கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
நெய்தல் பாடல் - வ.ஐ.ச.ஜெயபாலன் வாழிய தோழி கடலின்மேல் அடிவானில் கரும்புள்ளியாய் எழுதப்படும் புயற் சின்னம்போல உன் முகத்தில் பொற்கோலமாய் தாய்மை எழுதப்பட்டு விட்டது. உனக்கு நான் இருக்கிறேனடி. இனியுமுன் ஆம்பல் கேணிக் கண்களை உப்புக் கடலாக்காதே. புராதன பட்டினங்களையே மூடிய மணல் மேடுதான் ஆனாலும் தேர்ந்த கள்ளியான ஆமையால்க்கூட இங்கு தன் முட்டைகள நெடுநாள் மறைக்க முடியாதடி. விரைவில் எல்லாம் அறியபடா திருந்த திமிங்கிலம் கரை ஒதுங்கியநாள் போலாகிவிடும் அதனால் என்னடி இது நம் முதுகரைக்குப் புதிசல்லவே. அஞ்சாதே தோழி முன்பு நாம் நொந்தழ மணல் வீடுகளை ச் சிதைத்த பயல்தான். ஆனாலும் காதல் அவனை உன் காலில் விழ வைத்ததல்லவா. ஆளரவ…
-
- 10 replies
- 1.4k views
-
-
என்னவளின் டயறி ---கண்களால் காதல் தந்து ....நினைவுகளை மனதில் சுமந்து ....வலிகளால் வரிகளை வடித்து ....என்னவளின் காதல் டயறி ....கண்டெடுத்தேன் கணப்பொழுதில் ....என் மீதுகொண்ட கவலைகளை ....தன் காகிதத்தில் பதிந்திருக்கிறாள்....காகிதங்கள் கூட ஈரமாய் இருக்கிறது ....அவைகூட அழுதிருக்கிறது ....!!!+காதல் நினைவுகளும் காதல் டயறியும்என்னவளின் பக்கம்( 01) உயிரற்ற காகித்தத்தில் ....உயிர் கொண்டு எழுதினேன் ....உதயனே உயிரானவனே ......!!!காகிதம் கூட உயிர் பெற்று ....உன்னையே எழுத சொல்கிறது ....!!!என் கையெழுத்தை தவிர ....அத்தனையும் உன் நாமமே ....கவலைகளை கண்ணீரால் ...வரிகளாய் எழுதுகிறேன் .....!!!+காதல் நினைவுகளும் காதல் டயறியும்என்னவளின் பக்கம்( 02) என்னவளின் டயறியிலிருந்து ......03 …
-
- 12 replies
- 2k views
-
-
நீ தூங்கும் நேரத்தில்…………. அந்த அமைதிப் பிரதேசத்தின் அமைதியைக் குலைத்தபடி வானில் “ஜிவ்” என்று பறந்த இரு சிட்டுக் குருவிகளின் “கீச் கீச்” சத்தம் ஆங்காங்கே “மினுக் மினுக்” என்று ஒளிரும் மெழுகுவர்த்திகளின் மெல்லிய சுடர் கூடியிருந்தோர் விழிகளில் தூவானமாய்த் தொடரும் கண்ணீர் அருவி பூக்கள் மடடும் புன்னகை மாறாமல் சூழ்நிலை மறந்து தமக்குள் பேசி சல்லாபித்துக் கொண்டன யார் யாரோ வருவதும் போவதுமாய் வருடத்திற்கு ஒருமுறை இங்கு வசந்த விழா ஆனாலும் அனைவர் மனங்களும் அலைமோதும் ஆதங்கம் வேதனையின் வெளிப்பாடாய் ஆடைகளில் கறுப்பு வெள்ளை அமைதியின் பிடியில் உறங்கும் அவர்களுக்காய் மனங்களின் தேடலில் விழிகளில் ஏக்கம் இது ஒருவழிப் பாதை ஆய…
-
- 5 replies
- 1.9k views
-
-
