கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
பிடித்தமாதிரி நடந்துக்கோ பிரியமாய்ப் பேசு கழுத்தளவு கவலையென்றாலும் கண்ணில் அதைக் காட்டாதே... ஆளப்பிறந்தவன் அவன் பேணப் பிறந்தவள் நீ காணக்கிடைத்த கடவுளாயிருப்பதால் கல்லானாலும் கணவன்... விதவிதமாய் உடுத்திக்கொள் வித்தியாசமாய்ச் சமைத்துப்போடு வயிற்றின் வாயிலாக அவன் மனசுக்குள் நுழையப்பார்... ஆணென்றால் அவன் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பான், கட்டிய கணவனையும் குழந்தைபோல நினைத்துக்கொள்... சிரித்த முகமென்றால் சீதேவி சீறிக்கொண்டேயிருந்தால் மூதேவி பொறுமையின் சிகரமென்றால் பூதேவி பொறுப்பின்றிச் செலவழித்தால் பூலன்தேவி... கல்யாணம் பேசியதிலிருந்து கணக்கில்லாத அறிவுரைகள்; எல்லாவற்றையும் கேட்டவள் இறுதியாய்ச் சொன்னாள்... வ…
-
- 10 replies
- 2.5k views
-
-
இன்னொரு பிரிவு வேண்டாமடா.... கிருஸ்ணமூர்த்திக்கு அஞ்சலிக் கவிதை...... நீ உன்னையே எரிக்கும் உரிமையை உனக்கு யார் தந்தது......... நம் தமிழ் தலைவனா.... இருக்கவே இருக்காது..... அவன் அக்கினிக் குஞ்சுவளர்த்து எதிரியையல்லவா எரிக்கச் சொன்னவன்...... ஆறுகோடி தமிழினம் தமிழ் நாட்டில் நீ தமிழுக்காக எரிந்து போ என்று அரசியல் வாதியா சொன்னான்..... ஆம் சொன்னாலும் சொல்லுவான்.... தான் வாழ எவனையும் எரிக்கத் தயங்காதவன்.... உன் தமிழ் பற்றா உன்னை நீயே எரிக்கத் தூண்டியது..... பற்றுள்ளவன் எரிந்து போனால் பற்றியெரியும் தமிழை யார் காப்பாற்றுவது? பற்றைக் காடெல்லாம் போட்டு உன் தொப்புள் கொடியுறவை பாழாய்ப் போனவன் எரிக்க நீயோ பற்றவைககும்…
-
- 16 replies
- 3.4k views
- 1 follower
-
-
கோயில் வாசலில் காத்திருக்கும் பிச்சைக்காரனாய் காத்திருக்கிறேன் உன் வீட்டு வாசலில் உன் புன்னகைக்காய் * தயவு செய்து இனி நீ குளிக்கும்போது பஞ்சாயத்தில் அறிவித்தல் கொடுத்து விட்டு குளி ஏனெனில் நீ குளிக்கும் போது ஊர் கிணறு எல்லாம் வைற்றி விடுகிறது * நீ ஊர் கோயிலில் பாடிய தேவாரத்தை கேட்டு சாமியாக ஆசைபட்டதில்லை நீ யாரோ ஒரு அனாதையின் இறந்த வீட்டில் பாடிய புராணத்தை கேட்டுத்தான் அனாதையாய் இறந்து போக ஆசைப்பட்டேன் * நீ படிக்கும் கல்லூரியில் ஆண்களும் சேர்ந்துதான் படிக்கிறார்கள் நீ வராத நாட்களில் மட்டும்தான் பெண்கள் கல்லூரியாய் மாறுகிறது * களைப்பில் எந்த இடத்திலும் இளைப்பாறி விடாதே அந்த இடத்தில் இளைப்பாறியே களைத்து …
-
- 7 replies
- 1.3k views
-
-
