வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
காலம் அழிக்காத கவி வரிகளைத் தந்து, அனுபவ மொழிகளால் தமிழுக்கு அழகு சேர்த்த கவியரசர் கண்ணதாசனின் நினைவுதினம். "நான் மானிட இனத்தை ஆட்டிவைப்பேன் அவர் மாண்டு விட்டால் அதை பாட்டில் வைப்பேன் நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.. " சீசரின் நண்பன் கண்ணதாசன்...! - நினைவு தினச் சிறப்புப் பகிர்வு ‘‘யாருக்காகவும் உன்னை மாற்றிக்கொள்ளாதே; ஒருவேளை மாறநினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி வரும்’’ என்றவர் கவிஞர் கண்ணதாசன். அவருடைய நினைவு தினம் இன்று. ‘‘ஆயிரம் பாட்டுக்கு அடி எடுத்துக்கொடுப்பான்டி!’’ மருது பாண்டியர்கள் நீதி தவறாது ஆட்சி செய்த சிவகங்கைச் சீமையின் சிறுகூடல்பட்டியில் வசித்த …
-
- 0 replies
- 5.7k views
-
-
நேற்று மாலை அந்த தகவல் மளமளவென பரவியது. பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதிகளின் மகள் சரண்யா தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவர் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இப்படி செய்தி பரவியதும், பரபரப்பானது கோடம்பாக்கம். தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை உறுதி செய்து கொள்வதற்காக சில நிருபர்கள் அந்த மருத்துவமனைக்குள்ளேயே சென்று விட்டனர். இதற்கிடையே இந்த தகவல் குறித்து மறுப்பு தெரிவித்த பாக்யராஜ், பூர்ணிமாவுக்கு உடல்நிலை சரியில்லை. அதன் காரணமாகதான் அந்த மருத்துவமனைக்கு சென்றோம். நீங்கள் குறிப்பிடுவது போல், சரண்யா தற்கொலைக்கு முயலவில்லை என்று தெரிவித்தார். பாரிஜாதம் படத்தின் மூலம் அறிமுகமான சரண்யா, சில மலையாள படங்கள…
-
- 7 replies
- 5.7k views
-
-
வடிவேலு என்ற பெயரைக் கேட்டாலே தமிழர்களுக்கு உற்சாகம் கொப்பளிக்கும். சினிமாவில் அவருக்கு நீண்ட இடைவெளி விழுந்துவிட்டாலும் இன்னமும் நகைச்சுவை சேனல்களின் நாயகன் வடிவேலுதான். பலரின் இரவு, வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சியைப் பார்த்து ரசித்து சிரிப்பதிலேயே முடிகிறது. தொடக்கத்தில் ‘கறுப்பு நாகேஷ்’ என்ற அடையாளத்துடன் கிராமத்து அப்பாவி இளைஞன் கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த வடிவேலு, குறுகிய காலத்திலேயே சுதாரித்துக்கொண்டு தனக்கான தனித்துவமான பாணியையும் பாத்திரங்களையும் வடிவமைத்துக்கொண்டார். வடிவேலுவை ஒருவகையில் சிவாஜிகணேசனோடு ஒப்பிடலாம். விதவிதமான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் விதவிதமான கெட்டப்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டியவர் சிவாஜி. அதேபோல் ஒரு பா…
-
- 2 replies
- 5.7k views
-
-
