கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
முத்துக்குமார் முதல் முருகதாசன் வரை. இரவும் பகலும் இரத்த ஆற்றிலே எங்கள் வாழ்க்கை நீச்சல் அடிக்கிறது உலகம் முழுதும் தமிழர்களின் வீரவணக்கம் செய்திகள் படிக்க உயிரைப் பிழிகிறது! எமக்காக எழுந்த தெய்வங்களே ஏழு பேரையும் வணங்குகிறோம் ஒரு சோதிப்பெரு வெளிச்சம் எமக்குச் சக்தியானது போதுமையா! முகம் தெரியாத எம் முத்துகளே உயிராயுதம் ஏந்துவதை நிறுத்துங்கள் எழுத்தாணியைக் கையில் எடுத்து எட்டுத் திசையிலும் எழுதுங்கள்! உலகத்தின் விழிகளைத் திறப்பதற்கு உங்கள் உயிர்களை இழக்காதீர்கள் அவலத்தின் காணொளிகளை தொகுத்து உலகத்தின் விழிகளுக்கு காட்டுங்கள்! தெய்வங்களை நேரிலே பார்த்ததில்லை இன்று நெருப்பிலே பார்க்கின்றோம்! நேற்றிருந்த முகங்கள் இன்றில்லையே…
-
- 0 replies
- 841 views
-
-
முன்புபோல யாழிணையத்தில் கவிதை மற்றும் பதிவுகளை பிரசுரிப்பதே கருத்துக்கள் விவாதங்களில் இருந்து கற்றுக்கொள்ளவே, அந்த நாட்கள் சுவடுகளுமின்றி மலையேறிவிட்டது சோகம் ? எல்லோரும் மெல்ல மெல்ல விடுபட்டபடிக்கு. இது இன்னும் பிரசுரிக்கப் படாத கவிதை. . என்னுள் காதலாய் நிறைகிறது. . அக்கினி நட்சத்திர வெய்யிலை வீழ்த்திய தென்றல் மழை என்னை அன்புடன் தொட்டு உசுப்பிவிட்டது. சிலநாட்கள் சன்னலின் வெளியே அங்குமிங்குமாக ஊஞ்சல் ஆடி பார்த்த வேப்பமரம் ”டேய் கபோதி நான் பூப்படைந்துவிட்டேண்டா” என்றபடி சன்னல்வரை வந்து வெண் முத்துச் சாரமாடும் தன் பசிய கூந்தலை அசைத்துக் காட்டியது. எல்லாவற்றையும் மிஞ்சி இப்பகூட என்னை சுற்றிக் குயில்கள் பாடுகின்றன. . எனது குட்டித்தோழியும் பத்திரிகை…
-
- 1 reply
- 841 views
-
-
குருதியில் உறைந்த தேசம் -இதயச்சந்திரன் மே 18 ... தமிழின அழிப்பினைக் குறிக்கும் நாள். போர்க்குற்றங்களை உலகிற்கு உணர்த்தும் நாள். கொண்ட இலட்சியத்தினை மறுபரிசீலனைக்கு உட்படுத்தாமல் இறுதிவரை போராடிய மைந்தர்களை நினைவுகூரும் நாள். தமது விருப்பத்தின் வழியே அவர்கள் பயணித்திருக்கின்றார்கள். இறுதிக் கணத்திலும் , அசாத்தியமான மனவுறுதியோடு நின்று, ''நீ அழக்கூடாது'' என்கிற ஆறுதல் வார்த்தையை கூறிச் சென்றிருக்கின்றார்கள். இறப்பின் வலி புரிந்த, மனவிரிவுள்ள ஆளுமையின் சொந்தக்காரர்கள் அவர்கள். விழுப்புண் அடைந்த போராளிகளையும், பொதுமக்களையும் காப்பாற்ற, அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கங்கள் வருமென்றுகாத்திருந்தார்கள். வரவில்லை. சிங்களப்…
