வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நவ்தீப், தேஜஸ்வி நடித்துள்ள தெலுங்குப் படம் ‘ஐஸ் க்ரீம்’. இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்காக ஒரு காட்சியில் படத்தின் நாயகியான தேஜஸ்வி நிர்வாணமாக நடித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. பொதுவாக ஹீரோக்கள்தான் இம்மாதிரியான காட்சிகளில் நடிப்பார்கள், ஹீரோயின்கள் நடிப்பதில்லை. சில வருடங்களுக்கு முன் கன்னடப் படம் ஒன்றில் நடிகை பூஜா காந்தி அப்படி நடித்திருந்தார். அதற்குப் பின் ஒரு ஹீரோயின் மீண்டும் இப்படி நடித்துள்ளது இந்தப் படத்தில்தான். அந்த நிர்வாணக் காட்சியை ஒருவரைக் கூட உள்ளே விடாமல் படமாக்கியிருக்கிறார்கள். நான்கு சுவர்களுக்குள்தான் அந்தக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. நான்கு சுவர்களிலும் காமிராவை மாட்டியிருக்கிறார்க…
-
- 2 replies
- 1.2k views
-
-
கனடாவில் எடுக்கப்பட்ட சகா திரைப்படம் டென்மார்க் வருகிறது. கனடாவில் எடுக்கப்பட்ட சகா என்ற திரைப்படம் டென்மார்க்கில் விரைவில் காண்பிக்கப்பட இருக்கிறது. இந்தத் திரைப்படத்துடன் கலைஞர் திவ்வியராஜன் டென்மார்க் வர இருக்கிறார். திரைப்படம் எடுத்தால் மட்டும் போதாது ரசிகர்களை பார்க்க வைக்கவும் வேண்டும் என்பது பாரிய சிரமமாக இருந்து வருவது தெரிந்ததே. இதேவேளை இங்கிலாந்தில் உள்ள சண் நடிகர் லண்டன் பாபா நடித்த வேருக்கு நீர் என்ற படத்தை டென்மார்க்கில் காண்பிக்க விருப்பு தெரிவித்துள்ளார். -அலைகள் இப்படத்தை பார்த்தவர்கள், உங்கள் கருத்துக்களை வைக்கவும்.
-
- 2 replies
- 1.6k views
-
-
மனித நேயத்தை உணர்த்தும் போர் எதிர்ப்பு சினிமா! -தயாளன் இந்த வருடத்தின் நான்கு ஆஸ்கர் விருதுகளை குவித்திருக்கும் ஜெர்மன் சினிமா All Quiet on the Western Front! அச்சு, அசலான ஒரு போரை கண் முன் காட்டும் இந்தச் சினிமா, மானுட அறத்தை உரக்கப் பேசுகிறது. போருக்கான சில நெறிமுறைகளை மீறினால் ‘போர்க் குற்றம்’ என்பார்கள். ஆனால், இந்தப் படமோ, ‘போரே ஒரு குற்றம்’ என ஓங்கிச் சொல்கிறது. சிறந்த சர்வதேசப் படம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதை அள்ளியிருக்கிறது, இப் படம். முதலாம் உலகப் போரின் போது நடந்த நெஞ்சை பதற வைக்கும் கதையே கரு. படத்தின் விமர்சனத்திற்குள் போகும் முன், சில தகவல்களை…
-
- 2 replies
- 657 views
-
-
பிப்ரவரிக்குத் திரையரங்கில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்! மின்னம்பலம் இந்த வருடத்தை மாஸ்டருடன் தொடங்கியிருக்கிறது தமிழ் சினிமா. விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி வெளியானது மாஸ்டர். 50% இருக்கை அனுமதிக்கு மத்தியில் பெரிய வசூல் சாதனையைப் படைத்து, திரையரங்கில் படங்கள் வெளியாவதற்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுத்திருக்கிறது. மாஸ்டரைத் தொடர்ந்து ஜனவரி 14ஆம் தேதி சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் படம் வெளியானது. இந்தப் படத்துக்குப் பிறகு, கடந்த ஜனவரி 28ஆம் தேதி சிபிராஜ் நடிப்பில் கபடதாரி படமும் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், பிப்ரவரிக்குத் திரையர…
