கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
மனிதன் காட்டுக்குள் ..... நுழையும் போது...! குரங்குகள் தாவும் ...! நரிகள் ஊளையிடும் ...! குருவிகள் ஓலமிடும் ..! இத்தனையும் அவை சந்தோசத்தால் .. பயத்தால் செய்யவில்லை.... மரங்களுக்கு அவை .... கொடுக்கும் -சமிஞ்சை... மனிதர்கள் வருகிறார்கள்... மரங்களே விழிப்பாக ..... இருங்கள் எச்சரிக்கின்றன ....!!! & இயற்கை வள கவிதை கவிப்புயல் இனியவன்
-
- 3 replies
- 1.1k views
-
-
எமக்குத் தெரியும் எங்கு நீ இருக்கிறாய் என்பது அவர்கள் காட்டிய முகம் அவர்கள் காட்டிய உடல் இதிலெல்லாம் இல்லாதவன் எங்கிருப்பாய் என்பது எமக்குமட்டுமே தெரிகிறது நீ அடிக்கடி சொல்வாயே எங்கெல்லாம் பேரினவாதம் நடக்கிறதோ அங்கெல்லாம் இருப்பேன் என அப்படியெனில் இங்குதான் இருக்கிறார் பின் எவனுக்கும் தெரியவில்லையே... அதெப்படி தெரிவேன் பகையை மூட்டியவனுக்கும் புகையை மூட்டியவனுக்கும் என்கிறாய். அவர்கள் காட்டிய படத்தில் ஈழத்தை தவிர்த்து வானத்தைப் பார்க்கிறது உன் கண்கள் அப்போதே தெரிந்துக்கொண்டோம் அது நீ இல்லையென நீ இருக்கும் துணிவில் அனைத்தையும் உன்னிடமே விட்டுவிட்டோம் இப்போதுதான் புரிகிறது நாங்கள் என்னசெய்ய வேண்டுமென்பது …
-
- 3 replies
- 1.2k views
-
-
எப்படி நான் வாழ்த்து அனுப்புவேன்? உலகெங்கும் அன்னையர் தினம் அன்பான வாழ்த்துக்களுடனும் அழகான பரிசுப்பொருட்களுடனும் இனியநினைவுகளாய் ஆயத்தமாக எங்கள் தாய்மண்ணில் எப்படி நகர்கிறது? பத்துமாதம் சுமந்து பெற்று பகலிரவாய் கண்விழித்து கண்ணுக்குள் மணியாய் காத்து வளர்த்த மகன், நட்ட நடுநிசியில் வந்த கொடுங்கோலர் கூலிகளால் அடித்து உதைக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட-அந்த கொடியநிகழ்விலிருந்து மீளாது துடித்து துவண்டு அழும் என் அன்பு அம்மா!-உனக்கு எப்படி நான் வாழ்த்து அனுப்புவேன்? உடைந்த உள்ளமும் உடையாத நம்பிக்கையுமாய் படைமுகாம்கள்தோறும் பதைக்கும் மனதுடன்-என் தம்பியை தேடி அலையும்-உனக்கு எப்படி நான் வாழ்த்து அனுப்புவேன்? உயிருடன் என் தம்பி மீள்வானா என இங்கிருந்து நான் தவிக்க, துள…
-
- 3 replies
- 605 views
-
-
நான் இசைப்பிரியா ஓயாத கடலின் அலைகள் இடைவிடாது என்னுடலில் மோதியபடி மடிந்து சரிகின்ற வேளையில் ஆழமாய் வேர்ப் பரப்பி விரிந்திருக்கும் நீர்த்தாவரத்தைப் போல என்னை இழுத்துச் செல்கிறாய் என் காலடியிலிருந்து ஒழுகி வழியும் நீர்த்துளிகள் உன் அழித்தொழிப்புக்குச் சாட்சியாய் வெளியெங்கும் உருண்டு கொண்டிருக்கும். அடர்ந்த வனத்தில் தனித்துத் திரியும் மிருகத்தின் வெறிகொண்டு