தமிழ்த் திரைப்பட வரலாறு தமிழ்த் திரைப்படங்கள் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா மட்டுமல்லாது கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களின் வரவேற்பைப்பெற்ற ஓர் ஊடகமாகும். நகரும்படம் 19 ஆம் நூற்றாண்டு காலத்தில் லூமியேர சகோதரர்களின் கண்டுபிடிப்பான நகரும்படம், இரண்டே ஆண்டுகளில் சென்னைக்கு வந்துவிட்டது. 1897 ஆம் ஆண்டு "எட்வர்டு" என்ற ஆங்கிலேயர் சென்னையில் முதல் நகரும் படக்காட்சியை திரையிட்டுக் காட்டினார். "விக்டோரியா பப்ளிக் ஹால்" என்ற அரங்கில் "சினிமாஸ்கோப்" என்று விளம்பரப்பட்டு திரையிடப்பட்ட அக்காட்சி, தமிழ்த்திரையில் பல மாறுதல்களை ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைந்தது. இவ்வெளியீட்டைத் தொடர்ந்து பல நக…
-
- 12 replies
- 5.7k views
-
-
இதுவரை சினிமாவில் 83 ஹீரோயின்களுடன் ஆடிப் பாடி, 150 பெண்களுக்கு தாலி கட்டி சாதனை படைத்திருக்கிறார் ஒரு நடிகர்! யாரந்த கில்லாடி என்கிறீர்களா... என்றும் மார்க்கண்டேயனான சிவக்குமார்தான். இப்போதும் ஹீரோ போலவே இளமைத் தோற்றத்துடன் காட்சிதரும் சிவக்குமார், தன் வீட்டிலேயே இரு சூப்பர் ஹீரோக்கள் உருவாகிவிட்டதால், தன் சினிமா பயணத்துக்கு செல்ப் பிரேக் போட்டுக் கொண்டுள்ளார். ஒருகாலத்தில் காதல் மன்னனாக திரையில் வெளுத்துக் கட்டிய சிவக்குமார் மீது இதுவரை எந்த கிசுகிசுவோ தவறான செய்திகளோ வந்தது கிடையாது. மது, சிகரெட் என எந்தப் பழக்கத்துக்கும் அவர் அடிமையானதும் இல்லை. அவரது தொழில் எதிரிகளும் போற்றும் அளவு ஒழுக்க சீலராகவே வாழ்ந்து வந்திருக்கிறார். கோவையில் தான் படித்த சூல…
-
- 24 replies
- 5.7k views
-
-
சிம்பு புத்தியை காட்டிவிட்டார்நயன் பாய்ச்சல் தன்னை ஒரு பெண் என்றும் பாராமல் மிக நெருக்கமாக படம் எடுத்துவிட்டு அதை இப்போது இண்டர்நெட்டில் வெளியிட்டுள்ளார் சிம்பு. இதன் மூலம் அவர் தனது புத்தியை காட்டிவிட்டார் என நயனதாரா பாய்ந்துள்ளார். சிம்புநயனதாரா இடையே உருவான திடீர் காதல் திடீரென புட்டுக் கொண்டது. இதையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து அறிக்கை விட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். கொஞ்ச காலமாக இருவருமே அமைதியாக இருந்தனர். இந் நிலையில் நயனதாராவோடு ஹோட்டல் ரூமில் சிம்பு மிக நெருக்கமாக இருந்த படங்கள் வலம் வர ஆரம்பித்துள்ளன. சோபாவில் அமர்ந்தபடி நயனதாராவை கட்டி அணைத்துக் கொண்டிருக்கிறார் சிம்பு. ஒரு கட்டத்தில் இருவரும் உதடுகளை…
-
- 17 replies
- 5.7k views
-
-
நயன்தாரா! ஹீரோயினாக நடிக்க வந்த நயன்தாரா மெல்ல மெல்ல "கவர்ச்சி காளியாத்தா'வாக மாறி வருகிறாராம். ஐயாவில் அட்டகாசமான, அடக்க ஒடுக்கமான, பாங்கான அழகுடன் அறிமுகமான நயன்தாரா, சந்திரமுகியில் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போட்டு அசத்தினார். இந்தப் படங்களில் எல்லாம் அடக்கி வாசித்த நயன்தாரா, இப்போது புக் ஆகி வரும் அத்தனை படங்களிலும் கிளாமருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அசத்தப் போகிறார். கமல்ஹாசனுடன் "வேட்டையாடு விளையாடு' படத்தில் "முத்தப் புரட்சி' உள்ளிட்ட பலவித புரட்சிகளை செய்ய காத்திருக்கிறார். இது தவிர சிம்புவின் "வல்லவன்', "கிளாமர் சேட்டைக்காரன்' எஸ்.ஜே.சூர்யாவின் "கள்வனின் காதலி' ஆகிய இரு படங்களிலும் கவர்ச்சியில்போட்டுத் தாக்கு தாக்கென்று தாக்கப் போ…