தணல்ச்செடி, அலைமகன் - தீபச்செல்வனின் இரு கவிதைகள்:- 05 ஜூலை 2016 தணல்ச் செடி சமூத்திரத்தில் மண்டிய மையிருள் போல மறைந்திருந்த முகத்தில் அடுக்கியிருந்த இரகசியங்கள் சொல்லாத எண்ணற்ற கதைகள் கலந்தன தீயில் கருணைமிகு உன் புன்னகை கரைந்த கடலில் எழும் ஒரு பறவையின் சிறகுகளில் ஒழுகுகிறது தணல் நெருப்பை தின்று காற்றில் உறங்குகின்றனர் கரிய வீரர் கரு மேககங்கள் மண்ணில் கரைந்துருக வெடிக்கின்றன விதைகள் கந்தகம் சுமந்து வெடித்துருகிய இடத்தில் தளைத்தது தணல் மலர்களுடன் ஒரு செடி அனல் கமழுமுன் சமுத்திர மௌனத்தால் கோணிற்று உலகு இப் பூமி …
-
- 1 reply
- 1.3k views
-
-
ஆழிக் கடலடி ஆட்டம் கண்டதால் ஆழப் பெருங்கடல் மேலெழுந்தது அதிர்வின்றி அமைதியாக ஆழ்கடல் அசைந்து வந்து ஓசையற்று ஒட்டுமொத்தமாய் ஒன்றுமிலாது கொண்டு போனது அன்னை மடியென ஆடிக் கழித்தவர் அலைகடலோடு கூடிக் கழித்தவர் ஆவலோடு உனைப் பார்த்திருந்தவர் அத்தனை போரையும் அரை நொடியுள் அள்ளிக் கொண்டு சென்று விட்டாய் அந்த நொடிவரை ஆயிரமாய் அகம் முழுதும் ஆசைகளோடு அடுத்தநாளின் கனவுகளோடு ஆடிப் பாடிக் களித்திருந்தார் அனைவர் மீதும் கோபமென்ன அடித்துக்கொண்டு சென்றுவிட்டாய் பத்து மாதம் சுமந்த பிள்ளையை பள்ளிக்கனுப்பிய பாலகனை கட்டிய கணவனை காதலனை அத்தனை உறவையும் அக்கணமே அகதியாக்கிச் சென்றுவிட்டாய் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்த வீடுகள் ஏகாந்தமாய்த் திரிந்த வீதிகள் எழில் பொங்கும் எங்களின் ஊர்கள் …
-
- 14 replies
- 799 views
-
-
பருவம் குழந்தை தொட்டு பருவமும் அடைந்தாள் பலவாறாய் வருடங்கள் கடந்ததே நினைவில் இல்லை அண்ணனின் நண்பனாய் அவளுக்கும் அண்ணனாய் அப்படி ஓர் உறவை தொடராமல் தொலைத்து பதறாமல் அவள் மீது பருவங்கள் காதல் கொள்ள உணர்சிகள் மட்டும் அதை சிதறாமல் காத்துக்கொள்ள சில காலம் இளைக்காமல் பின் நிலைக்காமல் போகவும் விரைந்தோடி போனேன் அவள் விழி தேடி போனேன் கண்டதும் கையில் காதலை விதைத்த காகிதத்தை கொடுத்து மாலை வருவேன் என்று மறு நாள் காலை சென்றும் மனதில் ஆசை அற்றோ வெளியில் வேஷம் கொண்டோ பதில் தர மறுத்தாள் ஓர் சில நாட்களில் என் ஒல்லிக்குச்சிகாரி தொலைவாகியே தொலைந்தாள் தேடியும் கண்ணில் இல்லை ஓரிரு ஆண்டு தள்ளி தூரமாய் என்னில் பட்டாள் மீண்டும் என் காதல் சொல்ல மொத்தமாய் …
-
- 7 replies
- 1.2k views
-
-
