Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மயூரனுக்கும் இணைந்து நடக்கும் தோழர்களுக்காகவும், செங்கொடி ஏந்திய சந்ததி வேரே! செங்கொடி ஏந்திய சந்ததி வேரே! சிங்களம் வெகுண்ட சினத்திற்குரியோனே! எண்திசை நிமிரும் தமிழனின் மானம் ஏந்தியே நடக்கும் இளைய தேவரீர்! தமிழ்ச்சங்கடம் தீர்க்கும் சஞ்சீவி சுமக்க சாலையில் இறங்கிய சரித்திர பொறிகளே! எங்கே மைந்தரே! தாயகத்திற்காகத் தூரங்கள் கடக்கும் உங்கள் கால்கள்….. வலித்தால் சொல்லுங்கள். உங்கள் திருவடி நீவித் தைலமிடவும், வெந்நீர் ஒத்தடம் விரைந்து தரவும் அன்னையர் உள்ளோம். அகிலத்தின் திசைகளில் அனைவரும் உள்ளோம். சட்டத்தை மதித்துச் சாதனை செய்யலாம் எனும் புதுக்கட்டக் கதவின் திறவுகோல்களே! வழிகோலி வைக்கின்றீர்கள், வாழ்த்தெடுத்து விழிகசிந்து நி…

    • 7 replies
    • 1.5k views
  2. திரைகடல் ஓடி திரவியம் தேட மூழ்கிய இடத்தில் நங்கூரம் இட்டு நிற்க்கும் கப்பல்-நாம் தலைமேல் பிரச்சனையும்-பொறுப்பும் சகோதரர்களில் கனவும் சுமந்து வந்தோம்- நாம் மூழ்கியதில் மூச்சுத்தினர வத்தது புலம்பெயர் நாடுமூச்செடுக்க முட்யாது தினறியதை அன்பு உடன்பிறப்புக்கு சொல்லவில்லை-நாம் உயிர் கொடுத்து உடன் பிறப்பை காப்பாற வந்தோம் உயிரின் பிரிவும் உறவின் பிறரிவு சமம் என்று அறியா- நாம் திரைகடல் ஓடி தமிழ்முகம் தேடி ஆறுதல் அடைந்தோம் கடைசியில் -நாம் http://www.tamil.2.ag/

  3. http://vaseeharan.blogspot.com/2007/08/blog-post.html பல்லவி கண்ணீரில் குளிக்கின்ற தேசம்-கடல் தண்ணீரில் மிதந்தது சோகம் அலை கொண்டு வந்த கடல்-மனித தலை கொண்டு போனதே இனம் மதம் மொழி கடந்து-எங்கள் தேசம் சுமந்திடும் சோகமடா! குழு: தேசம் தேசம் எங்கும் சோகம் சோகம் சரணம் 1 போரின் நாக்குகள் தீண்டிய தேசத்தை சுனாமி அலைகள் கிழித்ததே வாழ்வின் ஆசைகள் துளிர்த்திட்ட மக்களை வாழ்வளித்த கடலே அழித்ததே ஆர்ப்பரித்த கடலே ஆள் பறித்தாயே கரையில் நின்று எம்மையே கலங்க வைத்தாயே(2) விழியில் தீமூட்டி அழுகின்றோம் அழுகின்றோம் பிணவாடைக் கடலே கேட்கிறதா...? ஓலம் கேட்கிறதா...? சரணம் 2 அன்னையர் ஆடவர் பால் மணப் பிஞ்சுகளே சீறிவந்த பேரலையே கொண்டு சென்றா…

  4. பெய்து முடிந்த மழையின் ஈரம் உலராத கவிதை ஒன்று.. ------------------------------------------ இப்போதெல்லாம் நாம் சந்தித்த இடங்களில் யாருமே இருப்பதில்லை... சிந்திக்கிடக்கின்றன காய்ந்துபோன சில மஞ்சள் பூக்களும் நம் நினைவுகளும்.... காதலும் கவிதைகளுமாய் மாறி மாறி துலங்கிய அந்நாட்கள் தொலைந்துவிட்டன.. மாலை வெய்யில் தன் மஞ்சள் நிறமிழந்த ஒரு கோடையில்தான் நேசிப்பை விற்று காய்ந்துபோனது உன் இதயம்... நினைத்துப்பார்க்கையில் நெஞ்சத்தின் ஆழத்துள் மெல்ல இறங்குமொரு முள்.. அந்தரவெளியும் கலவர நிழலுமாய் நூறாயிரம் கதைகளை சுமந்தலையும் இதயத்தை உடைத்துவிடுகிறது ஒற்றைக்கண்ணீர்த்துளி.. பொழுதில்லை அழுவதற்கும்.. நினைத்துக் கவலையுற்று துன்புற்றுவிட்டு பனிக்குளிரில் வேலைக்கு இறங்கிச்செல்ல…

