கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
எழுதுங்கள் என் கல்லறையில் இதயத்தை முத்தமிட்ட உன் அழகிய உதடுகள் விஷம் செறிந்த தேன் துளிகள் விழியாலே மொழிபேசும் கிளிமொழியாலே என் விழி பிதுங்கிட வைத்த பைங்கிளியே மை எழுதும் கண்ணாலே தினம் தினம் பொய்யெழுதி பொய்மைக்கு முன்னுரை உரைத்தவளே போதும் போதும் இந்த பொல்லாத உலகமிதில் பெண்ணொன்று வேண்டாம் இனி எனக்கு பெண்ணை நம்மாதே பேயாய் அலைந்திடுவாய் நம்பியவன் கதி நாயாய் நடைப்பிணமாய் நடுச்சாமத்திலும் தலையணை நனைத்திடும் நரகப் பொழுதிலும் புலம்புகின்றேன் அவள் பெயரை மூச்சிலே சுமக்கின்ற அவள் நாமம் அதுவே என்னை வாசகம் செய்கின்ற என் காயத்திரி மந்திரம் எழுதுங்கள் என் கல்லறையில் அவள் பெயரை தழுவும் அவள் வாசம் என் கல்லறையின் வாசகமாய்
-
- 11 replies
- 2.1k views
-
-
முரண்பாடுகள்!!! இரவும் பகலும் சிகப்புச் சிங்கமாய் இறுமிய எனகுள்ளே ஏதோ சில முரண்பாடுகள் தமக்குள்ளே அடிபட்டுக்கொள்கிறது என் மனதில் அய்யரை பேசி கோயிலை திட்டி சாத்திரங்களை எரித்து..வேதாந்தம் பல பேசிய பல பேரில் நானும் ஓருவன்! வீரமகன்! சிகப்புச்சிங்கம்! திருமணம் என்கிற பந்தம் வந்ததோ வந்தது! மாமாவின் புற்றுநோய்க்கு என் மனைவி கதிர்காம கந்தனிடம் வைத்த நேர்த்திக்கு நேரம் பார்த்து போய் வந்தோம்! மாமிக்கு வயசாகி கண் மங்கலாய்த் தெரிய என் மனைவி கனடா ஐயப்பனுக்கு நேர்த்தி வைத்தாள் "ஐயப்பனே என் அம்மாவின் கண்கள் சரியாக வர என் கணவர் இந்த முறை மாலை போடுவார்" நண்டு உயிரோடு இருந்தா…
-
- 11 replies
- 1.7k views
-
-
பசுமை தளிர்த்து கனியும் கிடைத்து நிலைக்கும் என நினைக்கையில் இலைகள் உதிர்ந்து காம்பும் கறுத்துப் பட்டதாய் நின்றது பின் பனியுந்தூற, பட்டை பிளந்து பஞ்சாய்ப்போனதுபோல் பழ மரம் பருத்திச் செடியாய்க் காட்சியளித்தது. புதிதாய்த் தூவிக்கிடந்தது பனி அதில் புதிதாய் ஏதோ பிராணியின் தடம் இதுவரை எதுவும் நடக்காத கிரகத்தின் முதற்சுவடுகள்... மனதுள் பிரமை நிஜமாய்த் தெரிந்தது. ஜக்கட்டுக்குள் நுளைந்து குளிரோடு பொருதும் பிறவும் பூண்டு பின்வளவுக் காட்சி மனதில் இருக்க முன்கதவால் இறங்கித் தெருவில் நடந்தேன். கோடையில் எனது போதியாய் விளங்கும் காட்டுக்குள் புகுந்தேன் பட்டனவாய் நின்ற நெடிதுயர்ந்த விருட்சங்கள் மூச்சின்றி நிமிர்ந்து நின்றன. கிளையாய்ப் பிரிந்தது பாதை இரண…