ஆப்பிழுத்த குரங்கர்கள் - எங்கள் தமிழ்த்தேசம் தோர்க்குமென்று நினைப்பாரோ.!? அதனாலும் உறுதியொன்று நாம்கொள்ள இதுவாச்சு தக்க நேரம். பொன்னான பூமியிலே தமிழ்க் கண்ணான ஈழதேசம் - இன்று ஒப்பாரி ஓலமிட – ஆங்கே கொத்தணிக் குண்டெறிந்து கொல்கிறானே கோத்தபாயாக் குண்டர்கள். முண்டங்களாய் பிண்டங்களாய் - எம் தமிழன் அறுபட்ட மிருகம்போல அங்கங்கள் சிதறிப்போய்க் கிடக்கிறானே அவரொடு ஏதறியாப் பாலகரும் சாகிறதே கொத்துக் கொத்தாய்..!? தட்டி அதைக் கேட்பதற்கோ நிறுத்த அதைச் சொல்வதற்கோ நாதிகள் தாம் ஏதுமற்ற நிலையாச்சே இவ்வுலகில். அன்றென்றால்... பாரதமே படுகுழியுள் போகுமென்று பாக்கிஸ்த்தானாய்..! பங்…
-
- 0 replies
- 618 views
-
-
மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை முடிந்;து ஆண்டுகள் நான்காச்சு எந்தக் கொலையும் நடக்கவில்லை- என்ற சிங்கள அரசின் கதை தொடராச்சு எந்தக் கொலையும் செய்யவில்லை யெனில் எப்படி அவைகள் படமாச்சு மாவீரர் தூபிகளை மண்ணாக்கி மக்களை எப்படி அங்கே சிறைபிடித்தார் ஊருக்கு உபதேசம் செய்பவர்கள் உண்மை நிலையை உணராரா சோற்றுக்குள்ளே பூசணிக்காயை மறைத்தவர் கதையும் இதுதானா பாலியல் கொடுமையால் பல பெண்கள் படுகொலைசெய்ததோ அதிக ஆண்கள் கொன்று குவித்த இளசுகளோ பெருங்கும்பல் குவியியல்குவியலாப் புதைத்ததோ எண்ணிலடங்கா குழவி குழந்தை மடந்தை மாணவி இளைஞன் இளைஞி கிழவன் கிழவி - என பாலகர் உட்பட படும்கிழம்வரை கொன்றே குவித்து கொடூரம் செய்தார் எந்நாளும் எம…
-
- 0 replies
- 1.6k views
-
-
வதை முகாமில் வாடும் நம் உயிர்கள்..... கவிதை - இளங்கவி அம்மா இந்த இடம் வேண்டாம் நாங்கள் போவம் வாங்கோ.... சிணுங்கிறது ஓர் சிட்டு... மலராத அம் மொட்டு..... உன் அண்ணாவை காணவில்லை அவன் சென்ற இடமும் தெரியவில்லை.... அவனின்றி நாம் மட்டும் எங்குமே செல்வதில்லை........ ............................................... பெரும் முற்றுகையில் நடுவினிலும் பெற்றோரின் முகம்பார்த்து சில காலம்.... சிரித்திட்ட மழலைகள்; இன்று சிந்திய முத்துக்களாய்..... பல முகங்களை பார்க்கவில்லை தம்மை பார்ப்போரையும் கண்டதில்லை... பாதியாய் பட்டினி வாழ்க்கையிலே வழியின்றி தவிக்கின்றன....... ................................................... குளித்திடும் வேளையிலே …
-
- 14 replies
- 1.7k views
-
-
பசிவந்து உணவு உண்டால் முடிவு இன்பம் தரலாம் உணவைக் கண்டு பசிவந்தால் முடிவு துன்பம் தரலாம் உணர்ச்சி வந்து உறவு கொண்டால் முடிவு இன்பம் தரலாம் உறவுக்காக உணர்ச்சி கொண்டால் முடிவு துன்பம் தரலாம் காதல் வந்து அழகைக் கண்டால் முடிவு இன்பம் தரலாம் அழகைக் கண்டு காதல் வந்தால் முடிவு துன்பம் தரலாம் வாழ்வதற்குப் பொருள் தேடினால் முடிவு இன்பம் தரலாம் பொருள் தேடுவதே வாழ்க்கையானால் முடிவு துன்பம் தரலாம் பாஞ்சின் கவி படிப்போருக்கு கவியா..? கிறுக்கலா...?
