கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
நான் ரசித்த மற்றுமொரு கவிதையை இணைத்து விடுகிறேன். கடலும் நதியும் கடலும் நதியும் ஒருமுறை முரண்பட்டுக் கொண்டன தேடி ஓடி வரும் நதியா தாங்கி ஏற்று நிற்கும் கடலா உயர்ந்தது ? எப்போதும் நீ கேட்கும் எந்த ஆழத்திற்கும் நான் வருவேன் என்றது நதி ! எப்போதுமே சலசலத்து ஓடும் உனக்கு எனது ஆழத்திற்கு வரமுடியுமா என்றது கடல் ! உயர இருக்கும் மலை உச்சிகளிலிருந்து இறங்கி இறங்கி ஓடோடி எவ்வளவு தூரம் வந்திருக்கிறேன் நீண்டு விரிந்து மணல் பரப்பி பச்சையாய் விரிந்து என்னை மகிழ்வோடு முத்தமிடக் காத்திருக்கும் நிலத்தை விட்டு விட்டு ஓடோடி வந்தேன் உனக்கு எனது ஆழம் புரியவில்லை அலட்சியப் படுத்தி விட்டாய் என்றது நதி சிரித்தது கடல் சி…
-
- 0 replies
- 1.6k views
-
-
கீழுள்ள இந்தப்புகைப்படத்தை பார்க்கும்போது உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை கவிதையாக தரமுடியுமா? கவிதையாக வடிக்க முடியாதவர்கள் வசனங்களிலாயினும் கூறுங்கள். இப்புகைப்படம் பற்றிய எனது எண்ணங்களை கவிதையாக அல்லது வசன நடையில் இறுதியாக தருகின்றேன். நன்றி! (மேலுள்ள புகைப்படத்துடன் சம்மந்தப்பட்ட செய்தியை பார்க்க இங்கே அழுத்தவும்)
-
- 11 replies
- 1.6k views
-
-
காண வல்லாயோ ? ------------------------------------------------------ நீ இக்கணத்தில் ஒரு ஆற்றங்கரையிலோ அன்றில் ஒரு கடற்கரையிலோ உலாவிக் கொண்டிருக்கிறாயென நான் கனவு கண்டுகொண்டிருக்கிறேன். மிருதுவான ஒரு மணற்தரையில் உன் வெறும்பாதங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் நான் உன்னையெண்ணிக் கனவு கண்டுகொண்டிருக்கிறேனென நீ கனவு கண்டவாறே நிர்மலமான ஆகாயத்தையும் அடிவானத்தையும் மோகப் போதையுடன் பார்த்து முறுவலிப்பதாகவும் என் கனவுகள் விரிந்தவண்முள்ளன. நிறமிழந்து பெயர்களையிழந்து வயதிழந்து இருத்தலையும் இழந்து நித்தியமானவளாகவும் முழுமையானவளாகவும் ஆகிவிட்ட என் காதலியே ! காதலிப்போர் அனைவரினதும் காதலில் பதுங்கிக்கிடக்கும் என்னு…
-
- 4 replies
- 1.6k views
-
-
ஈழத்து இளம் பாடகன் சுஜித்ஜீ ராப் இசையில் வழங்கும் புத்தம் புதுப்பாடலான விடுதலை 2007 பாடலை உங்களோடு பகிர்கின்றேன். நம் ஈழத்து நிலையினை வரிகளில் தோய்த்து இன்றைய காலகட்டத்து இளம் நெஞ்சங்களுக்கு வழங்கும் துள்ளிசைப் பகிர்வு இது. listen to the song at ; http://radiospathy.blogspot.com/2007/10/2007.html http://uk.youtube.com/watch?v=JBD8qHHm_TI வாழ்வும் வரும் சாவும்; வரும் ஏதோ ஒருநாள் விடிவும் வரும் கொஞ்சம் பொறு ஓய்ந்தே இரு நாளைய நாளில் வரமாய் வரும் வீதியிலே நடக்கிறேன் விதியை நினைக்கிறேன் தமிழனாய்ப் பிறந்து நான் தினமும் தவிக்கிறேன் எங்கள் நாட்டு விடுதலை ஆனதோ விடுகதை எங்கள் மண்ணில் ஏது இல்லை இருந்தும் ஏதும் இல்லை தினம் தினம் உயிர்க்கொலை உயிர்க…
