Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஒரு மீனவ நண்பனின் ஆட்டோக்கிராவ்(f) நடு இரவின் முழு நிலவை முகில் மறைத்து, விடிகாலைத் தோற்றங் காட்டும். கடுகளவு பயமின்றி நடுக்கடலில் வலை பரப்பி விழித்திருந்து கதை பகிர்வோம். 'சிவசோதி'யில் 'படகோட்டி' 'ஜெய்ஸி'யில் 'பச்சை விளக்கு' எம்.ஜி.ஆர் - சிவாஜிக்காய் பட்டிமன்றம் தூள்பறக்கும். புறோக்கர் புலோமினா புதுவரவு மணியக்கா இவர்களுக்காய் பட்டிமன்றம் திசைமாறும். கடல் மீனின் வரவுக்காய் விண்மீன்கள் செலவாகும். செட்டியைக் கொண்டான் உச்சி வர விடிவெள்ளி முளைத்தெழும். வலை நிறைந்த மீனுக்காய் மனம் நிறைந்து எதிர்பார்க்கும். வலை வளைத்து... வலித்து கரை நோக்கி படகேகும். வெள்ளை மணற் பரப்பில் வெளிச்சவீடு எழுந்து நின்று ஒ…

  2. By ஃபெய்ஸ் அஹ்மத் ஃபெய்ஸ் - சுதந்திர விடியல் இதுவல்ல கரை படிந்த வெளிச்சம் இரவு குதறித் துப்பிய விடியல் இதுவல்ல எனது தோழர்கள் தாகங்கொண்டு தேடியரைந்த தெளிந்த விடியல் இதுவல்ல பரந்து விரிந்த வானத்தின் கால்வெளியில் தாரகை நிரைத்து நிற்கும் இலக்கொன்று இருக்கும்! பொங்கிப் பெருகும் இரவின் அலைகள் அமைதி கொண்டு கழுவிச் செல்லும் கரையொன்று இருக்கும் இதயச் சுமையை ஏற்றிவரும் ஓடம் தங்கி இளைப்பாறும் துறையொன்றிருக்கும் என்று எனது தோழர்கள் தாகங்கொண்டு தேடியலைந்த தெளிந்த விடியல் இதுவல்ல! புரியாத புதிராய் வாலிப ரத்தம் தழுவத் தூண்டும் கரங்கள் கிரங்கிப்போன பார்வைகள் அன்பும் அழகும் தொட்டும் தொலைவில்.... இருந்தும் காவு கொடுத்த காதல்கள் எத்தனை? விடியலின் சுடர்மிகு…

  3. ஏ சர்வதேச சமூகமே! கவிப்பேரரசு வைரமுத்து சொந்தநாய்களுக்குச் சொத்தெழுதிவைக்கும் தேசங்களே! ஓர் இனமே நிலமிழந்து நிற்கிறதே நெஞ்சிரங்க மாட்டீரா? பூனையொன்று காய்ச்சல் கண்டால் மெர்சிடீஸ் கார் ஏற்றி மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே! ஈழத்து உப்பங்கழியில் மரணத்தின் வட்டத்தில் மனித குலம் நிற்கிறதே! மனம் அருள மாட்டீரா? வற்றியகுளத்தில் செத்துக்கிடக்கும் வாளை மீனைப்போல் உமிழ்நீர் வற்றிய வாயில் ஒட்டிக்கிடக்கும் உள்நாக்கோடு ரொட்டி ரொட்டி ரொட்டியென்று கைநீட்டும் விரல்கள் கண்குத்தவில்லையோ அமெரிக்க அதிபரே! தமிழச்சிகளின் மானக்குழிகளில் துப்பாக்கி ஊன்றித் துளைக்கும் சிங்களவெறிக் கூத்துகளை அறிந்தும் அறியாயோ ஐ.நாவே? வாய்வழி புக…