-
- 2 replies
- 594 views
-
-
கதாநாயகன் திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் மினிமம் கேரண்டி என்று ஒரு கதைக்களம் இருக்கும். அப்படி ஒரு கதைக்களம் தான் காமெடி படங்கள். அந்த வகையில் எழில் இயக்கத்தில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என செம்ம ஹிட் கொடுத்த விஷ்ணு அடுத்து முருகானந்தம் என்ற அறிமுக இயக்குனருடன் கைக்கோர்த்துள்ளார். இப்படமும் அதேபோல் வரவேற்பை பெற்றதா? பார்ப்போம். கதைக்களம் விஷ்ணு மிகவும் பொறுப்பான பையன், சண்டை, வம்பு தும்பு என எதற்கும் போகாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர். அவருக்கு தன் பக்கத்து வீட்டில் இருக்கும் கேத்ரினை பார்த்தவுடன் காதல் வந்துவிடுகின்றது. ஒரு நாள் மார்க்கெட்டில் ஒரு சில ரவுடி கும்பல் அப்பாவி…
-
- 2 replies
- 995 views
-
-
மாமி' ஸ்னேகா! ஸ்னேகா மாமி அவதாரம் எடுக்கிறார். தமிழ்ப் படத்தில் அல்ல, கன்னடத்தில். ரொம்ப காலத்திற்கு முன்பு பாக்யராஜ் இயக்கிய படம் இது நம்ம ஆளு. அதில் பாக்யராஜின் நடிப்பை விட மாமியாக வந்த ஷோபனாவின் நடிப்புதான் அசத்தலாக இருந்தது. 'நான் ஆளான தாமரை...' என்று ஷோபனா போட்ட ஆட்டம், அந்தக் காலத்தில் பிரபலமான ஒரு குத்துப் பாட்டாக ரொம்ப நாளைக்கு இருந்தது. இப்போது இது நம்ம ஆளு கன்னடத்திற்குப் போகிறது. கன்னட 'சகலகலாவல்லவன்', ரீமேக் கிங் ரவிச்சந்திரன்தான் இது நம்ம ஆளுவை சுட்டு கன்னடத்தில் தயாரித்து, இயக்கி, நடிக்கப் போகிறார். பாக்யராஜ் வேடத்தில் நடிப்பது ரவிச்சந்திரன். ஷோபனா வேடத்துக்கு ஸ்னேகாவை புக் செய்துள்ளார். படத்திற்குப் பிராமணா என்று பெயர் வை…
-
- 2 replies
- 6.2k views
-
-
பிரபல நடிகர்கள் பலர் நடிக்கும் பிரமாண்ட படமான “பொன்னியின் செல்வன்” படப்பிடிப்பு அடுத்த மாதம் இலங்கையில்..! தமிழ் சினிமா ரசிகர்களால் பொிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரமாண்டமான வரலாற்று படமான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இலங்கையில் தொடங்கவுள்ளது. இயக்குனர் மணிரத்னம், பொன்னியின் செல்வன் பட வேலைகளை கடந்த வருடம் தொடங்கினார். இந்த படத்தில் நடிக்க விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம் ரவி, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யாராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டனர். தாய்லாந்து காடுகளில் பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. சென்னையில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை மீண்டும் தொடங்க இருந்த நேரத்தில் கொரோனாவால் …
-
- 2 replies
- 551 views
-
-
