கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
கண்ணே இதுவரை துப்பாக்கியும் தோட்டாவும் போல் இணைந்திருந்த எம்காதல் இத்துடன் முடிந்ததா என்று எண்ணாதே இது என்ன சாதாரண காதலா தண்ணீரும் உரமும் இட்டா எம்காதலை வளர்த்தோம் இரத்தமும் தசையும் இட்டல்லவா எம்காதலை வளர்த்தோம் எல்லாளன் துட்டகைமுனு காலத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளாக வேர்விட்டு தளிர்விட்டு பூவிட்டு கனிவிட்ட காதலல்லவா இத்தனை இலகுவில் அழிந்துவிடுமா என்ன என்மேல் நீ கொண்ட காதல் மாறாதிருப்பது போல உன்மேல் நான் கொண்ட காதலும் அப்படியே இருக்கும் காலம் வரும் வரை காத்திரு கண்ணே நான் மீண்டும் உன்காட்டில் புலியாக வருவேன் அதுவரை உன்காலில் முள்ளாகவாவது இருப்பேன் http://gkanthan.wordpress.com/index/eelam/kaathal/
-
- 8 replies
- 5k views
-
-
கோத்தபாயா..! காலக்கெ(கே)டு உனக்கு நாங்கள் வைப்போம்... கவிதை - -இளங்கவி உன் காலத்தின் கெடு கட்டுப்படுத்தா வீரர்கள் காலவதியான உன் வீரத்துக்கு கட்டுப்படா வேங்கைகள்.... எத்தனை காலக்கெடு உனக்கு எத்தனை தோல்விகள் இருந்துமா புரியவில்லை; புலிகள் உன் சொல்லெல்லாம் சுட்டெரிக்கும் தமிழீழச் சூரியன்கள் கோழையின் சொல்லுக்கு ஓர் துளியளவும் மதிப்பில்லை எம் வீரர் சொல்லமாட்டார் சொன்னால் உன்னுயிர் உனக்கிலை... அப்பாவி உயிர்களை கொன்றொளிக்கும் ஆசாமி அதன் பின்னர் சொல்லிடுவாய் புத்தம்..! சராணம்..! கச்சாமி..! தமிழீழ போர்களத்தில் எங்கள் பூக்கூட நெருப்பாகும் புரிய மறுத்துவிட்டால்; உங்கள் பிணங்களைக்கேள் பதில்சொல்லும் புலிகளை நினைத்தாயோ; உ…
-
- 12 replies
- 5.3k views
-
-
கோத்தருக்கு ஒரு விருந்து ............. ஈனப்பிறவியே கோத்தபாய ....... தமிழ் ஈழ பெண்கள் உன் கூலிகளுக்கு விருந்தா .. நாக் கூசவில்லை உனக்கு ..... .சூடு சுரணை இருக்க உனக்கு ..... .மானமுள்ள தமிழ் பெண் கடலில் விழுந்து சாவளே தவிற உன் கூலிகளுக்கு முந்தானை விரிக்க மாடாள் .இருந்து பார் அண்ணர் பிரபா ,ஒரு பாடம்புகடுவார் அப்போது உன் வாய் கொழுப்பு அடங்கும் . .உலகெலாம் பறை சாற்றும் உன் ஈனத்தனத்தை உலகம் பார்த்து சிரிக்கிறது உன் வாயும் உன் நினைப்பும் ........ என் செய்வது உங்கள் ஆணவம் உலக நாடுகளின் ஆதரவு உங்களை இப்படி பேசவைக்கிறது தர்மம் ஒன்று இருந்தால் அது வாய் திறக்கும் அப்போது உன்னயும் உன் கூலிபடையையும் உன் ஜால்ராக்களையும் விழுங்…
-
- 2 replies
- 1.3k views
-
-
-
கோப்பையில் குடியிருக்கும் என் வாழ்வு பற்றிய புரிதல் நிரப்பி முடிக்க இனி ஒன்றும் இல்லை எல்லா glass களிலும் நிரம்பித் தளும்புகின்றது மது முதலில் சின்ன எரிச்சலுடன் இறங்குகின்றாள் தேவதை ஆடை கழற்றி அணங்கு ஆடுவது போன்ற பிரமை உடலின் நரம்பெங்கும் உலவுகின்றது ஒவ்வொரு முடிச்சுகளிலும் சொர்க்கம் ஒவ்வொரு உறிஞ்சல்களிலும் அற்புதம் வெற்று glass களிலும் மிச்சமிருக்கின்றது ஒருவனின் வாழ்வு பற்றிய புரிதல் ************ கடந்த வருடம் என் glass களில் இன்னேரம் மரணம் நிரம்பியிருந்தது மரணச் செய்தியால் என் வாழ்வுக் கிண்ணம் நிறைந்திருந்த காலம் அது என் நண்பர்கள் என் மருமக்கள் என் உறவுகள் என்று கொத்தாய் அழிந்த காலம்…
