Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நாங்கள் வாய்பொத்தி இருக்கிறோம்-ஆனால் ஊமைகள் அல்ல. நாங்கள் கைகட்டி நிற்கிறோம் என்பதால் முடங்களும் அல்ல. ஆறாத புண்களோடும் மாறாத வடுக்களோடும் தான் கைகளில் எழுதுகோல்களை தூக்கியிருக்கிறோம். எழுதுகோல்களை பிடிப்பதற்காக மட்டுமே எங்களின் கைகளை மெளனித்துள்ளோம். எங்கள் கைகளும் உயர்ந்து இருந்தது “ஒருகாலம்”. நாங்கள் சொல்ல நீங்கள் கேட்டது “அந்தக்காலம்”. நீங்கள் சொல்ல நாங்கள் கேட்கவேண்டியதாய் இடக்குது “இந்தக்காலம்” காலங்கள் மாறும் அது விதி. கவலைகள் தீரும் அதுவும் விதி. “எதை” முற்றாக முடித்து விட்டதாய் எக்காளம் இடுகிறாயோ “அது” ஆரம்பித்த இடத்தில் நிற்பதை மறந்துவிடாதே..!!! “எதை” குழிதோண்டி புதைத்து விட்டதாய் கொக்கரிக்கிறாயோ “அது” முழைத…

    • 0 replies
    • 467 views
  2. காலத்தின் தேவை கருதி கணப்பொழுதில் வரைந்த கிறுக்கல் . . ஈழப்புதையல் தேடி உழுது தேய்ந்த சந்தணக்கலப்பைகளை மனதில் இருத்தி கிறுக்கியுள்ளேன் . . . காலம் கண்மூடி திறப்பதற்குள் கரைந்து போய்விடுகின்றது. எம் உறவுகளே கரங்கள் எம்முடன்தானே பலமாக இருக்கின்றுது. உழைக்கின்றோம் ஒரு சிறு தொகை மனமுவந்து உதவுவோம். ஈழப்போர் இறுதிக்கு வந்து நிற்கின்றது. எதிரியின் எறிகணை எல்லைக்குள் எம்மக்கள் தவிக்கின்றார்கள். இந்தக்கணத்தில் நாம் செய்யவேண்டியது அவர்கள் கேட்டுக்கொள்வதும் ஓன்றே ஒன்றுதான். அன்பின் புலம்பெயர் உறவுகளே உதவிக்கொள்ளுங்கள். இது ஒரு கடன் நாம் கட்டாயம் திருப்பித்தருன்றார்கள் ஒருவர் கேட்கும்போது கைவிரிக்கும் பழக்கமற்றவர்கள் நாம். கொடுத்துச்சிவந்த கரங்கள் எமது கரங்கள் இன்னும் கொடுப்போம் கொட…

    • 5 replies
    • 1.3k views
  3. இதோ உதடுகள் உன் பெயரை உச்சரிக்கும் மறுகணமே விரல்களுக்கு நடுவே விருக்கெனப் புகுந்து விடுகிறது வீரம்! பிரபாகரன் என்ற இப்பெயருக்குத்தானே பீரங்கிகளும் பின்வாங்கின! பிரபாகரன் என்ற இப்பெயர் கேட்டால்தானே இப்பிரபஞ்சமே பிரமித்து நிற்கிறது! வேங்கை உன் வேகம் கண்டு சிறுநீர் கழித்தபடியல்லவா சிதறி ஓடின சிங்களத்து சிறு நரிகள்! புரட்சி என்ற சொல்லுக்குப் புது இரத்தம் பாய்ச்சிய நீ புலித்தலைவன் மட்டுமல்ல! எமைப் பொறுத்தவரை இப்புவித் தலைவனும்கூட! கட்டுப்பாடு என்பதன் அர்த்தத்தை நீ கட்டியெழுப்பிய படைகளிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்! உன் ஆயுதம் சினுங்கியவரையில் தன ஆணவம் அடங்கியல்லவா கிடந்தது சிங…

