சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2253 topics in this forum
-
பெண்கள் மீதான வன்முறைகள் சில அதிர்ச்சித் தரவுகள் பெண் மீதான அடக்குமுறை காலத்துக்குக் காலம் வெவ்வேறு வடிவம் பெறுகின்றது. கடந்த சில தசாப்தங்களில் பெண் மீதான அடக்குமுறைகள், அவள் மீதான உடல், உள ரீதியான வன்முறைகளாக மாற்றம் பெற்றுள்ளன. அதிலும் பெண் குடும்பத்தில் தமக்கு மிகவும் நெருக்கமானவர்களாலேயே, தெரிந்தவர்களாலேயே அதிகளவில் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றாள். நாம் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றோம் என்பதை அறிந்திருந்தும் அதையெதிர்த்துக் குரல் எழுப்ப முடியாதவர்களாய், அனேக பெண்கள் இருக்கையில், தம்மை அடித்துத் திருத்தும் உரிமை கணவனுக்கு இருப்பதாக எண்ணும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமானதாக இருக்கின்றது. அவ்வாறு தம் மீதான வன்முறைகளை எதிர்க்கப் பெண்கள் துணியாத நிலையி…
-
- 5 replies
- 1.5k views
-
-
பெண்கள், கண்களா...? ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த மனைவிக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் கணவன்மார்கள் தங்கள் மனைவிகளை மனதார ஆசிர்வாதம் செய்தனர். மனைவியரை அமர வைத்து கணவர்கள் மரியாதை செய்தது பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது. பெரும் திரளான தம்பதியர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள "மனவளக்கலை மன்றம்" வேதாத்திரி மகரிஷி அறிவுத் திருக்கோயிலில், மனைவி நல தின வேள்வி நடந்தது. இதில் ஏராளமான தம்பதியர் கலந்து கொண்டனர். "வாழ்வில் இன்ப துன்பங்கள், ஏற்றம் இறக்கங்கள், நன்மை தீமைகளை மனதார ஏற்று இல்லறத்தில் இணைந்த தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ கற்றுக் கொள்ள வேண்…
-
- 11 replies
- 1.2k views
-
-
பெண்கள்... பெயரை மாற்றிக்கொள்கிறார்கள் வீட்டை மாற்றிக்கொள்கிறார்கள் பிறந்த குடும்பத்தைவிட்டு பிரிகிறார்கள் உங்களோடு வாழ்க்கை பயணத்தை தொடர வருகிறார்கள் உங்கள் வீட்டை கட்டமைக்கிறார்கள் உங்கள் வாரிசை சுமக்கிறார்கள் உங்கள் குழந்தைகளால் அவளின் உடலில் மாற்றங்கள் இல்லற வாழ்வின் மாற்றத்தால் உடல் பருமனாகிறார்கள் உங்கள் குழந்தைகளை பிரசவிக்க வலியால் செத்து உயிர்மீள்கிறாள் உங்கள் குடும்ப பெயரை தன் குழந்தைக்கு சூட்டுகிறாள் அவளின் கடைசி மூச்சு வரை உங்களுக்கு அனைத்தையும் செய்கிறாள், சமையல், வீட்டை பராமரிப்பது, உங்கள் பெற்றோரை கவனிப்பது, குழந்தை வளர்ப்பு, சம்பாதித்தல், உங்களுக்கு ஆலோசகராக, நீங்கள் ஓய்வெடுக்க, உங்கள் உறவினர்களின் உறவை பேண இவையனைத்தையும் செய்கையில் தன்னை வருத்தி, பொலிவ…
-
- 23 replies
- 2.6k views
-
-