-
- 7 replies
- 1.1k views
-
-
காலமெல்லாம் கடும் பனியிலும் ஓடி ஓடி உழைத்தவன் - இன்று உறங்கு நிலையில் ஓய்வெடுக்கின்றான் நெஞ்சுறுதியுடன் போராட போனவன்- இன்று வீதி விபத்தில் சிக்கி சிதைந்து போனான் மனைவி மக்களை அன்பாய் நேசித்தவன் - இன்று அசையா மனிதனாக மருத்துவ மனையில் எல்லா கேள்விகளுக்கும் காலம்தான் பதில். ஒரு சோக நிகழ்வு ரெண்டு நாட்களுக்கு முன்பு நிகழ்ந்தது. அவர் பிழைத்து வர இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
-
- 12 replies
- 1.6k views
-
-
மையவாதச் சகதிக்குள் இருந்து எட்டிப்பார்க்கும் தலைகள் அரிப்பெடுக்கும் முதுகை சொறிய எவன் வருவான் என தேடுகின்றது உலகின் எந்த மூலைக்குள் போனாலும் ஊர்க்காரனே சொறிந்துவிடவேண்டும் நாலுபேராவது சொறிந்தால் தான் வாழ்வுக்கு அர்த்தம்கிடைக்கின்றது இருந்தும் நாற்பதுபேர் சாட்டையுடன் நிற்பதை என்னும் உணர்ந்துகொள்ளவில்லை. எதிர்பார்த்தபடி அரிப்பு வழமைபோல விரைவில் கூடிவிட்டது தங்களுக்குள் சொறிய ஆரம்பித்துவிட்டார்கள் இம்முறை உங்களுக்குள் சொறிந்து விழையாடும் கோமாளி ஆட்டத்தில் மக்களுக்கு ஆர்வமில்லை ஏனெனில் துப்பாக்கிகளால் எமக்குள் சொறிந்துவிழையாடிய ஆயிரமாயிரம் விழையாட்டை கண்டு சலித்தவர்கள் கள்ளன் பொலீஸ் விழையாட்டு எமக்கு உயிரை எடுத்து விழையாடும் துரோகி த…
-
- 17 replies
- 3.4k views
-
-
பணத்திற்காய் சீதனச் சந்தையில் உனது வாழ்க்கையை பொருளுக்காய் விற்கும் ஆண் ஜாதியே- நாம் உனக்காய் குரல் கொடுக்கவா? இந்த கோழைகளுக்காக குரல் கொடுப்போம் சீதனம் என்னும் கொடிய அரக்கனை கொன்றொழித்திடுவோம்... பெண்ணே விழித்தெழு! பேரம் பேசி தனது வாழ்க்கையை விற்கும் நிலையில் இந்த ஆண்மகனா? அவமானம்..... அவமானம்.... கேவலம் கேவலம் உன் நிலை கேவலம் பணத்திற்காய் விலைபோகிறவள் விபச்சாரி பணத்திற்காய் வாழ்க்கையை விற்பவன் நீ மட்டும் எந்த வர்க்கம்? நீங்கள் விலைக்கு வாங்கி விளையாட நாங்கள் பொம்மைகள் அல்ல -நாங்கள் மானமுள்ள, உணர்வுகொண்ட மாதர்கள் பணம் செலுத்தி,பல் இளித்து பஞ்சனை நாங்கள் தேடவில்லை மானம் உள்ள ,எங்களுக்கேற்ற மகராஜனைத் தேடுகின்றோம்.…
-
- 34 replies
- 6.5k views
-
-
என்னைக் கோவப் படுத்தியதுக்காக உன் மேல் நீ கோவப்படுகிறாய் உன்னைக் கோவப் படுத்தியதுக்காக என் கோவத்தை வெறுக்கிறேன் * என்னால் உன் கோவங்களை புரிந்து கொள்ள முடிவதில்லை ஒரு விதத்தில் அதுவும் உதவி செய்கிறது எனக்கு ஆங்கிலம் புரியாததால் * உன் கோவத்தை என் மேல் இறக்கி வைத்துவிட்டு போய்விடுவாய் பாவம் நான் படாத பாடுபடுகிறேன் உன் கோவத்தை யாரிடமாவது இறக்கி வைக்க * உன் ஆசையை காட்டுவதற்காக இப்பிடியா வார வாரம் என்கூட கோவம் போட்டு பேசாமல் விடுகிறாய் சில தினங்கள் * உன்னை அழகாய் எனக்கு காட்ட விரும்புகிறாய் என்றால் சொல்லி இருக்கலாமே உனக்கு விரும்பிய அழகுசாதனப் பொருட்கள் வாங்கி தந்திருப்பேனே அதை விட்டுட்டு ஏன் என் மேல் அடிக்க…