    • 1 reply
    • 1.1k views
  4. (15.09.09 தடைமுகாம் ஒன்றிலிருந்து வந்த அழைப்பில் தொடர்பு கொண்ட பெண் போராளி ஒருத்தியின் குரல் இது) கன்னங்கள் நனைத்த கண்ணீர்ச் சொட்டுக்கள் மெல்லக் காய்ந்து போகிறது. காலத்திடம் தோற்றுப் போய் மர்மம் நிறைந்த இருட்பொழுது தன் இருப்புக்காய் இயல்பாகிறது. எல்லாம் இழந்து நடுத்தெருவில் சனங்கள். புதைகுழிகளுக்கான அகழிகள் புதிது புதிதாய் பிறப்பெடுக்கிறது. அற்புதங்கள் அநாமதேயமாய் வியாபாரிகளின் கணக்குகளிலிருந்து விடுபடுகிறார்கள்…. நாங்கள் போனதும் உயிர் கொடுத்ததும் இதற்காகத்தானா….? *‘போராடுங்கள் சாவு உங்களுக்குச் சர்க்கரையல்லவா* சொன்னவர்களல்லவா நீங்கள்…. இன்று சாவோடு கம்பிவேலிகளுக்குள் சமராடிய கைகள் ஓய்ந்து சத்தமிட்ட குரல்கள் ஒட…

  5. தாயே உனக்காயும் விபூசிக்காகவும். அம்மா அம்மா என - நீ அழைத்துச் சொல்லும் துயரத்தின் ஈரம் நெஞ்சுக்குள் நெருப்பாய் மூண்ட நாட்கள் இன்று போல.....! உன்னைக் கைவிடோமென நம்பிய உனது பிள்ளைகளின் கனவுகள் மீது உனது நம்பிக்கைகள் து(த)ளிர்த்துக் கொண்டன. உனது கண்ணீரை உனது துயரங்களை நீ சொல்லியழுகிற போதெல்லாம் மறுமுனையில் உனக்காய் உனது குழந்தைகளுக்காய் அழுத நாட்கள் அதிகம் தாயே....! நிலம் மீட்கும் போரில் பிள்ளைகள் விதையாகிப்போன பின்னும் வீரத்தின் அடையாளமாய் அவர்கள் விட்டுச் சென்ற கனவுகள் வாழும் நிலத்தில் வாழும் கனவோடுதானே வன்னியைப் பிரியாமல் அங்கேயே வாழ விரும்பினாய்....! ஏன்றாவது திரும்புவான் கடைக்குட்டியென்ற கனவைத் தானே தாயே என்றென்றும் புலம்புவாய் அவனது வரவைத் தானே நீ தினமும் ஏ…

    • 6 replies
    • 896 views
  6. Started by Thulasi_ca,

    • 9 replies
    • 2k views
  7. வாழ்க் ஈழத் தமிழகம், வாழ்க இனிது வாழ்கவே மலை நிகர்த்திவ்வுலகில் என்றும் தலை நிமிர்ந்து வாழ்கவே முடிப்புகள் அமிழ்தை வென்ற மொழியினள் அருள் கனிந்த விழியினள் அரிய பண்பு நிதியினள் அவனி மெச்சும் மதியினள் மமதை கொண்ட பகைவரும் வணங்கும் அன்பு விதியினள் மக்கள் கொண்ட பதியினள் ... வாழ்க வானம் பாடி போல்மீன் கானம் பாடும் வாவிகள் மலர்க் கனி க்ய்லுங்கிடும் எழில் மிகுந்த சோலைகள் தேனும் பாலும் பாய்ந்திடச் செந்நெல் பொலியும் கழனிகள் உய்வ ளிக்கும் மாநிலம் ... வாழ்க பட்டிப் பளை, மகாவலி, பயில் அருவிமுத் தாறுகள் பல வனங்கள் பொலியவே எழில் நடஞ்செய் துலவிடும் மட்ட களப்பு, யாழ்நகர், மாந்தை, வன்னி, திருமலை, …