என்னை வல்லுறவு செய்கின்றாய் சதையை ஊடுருவிய உன்னால் என் நிலத்தின் நிணநீர் ஓடும் எலும்புகளை என்ன செய்ய இயலும்? என் மார்பகங்களை அரிந்து வீசிய உனக்கு அதன் அடியிலிருக்கும் நெருப்பின் சூடு தகிக்கவில்லையா? நீ ஏந்திய இரும்புக் கருவியும் பாய்ச்சிய உடற்குறியும் இனி எழுச்சியின் அமிலத்தில் கரைந்தே போகும் …
-
- 3 replies
- 945 views
-
-
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் உண்மை தானடா புத்தன் நிற்கின்ற பூமியில்தான் இந்தப் படுகொலைகள் போதிச் சாமிக்கு வீதியெங்கும் தமிழ் பலிகள் ஒருவன் புலம் பெயர்ந்தது சென்றாய் ஒரு இனத்தையே புலம் பெயர்ந்து ஒடூகிறது அன்பை போதித்த நீ அடக்குமுறையை போதித்தது எப்போது ஆசையின்றி வாழ சொன்னாய் ஒசையின்றி ஒரு இனத்தை அழிக்கிறார்கள் உன் பெயரால் அண்டத்தின் அனைத்துயிர் பிண்டத்தை உண்டபின்தான் அடங்குமா உன் பசி…
-
- 3 replies
- 1.2k views
-
-
இனமாக எழுந்து இனமாக வீழ்ந்தார்கள் இனவிடுதலைப் போராட்டத்தில் வீழ்ந்த வித்துடல்களை ஒரு வயலில் விதைத்தார்கள் சமூக விடுதலைப்போராட்டத்தில் முளைக்கும் என்று விதைக்கப்பட்ட விதைகளை சாமியாக்கி சட்டைப்பையில் கொண்டுதிரிகின்றார்கள் இரண்டு விடுதலையினதும் எல்லைக்கு வெளியே சென்றவர்கள் இரட்டை ஒடுக்குமுறையில் இருந்தும் விடுபட முடியாத இறுக்கத்தில் வீழ்ந்தவர்களின் நினைவுநாள் திசைகாட்டி அறிவை இழந்து ஊனப்பட்ட இனத்துக்கு ஊன்றுகோல் ஊன்றி நடக்கவேண்டிய ஊன்றுகோலை தலையில் தூக்கி காவடி ஆடிவிட்டு அடுத்தது எப்போதென பழய பஞ்சாங்கத்தை புரட்டும் பூசாரிகள் ஒருபக்கம் உணர்ச்சிப்பெருக்கெடுத்து தேசம் நினைத்து தேகம் சிலிர்த்து காக்கிலோ அரிசிவாங்கக் கூட பெறுமதியி…
-
- 3 replies
- 1.2k views
-
-
இன்பமில்லாத பொங்கலில்.... -------------------------------- காலையெழுந்தவள் கடமை தனதென்று பொங்கினாளவள் பிள்ளைகளுக்காகவென்று...... நித்திரை தொலைந்த இரவுகள் ஆனதால் அதிகாலையிலே படுக்கையைத் துறந்து நீராடிவிட்டு சமையலறையை எட்டிப் பார்த்தேன் பொங்கியிருந்தாள் ! பொங்கியழுதது என் மனம் அப்போ...... நம்பிக்கை பொங்கிய நாட்களை எண்ணி நம்பிக்கை தந்தோர் நடைபிணமானது எண்ணி விழுப்புண்ணடைந்தோர் விதியினை எண்ணி விலங்குகள் போல சிறைகளில் வாடும் தமிழரை எண்ணி தை பிறந்தால் வழி பிறக்குமாம்(!) தமிழன் வாழ்வில் எப்போது பிறக்கும் பிணங்களின் மேலே கண்டிய நடனம் தமிழன் எலும்புகளாலே மாலைகள் சூடும் தமிழ்த் தலைமைகள் இருக்கும் வரையிலே இ…
-
- 3 replies
- 772 views
-
-
