கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
உறுமும் அந்தப் புலிக்கொடி தாங்கி வந்த எங்கள் அண்ணாக்கள் எங்கே.. அக்காக்கள் எங்கே..??! களப்பலியாய் போனவர் போகட்டும் அவர்களெம் மாவீரச் செல்வங்களாய் எம்மோடு வாழ்வது உறுதி..! ஆனால்.. சுதந்திர தேச வேட்கை கொண்டு வேங்கைகளாய் உலா வந்த இந்த மானத் தமிழர்கள் தான் எங்கே..???! கவிபாடும் தமிழ் சொல்லாலே புலியெனப் பாய்ந்த புதுக்கவிஞன் புதுவை அண்ணன் எங்கே..??! "ஆழ்ந்து யோசி ஆராய்ந்து பேசு" என்ற சொல்லை வகுத்து ஈரோஸின் பிறப்போடு உறவெடுத்து புலிப் பாசறை புகுந்த அந்த அரசியல் வித்தகன் பாலகுமாரன் அண்ணன் எங்கே..??! திருநெல்வேலி முதற் தாக்குதலின் களப்பலி அவன் பொன்னமான் தம்பி தமிழீழ அரசியல் தத்துவஞானி எங்கள் யாழ் இந்துவின் மைந்தன் யோகி அண்ணன் எங…
-
- 11 replies
- 1.9k views
-
-
எல்லாரும் ஊருக்கு போகினம்..!!! நாங்கள் எப்ப ஊருக்கு போறது? எல்லாருக்கும் இருக்கும் ஆசை எங்களுக்கும் இருக்கு..! கோயில் திருவிழா தங்கையின் சாமத்திய வீடு அண்ணாவின் கலியாணம் எல்லாரும் போகினம் நாங்கள் எப்ப போறது? எங்கட கடற்கரை வெண்மணல் புட்டி கரைவலை மீன் ஒடியல் புட்டு லுமாலா சைக்கிள் எல்லாருக்கும் இருக்கும் ஆசை எங்களுக்கும் இ்ருக்கும் தானே..! நெஞ்சு கனக்கும் நினைக்கும் போது மனசு வலிக்கும். எல்லாரும் ஊருக்கு போகினம் நாங்கள் எப்ப போறது? தமிழ்ப்பொடியன் 4/06/2013
-
- 22 replies
- 1.9k views
-
-
சுடும் மழைக் காலம்... குளிர் வெயிலாய் நீ வந்தாய் ! இலையுதிர்கால.... வெளிர்ப் பூவை நீ தந்தாய் !! மனதிழை ஓடும்.... மெல்லிசையாய் உன் பெயரை, இதழிடை பாடும்.... இன்னிசையாய் நீ அமைந்தாய் !!! கனதரம் நினைத்திடும்... கணங்களும் இனித்திடும்...! நிரந்தர வதிவிடம்... மனங்களும் கொடுத்திடும்...!! சிலதரம் பார்த்திடும்... நால்-விழிகளும் கலந்திடும்...! வெண்ணிலா வெட்கத்தில்... மெல்லமாய்ச் சிவந்திடும்...!! எங்கே நீ சென்றாலும்... என் நினைவும் பின்னால் அலையுமடி..! அங்கே வானவில் வீடு கட்டி... உனக்காய் வாசல் வரையுமடி... !! உந்தன் குரலைக் கேட்டு... மெல்லப் பூக்கள் பூக்காதா... ? பூமொட்டு விரியும் தாளம் எந்தன்..... காதில் கேக்காதா... ?? என் கைகள் தொட்டுச் செல்லும் மேகம்…
-
- 6 replies
- 1.9k views
-
-