கதாநாயகனாக, குணச்சித்திர நடிகராக, நகைச்சுவை நடிகராக, வில்லன் நடிகராக கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பன்முகப்பட்ட நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார் நாசர். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதைத் தனக்குள் உள்வாங்கிக் கொள்பவர். அவர் தமிழ் சினிமா மீது கொண்டுள்ள அக்கறையை அவர் தயாரித்த, இயக்கிய சில திரைப்படங்களின் மூலம் அறிந்துகொள்ள முடியும். பொது நிகழ்வுகளில் அவர் வெளிப்படுத்தும் கருத்துகள் தமிழ் சினிமாவின் அடுத்த கட்டம் குறித்ததாக இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள இரு திரைப்படப் பள்ளிகளில் படித்தபோதும் உலகளாவிய திரைக்கலைப் பரிச்சயமும், நவீன நாடகக்குழுக்களில் தான் பெற்ற பயிற்சியும்தான் சினிமாவை, நடிப்பைத் தெரிந்துகொள்ள உதவியது என்று கூறும் நாசர், திரைப்படக் கல்லூரி நிறுவனங…
-
- 2 replies
- 1.4k views
-
-
சென்னை: த்ரிஷா தனது அம்மா பார்த்த 2 மாப்பிள்ளைகளுக்கு நோ சொல்லிவிட்டாராம். திரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார் த்ரிஷா. ஆனால் இன்னமும் பட வாய்ப்புகள் குறைவில்லை. இந்நிலையில் த்ரிஷாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார் அவரது அம்மா உமா. மகளுக்காக மும்முரமாக மாப்பிள்ளை தேடி வருகிறார். இந்நிலையில் அம்மா பார்த்த 2 மாப்பிள்ளைகளை நிராகரித்துவிட்டாராம் த்ரிஷா. ஏன் த்ரிஷா, என்னாச்சு என்று கேட்டால், அவர்கள் வெளிநாட்டில் வேலை பார்க்கின்றனர். வெளிநாடு என்பதால் தான் முடியாது என்று கூறிவிட்டேன். எனக்கு உள்ளூர் மாப்பிள்ளை தான் வேண்டும் என்றார். த்ரிஷாவுக்கு இந்த ஆண்டே திருமணம் நடக்கும் என்று கூறப்பட்டது. அவர் படங்களில் பிசியாக இருப்பதால் இந்த ஆண்டு திருமணம் நடப…
-
- 2 replies
- 589 views
-
-
விக்ரம் பிரபு ஒரு வெற்றி கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். தொடர் தோல்விகளால் துவண்டு இருக்கு இவர் தன் சொந்த தயாரிப்பில் தானே நடித்து அசோக் குமார் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம் நெருப்புடா. இந்த நெருப்புடா அவருக்கு வெற்றியை தந்ததா? பார்ப்போம். கதைக்களம் சிறு வயதில் தன் ஏரியாவில் நடக்கும் தீ விபத்தை அனைத்தவர்களை பார்த்து ஒரு தீயனைப்பு வீரனாக வேண்டும் என்று நினைக்கின்றார் விக்ரம் பிரபு. அவருடன் சேர்ந்து 4 நண்பர்களும் இந்த வேலைக்கு வர விரும்புகிறார்கள். ஊரில் எங்கு தீப்பிடித்தாலும் இவர்கள் டீம் அங்கு இருக்கும், எல்லாம் நல்ல படியாக போக தேர்வு நாளும் நெருங்குகின்றது. தேர்வுக்கு முந்தைய நாள் விக்ரம் பிரபு…
-
- 2 replies
- 1.2k views
-
-