போறன் என்றோ ... போயிட்டு வாறன் என்றோ .. சொல்லிவிட்டுப் போகாத என் அண்ணன் அடிக்கடி வந்து நினைவில் நிக்கிறார்! அவரைப் பாத்தா ரெண்டு கேள்வி கேக்கோணும்; எண்டுதான் நான் நினைச்சிருந்தன்! -ஆனால் நேத்திரவு கூட கனவில வந்தவர்... என்னால ஒண்டுமே கேட்க முடியேல. சத்தியமாச் சொல்லப் போனால்.... அண்ணை செய்தது மெத்தச் சரி! ஏன் தெரியுமோ...!?? எங்கட சனத்தின்ர குணம் உங்களுக்குத் தெரியாதே? போறன் எண்டு சொல்லிட்டுப் போனாலும்... போத்திக்கொண்டு படுத்திருப்பாங்கள்! போயிட்டுவாறன் எண்டு சொல்லிட்டுப் போனாலும்... போத்திக்கொண்டுதான் படுத்திருப்பாங்கள்! என்னைப் பொறுத்தவரையில்........ அண்ணை எல்லாத்தையும் செய்திட்டார்! இதுக்குமேலயும் அந்த மனுஷனே வரோணும் உங்களுக…
-
- 3 replies
- 852 views
-
-
இளைஞனே சாட்டை எடு. சவுக்கடி கொடு. சமுதாயம் அழட்டும் சத்தம் போட்டு அழட்டும். போதும் நிறுத்து - மதம் என்ற பெயரில் மனிதனை கொல்வதை. எடுத்திடு ஒரு தீ கொளுத்திடு சாதி தரித்திர தலைவர்கள் தலை சாய்க்கட்டும் சரித்திர தலைவர்கள் உருவாகட்டும். புரட்சிகள் படை புது யுகம் விடை.
-
- 3 replies
- 1k views
-
-
துப்பாக்கி விழுங்கிய நரிகள் மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் உயிர்களையும் பாராளுமன்றத்தில் குழிதோண்டி புதைத்த பயத்தினால் பாராளுமன்ற உறுப்பினர் இம்முறை ஊருக்கு வரும்போது துப்பாக்கி விழுங்கிய நரிகளை கூட்டி வந்தார் அவரது நரிகள் அமெரிக்க இராணுவம் போல ஊரெல்லாம் ஓடின முதலில் ஒரு எருமைமாடு நரிகளுடன் ஸ்நேகம் கொண்டது நரிகள் தாமரை மலர்களால் தேய்த்து எருமை மாட்டை சேற்றிலே நீராட்டின வாய்பார்த்திருந்த கழுதையையும் நரிகள் வாசசவர்க்காரம் பூசி குளிப்பாட்டின ஊர்நாய்களுக்கு குறிஞ்சியின் உரியை கற்றுக் கொடுத்தன ஆடுகளுடன் கட்டிப்பிடித்தவாறு பகல்தூக்கம் போட்டன மாடுகளுக்கு புண்ணாக்கு ஊட்டி விட்டன ரௌடிக் காளைகளுக்கு மதநீர் கொடுத்தன நரிகளை எ…
-
- 3 replies
- 965 views
-
-
சும்மா ஒரு கிறுக்கள் பக்தர்கள் பகுத்தறியாமல் பம்பரமாய் சுத்துபவர்கள் அவதாரங்கள் ஆத்மீகத்தின் சாபக்கேடுகள் பூசாரிகள் கோயில் புனித்தத்தை கெடுத்த புண்ணியவான்கள் கோயில் தொண்டர்கள் சலுகைகளை கூலியாக பெறுபவகள் இலக்கியவாதிகள் இறந்தகால எண்ணங்களுக்கு இனிப்பு தடபுபவர்கள் சித்தாந்தம் தனிநபர் எண்ணங்களின் தொகுப்பு
-
- 3 replies
- 992 views
-
-