-
- 11 replies
- 1.7k views
-
-
தனித்திருத்தல் வரம். நீண்ட இரவில் ஏதாவது ஒரு மாலையில் தன் குரல் கேளாத தொலைவில் எதுவும் தேவையில்லை நீ நான் அவர்கள் ஒரு புல்வெளியில் குளக்கரையில் குறைந்த பட்சம் ஒரு பெருமரநிழலில்.. தனித்திருத்தல் பெரும் தவம். இழக்கவும் ஏற்கவும் எதுவுமில்லாமல், கேட்கவும் சொல்லவும் எவருமில்லாமல் பெருவெளியொன்றில் மிதந்துபோகும் ஒற்றை மேகம் போல கிளைநுனியொன்றில் சலனமின்றிக் கிடக்கும் ஒரு பறவையைப் போல தனித்திருத்தல் வரம் தனித்திருத்தல் பெரும் தவம். தனித்திருத்தலில் ஒரு தற்கொலை நிகழலாம் ஒருவன் வன்புணர்வை முயலலாம் தாயொருத்தி அடிவயிற்றின் வலியோடு ஏதாவது கடையொன்றில் பணத்தினை வீசலாம் எவனோவொருவன் எப்பவோ கடந்துபோன பெண்ணின் வனப்போடு காமத்தை கழித்துக் கொண்…
-
- 11 replies
- 1.9k views
-
-
மனதில் தளம்பல் ஈடு செய்யாமுடியா இழப்பின் தடுமாற்றம் இனி என்ன செய்வது எவர் இவர் போல் எம்மை தாங்குவார் அந்த கட்டளைச்சொல்லை எந்த வாய் சொன்னாலும் இனி........ எதிரி ஒருபுறம் துரோகிகள் மறுபுறம் இரண்டையும் தாண்டி வலை இணைப்பாளர் இன்னொரு புறம் புறம் பேசுதலே குண்டுகளாக பாய....... இனி இவருடன்...................... இடத்தை சோர்வுடன் அண்மிக்கின்றேன் புக வழி இல்லை தம்பிமார் அஞ்சலி செலுத்த வழி தரமுடியுமே கொஞ்சம் பொறுங்கள் இருக்கும் சனம் வெளியில் வரட்டும்......... மனதில் ஒரு கீறல் இதற்கிடையில் நிரம்பிவிட்டதா.... மெதுமெதுவாக கொஞ்சம் நகர்ந்தால் மண்டபத்தை சுத்தி மலையென மக்கள் வெள்ளம் மண்டபத்தினுள் கால் வைக்கின…
-
- 11 replies
- 1.3k views
-
-
சேய்கள் நாங்கள் வளர்ந்தோம்-தமிழ்த் தாய் வயிற்றில்தானே பிறந்தோம்.. நாய்கள் போல்தான் குரைப்போம்-நம் தூய்மை ஒன்றே உரைப்போம்... தேய்கின்ற நிலவை நகைப்போம்-ஒரு பேய் உள்ளிருக்கும் மறைப்போம்.. பாய்களில் தூங்கிய உடலம்-வெயிலில் காய்ந்ததே ஊரில் மறந்தோம்.. ஏய்ப்பதும் நகைப்பதும் திறமை-அடச் சீய் எனவுரைத்தால் பெருமை ஓய்ந்திடும் பொழுதினும் உயிரே-நம் வாய் ஓய்வதென்பது அரிதே.. செய்வதற்கினியென்ன பாவம்-வேகும் மெய் தொட்டு விழிமையிட்டு வாழ்வோம்.
