கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
நிகழ்காலம்,எதிர்காலம் என எல்லாமே... நமக்கு... இறந்தகாலமாய்த்தான் இருந்தது! ஆறுதலுக்காய் ஆதரிக்க யாரும் அருகிருக்கவில்லை! அரவணைக்கக் கூட ... தம் அனுகூலம் பார்த்தார்கள்!! அனாதை நாய்களைவிட... அநியாயமாய் அழிந்தோம் நாம்!! எங்களுக்காய் குரல்கொடுக்க யாருமில்லையே!? என்ற... ஏக்கத்தவிப்பின் துர்ப்பாக்கிய முடிவாய்த்தான், துப்பாக்கியையும் சுமையாய்ச் சுமந்தோம்!!! துப்பாக்கி வேட்டுக்கள் எமைக் கொன்றுபோட்டபோதெல்லாம்... அதுக்கான அதே சத்தத்துடன் அடங்கின பல பொழுதுகள்!!! "ஆயுதம்" என்பதும் தற்காத்துக்கொள்ளவென காத்துக்கிடந்த காலம்போய், பேராயுதங்கள் போராயுதத்தினால்... நம்மைத் தின்றபோது... உயிராயுதங்களும் உணர்வோடு மெளனித்துப் போயின போல்!? கரிகாலன் தாங்கிய…
-
- 14 replies
- 2.2k views
-
-
யாழ் இணைய நண்பர்களுக்கு... கவலைகள் சுமக்கும் கவிகளே கண்ணீர் நிறைந்த கண்களை திறந்து கண்ணென்று தெரியும் உங்கள் உள்ளத்தை பாருங்கள் நீங்கள் சில நொடி வாழும் வீட்டில் பூச்சியும் வீறு கொண்டு வாழும் போது நல் வழி உண்டு நீங்களும் வாழ மனபலம் எனும் வாளை எடுங்கள் தடுக்கும் பாறைகளை வெட்டியெறியுங்கள் நடுக்கடலில் விழுந்தாலும் மூச்சுள்ள வரை நீந்தப் பழகுங்கள் இருட்டில் ஓவியம் வரைவதை நிறுத்துங்கள் வெளிச்சத்தில் கோடு போட பழகிக்கொள்ளுங்கள் கோடுகள் ஏணிகள் ஆகட்டும்... ஏணிகளில் உங்கள் பயணம் தொடங்கட்டும் மனதை விரிவாக்குங்கள் விண் மீனை தொட முயற்சி செய்யுங்கள் தோல்வி என்பதும் ஒருவகை பலம் தான் இறுதி வரை போராடுபவர்களுக்கு...
-
- 16 replies
- 2.2k views
-
-
இக்கவிதையை எழுதியவர் யார் என்பதை யாராவது அறிந்து கூறுங்கள் பார்க்கலாம் ? நட்புடன் வாசுதேவன். ---------------------------------------------------- கவிதை என்பது சுதந்திரம்: கவிதை என்பது சுதந்திரம் அப்போது தெரிந்தது நான் இன்று வரையிலும் எழுதியிருப்பவை கவிதைகள் அல்ல என்பது என் நண்பர்கள் எழுதியிருக்கக்கூடும் கவிதை என்பது கட்டுப்பாட்டின் அட்டகாசம் என் நண்பர்கள் எழுதியிருக்கக்கூடும் கவிதை என்பது பூஜ்ஜியம் உளறல்கள் பேரர்த்தம் கவிதை என்பது ஊடுருவி உருக்குலைப்பது கவிதை என்பது பற்றுக்கோலின் கண்கள் கவிதை என்பது உடலுறவின் உச்சக்கட்டம் நான் எழுதியிருப்பவையல்ல கவிதைகள் என் நண்பர்கள் எழுதியிருக்கக்கூடும். ****
-
- 5 replies
- 2.2k views
-
-
இதே... சிவந்த மண்ணில், புலியின்... ஒரு வெடிக்கு பயந்தோடிய... நாதாரிகள், இன்று... "இடுப்பில் கை வைத்து அதிகாரம்," பண்ணுகின்றார்கள். பொறடா... பொறு, உனக்கு... வட்டி, குட்டியுடன்... தர, ஒருவன் வருவானடா... அந்தச் செய்தியைக் கேட்ட பின் தான்... என் மூச்சடுங்கும்.