  5. " இப்பொழுது நாங்கள் இல்லை...! உங்களுக்குத் தொல்லையில்லை...!!" செத்துப்போ என்று தள்ளிவிடப்பட்ட தரித்திரங்களின் குழந்தைகள்! இத்தனை நாளும் பக்கமிருந்து அல்லல் கொடுத்த தொல்லைகள்! சேர்த்துவைத்த செல்வங்களை வாரிச் சுருட்டிய பிடுங்கிகள்! செங்குருதி தெளித்து வல்லூறுகளை வரவழைத்த வல்லூறுகள்! வீணான ஒன்றுக்காய் வில்லாடிய வீணர்கள்! மண்ணோடு மண்ணாக குடியழித்த கொடூரர்கள்! தீவிரவாதிகளென தீர்ப்பெழுதப்பட்ட தீராத போர்வெறி வியாதிகள்! முப்பதாண்டு காலமாய் முன்னேறவிடாத தடைக்கற்கள்! அப்பாவிப் பிஞ்சுகளை பலிகொடுத்த பாவிகள்! சாதிப்போம் என்று சொல்லி சாகடித்த சனியன்கள்! இப்படியெல்லாம் எங்களைத் திட்ட, நிறைய வார்த்தைகள் இருக்கும் உங்களிடம்!!! …

  6. முன்னை அண்ணன் கொடுத்த இடி கட்டுநாயகாவில் பின்னை கொடுத்த இடி பலாலியிலே இன்று கொடுத்த இடி அடிவயிற்றிலே இன்னும் இறங்கும் இடி எங்கெங்கோ? வானோடிகளின் வல்லமை பாராமல் வாயார வாழ்த்தாமல் வாய்மூடி இன்னும் உறங்குவது ஏன் தமிழா? அன்று நின்று கடலாண்ட இராஜராஜனும் அவன் மகன் இராஜேந்திரனும் மீண்டும் பிறந்திருந்தால் இப்படித்தான் இருப்பாறோ? இணைந்து படைநடத்த இயன்றதெல்லாம் செய்யாறோ? என்னடா கொடுமை இது எங்கள் சகோதரனுக்கு எம் மன்னில் இடமில்லையாம் சொல்வது யார்? கன்னடத்து விஷநாகம் கடும் விஷத்தை கக்குவதும்! கலைஞ்சரின் கட்டுக்கதை கண்ணீர் நாடகமும்? என்னடா கொடுமை இது? - சிவராஜா

  7. Started by pakee,

    அறிவு தந்த அன்புள்ள அப்பா நீங்கள் ஆற்றல் ஈந்த அன்புள்ள அப்பா நீங்கள் உருகும் உன்னத மெழுகு நீங்கள் தேயும் ஒப்பற்ற சந்தனம் நீங்கள் தன்னலமற்ற தியாகத்தின் சின்னம் நீங்கள் திறமைகளை பயிற்று வித்த ஆசான் நீங்கள் சான்றோனாக்கி மனம் மகிழ்ந்தவர் நீங்கள் சந்தோசங்களை வழங்கிய வள்ளல் நீங்கள் ஒய்வறியாது உழைக்கும் செம்மல் நீங்கள் ஒரு நாளும் கவலை கொள்ளாதவர் நீங்கள் கடமையைக் கச்சிதமாய் முடித்தவர் நீங்கள் மடமையை முழுமூச்சாய் எதிர்த்தவர் நீங்கள் பகுத்தறிவை எனக்கு கற்பித்தவர் நீங்கள் மூடநம்பிக்கை அகற்றி தன்னம்பிக்கை தந்தவர் நீங்கள் எதையும் ஏன்? ஏதற்கு? எப்படி? என்றவர் நீங்கள் எவருக்கும் அஞ்சாமல் வாழ்பவர் நீங்கள் வாழ்வியல் கருத்துக்களை வழங்…