-
- 11 replies
- 2.1k views
-
-
திரு செல்வா கனகநாயகம் ஆங்கில விரிவுரையாலார் ரொரன்ரோ பல்கலைக் கழகம் தமிழ் இலக்கிய வரலாரூ எழுதிய பேராசிரியர் வி செல்வநாயகம் அவர்கலாது மகனாவார், ஈழத்து தமிழ் கவிதை சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பவர்களூள் முக்கியமானவர். 1970பதுகளின் பிற்பகுதியில் நான் யாழ் பல்கலைக் கழக மாணாவன்/மணவர் தலைவனாக இருந்தபோது அவருடைய நட்ப்புக் கிட்டியது. செல்வாவின் மனைவி திரு எங்கள் ஆங்கில விரிவுரையாளாராக இருந்தார். மொழிபெயர்ப்புகளூக்கூடாக என்னையும் சேரனையும் புதுவை இரத்தினதுரையையும் ஆங்கிலத்தில் அறிமுகம் செய்த பெருந்தகை. மேலதிக தகவலுக்கு http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE…
-
- 11 replies
- 1k views
-
-
முப்பது வருஷங்களாய்த் தெரியும் அவளை, ஒரு வினாடிகூட எனைவிட்டுப் பிரியாதவள்! எங்கெல்லாமோ எனை இழுத்துச் சென்றவள்... இப்பொழுதும், ஒரு கேள்விக்குறியின்மேல் என்னை உட்கார வைத்திருக்கின்றாள்!? என் வாழ்க்கையைச் சுற்றவிட்டு முடிச்சவிழ்ப்பதில்.. அவளுக்குக் கொள்ளைப் பிரியம்! அவளுக்கென்ன... அவளது சுவாரஸ்யத்துக்காக சுவாசிப்பது நானல்லவா? சுமைகளைச் சுமப்பதும் நானல்லவா? அவளுக்கெங்கே தெரியப்போகிறது... அவளோடு கூடவே வாழ்வதின் கஷ்டம்! நான் சிறுகுழந்தையாய் இருந்தபோதில்... இனிமையாகத்தானே இருந்தாள்! எப்படி மாறினாள் என்று... எனக்கே தெரியவில்லை!? இன்றல்லாது... என்றாவது ஒருநாள், இவளது தொல்லை இல்லாமற் போகும்! அப்பொழுது என் சுவாசமும் அவள் கூடவே செல்லும் -பழகிய பாவத்திற்காக!
-
- 11 replies
- 816 views
-
-
குஞ்சு பொரித்து மூன்றே நாளுக்குள் முட்டையிலிருந்து எட்டிப்பார்த்த குஞ்சுகளுக்காய் இரைதேடவந்த ஜோடிக்குருவிகள் வேடனின் வலையில் சிக்கி கூண்டுக்குள் இன்று காட்சிப்பொருளாய் வித்தை காட்டிப் பிழைக்கின்றான் வேடன் வேடிக்கை பார்க்க வருபவர்களோ இறைக்கை இருந்தது தானே பறந்திருக்கலாமே என்றும் கண்ணிருந்தது தானே பார்த்திருந்தால் மாட்டி இருக்கத்தேவையில்லை தானே என்றும் வியாக்கியானம் கூறுகிறார்கள் தத்தமக்கு ஏற்ப வியாபாரிகள் வந்து விலை பேசிப் போகிறார்கள் வேடனின் குடும்பம் சமையலுக்கு தயாராகிறது பார்ப்பவர்கள் மனங்களில் பரிதாபம் மட்டும் சிலர் சிவனை வேண்டுகிறார்கள் சிலர் புத்தரை வேண்டுகிறார்கள் சிலர் அல்லாஹ்வை வேண்டுகிறார்கள் சிலர் யேசுவை வேண்டுகிறார்கள் …
-
- 11 replies
- 2.9k views
-
-