-
- 22 replies
- 2.2k views
-
-
தாயகத்தில் ஓர் அன்புறவு என் தாயகத்தில் ஒர் அன்புறவு நான் இங்கு வந்தேன் அவளைத் துறந்து என் மனம் முழுதும் அவளின் இருப்பு நான் பாடுகிறேன் என்னை மறந்து. குங்குமப் பூப்போல் செவ்விதழும் - அதில் பூத்துக் குலுங்கும் புன்சிரிப்பும் பல கவிதைகள் பேசும் கயல் விழியும் - என்னை வாட்டுதம்மா அவை இன்றளவும். வானம்பாடிபோல் பாடுகிறாள் - அவள் தோகை மயில் போல் ஆடுகிறாள் - தென்றல் காற்று போல் என்னைத் தழுவுகிறாள் - நம் பிரிவினால் தினம் வாடுகிறாள். வானில் ஒளி விடும் விண்மீனாய் - என் மனதில் இனிக்கிறாள் செந்தேனாய் உடல் வாடிப் போனது ஒரு சருகாய் - நான் காலம் கழிக்கின்றேன் அவள் நினைவாய்.
-
- 12 replies
- 2.2k views
-
-
ஆதவனாய் அவதரித்த மாதவ அவதாரங்கள் பிரபஞ்சம் ஆளும் பிரபாவின் பிள்ளைகள் தாயின் அன்புதனை தலைவரில் கண்டவர்கள் சூரியனாய் ஒளிதந்து உரிமைக்கு உயிர்தந்து கார்த்திகை விளக்கான களம்கண்ட வேங்கைகள் வாழும் வயதினிலே வாழ்வை எமக்காக வழங்கிய வள்ளல்கள் பூமிக்கு மழைதரும் வானம் போல தம்மையே தாய் நிலத்துக்கு விதையாகத் தந்தவர்கள் மண்ணுலகில் தமிழ்வாழ விண்ணுலகை நிறைத்தவர்கள் தம் சுவாசம் தனை ஈந்து ஈழத்தாயை உயிர்ப்பித்த ஈழத்தின் விடி வெள்ளி கார்த்திகை மைந்தர்கள் http://www.thayakaparavaikal.com/kavithaigal.php
-
- 16 replies
- 2.2k views
-
-
நீ.. எனக்கு ஒரு ஏஞ்சல் நான்.. உனக்கு ஒரு வலன்ரைன் கிவ்ட் சுத்திய கஞ்சல். ஓசில வந்ததென்று கிவ்டை கவ்விக்கிட்ட நீ கஞ்சலை.. தூசென.. தூக்கி வீச முன் கண் திறந்து பார்.. அங்கு.. கசங்கிக் கிடப்பது நானும் என் அன்பும்..!