கனடா Montreal: திகதி: 30 ஜனவரி 2010 நேரம்: மாலை 18:00 - 20:00 இடம்: Concordia University, Henry F. Hall Building, local H-110, 1455 de Maisonneuve West, H3G 1M8 அன்பளிப்பு: $10 தொடர்பு: 514-467-4099 / 514-839-1297 அவுஸ்திரேலியா: திகதி: பெப்ரவரி 19 நேரம்: இரவு 8:45 இடம்: Greater Union Burwood Cinemas, Westfield Shopping Complex, Burwood NSW 2134, Australia அன்பளிப்பு: $12 திகதி: பெப்ரவரி 20 நேரம்: மாலை 5:45 இடம்: Greater Union Burwood Cinemas, Westfield Shopping Complex, Burwood NSW 2134, Australia அன்பளிப்பு: $12 தகவல் மூலம்: Australia: http://www.facebook.com/search/?q=1999&init=quick#/event.php?eid=2657552909…
-
- 2 replies
- 2k views
-
-
பிரபல தமிழ் நடிகை த்ரிஷா- தொழிலதிபர் வருண்மணியன் நிச்சயதார்த்தம் சென்னையில் இன்று நடைபெற்றது. சினிமாவில் 12 ஆண்டுகளாக நீடித்து வரும் த்ரிஷாவின் திருமணம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியானது. இதனிடையே, தொழிலதிபரான வருண்மணியனுடன் சேர்ந்து த்ரிஷா இருப்பது போன்ற படங்கள் வெளியானது. இதனால் த்ரிஷாவுக்கு காதல் மலர்ந்துள்ளதாக செய்தி வெளியானது. ஆனால், இதனை த்ரிஷா மறுத்தார். இந்நிலையில், திடீரென வருண்மணியனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கடந்த ஜனவரி 7ஆம் தேதி த்ரிஷா திடீரென அறிவித்தார். மேலும், ஜனவரி 23 ஆம் தேதி ( இன்று) திருமண நிச்சயதார்த்தம் நடைபெறும் என்றும் கூறியிருந்தார். அதன்படி, சென்னையில் இன்று காலை த்ரிஷாவுக்கும், வருண்மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடை…
-
- 2 replies
- 592 views
-
-
சால்வைகளும், பூக்களும் நிரம்பிக் கிடக்க வேண்டிய அமீரின் அலுவலகம் கழுவி துடைத்த மாதிரி இருக்கிறது. பெர்லின் போய் தனது பருத்தி வீரன் படத்திற்காக சர்வதேச அளவிலான சிறப்பு விருதை வாங்கி வந்திருக்கும் அவரது முகத்தில் உற்சாகத்திற்கு பதிலாக ஒரு மூட்டை வருத்தம்! ஏர்போர்ட்டில் இறங்குவதற்கு முன்பாகவே ஓடி போய் வரவேற்க வேண்டிய திரையுலக அமைப்புகள் வெவ்வேறு வேலைகளில் பிஸியாகிவிட, தனது விரக்தி சிரிப்பை சிரமப்பட்டு ஒளித்துக் கொண்டு பேசத் துவங்குகிறார் அமீர். பருத்தி வீரன் படத்தை பார்த்துவிட்டு அங்கு வந்திருந்த பலரும் பிரமித்து போயிருந்தார்கள். அங்கே வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களில் பலர், "நாங்கள் இங்கு வந்து 30 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்த படத்தை பார்த்ததும் எங்கள் மண்ணில் இரு…
-
- 2 replies
- 1.6k views
-
-
இசை தேடும் இசைப்புயல் ஏ,ஆர்.ரஹ்மான் ஹாலிவுட் படங்களை மட்டுமே தமிழன் பார்த்துக்கொண்டிருக்க, ஹாலிவுட்டின் மிகப்பெரிய விழா மேடையில் செம்மொழியாம் நம் தாய்மொழியில் பேசி தமிழர் நமக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் அள்ளிவந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் இன்று. மேற்கத்திய இசை, கர்நாடிக் சங்கீதம், ராப், கிளாசிக்கல் இசை என இசையின் ஒவ்வொரு பிரிவையும் தன் ரத்தநாளங்களில் கலந்து வைத்திருக்கும் ஒரு மேதை தான் இந்த அல்லா ரக்கா ரஹ்மான். ஏறாத மேடைகள் இல்லை, இவர் கையை அலங்கரிக்காத விருதுகள் இல்லை, இவரிடமிருந்து பிறக்காத இசையும் இல்லை. ‘சிநேகிதனே’ என்று உருகவைப்பார், ‘போராளே பொன்னுத்தாயி’யென்று அழவைப்பார், ‘மன மன மன மென்டல் மனதில்’ என குதூகலிப்பார், ‘காதல் ரோ…