-
- 0 replies
- 841 views
-
-
தளரும் நிலையது வந்திடலாமோ _இனியும் எழுந்திடமல் என்னினமே இருந்திடலாமோ புலரும் பொழுதின் தடையுடைக்க _புயலாய் இறங்கிடோமோ புலத்தில் நாம் புதுக்களம் கொண்டிடோமோ நிலமிழந்ததிற்காய் _நீ நிலைகுலைந்திடலாமோ வாழ்ந்த வளமிழ்ந்ததிற்காய் _உன் பலம் மறந்திடலாமோ கண்ணில் நீரேழுந்திட கலங்கிடும் காலமல்ல _இது உணர்வுகளில் தீஎழுந்திட எரிமலையாகிடும் நேரமிது வேரடி மண் பறித்து பகை வெற்றிகொண்டடிட _நீ வேரிழந்தவனாகிடலாமோ உறவைக்கொன்று _தமிழ் மகவை புணர்ந்து ஊடுருவ நிற்குது சிங்களம் _இன்று மாதகல் தனதென்று மார்தட்டுறான் கொடியவன் _அவனுக்கு சவரிவீசி ஆலவட்டம் பிடித்தொருகூட்டம் மகிழ்கிறது . கவரி மானினம் நீ _தமிழா புலத்தில் புது வே…
-
- 0 replies
- 840 views
-
-
தோல்விகள் பழகு கடலில் ஒரு துளி நீராய் திழைத்திருந்தேன் நான் ஆதவன் ஒரு நாள் எனை எரிக்க எரிக்கப் பறக்கும் பினிக்ஸ் பறவையாய் இல்லையேயென நான் தோற்றுப்போய் ஆவியுமானேன் ஆஹா..வான் வழி பயணம் இனிதோ இனிது என் தோல்வியே தேனாய் இனித்தது கடலாய் கழிந்த காலத்தை கடிந்து கொண்டே மேகமாகி வான் வழியே ஊர்வலம் போனேன் குளிர்த் தென்றல் எனைத் தீண்ட சிலாகித்து நொடிப் பொழுதில் உருகி விட்டேன்.. புவியெனை ஈர்க்க மழையென மாறி மண்ணோக்கி வீழ்ந்தேன் நான்.. மீண்டுமோர் வீழ்ச்சி ! மீழ்வேனாயென மயங்கிச் சில நொடிகிடந்தேன் நான் மண்ணின் மணமும் மலர்போல் படுக்கையும் உயிர் கொடுத்தது எனக்கு.. கடலலை மறந்தேன் வான்வெளி மறந்தேன். மண்ணினில் தவழ்ந்தேன் குழந்தை போல.. க…
-
- 0 replies
- 840 views
-
-
-
துருவத்து வடலிகள் தாய்மடி தேடும் கன்றினைப்போல் தாய் மொழி தேடி அலைகின்றேன். ஏண்டியம்மா கருப்பாயி எனக்கு மட்டும் இந்த நிலை பட்டாம் பூச்சியாய் பறந்து திரிஞ்ச என்னை ஆட்டு மந்தையாய் இண்டைக்கு அங்கும் இங்கும் அலைய வைச்சாய் ஆத்தா மடியிலே அன்புச் சூட்டில் உறங்கியவன் பனிபடிஞ்ச தேசத்திலை பட்டினியிலை கிடக்கிறன் தாய்மொழியை காதலிச்சு தனி மரமாய் வாடுகிறன் அம்மாவை காதலிச்சா அகதிதான் பெயரெண்டால் பூமியிலை எல்லாமே பொய்யான வாழ்க்கையன்றோ ? விழிதிறந்து பார்க்க முன்னம் மொழிகேட்டு மகிழ்ந்தவன் விழிமூடிக் கிடந்தாலும் கனவில் மொழித்தாகம் வாட்டுதடி வளரும்............