கொண்டாடும் மனசு ............. நாம் பிறந்த மண்ணிலே , நாள்தோறும் குண்டு மழை போதாதென்று மழை வெள்ளம் அழுது ஓடிய கண்ணீர் வெள்ளம் , தசை பிளந்து ரத்த வெள்ளம் , இத்தனைக்கும் பயந்த சன வெள்ளம் எங்கு ,ஓடி அடைக்கலம் தேடும் இவை எல்லாம் நம் சனத்தை ஆட் கொள்ள ,கொண்டாட மனம் வருமா பட்டியல் நீளும் ,பாதை போன்று அப்பாவை காணவில்லை , அண்ணாவை காணவில்லை , பள்ளி சென்ற அக்காவையும் காணவில்லை ,தகவல் இல்லை இந்நிலையில் கொண்டாட மனம் வருமா தினசரியைபார்த்தால் தினம் தோறும் இணைய தளத்திலும் துயர செய்தி தான். இத்தனையும் நடக்கும் போது கொண்டாட மனம் வருமா ? அமைதியின் ஏசுவை ,தரிசிக்க கோவிலிலும் குண்டு மழை , கோவில் சிலை (சொரூபம் )களுக்கும் தான் இந…
-
- 3 replies
- 1.1k views
-
-
உலக வல்லாதிக்கத்தின் அவலம் உணராக் கோட்பாடுகளும், ஆயுதப் பரீட்சிப்பும் தொடர்கதையாக எம்மீது எழுதப்படுகின்றன. தொடரும் போரும், கந்தகத்தோடு உழலும் வாழ்வியலும், பொருத்தமில்லாச் சமன்பாடுகளும் எம்மை நோக்கித் திணிக்கப்படுகின்றன. எங்கள் சுயமும், எமக்கான வாழ்வும் மறுக்கப்படுகின்றன. குரல்கள் ஒடுக்கப்படுகின்றன. ஒரு இனவாதத்தின் படர்கை எம் வரலாறுகளை தீய்த்து மறைக்கிறது. முற்றுப் பெறாத கால நீட்சியில் எம்மினத்தின் வாழ்வு வேதனைக்குள்ளாகிறது. வெற்றிக் களிப்பில் கூத்தாடும் எதிரியின் ஆட்டம் உசுப்ப உசுப்ப உக்கிரமாகிறது விடுதலை மூச்சு. ஒடுக்குதற்கெதிரான நிமிர்வு வியாபிக்க விடுதலைச் சுடரில் சுதந்திர வாசனையை எம்வாசல் நோக்கி அள்ளிவரு…
-
- 3 replies
- 1k views
-
-
_______________________________________ தூக்கம் கண்களை நிறைத்த பொழுது குழந்தைகள் இலவசமாக அனுமதிக்கப்படும் பூங்காவுக்கு வருகின்றனர். கைகளை இழந்த சிறுவன் செயற்கை கைகளுக்காய் மீதித் துண்டங்களால் ஏந்திக்கொண்டிருக்கிறான். கைகள் பற்றிய கனவுடன் அலைந்துகொண்டிருந்தான். சிதைக்கப்பட்ட முகத்தையும் பிரித்தெடுக்கப்பட்ட கைகளின் மிகுதிப் பகுதியையும் புகைப்படங்களாக்கி உதவி கோரிக்கொண்டிருக்கிறான். எல்லாமே எட்டாத தூரத்திலிருந்து தூங்கிக்கொண்டிருக்கிறது. அந்தச் சிறுவன் கைளோடு தன் புன்னகையையும் இழந்துபோயிருந்தான். பள்ளிக்கூடம் சென்ற ஒன்பது வயதுச் சிறுமி மிருகங்களாகிய படைகளால் வன்புணரப்படுகையில் இந்தக் குழந்தைகள் வழியிலிருக்கும் பூங்காவில் உறங…
-
- 3 replies
- 1.1k views
-
-
ரோஜாவே.. உன் இதழோரம்.. வழிவது.. தேனா..?! இல்லை... எனைக் கடைக்கண் கொண்டு கண்டதால்.. அரும்பி நிற்கும் வியர்வையா..?! தேனோ.. வியர்வையோ வழித்தெடுக்க.. குருவி இவனுக்கு அனுமதி வேண்டும்.!! முள்ளிட்ட ரோஜாவே பதில் சொல்லு..!!! ஒருதலையாய் வீணே ஆசை வைத்து இதயம் கிழிந்து நிற்க இது முட்டாள் குருவியல்ல...!! (நன்றி முகநூல்) (படப்பிடிப்பு: நாங்கள்.)