-
- 6 replies
- 1.6k views
-
-
நீங்கள் மெல்லச் சாகத் தொடங்குகிறீர்கள், நீங்கள் பயணம் செய்யாவிட்டால், நீங்கள் வாசிக்காவிட்டால், நீங்கள் வாழ்வின் ஓசைகளைக் கேட்காவிட்டால். உங்களையே நீங்கள் பாராட்டிக் கொள்ளாவிட்டால். நீங்கள் மெல்லச் சாகத் தொடங்குகிறீர்கள், நீங்கள் உங்கள் தன்மதிப்பைக் கொல்லும்போது, பிறர் உங்களுக்கு உதவி செய்ய அனுமதிக்காதபோது. நீங்கள் மெல்லச் சாகத் தொடங்குகிறீர்கள், அதே பாதைகளில் தினமும் நடந்து… நீங்கள் உங்கள் பழக்கங்களுக்கு அடிமையாகும்போது, உங்களது வழக்கமான செயல்களை மாற்றாமல் இருக்கும்போது வெவ்வேறு வண்ணங்களை நீங்கள் உடுத்தாதிருக்கும்போது உங்களுக்குத் தெரியாதவர்களோடு நீங்கள் பேசாத…
-
- 13 replies
- 1.6k views
-
-
ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் தான்! இலங்கையின்அமைதி ஆயுதத்தினாலே பாலஸ்தீனத்தின்அவதி ஆயுதக்குறைவினாலே! ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் தான்! இந்தியபாகிஸ்தானின் அமைதி அணுகுண்டினாலே திபெத் சீன அவதி அணுகுண்டின்மையினாலே ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் தான்! நன்றி: குழலி பக்கங்கள்!
-
- 7 replies
- 1.6k views
-
-
வாராய் தைப்பாவாய்! வாராய் தைப்பாவாய்! வாராய்! வையம் தழைத்தோங்க வழிவகைகள் தனைக்கொண்டு வாராய் தைப்பாவாய்! வாராய்! உய்விக்கும் உழவர் குலம் உதயனுக்குப் படியளக்க, மையிட்ட விழியாளே!.. மலர்ந்து நீ வாராயோ! பெய்யும் மழை நின்று வெய்யோன் கரம் நீட்டக் கைகள் தனை அசைத்துக் கனிமயிலே! வாராயோ! செய்யுள் படித்திருக்கும் சேற்று வளர் நெல்லாகி சுந்தரமாய் நடமிட்டுச் செந்தமிழே! வாராயோ! பொய்மை ரதமேறிப் போரைப் பெரிதேவும் தூய்மை மறந்தோரைத் துடைத்தெறிய வாராயோ! தொய்யும் மெய்யரையும், துவளும் கொடியரையும் மெய்யாய் நிலை நிறுத்த மெல்லியளே வாராயோ! ஐயந்தனை நீக்கி அனைவர் வாழ்வினிற்கும் ஆதாரத் தோளாக ஆரணங்கே வாராயோ! தையலே!, தளிரே!, தங்கமணிக் கதிரே கேள்! வையம் …
-
- 4 replies
- 1.6k views
-
-
உன்னை பிரிய மனமின்றி பிரிந்து தனிமையில் திரிகிறேன் உன்னை பிடிக்காமல் அல்ல உன்னை காயப்படுத்தாமல் இருக்க...
-
- 16 replies
- 1.6k views
-
-
கவிஞர் வீரா அவர்களின் கவிதைகளில் ஒன்று..