இத்தனை அழகாய் இருப்பிடம் வேறெங்கும் இருக்குமா தெரியவில்லை. வேளைக்கு உணவு; நோய் காணும் முன்னே மருந்து; யாருக்கு கிடைக்கும் சொல்லுங்கள். விரட்டி உயிர் பறிக்கும் வேட்டையன் இல்லை. மட்டற்ற கலவிக்கு சாஸ்த்திரமும் வேண்டியதில்லை. ஜாலத்தில் கிளர்கிறது வர்ணங்களால் வடிவம் கொண்ட உலகு. உயிர் வாழ்வதுக்குண்டான அனைத்து உத்தரவாதமும் உனக்குண்டு. இத்தனைக்கும் எதிர்மாறாய் சேறும் சகதியுமாக நிலையாமையில் கட்டமைக்கப்பட்டதென் அழுக்காறு உலகு. இரையில் பொறி வைத்து உயிர் பறிக்கும் குரூரம். நெளியும் புழுவில் ஒழியும் முள் குரல் வளை கிழிக்கும். உணவுக்குள் மரணம் ஒளிந்திருக்கும் சாபம். உயிர் காவும் வேட்டையன்…
-
- 0 replies
- 1.9k views
-
-
உடைந்த மூங்கிலானேன்: ஒரு உடைந்த மூங்கில் பற்றி யாரும் கவலைப் பட வேண்டாம் உடைந்த மூங்கிலால் புல்லாங்குழல் ஆக முடியவில்லை அது முகாரி பாடியதா இல்லை புரட்சி பாடியதா இல்லை தன்னையே உடைத்து அழுகுரலை இசைத்ததா யாரும் கவலைப் படவேண்டாம் மூங்கிலின் மேலிருந்த குருவி தன் காதலனின் வீரச் சாவு கேட்டு அழுது குளறியது மூங்கிலை கடந்த காற்று தன் தலைவனின் வீர மரணம் பற்றி ஓங்கி அறைந்து ஒப்பாரி வைத்தது மூங்கில் அழவில்லை மூங்கில் ஒப்பாரி வைக்கவில்லை தன்னை கடக்கும் காற்றனைத்தும் அழுகை அல்ல இசை என்றது அதன் உடைவு ஆரம்பித்து இருந்ததை அது அறியவில்லை இன்னும் புல்லாங்குழல் ஆகலாம் எனும் கனவில் அது மிதந…
-
- 15 replies
- 1.9k views
-
-
நெஞ்சு (உ)ரசிய பூவே... --------------- செவ்வானச் சிவப்புக் கன்னம் சிந்தாகும் முல்லைச் சிரிப்பு முன்னாடும் இரண்டு கண்கள் முத்தாடும் செவ் விதழ்கள் தள்ளாடும் வாழைக் கால்கள் தடுமாறும் அந்த நினைவு பந்தாடும் உந்தன் அங்கம் பஞ்சாகும் எந்தன் இதயம் முகம் துடைக்கும் காற்றில் முந்தானை அது சரிய தீ வளர்த்த மெழுகாய் தீப்பிடித்து நான் உருக கண் மூடி ரசிப்பதேன் காதல் நோயை வளர்ப்பதேன் மனம் அமிழ்ந்து போகுமட்டும் மது நிரப்பி வைப்பதேன் சொல் ஆடும் சுந்தரம் செதுக்கி வைத்த சிற்பமிது வில் ஆடும் புருவம் விளை யாடும் பருவமிது கொன்று கொன்று போகிறாய் கொஞ்சம் மீதி வைக்கிறாய் நெஞ்சு (உ) ரசிய பூவே கொஞ்சி இருக்க வந்துவிடு -எல்…
-
- 11 replies
- 1.9k views
-
-
உனக்கு ஆட்சேபனையில்லையெனில் கவிதை மலர்களுக்குள் உன்னை தூவுகின்றேன் எங்கிருந்தோ வந்த உன் அழகு என் வாலிபத்தை துவசம் செய்தது. உன்னை நினைத்துப்பார்க்கின்றேன்.. நீ அழகான ஆனால் அரிதான படைப்பு. என்னை நினைத்துப்பார்க்கின்றேன் காலம் தந்த சிறகுகளைக்கொண்டு உனக்காக பறக்கின்றேன். வாழ்க்கையின் வெவ்வேறு பகுதிக்குள் - உன் வேர் ஊடுருவியிருப்பதாக உணர்கின்றேன்.. என்னிதயத்தில் எனக்கே தெரியாத ஓர் இடத்தில் நீ பதுங்கு குழி அமைத்திருக்கின்றாய். மனசின் இலைகளின் இடுக்கில் நீ பூத்திருக்கின்றாய். உனக்கு ஒன்று தெரியுமா?.... உன்னைக் காண்பதற்கு முன்னால் நானும் காதலை எதிர்த்தவன் தான்......