-
- 10 replies
- 1.6k views
-
-
கோவம் குட்டிக் குட்டிக் கதைகள் சொல்லி குதூகலப்படுத்துபவனே சபை நடுவே துணிவுடன் உலாவரும் சகலகலா வல்லவனே விடிய விடிய தூக்கமின்றி விருப்போடு பேசிப் பேசி சிரிப்புகளோடு கூடிய அரட்டையில் சிந்திக்கவும் சிறகடிக்கவும் வைப்பவனே தேடலின் நாயகனே வானொலியின் தலைவனே அரட்டையில் மன்னவனே எனதன்புத் தம்பியே அன்றொரு நாள் எனை நீ திடீரென சந்தித்த போது அடைமழை பெய்கையில் குடையின்றி நான் நனைந்ததையும் பெரியம்மா வீட்டு நாயை தைரியமாக களவாடியதை தெருவோரமாக ஒதுங்கி நின்று தெரியாமல் பார்த்த நீ சொல்லமாட்டேன் யாருக்கும் லொலிபொப் வாங்கித் தா என செல்லமாக கேட்டதும் செலவழிக்கின்றேன் இப்போதும் நான் ஆனால்... யாவற்றையும் யமுனாவாக …
-
- 12 replies
- 3.4k views
-
-
கௌதம புத்தருடன் - ஒரு கவிதா நேர்காணல் ஜெ.கி.ஜெயசீலன் நான்: தார்மீகப் பெரு நெறியைத் தக்கபடி போதித்து யார் மீதும் பகையில்லா யாகத்தைச் செய்தவனே! உனதடியை வணங்கி வரும் உன்னரிய புத்திரர் தாம் மனதறியச் செய்துவரும் மா கொடுமை அறியாயோ! ஊருறங்கும் நள்ளிரவில் ஊளைவிடும் 'ஷெல்' நரிகள்! போருறங்காப் பூமியிதில் பொழுதெல்லாம் குண்டு மழை நீ வளர்த்த கருணையினை நெஞ்சத்திற் பேணாமல் தீ வளர்த்த தென்னிலங்கை திருந்த வழி சொல்வாயா? புத்தர்: அன்பார்ந்த தமிழ் மகனே! அவலத்தின் உள்ளே மண்பாய்த்து அழிகின்ற மடமை பல கண்டேன்! போதி மர ஞானமதைப் போதித்தும் என்பக்தர் நீதி தரவில்லையெனும் நீசத்தாற் துடிக்கின்றேன்! கொல்லாமை பேரறமாம்; குரலெடுத்துக் கூறிய என் சொல்லாலே ஏமாற்றிச்…
-
- 1 reply
- 607 views
-
-
எஞ்சியுள்ள நாட்களுக்குள் எங்கள் போராட்டமும் வாழ்வும் பற்றி எழுத உட்க்கார்ந்தால் துக்க தினமாகும். உள்ளமும் உயிரும் சோர்ந்து போகிறது. 2009 மே 19ல் இருந்து முயன்று ஆறு மாதங்களாக எழுத முயன்று இறுதியில் 2009 டிசம்பரில்தான் என்னால் “தோற்றுப் போனவர்களின் பாடல்” அஞ்சலியை எழுத முடிந்தது. மே 19 என்னைபோலவே பல லட்சம் மக்களை ஆழுமைகளை உடைத்து நிரந்தர விரக்தியுள் முடக்கிய கரிநாளாகும். இருக்கிற கொஞ்ச நாட்களில் நான் சில விடயங்களை எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லவேண்டும் என நினைக்கும்போதெல்லாம் விரக்தியில் மனசு நொருங்கிப்போகிறது. வெளியில் இருந்து பார்கிறவர்கள் நினைக்கிறதுபோல வன்னியில் விவாதங்களேயற்ற சொல்வதைச் செய் என்கிற சூழல் எல்லா மட்டங்களிலும் நிலவியது என்பது உண்மையில்லை. முஸ்லிம்கள்…
-
- 0 replies
- 783 views
-
-