-
- 25 replies
- 5.7k views
-
-
முத்துராமன் 1981 - அக்டோபர்- 16 -ந்தேதி -காலை 6.30 மணி +ஊட்டி - கால்ப் காட்டேஜ் ஆயிரம் முத்தங்கள் - படத்திற்கு ஒப்பனை செய்து கொண்டிருந்தேன் .உதவியாளர் ஓடிவந்து 'சார்,முத்துராமன் சார் ரோட்ல மயக்கமா கிடக்கறார் சார் என்றான். ஓடிச்சென்று காரில் ஏற்றி ஊட்டி டாக்டரிடம் காட்ட, உயிர்போய் அரைமணி ஆகிவிட்டது என்றார். மீண்டும் காட்டேஜ்...காரிலிருந்து உடம்பை நிமிர்த்தி இறக்கும்போது அவர் மூச்சுக்காற்று குபுக்கென என்மேல் பட, அய்யோ உயிரோட இருக்கறவரை செத்துப்போயிட்டார்னு டாக்டர் சொல்லிட்டாரே' அண்ணா, அண்ணா எழுந்திருங்கண்ணா'- என்று நானும் நடிகை ராதா, அவர் அம்மா, மூவரும் யூகலிப்டஸ் ஆயிலை அவர் உடம்பு முழுக்க பூசி தேய்த்தவாறு கதறினோம். அவர் பேசவில்லை.போய்விட்டார். ரத்த அழுத்த நோய் பல ஆண்ட…
-
- 8 replies
- 5.6k views
-
-
மறைந்த காமிரா கவிஞர், யதார்த்தத்துக்கு நெருக்கமாக தன் படைப்புகளைத் தந்த அமரர் பாலு மகேந்திராவின் வாழ்க்கை முழுவதும் பெண்களால் நிரப்பப்பட்டதுதான். பாலு மகேந்திராவுக்கு மூன்று மனைவிகள். ஒருவர் அகிலா. இன்னொரு மனைவி பிரபல நடிகை ஷோபா. தற்கொலை செய்து கொண்டார். ஆனால் பெரும்பாலும் அவரை மனைவி என்று குறிப்பிடுவதில்லை பாலு மகேந்திரா. அவரை தன் தேவதை என்றே குறிப்பிடுவார். இன்னொரு மனைவி மௌனிகா. இப்போது பாலு மகேந்திரா உடலைப் பார்க்கப் போராடிக் கொண்டிருப்பவர். தன் வாழ்க்கையில் இந்தப் பெண்களின் பங்கு என்ன என்பதை ஒருபோதும் வெளிப்படையாகப் பேச மறுத்ததில்லை பாலு மகேந்திரா. அகிலா பாலு மகேந்திராவின் மனைவி அகிலா. இவருக்கு ஷங்கி மகேந்திரா என்ற மகன் உள்ளார். மனைவி அகில…
-
- 6 replies
- 5.6k views
-
-
வேட்டையாடு விளையாடு ஒருவழியாய் ரிலீஸ் வேட்டையாடு விளையாடு படம் இன்று ரிலீஸாகும் நிலையில் கமல் தனக்துத் தர வேண்டிய சம்பள பாக்கியைக் கேட்டு நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் கமல் சமரசத்திற்கு ஒத்து வந்ததால், பிரச்சினை சுமூகமாக¬ முடிந்தது. காஜாமைதீன் தயாரிப்பில் வேட்டையாடு விளையாடு படத்திற்கு பூஜை போடப்பட்டது. ஆனால் பணப் பிரச்சனையில் காஜாமைதீன் சிக்கிக் கொண்டதால் படம் ஆஸ்கர் பிலிம்ஸுக்கு கை மாறியது. ஆனால் திடீரென ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலிருந்து விலகிக் கொண்டது. இதையடுத்து படத்தைத் தயாரிக்கும் பொறுப்பை செவன்த் சானல் நிறுவனத்தின் மாணிக்கம் நாராயணன் ஏற்றார். இதைத் தொடர்ந்து கமல்ஹாசன்ஜோத…
-
- 10 replies
- 5.6k views
-
-