    • 7 replies
    • 1.5k views
  8. என் உயிரே காதல் செய்தாயே என்னை ஞாபகம் இருக்கிறதா? நான் உன் மீதூ பைத்தியம் ஆகும் வரை காதல் செய்தாயே ஞாபகம் இருக்கிறதா? நாம் கற்பனையில் வாழ்வதாக பல கதைகள் சொன்னாயே ஞாபகம் இருக்கிறதா? நான் உன்னை புரிந்துகொள்ள வைத்தாயே ஞாபகம் இருக்கிறதா? காலத்தின் கோலத்தால் நான் உன்னை பிரிந்து வந்தேனே ஞாபகம் இருக்கிறதா? பிரிந்துஇருப்பதிலும் ஒருவித சுகம் உண்டு என்றாயே ஞாபகம் இருக்கிறதா? தொலைபேசியில் நாங்கள் மணிக்கணக்கில் பேசியது எல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கிறதா? நான் அனுப்பிய காசில் நீ உன்னை அலங்கரித்தது எல்லாம் ஞாபகம் இருக்கிறதா? எந்த எதிர்ப்பு வந்தாலும் நான் உன்கூடத்தான் …

  9. தேவனவன் சிலுவையிலே தொங்குகின்றார் திருமகனின் இருபுறமும் திருடர்கள் ! இதயத்தைத் திருடியவர் இயேசு என்பார் இரும்புப் பெட்டியைத் திருடியவர் மற்றோர் ! மன்னனிட்ட கட்டளையில் மாற்றமில்லை .. மனுமகனோ சிலுவையிலே மரணத்தீர்ப்பு திருட்டு என்பதுதான் குற்றச்சாட்டா ? இல்லை திருமகனையே விற்று விட்ட பற்றுச் சீட்டா ? மதுரா. தலைப்பு திருத்தப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

  10. மானாட மயிலாட கலைஞரோட குடும்பம் ஆட ஊழல் கண்மணி கனிமொழி பொன்னாடை தூக்கியாட செம்மொழியாம் தமிழ்மொழி ஆங்கிலம் கலந்தாட.. நாடோடித் தமிழினம் ஈனத்தமிழராய் சிதைந்தாட.. கொட்டும் அந்தக் கோடிகளில் கொட்டமடித்து திமுக துள்ளி ஆட கூடவே கூட்டணிபோட்ட புண்ணியத்தில் சோனியாவும் பிணைந்தாட பங்கு கேட்டு ஐங்கரனும் பக்காவா சரிந்தாட வரி ஏய்க்க பெட்டி நிரப்ப லைக்காவும் வளைந்தாட.. அங்கோ ஈழத்தில்.. தமிழின எதிர்காலம் பாடையிலே ஆடுது சிங்களத்தான் சேனை முன்னே..! தமிழீழ மண்ணதில் சிங்களம் இனவாதக் களமாட கலைஞர் அதில் தமிழருக்காய் மானாட மயிலாட இடையில்.. மெரினாவில் உண்ணாவிரதக் கூத்தாட மன்மோகன் சிங்கும் கெட்டியாய் பிடித்ததில் சிக்கி முக்கியாட சிதைந்த வனமதில்..…

    • 10 replies
    • 1.5k views
  11. தலை குனிதல் தமிழரின் இயல்பல்ல தலை குனியும் போதெல்லாம் கவி வரையும் பேனா இன்று எம் மண்ணின் நிலை கண்டு கண்ணீர் மட்டுமே வடிக்கின்றது அன்பெனும் கூட்டில் சங்கமித்து ஆசையாய் குழந்தையை பெற்றெடுத்து அடுக்கடுக்காய் கனவுகண்டு வளர்த்து வந்த வேளையிலே ... பூண்டோடு குடும்பத்தை அழித்துவிட்ட கயவனே. உண்மையில் நீயெல்லாம் மனிதன்தானா? இல்லையில்லை ரத்தத்தைப் பிழிந்து குடிக்கும் கொடூர விலங்குகள் நீங்கள். பால்குடித்த ஈரம் காயும் முன்பே மழலைகள் உயிரைப் பறிக்கிறீரே விதையைக் கிழித்து துளிரை அழிப்பது போல் தாயின் வயிற்றைக் கிழித்துக் கருவைக் கொல்லும் காட்டுமிராண்டிகள் நீங்கள். கயவரே உன் காலடிகள் எம் மண்ணில் …

