மை இருக்குமோ என்னவோ ! எழுத்தில் வருமா என்பதைச் சோதித்துப் பார்க்க எண்ணம். எழுத நினைத்த பொருள் விழுந்து விழுந்து சிரிக்க வழியில்லை என்று உறுதியானது. உங்களையறியாமல் உதட்டோரம் ஒரு குறுநகை வர வைக்க முடிந்தால், முதல் முயற்சி வெற்றி. எங்கே வாசியுங்கள் பார்க்கலாம் ! இன்று என் பொறியில் சிக்கிய சோதனை எலி நீங்களேதான். காட்சி 1 : நண்பனின் தந்தை மறைந்து ஒரு வருடம் ஆன நிலையில், அவன் வீட்டில் நடைப…
-
- 0 replies
- 514 views
- 1 follower
-
-
Image caption ஃபட்மடா கனு மேற்கு ஆஃபிரிக்க நாடான சியரா லியோனில் உள்ள ஒரு பாலியல் தொழிலாளியின் கதை இது. சியரா லியோனில் சுமார் 3,00,000 பெண்கள் பாலியல் தொழில் செய்கிறார்கள். இபோலா நெருக்கடியை அடுத்து அதிக பெண்களை தெருக்களில் காண முடிவதாக தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன. 18 வயதான ஃபட்மடா கனு, பாலியல் தொழிலாளியாக தான் இருக்கும் வாழ்க்கைக் குறித்து விவரிக்கிறார். "பாலியல் உறவு வைத்துக்கொள்ள தெருக்களில் ஆண்கள் கிடைக்கவில்லை …
-
- 2 replies
- 3.7k views
- 1 follower
-
-
கண்கள் தேடிச் செல்லும் இடம் கால்களுக்குத் தெரியவில்லை, மென்மையான இப்பாதச் சுவடுகள் பாதையின் ஒருபுறமாகச் சென்று நிற்கிறது. வெம்மை குறைந்த மண்ணில், காற்றின் ஈரப்பதம் காதோரம் இரகசியம் சொல்லிச் செல்கிறது. வெளிர் பாதத்தில் ஓரிரு இலைகள் பதிந்தாலும், பழுத்த அவ்விலைகளால் எவ்வித பாதிப்புமில்லை. தரையில் ஊர்ந்து செல்லும் செந்நிற எறும்புக் கூட்டமொன்று, போருக்குச் செல்லும் படைவீரர்களைப் போல சீராக அணிவகுத்துச் செல்கிறது, ஒரு கணம் தடம் மாறினாலும் வரிசையுடனான தொடர்பற்றுப் போய்விடும். நீண்ட தூரப் பயணத்தால் நாக்கு வறண்டிருக்கிறது, நிழலின் தேவையைக் காட்டிலும் நீரின் தேவை அதிகமாக இருக்கிறது. கச்சையில் கசிந்திருக்கும் மெல்லிய வியர்வை உடம்பையொட்டிச் செல்கிறது. களைப்பான கால…
-
- 21 replies
- 2.2k views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை Getty Images சுமார் ஒவ்வொரு 40 வினாடிக்கும் உலகில் ஏதாவது ஓரிடத்தில் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். பெரும்பாலும் இவ்வாறு தற்கொலை செய்துகொள்வோர் ஆண்கள். தங்களின் பிரச்சனைகள் பற்றி பேசாத அல்லது உதவி தேடாத ஆண்களே இந்த முடிவுக்கு வருகின்றனர். எனவே, எந்த தலைப்புகளை பற்றி ஆண்கள் அதிகமாக பேச வேண்டும்? சமூக ஊடகங்களும், எதார்த்தமும் சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்துவது மன ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. …
-
- 0 replies
- 888 views
-
-
அனைவருக்கும் அன்பார்ந்த உலக அன்னையர் தின வாழ்த்துக்கள்! வேரில்லாத மரம் போல் என்னை நீ பூமியில் நட்டாயே உலகத்தின் பந்தங்கள் எல்லாம் நீ சொல்லித் தந்தாயே பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வழிநடத்திச் சென்றாயே உனக்கே ஓர் தொட்டில் கட்டி நானே தாயாய் மாறிட வேண்டும்!