-
- 1 reply
- 840 views
-
-
மரணத்தின் முகநூலுக்கு, மனம் விரும்பி, நட்பு நாடிய, மாவீரர்கள் வரிசையில், முண்டியடித்து முன்னேறியவன்! வாழ்வின் வசந்தத்திற்கு விடை கொடுத்தனுப்பிய, வீரத் தளபதிகளின் வரிசையில் விதையாகி வீழ்ந்தவன், மாவீரன் மேஜர் சிட்டு! வீசும் வாடைக் காற்றின் வெறி அடங்கும் ஓசையில்… அசையும் காவோலைகளின் சர சரப்புச் சத்தத்தில் , ஆசையுடன் நிலம் தழுவும் அலைகளின் முனகலில், சிற்றாறுகளின் சிரிப்பொலியில், சங்கீதம் படித்தவன்! ஓயாத அலைகளின் காலத்தில், வெற்றி நடை பயின்ற, வேங்கைகளின் படை நடையில், ‘கம்பீர நாட்டை’ வாசித்தவன்! கலைப் பண்பாட்டுக் கழகத்தின். காவலனாய் வாழ்ந்தவன்! கறையாக நிலைத்து விட்ட கண்ணீரால் காவியங்களும், சிதறிப் போன சொந்தங்களின், செந்நீரால் ஓவியங்…
-
- 4 replies
- 840 views
-
-
ஹைகூக்கள் பொருமி தவித்தன ஏதிலியாகா ஏதிலிகள் சாவகாசமாக செருமிக்கொண்டிருக்கிறது சர்வதேசம் எட்டி எட்டி பறிக்கின்றாள் கனியை எட்டவில்லை ஏங்கியது கன்னிக்காய் மனது. கொடுத்துக்கொண்டிருக்கிறேன் தீரவில்லை திகட்டவில்லை முத்தங்கள். வைக்கோல் கன்று காட்டி ஏமாற்றிய பால்க்காரனுக்கு நிஜக் குழந்தை காட்டப்பட்டது சிக்னல் பிச்சைக்காரி. பிடியின் வழி வளைந்து வளர்கின்றன பானைகளும் குழந்தைகளும். பிடியின் வழி வளைந்து வளர்கின்றன பானைகளும் குழந்தைகளும். கிளறுகின்றது கோழி குப்பையோடு குடலையும் - பசி மனிதாபிமானம் அற்றவர்களெனப்பட்டவர்களுக்கு(???!!!) மனிதாபிமானம் உள்ளவர்களெனப்பட்டவர்கள்(???!!!) வழங்குவது மரணம்!!!. இடைவிடாத அடை மழை சுக…
-
- 2 replies
- 840 views
-
-
தன் அழகான வரிகளால்... தமிழை ஓவியமாய் தீட்டியவன்! தாய்த் தமிழுக்கு பெருமை ஈட்டியவன்! வண்ண வண்ணத் தமிழின்... இனிமை காட்டியவன்! வாலியென்றால் இப்படித்தான் என தனித்துவம் நிலை நாட்டியவன்! இந்த வண்ணத்தமிழ் வாலிபக் கவிஞனின் இழப்பால், தமிழும் கறுப்பு வெள்ளை ஆனதைப்போல் ஒரு பரிதவிக்கும் உணர்வு....
-
- 3 replies
- 839 views
-
-
-
உறுதி குலையாமல் உயிர; ஈந்த உத்தமன் திலீபன் நினைவு சுமந்து திலீபன் அழைப்பது சாவையா-இந்த சின்னவயதில் அது தேவையா இன்னும் எங்கள் காதுகளுக்குள் ஒலிக்கும் உயிரின் உணர;வு வலிகள் இனியும் தொடர;ந்துவரும் துயர;தோய்ந்த நினைவு வரிகள் 26ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன இன்று போல் உள்ளது நல்லைநகர; கோவில் முன்றலில் எங்கள் தேசப்புதல்வன் தீரன் திலீபன் நீதி கோரி உயிர; ஊற்றி யாகம் புரிந்ததும் நெஞ்சு பொறுக்காமல் நாங்கள் விம்மி அழுததும் இன்று போல் உள்ளது நல்லுhர; கோவில் வீதியெங்கும் கண்ணீர; சுமந்த மக்கள் வௌ;ளமாய் நிறைந்திருந்ததும் தியாகி தீலீபன் உயிரைக் காத்திட தமிழீழப்பரப்பெங்கும் பொங்கி எழுந்து மக்கள் எழுச்சிப்போராட்டங்கள் நடத்தியதும் இன்று போலுள்ளது இதயம் கனக்கின்றது முன்வைத்த கோரிக்கை…
-
- 5 replies
- 838 views
-
-
இருண்ட கண்டத்தில் விரிந்த மலரே! வாழ்த்துக்கள். இரும்புத்திரையை உடைத்தெழுந்த கதிரே! மேகங்களிடம் ‘முத்தங்களும்’ காற்றிடம் ‘மலர்ச்செண்டும்’ அனுப்பியுள்ளோம். பெற்றுக்கொள். ‘இதரைவாழைக்கன்றுகள்’ இரண்டை இனிவரும் கடலலைகளிடம் கொடுத்து விடுகின்றோம். கொடிமரத்துக்கருகில் பாத்தி கட்டி நாட்டிவிடு. அடிபெருகி எங்கள் அன்புக்குக் குலைதள்ளட்டும். நேற்றுவரை தென்னாபிரிக்கா என்றே உன்னை அழைத்தோம். இன்று ‘என் ஆபிரிக்கா’ என்றே இங்கே ஒவ்வொருவரும் உச்சரித்துக் கொள்கின்றோம். ‘வாஸ்கொடாமா’வுக்கு மட்டும்தான் நீ ‘நம்பிக்கைமுனை’யாக இருக்கவில்லை போராடும் எங்களுக்கும் அப்படித்தான் புலப்படுகின்றாய் நெல்சன் மண்டேலா! கறுப்புச் சிங்கமே! கையை நீட்டு. குலுக்கிக் கொள்ளுவோம். உன்னைக் கட்டித்தழு…