ஈழமும் சுகாதாரமும் உடல் நலம் சுகாதாரமாக இருந்தால் மன பலம் வலுவாக இருக்கும் நோயானது ஒரு சில நொடியில் பல வடிவத்தில் எம்மை ஆண்டு எம் வாழ்க்கைப் பயணத்தை குறிகிய கட்டத்தில் நிறுத்திவிடும் சிங்களவன் சில தசாப்த காலங்களாக பாரம்பரிய தமிழினத்தை பரிதவிக்க வைக்கின்றான் இரசாயனக் குண்டுகளால் முத்தான ஈழத்தின் இயற்கைக் காட்சிகளை நாசமாக்கி அசுத்தமான வாயுக்களை எம்மினம் சுவாசித்து பலவகை சுவாச நோய்களால் பரிதவிக்கின்றனர் இயற்கையான காற்றோட்டத்தில் சுதந்திரமாக சுய தொழிலில் வாழ்ந்த தமிழினம் செயற்கையான காற்றோட்டத்தில் மூச்சுத்திணறி செய்வதறியாது தவிக்கின்றது நோய்களால் திலீபன் நடமாடும் மருத்துவமனை- தன் சேவையைச் சிறப்பாகச் செய்தாலும் போதிய தமிழ் மருத்து…
-
- 11 replies
- 1.8k views
-
-
இதயத்தில் இருக்கை போட்டு அமர்ந்தவன் விரல்களின் நளினத்தில் வெட்கம் தொலைத்து சிணுங்கிக் குலுங்கி நாணி ஓடுகிறாள்..! அவள் சிணுங்களில் சித்தம் உந்த உணர்ச்சிக் கொப்பில் தாவிய இரண்டு உள்ளங்கள் உடல்கள் உரசி இதழ்கள் சுவைத்து கண் மூடிக்கிடக்கின்றன..! அட அசிங்கமே முகம் சுழிக்கும் ஆச்சியின் கையில் ஐபாட்... கதை விரிக்க அவள் விழிகள் விரிக்கிறாள் தொடர்கதை முடிக்க....! அந்த நிமிடத்தில் ஐபாட் மீது அவன் கண் வைக்க கைகள் தேட களவு ஒன்று அரங்கேறுது..! கூச்சலும் குழப்பமும்.. குலுங்கலும் சிணுங்கலும்.. ஓய்வுக்கு வர ரயில் பயணம் முடிக்கிறது...! விசாரணை தொடர்கிறது..!
-
- 11 replies
- 813 views
-
-
அம்மா நீ அழுதுவிடும் - உனது கண்ணீர் துளியால் எனது ! கல்லறையும் உருகுது - அம்மா! அன்று நான் மண்ணில் புரண்டு' விளையாடும் காலம் - என்னை ! மடியில் துக்கி அழகு பார்ப்பாய் - அம்மா ! இன்று நான் மண்ணுக்குள்ளேயே மடிந்து கிடப்பதைக்கண்டு-உனது மனம்படும் வேதனை எனக்கு புரிகின்றது அம்மா ! விடுதலை வீரனின் வித்துக்கள் ஒருபோதும் வீண்போகாது - அம்மா ! உனது விழிநீரை துடைத்து வீடு செல்லம்மா - மன்னிக்கவும் - அகதி முகாமில் உள்ள உனது ! கூடாரதுக்கு செல்லம்மா ! எமது வீடுசெல்லும் - காலம் விரைவில் வரும்,அம்மா !!!!!!!!!!
-
- 11 replies
- 1.2k views
-
-
உடன் பிறப்புக்களே என் முயலாமை நான்கெழுத்து தள்ளாமை நான்கெழுத்து இயலாமை நான்கெழுத்து ஈழத்தமிழா மரணம் நான்கெழுத்து அதுதான் உனது தலையெழுத்து
-
- 11 replies
- 1.5k views
-
-
பனி இதல்களின் உட்புறத்தின் புதர்களில் பாய்வதற்குப் பதுங்கியிருக்கின்றன முத்தங்கள்.... கனவுகளின் புூட்டை உடைத்து என் பிரதேசத்துக்கு இரவு வேளைகளில் உன்னை கடத்தி வருகிறேன்.... மூடிய இமையின் இருட்டடியில் நீ ஒரு ஒளி உருவமாய் மிதக்கின்றாய்..... தூங்கும் உடலுக்குள் ஒரு புூவாய் யாத்திரை செய்கின்றாய்..... அதன் அறைகளில் உன் அரிய பயணங்களை நிச்சயித்துக் கொண்டருக்கிறேன்.... காதலின் தோட்டத்தில நான் ஒரு புூவாக புூக்கத்தொடங்கி விட்டேன்.. பறித்துக் கொள்ள உன் விரல்கள் நடுங்குகிறதா? அசைகிறதா?............