-
- 9 replies
- 5.7k views
-
-
"உங்களைப் பெற்றவர் என்ற காரணத்துக்காக உங்கள் அம்மாவை எப்படி மதிக்கிறீர்களோ, நேசிக்கிறீர்களோ அதே மாதிரி உங்கள் குழந்தைகளின் அம்மாவையும் நேசியுங்கள். தன்னை எங்கேயும் விட்டுக்கொடுக்காமல் நேசிக்கிற கணவனைத்தான், மனைவி மனதுக்குள் `ஆண்' என்று கொண்டாடுவாள்." இரண்டாவது தேனிலவு... தேனிலவுக்கே போகாத தம்பதியர்தான் நம்மிடையே அதிகம் பேர். இருந்தாலும், இரண்டாவது தேனிலவு செல்வது ஏன் அவசியம்; திருமணமான எத்தனை வருடங்கள் கழித்து இரண்டாவது தேனிலவுக்குச் செல்லலாம்? இதனால், ஒரு கணவன் - மனைவிக்குக் கிடைக்கிற நன்மைகள் என்னென்ன? டாக்டர். ஷாலினியிடம் கேட்டேன். அவருடைய விளக்கமான பதில்களை படியுங்கள். தேனிலவு ஏன் அவசியம்? `திருமணமான புதிதில் கணவன் - மனைவி இருவரும் ஒ…
-
- 27 replies
- 3.9k views
-
-
அவளுடைய மகளுக்கு ஏழு வயதானவுடன், ‘கத்னா’வுக்குரிய – அதாவது பெண்ணின் பிறப்புறுப்பை சிதைக்கும் (Female Genital Mutilation-FGM) சடங்குக்குரிய காலம் வந்துவிடும். நாகியாவுடைய உற்ற தோழி அதற்காக பட்டர் கத்தி முறையை முயற்சி செய்து பார்க்கும் படி கூறினார். இலங்கையின் தலைநகரான கொழும்பிலுள்ள நம்பிக்கைக்குரிய வைத்தியர் ஒருவர் சிறிய தன்சீமின் யோனியின் மீது மேலோட்டமாக மழுங்கிய கத்தி ஒன்றைக் கொண்டு செல்லுவார். அதன் பின் நாகியா தன்னுடைய உறவினர்களிடம் சடங்கு முடிவடைந்ததாகக் கூறக் கூடியதாக இருக்கும். எந்தவிதமான இரத்தப்போக்கோ அல்லது வலியோ காணப்படமாட்டாது. கடுமையான உடல் உளப்பிரச்சினைகளைத் தோற்றுவிக்கக் கூடிய எப்ஜிஎம் ஆனது அதிகமாக ஆபிரிக்க நாடுகளுடன் தொடர்புடையதாக இருப்பதுடன் இப்பழ…
-
- 0 replies
- 632 views
-
-
ஓடிப்போவதெல்லாம் உடன்போக்கு அல்ல - சுப. சோமசுந்தரம் இத்தலைப்பைப் பார்த்தவுடன் நான் என்னவோ காதலுக்கு எதிரானவன் என்று முடிவெடுத்து விட வேண்டாம். இலக்கியங்களில் அகப்பாடல்களைத் தேடித் தேடி ரசிப்பவன் நான். பக்தி இலக்கியங்களில் கூட அகம் காணுகிறவன் நான். நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் நாச்சியார் கண்ணனுடன் கொண்ட நாயகன் – நாயகி பாவனை, திருக்கோவையாரில் மணிவாசகர் தம்மையே தலைவியாகவும் சிவபெருமானைத் தலைவனாகவும் மேற்கொள்ளும் களவொழுக்கம் இவற்றையெல்லாம் தம்மை மறந்து ரசிக்காதார் அவனியில் யாரேனும் உளரோ ? தேடிச் சோறு நிதம் தின்று,…
-
- 0 replies
- 987 views
- 1 follower
-
-
சமூக வலைதளங்களில் என்னதான் நடக்கிறது? நவீனா ஒருமுறை கடற்கரையில் காலை நடைப்பயிற்சியின் போது, சிறுமி ஒருத்தி அந்தரத்தில் கயிற்றின் மீது நடந்தவாறு வித்தை காட்டிக்கொண்டிருந்தாள். கீழே ஒரு பத்துப் பதினைந்து பேர் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். எனக்கருகில் ஓர் அப்பாவும், இரண்டு மகன்களும் நின்றுகொண்டிருந்தனர். இரண்டு மகன்களில் ஒருவன் சற்றே பெரிய பையனாகத் தென்பட்டான். மற்றவன் சுமார் நான்காம் வகுப்பு படிக்கும் பையன் போல் தோன்றினான். அனைவரும் ஆச்சரியமாக அந்தச் சிறுமியைப் பார்த்துக்கொண்டிருந்த நேரம், இந்தச் சிறுவன் மட்டும் எந்த சலனமுமின்றி கடல் அலைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். இதை கவனித்த அவனது அப்பா, “டேய், இங்க பாரு! இந்த குட்டிப் பொண்ணு எவ்வ…