எல்லாமே மூன்று எழுத்து எல்லா இடத்திலும் பின்பற்று … எல்லோர் இடத்திலும் செலுத்து … நீயும் ஞானியாவாய் …. அன்பு ….!!! ####### உறவுகளிடம் சிக்கி தவிக்கும்…. உதறிவிட்டால் வாழ்க்கை வெறுக்கும்… இதுவும் ஒரு அழியாத கல்லறைதான் … பாசம் …..!!! ####### உள்ளவன் இல்லாதவனுக்கும் …. இருப்பவன் அனைவருக்கும் …. வற்றாத ஊற்றாய் கொடுக்கணும் … கருணை ….!!! ######## இல்லாதவன் இருப்பதுபோல் … இருப்பவன் பிரபல்யத்துக்காகவும் மாறி மாறி போடுவது …. வேசம் …..!!! ######### சந்தித்தால் வேதனையை தரும் சந்திக்காமல் சாதித்தவர்கள் இல்லை …
-
- 11 replies
- 5.6k views
-
-
ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். அன்னை எனது ஜனனத்திற்காக பல முறை மரணவாயிலை எட்டிப்பார்த்தவள் - நீ உன் விரல்களை பற்றிக் கொண்டு - தான் நடை பழகினேன் - இன்று உனக்கு முன்பாகச் செல்வதைக் கண்டும் சந்தோசப்படுகிறாய்! உன் அசைவுகளைக் கண்டு பேசத் துவங்கியவன்!! இன்று உன்னை விடவும் பேசுவதைக் கண்டும் சந்தோசப்படுகிறாய்! உன் விரல்களைக் கொண்டு எழுதப் பழகியவன்-இன்று உன்னை விடவும் எழுதுவதைக் கண்டும் சந்தோசப்படுகிறாய்! எத்தனை இரவுகள் உன் தூக்கம் தொலைத்திருப்பாய்...! வலிகளை மட்டும் கற்றுத் தந்தவன் நான்.... என் வலி கண்டதும்.... - நீ ஏன் துடிதுடித்துப் போகிறாய்? தாய் என்பதாலா...?
-
- 2 replies
- 954 views
-
-
கண் மூடி உள் நினைக்க படம் போல உன் நினைவு விரியும்! தடம் மாறி பல மனம் மாறி அலைந்த என்னை உன்னோடு அணைத்துக் கொண்டாய் உள்ளத்தில் அமிர்தத்தை தெளித்துச் சென்றாய் வனம் போல் இந்த மனம் பல மிருகங்கள் அதில் நடமாடும் உன்னிரு கரம் பட்டதாலே அவை சாந்தமாகிச் சாதுக்களான விந்தையென்ன? உருவத்து அழகில் மயங்குவது சில மாதத்தில் முடியும் உள்ளத்து அழகில் வாழ்நாள் உள்ளளவும் மயங்கலாம் என்று உன்னாலே அறிந்தேன்! நில்லாத உயிர் நிலைக்காத வாழ்க்கை எல்லாமே புரிகிறது நீயில்லாத வாழ்வை நினைக்க நினைவெல்லாம் சுடுகிறது! திட்டுவது போல் பாசாங்கு செய்வதும் சற்றே என் முகம் வாடினால் 'என்னடா' என்றென்னைத் தழுவி அணைப்…
-
- 9 replies
- 1.6k views
-
-
எமக்காகப் பிறந்தவர் எம்மில் பிறப்பாரா? வானத்து எல்லையெங்கும் வண்ணப் பூச்சொரியும் கார் காலத்து ஓர் இரவு களிப்பான மார்கழியில் ஞாலத்து இருளகற்ற நம் பாவம்தனை மீட்க காலத்தின் தேவைக்காய் கன்னி மகன் அவதரித்தார் ஓளியாக வந்த இந்த உத்தமனாம் இறை மைந்தன் வழியாக எம் வாழ்வில் வந்து பிறப்பாரா? துளிகூட அமைதியின்றி துன்புறும் சோதரரின் துயரைத் துடைக்க மனத் துணிவைத் தருவாரா? ஆயுதமே வேதமென்றும் அடக்குமுறை கொள்கையென்றும் அன்பை வெறுப்பவர்க்கு நற் பண்பைத் தருவாரா? ஆணவத்தின் பிடியினிலே அல்லலுறும் இப்பூமி காண்பதற்கு புது உலகக் கதவு திறப்பாரா? மனிதத்தைத் தொலைத்து விட்ட மகத்தான பூமியிலே தனிமனித நேயத்தை தரணியெங்கும் விதைப்பாரா? வன்முறைகள் சூழ்ந்த இந்த வக்கிர …