[size=5]திணிக்கப்பட்ட பாதையின் ஓரத்தில் படிந்திருக்கும் புழுதிகளின் ஓலங்கள் தற்கொலை செய்துகொண்ட ஒருவனின் இறுதி மூச்சுக்களாய் தீண்டும் ஒவ்வொருவரையும், அநாதரவான அந்த ஒலிகளின் ஆழத்தில் வியாபித்துக்கிடக்கும் நிராகரிக்க முடியாத நிர்ப்பந்தமொன்றின் உறையாத கறைநிழலில், ஒடுங்கியடங்கிக்கிடக்கும் அவனது கனவுகள் முகத்திலறைந்து போகும். வினோத திரையொன்றால் முகங்களை மறைத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் விலத்திக்கொண்டிருப்போம் எந்த சங்கடமுமில்லாமல், ஏற்கனவே திணிக்கப்பட்ட பாதையில் விலத்திக்கொண்ட சுயவன்மங்கள் சிரித்துக்கொள்ளும் சத்தமில்லாமல்........!!!![/size]
-
- 5 replies
- 693 views
-
-
தந்தையை இழந்த சகோதரிக்கு ஒரு தம்பியின் (கவி)மடல்... சகோதரி, யாரிவன் என்ற விசாரணைக் கோதாவில் இறங்காமல் தந்துவிடு உந்தன் சோகத்தின் ஒரு சிறு துளி தன்னை! அருமை அப்பா - உன்னை அழவைத்துப் பார்த்தறியாதவர்! இன்று கொடும் சோகப் பிணியில் விழும் எந்தன் சேய் என்ற நினைவிழந்து நிர்க்கதியாய் விட்டுச்சென்ற சோகம் யாரறிவார் உன்னையன்றி! ஆனாலும் சகோதரி உந்தன் சோகம் நானறிவேன்... சோகத்தின் சுவடுகள் உன்னிடம் மட்டுமல்ல - உலகில் கோடி மக்கள் உள்ளார் சொந்தம் சொல்ல! ஒருயிர் போனதன்று தேம்பியழுவதா குழந்தை போல? பாசப் பசையில் மறந்துவிடுவதா உந்தன் வாழ்வை மெல்ல? வேண்டாம் சகோதரி செய்வோமே புது விதி! பரிதாப வோட்டுக்கள் உந்தன் மனவங…
-
- 7 replies
- 1.2k views
-
-
http://inioru.com/?p=37023 ஆதாரங்களை அழி சேதாரங்களை துடை துயிலுமில்லங்களைக் கிளறு நடுகற்களை நாசமாக்கு வாசனைத்திரவியங்களைத் தெளி நாற்றத்தை மறை வருக வருக ஆசியாவின் அதிசயத்தை பார்க்க வந்த அம்மையே வருக நான்காண்டுக்குப் பிறகு நாடு பார்க்கவந்துள்ளார் வருக கொத்தாகக் குண்டு போட்டு குற்றுயிராய் குறையுயிராய் அக்கினிக் காட்டிடை கிடந்து நாம் துடிக்கையிலே பன்றிக்கு பால் கொடுத்த பரசிவனாரும் வரவில்லை பாரம் சுமப்பவரே வாருமென்ற பரமபிதாவும் வரவில்லை அயலவனும் அடுத்தவனும் அழித்தவனுக்கே வழி மொழிந்தனர் அம்மையே ஆண்டு நாலு போய் திங்கள் மூன்று ஆனபின் இப்போதாகிலும் வந்துள்ளீர்கள் பிணம் புணரும் தேசம் உங்களை வரவேற்கிறது கண்ணீரும் ரத்தமும் காய்ந்துவிட்டதென்ற நம்பிக்கையுடன் வந்திருப்பீர்கள் வந்து பா…
-
- 0 replies
- 615 views
-
-
-
சங்கமம் ஒற்றுமை உயர்வில் சங்கமம், ஆத்திரம் அழிவில் சங்கமம், நதி கடலில் சங்கமம், கதிரவன் மேற்கில் சங்கமம், கற்பனை கவிதையில் சங்கமம், பிரிவு சோகத்தில் சங்கமம், ஐயம் தோல்வியில் சங்கமம், வசந்தம் இளமையில் சங்கமம், காதல் இதயத்தில் சங்கமம், மனிதநேயம் பண்பில் சங்கமம், நல்மணம் அன்பினில் சங்கமம், பிறப்பு இறப்பில் சங்கமம், படிப்பினை மனதில் சங்கமம், ஊக்கம் உற்சாகத்தில் சங்கமம், உழைப்பு உயர்வில் சங்கமம், முயற்சி வெற்றியில் சங்கமம்.