-
- 16 replies
- 3.5k views
-
-
இலங்கை முஸ்லிம்கள் தமிழ் இனத்தை சேர்ந்தவர்களா?இலங்கை முஸ்லிம்கள் ஏன் தமது தமிழ் மிழியிலான தமிழர் என அழைக்கப்படாமல் மதம் சார்ந்து அழைக்கப்பட வேண்டும். மத ரீதியாக இனம் என்பதற்குள் அடங்க முடியாது. மொழி ரீதியாகத்தான் இனம் என்பது கருதப்படும் நிலையில் அது எப்படி மத ரீதியில் இனம் உருவாக முடியும் என சமூக வலையத்தளங்கள பலரும் விவாதித்துக்கொண்டிருப்பதை காண்கிறோம்.இனப்பிரச்சினை தீர்வுக்கு மிக முக்கியமான இது விடயத்தில் சில தெளிவுகளை சொல்வது இன்றைய தேவை என நினைக்கிறேன்.பொதுவாக இனம் என்பது மொழியை மட்டும் வைத்து குறிப்பிடப்படுவதில்லை. ஒரே மொழி பேசும் மக்கள் மத்தியிலும் வெவ்வேறு இனங்கள் உள்ளதை காண்கிறோம். இங…
-
- 1 reply
- 720 views
-
-
என் துரோகம் -சுப.சோமசுந்தரம் வாழ்வில் இளமை வந்தது; கல்வி வந்தது;செல்வமும் வந்தது. என்னதான் வரவில்லை? நோயும் வந்தது. முதுமையால் அல்ல....பயணத்தால். அண்டை மாநிலம் சென்று பண்டம் வாங்கி வருவதைப் போல கண்ட வைரஸும் தொற்றி வந்தது. அறிகுறிகளைப் பார்த்து தமிழில் காக்கைக் காய்ச்சல் என்றார்கள். ஆங்கிலத்தில் West Nile என்றார்கள். தீர்வு என்று மருந்து இல்லாவிட்டாலும் ஆறுதலாக அபாயம் இல்லை என்றார்கள்; மனிதனிடம் இருந்து மனிதனுக்குப் பரவும் ஆற்றல் அதற்கு இல்லை என்றார்கள்; பறவையிடமிருந்தே மனிதனுக்குப் பரவும் என்றார்கள். இடையிடையே ஒரு காய்ச்சல் மாத்திரை என்னை வழக்கம் போல் இயங்க வைத்தது. விருப்பமானதை உண்ண அனுமதித்தத…
-
- 3 replies
- 1.2k views
- 2 followers
-
-
எல்லா பாடங்களுக்கும் Fail எடுத்து தோல்வியடைந்த மகனுக்கு தந்தை கொடுக்கும் பதில் , (பரீட்சையில் தோல்வி அடைந்தவர்களுக்கான ஒரு பதிவு) மகனே நீ எந்த ஒரு பாடத்திலும் சித்தியடையவில்லை என்பதையிட்டு நான் வருத்தப் படவோ அல்லது உன்னை கடிந்து திட்டித் தீர்க்கவோ இல்லை,உன்னால் முடிந்ததை நீ செய்தாய் , நீ தோல்வியடைந்த மனவிரக்தியில் இருப்பாயானால் அதிலிருந்து மீட்டு எடுக்க வேண்டிய முதற் கடப்பாடு என்னையே சாரும். தயவு செய்து உன் தோல்வியில் மனமுடைந்தோ அல்லது மற்றவர்களின் கொண்டாட்டத் தைப் பார்த்து தயக்கமோ அடையாதே , ஏனெனில் வெற்றி பெற்றவர்களின் பின்னே தான் இந்த உலகமே நிற்கும் , தோல்வி அடைத்தவர்களை உதறித்தள்ளும் ஆனால் தோல்வி அடைந்தவர்கள் தான் வாழ்கையில் அதிகம் வெற்றி பெறுகிறார்கள் …
-
- 2 replies
- 1.4k views
-
-
நல்லூரின் வீதியில் பிச்சை எடுத்த முன்னாள் போராளியை கடை அமைத்து முதலாளி ஆக்கி அழகு பார்த்தனர்...