-
- 3 replies
- 11.3k views
-
-
[யாழ் உறவுகளின் உள்ள உணர்வுகளுக்கு அதி கூடிய மதிப்பளிக்கும் வகையிலும் மனச் சங்கடங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும் படம் நீக்கப்பட்டுள்ளது.] பாலன் பிறக்கிறான் சேதி கேட்டு.. வேட்டை ஆரம்பம் கொலைகளின் நடுவே இரத்த ஆற்றில்.. அவன் வாழ்வு..! அற்புதங்கள் செய்கிறான் ஏழை மக்களை கவர்கிறான் சண்டாளர்களின் சாவில் இருந்து.. மக்களை காக்க சொற் கருவி ஏந்துகிறான்..! ஆட்சியாளர்களின் கர்வமும் கோபமும் பொங்க.. முட்கிரீடம் தரித்து சிலுவையில் உலோகங்களால் குத்தப்பட்டு மரிக்கிறான். அங்கும் மனித உரிமை மீறல்கள் நீதி விசாரணை இன்றி.. 2012 ஆண்டுகள்..! இவன் 1950 களில் பிறக்கிறான் காலத்தின் கோலமாய் சாதாரணமாய் வளர்கிறான். சிங்களப் பேரின அரக்கர்…
-
- 8 replies
- 892 views
-
-
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான காதல்: இரண்டு பேருக்குள் ஒழுகும் தேன்..! மும்மூர்த்திகள் செய்யும் திருவிளையாடல்..! நாலு சுவருக்குள் அந்தரங்கம் ..! ஐம்புலனும் தறிகெட்டுப்போகும் அவசரம்...! அறுசுவைகள் அனைத்திலும் தெரியும்! ஏழு மலை ஏறி வந்த களைப்பிருக்கும்! எட்டில் சனி தொடங்கும்..! ஒன்பது கிரகங்களும் எதிரியாகும்! சுழியமாகிநின்ற... ஒரு ஆண்பூச்சியை, ஒரு பெண் சிலந்தி இரையாக்கும்! மீண்டும்... விரிகின்ற சிலந்தி வலைகளில், பூச்சிகள் விழ விழ... வளர்ந்துகொண்டே இருக்கின்றன... விழுதல்களும்!
-
- 7 replies
- 890 views
-
-
திபெத் மொழி பேசும் முத்துக்குமார் 43 வயது நிரம்பிய இந்தியாவில் கல்வி பயின்ற திபெத்திய கவிஞர் குத்ருப்...! சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து வியாழக்கிழமை தீக்குளித்து இறந்து விட்டார் சுமார் 50 - க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் தீக்குளித்து இறந்திருக்கிறார்கள் வியாழக்கிழமை இறந்தவர் கவிஞர் என்பது தான் மிகப் பெரும் துயரம்..! ஒரு படைப்பாளி..! திபெத்திய இலக்கியங்களை கற்று அறிந்தவர், அந்தோ பரிதாபம்..! என்றாலும் இந்தப் போட்டியிலும் எவரையும் விஞ்சி நிற்கிறார்கள் தமிழர்கள்..! இந்த வளரும் திபெத்திய படைப்பாளிக்கு, கவிஞனுக்கு ஆழ்ந்த இரங்கல் இவை தவிர நாம் வேறு என்ன சொல்ல முடியும்..! சங்கிலிக்கருப்பு
-
- 0 replies
- 688 views
-
-