  12. [size=4]என் இரவுகள் அவள் குரல் கேட்டே விடிந்தது என் விடியல்கள் அவள் முகம் பார்க்க துடித்தது என் விரல்கள் அவள் தலை கோத விழைந்தது என் சுவாசம் அவள் வாசத்தால் நிறைந்தது என் குறும்புத்தனங்கள் முழுதும் அவளின் செல்ல கோபத்திற்கவே உருவானது நான் வாங்கும் பொருட்கள் எல்லாம் அவளாலே அழகானது ஏனோ நான் காதல் சொன்ன போது அவளின் மொழி மட்டும் மௌனமானது..![/size]

    • 5 replies
    • 1.5k views
  13. கவிதையின் அரசே! வாழீ! துள்ளிடும் வாலிபத்தால் துணையற்று வெண்நரையும், வில்லிடும் நாவளத்தால் வேதனை செய்விதியும், கள்ளிடும் கவின்பாவால் காணாமல் போகட்டுமென தள்ளி நிலம் வாழுகின்ற தமிழ்ச் சின்னவளின் வாழ்த்து இது. இருவயது மழலையாக இதயத்தில் உலவு கவியே! அறுபது அகவையய்யா அகத்திலே பதியவில்லை. ஆண்ட நின் புலமைகென்றால் ஆயிரம் அகவை தாண்டும். பூண்ட மண்கோலத்திற்குள் புதிர் கூடி நிற்குதய்யா! தீரப் பெருங்கவியே! தீராத மாவரம் தந்த துரோணக்குருவே! ஏறுபோல் நிமிர்ந்த எழுத்தின் வீரியமே! கண்ணூறு படுமய்யா! கரிநாச் சொல்லிது. காலடி மண்ணெடுத்துக் கற்பூரச் சுடரிலே போட்டிடுக! கூர்வடிவேலை ஆளும் சுந்தரப் பேச்சும், வேரடி வீரம் …

  14. தேசத்தின் குரல் பாலா அண்ணா புலிகளின் குகையில் வாழ்ந்த ஒருசிங்கம் பேராசான் அண்ணன் அன்ரன் பாலசிங்கம் அழுகுரல் ?#8220;யவில்லை உலகம் எங்கும் அண்ணாவின் பிரிவினைத் தாங்கவில்லை நெஞ்சம் தனக்கென வாழாத தியாக உள்ளம் தமிழ்மண் வாழவேண்டும் என்பதே எண்ணம் இனத்தின்மேல் எப்போதும் அளவற்ற பாசம் இதனால்தான் தவிக்கின்றார் தேசமெல்லாம் சோகம் தேசத்தின் தியாகிகளை துதிக்கின்ற நாளில் திரள்திரளாய் தேடியே வந்திடுவார் கூடம் தேசத்தின்குரல் பேச்சில் வேடிக்கை இருக்கும் தேசியத்தின் கொள்கைகளும் கடமைகளும் நிறைக்கும் கற்றதினால் கூறிவைத்தார் கலாநிதி என்று மற்றவர்கள் கூறிவைத்தார் மதியுரைஞர் என்று சுற்றமெல்லாம் கூறுகின்றார் பிதாமகன் என்று பற்றுவைத்தோர் கூறுகின்றார் அவதா…