    • 1 reply
    • 1.3k views
  4. சிறீலங்கா இட்டது சிறு ஆணி - அப்போதும் சிந்தை கலங்கவில்லை ஐரோப்பா இட்டது ஐந்தாறு ஆணி - அப்போதும் ஐயோவென்று அழவில்லை அமேரிக்கா இட்டது ஆறேழு ஆணி - அப்போதும் அச்சம் எழவில்லை சீனா இட்டது சில ஆணி - அப்போதும் சிறிதும் வாடவில்லை இந்தியா இட்டது இரும்பாணி - அப்போதும் இதயம் நோகவில்லை பாகிஸ்தான் இட்டது பல ஆணி - அப்போதும் பயந்து போகவில்லை தமிழகம் இட்டது தனி ஆணி - அப்போது தொலைந்தது எம்மூச்சு http://gkanthan.wordpress.com/index/eelam/nails/

    • 6 replies
    • 1.3k views
  5. நீ என்றும் என் காதலி' அதிகாலை ஓர் அழைப்பு மணி அவசரமாய் சென்று யாரது...? பதில்.. நான் தான் உன் தேவதை...! கதவை திறக்கிறேன் யார் தேவதையா...? ஆம்..! அங்கே ஓர் அதிசயம்....! அனைத்தையும் அடித்துவிடும் அழகான ஓர் முகம்... ஆனாலும் கண்களிலே கண்ணீர்... கலைந்த கூந்தல்.... மாற்றான் கைபட்டு கசங்கிய மேலாடை... மான மறைப்புகளில் ஆங்காங்கே இரத்தத் துளி..... கலைந்த கூந்தலையும் அலங்கரித்த கார்த்திகைப் பூ என் கண்முன்னே கதறுகிறாள் ஏன் என்னை கைவிட்டாய்..? நான் கேட்டென்...? எப்போ உனை கைவிட்டேன்...? நான் உன்னைப் பார்த்ததில்லை...! அட பாதகனே.. எனை பிரிய மனமின்றி அன்று ஏங்கி அழுது நின்றாய்... எனை விட்டு பிரிய முதல் …

  6. இருண்டு போய்க் கிடந்த, அமாவாசை இரவொன்றில், வெளிச்சத்தின் தேவை கருதி, வந்துதித்த நிலவு நீ! வானத்தின் சந்திரன் கூட, விடுமுறையில் செல்வதுண்டு, இரவும் பகலும், உறங்காத விழிகள் உன்னுடையவை! நான் பிறந்த தேசத்தின், அழகைப் போலவே, நீயும் வித்தியாசமானவள்! அதனால் தானோ என்னவோ, உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது! வானுயர்ந்த மலைகளோ, வளம் கொழிக்கும் நதிகளோ, வெண்பனி பொழியும், தண்மை காவிய மேகங்களோ, அங்கிருக்கவில்லை! வாடைக்காற்றும், வியாபாரக் காற்றுக்களும், காவி வருகின்ற மேகங்கள், கருக்கட்டினால் மட்டும், மழை பெறுகின்ற தேசம்! இருந்தாலும், வானுயர்ந்த பனைகளும், வளம் கொழிக்கும் வயல்களும், அந்தத் தூவானத்திலும், பிறப்பெடுத்து வாழ்ந்தன! வானம் வஞ்சித்து வ…

  7. Started by வர்ணன்,

    வரண்டுபோனதொரு பூமி வானத்தை பார்த்து மழைக்காய் தேடல் கொண்டு தேகம் வாடி நிற்கிறது! பசியென்ற ஒன்று இருப்பதால்தான் உழைப்பின் தேடல் தொடர்கிறது.... பருவம் என்ற ஒன்று இருப்பதால்தான் காதல் என்ற ஒன்று இன்னும் காணாமல் போய்விடாமல் தவிக்கிறது! பகுத்தறிவென்ற ஐந்தோடு சேர்ந்த ஓரறிவு வாழ்வதானாலே அநியாயங்களை காண்கையில் உள்ளம் ஆக்ரோசம் என்ற தேடல் கொள்கிறது! இறப்பு என்ற ஒன்று இருப்பதால்தான் இறைவனை இடைக்கிடையாவது நினைக்கும் தேடல் வாழ்கிறது! எதிர்காலம் பற்றிய பயம் எம்மோடு இருப்பதானால்தான் சேமிப்பு என்ற தேடல் உயிர்கொள்கிறது! தேசியம் என்ற ஒன்று நிமிர்ந்து நிற்பதால்தான் -இனமானம் பற்றிய தேடல் இன்னும் உன்னுள் இருக்கிறது! தெரியாதவனிடம் எல்லாம் அடிவாங்கும் …