அந்தோ பரிதாபம் ..! யப்பான்,சீனா, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா, தென் கொரியா... இந்த நாடுகள் எல்லாம் என்ன செய்யப் போகின்றனர்..? மூன்றாம் உலகப் போர்..? அதெல்லாம் வாய்ப்பே இல்லை என்று சொல்ல முடியாது நண்பரே..? ஆனால் ஒன்று தெரியுமா.. உங்களுக்கு..? உலக பாட்டாளிகளின் முன்னணிப் படை இலங்கை தமிழர்கள் என்று..! உலகப் பாட்டாளிகள் வசம் இழப்பதற்கு ஏதுமில்லை.. ஆனால் ஈழத் தமிழர்கள் இழப்பதற்கு உயிரை மிகப் பத்திரமாக வைத்துள்ளார்கள். பாட்டாளிகளை மிஞ்சிய ஈழத் தமிழர்கள் ஒரு கேலிப் பொருளாக மாற்றப்பட்டு விட்டார்களோ..? ஒரு மூன்று ஆண்டு காலமாக சங்கிலிக்கருப்பு
-
- 0 replies
- 717 views
-
-
தமிழீழக் காதல்....... கவிதை..... எங்கள் தாயக மண்ணின் விடுதலைப் போர் பல தியாகங்களை அடிப்படையாகக் கொண்டு முன் நகர்ந்து விருகிறது. அதில் காதலால் உண்டாகும் தியாகத்தை ஒரு கவிதை வடிவில் சொல்லியிருக்கிறேன். பாடசாலைத் திண்ணையிலே பள்ளித் தெருக்களிலே மாமரத் தோப்பினிலே மலர்கொண்ட பூங்காவிலே மனம்போல பலகுருவி மகிழ்ந்து விளையாடும் செல் சத்தங்கள் கேட்டவுடன் மண் தரையில் படுத்துக் கொள்ளும் கிஃபீரின் இரைச்சல் கேட்டால் பதுங்குகுழிக்குள் பாய்ந்துவிடும்....... இக்குருவிக் கூட்டங்களில் சில தாமக ஜோடிசேர்ந்து காதலெனும் கீதம் பாடி கனிவாக வலங்கள் வரும் காதலிலின் சிறுபிரிவுக்காய் ஊடலும் சேர்ந்து கொள்ள..... காதலனில் சந்தேகம் காட்டிடுவாள்…
-
- 4 replies
- 1.6k views
-
-
ஓ... கனடா ..உங்களை வரவேற்கின்றது -------------------------------------- மார்கழிப் பனிமழையில் மனங்களை இணைத்து வைக்கும் கனடிய நட்பு வட்டம் கன இதயத்தை நெகிழ வைக்கும் சொல்வதைச் செய்து வைக்கும் சாகராவின் சாகசங்கள் மனிதத்தை தேடியலயும் மனிதனின் நேசங்கள் புயலைப் போல புகுந்து சுழட்டும் ஆதியின் வா(ய்)ல் வீச்சுகள் முயலைப்ப்போலப்பதுங்கி புயலைப் போல புரட்டியெடுக்கும் முரளியின் வாய்வீச்சுக்கள் புயலைப்போல எழுந்து மலரைப்போல தழுவும் இரசிகையின் வரவேற்பு கைப்பிடித்த மணிவாசகனின் வரவில் நிகழும் லயிப்பு பாடவென்றே அடம் பிடிக்கும் நிழலின் நிஜம் இன்னும் என்னை கதற வைக்கும் உறவுகள் காத்திருக்க வைத்து கவிதை கொண்டு வரும் எல்லாள மஹாராஜா(அ…
-
- 4 replies
- 2k views
-
-
உலகத்தமிழா உணர்வுகொண்டு எழுடா.. ] எத்தனை காலம் செவிகள் கேட்டு கொண்டிருப்பது கண்கள் பார்த்து கொண்டிருப்பது அறியாமை மறந்து போன சிங்கள மனிதனின் யுத்தம் தன்நிலை மறந்து போன முட்டாள்களின் வெடிகுண்டு பெருக்கம்.. புவி அறிய பிறக்கும் பிறப்புகள் கூட பிறக்கமலே கருவறைக்குள் இறக்கும் அவலம்.. தப்பி தவறி பிறந்தாலும் வான்படை குண்டுகளின் குறிக்கு குதறப்படும் பரிதாபம்.. இன அழிப்பு அருவடைஎன்று ... எம்தமிழீழ கன்னிப்பெண்களின் கன்னித்திரை கிழித்தெறியும் சிங்கள காமுகனின் வெறிசெயல்.. போதுமடா உப்பிட்டு தின்பவனே காம உறுப்புகளை அறுத்தெறிய உணர்வுகொண்டு எழுடா.. சம உரிமை கேட்டதன் சன்மானம்தான் .. என் தமிழனின் உயிர் சிதைகப்படுகின்றது .. இதயமில்லா…