-
- 34 replies
- 2.2k views
-
-
காதல் தோல்வி காதலித்தோம் நானும் எனது பக்கது வீட்டுகாறியும் உங்கள் வீட்டு எங்கள் வீட்டு காதல் இல்லை இது ஒரு மணிதியாலம் தான் எனது எஜமானும் பக்கது வீட்டு எஜமானும் பேசிகொள்ளும் நேரம் மட்டும் தான் அவர்கள் புரிந்து கொள்ள இது மனிதக் காதலும் அல்ல அதையும் தாண்டி இரு பக்கது வீட்டு நாய்களுக்கான புனித காதல் யாரும் தப்பாக நினைக்க கூடாது இது நாய்களுக்கு என்று மட்டும் எழுதப்பட்ட கவிதை பாவம் தானே அவர்களும்
-
- 13 replies
- 2.2k views
-
-
வணக்கம் இங்கு பலதரப்பட்ட கவிஞர்கள் இருக்கின்றீர்கள். அதாவது எழுச்சி கவிதைகள் எழுதுபவர்கள் அல்லது காதல் கவிதைகளில் கற்பனை சிறகை விரித்து பறப்பவர்கள் அல்லது இரண்டு கவிதைகளையும் காலத்துக்கு ஏற்ப எழுதுபவர்கள் என்று பலவகைப்படுத்தலாம். ஆனால் யாழ் வரும் வாசகர்கள் என்ன மாதிரி கவிதையை விருப்பி படிக்கின்றார்கள் என்பதை அறிய நீண்ட நாள் ஆசை. மற்றைய பக்கங்களை விட கவிதைப்பக்கங்கள் தான் நாளுக்கு நாள் கூடிக் கொண்டு போகின்றது. எல்லாவற்றிக்கும் வாக்குப்பதிவு வைக்கின்றார்கள். இதற்கு நான் வைக்கின்றேன் . உண்மையாக வாக்களியுங்கள்.
-
- 11 replies
- 2.2k views
-
-
மாவீரர் வாரம் – “காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா” -றோய் 90 Views ‘எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டுநிற்கிறார்கள், உயர்ந்துநிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்’ என்கிறார் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். தமிழீழ மண் மீட்பு போரில் தங்களின் உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை தன்னகத்தே சுமந்து நிற்கும் இந்த கார்த்திகை மாதத்தில், அவர்கள் விட்டுச் சென்ற கனவுகளைத் தாங்கி, உரிமைக்கான குரலை உலக…
-
- 13 replies
- 2.2k views
-
-
நியூயோர்க் ஜம்பரில் லண்டன் ஸ்ரைலில் பி எஸ் 3 வாங்க பிளாசா போனேன் பிற்சாவோடு நிற்கையில் லப்டப் அடக்கமாய் நீ இருந்தாய். திறி டி விசனில் உன்னைக் காண ஐ ஆர் கொண்டு ஸ்கான் செய்தேன் எக்ஸ் பொக்ஸ் கேம் போல திறில்லாய் இருந்தாய்..! புளூருத் சிக்னலாய் என்னைத் தந்தேன் மொபைல் போன் கமராவாய் நீ என்னைப் பார்த்தாய். ஐபொட் ஒன்று வாங்கியே அருகில் வந்தேன் எம்பி 4இல் இசைதேடி எம்பி 3 இல் இசைந்தாய் என்னோடு. ஜி பி எஸ் நவிகேற்றராய் நீ வந்ததால் கை வேயில் ரவுண்டெபவுட் தேடி அலையும் நிலை களைந்தேன். டிஜிற்றல் கமராவாய் நீ அருகில் காணும் காட்சிகளோ பல மெகா பிக்சல் அளவுகளில். என்ன மாயமோ நானறியேன் சடின்லி.. பென்ரியம் 4 காட்டிஸ்க் போல ஸ…
-
- 9 replies
- 2.2k views
-
-