-
-
- 1 reply
- 1.6k views
-
-
'' குண்டுகள் வெடிக்க வேண்டும்..'' எங்களின் மண்ணிலே ஏறியே வந்து உன் பிள்ளை அனுப்பியே ஊரதை அழித்தாய்... எம்மினம் அழிகையில் ஏனென்று கேட்கல இன்றேன் தாயே வெம்பியே அழுகிறாய்...?? நாளுமே..நாளுமே நரபலி எடுத்தாய் எம் தமிழ் வாழ்விலே இன்னலை அழித்தாய்.. கூடியே வாழ்ந்தவர் கூடதை சிதைத்தாய் எத்தனை அவலத்தை எமக்கன்று திணித்தாய்... இத்தனை மறந்தேன் இன்று நீ அழுதாய்...?? நின்மதி தொலைத்து நித்தமும் அழுதோம்... அத்தனை ரணமும் அனுபவி வேண்டும் உன் உடல் யாவுமே கிழியவே வேண்டும்... அங்க மிழந்து- நீ அலறவே வேண்டும் அது கண்டு அயலவர் கலங்கிட வேண்டும்... பஞ்சம் வந்துன்னை பற்றிட வேண்டும் உணவின்றி நோயினால்- நீ இறந்திட வே…
-
- 6 replies
- 1.6k views
-
-
நண்பா ஒரு நிமிடம்.... சட்டென திரும்பாதே வெட்டி விட வார்த்தைகளை தேடாதே இன்று மட்டும் தோல்வி உனக்கே........ குழப்பத்தில் ஆரம்பித்த நட்பினை.. நேசமாய் நீ மாற்றினாய்.. இல்லை மறைத்தாய்.... இந்த உறவிற்கு என்ன பெயர் வைத்தாயோ அறிந்ததில்லை நான், என்ன நினைத்திருந்தாயோ அதுவும் உணர்ந்ததில்லை... இப்போது உன் வார்த்தைகள் தெளிவுமில்லை..புரியவுமில்லை ஆனால் எங்கோ உனக்கு வலிப்பது புரிகின்றது! எனக்கும் தான்! நாடியில் கை வைத்து அமைதியாய் வாசித்த நீ நிமிர்ந்து உட்காருவாயே இப்போது... ஞாபகங்கள் மீட்கும் பழக்கம் உனக்கு இருக்கின்றதா? இல்லாவிடினும் எனக்காக ஒரு முறை... முயன்று பார் நண்பா! அர்த்தமறியாதது போல் உன…
-
- 7 replies
- 1.6k views
-
-
திங்கட்கிழமை தீ மூட்டிக் கொன்றார்கள் செவ்வாய்க்கிழமை செல் அடித்துக் கொன்றார்கள் புதன்கிழமை புகை விட்டுக் கொன்றார்கள் வியாழக்கிழமை விண்ணில் வந்து கொன்றார்கள் வெள்ளிகிழமை வெடி வைத்துக் கொன்றார்கள் சனிக்கிழமை சத்தம் இன்றிக் கொன்றார்கள் ஞாயிற்றுகிழமை நஞ்சு விட்டுக் கொன்றார்கள் ஏழு நாளும் இரக்கமின்றிக் கொன்றார்கள் விடிகாலையிலே வீடு வந்து கொன்றார்கள் மதியவேளையிலே மோட்டார் அடித்துக் கொன்றார்கள் பின்னேரத்திலே பிடித்துச் சென்று கொன்றார்கள் இராப்போழுதினிலே ராக்கெட் விட்டுக் கொன்றார்கள் அமாவாசையில் அடித்து அடித்துக் கொன்றார்கள் பௌர்ணமியில் பட்டினி இட்டுக் கொன்றார்கள் கரிகாலத்திலே கற்பழித்துக் கொன்றார்கள் சுபயோகத்திலே சிரமறுத்துக…
-
- 2 replies
- 1.6k views
-
-
நான் அவனுக்கு கடிதம் எழுதினேன் அது அவனிடம் போய் சேர வில்லை முட்டி அலை மோதி என்னிடம் வந்தது அவனின் முகவரி சரியாய் தெரியததால்
-
- 8 replies
- 1.6k views
-
-