    • 7 replies
    • 2.3k views
  8. நான் பிறந்த மண்ணைப் பற்றி கவிபாட என் கண்ணிரையே மையாக்கீனேன் இங்கே முததுமாரி அம்மனை மனதில் நினைக்க என் இதயத்தில் புதிய உற்சாகம் வருகுது இங்கே ஊரை,உறவை விட்டு வந்து அகதியாகி சிதறி விட்டோம் இங்கே சொந்தம் எல்லாம் மறந்து போச்சு யார் சொந்தம் என்று தெரியவில்லை எனக்கு இங்கே ஊரை உறவை விட்டு வந்தும் இன்னும் திருந்தவில்லையாம் கொஞ்சம் இங்கே குரும்பசிட்டியின் இணையத் தளத்தை பார்த்து புத்துணர்ச்சி வந்தது எனக்கு இங்கே என் மனதில் இருந்த உணர்வை வெளிப்படுத்த அழுது கொண்டு கவிதை எழுதுகின்றேன் இங்கே என் நண்…

  9. பாராட, பார்த்தாட, பாதைபல வார்த்தாட வகுத்த பிரபாகரம் வாழீ போர்த்து மழைத்துளி பொழியும் பொன்முகிலைச் சுமக்கும் ஆகாய வெளியே! நீ வாழீ ஆர்த்து அலை எறிந்து அன்பு நுரை சுரக்கும் ஆனந்தக் கடலே! நீ வாழீ பார்த்து வர்ணப் புன்னகைக்கும் வனப்புகளில் கோலமிட பூத்தெழுந்த பூமகளே! வாழீ - இங்கு வார்த்து ஒரு வாழ்த்துரைக்க வல்லமை கோர்த்துவந்த திகட்டாத செந்தமிழே! வாழீ காலமகள் புதல்வனை தூளியிலே தந்த கார்காலத் திங்களே! வாழீ - அக் கதிரவனின் கால் தடங்கள் வலயவரப்பெற்ற வல்லமைத் திருமண்ணே! வாழீ சூரியப் புதல்வனைத் தழுவிச் சுழல்கின்ற கனிவான காற்றே! நீ வாழீ - அடர் காட்டிடை அணைத்துக் களைப்பாற்றி அனுப்பிய அழகான தருகளே! வாழீ மானமகன் தலைசாய்ந்த…

  10. பெண் என்னும் பூகம்பம் துணிவிருந்தால் துயர் அகலும். எழுச்சியுற்றால் மீட்சி கிடைக்கும். ஆதிக்கக் கோலோச்சும் அநீதிக்கு எதிராக பெண் என்னும் பூகம்பம் புரட்சியோடெழுந்தால் சாதிக்கமுடியாதென்று சரித்திரம் எதுவுமில்லை. போராளியான பெண் ஆணுக்கு நிகராக அனைத்திலும் மிளிர்கிறாள்;. அல்லாதவள்... அன்றாட அல்லல் மீள அல்லும்,பகலும் அவதியுறுகிறாள். புலம் மாறி வந்து புதிய கல்வி கற்றவர்கள் பொல்லா விலங்குடைத்து புதிய பலம் பெற்றவர் நாம் சேலைக் கடைக்குள்ளும் , சின்னத்திரைக்குள்ளும் புதையுண்டு கிடக்கிறோமே..... வேண்டாமென்று சொல்லவில்லை வீறு கொண்டெழுந்து..... வேகும் விதியோடு வாழ்விற்கேங்கும் எங்கள் சோதரிகள் கண்ணீரை சிறிதேனும் துடைக்கலாமே. அன்னையமும் அதை மே…