    • 5 replies
    • 2.3k views
  8. சுதந்திரக்காற்று... வீசத்தொடங்கிற்று 58 வருடங்களுக்கு முன்னால்.... ஆனாலும் நாம் சுவாசித்ததில்லை ஒரு நாள் ......!! நன்றி.. கார்ட்டூன் உரிமையாளருக்கும், தேடி உதவியவருக்கும்

    • 6 replies
    • 1.9k views
  9. காலியில் எங்கள் கழுத்து வெட்டப்பட்ட பொழுது நீங்கள் கைகட்டி வேடிக்கை பார்த்தீர்கள். ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்! கொழும்பில் குற்றுயிரும் குலையுயிருமாய் நாம் எரிக்கப்பட்ட பொழுது நீங்கள் வாய்புதைத்து பேசா மடந்தைகளாய் இருந்தீர்கள். ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்! அடங்கிக் கிடந்த நாங்கள் ஆயுதம் ஏந்திக் களம் புகுந்த பொழுது உங்களில் எல்லோரும் எங்களுக்குக் கைகொடுக்க வரவில்லை. ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்! ஆனால்... ஆனால், மூதூரிலும், ஆரையம்பதியிலும், வீரமுனையிலும் தமிழ்க் குருதி வடிந்த பொழுது... தமிழ்க் குருதியில் சிங்களம் நனைந்து திழைத்த பொழுது நீங்கள் கைகட்டி, வாய்புதைத்து நிற்கவில்லை. எரியும் வீட்டில் பற்றியெரிந…

  10. ரசிகா கவிதை ரசிக்க கூடியமாதிரி உள்ளது. இதைப்படித்ததும் கவிஞர் காசியானந்தனின் வரிகள் என் நினைவுக்கு வந்தன அன்னை தமிழீழ மண்ணே உன்னை மறப்பேனா.. நீ என் அன்னை ...... அன்று முற்றத்தில் அழித்து அழித்து நான் ஆ னா எழுதிய மண்ணல்லவா... தாயின் நினைவையும் தாய்நிலத்து நினைவையும் ஒன்றாகத் தந்நதமைக்கு நன்றிகள்

    • 1 reply
    • 790 views
  11. நீ புனிதன்... ( நிமலராஜன் ) தோழனே... ஆண்டுகளோ ஆறாச்சு எம்மை நீ பிரிந்தாச்சு.... ஆனாலும் எம் மனசில் நீ நீங்காத நினைவாச்சு.... எங்கள் மண்ணில் நின்று பகை எம் தமிழை கொல்லையிலே... உந்தன் பேனா நீ எடுத்து உண்மைகளை நீ உரைத்தாய்... எம் தமிழர் அவலங்களை எங்கனுமே நீ உரைத்தாய்... அச்சமில்லை என்றென்னி உன் உயிரை துச்சமதாய் நீ நினைத்து உந்தன பணி நீ செய்தாய்... செம்மணியின் கொலைகளையும் செம்மையாக நீ உரைத்தாய்.... அம்மணியின் ஆட்சியதின் அவலங்களை நீ உரைத்தாய்.... ஜயோகோ பொறுக்கலையே அவர்தனைக்கு... பாய்நதடித்து வந்துந்தன் பாவி உயிர் குடித்தனரே.…