-
- 3 replies
- 1.3k views
-
-
வெற்றியின் சரித்திரம் முழங்குது பார் தேன் சுவை ஊறும் செந்தமிழ் ஈழம் வான் புகழ் கொண்டு வளருது பார் எழிலது பொங்கிடும் எம்முயிர்த் தமிழால் எங்கணும் மங்களம் பொங்குது பார் ஈழமண் மீட்பில் எரிகின்ற தீபம் எட்டுத்திக்கும் சுடர் வீசுது பார் மங்களமாய் மஞ்சள் சிவப்பு வண்ணத்தில் மாண்புறு ஈழமண் மகிழுது பார் செங்களம் ஆடிடும் செங்குருதிப் புனல் எங்கள் உணர்வினில் தெறிக்குது பார் எத்தனை எத்தனை வேங்கைகள் மண்ணில் ஈகம் செய்த உயிர் எழுகுது பார் விதைகளாய் விழுந்த உயிர்களின் தாகம் விருட்சமாய் இங்கு வளருது பார் தேசத்தின் நேசம் நெஞ்சில் நிறுத்திய புhசத்தில் தமிழினம் பொங்குது பார் வடக்கிலும் கிழக்கிலும் வளமது பெருகி வறுமைகள் இன்றுடன் ஒழியுது பார் கனவுகள் மெய்…
-
- 3 replies
- 1.4k views
-
-
ஈழம் எங்கள் தாயகம் என்றும் வாழும் ஆலயம் வாழும் காலம் யாவும் எங்கள் உயிரைத் தந்தும் காத்திடுவோம் வீரர்கள் என்றும் சாவதில்லை சாவுக்குப் பயந்தவர் வீரரில்லை தோல்வியைக் கண்டு துவள்வதுமில்லை தமிழ் இனம் வெற்றியின் படியில் ஏறுகின்றோம் எங்களின் தியாக வித்துக்கள் நிட்சயம் ஒரு நாள் பயிராகும் எங்களின் கனவுகள் நனவாகும் ஈழத்தில் எங்கள் கொடி பறக்கும் தடைகள் கோடி என்றாலும் சிங்கள படைகள் தேடி வந்தாலும் விடைகள் எங்கள் தோள்களிலுண்டு விடியும் ஒரு நாள் வாருங்கள் நாளை மலரும் ஈழத்திலே சுதந்திர மலர்கள் மொட்டவிழும் இன்றைய எங்கள் போராட்டம் முடிவாய் இதற்கொரு பதில் சொல்லும். ஈழ வீதியிலே புலிக்கொடி தினம் பறக்கும்..அதை நாம் தினம் பாப்போம்
-
- 3 replies
- 1.3k views
-
-
என் கண்கள் கெட்டுவிட்டது எங்கே சூரியன். இன்றுகாலை அம்மாவுடனான தெலைபேசி உரையாடல். அவர்சொன்ன புதினத்திலொன்று கல்வளை கொடியேறிட்டுது கதைத்து முடித்ததும் என் குரங்கு எண்பதுகளிற்கு தாவியது கல்வளைப்பிள்ளையாரின் காற்றோட்ட மண்டபம் எங்கள் நண்பர் கூட்டம் என் கையிலோர் கரித்துண்டு கீறத்தொடங்கினேளன் சிலாபத்தில் தொடங்கி காங்கேசன்துறையில் வழைந்து மட்டக்கிளப்பில் நிறுத்தினேன். பக்கத்திலிருந்தவன் சொன்னான் அம்பாறையும் எங்கடைதான் அது முஸ்லிம்களிற்கு இது இன்னொருவன். அவங்களும் தமிழர்தானே அம்பாறையும் எங்கடைதான் அம்பாறைவரை வரைந்தேன் கதிர்காமமும் எங்கடைதானாம்.. இழுத்தான் இன்னொருத்தன். இப்போதைக்கு இது போதும் பிறகுபாக்கலாம். பண்டத்தெருப…