-
- 0 replies
- 817 views
-
-
உயிர் குடிக்காதே.. தீயே தன்னினத்தினில் அன்பும் தன்னையழித்தாலும் பிறரையழித்திடாப் பண்பும் இதயத்தில் நிகரில்லா உரமும் உன்னத உயிரினை ஈய்கின்ற வரமும் உள்ளவன் முனையினும் நீ நல்லதோர் தீயெனில் அக்கினி தேவனே..பஞ்ச பூதங்களில் பாகனே.. நல்லதோர் தமிழனின் உயிர் குடிக்காதே.. மாறாய் தீயவர் பொசுங்கிடும் தீயாயிரு.. கண்ணியம் மீறினால் கரியாக்கிடு.. அநியாயங்கள் செய்வோரை மாய்த்திடும்.. மரணக்குழியாயிரு..தீயே நல் நெஞ்சம் கொண்ட மனிதர் உயிர் மட்டும் குடியாதிரு
-
- 4 replies
- 960 views
-
-
கண்டதும் காதல் கொண்டு கொண்டது கோலம் என்று கோதையர் மேல் காதல் கொண்டால் காயும் நிலைதான் காளையர்க்கு கொடியிடை வேண்டுமென்றும் கொள்ளை அழகு வேண்டுமென்றும் குருடராகிக் குனிந்து நின்றால் கோட்டான் கூட உமைக் குதறிடும் நல்லதும் கெட்டதும் நாலுவிதம் நம்மெதிரே உள்ளவைதான் நகல் நிகர்த்து நல்லது காண் நன்மை நீயும் பெற்றிடுவாய் கண் காணும் கவர்வின்றி உண்மைக் காதல் தான் வேண்டுமென்றால் கால்களில் வீழாது காதல் செய்வீர் கம்பீரமாய் நின்று காதல் செய்வீர் உள்ளளகைக் கண்டு காதல் செய்வீர் உத்தமி ஒருத்தி வந்திடுவாள் உண்மைக் காதல் தந்திடுவாள் உம்மை உய்யவும் வைத்திடுவாள் உணர்ந்து காதல் செய்திடுவீர் உண்மை அன்பைப் பெற்றிடுவீர் உன்மத்தராய் ஆகாமல் உயிர் ஒன்றி வாழ்ந்திடுவீர்
-
- 19 replies
- 1.7k views
-
-
தேநீர்க் கவிதை: அவள் இல்லாத... முத்து சுகா அவள் இல்லாமல் சபிக்கப்பட்ட என் பொழுதுகள் விடிந்துகொண்டிருக்கின்றன ஏழு மணிக்கும் எட்டு மணிக்கும். ஜீவனில்லாத வீட்டுக்கு எத்தனை கதவு..? எத்தனை பூட்டு..? எப்போதும் ஊளையிடும் ஜன்னல் காற்றுகூட உன்னைத்தான் கேட்கிறது. நீ தொட்டெடுக்கக் காத்திருக்கும் வாசற்படி செய்தித்தாளாய் நான். அருகில் இருந்தாலும் அப்பால் இருந்தாலும் …
-
- 0 replies
- 1k views
-
-
கண்ணுக்குள் சூரியச் சிரிப்பும் வாய்ச் சொல்லுக்குள் இனிமையும் கனிவும் நெஞ்சுக்குள் விடுதலைப் பெருநெருப்பு கண்ணால் யாவையும் பேசியே மனசில் சிம்மாசனமிட்ட தம்பி ஊர் போனதில் உறவானவருள் ஒருவன் உயிர் கரைக்கும் இசையால் மனங்களைத் தன்னோடு ஒட்ட வைத்த தன்னினிய குரலில் தந்தவொரு பாடல்….அவன் நினைவுகள் சுமந்து அவன் பாடிய பாடலிது.... பாடலை நேரடியாகக் இங்கே அழுத்துங்கள். பாடலை தரவிறக்கிக் கேட்க இங்கே அழுத்துங்கள்.