மகிந்தவுக்கு ஒரு மடல் மகிந்தா கிளிநொச்சி இன்று உன் வசம் அதனால் நீ அடைந்திருக்கிறாய் பரவசம் நீ கொண்டாடிக் கொண்டிருக்கிறாய் பட்டாசு வெடித்து அப்பாவித் தமிழர்கள் கதறி அழுகிறார்கள் கண்ணீர் வடித்து சற்றே சிந்தித்துப் பார் ஆறேழு நாடுகளின் உதவி கொண்டு தமிழ்த் துரோகக் கும்பல்களையும் துணைக்குக் கொண்டு மனித உரிமை விதிகளை தட்டிக் கழித்து பத்திரிகைச் சுதந்திரத்தையும் முற்றாக மறுத்து மருத்துவ மனை, அகதி முகாம்களையும் தாக்கி அழித்து அப்பாவித் தமிழர்களையும் கொன்று குவித்து நீ அடைந்திருப்பதெல்லாம் ஒரு வெற்றியா நீ வெட்கமின்றிப் பிதற்றுகிறாய் இதைப் பற்றியா நீ இன்று போட்டிருகிறாய் போர்க் கோலம் அதனால் தமிழர் வீடுகளில் மரண ஓலம் …
-
- 4 replies
- 1.6k views
-
-
என்ர பைரவிக்கு அனைத்தும் வரும் இருந்தும் எனக்கும் “சிந்து”க் கிறக்கம் . பௌதீகம் இதுவரை பைரவி மட்டும். சித்தத்தில் மட்டும் சிந்து சிலநேரம்! பச்சசைக்கிளி முத்துச்சரம் இரயிலிற்குள் எனைக் கட்டும் படிச்ச பாவபுண்ணியம் என் கனவினில் எனைக் கட்டும் பிடிச்ச பைரவி நொந்திடக்கூடாது என, சரிக்க முடியாது இதுவரை என் பயணம் என் பைரவி என் உசிர்... சொல்லிச் செய்தது போல் அப்பிடி ஒரு பொருத்தம் நான் கொஞ்சிக் கொஞ்சி அவள் சொக்கிலும் புதுக் குழி உதட்டு முத்தமும் கன்னத்துமுத்தமும்...கன்னமே அதிகம்! ...பைரவி என் உசிர்! எந்தன் இரசிகை, விவாதக் காரி, விளையாட்டும் காரி சில்மிசம் சிருங்காரம்... அவள் சிரிப்புச் சில்லறை போல் சிதறும் என் அகந்தை உடைத்துச், சிறுமை திருத்திச…
-
- 9 replies
- 1.6k views
-
-
குழந்தையாய் இருந்தபோது! கொப்பனை உரிச்சு வைச்சிருக்கிறான் என்றார்கள் சிரித்தேன்! கொம்மாவபோல் என்றார்கள் சினந்தேன்! சித்தப்பன் போல் என்றார்கள் நடந்தேன்! சுப்பர் ஸ்டார் என்றார்கள் ஏது செய்தபோதும் யாரோ போல் என்றார்கள். ஒரு போதும் என்னை அவர்களுக்கு நானாய் அடையாளம் தெரியவில்லை. வருடங்களின் பின் நாடு சென்றபோது விமான நிலையத்தில் காத்திருந்தார்கள் என் குழந்தையை ஓடிவந்து வாரி அணைத்தார்கள் - அட 'அப்படியே உன்ன மாரி இருக்கிறான்" என்றார்கள் ஆக அவன் "சுயமும்'' அழிந்து போயிற்று
-
- 9 replies
- 1.6k views
-
-
காற்று திசை மாறும்-நம் கண்ணீர் மறைந்துவிடும் நீர் ஊற்றும் பிணங்கள் வீழ்ந்தழுகும் அழும் பெருஞ் சாலைகளும் எரிந்த தோப்புகளும் கூரையிழந்த சுவர்களும் சாம்பல் பூத்த திண்ணைகளும் தலைதுறந்த தென்னைகளும் பனைகளும் சிரிப்பொலி மறந்துபோன செந்நீர் காயாத வன்னி மண்ணும் பழையநிலை காணக் காலம் சேரும் காற்று திசை மாறும் ஆடும் மாடும் கோழியும் குஞ்சுமென வாழ்ந்து பழகிவிட்டு பதுங்குகுழிகளுக்குள்ளும் எல்லாம்மறந்து பதறிக்கிடந்து..கதறிக்கிடந்து உறவையும் உயிரையும் கொஞ்சம் கொஞசமாயும்.. கூட்டம்கூட்டமாயும்..சிங்கள இனவெறியருக்குப்பறி கொடுத்து வாழ்வை வெறுத்துப்போன.. உலகையும் உள்ளமெலாம்தொழும் இறைவனையும் சபித்துக்கொள்ளும்.. ஈழத்தமிழனுக்காய்..நல்ல இதயங்கொண…