  12. நாலு நாள் சுற்றுலாவும் நரிகள் அடைந்த புளுகும்..! நரிகளை பரிகளாகினார் மாணிக்கவாசகர்,புலிகளை நரிகளாக் 19.10.2014-கினார் மகிந்தரும்,பிரபாவும்.அடுத்த கட்டத்தை தாண்டும் தமிழினம் மீதான அழிப்பு -துலாத்தன். இருந்திருந்து பார்த்தேன் எழுதாமல் இருக்க முடியவில்லை. மனசுக்குள் குபீர் என்று ஒரு சிரிப்பு குமைவதாய் பரபரப்பு. உலையில் அரிசி ஏறாவிட்டாலும் பரவாயில்லை. உலைக்களத்தை திறக்காமல் உட்கார முடியவில்லை. மன்னாதி மன்னர் வந்துபோன கொட்டகைகள் இன்னும் கழற்றி முடியவில்லை. கொஞ்ச நாளுக்கு முதல் ஒரே கொலைவெறி கோழிக் கூட்டுக்குள்ளும் புகுந்து பதிவெடுத்தார்கள் படைத்தம்பிகள். புலி இருந்த குகைக்கே இந்தனை பயமா? அங்குமிங்கும் பார்த்துவிட்டு எங்கள் சனம் எள்ளி நகையாடியது. கடித்து குதறி கபளீகரம் செ…

  13. எனக்காக ஒரு பாடல் தாய்மணணே நீ பாடு எனக்காக ஒரு பாடல்-என் தாய்போல நீ பாடு எனக்காக ஒரு பாடல்-உன் சேய்போல நீ தேடு உனக்காக நான் வாடல்-இன்னும் வாழாத வாழ்வோடு உனக்காக நான் வாடல் தாய்மண்ணைப் பிரிந்தாலும் தலைமுடியே உதிர்ந்தாலும் தாயக நினைவோடு... தளராமல் நான் இருப்பேன் அதற்காக நீ பாடு எனக்காக ஒரு பாடல் பிடிக்காத பிழைப்போடும் பெரும் பாடு பலபட்டும் உயிர்க் காற்றை உறையவிட்டு உனக்காக நான் உழைப்பேன் அதற்காக நீ பாடு எனக்காக ஒரு பாடல் உயிரை உயர்வாக நினைத்தாலும் உடலை கூடாகச் சுமந்தாலும் உற்றார்கள் உன்னை மறந்தாலும் என் உணர்வுதனை உருக்கிடுவேன் அதற்காக நீ பாடு எனக்காக ஒரு பாடல் அன்னிய வனவாச அவலத்தோடும் அன்னை மண் உன் நினை…

    • 1 reply
    • 1.1k views
  14. கவிதை பிறந்த கதை : மாமன் மகள் பூப்பெய்திய செய்தி கேட்டு மலைப்பதியிலே (மலையகத்திலே) இருக்கும் மச்சாளை நினைந்து பிறந்த கவிதை ((கற்பனைக்)கவிதையை ரசிக்க உதவும் என்பதால் சொன்னேன்) மலைப் பதியிலே என் மனங்கவர்ந்த மங்கை மலந்திருக்கின்றாள் மணிப் புறாவே உன்ணணிப் பறவை - என் மனங்கவர் இளமை உற்றவள் பால் தூது ஏகாயோ? மல்லிகை சூடி மனதில் என்னை நிறுத்தக் கூறாயோ? சந்தனத்தின் சாயல் எடுத்து வெண்மதியில் முகமெடுத்து ஆனந்தத்தின் சுளையெடுத்து அழகூற இலங்கும் மங்கையவள் என் அண்டை வந்து இன்ப மூட்ட வேண்டும் காதல் கொண்ட ஏழை நெஞ்சம் பாவையவள் படுத்துறங்கும் மஞ்சமாக வேண்டும் காதல் கொண்டு அர்ச்சிக்க கன்னியவள் கருத்தொருமிக்க வேண்டும் காளை எந்தன் நெஞ்சம்…