பிரபுதேவா, லாரன்ஸ் ஆகியோரிடம் நடன உதவியாளராகப் பணியாற்றிய சஞ்சீவ் ஸ்ரீனிவாஸ், ‘சூரத் தேங்காய்’ மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். சக்தி, வசனம் எழுதி தயாரிக்கிறார். குரு அரவிந்த், சமந்தி நடிக்கின்றனர். ஹார்முக் ஒளிப்பதிவு. மகேஷ் பஞ்சநாதன் இசை. படம் பற்றி சஞ்சீவ் ஸ்ரீனிவாஸ் கூறியதாவது:கடைநிலை அரசியல்வாதிகள் செய்யும் அக்கிரமங்களைத் தோலுரித்துக் காட்டும் படம். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ளது. கிளாமராக இல்லாமல், சாதாரண தோற்றத்திலும் இயல்பாக இருக்கும் ஹீரோயினைத் தேடினோம். சென்னையில் அழகு நிலையம் நடத்தும் இலங்கை தமிழ்ப் பெண் சமந்தி கிடைத்தார். அவரது நடிப்பு பேசப்படும். ‘மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி’, ‘பலம்’ படங்களில் நடித்த குரு அரவிந்த் ஹீரோ. கெட்டவை …
-
- 17 replies
- 5.6k views
-
-
-
- 4 replies
- 5.6k views
-
-
கத்தி இல்லை... இரத்தம் இல்லை... அவனைப் போட்டுர்றேன்... அவன் கையை வெட்டு, காலை வெட்டு.... ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்...... டாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.. .. இரைச்சல் இல்லை..... முதலில் பாக்யராஜுக்கு கை கொடுக்க வேண்டும்.... ரவுடிக்களும், தாதாக்களும் ஆக்கிரமித்திருக்கும் தமிழ்த் திரையுலகை அழகான தனது ஸ்கிரிப்ட் கொண்டு மீட்டிருக்கிறார்.... ரொம்ப ரொம்ப சுமாரான ஒரு கதையை எப்படி சுவாரஸ்யமாக்குவது என்ற வித்தை பாக்யராஜுக்கு இன்னமும் கை கொடுக்கிறது.... சீதா வீட்டில் வேலைக்காரியாக இருக்கும் கதாநாயகியைத் அவர் மகனுக்கே திருமணம் செய்துவைக்க நினைக்கிறார் சீதா.... இதை கதாநாயகியிடம் மட்டுமே சொல்லுகிறார்.... தன் பையனுக்கும், கணவனுக்கும் சொல்லாமல் சஸ்பென்ஸ் மெயிண்டெயின் செய்கிறார்..... சொல்லுவதற…
-
- 16 replies
- 5.6k views
-
-
மேலும் புதிய படங்கள்நடிகை சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை. அவர் கொலைதான் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று சில்க் ஸ்மிதாவின் முதல் படத்தையும், கடைசிப் படத்தையும் இயக்கியவரான திருப்பதி ராஜா கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதா என்ற மந்திரப் பெயர் ஏற்படுத்திய மாயாஜாலம் இன்றளவும் கூட சிலாகித்துப் பேசப்படுகிறது. அவர் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப இன்னும் யாரும் வரவிலலை என்பது திரையுலகின் தீர்ப்பு. மறக்க முடியாத பல படங்களிலும், கிளாமர் வேடங்களிலும், பாடல் காட்சிகளிலும், நடனங்களிலும் கலக்கியவர் சில்க். பத்து ஆண்டுகளுக்கு முன்பு திடீரென ஒரு நாள் தூக்கில் தொங்கினார் சில்க். ரசிகர்களின் மனதில் சோகம் தங்கியது, திரையுலகம் இனி இப்படி ஒரு நடிகையை …
-
- 3 replies
- 5.6k views
-
-
தீவிரவாதி என நினைத்து அமெரிக்க விமான நிலையத்தில் நடிகர் மம்மூட்டி இரண்டு மணிநேரம் சிறைவைக்கப்பட்டார். இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி அவரை விடுவித்தனர். பிரபல மலையாள மற்றும் தமிழ் நடிகர் மம்மூட்டியின் நெருங்கிய நண்பர் ஸ்டேன்லி அமெரிக்காவில் நிரந்த குடியுரிமை பெற்று தங்கியுள்ளார். இவர் நியூயார்க் நகர கவுன்சில் தேர்தலில் போட்டியிடுகிறார். தனது நண்பருக்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காக மம்மூட்டி சென்னையில் இருந்து பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானம் மூலம் கடந்த 29ந்தேதி நியூயார்க் சென்றார். ஜான் எப்.கென்னடி விமான நிலையத்தில் மம்மூட்டி இறங்கியதும் அவரது பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தனர். இதையடுத்து திடீரென மம்மூட்டியை அதிகாரிகள் பி…