-
- 2 replies
- 1.1k views
-
-
சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்த குடி ... சங்கள் தொடங்கி வயிறு வளர்க்கிறது .. மாதம் மாதம் கூடுகிறார் சேர்கிறார் .. டீயும் ..வடையும் ..ரோலும் கட்டியபடி .. ஒரு குடும்பம் அதில் நாலுபேர் நாங்களே .. எல்லாம் மாமன் மச்சான் சித்தப்பன் .. நீ இன்று தலைவர் நான் நாளைய தலைவர் .. எங்களுக்குள் எடுக்கும் தீர்மானம் இது .. கணக்கும் இல்லை வழக்கும் இல்லை .. கேள்விகேட்க பத்து ரூபா கொடுக்கணும் .. பதில் சொல்ல செக் கொடுக்கணும் போல .. சிட்டைகள் வந்து விழுகுது சிரமதான வேலையாம் .. சீரழிந்து கிடக்கும் உறவு பாணுக்கு காசில்லாமல் ஊரில் .. சீட்டு காசும் வட்டிகாசும் வெள்ளையா ஆகுது சங்கத்தில் .. சின்னவீடு எல்லாம் பெரியவீடு ஆகுது லோனில் .. சின்னக்கடை சூப்பர் மார்கெட் ஆனது ஊரான் காசில்…
-
- 3 replies
- 820 views
-
-
சங்கே முழங்கு ஈழத்தின் மானத் தமிழனம் உன்னத போராட்டத்தால், பல வீர மறவர்களின் தியாகத்தால் தமக்கென ஒரு நாட்டை ஆக்கி கொண்டதென சங்கே முழங்கு அன்றேல் ஈழத்திலிருந்த தமிழினம் மானத்தோடு உன்னதமாக போராடி அடிபணியாது முற்று முழுதாக அழிந்து போனது என்ற நெருப்பு வரிகளை சொல்லி முழங்கிடு இந்த யுகம் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்ட தலைவனை இந்த இனத்துக்கு தந்தது என்று உன் வரலாற்று பதிவில் எழுதி முழங்கிடு.
-
- 3 replies
- 1.5k views
- 1 follower
-
-
ஜ“ரணிக்க முடியவில்லை; திரும்பத் திரும்ப ரணங்களின் ஜ“ரணம். நாங்கள் சாதாரணங்கள். எங்களுக்கு ஏன் சதா ரணங்கள்?
-
- 4 replies
- 1.3k views
-
-
கௌசல்யனின் சாவறிந்த தினம் எழுதப்பட்ட கவிதை. இன்று கௌசல்யனின் ஓராண்டு நினைவு நாளை முன்னிட்டு மீளவும் பதிவாகிறது. சதி கொன்ற சாவு. 'கௌசல்யன்" சத்தமின்றி இருந்த வீரன் சத்தமின்றி எங்கள் மனங்களை வென்று போன சத்தியன். மோப்பர்களை மீட்பர்களாய் நம்பிய பாவம் எங்கள் மீட்பர்களே உங்களை நாம் இழந்து போக அரச மோப்பரே சாட்சியாக..... கண்காணிப்போர் கண்களில் உங்கள் சாவு குழு மோதல் என்பதாக..... சார்ந்து நின்று நீதி சொல்லும் பணிசெய்ய வந்த பிணியரே இவர்களெல்லாம். கருணாவின் சதியென்று கதைபூசி கௌசல்யன், புகழன், செந்தோழன், நிதிமாறன் சாவிதனை விதியென்றா எழுதிவிட....? இல்லையில்லை, சதிகொன்று போனதெங்கள் சந்ததியின் விதிம…
-
- 7 replies
- 2.1k views
-
-