-
- 11 replies
- 1.9k views
-
-
ஆச்சி எடன அரிவாளை.. எதுக்கடா பேராண்டி பொங்கலுக்கு புதுக்கதிர் எடுக்கவோ..?! இல்லையன ஆச்சி இனமானப் போரில் பொட்டிழந்து பொலிவிழந்து.. குளிக்கும் உன்னைக் கூட கணக்குப் பண்ணும் சிங்கள **களை போட்டுத்தள்ள...! விடுடா அது அவன் பிறவிக் குணம்.. இல்லையன ஆச்சி தமிழர் நாங்கள் புலியாய் பாய பயந்தோடிய தெருநாய்கள் உலக உருண்டையின் பொய் நயத்தால் வெற்றிக் கோசம் சேர்த்து எம் தேசம் மேய்கின்றன. இன்னும் என்னை சும்மா இருக்கச் சொல்லுறியோ..??! தம்பி ராசா.. பொங்கிய இரத்தம் போதும் செத்து வீழ்ந்ததும் போதும் வீரம் விவேகம் விளையாடினதும் போதும் எனிக் கொஞ்சம் இராஜதந்திரம் படிக்கட்டும் எம் இனம் சும்மா கிடவடா..! என்னன ஆச்சி சொல்லுறா கண் முன்னால அநியாயம் கண்டும்...…
-
- 11 replies
- 907 views
-
-
-
காட்டிக் கொடுப்பவன் எங்கே? - அந்தக் கயவனைக் கொண்டு வா! தூணோடு கட்டு! சாட்டை எடுத்துவா இங்கே! - தம்பி சாகும்வரை அடி பின்பு கொளுத்து! அன்னைத் தமிழை மறந்தான்! - பாவி அடுத்தவன் கால்களை நக்கிக் கிடந்தான்! என்ன கொடுமை இழைத்தான்! - தீயன் எட்டப்பனார் வேலை செய்து பிழைத்தான்! மாற்றார்க் கழைப்பு விடுத்தான்! - வீட்டில் மதுவும் கொடுத்தான்! மகளும் கொடுத்தான்! சோற்றுப் பதவிகள் ஏற்றான்! - மானம் தூள் தூளாய் ஆக்கி நெருப்பிலே போட்டான்! பல்லாயிரம் நாட் பயிரை - வீரம் பாயும் தமிழ்க் குல மாந்தர் உயிரை எல்லாம் நிறைந்த தமிழை - தழலில் இட்டவன் உடல்மேல் இடடா தழலை! தீயன் உடல்தீயத் தீவை! - எங்கள் தெய்வத் தமிழ்வாழ இவன் சாவு தேவை! பாயும் புலியே! தமிழா! - தம்பி! பச்சைத் துரோகி …
-
- 11 replies
- 835 views
-
-
[size=5]கதவு[/size] கதவை மூடிக்கொண்டும் திறந்துகொண்டும் இருந்தான் ஏன் இப்படிச் செய்கிறாய்? என்று கேட்டேன கதவு திறப்பதற்கா? மூடுவதற்கா? என்று அவன் கேட்டான் அவன் மேலும் சொன்னான் கதவுகள் சில நேரம் இமைகளாகத் தெரிகின்றன சில நேரம் பூ விதழ்களாக மலர்கின்றன சில நேரம் உதடுகளாகின்றன பயணம் முடிந்து வீடு திரும்புகிறவனுக்கும் சிறையில் கிடப்பவனுக்கும் கதவு திறப்பது என்பது ஒரே அர்த்தம் உடையதல்ல கதவுகளுக்கும் சிறகுகளுக்கும் ஏதோ இனம் புரியாத சம்பந்தம் இருக்கிறது கதவின் திறப்பிலும் மூடலிலும் கேள்வியும் பதிலும் இருக்கிறது கதவுகளில் சந்திப்பும் இருக்கிறது பிரிவும் இருக்கிறது …
-
- 11 replies
- 1.3k views
-
-