-
- 10 replies
- 1.9k views
-
-
உரிமைக்குரல் பாடல் ஒளி வடிவில் Click http://www.alaikal.com/video
-
- 4 replies
- 1.9k views
-
-
பள்ளி நாட்களில் பட்டாம் பூச்சிபோல் பழகிய உன் நினைவு பசுமையாக என் மனதில்... பல்லாண்டுகள் பல பொழுதுகள் பறந்து போனாலும் பால் நிலவாக உன் நினைவு... நட்புக்கு நீயும் தோழி இரங்குவதில் நீயும் என் தாய் அன்புக்கு நீயும் காதலி அறிவில் நீயும் என் ஆசான் உன்னை நான் சந்தித்தேன் இளவேனிற்காலம் உன்னை நான் பிரிந்தேன் இலையுதிர்காலம் உன்னைப்பிரிந்த பின் என்வாழ்வு மாரிகாலம் வாழ்கை என்பது உன் நினைவுகள் உறங்குமா உன்
-
- 15 replies
- 1.9k views
-
-
ஒரே நிறம் ஒரே தோற்றம் சந்திப்பு.. சம்பிரதாயத்துக்கு வணக்கம் கூட இல்லை கேள்வி மட்டும் முந்திக் கொள்கிறது.. எந்த ஊர் ஊரில எவடம் விசா இருக்கோ.. பதிலாய் ஊர் பெயர் மெளனம்.. ஊரில் எவடம் அதுவும் மெளனம்... நீண்ட மெளனத்திலும் தொடரும் கேள்விக்கு முடிவு வேணாமோ..?! விசா மாணவன்..!! அட நீர் ஸ்ருடென்ரே... வார்த்தையில் நக்கல்..!! அப்ப நீர் உதுக்கு சரிவரமாட்டீர்... சிந்தனையிலும் அது தெறிக்கிறது. பேச்சு நீள்கிறது.. போடர் ஏஜென்சி பிடிக்கிறது அனுப்பிறது எல்லாம்.... களவாய் இருக்கிற ஸ்ருடன்ராம் கிரிமினல்களாம்.. மெளனம் பேசியது அப்ப நீங்கள்.. நான் அசைலம்.. விசா எடுத்தோ போடர் தாண்டினனீங்கள்... இல்ல …
-
- 15 replies
- 1.9k views
-
-
காதல் மனம் தனியே சிரித்திருக்கும். தனிமையில் நிலைத்திருக்கும். காணுமிடமெல்லாம் தன் காதலையே பார்த்திருக்கும். ஊனுள் உருகிநிற்கும். உள்ளத்தை மறைத்து வைக்கும். தாம் மட்டுந்தானென்றே தம்மையே புகழ்ந்து நிற்கும். காலத்தால் அழியாது என்றும் காவியத்தி உள்ளோமென்றும் போதை தலைக்கேறினாற் போல் பொய்களும் உரைத்து நிற்கும். அன்னைக்கு அடங்கேனென்றும் தந்தை சொற் கேட்கேனென்றும் இன்பம் காதல் ஒன்றே என்று எப்போதும் இறுமாந்திருக்கும். உங்கள் காதல் மனங்களையும் அவிழ்த்து விடுங்கள்.