கரும் புலிகளின் சாம்பலில் இருந்து உயிர்தெழுவோம்!!!!!!!!!!!! கரும்புலிகள் எங்கள் கவசங்கள்! கந்தகத்தைச் சுமந்து சென்று களமதிர வெடிப்பவர்கள்! வந்த பகை முடித்து வாழ்க்கை தனைக் கொடுத்தவர்கள்! சந்தன மரமாக தம் தேகம் எரிப்பவர்கள்! எந்த இடம் என்றாலும் எதிரிகளை எரித்தவர்கள்! சந்ததம் தங்கள் தலைவனையே நினைத்தவர்கள்! சொந்த பந்தமெல்லாம் தூர வைத்துவிட்டு-தாயகத்தில் குந்த வந்த எதிரிக்கு குலைப்பனைக் கொடுத்தவர்கள்! தமிழீழத்தின் தடை நீக்கிகள்! தலைவன் கண்டு பிடித்த அணுக்குண்டுகள். ஈழத்தமிழனின் இறுதி ஆயுதங்கள்! ஆம் நிலம் வீழலாம்!-எங்கள் நெஞ்சம் வீழாது! களம் மாறலாம்-எங்கள் உளம் மாறாது! எல்லாம் முடிந்தது என்று இறுமாந்திருக்காதே பகைய…
-
- 19 replies
- 2.2k views
- 1 follower
-
-
கவிதையால் காதல் செய்கிறேன் இந்த கவிதை பகுதி ஒரு தொடர் கவிதை போல் எழுதுகிறேன் ஆனால் தொடர் கவிதை அல்ல .ஒவ்வொரு கவிதையும் தனி தனி அர்த்தமும் கருத்தும் கொண்டது . ஒரே திரியில் பலமுறை எழுதபோகிறேன் நன்றி கே இனியவன் ஏய் வான தேவதைகளே .... மறைந்து விடுங்கள் .... என் தேவதை வருகிறாள் .....!!! ஏய் விண் மீன்களே ..... நீங்கள் கண்சிமிட்டுவதை .... நிறுத்தி விடுங்கள் .... என் கண் அழகி வருகிறாள் ....!!! ஏய் வண்ணாத்தி பூச்சிகளே .... வர்ண ஜாலம் காட்டுவதை .... நிறுத்திவிடுங்கள் ..... என் வண்ண சுவர்னகை வருகிறாள் ....!!! + கவிதையால் காதல் செய்கிறேன்
-
- 16 replies
- 2.2k views
-
-
என் வணக்கம் தீஞ்சுவைத் தமிழால் உனைப் பாட வந்தாரே அரசமகனார் யாழே, உனைப் பாட வந்தாரே!!! எட்டுத்திக்கிலும் பட்டி தொட்டியெங்கிலும் உன் கால் பதித்து, தமிழால் ஒன்றிணத்தாய் எனைப்போல் பல தமிழரை . இன்று, நீ வாலைக் குமரியென்றும் கட்டிளங்காளையென்றும் அணிபிரிந்து அளக்கின்றனர் உனைப்பற்றி ....... செந்தமிழ் மொழியாள் உனக்கேது பால் ?? மொழிக்குமுண்டோ ஆண்பால் பெண்பால்?? எனைகேட்டால் , தமிழ்மொழிப்பாலே உன்பால் என்பேன் ........ நித்திரையிலும் எனைத் தட்டி செல்லக்கதை பேசும் என் இனத்து யாழ் நீ .... உன் நரம்புகளை மீட்டியே நாளும் ஒரு இசை படிப்பேன் உன் மீது தூசு விழவும் நான் விடேன் என் யாழே !!!!!!! நீ ........ வாழிய வாழியவே பல்லாண்டு ந…
-
- 17 replies
- 2.2k views
-
-
1.1. செய்யுளும் கவிதையும் யாப்பு என்பது கட்டும் நியதி. யாத்தல் என்பது பிணித்தல், புனைதல். யாவெனும் வினையடிப் பிறந்தது யாப்பு. எழுத்தும் அசையும் சீரும் தளையும் தொடுத்து அடிகளில் ஒருசேரக் கட்டிப் பொருளினை விளக்கிச் செய்யுள் அமைக்க உரிய இலக்கணம் யாப்பிலக் கணமாம். செய்யுள் என்பது செய்யப் படுவது. பத்தியும் பாட்டும் காவியம் உரையும் செய்யுள் என்பதன் பிரதி பதங்களே. கவிதை என்பது கவினுற விதைத்தல். பாட்டு என்பது பாடப் படுவது. செய்யுளும் பாட்டும் கவிதை வடிவமே. மலரும் கொழுந்தும் சேர்த்துத் தொடுத்த மாலை போலச் சொற்கள் விரவி சீர்படத் தொடுத்தது செய்யுள் எனலாம். மாலையின் நுகர்ச்சி மணமே போலச் செய்யுளின் நுகர்ச்சி பொருளே எனலாம். மாலையின் ஊடகம் அதன்நார் என்றால் செய்ய…
-
- 2 replies
- 2.2k views
-
-