  11. நண்பியின் டயரியில் இருந்து ...... நான் காதலித்த போது ..அம்மா படிப்பில் மட்டும் கவனம் செலுத்து என்றார்.(அப்போதும் காதல் தொடர்ந்தது ) படித்து முடித்து பணிக்கு சேர்ந்த போது சிக்கனமாய் செலவு செய் என்றார்.சில காலம் செல்ல திருமணத்துக்கு தயாராகு பையனை பார்க்கிறோம் என்றனர். அப்போதும் காதல் தொடர்ந்தது . முடியாது நான் காதலித்தவனையே செய்து கொள்வேன் என்றேன். எமது தகுதிக்கு அவன் சரியில்லை என்றனர். பதிவு திருமணம் செய்யப்போகிறேன் என்றேன்.எங்கள்வீட்டுக்கு வராதே என்றனர். அப்போதும் அவன் என்னைக் காதலித்தான். திருமணம் முடிந்தது யாரும் வரவில்லை ...காலம் ஓடியது ...முதல்குழந்தைக்கு தாயானேன். அம்மா ரகசியமாய் வந்து பார்த்தாள். வங்கிக்கு போய் வரும் வழியில் கண்ட அப்பா நல்லா இ…

  12. முன்னாள் பெண் புலியின் கண்ணீர் கதை http://www.munainews.com/news/index.php?option=com_content&view=article&id=2676%3A2011-06-22-23-46-22&catid=59%3A2011-04-09-15-25-47&Itemid=107 இடம் பெயர்ந்த பின்னர் இடிந்து போன துயிலுமில்லமொன்றின் அருகிருந்து கைவிடப்பட்ட நிலையிலிருந்த லுமாலா சைக்கிள் ஒன்றை(க்) கண்டெடுத்தேன் துயிலுமில்லமருகே இருந்த மகிமையோ என்னவோ இன்று வரை துருப்பிடிக்காதிருந்தது சைக்கிள் வேகமும், அதற்கே ஊரிய வீரியமும் சிறிதளவு குன்றாது உந்தி மிதிக்க உருண்டோடி, இவ் உலகின் மேர்சிடேஸ் காரின் மோகத்திற்கு நிகரான சுகத்தை அது எனக்குத் தந்தது! முதன்மைச் சாலையென முன்பொரு காலத்தில் அழைக்கப்பட்ட கிளி நொச்சி…

    • 0 replies
    • 953 views
  13. பிரிவில் வறளும் காதலர்போல் விழுந்து கரைந்த சருகுகளைக் காணாது தனித்துக்கிடக்கும் மரத்தடி அவள் உதட்டின் முறுவல் போல் அரும்பும் குருத்துகள் காலத்தைக் காதலித்து பொழுதோடு காமுற தாவணி மறைவில் ஓரக்கண்ணால் உசுப்பிவிடும் அவள் பார்வை போல் வசந்த கால வாசல் கதவுகள் மெல்லத் திறக்கின்றது இத்தனைகாலம் சூட்டின் இதத்துக்காய் போர்த்திய அங்கிகள் புணர்வின் தேவைபோல் ஒவ்வொன்றாய் கழன்று விழ அமைதியான அவள் முதல் முத்தச் சம்மதம்போல் பொழுதின் வெண்ணொளி மேனியை சிலிர்ப்பூட்ட முதல் அணைப்பின் பட படப்பில் இரவும் பகலாக்கும் ஏக்கம்போல் மெல்ல மெல்ல பொழுது ஓளியில் கரைய காமத்தில் கரையும் ஊடலைப்போல் சிலகாலம் ப…