-
- 0 replies
- 1.6k views
-
-
காலமெல்லாம் கடும் பனியிலும் ஓடி ஓடி உழைத்தவன் - இன்று உறங்கு நிலையில் ஓய்வெடுக்கின்றான் நெஞ்சுறுதியுடன் போராட போனவன்- இன்று வீதி விபத்தில் சிக்கி சிதைந்து போனான் மனைவி மக்களை அன்பாய் நேசித்தவன் - இன்று அசையா மனிதனாக மருத்துவ மனையில் எல்லா கேள்விகளுக்கும் காலம்தான் பதில். ஒரு சோக நிகழ்வு ரெண்டு நாட்களுக்கு முன்பு நிகழ்ந்தது. அவர் பிழைத்து வர இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
-
- 12 replies
- 1.6k views
-
-
அவன் வருவான் அதுவரை காத்திரு…. அழுதபடி உனக்காய் இல்லாத கடவுளையெல்லாம் இறைஞ்சியதன் பலன் இன்று நீ அறுக்கப்பட்ட செட்டைகள் முளைத்துப் பறக்கும் பறவைபோல் இருள் மதில்கள் தாண்டி வெளியில் வந்திருக்கிறாய்…. *குறுந்தகவல் மூலம் உன் விடுதலைச் செய்தி* மனம் முட்டின மகிழ்ச்சி நிலத்தில் நிற்காது கால்கள் பறக்கின்றன….. மூன்றாண்டு அஞ்ஞாத வாசம் முடித்து – உன் வரவை எதிர்பார்த்திருந்த குழந்தையின் முகத்தில் மீளவும் சிரிப்பை பூக்க வைத்துள்ளாய்…… அவன் பிஞ்சுக் கைகளைப் பிடித்தபடி இனி நீ கனவு காணலாம் கவிதைகள் படிக்கலாம் அச்சம் தரும் கனவுப்பாளங்களை உடைத்துக் கொண்டு இரவுகளில் இனி நீ உறங்கலாம் இது நிரந்தரமாகட்டும். கனவுகளுக்காய்ப் போன உனது கண்ணாளனின்…
-
- 4 replies
- 1.6k views
-
-
-
கடவுள்மார் எல்லோரும் பம்மல் கே சம்பந்தம் படம் பார்த்த பின் ஒன்றுகூடி பதிலாக இதை மணிவாசகனிடம் கொடுக்கும் படி என்னிடம் அனுப்பி வைத்தார்கள்........ எல்லாம் தெரிந்தவன் வல்லவன் செய்பவன் என்றது நானா அல்லது நீயா :?: அநியாயகாரனை உருவாக்கியது நானா அல்லது நீயா :?: என்னை பாரென்று சொன்னது நானா அல்லது நீயா :?: என்னுடன் பிரியமா இரு என்றது நானா அல்லது நீயா :?: மனிதராக பக்குவபடாதற்கு காரணம் நானா அல்லது நீயா :?: நடுநிலை தவறியதற்கு காரணம் நானா அல்லது நீயா :?: எல்லாம் கொடுத்தது பறித்தெடுத்தது நானா அல்லது நீயா :?: மனசடங்கை பணசடங்காக்கியது நானா அல்லது நீயா :?: எனக்கு கோபுரம் கட்டி குண்டு போட சொன்னது நானா அல்லது நீயா :?: தர்மாகர்த்தாவை உண்டாக்…
-
- 10 replies
- 1.6k views
-
-