பெண்ணாக பிறந்த நான் ஆணாக மாறியது ஏன்? - ஒரு குஜராத் மருத்துவரின் போராட்டம் பார்கவா பாரிக் பிபிசி குஜராத்திக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிக்கும் படம் "அன்பையோ, பரிதாபத்தையோ இந்த சமூகத்தில் கேட்டால், நீங்கள் வெறுப்புக்கு ஆளாவீர்கள். அதனால் தான் பெண்ணாக இருந்த நான் ஆணாக மாற முடிவு செய்தேன். நான் ஆணாக மாறிவிட்டேன். ஆனால் என்னை ஏற்றுக்கொள்ள யாரும் தயாராக இல்லை.'' பெண்ணாக இருந்து ஆணாக மாறியுள்ள அரசு மருத்துவரான பாவேஷ் பாய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சமூகத்தில் எதிர்கொள்ளும் போராட்டங்கள் பற்றி கூறிய சொ…
-
- 0 replies
- 462 views
- 1 follower
-
-
மதத்தில் இருந்து கற்பு, ஆடை என்று தன்னை தொடர்ந்து சர்ச்சைகளுக்குள் சிக்கவைப்பதால் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் டென்னிஸ் ஆட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என்று சானியா மிர்சா அறிவித்திருப்பது பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது என்றாலும் நடந்தவற்றை நன்கு அறிந்தவர்கள் அவர் முடிவு சரியானதே என்று நிச்சயம் கூறுவார்கள். முன்னாள் வீரர்கள் அவருக்கு அறிவுரை வழங்கத் துவங்கியுள்ளனர். லியாண்டர் பயஸ் கூட சானியா மிர்சா புகழினால் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். விஜய் அமிர்தராஜ் "எங்களது காலத்தில் இந்தியாவில் விளையாடுவது என்பது ஒரு பெரிய விஷயம்” என்று கூறியுள்ளார். முன்னாள் டேவிஸ் கோப்பை இந்திய டென்னிஸ் அணித் தலைவர் அக்தர் அலி மட்டுமே ச…
-
- 0 replies
- 1k views
-
-
மகளிர் தினம் என்ற ஒன்று வருடா வருடம் வருவதும் அந்த நாளில் மட்டும் பெண்கள் பற்றிய பார்வை வார்த்தையளவில் கட்டுரைகளாகவும் கவிதைகளாகவும் வந்து வியாபாரமாவதும், எழுதியவர்களை விளம்பரமாக்குவதுமாய் இருந்துவிட்டு அடுத்த மார்ச் 8 வரை காத்திருப்பதும் வாடிக்கையாகிவிட்டது. ஆரம்பகாலத்தில் புருவங்களை நெரித்த பெண்னியம் பற்றிய ஆராய்வும் போராட்டங்களும், மகளிர் பற்றிய மதிபீடு அல்லது கருத்துச் சமர்ப்பிப்பு என்பது பற்றி எழுதுவது கூட ஒருவகையில் இப்போதைய காலகட்டங்களில் ஆண்களின் முகச்சுளிப்பை அதிகமாக்குவதாகிவிட்டது மட்டுமல்லாமல் பெரும்பான்மையான ஆண் வர்க்கத்தினருக்கு எரிச்சலூட்டுவதுமாக அமைந்துவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால்... உண்மையில் பெண்ணியம் பற்றிய ஆராய்வும் , ம…
-
- 0 replies
- 774 views
-
-
-
- 0 replies
- 951 views
-
-
போட்டோஷொப் சர்ச்சையில் கனேடிய தமிழ் எம்.பி. ராதிகா சிற்சபேசன் Rathika Sitsabaiesan, Canadian Parliament Member, Photoshopped இலங்கையில் பிறந்த தமிழ் பெண்ணான ராதிகா சிற்சபேசன், கனடாவில் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராகி சாதனை படைத்தவர். ஆண்களின் ஆதிக்கம் மிக்க அரசியல் கலாசாரத்தில் 29 வயதான ராதிகாவின் வெற்றி சிலாகித்து பேசப்பட்டது. ஆனால், இப்போது அவரின் புகைப்படமொன்று போட்டோஷொப் முறையில் மாற்றியமைக்கப்பட்டதா என்பது குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது. It was brought to our attention yesterday by Contrarian, a Canadian political blog, that rising member of the Canadian parliament Rathika Sitsabaiesan has undergone some quite obvious Photoshopping. …
-
- 1 reply
- 954 views