-
- 2 replies
- 3.7k views
-
-
‘போனோமா-சிரிச்சோமா-வந்த உடனே மறந்தோமா’ வகையில் அடுத்த படம் ‘முத்தின கத்திரிக்கா’ - விமர்சனம் ஒரே ஆளாய் கட்சி ஆரம்பித்து, ஒரே ஆளாய் அதை ஒப்பேற்றிக் கொண்டிருக்கும் சுந்தர்.சிக்கு நாற்பது வயதாகியும் திருமணமாகவில்லை. பூனம் பாஜ்வாவைப் பார்த்து காதலில் விழும் அவருக்கு, பெண் கேட்கப் போன இடத்தில் அதிர்ச்சி. அதோடு மட்டுமல்லாமல், ‘கவுன்சிலராகக் கூட வக்கில்ல’ என்று பூனம் பாஜ்வாவின் அப்பா ரவி மரியா சொல்லிவிட, எம்.எல்.ஏ. ஆக ஐடியா செய்கிறார். பழைய பாட்டு புத்தகத்தில் போட்டிருக்கிற மாதிரி.. ‘மீதியை வெள்ளித்திரையில் காண்க!’ பேய்ப் படங்கள், ஆர்ட் படங்கள் என்று மாறி மாறி ட்ரெண்டில் இருக்கும் தமிழ் சினிமாவில் இப்போது காமெடி படங்களின் காலம். படத்தில் ஒரு காட்…
-
- 2 replies
- 1k views
-
-
-
ரஹ்மான் வருகைக்காக ஏழு ஆண்டுகள் காத்திருந்தேன் -கவிப்பேரரசு வைரமுத்து பேட்டி *மகிழ்ச்சி, துயரம், கொண்டாட்டம், காதல், களி என வெவ்வேறு உணர்வுநிலைகளை பாடல்களில் வழங்கியிருக்கிறீர்கள். ஆயிரம் பாடல்களில் உங்கள் சொந்த மனநிலைகளும் பிரதிபலித்திருக்கும். அதுபற்றி யோசிக்கும்போது எப்படி உணர்கிறீர்கள்? கவிதை என்பது பொது உணர்ச்சி என்றும் பாட்டு என்பது தன்னுணர்ச்சி என்றும் கருதப்படுகிறது. இதைத்தான் ஆயிரம் பாடல்கள் முன்னுரையிலும் நான் எழுதியிருக்கிறேன். லிரிக் என்பது ஓர் ஆங்கிலச் சொல். இந்த லிரிக் என்பதற்கு தன்னுணர்ச்சிப் பாட்டு என்றுதான் பொருள். இந்த லிரிக் எங்கிருந்து வந்தது என்று ஆய்வு செய்தபோது கிரேக்க மொழியிலிருந்து இந்தச் சொல் பிறந்ததாக அறியமுடிந்தது. கிரேக்கத்தில் ல…
-
- 2 replies
- 1.1k views
-
-
நடிகை சமந்தாவை பார்க்க தள்ளுமுள்ளு: மதுரையில் ரசிகர்கள் மீது போலீஸார் தடியடி தனியார் நிறுவன திறப்பு விழாவுக்கு வந்த நடிகை சமந்தாவைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். மதுரை பை-பாஸ் சாலையில் தனியார் அழகு நிலைய திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் நடிகை சமந்தா நிறுவனத்தை திறந்துவைத்தார். அவர் கலந்துகொள்ளும் தகவல் பரவியதால் அவரைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். அதனால், அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டது. திறப்பு விழாவுக்கு அவர் காரில் வந்து அங்கு இறங்கியபோது இளைஞர்கள் அவரைப் பார்க்க முண்டியடித்தனர். இதனால், கடை முன் தள்ளுமுள…
-
- 2 replies
- 398 views
-
-