இருமை - வ.ஐ.ச.ஜெயபாலன் நான் சிறுசாய் இருக்கையில் உலகம் தட்டையாய் இருந்தது. எங்க பாட்டிக்குத் தெரிந்த ஒர் அரக்கன் ஒருமுறை உலகைப் பாயாய்ச் சுருட்டி ஒளித்து விட்டானாம். அப்போதெல்லாம் பகல்தொறும் பகல்தொறும் ஏழு வண்ணக் குதிரைத் தேரில் சூரியன் வருகிற வழி பார்த்திருந்து பாட்டி தொழுவாள் நானும் தொடர்வேன். ஒரு நாள் வகுப்பறையில் என் அழகான ஆசிரியை உலகை உருண்டையாய் வனைந்து பிரபஞ்சத்தில் பம்பரம் விட்டாள். சூரியனை தேரினால் இறக்கி பிரபஞ்சத்தின் அச்சாய் நிறுத்தினாள். பின்னர் கல்லூரியிலோ ஆசிரியர்கள் பிரபஞ்சத்துள் கோடி கோடி சூரியன் வைத்தார். இப்படியாக என் பாட்டியின் மானச உலகில் வாழ்வு மனசிலாகியது. கற்ற உலகிலோ எனது அறிவு கவசம் …
-
- 15 replies
- 2.2k views
-
-
தசாவதாரம்: குழந்தையாய் நான் பண்ணும் குறும்புகள் ரசித்து உன்னுள் மகிழும் போது தாயாகிறாய்! விளைகின்ற பலாபலன்கள் யோசியாது செய்யும் போது கனிவுடனே கண்டிக்கும் தந்தையாகிறாய்! எப்போதும் முதல் நானே என்றெண்ணும் எண்ணத்தை நீயே போற்றி விட்டுக்கொடுக்கும் தமக்கை ஆகின்றாய் வேறொருவர் வந்தென்னை தாக்குகையில் காத்து நின்று எப்போதும் மானம் காக்கும் அண்ணன் ஆகின்றாய்! வாழ்வினைகற்பித்து வழிகாட்டி நெறி காட்டி நல்லனவே எண்ண வைக்கும் குருவாகின்றாய்! சோகங்கள் சொல்லுகையில் தோள் கொடுத்து சோராமல் உற்சாகம் தரும் போது தோழனாகின்றாய்! மகிழ்வூட்டி என்னையே மனசாரப் பாடி உன் மடி சாய்த்து என் உயிரே நீ ஆகின்றாய்! என் உயிர்க்குடங்கள் தான் நிறைத்து உணர்வுகளிலே பூச்சொரிந்து உ…
-
- 6 replies
- 2.2k views
-
-
அவளை யார் அறிவார் ??? பால்குடி மாறிப் பத்துவயது நடந்தபொழுது அடிவயிற்றில் ஓர்வலி கீறலாய் உதித்தது . எதுவுமே புரியாத அவளுக்கு அவள் அம்மா எடுத்துரைத்தாள் பருவத்தின் அழைப்பு மணியை அவள் வாழ்வு பூராக அவளுடன் தொடரப்போகும் இந்தப் புரியாத வலி அவளிற்குச் சத்தியமாகத் தெரியாது ........ பருவத்தின் தூரிகைகள் அவள் உடலில் பக்குவமாய்க் கோலமிட , அவள் பள்ளிக் கூட்டுகள் பதறியே அவளை நோக்க பாவை அவள் மனதும் கர்வத்தால் பறந்தே திரிந்தது........ முகத்தைக் காட்டும் கண்ணாடி அவள் உற்ற தோழியானது றெக்ஸ்சோனாவும், பெயர் அண்ட் லவ்லியும் அடிக்கடி கரைந்தே போனது !!!! காலதேவன் போட்ட கோலம் அவளை கட்டிளம் குமரியாக்க, அவளை கட்டியேபோட அவள் அப்பா அலைமோதி அலைந்தார் ....... …
-
- 29 replies
- 2.2k views
-
-
ஒவ்வொரு கணமும் உன்னை நினைத்திருக்க ஆசை ஓயாது கதை பேசி உன்னுடன் விழித்திருக்க ஆசை. செல்லமாக சீண்டி உன்னைச் சிணுங்க வைக்க ஆசை நீ சிரிக்கும் அழகினிலே சித்தம் பறிகொடுக்க ஆசை.. உறங்கும் போது உன்னைத் தாலாட்ட ஆசை.. ஊரெல்லாம் உன் பேரை சொல்லி வர ஆசை- உன் கோபப் பார்வையிலே குளிர் காய ஆசை. கொஞ்சும் குரல் இசையில் தினம் கூத்தாட ஆசை.. உன்னோடு கை கோர்த்து உலகம் சுற்றி வர ஆசை.. உயிர் பிரியும் போதும் உன் மடி சாய ஆசை...