-
- 17 replies
- 1.9k views
-
-
எதிரிக்கு தீயாக இருந்து எம்முள் தீபமாகிவிட்ட எங்கள் திலீபனே! உன் நினைவுகள் தீயாகவும், தீபமாகவும் நெஞ்சினில் நிறைகின்றது மனம் கண்ணீரில் நனைகின்றது. பூமியில் அஹிம்சையை புதிதாய் காட்டிய புண்ணிய தேசத்திற்கு அஹிம்சையின் ஆகயம் காட்டிய கண்ணியவாளனே எம் சனம் கதறுவதை நீ அறியவில்லையா? காந்தியின் தேசத்து மூன்றாம் தலைமுறை சூழ்சிச்யுடன் சூது கொண்டு எம் மண்ணையும் வாழ்வையும் சிங்களம் சீரழித்ததை நீ அறியவில்லையா? கருணையே இல்லாத கருணாவும் பாழாய்ப் போன பிள்ளையானும் வீறுகொண்ட விடுதலைப்போரை சதிராட வைத்ததை சத்தியமாக நீ அறியவில்லையா? உன்னைக் கொடுத்த எம் இனத்தில் இம்மாதிரி தறுதலைகளும் தலையெடுத்தது எப்படி? அரிவாயா நீ? …
-
- 3 replies
- 2.1k views
-
-
வரலாறு காடுகளை பூக்க வைக்கும். HISTORY WILL BLOOM FOREST. . பாடா அஞ்சலி வ.ஐ.ச.ஜெயபாலன். . உதிர்கிற காட்டில் எந்த இலைக்கு நான் அஞ்சலி பாடுவேன்? . சுனாமி எச்சரிக்கை கேட்டு மலைக் காடுகளால் இறங்கி கடற்கரைக்குத் தப்பிச் சென்றவர்களின் கவிஞன் நான். பிணக்காடான இந்த மணல் வெளியில் எந்த புதைகுழியில் எனது மலர்களைத் தூவ யாருக்கு எனது அஞ்சலிகளைப் பாட. . வென்றவரும் தோற்றவரும் புதைகிற உலகோ ஒரு முதுகாடாய் உதிர்க்கிறது. எந்தப் புதைகுழியில் என் மலர்களைச் சூட எந்த இலையில் என் அஞ்சலிகளை எழுத... . இந்த உலகிலும் பெரிய இடுகாடெது? பல்லாயிரம் சாம்ராட்சியங…
-
- 2 replies
- 873 views
-
-
உன் கூந்தலுக்கு அழகு என வாங்கினேன் மல்லிகைப்பூ, தென்றலே நீ கொடுத்தாய் ஒரு மாபெரும் வெறுப்பு நீ நடந்தாய் அழகாக நான் சொன்னேன் என் விருப்பு, நடந்த உன் பாதம்தனில் நீ எடுத்தாய் செருப்பு உன் முத்துப் பல் தெத்துப் பல் அழகினை காட்டியதுன் சிரிப்பு, எடுத்துச் சொன்னேன், உன் அப்பன் கொண்டுவந்தான் பிரம்பு. நீ பிறந்த அந்நாளில் யாவருக்கும் நீ கொடுத்தாய் இனிப்பு, எனக்கு மட்டும் நீ கொடுத்தாய் நா தாங்கா ஒரு உறைப்பு. என் காதல் நீ அறிய நான் மிதித்தேன் நெருப்பு, நீ சொன்னாய் உன்னிடம் இதுவெல்லாம் வேகாத பருப்பு. உன் மீது நான் கொண்ட காதலால் அடைந்தேன் வெறுப்பு நீ உணர்ந்தாய் காதலையே நான் அடைந்தேன் மலைப்பு. எம் காதல் கதை…
-
- 0 replies
- 594 views
-
-
Ranger with Tusks of Killed Elephant, Amboseli 2011 © Nick Brandt கென்யா நாட்டின், கொடும் கோடையிலும், பனிக் கவசம் சுமக்கின்ற, கிளிமாஞ்சரோ மலைக்குன்றின், அடிவாரத்தில்………! பிளெமிங்கோ பறவைகள், உழுது கோடு வரைந்த நிலம், பாளம் பாளமாய், பிளந்து கிடக்கிறது! பிளந்த நிலத்தின் வடுக்களுக்குள், புதைந்து மறைகின்ற, சிறு தவளைக் குஞ்சுகள் கூட, கதிரவனின் கொடுங்கரங்களின், வெம்மையை உணர்கின்றன! நாளைய மேகங்களின், வருகைக்காக, நம்பிக்கை சுமந்து, அவை வாழ்ந்திருக்கின்றன! இரக்கமில்லாத தரவைகளில், கருக்கட்டி வளர்ந்த, பெரிய யானையின் தந்தங்கள், சிறிய மனிதனொருவனின், துப்பாக்கியின் வெற்றிக்குச், சாட்சியாகிக் கிடக்கின்றன! தனது தோள்களில் கூடத், தூக்கிவைக்க முடியா…