ரஜினியை பிச்சைக்காரர் என்று நினைத்து ரூ.10 கொடுத்த பெண்! சென்னை: ரஜினிகாந்தை கோவிலில் பார்த்த பெண் ஒருவர் அவரது எளிமையான உடையைப் பார்த்து அவர் பிச்சைக்காரர் என்று நினைத்து 10 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். ரஜினி அடிக்கடி மாறுவேடத்தில் சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் நண்பர்களுடன் உலா வருவது தெரிந்த விஷயம். ஒரு முறை இமயமலை கோவில் ஒன்றில் அப்படி மாறுவேடத்தில் சென்றபோது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கோவிலில் ரஜினி எளிமையான உடையில் ஒரு தூண் அருகே உட்கார்ந்திருக்கிறார். அப்போது கோவிலுக்கு வந்த 40களில் உள்ள ஒரு பெண் ரஜினியை யார் என்று தெரியாமல் அவரது உடையைப் பார்த்து பிச்சைக்காரர் என்று நினைத்துவிட்டார். உடனே தனது கைப்பையில் இருந்து 10 ர…
-
- 2 replies
- 1.3k views
-
-
விஸ்வரூபம் 2 படத்துக்கு பின் கமல் நடிக்கும் புதிய படத்துக்கு “உத்தம வில்லன்” என பெயரிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கமலை வைத்து படம் எடுக்கப் போவதாக லிங்குசாமி அறிவித்து இருந்தார். மெகா பட்ஜெட்டில் இப்படம் தயாராகும் என்றும் கூறியிருந்தார். தற்போது இதற்கான பணிகள் துவங்கியுள்ளன. இந்த படத்துக்கு கிரேஸி மோகன் வசனம் எழுதுகிறார். எனவே காமெடி கதையம்சத்தில் இப்படம் இருக்கும் என தெரிகிறது. காமெடி கேரக்டரில் விவேக் நடிக்கிறார். விஸ்வரூபம் 2 படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. விரைவில் இப்படத்தை முடித்து விட்டு உத்தம வில்லன் படத்துக்கு கமல் வருகிறார். Share this posthttp://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15588:kamal-s-ne…
-
- 2 replies
- 424 views
-
-
Pray for me, brother - ஏ.ஆர். ரஹ்மானின் சமீபத்திய இசை ஆல்பம். இதன் ஒவ்வொரு ப்ரெமிலும் ஏழ்மையின் துயரத்தையும், பிரமாண்டங்களின் வசீகரத்தையும் நீங்கள் காணலாம். இந்த ஆல்பத்தை உருவாக்கியதற்கு பின்னால் ஏ.ஆர். ரஹ்மான் என்ற இசை மேதையின் இளகிய மனம் இருப்பது பலருக்கு தெரியாது. பிரமாண்டமான கட்டிடங்கள், அதற்கு கீழே ஏழ்மையின் சுருக்கம் விழுந்த வயோதிக பெண்மணி, ஏக்கத்துடன் பார்க்கும் எத்தியோப்பிய சிறுமி அல்லது போரில் பாதிக்கப்பட்ட ஏதேனும் ஓர் இளைஞன்.... Pray for me, brother - பாடலில் இந்தக் காட்சிகளே திரும்பத் திரும்ப வருகிறது. இதன் பின்னணியில் பிராத்தனையின் ஓர்மையோடு ஒலிக்கும் ப்ரே ஃபார் மி பிரதர், ப்ரே ஃபார் மி சிஸ்டர் என்ற குரல் உள்ளத்தை சில்லிட வைக்கிறது. வெர்ட்டி…
-
- 2 replies
- 2k views
-
-
கதாநாயகி ஆசை காட்டி துணை நடிகைகள் இலங்கைக்கு கடத்தல்: இளம்பெண் புகார் சென்னை, மே. 30- சென்னை வியாசர் பாடி சர்மா நகரைச் சேர்ந்தவர் டி.வி. நடிகை தீபா. `வம்பு சண்டை', `வசந்தம் வந்தாச்சு' உள்ளிட்ட படங்களிலும் கதாநாயகி ஆக நடித்துள்ளார். இவரை துணை நடிகர்கள் ஏஜெண்ட் தனநாயகம் என்பவர் கடத்திச் சென்று விட்டதாக தீபாவின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.மகாகவி பாரதியார் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். நடிகை தீபா கடத்தலில் தனநாயகத்தின் நண்பர்கள் பாலா, சலீம் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். "தானாக விரும்பி வந்ததாக'' நடிகை தீபா போலீசாருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதம் உண்மையானதா என்பதையும…