-
- 13 replies
- 1.8k views
-
-
பொள்ளாச்சி: அக்கறையின் பெயரால் நடக்கும் அத்துமீறல்கள்! பாலியல் விழைவை வெளிப்படுத்துபவர்கள் எல்லோரும் பாலியல் குற்றவாளிகள் அல்ல! கவின்மலர் பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் கொடூரங்களை அடுத்து உருவாகியுள்ள சூழல் மிகவும் அபாயகரமானது. பெண்களுக்கு அறிவுரைகள் சொல்லும் வாட்ஸ் அப் செய்திகள், முகநூலில் பகிரப்படும் பெண்கள் மீதான அக்கறைப் பதிவுகள் என்கிற பெயரிலான அறிவுரைகள், சில சமயங்களில் வசவுகள் எனப் பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றம் சொல்லும் கனவான்கள் நிரம்பிய சமூகமாக நம் சமூகம் இருக்கிறது. பெண்களும் சக பெண்களுக்கு அறிவுரைகளைச் சொல்கிறார்கள். பெண்களுக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்கிற அவர்களின் அக்கறையின் மேல் எனக்கு எந்த சந்தேகமும். இல்லை. ஆனால், அந்த அக்கறை கட…
-
- 0 replies
- 1.4k views
-
-
நெட்டிசம்: இணையத்தில் வலை விரிக்கும் போலிகள்! ஆசிரியர்களும் சில பல ‘லைக்’குகளும்! - சரா சுப்ரமணியம் செய்தி ஊடகங்களில் மட்டுமல்ல, சமூக வலைதளங்களிலும் என்றுமே நெஞ்சை நெகிழ்ச்சியுடன் வருடும் ‘பாசிட்டிவ் ஸ்டோரி’களுக்கு மவுசு அதிகம். எட்டுத் திசைகளிலிருந்தும் ‘நெகட்டிவ்’ மிகு செய்திகளே நம்மைத் தாக்குவதுதான் இதற்குக் காரணம். தாகமாக இருக்கும் சாலையோர முதியவருக்கு ஒரு சிறுவன் தண்ணீர் தரும் தருணத்தைப் பதிந்த புகைப்படம் ஒன்று பல்லாண்டுகளாகப் பரவசத்துடன் பகிரப்படுவதைப் பார்த்திருப்போம். அது ஓர் இயல்பான நிகழ்ச்சி. எந்த அளவுக்கு நம் நெஞ்சில் ஈரம் வற்றிக்கொண்டிருந்தால், அந்தப் படத்தை இன்றளவும் பகிர்ந்து நம் நெகிழ்ச்சி தாகத்தைத் தீர்த்துக்கொண்டிருப்போம்? நான் பணிபுரிந்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
கீதா பாண்டே பிபிசி படத்தின் காப்புரிமை Indu Harikumar எந்தப் பெண்ணை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். …
-
- 9 replies
- 3.6k views
-
-
படத்தின் காப்புரிமை MONEY SHARMA இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சர்வதேசப் பெண்கள் தினம் எப்படித் தோன்றியது? நிச்சயமாக கொண்டாட்டத்தில் அல்ல போராட்டத்தில்தான் அது தொடங்கியது. அமெரிக்கத் தொழிற்சங்க இயக்கத்துக்கும், ரஷ்யப் புரட்சி இயக்கத்துக்கும் இதில் பங்கு உண்டு. 1975-ம் ஆண்டுதான் இந்த நாளை சர்வதேசப் பெண்கள் தினமாக ஐ.நா. அங்கீகரித்தது. ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இந்த நாள் பெண்களுக்கு முக்கிய நாளாக உலகின் பல பகுதிகளில் இருந்து வருகிறது. …
-
- 0 replies
- 948 views
-
-
அகிலா இளஞ்செழியன் பிபிசி தமிழுக்காக படத்தின் காப்புரிமை Getty Images பாலின சமத்துவம் என்பது அடிப்படை உரிமை மட்டுமல்ல, அது சமூக நீதி. இன்று சர்வதேச மகளிர் தினம். இது கொண்டாட்டமாக கட்டமைக்கப்படுகிறது அனால் இது கொண்டாடப்படுவதற்காக உருவாக்கப்பட்ட நாள் அல்ல, ஒரு போராட்டத்திற்கான, புரட்சிக்கான விதை விதைக்கப்பட்ட நாள். டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் , 1910 ம் ஆண்டு உலக சோசலிஸ்ட் பெண்கள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கிளாரா ஜெட்கின் , அனைத்து நாட்டில் உள்ள பெண்களும் சேர்ந்து தனி சிறப்புள்ள தினமாக மகளிர் தினத்தினைக் கடைப்பிடிக்க வேண்…