  14. அவசரமாய் நான் வீதி கடக்கையிலும் நீயே நினைவுக்கு வருகிறாய் எப்போதோ உன்னோடு வீதி கடக்கையில் நீ குட்டுவைத்து குழந்தை போல் எனை கூட்டிச் சென்றாயே * என்னை எழுத வைப்பதற்காகவே கவிதையாய் படுத்துக் கிடப்பாய் எனக்கு முன் நீ * நீ எழுதிய முதல் கவிதை நான் ஒவ்வொரு பத்திரிகை குப்பைத் தொட்டியிலும் கிழிந்து கிடக்கிறேன் * உன்னை விட தொட்டால் சிணுங்கி பரவாயில்லை நீ பேசினாலே சிணுங்கிறாயே * பெண்களுடன் சுற்றி இருக்கீங்களா என்று கேக்கிறாய் இல்லையென்றால் நீ எனக்கு தேவதையாய் தெரிந்திருக்கமாட்டாய் -யாழ்_அகத்தியன்

    • 6 replies
    • 1.5k views
  15. வாசனை --- வ.ஐ.ச.ஜெயபாலன் அதிலாந்திக் சமுத்திரத்தின்மேல் பறந்தபோது அவளது வாசனையை உணர்ந்தேன். நாங்கள் பிரிந்தபோது வசந்தத்தைக் கொண்டுவந்த பறவைகளும் ரொறன்ரொவை நீங்கின. ஒன்ராறியோ ஏரியின்மீது தெற்கு நோக்கிப் பறந்த வாத்துக்களுள் கண்ணீரை மறைத்தபடி நாம் விடைபெற்றோம். அந்த வசந்தத்தில் சினைப் பிடித்த சல்மன் மீன்கள் நீந்திய ஒன்ராறியோ ஏரிக்கரையின் எந்தச் செடிகளை விடவும் பூத்துப்போயும் வாசனையோடும் என் படகில் இருந்தாள். படகை விட்டு இறங்கும்போது ஈழத் தமிழர் தலைவிதி என்றாள். நாங்கள் மட்டக்களப்பின் வாவிக் கரைகளில் சந்தித்திருக்கலாமே என்று பெருமூச்செறிந்தாள். வானை வெண்பறவைகள் நிறைத்தன. ஒருகணம் போர் ஓய்ந்தது. வடமோடிக் கூத்தர்களி…

    • 24 replies
    • 4.6k views
  16. இன்று கிருபன் அண்ணாவின் புளொக்கை வாசித்தேன்...அதில் உள்ள நாட்கள் எனும் கவிதை எனது நினைவுகளையும் தட்டிவிட்டது...போருக்குள் ஊரில் வாழ்ந்த தொலைபேசி இல்லாத நாட்களில் அப்பாவின் கடிதங்களுக்காக காத்திருந்த நாட்கள் கண்களில் நிழல் ஆடின..அந்தக் காலங்களில் அதற்க்கு சற்றும் குறையாத பரிதவிப்புடன் ஊரில் உள்ள உறவுகளின் கடிதங்களுக்காக புலம்பெயர்ந்த நாடுகளில் தனிமையில் உறவுகள் எவ்வளவு தவிப்புடன் இருந்திருப்பார்கள் என்பதை கிருபன் அண்ணாவின் இந்தக் கவிதை நெஞ்சைத்தொடும் வகையில் பேசுகிறது..... நாட்கள்.... கிருபன் குளிர் காலங்களிலும் கடும் கோடைகளிலும் உதிர்கின்றன நாட்கள். பிரசவிக்கும் காலைகளில் தூக்கக் கலக்கத்துடன் விழிகள் எதிர்பார்க்கும் தபாற்காரனை. கதவிடுக்…

  17. தமிழர்நாம் உரிமை பெற்று தரணியில் நிமிர்ந்தே வாழ தனியொரு நாடு வேண்டும் - ஆனால் தடைபல உண்டு உண்மை தடைகளைத் தகர்த்து வீச தாயக மண்ணில் வீரர் தமதுயிர் துச்சம் என்றே தளர்வின்றிப் பணியில் உள்ளார் களத்திலே நிற்கும் அந்தக் காளையர் உடன் பொருதக் கடினமே அதை அறிந்த கயவரின் கொடுமை கேளும் மனிதரின் உரிமை என்று மற்றவர் போற்றும் சட்டம் மஹிந்தவின் ஆட்சி தன்னில் மரணமாய்ப் போன தன்றோ? கடத்தலும் பணப் பறிப்பும் கைதியாய் அடைத்து வைப்பும் கொலைகளும் செய்து நிற்கும்; கொடியவர் செயல் உரைப்போம் மனிதனை மிதிக்கும் அந்த மந்திகள் செயலை இந்த மாநிலம் அறியும் வண்ணம் மன்றிலே உரைத்து நிற்போம் பொங்கிடும் தமிழர் நாளில் பொலிவுடன் நாமும் கூடி …