-
- 2 replies
- 4.6k views
-
-
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜெயிக்கப்போவது யார்? போட்டியாளர்களின் பரபர பேட்டி இதோ களை கட்டிவிட்டது விஜய் டிவியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீசன் 5. இன்றைக்கு இறுதிச்சுற்று. நான்கு சீசன்களை வெற்றிகரமாக முடித்துவிட்டு ஐந்தாவது சீசனிலும் ஃபைனலைத் தொட்டுவிட்டது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. செம பிசியாக தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் ஃபைனல் போட்டியாளர்கள் ஐந்து பேரும் , கொஞ்சம் பேசுங்களேன் என்றால் படபடக்கிறார்கள், சியாத், செம எக்ஸைட்டா இருக்கு, ஆனால் வெற்றி பத்தி எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அந்த பெரிய ஸ்டேஜ்ல போய் நிற்கறதே பெரிய சேலஞ்சா பார்க்கறேன். எனக்கு சொந்த ஊரு பாலக்காடு, கேரளா. டிகிரி முடிச்சிட்டு இப்போ முழு நேரமா மியூசீஷியனா இ…
-
- 2 replies
- 1.7k views
-
-
ரூ.100 கோடியில் மர்மயோகி - ஜூலை 13-ல் பூஜை! மேலும் புதிய படங்கள்தனது அடுத்த கனவுப் படமான மர்மயோகியின் வேலைகளில் மும்முரமாகி விட்டார் உலக நாயகன் கமல்ஹாசன். பிரமிட் சாயமிரா நிறுவனத்துக்காக சுமார் 100 கோடி ரூபாய் செலவில் முதல் பிரதி அடிப்படையில் கமல் தயாரிக்கும் படம் இது. இம்முறை அவரே கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கப் போகிறார். ஜூலை 13-ம் தேதி இந்தப் படத்தை அதிகாரப் பூர்வமாக அவர் துவங்கப் போவதாக தெரிகிறது. ஆனால் இங்கல்ல... மும்பை கிராண்ட ஓட்டலில் பிரமாண்ட விழாவில் மர்மயோகியைத் துவக்குகிறார். இந்தி பெல்ட்டை கலக்கும் வகையில், மர்மயோகியை இந்திப் பட உலக ஜாம்பவான்களைக் கொண்டே பிரமாண்டமாகத் துவக்க விரும்புகிறார் கமல். ஆரம்பத்தில் இப்படத்தை வால்ட் டிஸ்னி…
-
- 2 replies
- 1.6k views
-
-
சாமானிய மக்கள் மீது வங்கிகள் நடத்தும் அத்துமீறல்களை அம்பலப்படுத்த துணிபவனின் போராட்டம்தான் ஹெச்.வினோத் இயக்கியுள்ள அஜித்தின் ‘துணிவு’ படத்தின் ஒன்லைன். சென்னையில் பிரதான பகுதியில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் ‘யுவர் பேங்க்’ என்ற வங்கியிலிருக்கும் பணத்தை கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டம் தீட்டுகிறது. அதன்படி வங்கிக்குள் நுழையும் அந்த கும்பல், துப்பாக்கி முனையில் வங்கி ஊழியர்களையும், அங்கிருக்கும் வாடிக்கையாளர்களையும் பணயக் கைதிகளாக்குகிறது. இதில் வாடிக்கையாளர் போல வரும் அஜித் கொள்ளையர்களை துப்பாக்கியால் சுட்டு, மொத்த வங்கியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். உடனே காவல் துறையும், அரசு எந்திரமும் அஜித்தை பிடிக்க அலர்ட்டாக, இறுதியில் காவல் துறை கையில் அஜித…
-
- 2 replies
- 729 views
-