-
-
பெண்ணிற் பெருந்தக்க யாவுள ! - சுப. சோமசுந்தரம் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் எத்துணையோ நல்ல விடயங்கள் அமைவதுண்டு. பொதுவாக நாம் அமையாதவற்றை நினைந்து ஏங்குவதும், அவற்றின் தேடலுக்கான முயற்சிகளில் இறங்குவதுமாக எப்போதும் எதையாவது விரட்டிக் கொண்டே வாழ்வைத் தொலைப்போம். இந்த விரட்டுதலை நியாயப்படுத்த ஊக்கம் உடைமை, மடியின்மை, ஆள்வினையுடைமை என்று நம்மில் சிலர் வள்ளுவனை வேறு துணைக்கு அழைப்பதுண்டு. இவ்வாறெல்லாம் இவற்றைப் பயன்படுத்துவோம் என்று தெரிந்திருந்தால் வள்ளுவன் இவ்வதிகாரங்களை அமைத்தே இருக்க மாட்டானோ, என்னவோ ! எனது இந்த பீடிகையைப் பார்த்து நான் ஏதோ பெட்ரன்ட் ரஸலைப் பின்பற்றி ‘சோம்பலுக்குப் புகழ்மாலை’ (‘In Praise of Idleness’ by Bertrand Russell) பாடப்…
-
- 2 replies
- 1.5k views
- 1 follower
-
-
பெண்ணுக்குள் ஆண்... புதிதாக தோன்றும் மனச்சிக்கல்கள்... நெருக்கடி நிறைந்த இந்த காலகட்டத்தில் பிரச்சினைகளை எதிர்கொண்டு தன்னம்பிக்கையோடு வாழ பெண்களுக்கு தைரியம் தேவை. அந்த தைரியத்தை அவர்கள் தங்கள் நடை, உடை, செயல்பாட்டில் காட்டவேண்டியது அவசியம்தான். ஆனால் அதில் இன்னொரு பக்கம் சற்று முரண்பாடு கொண்டதாக இருக்கிறது. சில பெண்கள் ஆண்கள் அணிவது போன்ற உடைகளை அணிந்துகொள்கிறார்கள். கூந்தலையும் ஆண்களை போன்று வெட்டிக் கொள்கிறார்கள். ஆண்களோடு தங்கள் நட்புவட்டத்தையும் உருவாக்கிக்கொண்டு, ஆண்களைப்போலவே செயல்படவும் ஆசைப்படுகிறார்கள். இத்தகைய போக்கு ஒரு எல்லைவரை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தாலும் எல்லைமீறும்போது அவர்களுக்கு தாங்கள் பெண் என்பதே மறந்துபோய்விடுகிறது. அப்படி ஒரு சில பெண்கள…
-
- 0 replies
- 418 views
-
-
பெண்ணுறுப்பில் திணிக்கப்படும் ஆதி அரசியல்..! - ஒரு வலி நிரம்பிய கடிதம் பெண்ணுறுப்பு இருப்பதால்... அதில் பயம், எச்சரிக்கை, ஒழுக்கம், அதிகாரம், ஒடுக்குமுறை என அத்தனையும் பிணைக்கப்பட்டு நடமாடிக் கொண்டிருக்கும் பெண் ஒருத்தி பேசுகிறேன். இதை, உங்களைப் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதவில்லை. அப்படிப் புண்பட்டிருந்தாலும் அதைவிடப் பலமடங்கு இத்தனை ஆண்டுகளில் நாங்கள் புண்பட்டிருக்கிறோம் என்பதை, இதைப் படிக்கும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளைத் திணிக்கும் ஆண்களைப் பார்த்து ஒரு கேள்வியை முன்வைக்கத் தோன்றுகிறது, நீங்கள் எப்படி இரவுகளில் தனியே தைரியமாக நடமாடுகிறீர்கள்? உங்களுக்கு, உங்கள் பிறப்புறுப்புகளில் இரும்புக்…
-
- 0 replies
- 909 views
-
-
அந்தக் காலத்துப் பெண்கள், எத்தனையோ சிக்கல்களுக்கு மத்தியிலும் ஓரளவு நிம்மதியாக வாழ்ந்தார்கள். ஆனால் ன்றைய படித்த, சம்பாதிக்கிற, அனுசரணையான கணவன் இருக்கிற பெண்களால் சந்தோஷமாகக் குடும்பம் நடத்த முடிவதில்லையே... ஏன்? நான் காரணம்தான் சொல்கிறேன். அது சரியா தவறா என்று பேச விரும்பவில்லை. ஒரு பெண் தன் கணவனை விரும்பும் பட்சத்தில், நேசிக்கும் பட்சத்தில், அதிகக் கேள்விகள் இன்றி ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், அவனைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யாதபட்சத்தில் அவளால் நிம்மதியாக வாழ்ந்து முடிக்க முடியும். ஆனால், அவனைப் புரிந்துகொள்ள முயற்சி தொடங்கும் மறுகணமே அவள் தன் நிம்மதியை இழந்து விடுகிறாள். அதிக சிக்கலுக்கு உள்ளாகிறாள். அதிக சங்கடப்படுகிறாள். என்னதான் கணவன் - மனைவி ஈர…