    • 5 replies
    • 1.2k views
  18. களம் காண களம் தந்த யாழ் களமே! காவியமாய் வாழ்ந்திடு கார் இருள் அகற்றும் கதிரவன் போல் பாரினிலே தமிழர் நிலம் மீளும் வரை நித்திலத்தில் நின் பணியும் களப் பணிகளும் காத்திரமாய் தொடர்ந்திட்ட்டும் கணனி உலகிலே கன்னித் தமிழின் காப்பரணாய் கண்டம் விட்டு கண்டம் தாண்டி வாழும் தமிழரின் வரமாய் திகழ்பவளே வாழிய! வாழியாவே. #ஈழத்துப்பித்தன்

  19. மீண்டும் மீண்டும் உருவேற்றி மீளவும் நினைவில் பெருந்தீ மூட்டி சொல்லவும் மெல்லவும் முடியாமல் உள்ளத்தில் அனல்கின்ற சிறுபொறியை அணையாமல் காப்பது நம் கடனே அடையாளம் அத்தனையும் தொலைத்து அடுத்தவனின் கருச் சுமந்து கிடக்கிறாள் எங்கள் அன்னைத் தமிழீழ பூமி உள்ளத்தில் சுழன்றாடும் சிறு நெருப்பை உருவேற்றி கடத்துவோம் நாளை உலகுக்கு இனம் ஒன்று அழிந்ததன் அடையாளம் இல்லாமல் செ…

    • 9 replies
    • 1.8k views
  20. வேண்டாம் அம்மா வேண்டாம் !!! ஆண்டுகள் எட்டு ஆகித்தான் போனபோதும் ஆற்றுவார் இன்றி தவிக்கின்றோம் நாம் ஆழிப் பேரலை கொண்டு வந்து - எம் அன்புச் சொந்தங்களைகடல் காவு கொண்டு ஆண்டுகள் எட்டு ஆகித்தான் போனபோதும் ஆற்றுவார் இன்றி தவிக்கின்றோம் நாம் பட்ட காலிலே படும் என்பது பழமொழி – அது பலதரம் ஈழத் தமிழர் வாழ்வினில் நிகழ்வதேனோ? மணிக்கொருதரம் மரணித்தோர் தொகை மலைபோல உயர உயர – எம் மனம் பட்ட பாடு யார் அறிவார் இயற்கை அன்னையே ஈழத்தமிழன் மீது உனக்கும் என்னம்மா கோபம் சக்திக்கு மீறிய விலை கொடுத்து விட்டு சற்று சமாதானக் காற்றைச் சுவாசிக்க எத்தணித்த வேளையிலே இரண்டு தசாப்தமாய் எதிரியால் முடியாததை இரண்டு நொடிக்குள் அலை கொண்டு வந்து அள்ளிச் சென்றது ஏனம்மா? பாலகன் யேசு ப…