-
- 1 reply
- 5.6k views
-
-
Dheepan Dheepan L'équipe du film au festival de Cannes 2015. Données clés Réalisation Jacques Audiard Scénario Jacques Audiard Thomas Bidegain Noé Debré Pays d’origine France Genre Film dramatique Sortie 2015 Pour plus de détails, voir Fiche technique et Distribution Dheepan est un film français réalisé par Jacques Audiard, sorti le 26 août 2015. Le film, qui retrace l'histoire d'un réfugié tamoul en France, est sélectionné, en compétition, au Festival de Cannes 2015 où il remporte la Palme d'or. Sommaire [masquer] 1 Synopsis 2 Fiche technique 3 Distribution 4 Distinctions4.1 Récompense 5 Notes et références 6 Liens externes Synopsis[modifi…
-
- 19 replies
- 5.6k views
- 1 follower
-
-
இந்திய வலைப்பதிவுகளிலேயே முதல்முறையாக உங்கள் லக்கிலுக் வழங்கும் "சில்லுன்னு ஒரு காதல்" திரைவிமர்சனம்.... சில நாட்களுக்கு முன் இம்சை அரசன் விமர்சனம் செய்தபோது நண்பர் வசந்தன் கதை சொல்லாமல் விமர்சனம் செய்யுங்கள் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். முடிந்தவரை படத்தின் கதையை சொல்லாமல் விமர்சிக்க முயல்கிறேன். படத்தின் ஆரம்பக்கட்டக் காட்சிகள் பிரமிக்க வைக்கிறது. அம்பா சமுத்திரத்தின் அருகில் அழகான கிராமம், சூது வாது தெரியாத மக்கள், ஆறு, மரம், பசுமை என கேமிரா அள்ளிக் கொள்கிறது. படத்தின் ஆரம்பக் கட்டக் காட்சிகளைக் கண்டால் இயக்குனர் கிருஷ்ணா ஒரு இலக்கியக் காதலர் என முடிவெடுக்கத் தோன்றுகிறது. முதல் 10 நிமிடம் எக்ஸ்பிரஸ் வேகம் தான். இப்படியொரு படமா என ஆவென வாயைத் திறந்தால் ஒரு வ…
-
- 23 replies
- 5.6k views
-
-
அது ஏன் எப்போதும் நடிகைகள் மட்டுமே தற்கொலை செய்து கொள்கிறார்கள்? நடிகர்கள் படம் பார்க்க வருபவர்களை கொலை செய்வதோடு மட்டுமே நின்றுவிடுகிறார்கள். அண்மையில் சின்னத்திரை நடிகை வைஷ்ணவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக சக நடிகர் தேவ் ஆனந்த்துக்கு நீதிமன்றம் ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை விதித்தது. ( வைஷ்ணவி தூக்கு போட்டு இறந்தது ஐந்து வருடங்களுக்கு முன்பு). கொஞ்சம் உற்றுப் பார்த்தால் இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போவது புரியும். 'சில்க்' ஸ்மிதா வறுமையான, படிக்காத ஒரு கிராமத்துப் பெண். சிறு வயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்டு, கணவனின் கொடுமை தாங்காமல் ஆந்திராவில் இருந்து ஓடி வந்து ஒரு மாவு மில்லில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது வினு சக்கரவர்த்தியின் கண்ணில…