    • 9 replies
    • 1.8k views
  15. அண்ணன் புலம்பெயர்ந்த நாட்டில் சட்டி பானையோடு சண்டை பிடிக்கிறான் தம்பி உள்ளான் சண்டைக்குள் என்பதால் * எல்லாம் இருக்கிறது புலத்தில் எனக்கு எல்லாமுமான என் குடும்பத்தை தவிர * ஊரில் இருந்துவரும் கடிதம் பிணப்பாரமாகவே வருகிறது இறந்தவர்களின் செய்தியோடு வருவதால் * புலத்தில் பட்டினி கிடந்து உழைத்தும் என் குடும்பத்தின் பசியைத்தான் போக்கமுடிந்தது தூங்கவைக்க முடியவில்லை * புலத்தில் வயிறு முட்ட உண்டாலும் வீசவில்லை அம்மாவின் கைவாசம் * நேத்தி வைத்த கோயிலிலும் செல் விழுகிறது யாரிடம் போவேன் என் வீட்டை காப்பாற்ற * அங்கு விழுந்தால்தான் வெடிக்கும் செல் இங்கு விழுகிறதா என்றாலே இறக்…

  16. மரணமே நெருங்காதே கண்ணீர் மழையால் உம்மை தொழுகிறேன் மரணமே நெருங்காதே கிடைத்தற்கரிய பரிசாய் எனக்கும் கிடைத்தான்....என்னை நனைத்தான் என்னுள் நனைந்தான் கடந்த கால நினைவுகளை காயங்களாக கொண்டவனின் காயம் போக்க காதல் செய்ய வரம் கிட்டியது என் பேறு தொலைவில் இருந்தாலும் காதலால் தீண்டுகிறான் தேன் துளியாய் அவன் நினைவுகள் தித்திக்க வார்த்தைகள் தெவிட்டுகிறதே அவன் அன்பை வருணிக்க..... அன்னாகரீனா, நாஸ்தென்காவை காதலிகளாக கொண்டவன் என்னையும் காதலியாக ஏற்றான் அவன் அன்பிற்கும் மட்டுமல்ல அறிவிற்கும் நிகரில்லா என்னை ஆயுள் வரை அவனோடு பயணிக்க எதற்காக தேர்ந்தெடுத்தான் என்னில் எதை வியந்தான்....? உள்ளூர் அரசியலே தெரியாத என்னிடம் உலக அரசியல் பே…

  17. குருதி படிந்த சுவடுகள் கல்லறைக்குள் அடங்காத கவிதை இவர் எவர் கண்களிலும் பொங்குகின்ற கவிதை இவர் கல்வாரியின் அன்புச் சுனையும் இவர் அன்புக் கடலினிலே சங்கமிக்கம் நதியும் இவர் பிறரன்பு புரியவைத்த பெருமை இவர் அன்று பிறருக்காய் உயிரீந்த வள்ளல் இவர் மனிதத்தை மலர வைத்த மாண்பும் இவர் மனித நேயத்தைத் தேடவைத்த தேடல் இவர் ஆற்றலாய் அறிவதுவாய் அருமருந்தாய் தேற்றரவாளனாய் தினம் உணவாய் நேற்றைய தினம் போல இன்றும் என்றும் மாற்றமே இல்லாத மகிமை இவர் மனிதனைப் புனிதனாய் மாற்றுதற்காய் புனிதனின் அவதார விந்தை இவர் துன்பத்தில் துவண்டுவிடும் எம்மவர்க்காய் துன்னையே அர்ப்பண்pத்த தியாகம் இவர் தூய மனத்தவர்கள் பேறுபெற்றோர் என்று துயருற்றோர் துயர் களைந்த சு…