-
- 17 replies
- 7.7k views
-
-
ஓல்(O/L) பரீட்சையில் ஓல்(all) எவ்(F) வந்ததும் தலை கிறுகிறுக்க அலைந்த போது.. இயக்கத்துக்கு ஓடிடுவானோ.. பயந்தாள் அம்மா. ஊருக்க வைச்சிருந்தா உவங்கள் வந்து இழுத்துக் கொண்டு போயிடுவாங்கள் உங்கால உள்ள காணியை வைச்சிட்டு அனுப்பிவிடு இவனை கொழும்புக்கு.. புத்தி சொன்னார் அப்பா. கொழும்பில போய் பொடி கெட்டிடும் உந்த ஊரெல்லாம் போகுது கனடா அனுப்பிவிடு அங்க.. பத்தாக்குறைக்கு பத்த வைத்தார் மாமா..! நானும் சோதனையில் பெயிலான (fail ஆன) சோகம் தீர புறப்பட்டேன் தாண்டிக்குளம் தாண்டி ரொராண்டோ. வருசம் ஒரு 5 போய் இருக்கும் நாலு காசு நாய்படா பாடுபட்டு வெள்ளைத் தோலிடம் ஏச்சும் இழிவும் வாங்கி உழைச்சது தான்..! அம்மா கேட்டாள் பொம்…
-
- 32 replies
- 3.6k views
-
-
வாழையை மட்டுமில்ல....... கன்றையும் சேர்த்து ....... கழுத்து அறுவிட்டு ........... தமிழன் என்பதால்.. குருதி....... தன் தலையில் தெளித்து ....... கொண்டாடி மகிழுது சிங்களம்! அந்தி வானம் சூரியனை காவு கொள்ள...... இருட்டு பூமியை - எல்லாம் எனதென்று கொள்ளையடிக்க- அம்மா பயமாய் இருக்கு என்றிருப்பாய் ..... ஐயோ ஏன்டா........ நானிருக்கன் எல்லோ ....... அவளும் சொல்லியிருப்பாள்! பிஞ்சு விரல்கள் குளிருமென்று ....... ஊர் விசேசத்து உடுத்த .......... புடவை கொண்டு - உன் பஞ்சு கால்கள்... நடுங்காது - பாதம் வரை மூடி இருப்பாள்! அண்ணா உதைக்கிறான் ...... என்றே சிணுங்கி இருப்பாய்...... தள்ளி படுடா என்று சொல்லிட்டு...... உன் தகப்பனும் உறங்கியிருப…
-
- 9 replies
- 1.9k views
-
-
உன்னை கேட்காமல் உன்னைபற்றி நிறையவே கனவுகள் கண்டுவிட்டேன் நீ எனக்காக படைக்க பட்டவன் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டேன் கடலென நினைத்தேன் நீயோ கானல் நீராய்.. சிரிப்பினில் இனிய சோகம் வைத்தாய் மறக்க முடியவில்லை அந்த நாட்களை மறக்க முடியுமா ? மறைக்க தான் முடியுமா? காலம் பதில் சொல்லும்... கனவுகள் வெறும் கனவுகளாகவே.. போதுமடா நம் உறவு.. வார்த்தையிலே தோழன் என்று கூறிவிட்டு உன்னுடன் பேசும்போதெல்லாம் உன்னை தொலைத்த வேதனையில் நான் வாட தயாராய் இல்லை.. சோகத்தை தணிக்க , எனக்கு ஏதும் வழி தெரியவில்லை கண்ணீரை தவிர... பாவியடா நான்... எப்படி தனிமையில் அவற்றை தணிப்பேன் உன்னை மறந்து விட்டதாக நண்பர்களிடம் கூறினாலும் உன்னை பிரி…
-
- 15 replies
- 8.3k views
-
-
"சங்கமாடிய தமிழ் என பேசிய தம்பிமாரெல்லாம் கடல் கடந்தனர் துப்பு கெட்டவர் நாயிலும் கீழவர் அகதி லேபலில் தூசி தட்டட்டும் கப்பலேறி கனடாவில் நக்கட்டும்" - -புதுவை இரத்தினதுரை நன்றி. உண்மையிலும் உண்மை.