    • 4 replies
    • 1.5k views
  15. ஒரு தமிழனாய் -------------------------- என் மனதைப் போலவே கூதிரின் காத்தும் கூவிச் சில்லிடுகின்றது பனியைப்போல உறைக்காவிட்டாலும் மனதை குடையும் வெம்மையின் சூடு என்னைப் போலவே இன்னும் உறையாமல் எல்லாவற்றைப் பற்றியும் பாடும் என் பாடல்கள் பாட முடியாது தோற்கும் இடம் என் சந்ததிகள் என்னைப்போலவே முறையறியாது குழம்பித் தவிக்கும் அவள் தமிழ் சிரிப்பாய் சித்திரமாகப் பதிகின்றது மறந்து போன இன்பங்களைப் போல உன் ஊரில் பாம்புண்டா ? அவள் பயங்கள் பாம்பாய்ச் சுற்றுகின்றன. "பெக்கர்ஸ்" அகதியாய் வந்தவர்களும் பெக்கர்ஸ் தானே வாழ்க்கையை யாசித்தவர்கள் தானே எல்லாவற்றையும் தாண்டி மூவேந்தர் பற்றியும் பாரி முல்லை தேர் ஒளவை தமிழ்ச…

    • 4 replies
    • 1.4k views
  16. Started by வீணா,

    எப்போதும் கண்கள் பார்த்துப் பேசும் பழக்கம் எனக்கு. முகம் பாராமல் நட்பொன்று வளரலாம் என்பதே தொலைபேசியில் நீ அறிமுகமானபோதுதான் தெரிய வந்தது. உன் குரல் வசீகரமும் சரளமான பேச்சும் உனக்கோர் முகத்தை என் மனதில் வரைந்தது. நீயும் எனக்கோர் முகம் வரைந்திருப்பாய். நம் நட்பு வளர்வதில் உடன்பாடுதான் என்றாலும், சந்திப்பு நிகழ்வதில் உடன்பாடில்லை. உனக்கான என் முகமும் எனக்கான உன் முகமும் அழிந்து போவதில் எனக்கு விருப்பமில்லை. நன்றி சௌம்யா.......

    • 6 replies
    • 1.4k views
  17. """"கூட்டமாய் கூடாதீர் தளபதிகளே"..."""" அன்புத் தளபதியே அஞ்சும் மனதொன்று கெஞ்சி கேட்கிறது கூட்டம் இட்டு கூட்டமாய் கூட்டத்தில் நீவீர் ஏன்....??? நீர் மக்களின் தொண்டன் மரணம் உங்களுக்கு தூசு புரிகிறது இருந்தும் மனசு பதைக்கிறது... விருட்சங்களே எங்களின் விசாலங்களே நீவீர் வீழ்ந்தால் எம் விடுதலை என்னாவவது....??? வட்டமிட்டு வானத்தில் வள்ளூறு சுற்றி திரிகிறது... அலரி மாளிகையின் அரக்கன் உயிர் குடித்து ஏப்பம் விடுகின்றான்... வீதி உலா போகும் மனித மரங்களை வெட்டி எறிகின்றான்... ஆணி வேர் அறுந்து எத்தனை குடுமபங்கள் அல்லாடுகிறது... கண்ணீரோடு எத்தனை உறவுகள் தள்ளாடுகிறது... சுமையா…

  18. ஒரு தூறல் மழை போலே என் நெஞ்சில் விழுந்தாயே என்நெஞ்சின் ஓரத்தில் ஏதோ ஞாபகம் பெண்ணே நீ போகாதே ஏக்கத்தில் தள்ளாதே உன்னால் என் நிமிடங்கள் வருடம் ஆனதே நெஞ்சுக்குழியினிலே பல்லாங்குழி ஆடுகிறாய் இதய அறைகளிலே ஏன் ஒளிந்து ஓடுகிறாய் சிலநேரத்தில் தொலைவில் போகின்றாய் சிலநேரத்தில் அருகில் வருகின்றாய் ஓரக்கண்ணாலே கோபங்கள் காட்டாதே உன் மௌனப்புன்னகையில் மௌனித்து கொள்ளாதே உன்பாத தடங்கள் இங்கே தேடுகிறேன் என்பாதைகள் மறந்து எங்கோ ஓடுகிறேன் மேகம் பொழியாமல் மழை வந்து வீழ்ந்திடுமோ உன்னைக்காணாமல் என் ஜீவன் வாழ்ந்திடுமோ http://www.youtube.com/watch?v=Lbx5zdgjgwA