-
- 1 reply
- 1.7k views
-
-
கண்கள் தேடிச் செல்லும் இடம் கால்களுக்குத் தெரியவில்லை, மென்மையான இப்பாதச் சுவடுகள் பாதையின் ஒருபுறமாகச் சென்று நிற்கிறது. வெம்மை குறைந்த மண்ணில், காற்றின் ஈரப்பதம் காதோரம் இரகசியம் சொல்லிச் செல்கிறது. வெளிர் பாதத்தில் ஓரிரு இலைகள் பதிந்தாலும், பழுத்த அவ்விலைகளால் எவ்வித பாதிப்புமில்லை. தரையில் ஊர்ந்து செல்லும் செந்நிற எறும்புக் கூட்டமொன்று, போருக்குச் செல்லும் படைவீரர்களைப் போல சீராக அணிவகுத்துச் செல்கிறது, ஒரு கணம் தடம் மாறினாலும் வரிசையுடனான தொடர்பற்றுப் போய்விடும். நீண்ட தூரப் பயணத்தால் நாக்கு வறண்டிருக்கிறது, நிழலின் தேவையைக் காட்டிலும் நீரின் தேவை அதிகமாக இருக்கிறது. கச்சையில் கசிந்திருக்கும் மெல்லிய வியர்வை உடம்பையொட்டிச் செல்கிறது. களைப்பான கால…
-
- 21 replies
- 2.3k views
- 1 follower
-
-
ஏறக்குறைய ஒரு அரிசி மூட்டையை நிறுத்தி வைத்தாற்போல் இருக்கும் வெயிட்டான பறவை பென்குயின்! இந்த வெயிட்டான பார்ட்டி இறக்கை இருந்தும் அதை அசைக்க முடிந்தும் பறக்க இயலாத பரிதாபமான பறவை. ஆனால் அதிக குளிரை அனாயசமாக தாக்குப்பிடிக்கும் இந்த கடல் பறவை! ஆஸ்திரேலியா, ஆப்பிக்கா, தென் அமெரிக்கா, பெரு, நியூசிலாந்து நாடுகளின் கடற்கரைகள், தெற்கு அட்லாண்டிக், பசிபிக் கடற்கரைகள்தான் பென்குயின்கள் ஜாகைகள். ஸ்பெனிஸிடே என்ற குடும்பத்தைச் சார்ந்த பென்குயின்களில் 6 குரூப்புகள் இதில் சக்ரவர்த்தி, ராஜா, நீலம், பாறை, பெரிசுகள் என 17 இனங்கள். எல்லா இனத்துக்கும் மேல்புறம் மிட்நைட் ப்ளூவும், அடிப்புறம் வெள்ளை நிறமாகவும் இருக்க…
-
- 14 replies
- 2.6k views
- 1 follower
-
-
முன்குறிப்பு: இந்தக்கட்டுரையில் இடம்பெறும் பெயர்களும் தகவல்களும் உண்மையானவை; உண்மையத் தவிர வேறில்லை; உண்மையை உறுதி செய்வதற்காகக் கற்பனை தவிர்க்கப் பட்டுள்ளது. ============================================= உலக நாடக இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த வில்லியம் ஷேக்ஸ்பியர் என்ற பெயரைத் தமிழில் ‘செகசுப்பியர்’ என்று ஒருவர் மொழிபெயர்த்து எழுதி இருந்தார் ஒருவர். செகப்பிரியர், செகசிற்பியர் என்ற மொழிபெயர்ப்புகள் எல்லாம் அந்தப் பெயருக்குத் தமிழில் உண்டு. எனக்கோ பொல்லாத கோபம். பெயரை மொழிபெயர்க்கலாமா? பெயரின் உச்சரிப்பை – ஓசையை மாற்றலாமா? இதற்காகப் பலரிடம் சண்டை போட்டதுண்டு. பலர் சொன்ன சமாதானங்கள் எதிலும் நான் உடன்பட்டதில்லை. பெயர் என்பது ஒருவரின் தனிப்பட்ட அடையாளம்.; அவனது அந…
-
- 0 replies
- 3.6k views
-
-