-
- 11 replies
- 1.9k views
-
-
நட்போடு வாழ்தல் வ.ஐ.ச.ஜெயபாலன் இன்னும் தொடுவானில் கையசைக்கும் மணக்கோலச் சூரியன். கீழே படுக்கையில் பொறுமை இழந்த பூமிப் பெண் வெண்முல்லைப்பூ தூவிய நீல மெத்தைவிரிப்பை உதைக்கிறாள். எப்படியும் வந்துவிடுகிறது விடைபெறும் நேரம். என் இரு கண்களிவை என்ற துடுப்புகளை கரையில் வீசிவிட்டுச் செல்கின்றான் மாலுமியும். வழித்துணையை போற்றினும் புணரினும் எப்படியும் ஒருநாள் வந்துவிடுகிறது விடைபெறும் நேரம். தோழி உடன் இருக்கிற இன்பங்களும் பிரிகிற துன்பங்களும் அடுக்கிய நினைவு நிகழ்வு நூலகம் அல்லவா நம் வாழ்வு. பறவைகளாக உதிர்ந்து உதிர்ந்து ஆர்ப்பரித்த வானம் இனி வீதியோரப் பசும் மரங்களுள் அடைந்துவிடும். என் தலைக்குமேல் இன்று நிலா முளைக்குமா …
-
- 6 replies
- 1.9k views
-
-
அம்மா ஆயிரம் உறவு எம்மைத் தேடியே வந்தாலும் அம்மா உன்போல் அன்பான உறவெமக்கு அகிலத்தில் இனி வருமா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா - உன் பரிவிற்கா? பாசத்திற்கா? நட்பிற்கா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா. நல்லதொரு மனையாளாய் நானிலத்தில் வாழ்ந்ததற்கா? பெற்றவர்கள்தான் உவக்க பெருமையுடன் வாழ்ந்ததற்கா? உற்ற உம் உறவுகளை உயர்வுடனே சுமந்ததற்கா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா எம் உயர்வுக்காய் உனை உருக்கி ஓடியோடி உழைத்ததற்கா? - நாம் உடைந்துபோன நேரங்களில் உறுதுணையாய் நின்றதற்கா? எம் திறமைகள் அனைத்திற்கும் திறவு கோலாய் இருந்ததற்கா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா. கருத்தாய் கல்விக்கண் ஊட்டியே வளர்த்ததற்கா? கடமையே உயர்வென்று கண்ணியத்தை போதி…
-
- 9 replies
- 1.9k views
-
-
என் மனநிலைக்குள் எனைத் தொலைக்க யார் காரணம் ? என் (தலை) எழுத்தின் தடைகளுக்கு... எவை காரணம் ? வெற்றுத் தாள்களில் எழுதிக் கசக்கியெறிந்தாலும், நிம்மதியாய் இருந்திருக்குமோ ??? விளங்கவில்லை...! புரியவில்லை...!! தெரியவில்லை...!!! கண்றாவிக் க(வி)தைகளை... கோவேறு கழுதைகளில் சுமந்த, பாவியாகிப் போனேனோ...... இன்று ? மற்றவரின் கேலித்தனமான அடைமொழிக்குள்... அடைக்கப்பட்ட கோழிக்குஞ்சா நான்? என்ற கேள்விகள் எனக்குள்! கேலிக்கூத்தாட,கேளிக்கை களியாட வென்றுகொண்டே இருப்பவர்களா நாம்?? விழுந்த வேகத்தில் எழும் என் வார்த்தைகளை... "அடக்குதல்" என்பதுதான் என் 'நாகரீகம்' என்பதுவும் வீண்தானோ??? கேள்விகள் கேட்கப்போனால்... நக்கீரன்களையும், நிறையக் கேட்கலாமோ? உண்மையான பதிலி…
-
- 13 replies
- 1.9k views
-
-