  19. UNSUNG EULOGY பாடா அஞ்சலிவ.ஐ.ச.ஜெயபாலன்..உதிர்கிற காட்டில் எந்த இலைக்கு நான் அஞ்சலி பாடுவேன்? . சுனாமி எச்சரிக்கை கேட்டு மலைக் காடுகளால் இறங்கி கடற்கரைக்குத் தப்பிச் சென்றவர்களின் கவிஞன் நான். பிணக்காடான இந்த மணல் வெளியில் எந்த புதைகுழியில் எனது மலர்களைத் தூவ யாருக்கு எனது அஞ்சலிகளைப் பாட. . வென்றவரும் தோற்றவரும் புதைகிற உலகோ ஒரு முதுகாடாய் உதிர்க்கிறது. எந்தப் புதைகுழியில் என் மலர்களைச் சூட எந்த இலையில் என் அஞ்சலிகளை எழுத... . இந்த உலகிலும் பெரிய இடுகாடெது? பல்லாயிரம் சாம்ராட்சியங்களைப் புதைத்து புதிய கொடிகள் நாட்டப்படுகிற பெரிய அடக்கத் தலம் அது. நடுகற்களின் கீழ் அடிபட்ட பாம்புகளாய் கிழிந்த எங்களூர்ச் சிறுமிகளின் இறு…

    • 0 replies
    • 1.4k views
  20. நெய்தல் பாடல் - வ.ஐ.ச.ஜெயபாலன் வாழிய தோழி கடலின்மேல் அடிவானில் கரும்புள்ளியாய் எழுதப்படும் புயற் சின்னம்போல உன் முகத்தில் பொற்கோலமாய் தாய்மை எழுதப்பட்டு விட்டது. உனக்கு நான் இருக்கிறேனடி. இனியுமுன் ஆம்பல் கேணிக் கண்களை உப்புக் கடலாக்காதே. புராதன பட்டினங்களையே மூடிய மணல் மேடுதான் ஆனாலும் தேர்ந்த கள்ளியான ஆமையால்க்கூட இங்கு தன் முட்டைகள நெடுநாள் மறைக்க முடியாதடி. விரைவில் எல்லாம் அறியபடா திருந்த திமிங்கிலம் கரை ஒதுங்கியநாள் போலாகிவிடும் அதனால் என்னடி இது நம் முதுகரைக்குப் புதிசல்லவே. அஞ்சாதே தோழி முன்பு நாம் நொந்தழ மணல் வீடுகளை ச் சிதைத்த பயல்தான். ஆனாலும் காதல் அவனை உன் காலில் விழ வைத்ததல்லவா. ஆளரவ…

    • 10 replies
    • 1.4k views
  21. என்னருமைத் தாய் நிலமே...... தசாப்தங்களாய்ப் போராடித் தாய் நிலத்திற்க்காய் உதிரமிட்டுக் கட்டிக் கட்டிக் காத்த கனவுகளை உன் பிள்ளைகளின் பெருவிருப்பைச் சிதைக்கும் ஊழிக்காலம் ஒன்று உன் மடியில் உருவான போது எப்படித் துடித்திருப்பாயம்மா என்னருமைத் தாய் நிலமே...... ஒட்டி உலர்ந்த வயிறுகளுடனும் வெடித்துப் பிளந்துபோன உதடுகளுடனும் எச்சிலைக்கூட விழுங்க இடைவெளியின்றி ஏவப்பட்ட செல்களின் நடுவே எங்கள் பச்சிளம் குழந்தைகள் பரிதவித்தனவாம் ஜயகோ.... எம்பிள்ளைகள் துடித்தபோது எப்படித்தாங்கினாயம்மா என்னருமைத் தாய் நிலமே...... கந்தகப்புகை நடுவே கண்ணுறக்கம் மறந்துவிட்டு உந்தனுக்காய் வெந்தணலில் நீராடிய வேகாத இலட்ச்சி…

  22. கவிதையைக் கேட்க... +++ அப்பால் தமிழ் இணையத்தளத்தில் "பரதேசிகளின் பாடல்கள்" கவிதைத் தொகுப்பு பற்றி எழுதப்பட்ட கருத்துத்தான் மேற்காண்பது. +++ இக்கவிதைத் தொகுப்பினைப் பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் "அப்பால் தமிழ்" இணையத்தளத்தோடு தொடர்பு கொள்ளலாம். kipian [at] appaal-tamil [dot] com +++ இக்கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதையை நித்தியா குரல்வடிவில் செய்திருக்கிறார். கேட்டுப்பாருங்கள். இத்தொகுப்பில் என்னைக் கவர்ந்த கவிதைகளில் இதுவும் ஒன்று. கவிதையைக் கேட்க...