-
- 2 replies
- 5.6k views
-
-
சினிமாவுக்கு குட்பை : தியா முடிவு அழகு கொப்பளிக்கும் குறும்பு தியா, சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு விரைவில் குடும்பஸ்திரியாகப் போகிறார். குறும்பு படத்தில் கவர்ச்சியில் கிறங்கடித்த தியா தற்போது 'செவன்',' வம்புசண்டை', 'சூறாவளி', மலையாளத்தில் 'ராத்திரி மழா' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பட வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லையென்றாலும் கலையுலகிலிருந்து விடுபட்டு இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்தபோகிறாராம். தியாவின் கழுத்தில் மூன்று முடிச்சு போடப்போகும் பாக்கியசாலி, கப்பலில் கேப்டனாக பணிபுரிபவராம். கேரளாவை சேர்ந்த இவர் தியாவின் உறவுக்காரராம் கடந்த மாதம் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அடுத்த மாதம் கேரளாவில் திருமணம் நடைபெறவுள்ளது. திருமணம் முடிந்த…
-
- 27 replies
- 5.6k views
-
-
எட்டு ஆண்டுகள் ஆயிற்று ஒரு படம் இயக்கி... மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு, 'தலைமுறைகள்’ என்ற படத்தோடு களம் காண இருக்கிறார் பாலுமகேந்திரா. படத்தின் தயாரிப்பாளர் சசிகுமார். ஒருபுறம் புத்தகங்கள், மறுபுறம் உலக சினிமா டி.வி.டி.கள். பின்னணியில் 'ஓம்’ ரீங்காரம் ஒலிக்க இருவரிடமும் உரையாடியதில் இருந்து... '' 'உங்களைச் சந்திக்கணுமே சசி’னு சார்கிட்ட இருந்து ஒருநாள் போன் வந்தது. 'நானே வர்றேன் சார்’னு சொன்னேன். 'இல்ல நான் வர்றதுதான் முறை’னு சொன்னவர், கொஞ்ச நேரத்தில் என் அலுவலகம் வந்தார். அப்ப சார் என்னிடம் சொன்ன கதைதான், இந்தத் 'தலைமுறைகள்’. கதை பிடிச்சிருந்தது... 'நானே தயாரிக்கிறேன் சார்’னு சொன்னேன். ரொம்பக் குறைவான பட்ஜெட்ல அழகா பண்ணித் தந்திருக்கிறார். இதுதான் இன்னைக்குத் தேவ…
-
- 30 replies
- 5.6k views
-
-
புலிகளைப் பற்றிய படம் : 5கோடிக்கு வாங்கிய ஐங்கரன் உலகத்தமிழர்களின் உள்ளத்தை பதறவைத்துக்கொண்டிருக்கும் ஈழ விடுதலைப் பற்றிய திரைப்படத்திற்கு 5 கோடி ரூபாய் விலை கொடுத்துள்ளது ஐங்கரன் நிறுவனம். நொடிக்கு நூறு மரணங்கள்; தடுக்கி விழுந்தால் இரத்த ஆறுகள் என துயரமே துணையாகிப்போன ஈழத்தமிழர்களின் செய்திதான் இன்றைய தேதியில் ஊடகங்களில் பிரதானம். சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பிரச்சனை பற்றி எடுக்கப்பட்ட படம்தான் ‘In the name of Butha'. இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்குமான போரில் இடையில் புகுந்த இந்திய ராணுவமும் தன் பங்கிற்கு நடத்திய வெறியாட்டங்களும், ஈழத்தமிழர்களின் உரிமை குரல்வளையை தொடர்ச்சியாக நசுக்கிவரும் இலங்கை ராணுவத்தின் முகமூடிகளை கிழித்தெறியும் சம்பவங்களு…
-
- 13 replies
- 5.5k views
-
-