பெயரும் ஆண் அல்லது பெண்ணும் எனக்கு ஒரு சந்தேகம் இங்கு மட்டுமல்ல பல இணையத்தளங்களிலும் கருத்துக்களங்களில் எழுதுபவர்கள் ஆண்கள் பெண் பெயருடனும் பெண்கள் ஆண் பெயருடனும் தம்மை பதிந்துவிட்டு எழுதுகின்றார்கள். நாம் வேறு எங்கும் போகவேண்டியதில்லை யாழிலேயே அது தற்போது அதிகரித்துவருகிறது. அதற்கு அத்தாட்சியாக ஆளையாள் தேடுவதையும் தனி மடல் போடும்படி கேட்பதையும் தற்போது கூடுதலாக பார்க்கக்கூடியதாக இருக்கிறது. ஆனால் என்னைப்பொறுத்தவரை ஆண் பெண் இருபாலாருக்கும் மனதளவிலும், எழுத்தளவிலும், ஏன் சிந்திக்கும் அளவிலும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. உதாரணமாக (ரதி மன்னிப்பீர்களாக) சாதாரணமாக ரதி படுக்கத்தான் கூப்பிடுகின்றேன் என்று எழுதுவார். என்னைப்பொறுத்தவரை ஒரு பெண் இப்படி …
-
- 2 replies
- 1.7k views
-
-
அன்பான கள உறவுகளுக்கு!!!!!!!!!!! நீண்டகாலமாக என்னுள் உறுத்துகின்ற ஒரு விடையத்தை உங்களுடன் பகிருகின்றேன். எங்களுக்கு எமது அப்பா ,அம்மா நல்ல அழகான தமிழ்பெயராக வைத்திருப்பார்கள் . அவை பெரும்பாலும் தங்களது மூதாதையரை ஞாபகப்படுத்தவோ ,அல்லது மத நம்பிக்கையின் பேரிலேயோ அமைந்திருக்கும் . ஆனால் நீண்ட அழகான பல அர்த்தங்களைத் தரக்கூடிய பெயர்களையே எமது பெற்ரோர்கள் எங்களுக்குச் சூட்டி எங்களை அழகு பார்த்தனர் . பல காரணங்களுக்காக இடம் பெயர்ந்த நாங்கள் பல காரணங்களுக்காக எமது பெயர்களை குறுக்கி, அல்லது பிரஜாஉரிமை கிடைத்தவுடன் ஐரோப்பியப் பெயர்களை வைக்கின்றோம். இதற்கு காரணங்களாக வேற்ரு இனத்தவர்கள் தங்கள் பெயரைக் கூப்பிடக் கஸ்ரப்படுகின்றனர் என்று ஒரு வியாக்கியானத்தைத் தருகின்றார்கள் . கோ…
-
- 38 replies
- 2.7k views
-
-
சமதர்மமும் வகுப்புரிமையும் - வ.கீதா 1940களில் கம்யூனிசத் தோழர்களுடன் பொதுவுடமை குறித்து விவாதிக்கையில் பொதுவுடமை என்பது வேறு, சமதர்மம் என்பது வேறு என்றும், பொதுவுடமை என்பது கணக்கு சம்பந்தமுடையது- எல்லோருக்கும் எல்லாமும் சம அளவில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற பொருளில் - ஆனால் சமதர்மம் என்பதோ உரிமை தொடர்பானது என்றும் பெரியார் வாதிட்டார். பிறப்பின் அடிப்படையில் ஒருவரது நடத்தையும், மதிப்பும், உரிமையும் தீர்மானிக்கப்படும் மனுதர்ம சமுதாயத்தை சீர்திருத்த, மாற்றியமைக்க பொது அறமும் பொது உரிமையும் பேசும் சமதர்மம் தேவை என்றும் அவர் விளக்கினார். கடந்த சில வாரங்களாக வட மாநிலங்களில் நடைபெற்று வந்த வகுப்புரிமை வழங்கப்படலுக்கு எதிரான, இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டமான…
-
- 3 replies
- 2.4k views
-
-
திருகோணமலையில் ஒரு வயது குழந்தையை தாக்கிய தந்தையை நேற்று இரவு (02) கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திருகோணமலை திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் முது ஆருந்திவிட்டு ஒரு வயது குழந்தைக்கும், மனைவிக்கும் தாக்கியதாக பொலிஸாருக்கு கிடைத்த அவசர தொலைபேசி அழைப்பை அடுத்து, சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் சந்தேக நபர் மது போதையுடன் ஒரு வயது குழந்தையை தாக்கியதாகவும் இவ்வாறு தினமும் மது போதையுடன் மனைவி பிள்ளைகளை சந்தேக நபர் தாக்குவதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதையடுத்து குறித்த சந்தேக நபரை தடுத்து வைத்துள…