-
- 0 replies
- 838 views
-
-
விடிவு நோக்கி .......... .இயற்கை தன் சுழற்சியை தொடங்கி விட்டது , பசுமை மாறி ,பழுத்து மஞ்சளாகி சில இளம் சிவப்பாகி தன் ஆழ்மனதை காட்டும் பெண்போல, அணைய போகும் விளக்கின் பிரகாசமாய் காலமகள் தன் கோலம் காட்ட புறப்பட்டு விட்டாள் . குருவிகளும் அணில்களும் ஓடி யோடி பறந்தும் நடந்தும் இரை தேடுகின்றன . ஒரு சில மரங்கள் இலைகளை உதிர்க்கின்றன தென்றலும் சற்று வேகமாகி சுழன்றடிக்கிறது மங்கையர் ஆடை மாற்றுவது போல மரங்களும் இலைகளை நிறம் மாற்றுகின்றன . கிளைகள் மட்டும் துன்பத்தில் துணை நிற்கும் நண்பன் போல பூமித்தாய் இத்தகைய மாற்றங்களை சந்தித்தே ஆக வேண்டுமென்பது நியதி போல மனங்களும்.. .. மனித மனங்களும் ...... சுழல்கின்றன விடிவு நோக்கி …
-
- 0 replies
- 837 views
-
-
காற்றும், வானும், நீர், நிலம், நெருப்பும் தழுவி உம் மெய் ஆற்றட்டும். மண்டியிடாத மன்னவனை எமக்களித்த மாமனிதா சரித்திரச் சங்கமிப்பில் நெருப்பெடுக்கும்போதில் மண்ணின் கணிதத்தில் மரணமும் ஜனனமய்யா. பாக்கு நீரிணையின் சிற்றலைகள் மிடுக்கெடுக்க உப்புக் காற்றுறையும் ஊறணியில் இனத்தின் மீளெழுச்சித்துயில் கொள்க. காற்றும், வானும், நீர், நிலம், நெருப்பும் தழுவி உம் மெய் ஆற்றட்டும். வல்வை மண் சாந்தி தரும்.
-
- 2 replies
- 837 views
-
-
[size=5] எனது நண்பனைப் பற்றி [/size] [size=5] எமது மண்னிலே அதிகம் பேசுகின்றனர். [/size] [size=5] எப்படி அவன் சென்றான்… [/size] [size=5] துப்பாக்கி வேட்டுக்கள் [/size] [size=5] அவன் மார்பையும் முகத்தையும் நொறுக்கின [/size] [size=5] தயவு செய்து மேலும் விபரணம்வேண் டாம். [/size] [size=5] நான் அவனது காயங்களைப் பார்த்தேன் [/size] [size=5] அதன் பரிமாணங்களைப் பார்த்தேன் [/size] [size=5] நான் நமது ஏனைய குழந்தைகள் பற்றி எண்ணுகிறேன் [/size] [size=5] குழந்தையை இடுப்பில் ஏந்திய [/size] [size=5] ஒவ்வொரு தாயையும் பற்றி எண்ணுகிறேன் [/size] [size=5] அன்புள்ள நண்பனே! [/size] [size=5] அவன் எப்போது வருவான் என்று கேட்காதே [/size] [si…
-
- 2 replies
- 836 views
-
-
மதம் பிடித்த மனிதன் மனிதனையும் அவன் நாகரிகத்தையும் கொலை செய்துகொண்டிருக்கிறான் எந்தப் படுகொலைகளையும் நான் ஏற்க மாட்டேனென அவன் கன்னத்தில் அறைந்து சொல்கிறது மனிதம் எனக்கான உரிமையை நீ பறிப்பதென்பதும் உனக்கான உரிமையை நான் கொல்லுவதென்பதும் எனக்கானதும் எனது குழந்தைக்கானதுமான வழியை நீ விடாமலிருப்பதும் எல்லா மதமும் மனிதனும் சமம் என்பதை நீயோ நானோ மறுப்பதென்பதும் என் மதத்தை விட உன் மதம் தான் உயர்ந்ததென்பதும் உனக்காக மட்டும் நிச்சயிக்கப்பட்ட சொர்க்க வாசல் திறந்திருக்குமென்பதும் இறைவனால் எழுதப்பட்ட நியதி என்று எந்த வேதமும் எந்தக் கடவுளும் எந்தத் தூதரும் எமக்கு அருளவில்லை …
-
- 3 replies
- 836 views
-
-
மேமாதம் எங்களின் சா மாதமாய்..... முள்ளிவாய்க்கால் ஓராண்டு நினைவுகளோடு ஒலிவடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்துங்கள்.