-
- 0 replies
- 999 views
-
-
ஸ்ரீலங்காவில் பிள்ளைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதிலிருந்து பாதுகாப்பாக உள்ளனரா? ராஜ் கொண்சல்கோரளே தமிழில் :எஸ்.குமார் ஸ்ரீலங்காவில் சமீபத்தில் நிகழ்ந்த இழிந்த ஒரு நிகழ்வாகக் கருதப்படுவது, சென். பீட்டர்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பதின்ம வயதுகளின் மத்திக்கும் இறுதிக்கட்டத்துக்கும் இடையில் உள்ள ஒரு றகர் விளையாட்டு வீரருக்கு அவரது பயிற்சியாளர் பொதுமக்களின் பார்வையில் படும்படியான இடத்தில் வைத்து தொடர்ச்சியாகக் கன்னத்தில் பல முறை அறைந்ததுதான், இது எமது சமுதாயம் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைகிறது அல்லது ஏற்கனவே வளர்ச்சியடைந்துள்ளது என்பதை தெளிவாகத் தெரியப்படுத்துகிறது. சந்தேகமில்லாமல் இந்த நிகழ்வு ஆதரவற்ற குழந்தைகள் பாடசாலையில் இருக்கும்போது அவர்களது ஆசிரியர்களாலும் மற்றும் வ…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிவக்குமார் உலகநாதன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை LOIC VENANCE 'மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது' - 90களின் துவக்கத்தில் வெளிவந்த இந்த தமிழ்த்திரைப்பட பாடல்வரியும், அந்த குரலில் வழிந்தோடும் உணர்வும் இன்றளவும் காதல்வயப்படுவர்களை சிலாகிக்க வைத்து கொண்டே இருக்கிறது. 'எனது காதலும் புனிதமானதுதானே! அதையும் தாண்டி புனிதமான காதல் என்றால் அது எப்படி?'' உவமைக்காக கற்பனையாக எழுதப்பட்ட சினிமா பாடல்வரி என்பதை தாண்டி அது குறித்து நண்பர்கள் பலமுறை விவாதித்துள்ளனர். ''அவ்வளவு …
-
- 0 replies
- 1.2k views
-
-
ரஜினி: பெரியாரும் வாழ்த்தும் சூப்பர் அப்பா ! ஆரா ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் நேற்று பிப்ரவரி 11 ஆம் தேதி நடந்தத் திருமணம் மிக விமரிசையாக, பல்வேறு பிரபலங்கள், பெரிய மனிதர்களின் ஆசீர்வாதத்தோடும் வாழ்த்துகளோடும் நடந்தது. ரஜினியின் மகளும், அவரது கணவரும் மணமகள்-மணமகனாக வீற்றிருக்க நடுவே சௌந்தர்யாவின் பிஞ்சு மகன் அமர்ந்திருக்க அதை ரஜினி அருகே நின்று பார்க்கும் அந்தப் புகைப்படம் ரஜினிக்கு சூப்பர் அப்பா என்ற அன்புப் பட்டத்தை இந்த தமிழ்ச் சமூகத்தில் பெற்றுத் தந்திருக்கிறது. ரஜினியின் பெரும்பாலான படங்களில், பெண்கள் அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும், கிழித்த கோட்டைத் தாண்டக் கூடாது என்ற ம…
-
- 5 replies
- 1.9k views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images நாம் மனநல மருத்துவரை சந்திக்க செல்லாமல் இருக்கலாம். எந்த மனநில பிரச்சனையும் இல்லாமல் இருப்பது போல இருக்கலாம். ஆனால், தினசரி வாழ்வு மற்றும் பணி சுமை தரும் மன அழுத்தம், நம்மை நிறைவாக வாழவிடுவதில்லை; குறைந்தபட்சம் திருப்தியுடன் கூட வாழவிடுவதில்லை. ஆனால், இப்போது நவீன அறிவியல் எவ்வளவோ வளர்ந்திருக்கிறது. நேர்மறையான மனநிலையை எப்படி வளர்த்தெடுத்து கொள்வது என்பது தொடர்பான எண்ணற்ற ஆலோசனைகளையும் அது வழங்குகிறது. இது தொடர்பாக எண்ணற்ற ஆய்வுகளும் நடந்துள்ளன. இதுவெல்லாம் சரிதான். இதனை எப்படி நம் தினசரி வாழ்வில் பொர…
-
- 0 replies
- 939 views
-