சில வாரங்களின் முன்னொருத்தியின் உடலையும் அவள் அணிந்த ஆடைகளையும் அநியாயத்தின் சாட்சியமென ஆளுக்காள் படம்காட்டி செய்தியாய் செவ்வியாய் செத்துப்போனவளை பலதரம் கொன்று புதைத்தோம்….. இன்றொருத்தி 17வயதுப் பள்ளிமாணவி 76பேருடன் உடலுறவு கொண்டாளாம்….. அடி சக்கை அந்தமாதிரிச் செய்தி….. ஆளாளுக்கு விளக்கங்கள் அடங்கொய்யாலா அதுவும் சாதனைதான். மெளதீக யுத்தம் உயிர் ஆயுதம் அச்சாப் பொருத்தமான ஒப்பீடுகளும் ஒப்பனைகளும் பதின் வயது தாண்டாத 17வயதுச் சிறுமியைக் கூட விட்டு வைக்காத இனம் நாங்கள். நமக்கெல்லாம் சமூகமும் அக்கறையும் அதிகம் தான். விட்டுத் தொலையாத நாற்றங்கள் முட்டிக் கிடக்க சொகுசுக் கதிரைக்குள் சுகமாய் தட்டச்சி ஒரு தமிழச்சியைக் கூறுபோடும்…
-
- 11 replies
- 1.9k views
-
-
ஏன் இந்த அவலம் ஐயோ சொந்த மண்ணில் நாம் இருக்க ஏன் இந்த அவலம் ஐயோ நிம்மதியாய் தூங்கி நெடு நாள் ஆச்து தூங்கிய நடு நிசியில் கள்வர்கள் மிரட்டல் பாடசாலை சென்ற பாவையர் கடத்தல் கல்வியினை வாரிய கல்விமான்கள் கொலை நாளுக்கு நாள் எம் இளைஞர் கொலை ஐயோ நம் தமிழ் மண்ணில் ஏன் இந்த அவலம் நல்லூர் கந்தா நாம் என்ன குறை விட்டோம் எம் கதறல் உலகம் கண்டும் காணவில்லை கந்தா உன் காதில் எம் கதறல் விழவில்லை? கதறி அழுதோம் கால் அடியில் விழுந்தோம் காணாமல் இருப்பதேனோ? ஐயோ சொந்த மண்ணில் நாம் இருக்க ஏன் இந்த அவலம் www.thamilsky.com
-
- 15 replies
- 1.9k views
-
-
கெசொனில் மீண்டும் பறந்தது புலிக்கொடி 1990 மாசி பிறந்தது, என் நகரை விட்டு நாசி படைகள் வெளியேற வழியும் திறந்தது. தன்னைதானே வல்லரசுப் படை என பீற்றி கொண்ட ஒரு காட்டுக்கூட்டம், மூட்டை கட்டிக்கொண்டு ஓடியது. கூடவே ஓடியது, கூட்டியும், காட்டியும் கொடுத்த கொள்ளை கூட்டம். எங்கள் ஆட்டை, கோழியை, எலுமிச்சையை, மாம்பழத்தை ஆட்டையை போட்ட மிருகங்கள். எங்கள் மங்கையர் மானத்தை விலை பேசிய அரக்கர்கள். நாசி அரிக்கும் நாற்றத்துடன் அலைந்த வாழும்-பிணங்கள். கையில் கிடத்தைதை எல்லாம் அள்ளி கொண்டு ஓடிக்கொண்டிருந்தார்கள். எங்கள் நகரின் மத்தியில் அவர்கள் நாட்டு கொடி அலங்கோலமாய் கிழிந்து தொங…
-
- 34 replies
- 1.9k views
-
-
30.11.16 ஆனந்த விகடன் இதழில் தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ள எனது "மாநகரத்தின் அகதிகள்" கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! மாநகரத்தின் அகதிகள் தேசத்தின் வல்லசுரக் கனவினால் தம் வாழிடங்களை விட்டுத் துரத்தப்பட்ட ஒரு மாநகரத்தின் அகதிகள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தனித்த பகுதிகளில் வசிக்கிறார்கள் வாக்குரிமையும் ரேஷன் அட்டையும்கூட சொந்த நிலத்தில் மட்டுமே அவர்களுக்குண்டு. அங்குள்ள வங்கிக் கணக்கையும் அவர்கள் இங்கிருந்தே பராமரிக்கிறார்கள். கால்வயிறு அரைவயிற்றுக் கஞ்சியோடு அங்கே சில கால்நடைகளும் மனிதர்களும் அதில் …