-
- 0 replies
- 836 views
-
-
செருப்புகளும் மதங்களும் விற்பனை சந்தையில் நிறைய குவிந்து கிடக்கின்றன செருப்புகள் போல் மதங்களும் தங்களுக்குள் விவாதித்து விவாதித்து தாங்களாகவே அடித்துக் கொள்வதிலும் சளைத்தவையில்லை ஒன்றையொன்று அளவுகளிலும் அழகுகளிலும் தான் வெவ்வேறாக இருக்கின்றன சில அறுந்தும் சில தேய்ந்தும் செருப்புகளை போலவே பல வேளைகளில் செருப்புகள் உயர்வானவைதான் மனிதயினத்தை காவுகள் கேட்கும் மதங்களைவிடவும் kavimathi.com
-
- 1 reply
- 836 views
-
-
நிலவே நான் நேசிக்கின்றேன் ஆனால் உன்னையல்ல மலரே நான் நேசிக்கின்றேன் ஆனால் உன்னையல்ல பெண்ணே நான் நேசிக்கின்றேன் ஆனால் உன்னையல்ல என் சுவாச மூச்சே நான் நேசிப்பது உன்னை கூட அல்ல எல்லாவற்றுக்கும் மேலான என் அன்னையை தான்...
-
- 2 replies
- 836 views
-
-
ஆடிவேல் ரதம்வந்த கொழும்புநகர் தமிழரில்லம் கூடிநின்று கொள்ளிவைத்தார் காவலரும் சேர்ந்துநின்றார் தேடித்தேடி வாக்காளர் இடாப்பினிலே தமிழர்பெயர் கோடிட்டுக் கொளுத்திவிட்டார் தமிழழிப்பின் ஒத்திகையாய். சரக்குக் கப்பலுடன் சிதம்பரமும் சேர்ந்துவர - தமிழுணர்வுச் சரக்கேற்றிக் காங்கேசன் துறை சேர்ந்தார். தலைநகர் தந்த தரக்குறைவுப் படிப்பினையில் உலையொன்று கொதித்தது விடுதலைத்தீ கொழுந்தது ஆடிப்புயலில் அடிபட்டுப் போனதனால் - சுயநல நாடித்துடிப்பின் அடி பட்டுப் போனதுவே. நாடிவந்தார் தமிழிளைஞர்: கூடிவிட்டார் விடுதலைக்காய் தேடிவென்ற ஆயுதங்கள் அகலக்கால் பதித்ததுவே. மிதித்தாலும் வாழ்தலுக்காய்த் துடித்தெழும்பும் மண்புழுவும் வெட்டவெட்டத் தழைத்தோங்கும் பூவரசும் கிளுவைகளும்…
-
- 3 replies
- 835 views
-
-
POETRY AND THE FATE கவிதையும் விதியும் என் அன்புக் கவிஞன் சே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ”புலவனும் வறுமையும் பிரிக்க முடியாதவை” என்று சொன்னதாக கனடா சென்றிருந்தபோது விஜயன் சொன்னான். இது ஆயிரம் ஆயிரம் வருடங்களாக ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கவிஞர்கள் கலைஞர்களால் சொல்லப் பட்டு வருகிற வார்த்தைதான். சில நாட்க்களின் முன்னம் பாவைக்கூத்து கவிதையை எழுதி முடித்தபோது எனக்கும் அப்படித்தான் தோன்றியது. கவிதையை எழுதியபின்னர் என்னை துக்கம் சூழ்ந்தது. என் அப்பா அம்மா இருவருக்குமே கவிதைப் பைத்தியம் பிடித்திருந்தது. இரு துருவங்களான அவர்களைக் கவிதை மட்டும்தான் சேர்த்து வைத்திருந்தது. நான் பிறந்தபோது …
-
- 0 replies
- 835 views
-
-