-
- 3 replies
- 1.9k views
-
-
எங்கள் தேசத்தில் கறுப்புக்கொடி! உங்கள் விடுதலைக்கும் உழைத்தோம் எங்களை அடிமையாக்கினீர்கள் எங்களை பல்லக்குகளில் சுமந்தபோது ஒன்றாய் வாழ்தல் இனிது என்று கனவு கண்டோம். எங்கள் மெழியை புறகண்ணித்தீர்கள் எங்கள் அடையாளங்களை அழித்தீர்கள் எங்கள் உரிமையை பறித்தீர்கள் துரத்தினீர்கள் உங்கள் நிலத்திலிருந்து வேட்டையாடீனீர்கள் உங்கள் நகரங்களில் வைத்து ஒடுக்கி உரிமை மறுத்தபோது நாங்களொரு கனவு வளர்த்தோம். எங்களை நீங்கள் அடிமை செய்தபோதும் உங்களை நாங்கள் ஏதும் செய்யவில்லை எங்களை நாங்கள் ஆழ்கிறோம் எங்கள் மண்ணில் கண்ணீர் வேண்டாம் எங்கள் மண்ணில் துயரம் வேண்டாம் எங்கள் மண்ணில் இரத்தம் வேண்டாம் எங்களை நீங்கள் கொல்ல வேண்டாம் சிங்கள தேசத்தில் சிங்கக்கொடி தமிழர் தேசத்தில் கறுப்பு…
-
- 2 replies
- 670 views
-
-
முத்துக்குமரன்களும் முத்துவேலர்களும் தானாடாவிட்டாலும் தசை ஆடும்..அது ஆகாவிட்டால் தசை எரியும் ..முத்துக்குமரன்கள்... தானாடாவிட்டாலும் தசை நெரியும் முதுகுவலியில் (சாட்டாக) ஒதுங்கும்..முத்து வேலர்கள்... தமிழ் உணர்வு துரத்த ..தன்னுயிர் தானமாக்கும் முத்துக்குமரன்கள்.. தமிழ் உணர்வு வளர்த்து ... தன் வயிறு வளர்க்கும் முத்துவேலர்கள்.. தன் உறவுகள் துயர் பட ...உயிர் துறக்கும் ..முத்துக் குமரன்கள்.. தன் உறவுகள் கொழுத்துச் சிறந்திட ...உயிர் வளர்க்கும் ..முத்து வேலர்கள்.. ஒப்பிடவே முடியாத ..துயரம் ..கனக்கும் முத்துக்குமரன்கள்... ஒப்பிடலே இல்லாது ...காறி உமுழும் ...நிலையில் முத்து வேலர்கள்.. முன்னையது ..முத்து... பின்னையது..சொத்தை.. http://il…
-
- 0 replies
- 730 views
-
-
ஓரு தடவை உன்னைப் பார்த்தேன் -ஆனால் இப்போழுது உன்னைப் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது! இது நட்பா? காதலா? இல்லை என் சொந்தமா? - ஆனால் இப்போழுது என் இதயம் மட்டு;ம் உன்னிடம் என் மனதுக்குள்ளே புகந்தவனே நீ யார்? - ஏன் எனது தூக்கத்தை கலைக்கிறாய்? எனது இதயத்தை எடுத்துச் சென்றவனே! உனது இதயத்தை என்னிடம் விட்டுச் செல் - நீ வரும் வரை பாதுகாப்பேன்! உன்னுடன் இருக்கும் பொழுது என் இதயம் எதுவும் சொல்லவில்லை உன்னைவிட்டுப் பிரிந்தவுடன் என்னிடம் ஏதேதோ சொல்கிறதே! இவை யாவும் எனக்கு மட்டுமா? இல்லை உனக்கும் தான் பிரியா இவருடைய முதல் கவி இதுவென நினைக்கின்றேன்
-
- 6 replies
- 1.7k views
-
-