http://tamil.oneindia.in/movies/news/t-rajendar-family-converts-christian-193437.html அதில் ஒரு கமெண்ட் 1980 ல நான்தாண்டா மாஸு இப்போ எனக்கு புடிச்சது ஏசு எப்பவுமே புடிச்சது காசு... சிம்பு மேல போடுவாங்க அடிக்கடி கேசு இனிமே என் கிட்ட பாத்து பேசு நான் இப்போ திமூகாவில ஊறிட்டேன் லதிமுகா ஆரம்பிச்சி நாறிட்டேன் பெருமை கிடைக்க பலபேர் காலை வாரிட்டேன் கடைசியா கிறிஸ்துவத்துக்கு மாறிட்டேன் மக்களே இதை நான் தெளிவா உங்களுக்கு கூறிட்டேன் ஏ டண்டணக்கா இல்ல இல்ல ஏ அல்லேலூயா அல்லேலூயா
-
- 37 replies
- 5.5k views
-
-
இன்றைய நாள் வெறும் வெள்ளிக்கிழமை மட்டுமல்ல, யாழ் களத்தில் பல நெஞ்சங்களிர் குளிர்காற்றை வீச வைக்கும் தமிழ் சிறி 25 ஆயிரம் பதிவுகளை தொட்ட நாள் என்பதால் இந்த விசேட செய்தியை பகிர்கின்றேன். எல்லாப் புகழும் கிளுகிளுப்பு மன்னர் தமிழ் சிறிக்கே -------------------------------- லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்திருக்கும் 'அஞ்சான்' படத்தின் காணொளி முன்னோட்டம் ஒரே நாளில் பத்து லட்சம் பார்வையாளர்களைக் கடந்து யூடியூப்பில் சாதனை படைத்தது என்று கோலிவூட்டில் ஒருநாளும் இல்லாத திருநாளாக விழா எடுத்தார்கள். இப்படி விழா எடுத்தால் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு. ஆனால் 'அஞ்சான்' காணொளி முன்னோட்டம் வெளியான சில தினங்களுக்கு ப…
-
- 40 replies
- 5.5k views
-
-
நாகேஷை நம் எல்லாருக்கும் தெரியும். வி.கே. ராமசாமியைத் தெரியும். தேங்காய் சீனிவாசனைத் தெரியும். சுருளிராஜனைத் தெரியும். கவுண்டமணி- செந்திலைத் தெரியும். வடிவேலுவைத் தெரியும்... ஏ. வீரப்பனைத் தெரியுமா? யார்னு தெரியலையே என்ற பதில் உங்கள் மனதில் ஓடுகிறதா? ம்! அவரைப் பற்றித் தெரிந்தால் விழுந்து விழுந்து சிரிக்கமாட்டீர்கள். வியப்பில் ஆழ்ந்து போவீர்கள். வயிறு குலுங்க வைக்கும், இவர்களின் அட்டகாசமான காமெடிக் காட்சிகளை உருவாக்கிய பேனாவுக்குச் சொந்தக்காரர்தான், காமெடி வீரப்பன் என்று திரையுலகினரால் அழைக்கப்பட்ட ஏ. வீரப்பன். "கரகாட்டக்காரன்' படத்தில் இடம்பெற்ற வாழைப்பழக் காமெடிக்கு இணையாக, மக்களிடம் மோஸ்ட் பாப்புலரான ஒரு காமெடி சீன், இந்திய சினிமாவிலேயே இதுவரை வரவில்லை. தெலுங்க…
-
- 4 replies
- 5.5k views
-
-
பாசமலர் டைப்பில் அண்ணன் + தங்கச்சி, தங்கச்சி ரொம்ப அழகு, ஸ்மார்ட்டான பாரின் ரிட்டர்ன் பையன், ஒரு கிராமத்து வில்லன், ஒரு பேராசைக்கார பணக்கார வில்லன், அந்த வில்லனுக்கு ஒரு பொறாமைக்கார பொண்ணு, காதல், பாசம், சுயமரியாதை, கலாச்சாரம், மண், விவசாயம், இளமை, இசை, நடனம்..... போதாதா ஒரு வெற்றிகரமான மசாலா படம் எடுப்பதற்கு? கலைஞரின் கேளிக்கை வரி சலுகையில் முதன் முதலாக தன் ஆங்கில டைட்டிலை இழந்து சலுகை பெற்றிருக்கும் படம் "உனக்கும், எனக்கும்".... சம்திங்... சம்திங்... இருந்திருந்தாலும் ரொம்பப் பொருத்தமாகத் தான் இருந்திருக்கும்.... இருந்தாலும் வரிச்சலுகைக்காக நீக்கியிருக்கிறார்கள்.... தன் அத்தை மகளின் திருமணத்துக்காக தமிழ்நாட்டுக்கு வருகிறார் லண்டன் வாழ் கதாநாயகன்.... திருமணத்து…
-
- 16 replies
- 5.5k views
-