எனக்கும் கவிதை எழுத ஆசை இலக்கியம் எதுவும் கற்கவில்லை இலக்கணம் எதுவும் அறிந்ததில்லை மொழியின் வகைகள் புரிந்ததில்லை ஆனாலும் எனக்கு கவிதை எழுத ஆசை மரபுக் கவியின் இலக்கணமோ புதுக்கவியின் வரையறையோ எதுவும் அறியா பாமரன் நான் ஆனாலும் எனக்கு கவிதை எழுத ஆசை தமிழ் மொழியில் உள்ள அணி அறியேன் தொல்காப்பியம் குறும் கூறும் யாப்பறியேன் பழம் கவிநூல் எதுவும் கற்றறியேன் ஆனாலும் எனக்கு கவிதை எழுத ஆசை காப்பிய நூல்களை கண்டதில்லை பாரதி பாடல் கேட்டதில்லை உருத்திரமூர்த்தியின் கவி ஒன்றும் படித்ததில்லை ஆனாலும் எனக்கு கவிதை எழுத ஆசை
-
- 11 replies
- 2.6k views
-
-
காதல் மனம் தனியே சிரித்திருக்கும். தனிமையில் நிலைத்திருக்கும். காணுமிடமெல்லாம் தன் காதலையே பார்த்திருக்கும். ஊனுள் உருகிநிற்கும். உள்ளத்தை மறைத்து வைக்கும். தாம் மட்டுந்தானென்றே தம்மையே புகழ்ந்து நிற்கும். காலத்தால் அழியாது என்றும் காவியத்தி உள்ளோமென்றும் போதை தலைக்கேறினாற் போல் பொய்களும் உரைத்து நிற்கும். அன்னைக்கு அடங்கேனென்றும் தந்தை சொற் கேட்கேனென்றும் இன்பம் காதல் ஒன்றே என்று எப்போதும் இறுமாந்திருக்கும். உங்கள் காதல் மனங்களையும் அவிழ்த்து விடுங்கள்.
-
- 11 replies
- 1.9k views
-
-
இன்று யாழ்ப்பாணம் பரியோவான் - மத்திய கல்லு}ரிகளுக்கிடையில் நிகழும் துடுப்பெடுத்தாட்டத்தை எண்ணியதும் நான் முன்னார் எழுதிய இக்கவிதை நினைவுக்கு வந்தது. படித்துப்பாருங்கள். துடுப்பெடுத்தாட்டம் ஒருமரத்தின் உடலெடுத்து உரித்துப் பதனுமிட்டு ஒத்தடம்போல் எண்ணெய் தேய்த்து - அதற்கு "கிரிக்கட்" மட்டையென பெயருமிட்டு துடுப்பு எனசொல்வார் தமிழில். பத்துப்பேர் சுற்றிநிற்க பந்தை ஒருவர்வீச தத்திவரும் தோல்ப்பந்தை மட்டை கொண்டடிக்க - நிலத்தில் பட்டுவிடாமல் பிடித்தால் அகல்வார் வெளியே முக்கி முக்கி அடித்தவர். கையை மடிக்காது வீசவேண்டும் அதனை கைகொண்ட மட்டையால் தடுக்கவேண்டும் - இல்லையெனில் தகர்க்கும் தடிமூன்றும் தன்காலை முன்வைத்தால் …
-
- 11 replies
- 1.2k views
-
-
தியாக தீபம் திலீபன் அண்ணாவுக்கான நினைவுக்கவிதை கவிதை - இளங்கவி பாரதத்துக்கு அகிம்சை கற்பித்த பன்னிரு நாள் வேள்வி...... தீயிலல்ல தீயினும் கொடிய பட்டினி வேள்வி...... புலியொன்று பசி கிடந்து பாரதத்துக்கு அகிம்சையை சொல்லித்தந்த வேள்வி...... பசியதை மறந்தான் பன்னிரு நாளும் நீர்த்துளியதை மறந்தான்...... பத்திரமான தன் உயிரினைக் கூட பஞ்சு பஞ்சாய்ப் பிய்த்து எறிந்தான்..... பார்க்க வந்தோருக்கும் தன் புன்னகைப் பூவினைக் கொடுத்தான்.... பார்க்க மறந்தது பாரதம் அவன் கோரிக்கையை கேட்க மறுத்தது பாரதம்...... நாத்தம் பிடித்த சாக்கடைச் சகதியில் காந்தியின் அகிம்சையைப் புதைத்தது பாரதம்..... கோரிக்கைய…