-
- 14 replies
- 2.2k views
-
-
யாழிளையா….! கம்பீரம் மொட்டவிழ்க்கும் கட்டழகா! நெடிதுயர்தல், நீள் வளர்தல் அனைத்துமாய் நின் மாற்றம் குரலொலியில் தெரிகிறது ஆண்மையின் ஏற்றம் செறிந்த பலம் குவிந்து நிமிர்கிறது நின் மார்பு அகண்ட பெரு வெளியில் விரிகின்றன உன் தோள்கள் யாழிளையா….! கம்பீரம் மொட்டவிழ்க்கும் கட்டழகா தமிழேந்தி வலையுலவும் மெட்டழகா பதினாறின் விடலையே பயமேது உனக்கு பால் வடியும் முகத்தில் அரும்புதடா மீசை பக்கவாட்டு கன்னங்களில் படருதடா புற்கள் இலக்கியத்தில் உனைச் சொன்னால் இரும்பூக்கும் என் சொல் இன்றுனக்கு பதினாறாம் இளையவனே! தவழ்பருவம் முடித்துவிட்டாய்.. தமிழேந்தித் திரிந்து தரணியை வரி அமிழ்ததொன்றே அவ…
-
- 18 replies
- 2.2k views
-
-
நீ யற்ற போது February 21st, 2007 at 1:10 pm (காதல்) · Edit இலையற்ற மரம் நீர்யற்ற தோப்பு மண்பிடியற்ற வேர் கூடற்ற கிழை நிறமற்ற மரம் நிழல் கொடா நிலை உயிர்யற்று உறவற்று நீயற்று நின்ற மனம் காதல் வேர்றற்று சாந்து கரிசல் லாயிற்று ஆ நிலை யற்ற வாழ்வு இலை யற்ற மரம் நீர் யற்ற கடல் மரம் மற்ற காடு நிறமற்ற மலர் நீ யற்ற போது, நான் பெற்ற வலி Comments நகரும் காலமும், நகராத வாழ்வும் February 21st, 2007 at 1:00 pm (காதல்) · Edit நகரும் காலமும், நகராத வாழ்வும் நகர்ந்தது,நாட்கள் மிடங்கள் நாட்களாய் கனத்தை காதலித்தது நிமிடங்ள் வேதனையை கூட்டியது, நீ யின்றீ வாழ்க்கை வெறுமை கொண…
-
- 11 replies
- 2.2k views
-
-
எல்லாருக்கும் வணக்கம்... யாழில் எல்லாரும் காதலில் துன்பப்பட்டு அழுதபடி கவிதை எழுதி கண்ணீர் வடிப்பதை தள்ளி நின்று வேடிக்கை பார்க்க என்னால் சகிக்க முடியவில்லை. இதனால் இன்றிலிருந்து நான் காதலை போற்றி, காதலுக்கு சப்போர்ட் பண்ணி கவிதை மாதிரி ஒன்றை எழுதி இங்கு ஒட்டலாம் எண்டு நினைக்கின்றேன். இன்றில் இருந்து நான் கண்டபடி காதலை கற்பனை செய்து ஒவ்வொரு தலைப்புக்களில் எழுதப்போகின்றேன். வாசிச்சுப்போட்டு ஒருவரும் சிரிக்ககூடாது. எனது இதயத்தில் இருந்து வரும் உண்மையான வரிகளை பார்த்து சிரித்தால் பிறகு அப்புச்சாமி கோவிப்பார். இது உங்களுக்குதான் கூடாது. காதலே வா!! காதலே வா..!! நீ வராவிட்டால் நான் சாவதை தவிர வேறு வழிகளும் என்னிடம் உள்ளன.. …