-
- 4 replies
- 1.9k views
-
-
காலதேவனின் சாபம் காற்றடைத்த பைகளை நிரப்ப கருமேகங்களிடம் கையேந்தும் நிலை வர்ணங்களைப் பிரிக்கத் தெரியவில்லை எனக்கு நீலம்,பச்சை என கருமையும் செம்மையுமே என் கனவிலும் குடிகொள்கின்றன புரியாத புதிர்களாய்ப் புரட்டிப் போடப்படுகின்றன பொழுதுகள் புலர்ந்தாலும் சாய்ந்தாலும் விதைக்கப்படுகின்றன நச்சு விதைகள் நத்தைகளுக்கு கூட ஓடு இல்லையாம்- இது கொசுறுத்தகவல் கருவேலங்காட்டிற்குள் கானக்குயில் பாட்டிற்காய் காத்திருந்த காலங்கள் போய் கறிவாடை வீசாத விடியலுக்காய் காத்திருக்கின்றோம் மொட்டுக்கள் மலரமுன்னே வண்(ம்)டு(பு)களால் வன்புணரப்படும் போது பேசாதிருந்து பிறப்புறுப்புகளைப்பற்றி பேசியவுடன் பிறவிப்பலன் அடைந்ததாய் பெருமைகொள்கிறது பெண்ணியம் உச்சி மீத…
-
- 9 replies
- 1.9k views
-
-
உனை வர்ணிக்க....... கண்மணி உனை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் போதவில்லை என்று வானவில்லை நாட்டினேன் வானவில்லின் நிறங்கள் கூட உனை வர்ணனை செய்ய மறுத்துவிட்டதால் தென்றலிடம் நாடினேன் தென்றல் கூட தான் அடிக்கடி சூறாவளியாக மாறுவதால் மறுத்துவிட கடலிடம் சரணடந்தேன் கடல் கூட தான் பல பேரின் உயிரைக் குடித்துவிட்டேன் என்று கவலையோடு உரைத்துவிட நிலவை நாட்டினேன் நிலவு கூட உன் அழகிய வதனம் கண்டு பொறாமையோடு மறைந்து சென்றுவிட அன்பே...அன்பே நான் எதைக்கொண்டு உன்னை வர்ணிக்க..???? ஒன்றே ஒன்று மட்டும் என் மனதில் பிரசவித்த வார்த்தை அம்மணி..... நீ.... என் உயிரினில் பூத்துவிட்ட அ…
-
- 10 replies
- 1.9k views
-
-
வாழ்க்கை .................. தம்பிக்குக் கிரிக்கெட்மீது பைத்தியம் தனக்குப்பிடித்த நாடகத்தை தியாகம் செய்வாள் அக்கா ................. மகள் முள்ளை எடுக்கச் சிரமப்படுவாள் தலையை தான் எடுத்துவிட்டு வால் பகுதியை மகளுக்கு விட்டு வைப்பார் அப்பா ................... வளருகிற பெடியனுக்குச் சத்துத் தேவை கறியில் இருக்கும் தனக்குப்பிடித்த மீன் சினைகளை மகனுக்கு தெரிந்து எடுத்துக்கொடுப்பாள் அம்மா ........................... தங்கைக்குக் கல்யாணம் முடியட்டும் தன் காதலை கட்டுப்படுத்திக்கொள்வான் அண்ணன் .......................... அக்கா சொகுசாய் வாழவேண்டும் கடன்காரனாகிப்போவான் தம்பி ........................ அவள் நீண்டநாள…