வழுவழுப்பான யுத்த வீதியின் சலனமில்லா சதுரங்களில் சாம்ராஜ்ய சண்டைகளில் சமத்துவம் தேடி.......... கறுப்பன் வீழ்த்திய வெள்ளையனின் சிரசுகள் களத்தின் ஒரத்தில் கதியின்றி.... துண்டாடிய சிரசுகளில் சிப்பாய்க்கு சில்லறைகள். அரசிக்கு ஏன் ஆயிரங்கள் கட்டங்களில் முன்னேறி வெள்ளை ராஜாவின் கதைமுடித்து களம் இப்போ கறுப்பர் கையில் அளிவிலா பலம் பெற்றும் அரசனவன் போனபின்பு ஏன் ஆளாது அடங்கிப்போனாள் அரசியவள் ஆட்டம் ஓய்ந்து போச்சு மேசை மீதான வன்முறைகள் பலகை மேல் மரண வாடை உணர்வதில்லை குப்புறக் கவிழ்ந்த முகங்கள். …
-
-
- 1 reply
- 989 views
- 1 follower
-
-
சதுரங்கம் - வ.ஐ.ச.ஜெயபாலன் சிருஸ்ட்டி வேட்கையில் ஆனைமலைக் காடுகள் பாடுகிற அந்தி மாலை. அங்கு உயிர்க்கிற மந்திரக் கம்பளத்தில் உன்னையே சுற்றுதடி மனசு. இது தீராத காதலடி நீதான் கண்டு கொள்ளவில்லை. அதோ புல்லின்கீழ் கட்டெறும்பாய் தொலை கீழ் மூங்கிற் காடுகளுள் ஊரும் யானைபோல உண்மையில் என் காதலும் பெரியதடி. காமத்தில் சூரியன் பொன்சிந்த இறங்கி வர. நாணிப் புவிமகள் முந்தானையாக முகிலை இழுக்கின்றாள்.. ஆகா அப்பன் குதிருக்குள் இல்லை என்கின்ற உனது நாடகம் அல்லவா இது. ஆண் பெண்ணுக்கிடையில் ஒரு கண்ணுக்குத் தெரியாத சதுரங்கப் பலகை எப்போதும் விரிகிறது. என்னோடு இன்னும் சிலரை பந்துகளாய் எறிந்து ஏந்தி …
-
- 17 replies
- 3k views
-
-
போரியலின் அடிப்படை படைகளின் அணி ஒழுங்கு தகமைகளின் நெறி வழி ஒரு சிறந்த போரியல் ஆசான் .. ஆரம்பிப்பவன் சிப்பாய் ஆனால் கட்டளை பீடம் அரசன் நோக்கம் எல்லாம் தன் தலைவனை காப்பது மட்டுமே சூழ்சி வலையில் இருந்து .. இத்தனைக்கும் படையை ஒழுங்கு படுத்தி பகையை நிலைகுலைய செய்வதும் வைப்பதும் ராணியாம் உதவிக்கு மந்திரி நெடுக்க வழிநடக்க .. முன்னேருவோர் வீழ்வார் என தெரியும் ஆனாலும் அடுத்த கணம் நிலையை பலப்படுத்தி பதில் தாக்குதல் நடக்கும் இறப்பு பெறுமதி வீழ்ந்தவர் பொறுத்து கணிக்கப்படும் ... ஆனாலும் சதுரங்கம் வாழ்க்கையின் மிக சிறந்த ஆசான் போரியலின் ஆசிரியன் களங்களை மாற்றி அமைக்கும் வல்லமை தந்திரங்களை உடைத்து வெளி வரும் கெட்டித்தனம் .. காப்பு தாக்குதல் திறன்களை…
-
- 3 replies
- 629 views
-
-
பேரலையோடு பரள் பேசும் புதுக்கவிதை சங்கமச் சத்தம்... பூ அவிழ பூக்காம்பு கேட்டு மயங்கும் மரகத வனப்புச் சத்தம்.. இளவெயில் பட்டு இலையூஞ்சல் ஆடும் குயில் பாட்டு குழையும் சத்தம்... மூங்கில் காட்டில் முட்டும் காற்று முத்தம் தந்து முனகும் சத்தம்.. மெல்விரல் படின் இலை மூடும் தொட்டாச்சிணுங்கி நாணிச் சிணுங்கும் வெட்கச் சத்தம்... காதல் மொழி பேசும் அழகு பேடைக்கிளி இரண்டும் கொஞ்சும் சத்தம்... நள்ளிரவு நிலாநேரம் நீரின் மேலே தவளை தாவும் தளுக் சத்தம்... வண்டு வரும் பூச்செண்டு அறியும் ரம்மிய கமக ரீங்காரச் சத்தம்... கேட்கா சத்தம் கேட்கும் நித்தம் கேள்விக் குறியாய் வாழ்க்கை மட்டும்.. வாழச் …
-
- 12 replies
- 2.2k views
-