-
- 3 replies
- 1.4k views
-
-
ஒரு கதை கேள் தோழி. ஒரு வசந்தம் மட்டுமே வாழ்கிற ரோமியோக்களின் கதை கேள். காகிதப் பூக்களின் நகரத்தில் காதலில் கசிந்து தேனுக்கு அலைந்தது பட்டாம் பூச்சி. என் இனிய பட்டாம் பூச்சியே சுவர்க் காடுகளுள் தேடாதே. நான் வனத்தின் சிரிப்பு வழுக்குப் பாறைகளில் கண்சிமிட்டும் வானவில் குஞ்செனப் பாடியது பிஞ்சுக்கு ஏங்கிய காட்டுப் பூ. ராணித் தேனீக்களே எட்டாத கோபுரப் பாறைகளில் இருந்து கம கமவென இறங்கியது அதன் நூலேணி. வாசனையில் தொற்றிவந்த வண்ணத்துப் பூச்சியிடம் இனிவரும் வசந்தங்களிலும் தேனுக்கு வா என்றது பூ. காதல் பூவே வசந்தங்கள்தோறும் ஊட்டுவேன் உனக்கு மகரந்தம் என்கிற பட்டாம் பூச்சியின் எதிர்ப்பாட்டில் உலகம் தழைத்தது. நிலைப்ப தொன்றில்லா வாழ்…
-
- 3 replies
- 1.2k views
-
-
அன்பே.... உனது வாழ்க்கை இடிந்து போகாமல் இருப்பதற்காகவே உனக்காக கட்டிய தாஜ்மஹாலை இடிக்கிறேன்... ஏனெனில் நீ இப்பொழுது இன்னொருவனின் மனைவி அல்லவா...?
-
- 3 replies
- 1k views
-
-
நெல்லியடியில் நெத்தியடியாய் நெடுநாள் சிங்களப் பகை நொருக்கி வீழ்ந்த அந்த நெடும் வீரன் மில்லர் வழியில்… தமிழராம் எம் தாகமாம் தமிழீழம் விடியும் வரை பிச்சை கேட்டு அடிமைகளாய் வாழப் போவதில்லை…! விடியலின் கனவோடு கந்தக மூச்செடுத்து சாவினில் வாழும் மறப் புலிகளாய் கரும்புலிகளாய் எம் தேச விடியலை சிதைக்க நினைக்கும் தடைகள் முடிப்போம். விடியற் சூரியனை கூவி அழைத்து ஈழ வானில் சேர்த்து.. மின்னிடும் வான் தாரகைகளாய் நாமும் மிளிர்வோம். தலைவன் வழியில்.. விடியலின் வேளை வரை தமிழர் நாம் என்றும் கரும்புலிகளே…! (05.07.2009 கரும்புலிக…
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலை முடியாட்சி அதிகாரதில் முடங்கிய நான் குடியாட்சிக் காலத்தில் குதுகலமடைந்தேன் ஆதிக்க வெறியர் அதிகாரம் ஓங்க ஆளுமையிழந்து அவதிப்பட்டேன். நாடுகள் தோறும் புரட்சிகள் ஓங்க நானும் அங்கே மறுபிறவி எடுத்தேன் விடுதலை என்று நாமம் சூட்டி விருப்புடன் என்னை வளர்த்தனர் மக்கள். இலங்கைக்கு வந்த அன்னியர் பிடிக்க இழுபட்டுத் தவித்தேன் பல