    • 4 replies
    • 1.4k views
  23. Started by ஈழவன்85,

    புலதினில் இயந்திரத்தோடு இயந்திரமாக உறவுகளை பிரிந்து தனிமரமாக புறாக்கூட்டுக்குள் அடைந்திருக்கும் ஏதிலித்தமிழன் நான் வயல் வெளியில் நடக்க ஆசை கினற்றில் குளிக்க ஆசை குடும்பத்தினருடன் கூடி இருக்க ஆசை ஆனால் முடியாது என்னால் விடுமுறையில் நண்பர்கள் தம் நாடு செல்கையில் எரிச்சலுடன் அவர்களை பார்கிறேன் நீ போகவில்லையா எண்ட கேள்விக்கு நான் என்ன பதில் சொல்வேன் அப்படி மீறி ஊருக்கு போனாலும் சிறைக்கைதியாக நான் வீட்டில் சொந்த நாட்டில் குற்வாளிபோல ஒழித்திருக்க நான் செய்த ஒரு தவறு தமிழனாய் பிறந்தது சுதந்திர தமிழீழம் விடியலுக்காய் காத்திருக்கிறது அந்த விடியலுக்காய் நானும் காத்திருகிறேன் வீர புருசர்களின் இரத்ததால் விடியும் தமிழீழத்தை ஆவலுடன் எ…

  24. தம்பி... சுத்தமானது என் சமாதி சத்தியமாய் சொல்கிறேன் ! ஆண்டுக்கு இரண்டு முறை தான் தம்பிகள் என் சமாதிக்கு வருவீர்கள் பிறந்த நாளில் ஒரு முறை மரித்த நாளில் மறு முறை அது என்ன ஏப்ரல் 27-ல் என் சமாதியில் இத்தனை கூட்டம் ! கடும் கூச்சல் !! ஆழ்ந்த நித்திரையில் இருந்த என்னை ' ஏன் எழுப்பினார்கள் என்பது புரியாமல் தவித்தேன். சூரிய உதயத்தை என் வாழ்வில் கண்டதில்லை ஆனால்இ அதிகாலையில் தம்பி வந்ததுமே தூக்கம் கலைந்திற்று! துக்கம் கவ்விற்று !! வந்தது என் தம்பி கருணாநிதியல்லவா? அதிகாலை என் இருப்பிடத்தைத் தேடி வந்த காரணத்தை கருணாநிதி சொன்னதும் தான் தெரிந்துகொண்டேன். இலங்கைத் தமிழர்களுக்காக என் சமாதியில் உண்ணாவிரதமாம் ! அருமை தம்பி கருணா…

    • 1 reply
    • 1.4k views
  25. Started by வர்ணன்,

    நஞ்சு! கோடாரி பிடரியில் இறங்குது இருந்தும் என்ன கொண்டாடி மகிழ்கிறோம்! லக்கி என்றும் வாறார் ராஜாதிராஜானும் வாறார் வேர்கள் வெறுத்த மரம்- சுயம்பு இல்லைதான்! ஆனால் - வசம்பு என்று வரும் - இங்கே!!! கட்டியணைத்து உச்சி மோந்து -கடுக்க இடுப்பில் சுமந்த தாயை - கழுத்தில் கொழுக்கி போட்டு - குரல் வளை அறுத்து கொல்ல நினைப்பது - கொடூரம்! நாய் கூட தன் குட்டிக்காய் போராடும்! இனத்துக்காய் போராடி இறந்தவன் மேல் காறியுமிழ்கிறாய் ! நீ அதுவும் இல்லை - அப்போ எதுதான் நீ? கவனி - நிலைக்கண்ணாடி இருக்கா?-வீட்டில் ? உன் முகம் பார் மறுபடியும் .......... தெரிவது உன் முகமல்ல...... முற்றிலும் - துரோகம்! 8)

    • 5 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.