-
- 1 reply
- 655 views
-
-
பெற்ற தாய்க்கு உணவளிக்காமல் வீட்டை விட்டு துரத்திய மகன்கள் கைது சென்னை: வயதான காலத்தில் பெற்றோர்களை கவனித்துக்கொள்ளாமல் வீட்டைவிட்டு விரட்டும் பிள்ளைகளை போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகிறார்கள். பெற்ற தாய்க்கு சாப்பாடு கொடுக்காமல் வீட்டைவிட்டு துரத்திய மகன்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். பெற்றோர்களைப் புறக்கணிக்கும் பிள்ளைகளைப் போலீஸார் பிடிக்க ஆரம்பித்துள்ளனர். அந்த வரிசையில், 70 வயது தாயாருக்கு சாப்பாடு கொடுக்காமல் வீட்டை விட்டு விரட்டிய 2 மகன்களை சென்னை [^] வேப்பேரி போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட தாயின் பெயர் ஆதிலட்சுமி. இவரது கணவரான செங்கல்வராயன் காலமாகிவிட்டார். இவர்களுக்கு சண்முகம், மணி, ஜெகன் என்ற 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சண்மு…
-
- 0 replies
- 637 views
-
-
மனஅழுத்தம் ஒரு தொற்றுநோய். வாழ்க்கையின் சூழல் பலருக்கும் மன அழுத்தத்தை தரலாம். ஆனால் அது குழந்தைகளுக்கும் பெற்றோர்கள் மூலம் பரவுகிறது என்கிறது புதிய ஆய்வு. பின்லாந்து கல்வி அமைப்பு ஒரு ஆய்வை நடத்தியது. டீன்ஏஜ் சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் 500 பேரை பரிசோதித்தது. அதில் அவர்களுக்கு இடையே உள்ள தொடர்பால் குழந்தைகளுக்கு மனஅழுத்தம் தொற்றுவது தெரியவந்துள்ளது. குறிப்பாக வேலை செய்யும் பெற்றோர்களின் அனுபவமே அவர்களின் குழந்தைக்கு மன அழுத்தம் தொற்ற அடிப்படையாக உள்ளது. ஒருவர் தனது அலுவலகத்தில் மேலதிகாரி மற்றும் ஊழியர்களுடன் மனக்கசப்பான அனுபவங்களைப் பெறலாம். அதனால் ஏற்படும் மனச்சோர்வுடன் அவர் வீட்டை அடை கிறார். அந்தச் சோர்வு குறையும் முன்பே வீட்டில் குழந்தைகள் சேட்டை ச…
-
- 3 replies
- 1.1k views
-
-
இந்தத் தலைமுறை... என்ன மாதிரியான, மனோநிலையில் இருக்கிறார்கள் என்பதை... இதைவிட அழகாக யாராலும் சித்தரிக்க முடியாது.
-
- 2 replies
- 760 views
-
-
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தனது பெற்றோருக்கு காவல்துறையினரால் நிகழ்ந்த கொடுமைகளுக்கு தீர்வு தேடி வழக்காட முன்வந்துள்ளார் பாதிக்கப்பட்டோரின் முதல் மகனான மலைச்சாமி. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த குருவையா என்ற விவசாயியையும் அங்கம்மாள் என்ற அவரது மனைவியையும் 13 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையினர் ஒரு திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்கு 7 நாட்கள் சித்ரவதை செய்து விசாரித்ததாக கூறப்படுகிறது. சித்ரவதை தாங்காமல் சிறு விவசாயியான குருவையா இறந்து விட்டார். காவல்துறையின் பிடியில் இருந்த போது தனது கணவர் கண் முன்னே அங்கம்மாள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட அங்கம்மாளின் மகனான மலைச்சாமி தற்…
-
- 0 replies
- 737 views
-
-
-