    • 11 replies
    • 926 views
  21. நம்பிக்கை ------------------- நீண்டு நிமிர்ந்திருந்த புத்தனின் கண்கள் மூடியபடி சாரையாய் நீண்ட பக்தர்களின் கைகளில் வெள்ளைத்தாமரைகள் புத்தம் சரணம் கச்சாமி வழிபடுங்கள் நம்பிக்கையோடு கீழ்ப்படிதலோடு மீண்டும் மீண்டும் இந்த நாடு உங்களுக்கே உரித்தாகும் இதைக் கேட்ட புத்தர் பரிகசிப்போடு தனக்குள் சொல்லிக் கொண்டார் இந்த முட்டாள் மனிதர்களின் குருட்டு நம்பிக்கைகளுக்கு அளவில்லாமல் போயிற்றே.. எனது விதிப்பின் படியும் விதியின் கணக்குப் படியும் வழிபாட்டுடனும் நம்பிக்கையுடனும் என்னை அதிகம் அழைத்தவர்களுக்கே இந்த நாடு சொந்தமாகும் என்பதை அறியாதிருக்கிறார்களே (ஹலீல் ஹிப்ரானின் கவிதை ஒன்றை வாசித்த போது எனக்குள் ஏற்பட்ட தாக்கம்)

  22. Started by Maddy,

    ஊடக விபச்சாரம் கொழும்பில் குண்டு வெடித்தால் அது பயங்கரவாதமெனக் கூச்சல் தமிழன் மேல் குண்டு விழுந்தால் அவர் பேசா மடந்தையாவர் காசாவில் மக்கள் இறந்தால் காது கிழியக் கத்துவார்கள் ஈழத்தில் குழந்தைகள் இறந்தால் காதிலேயும் போட மாட்டார்

    • 4 replies
    • 2.4k views
  23. கண்கள் அக்கிரமம் கண்டும் மூடிக் கொள்கின்றன....... காட்சிகளைக் கண்களுக்குள் படமாக்கி கண்ணீரில் கழுவிப் பின் உலர்விக்கின்றன தவிப்போடு என் நாவு பேச எழுந்து துடித்துப் பின் துவழ்கிறது.. முறுக்கேறி என் கரங்கள் முயல்கின்றன ஏதோ ஒன்றை..... எல்லாமே தோற்றுப் போகின்றன.. நான் தமிழச்சி என்பதால்... முள்வேலிக்குள் முடங்கிப் போகிறேன்.. பேசினால் ஒருவேளை அது தான் என் இறுதிப் பேச்சு....- இது கோழைத்தனம் என்று எனக்குள் குறுகிப் போகிறேன்....ஆனாலும் இன்றே நான் அழிந்து விட்டால்.. எனக்குள் சேமித்து வைத்திருக்கும் நம்மவர் தியாகங்களும்.. நம் இனத்தின் அவலங்களும் என் சந்ததிக்கு யார் பகிர்வார்... ஆனாலும்.... குமுறி எழுகின்ற யாவையும் கொட்ட முடியா வேதனை... பிரசவிக்க முடிய…

  24. Started by naaddan,

    சர்வதேசமே தமிழினம் செய்த தவறு என்ன? உங்கள் தண்டனைக் கோவைகளையெல்லாம் தட்டிப்பார்த்து தமிழினத்தை தனிமைப்படுத்துவதற்கு தடயம் தேடிக்கொண்டிருப்பதற்கு. தமிழினம் அழியுதென்று தக்க இடம் கொடுத்து தமிழ் மண்ணின் கொடுமைகளை தாராளமாய் அறிந்துகொண்டும் தயங்குவதேனோ தடைகளை உடைப்பதற்கு. வெழிநாட்டார் எவரையும் வெறுப்பாகப் பார்க்கவில்லை உலக மக்களுக்கு ஊறேதும் செய்ததில்லை அயல் நாட்டவரை அச்சுறுத்தி நடக்கவில்லை அல் கைதாபோல் அடுக்குமாடி தகர்க்கல்லை விடுதலை என்று சொல்லி வெளி நாட்டார் விமானத்தை கடத்தவில்லை. வீணே எதற்கு இந்த விழியறியா விமர்சனங்கள். உண்மை நிலை அறிந்தும் ஊமையாய் இருப்பதேனோ மனித நேயத்தின் மாண்பர்கள் நீங்கள் மயங்…

    • 0 replies
    • 514 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.