காலம் இனத்துவேசிகளிடம் அவர் விட்டுச் செல்ல இன்னல்கள் பட்டேன் சில காலம் சுயநலம் கார்த்து அரசியல் பேசியோர் சுதந்திரமென்று கோசமிட்டார்கள் தமிழீழம் என்று பெயரை வைத்து தரணியிலே அவர்தம் புகழ் சேர்த்தார்கள். உணர்வுள்ள தொண்டர்கள் ஒருசிலர் சேர்ந்து உணர்ச்சியுடன் என்னைத் தத்தெடுத்தார்கள் தமிழரின் விடுதலை தமிழீழமென்று சாத்வீக வழியில…
-
- 3 replies
- 740 views
-
-
நீந்த துடிக்கும் மீன் குஞ்சு போல் .... இறை ஆசை .....(+) வறண்டிருக்கும் குளம் போல் ...... மனம் ......(-) & ஆன்மீக கஸல் கவிப்புயல் இனியவன்
-
- 3 replies
- 1.2k views
-
-
அறுபது மாதங்களாய் ஆறாத் துயர் கடந்து ஆற்றமுடியா வடுக்கள் சுமந்து ஆற்றாமையுடன் காத்திருக்கின்றனர் அடிமைகள் ஆக்கப்பட்ட எம்மக்கள் கருகிய பூமியில் கால் பதிக்க இடமின்றி கசங்கக் கிடக்கிறது கந்தகம் சுமந்த பூமி கொடும் கனல் குருதி தோய்ந்து கோரங்கள் சுமந்த நந்திக்கடல் கேட்பார் ஏதுமற்றுக் கேவலுடன் கிடக்கிறது வீறுநடை போட்ட வெற்றிகள் கொய்த தேசம் ஏறுபோல் எழுந்து எதிகள் வீந்த தேசம் எதிரி கைபட்டு எள்ளி நகைபுரியும் எத்தர்களின் கைகளில் ஏக்கம் சுமந்து ஏதுமற்று ஏற்றமிழந்து கிடக்கிறது வந்தவரை வரவேற்று வயிறார வழிசெய்து வள்ளல்களாய் வாழ்ந்தவர்கள் வாய்க்கரிசி கூட இன்றி வக்கற்று கருணையற்ற கயவனிடம் கையேந்தும் கடை நிலையில் கண்ணிழந்து நிற்கின்றார் மானத் தமிழரென மார்தட்டி வாழ்ந்த…
-
- 3 replies
- 656 views
-
-
01.04.2002 அன்று கரவை பரணீ என்ற பெயரில் யாழ் இணையத்தின் முன்னைய களத்தில் எழுதிய கவிதை காலத்தின் தேவை கருதி இன்று இங்கு உறங்கிய தமிழினம் இன்று விழித்துக் கொண்டது. ஊடுருவிய சிங்களம் அங்கு ஆட்டம் காணுது விடுதலைவேண்டிய வீரர்கள் விரைந்து வருகின்றார்கள்.... இங்கு உறங்கிடும் தங்கள் உறவுகளை விழிக்கச் செய்கின்றார் கல்லறைக்குள் உறங்கிடும் சகோதரர்கள் கண்விழித்தெழுகின்றார் தலைவன் காட்டிய பாதையில் சென்ற நம் வீரர் வெற்றி பெறுகின்றார்.. அடிமை விலங்கு ஓடித்து தமிழன் அங்கு பறக்கத் தொடங்கி விட்டான் பட்டினிச் சாவு ஒழிந்து அவர்கள் பாடத் தொடங்கி விட்டார் காசிற்காய் Nபுhராடிய சிங்களம் இன்று சிலையாகி விட்டது... நாட்டிற்காய் போராடிய ப…
-
- 3 replies
- 1.1k views
-