  18. "காதல் கனியும் நேரம் கவிதைகளோடு உன்வாசலில்..". எரிமலையின் உச்சியிலும் ஏற்றிடும் எந்தச்சிகரத்திலும் கொண்டு சேர்த்திடும் பாராமுகம் காட்டியபோதிலும்-அந்தப் பார்வைகள் உனைச் சுட்டெறிந்திடும் முன்னெவரும் கண்டிராதது போலவே முதல் உன்னை சிந்திக்க வைத்திடும் நித்திரையின் போதும் உன் நினைவுகளை நிலைகுலைத்து உன் மனதில் அலை மோதும் சத்தமில்லாத ஒரு தனி உலகில்-உன்னை சந்திக்க விரும்பும் ஒரு சுதந்திரப்பறவை போலும் எண்ணங்கள் திரைபுரண்டு ஓடும் மனதில் எள்ளழவும் உதடில் வருமுன் அழிந்து போகும் இன்னுமதைச்சொல்லப் போனால்-உன் இரவுகளை சுட்டெரித்துவிடும் பக்கத்தில் இருப்பவரை பார்த்திராது-மனம் பட்டப்பகலிலும் வான்வெள…

    • 7 replies
    • 1.7k views
  19. அம்மா எனும் உறவு.... தாய்ப் பாசம் அனைத்து உயிரும் ஆசைகொள்ளும் உன்னதப் படைப்பு அவள்.... அம்மா என்று அழைத்ததுமே உன் அருகில் நிற்கும் நினைவு இவள்..... அவளை மனதிலே நினைத்துவிட்டால் காற்றுனை தாலாடும் உணர்வுகொள்வாய்... உன் கவலையெல்லாம் மறந்துவிடும் வானத்து நிலாகூட - உன்னை நெருங்கிவந்து முத்தம் தரும்.... அவளை நினைக்கும் போதெல்லாம் நீ மீண்டும் பிறந்திடுவாய்.... பிறப்பின் உணர்வு கொண்டு குழந்தைப் பருவதின் குதூகலம் உணர்ந்திடுவாய்.... தாயெனும் தெய்வமது தன் பசியில் உனை வளர்ப்பாள்... உன் தூக்கம் தருவதற்கு தன் இரவை செலவுசெய்வாள்... பல கண்டங்கள் தூரத்திலும் உன் துக்கம் அறிந்திடுவாள்.... அதுபோல நீயு…

  20. மறைவதில்லை ! -------------------------- அந்தச் சின்னஞ் சிறு நட்சத்திரமோ விடியலுக்குக் கட்டியம் கூறியவாறு எப்போதும் மறையாது ஒளிர்கிறது அந்தப் பெரிய நிலாவுக்கு அண்மையாக ஆனால் நிலாவோ அப்பப்போ மறைகிறது நட்சத்திரமோ என்றுமே மறைவதில்லை ! இவண் நொச்சியான்

    • 0 replies
    • 641 views
  21. காசுதான் வாழ்வா ???? வெண்பனிப் புகார் அடர்த்தியாய் மண்டியிருக்க பைன் மரத்துக் காடுகளில் பையப் பைய நடக்கையிலே உன் நினைவும் என்னை ஊஞ்சலாய் ஆட்டுகின்றது...... காலப் பெருவெளியில் உன்னைக் காசுக்காய் தொலைத்தவனுக்கு காலம் தந்த தண்டனை காலத்தால் அழியாதது..... என்மீது நீ கொன்ட அன்பு சுத்தமானது , அதை நான் அசுத்தமாக்கியது என் பிழைதான் பெண்ணே ....... என்னிடம் வந்தவளோ என் காசைக் கணக்குப் பாக்க , பாலை மணல் வெளியில் வழியைத் தொலைத்த வழிப்போக்கனைப் போல நானோ அவளிடம் அன்பைத்தேடி அலைகின்றேன்........ அன்பை மட்டுமே அள்ளித் தரத் தெரிந்த உனக்கு என்னைப் போல் வண்டுக் குணம் இல்லைத்தான் வாழ்க்கையில் வெற்றி... வெற்றி ....... என்று மார்தட்டிய எனக்கு காலம் …

  22. முழுமதி நிலவே வா வெண்மதிச் சரமே வா இயல் இசைக் கவியே வா சுந்தரத் தமிழே வா இனிமையின் குரலே நீ வா வானவில்லின் நிறமே வா தோகையின் அழகே வா தென்றலின் உணர்வே வா தென்மாங்கு பாடி நீயும் வா