குருதி வடிக்கும் கண்களின் வருத்தம் புரியா உலகமிது; நின்று யோசித்து நிமிர்கையில் – காலம் அதோ எங்கோ போகிறதே….!! சுதந்திரம் விடுதலை என்று கேட்ட வாய்க்கு ரத்த காட்டாறும் சொட்டு ஆறுதல் கண்ணீருமே மிச்சமா? சோர்ந்து போகாத ஒரு இனத்தின் கூட்டம் உலகமெலாம் பரவி இருந்தும், மௌனத்தில் மூழ்கியதேனோ? சொல்லி அடித்த பரம்பரைதான் புது ரத்தம் தேடி – அலைகிறதோ; உயிர் செத்து மடிந்த சேதி கேட்டும் சுடும் கோபம் விடுத்து மரமானதுவோ?!! ஐயோ; மரம் கூட ஆயுதமானது இந்த மனிதர் ஏனோ மனிதமிழந்தார், கோபம் துறந்தார், குழந்தை கண்கீறி ‘கிழவி உடல் அறுத்தும் எல்லாம் சகித்தாரே????????!!!!!!!!!!!!!!! இறையே!!!!!! இதில் ஏனோ நீயும் குருடானாய் நீ இல்லையென்று முழங்கவும் இச்செயலால…
-
- 0 replies
- 835 views
-
-
ஒரு வசந்தம் தொலைந்து விட்டது எங்கள் தேசத்தின் வாசலில் ஏற்றி வைத்த தீபம் ஒன்று ஏகாதிபத்திய நெருப்பில் எரிந்து பொய் விட்டது. எங்கள் விளை நிலத்திக்கு வித்துக்களை ஊன்றி வந்த விருட்சமொன்று சரிந்து விட்டது எங்கள் புனித மூச்சை புயல் தின்று விட்டது இருள் சூழ்ந்து கிடந்த எங்கள் எல்லைக்கு ஒளி சுமந்து வந்த உயிர் ஒன்று அணைந்து விட்டது பாசத்தோடு பேணிக்காத்த சிறகொன்று பாரத வலையில் சிக்கி முறிந்து விட்டது அந்நிய தேசமெல்லாம் எங்களது அவலங்களை சொல்லி நின்ற இதயமொன்று அவிந்து விட்டது செரு முனையில் நின்று செந்தமிழின் பண்ணிசைத்த சிட்டொன்று சிதைந்து விட்டது எங்கள் இமயம் ஒன்றை இருள் விழுங்கி விட்டது எங்கள் விழி மடல்கள் வெல்ல முடியாதோரின் வஞ்சனையால் கிழிந்து விட்டன துணிச்சலையே த…
-
- 1 reply
- 835 views
-
-
காஸா நகர் குழந்தைகள் குழந்தைகள் அஞ்சிப் பதுங்கியிருக்கும் நகரில் பிறக்கப்போகும் இன்னொரு குழந்தைக்காய் எப்படிக் காத்திருப்பது? ஒவ்வொரு இஸ்ரேலியப் படையினனும் துரத்திக் கொண்டிருக்கிறான் ஒரு பாலஸ்தீனக் குழந்தையை அவர்கள் ஏன் குழந்தைகள்மீது குண்டுகளை வீசுகிறார்கள்? தமது துப்பாக்கிகளை ஏன் குழந்தைகளுக்கு எதிராய் திருப்புகிறார்கள்? ஒவ்வொரு பாலஸ்தீனரின் கைகளிலும் ஒரு குழந்தையின் பிணம் குழந்தைகளற்ற குழந்தைகள் பதுங்கியிருக்கும் ஓர் நகரை எப்படி அழைப்பது? ஓர் ஈழக் குழந்தையை கருவில் கரைத்துக் கொல்லும்போது பாலஸ்தீனக் குழந்தை ஒன்றை குண்டுகள் தின்று போட்டிருக்கின்றன குழந்தைகளைக் கொல்பவர்களின் நோக்கம் என்னவாய் இருக்கும்? http://globaltamilnews.net/GTMNEditorial/tab…
-
- 5 replies
- 835 views
-