நேற்றெமது ஊரை அழிக்கவும் இன்று உமது ஊருக்கு தீ வைக்கவும் எங்கிருந்து புறப்பட்டனர்? விமானங்கள் அன்றெம் நிலத்தில் கொட்டிய அதே பதற்றம் இன்று உம் ஊர்களில் நண்பனே உனக்காய் நான் குரல் கொடுப்பேன் ஏனெனில் நான் அறிவேன் இழப்புகளின் வலியை ரிஷான், நேற்றெம் வீடுகளை சிதைத்து இன்று உம் வீடுகளை எரிப்பது ஏன்? நண்பனே உனக்காய் நான் அவதியுறுவேன் ஏனெனில் நான் அறிவேன் வீடற்ற பொழுதுகளை நேற்றெம்மீது குண்டுகளை எறிந்து இன்று உம்மீது வாள்களை வீசுகின்றவர் யார்? நேற்றெமை கொன்ற குண்டுகளில் படிந்திருந்த அதே வெறியே இன்று உமை வெட்டும் வாள்களில் நண்பனே உனக்காய் நான் துடிப்பேன் ஏனெனில் நான் அறிவேன் காயங்களின் நிணத்தை ரிஷான், எம் கோவில்களை உடைத்து உம் பள்ளிவாசல்களையும் இடிப்பது ஏன்? நண்பனே உன…
-
- 5 replies
- 877 views
-
-
ஒரு சொல்லில் கவிதை கேட்டாய் அசைந்தாடும் 'அலை'களென்றேன் பால்நிலவில் நனைந்திருந்தால் அலை அழகு கவி என்றாய். வானமகள் பானம்விடும் 'வானவில்'லைச்சொன்னேன் சாரல் மழை சேர்ந்தாலே-அது சந்தக்கவி என்றாய். தென்றலுக்கே தெரியாது திறந்து கொள்ளும் 'பூக்கள்' என்றேன் வண்டினம் வந்து பாடாமல் அதில் வடிவு கவி ஏது என்றாய். வ…
-
- 10 replies
- 1.8k views
-
-
'யுத்த கால இரவொன்றில்...' கவின் மலர் 'உங்களின் வரையறைகளின் சாளரத்துக்குப் பின்னால் நீங்கள் என்னைத் தள்ள முடியாது. இதுவரை காலமும் நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள்கிடந்து வெளியே எடுத்து வரப்பட்ட ஒரு சிறிய கல்லைப்போன்று, நான் என்னைக் கண்டெடுத்துள்ளேன்!’ இந்தப் பளீர் கவிதை வரிகள் ஈழத்துப் பெண் கவிஞர் சிவரமணிக்குச் சொந்தம்! 20 வயதுக்குள்ளாகவே ஈழத் தமிழ் இலக்கிய உலகில் முக்கிய இடம் பிடித்த தீர்க்கமான கவிஞர். இலங்கையில் இருந்த பெண்ணிய இயக்கங்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்த சிவரமணியின் எழுத்துகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. குழந்தைகளின் மனதில் போர் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த அவரது அக்கறை 'யுத்த கால இரவொன்றில் நெருக்குதல்’ கவிதையில் வெளிப…
-
- 6 replies
- 2.1k views
-
-
''இது இறுதிப் போர்....'' எந்தன் வீட்டில் மஞ்சள் அட்டை ஏறி வந்து விழுகுதப்பா கண் விழித்து பார்க்கையிலே சிவப்பு அட்டை நிக்குதப்பா... எங்கு போய் ஒளிவதப்பா...? எனக்கு வழி தெரியவில்லை எறி வள்ளம் ஓடிவிட எல்லைக்கது போனேனப்பா... அங்க வைத்து என்னை ஜயா பிடிச்சிழுத்து வந்தாங்கப்பா... எங்கள் மண்ணை காத்து விட எம் படையில் இணைந்து விடு... காலமதின் கட்டளையை கண்ணா நீயும் ஏற்றுவிடு தோளின் மேலே சுடுகளனை சுமந்து நீயும் நடந்து விடு... எல்லைக்கின்று போய் நீயும் எங்கள் நாட்டை காத்துவிடு எத்தனை காலம் எம் மண்ணில் அடிமையாக நீ இருப்பாய்...??? உன் உரிமை காத்து விட உன் உயிரை விட்டு விடு எங்கள் ஈழம் மலர்ந்து விட எங்கள் களம் வந்து விடு..…
-
- 13 replies
- 2k views
-