  23. உன்போல் ஆயிரமாயிரம் தங்கைகளை அக்காக்களை தின்னக் கொடுத்துவிட்டு அக்கிரமம் இறுதியில் பெண்ணுடலையே தின்னும் ஆதிக்கம் அதற்கு நீயும் விலக்கில்லாமல் ஆழ்கடல் நுனிமட்டும் அலைகிறதுன் ஆத்ம ஓலம்…… கண்ணுக்குள் நிறைந்த சிரிப்பும் கதைசொல்லும் பொன்முகமும் பூவினும் இனியதாய் பொலிந்த உன் பெண்மையும் நாயினும் கடையதாய் உனக்கு நடந்தவைகள்…… நெஞ்சமெல்லாம் நெருப்புப்பற்ற நீ சிரிக்கும் கொள்ளையழகின் தூய்மை அலங்கோலமாய் அணுவணுவாய் படம்பிடித்து மகிழும் காட்சியாய் நினைக்க நினைக்க மூழும் தீயின் எச்சம் நெஞ்சுக்குள் மட்டுமே புதைகிறது…… தீயெரித்த கண்ணகியின் கோபத்தை கதைகளில் தான் படித்தோம். ஆனால் எங்கள் சக்திகள் உங்களின் சாதனைகளை சமகாலத்தில்…

    • 0 replies
    • 2.2k views
  24. இன்று தமிழ் தேசம்... பக்தர்களும்.. பாதிரியாரும்..பல பச்சிளங் குழந்தைகளும்.. சிங்களக் குண்டில் சிதறுண்ட தேசம்.. தமிழ்தேசம்.. மூலஸ்தானம் ஏறி இறைவன் துயிலை புூட்சுக்கால்கள் சத்தத்தால் எழுப்பிப் பார்த்தான் சிங்கள ராணுவன்.. எழவில்லையாம்... சாமிகள் கூட மவுனித்த தேசம்... தமிழ் தேசம்.. தினசரி பத்துக்கு மேல் பலி ஒரு பகலிரவுக்குள்ளே... இளைய உயிர்களெல்லாம் ஜாதகப்பலனுக்கு எதிர்மாறாய் இறந்து போகும் தேசம்... தமிழ் தேசம்.. பசிக்கு பச்சைத்தண்ணீர்.. பச்சிளங்குழந்தைக்கு பால் சுரக்கா மார்பு விம்ம அன்னையின் அழுகை... ஒரு இறாத்தல் பாணே... முப்பது ரூபாய்கள் மாவுக்கே வழியில்லை...வெதுப்பக போறணைகளில் தீயி…

  25. மாவீரர் குரல் வழி காட்டி மறைந்தோம். ஒளி ஏற்றி வருவீர்கள் என்ற நம்பிக்கையோடு விழிமூடிக் கிடக்கிறோம். குளுகுளுவென மண்மகள் மடி இதமாக இருக்கிறது. தமிழினத்திற்காக உயிர் விளக்கேற்றிய எங்களைத் தாங்கிய பூமகள் எங்களைத் தன்னோடு ஐக்கியமாக்கி தனக்குள் மகிழ்கிறாள். மண்தாயின் அணைப்பு இதமாகத்தான் இருக்கிறது, இருப்பினும் எடுத்த காரியத்தை முடிக்காத காரணத்தால் எங்களுக்குள் கனலும் விடுதலை நெருப்பு அன்னையின் அரவணைப்பை மறுக்கிறது. எங்கள் விழிகள் உங்களைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. இந்த வாரம் எங்களைத் தேடி எங்கள் துயிலும் இல்லங்களுக்கு நீங்கள் எல்லோரும் வருகின்றீர்கள். ஒளிக்கோலம் போட்டு எங்கள் கல்லறைகளில் கண்ணீர் உகுக்கின்றீர்கள். உங்கள் கண்ணீர் மண்ணில் கசிந்து எங்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.