தோற்றுப் போனவர்களின் பாடல் எல்லா திசைகளில் இருந்தும் எழுந்து அறைகிறது வெற்றி பெற்றவர்களின் பாடல். பாடலின் உச்சம் எச்சிலாய் எங்கள் முகத்தில் உமிழ் படுகிறபோதும் அவர்கள் அஞ்சவே செய்வார்கள். ஏனெனா? அவர்களிடம் தர்மத்தின் கவசம் இல்லையே.. எரிந்த மேச்சல் நிலத்தின் சாம்பரில் துளிர்க்கும் புற்களின் பாடலைப்போல தோற்றுப் போன எங்களுக்கும் பாடல்கள் உள்ளன. உரு மறைந்த போராளிகள் போன்ற எங்கள் பாடல்களை வென்றவர்கள் ஒப்பாரி என்கிறார்களாம். காவிய பிரதிக்கிணைகள் பல புலம்பலில் இருந்தே ஆரம்பிக்கிறது. அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் செல்வத்தைத் தேய்க்கும் படை என்று சொல்லப் பட்டுள்ளதே தர்மத்தின் தோல்விகளில் இருந்து ஆரம்பிக்கிற மாகாவியங்களில் முன்னமே இதுபோல் பாடல்கள் உள்ளன. காலம்தோறும்…
-
- 1 reply
- 1.6k views
-
-
எல்லா அம்மாவிற்கும் தெரியும் தன் மகனிற்கு எது பிடிக்கும் என்று, ஆனால் 99% மகனிற்கு தெரியாது தன் அம்மாவிற்கு எது பிடிக்கும் என்று...
-
- 12 replies
- 1.6k views
-
-
பைந்தமிழ் இனம் காக்க பணி நன்றே செய்திடுக! போர் பெய்த மழையினிலே ஊர் விட்டுப்போனவரே! பாரெங்கும் பரந்திருக்கும் பாசப் பிணைப்புகளே! ஆரெவரோ என்றுங்கள் அகம் மூடி நடிக்காமல் பைந்தமிழ் இனம் காக்க பணி நன்றே செய்திடுக! முண்டமாய் உடலும் - சதைப் பிண்டமாய் உறுப்புகளும் கண்ட கண்ட இடமெல்லாம் அழுகிய பிணங்களாக ஆர் பெற்ற பிள்ளைகளோ? அண்டை அயலொடு அவனியிலே பேர் பெற்ற அமைதிப் பெருநாடுகளும் கண்டாரோ? கருத்தில் கொண்டாரோ? ஈழத் தமிழினத்தின் இன்னல் நிலை. செப்ப ஒரு நாவிருந்தும் செப்பாத செந்தமிழா! உற்றாரும், உறவுகளும் ஊரோடு எரிகையிலே ஒப்பாரிப் பாட்டுக்கூட உனக்கெடுக்கத் தெரியலையோ? முத்துமணி ரத்தினமும் மெத்தையொடு மெல்லிடையும் சுத்திவரும் சுகம் தரவா சொந்தத…
-
- 2 replies
- 1.6k views
-
-
என்னைக் கோவப் படுத்தியதுக்காக உன் மேல் நீ கோவப்படுகிறாய் உன்னைக் கோவப் படுத்தியதுக்காக என் கோவத்தை வெறுக்கிறேன் * என்னால் உன் கோவங்களை புரிந்து கொள்ள முடிவதில்லை ஒரு விதத்தில் அதுவும் உதவி செய்கிறது எனக்கு ஆங்கிலம் புரியாததால் * உன் கோவத்தை என் மேல் இறக்கி வைத்துவிட்டு போய்விடுவாய் பாவம் நான் படாத பாடுபடுகிறேன் உன் கோவத்தை யாரிடமாவது இறக்கி வைக்க * உன் ஆசையை காட்டுவதற்காக இப்பிடியா வார வாரம் என்கூட கோவம் போட்டு பேசாமல் விடுகிறாய் சில தினங்கள் * உன்னை அழகாய் எனக்கு காட்ட விரும்புகிறாய் என்றால் சொல்லி இருக்கலாமே உனக்கு விரும்பிய அழகுசாதனப் பொருட்கள் வாங்கி தந்திருப்பேனே அதை விட்டுட்டு ஏன் என் மேல் அடிக்க…
-
- 10 replies
- 1.6k views
-