-
- 11 replies
- 2.2k views
-
-
நெருப்பாய் - உழைத்தவரெல்லாம்......... விடை பெறுங்கள்! ஈரலித்துப்போன விறகுகள்... இனி பேசட்டும்!! தவிர்க்க முடியாதென்றறிந்தும்... வாசலை படிகள் பழிக்கும்...! எடுத்து அடிவைக்க முடியாவிடினும்... ஏளனம் செய்யும் .............! கோலமிருக்குமிடத்தில்... கொத்து கொத்தாய் - பிணம்! நரகவேதனை ... இதுவென்றறிந்தும்.... நமக்கென்ன குறையென்று நாக்கை பல்லால் வழித்தபடி பேசும்...! பூமியின் துன்பம் புரியுமா? கலீலியோவையே - தின்று ... தொலைத்த கூட்டம்.... திருந்துமா?-கனவு!
-
- 4 replies
- 1.1k views
-
-
எனக்குள் ஒரு பட்டாம் பூச்சி இருந்தது குளக்கரைகளில் மிதக்கும் தாழம் பூவிலும் குதித்து விளையாடும் குளப்படி வாண்டுகளிலும் லயித்து மகிழும் பட்டாம் பூச்சி அது கடந்து போகும் ஒரு துளி இசையை நூல் பிடிச்சு அதில் தொங்கி கூத்தாடும் பின் தூரத்தே கேட்கும் பறையொலியிலும் தன் சிறகுகளை விரித்து நடனமாடும் செங்கறுப்பு பெண்களின் கருத்த முலைக் காம்புகளின் மீது தீராக் காதல் கொண்டு கவி பாடும் சிலவேளைகளில் சரசமாடும் பெரும் வனம் புகும் இருள் விரும்பும் சிறுகாடு ஒன்றில் தனித்து இருக்கும் மழை நாளில் மழை நீரில் தன் குஞ்சுகளுடன் நடனமாடும் இலக்கியம் அருந்தும் மதுக் கோப்பைகளின் மிதக்கும் நுரையில் தாளம் போடும் யாருமற்ற கடற்கரை ஒன்றில் துணைவியுடன் க…
-
- 10 replies
- 3.3k views
-
-
எனக்கு என்னாயிற்று...? என்ன நடக்குது...? ஒன்றுமே புரியவில்லையே...! எல்லாமே வித்தியாசமாய்த் தெரிகிறது!! அனைத்துமே புரியாத புதிர்களாய்!!! சின்ன வயசில் ஓடி விளையாடிய போதும், நான் நன்றாகத்தான் விளையாடுவேனாம்; அம்மா சொன்னா...!? பள்ளிக்கூடத்தில படிக்கும் போதும், நன்றாகத்தான் படிப்பேனாம்; ஆசிரியர் சொன்னார்கள்...!? வேலை செய்யும் இடத்தில் கூட, நன்றாகத்தான் வேலை பார்க்கின்றேனாம்; எல்லாருமே சொல்கின்றார்கள்...!? எப்பவுமே சாதரணமாய்த்தான் இருப்பேன்... அது எனக்கே தெரியும்!? இப்படி எல்லாமே நன்றாகத்தானே இருக்கு!? அப்புறம் எனக்கேன் இந்தக் குழப்பம் ??? என்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் போதெல்லாம், எனக்குள் எந்தக் குழப்பமும் இல்லை…
-
- 4 replies
- 2.1k views
-
-
பெண்கள் இல்லாத உலகத்தில் வாழ பேயும் விரும்பாதே பாட்டு இன்றே கேட்கலாம் வாங்க http://vaseeharan.blogspot.com/ please click on here... பாட்டைக் கேளுங்கள் உங்கள் கருத்துகளை அள்ளி வழங்குங்கள் அன்புடன் தமிழ்வானம் யாழ்கள உறவுகளுக்காக மட்டும்