-
- 6 replies
- 1.9k views
-
-
நான் ஸ்ரீலங்கன் இல்லை ஒரு பறவையையும் விட்டுவைக்காத படுகொலையாளிகள் எமை அழைத்தனர் பயங்கரவாதிகளென ஆஷா,ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களை பயங்கரவாதிகள் என்றுதான் அழைப்பார்களா? வேற்றினம் என்பதனால்தானே நமது சந்ததிகள் அழிக்கப்படுகின்றனர் ஒரு கல்லறையையும் விட்டு வைக்காத அபகரிப்பாளர்கள் எமை அழைத்தனர் பிரிவினைவாதிகளென ஆஷா,அபகரிக்கப்பட்ட நாட்டிற்காய் போராடுபவர்களை பிரிவினைவாதிகள் என்றுதான்அழைப்பார்களா? வேற்று நாட்டவர்கள் என்பதினால்தானே நமது நாடு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது …
-
- 0 replies
- 1.9k views
-
-
தேரை இழு.! இறுகப்பிடி வடக்கயிற்றை..!!! ___________________________________________________ -வல்வைக்கடல்- இழு தேரை.. இறுகப்பிடி வடக்கயிற்றை. பக்கத்துச் சுரிதார் பார்வைபட இன்னும் செய்! பார்த்து இளி!! முள்ளிவாய்க்காலில் அந்த இறுதிநாட்களில் உன் உறவுகள் விட்டகண்ணீரும் குருதியும் இன்னும் காயவில்லை...பரவாயில்லை..புலத்த ு தெருக்களில் தேர் இழு! உன் தாயை தந்தையை உறவுகளை காப்பாற்றாமல் கைவிட்டது சர்வதேசத்து குரங்குகள் மட்டுமல்ல..- உன் அப்பனும் ஆத்தையும் அழுதுகும்பிட்ட சாமிகளும்தான்... ஆற்றாது அழுதுதொழுத கண்ணீரை தேற்றாமல்விட்ட தெய்வங்ளை தேரில் வைத்திழுத்து களிப்படை.! இழடா தேரை..இறுக்கிக்கட்டு கச்சையை-கவனம் அவிழ்ந்து வ…
-
- 11 replies
- 1.9k views
-
-
எனது சின்ன இரவொன்றில் வாடிய மலரொன்று.... ஆம்..அவள்..என்னவள்.... எண்ணத்தில் தாங்காது நினைவுகளை-தனது வண்ணத்தில் வாட்டி... கன்னத்தில் வடிக்கின்றாள் ஆம்... அவள் - காத்திருந்து பூத்துப்போன விழிகள்....... ''கலங்காதே..கொஞ்சம் பொறு'' எத்தனை வார்த்தைகள் எத்தனை தரம்..... புளித்துப் போன கதை புதிதாக என்னவுண்டு......? விழித்துப்பார்த்தேன் நனைந்து போன- என் தலையணை...... ஓ.... எனது நெஞ்சிலும் ஈரம் உண்டு........... எனவே.. ''கலங்காதே....கொஞ்சம் பொறு''
-
- 7 replies
- 1.9k views
-
-
எங்கே அந்த வெண்ணிலா ............... எங்கே அந்த வெண்ணிலா ..எங்கே அந்த முழுநிலா சலனம் அற்ற வானத்திலே பூரண சந்திரனாய் வெளி முழுக்க ஒளி பரப்பி விண்மீது நின்றாயே கரு முகில் மறைத்ததோ ,கயவர் கவர்ந்தாரோ நானா உன்னை அனுப்பினேன் நீயாக வந்தாய் நீயாக சென்று விட்டாய் ,தவிக்கிறேன் ,தேடுகிறேன் விழிநீர் சிந்துது இதயம் கனக்குது உலகம் வெறுக்குது மீண்டும் வந்து விடு என் இனிய பூரண சந்திரனே
-
- 4 replies
- 1.9k views
-