-
- 10 replies
- 2.2k views
-
-
தேடுகிறேன் என் செந்தமிழை தேசம் விட்டு தேசம் வந்து தேடுகிறேன் என் செந்தமிழை செல்லுகின்ற தெருவெல்லாம் கேட்பதெல்லாம் செந்தமிழா...? என்னுடன் படிப்பவர் கதைப்பதெல்லாம் செந்தமிழா...? தமிழ் வகுப்பு மாணவர்கள் கதைப்பதெல்லாம் செந்தமிழா...? குழந்தை இன்று தாய்தன்னை அழைப்பதுதான் செந்தமிழா...? நம்மவர் கடை என்று நாம் சென்றால் அவர் கதைப்பதெல்லாம் செந்தமிழா...? நம்மை விட மூத்தவர் கதைக்கிறார் செந்தமிழா...? அன்றவர் எம்மண்ணில் ஆங்கிலேயம் அடிமை வந்த எம் இரத்தம் இன்று என்ன சும்மாவா விட்டு வைக்கும் ...? உடம்பெல்லாம் ஓடுது எம்மவர்கள் உடம்பெல்லாம்!! அம்மாவும் கதைக்கி…
-
- 10 replies
- 2.2k views
-
-
கறுப்பி உனக்கு வெள்ளை மாளிகை எதுக்கு...??( கொ. ரைசு) அடி... கொண்டலிசா ரைசு உன் மண்டை என்னடி லூசா...?? உன் உதட்டில் என்ன சாயம்....??? அது யாரு கடிச்ச காயம்...??? நீ இங்கு வருவதென்ன மாயம்....??? நீ சண்டை காற கோழி இன்று சொல்ல வந்ததென்னடி ஞாயம்....??? காலு மேல காலு போடுற நீ அலு.... நீ புஸ்சுடய வாலு திரும்பி பாரடி - நீ உன் தோலு.... நீ நாட்டிடையே கோலு மூட்டுற நீ ஆலு.... நீ புஸ்சுக்கு முளைச்ச வாலு உன் வார்த்தை எல்லாம் சீலு.... வெள்ளை மாளிகை உனக்கு கறுப்பி உனக்கு எதுக்கு....??? நன்றி - வன்னி மைந்தன் - :roll: :roll: :roll: :r…
-
- 11 replies
- 2.2k views
-
-
முள் தீண்டுகிறது ஏன்பதற்காக றோஜா மலரை வெறுக்கலாமா? வேள்ளம் வருகிறது என்பதற்காக மழையை வெறுக்கலாமா? சோகத்தின் பக்கத்தில் சொர்க்கம் இருப்பதையும் நீ சுகத்தின் பக்கத்தில் துக்கம் இருப்பதையும் நீ அறிந்து கொள்! சில சோகங்களை நேசிக்கப் பழகு சில சோகங்களை வாசிக்கப் பழகு சோகங்கள் - உன்னை சேதுக்கும் உளி - நீ சிதையாதே! து. செல்வக்குமார் என்னை மிகவும் கவர்ந்த கவி
-
- 9 replies
- 2.2k views
-