-
- 25 replies
- 4.5k views
-
-
மூன்று கற்கள் கனவில் கிடைத்த மூன்று கற்களில் முதல் கல்லை வீசினேன் சூரியனை நினைத்தபடி பார்வையால் பொசுக்கும் வேகத்துடன் பட்டென்று ரதமிறங்கி வந்து நின்றான் இழுத்து வந்த குதிரைகள் இரைத்த படி மூச்சுவாங்கின வெளிச்சச் சில்லுகள் பதித்த தேகத்தில் வேர்வை வழிந்தது தாகத்துக்கு அருந்த இளநீரை நீட்டினேன் ஆசுவாசமுற்ற ஆனந்தத்தில் வெற்ற்லை பாக்கு போட்டபடி வேடிக்கைக்க கதைகள் பேசிவிட்டுச் சென்றான் காற்றை நினைத்தபடி இரண்டாம் கல்லை வீசினேன் விண்ணுக்கும் மண்ணுக்குமிடையே விஸ்வரூபத்துடன் வந்தான் வாயுதேவன் முகம்பார்க்க முடியவில்லையே என்றதும் உடல்சுருக்கி எதிரில் சிரித்தான் இளநீரை விரும்பிப் பருகிய பின்னர் ஏராளமான கதைகள் சொன்னான் ஒவ்வொரு மூச்சும்…
-
- 2 replies
- 1.1k views
-
-
துடைத்து வைத்த கண்ணாடி போல இருந்ததடி என் உள்ளம்! இப்போதெல்லாம் அதில் தெரிகின்றதடி உன் விம்பம்! சலனம் இன்றிப் பயணித்தவன் நான் என்னுள்ளே நீ வந்தபின் உன் பெயரை மனனம் செய்யப் பழகிக் கொண்டவன் மரணம் வரும் எப்போதோ நானறியேன் அதுவரை சரணம் என்றுன்னை அணைப்பேன் ஊரெல்லாம் ஏதேதோ கதைக்க நீயும் நானும் வாய்மூடி மெளனிகளாவோம் உன் மனம் நானறிய என் மனம் நீயறிய உதவாத கதையெல்லாம் எமக்கெதற்கு? சிந்தை சிதறாது காதலி முந்தை வினையெல்லாம் கூடி எம்மை அலைக்கழிக்கும் பந்தை பக்குவமாய் வெட்டி விளையாடும் கால்பந்து வீரனாவோம்! விந்தை எதுவுமின்றி விரண்டோடும் வினையெல்லாம்…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஒரு கவிஞன் தன் வலிகளை.... வரிகளாய் எழுதுகிறான் .... ஒரு ரசிகன் அதை ஆத்மா ... உணர்வோடு ரசிக்கிறான் ..... ஒரு கவிதை அப்போதுதான் ... உயிர் பெறுகிறது .....!!! # என் உயிரை உருக்கி .... நான் எழுதும் கவிதைகள் என்னை ஊனமாக்கி என் மனதை ... இருளாக்கி இருந்தாலும் .... கவிதைகள் உலகவலம் வருகிறது ... உலகறிய செய்த ரசிகனே ... உன்னை நான் எழுந்து நின்று .... தலை வணங்குகிறேன் .....!!! # என் இரவுகளின் வலி...... விழித்திருந்த கண்களுக்கு தெரியும் .... பகலின் வலி அவள் எப்போது .... இரவில் கனவில வருவாள் ....? ஏங்கிக்கொண்டிருக்கும் இதயத்துக்கு ... புரியும் ..... ரசிகனே உனக்குத்தான் புரியும் .... நான் படுகின்ற வலியின் வலி ......!!! # ஒருதலையாக காதலித்தேன் ... காதலின் இராஜாங்கம் …
-
- 0 replies
- 4.2k views
-