-
- 10 replies
- 1.4k views
-
-
[size=5]தமிழ்மொழி வாழ்த்து [/size] [size=1][size=5]தான தனத்தன தான தனத்தன [/size] [size=5]தான தந்தா னே [/size] [size=5]வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழிய வே! [/size] [size=5]வான மளந்த தனைத்தும் [/size][size=5]அளந்திடும் வண்மொழி வாழிய வே! [/size] [size=5]ஏழ்கடல் வைப்பினுந [/size][size=5]தன்மணம் வீசி இசைகொண்டு வாழிய வே! [/size] [size=5]எங்கள் தமிழ்மொழி! [/size][size=5]எங்கள் தமிழ்மொழி! என்றென்றும் வாழிய வே! [/size] [size=5]சூழ்கலி நீங்கத் [/size][size=5]தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையக மே! [/size] [size=5]தொல்லை வினை தரு [/size][size=5]தொல்லையகன்று சுடர்க தமிழ்நாடே! [/size] [size=5]வாழ்க தமிழ்மொழி! வாழ்க [/size][size=5]தமிழ…
-
- 10 replies
- 1.5k views
-
-
நண்பனை பெற்றுக்கொள்ளுதல் என்பது குறியீடுகளால் குறியிடமுடியாத ஒன்றிணைவு. காலம் கரங்களை தரும். கரங்களுள் காணமல் போவது மனதின் சுரங்களை பொறுத்தது. நண்பனை பெற்றுக்கொள்ளுதல் என்பது வரலாறுகளால் வரையப்படாத அனுபவக்கீறல். இடங்கள் நெருக்கங்களை தரும். நெருக்கங்களுள் நெகிழ்ந்து போவது நேசிப்பின் வேர்களை பொறுத்தது. ஒரு நண்பன் ஒரு பறவையைப்போல ஒரு மழையைப்போல ஒரு புலர்வைப்போல ஒரு நல்ல வாசனையைப்போல நெருங்க வேண்டும். அவனின் நட்பு மாலையாக இருக்கவேண்டும் கழுத்தில் நீண்ட மனவெளிகளை.... நீண்ட மௌனங்களை......... பயமுறுத்தும் சில பொழுதுகளை........ ஒதுக்கும் சில சடங்குகளை..... கடக்க உதவியும், முயன்றும் பாருங்கள் நண்பனின் கரம் பற்றி. எப்போதும், நல்ல நண்பன…
-
- 10 replies
- 909 views
-
-
பிடித்தமாதிரி நடந்துக்கோ பிரியமாய்ப் பேசு கழுத்தளவு கவலையென்றாலும் கண்ணில் அதைக் காட்டாதே... ஆளப்பிறந்தவன் அவன் பேணப் பிறந்தவள் நீ காணக்கிடைத்த கடவுளாயிருப்பதால் கல்லானாலும் கணவன்... விதவிதமாய் உடுத்திக்கொள் வித்தியாசமாய்ச் சமைத்துப்போடு வயிற்றின் வாயிலாக அவன் மனசுக்குள் நுழையப்பார்... ஆணென்றால் அவன் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பான், கட்டிய கணவனையும் குழந்தைபோல நினைத்துக்கொள்... சிரித்த முகமென்றால் சீதேவி சீறிக்கொண்டேயிருந்தால் மூதேவி பொறுமையின் சிகரமென்றால் பூதேவி பொறுப்பின்றிச் செலவழித்தால் பூலன்தேவி... கல்யாணம் பேசியதிலிருந்து கணக்கில்லாத அறிவுரைகள்; எல்லாவற்றையும் கேட்டவள் இறுதியாய்ச் சொன்னாள்... வ…
-
- 10 replies
- 2.5k views
-