Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தலைவனின் சொல்லுக்காக தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்த மாவீரர்களின் வழித் தோன்றல்களான போராளிகள் இன்று திக்குச்திசை தெரியாமல் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல இந்தப் போராட்டத்தைத் தாங்கிப்பிடித்த மக்கள் வாழ்வதற்கு வழிதெரியாமல் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் அடிப்பைட வாழ்விற்கான தேவைகளை நிறைவேற்றுவதே எமது தற்போதைய தலையாய கடமை என்றும், இவர்கள் புலம்பெயர்ந்த உறவுகளை தங்கள் வாழ்வின் விடிவெள்ளிகளாக நினைத்துக் காத்திருக்கும் இவ்வேளையில், நாம் இவர்களது அன்றாட வாழ்விற்குத் திரும்ப உதவி செய்யாவிட்டால் நாம் தமிழராய் பிறந்ததில் பலனேயில்லையென நேற்று நடைபெற்ற நேர்டோக் கனடாக் கிளையின் அங்குரார்பனக் கூட்டத்தில் திரு. இன்பம் பேரின்பநாயகம் குறிப்பிட்டார். …

    • 25 replies
    • 2.3k views
  2. இலங்கை மீதான ஜெனீவா தீர்மானம் நிறைவேறியது கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 மார்ச், 2014 - 12:53 ஜிஎம்டி இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் ஜநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியுள்ளது. இலங்கை தீர்மானத்தை நிராகரித்தது. இலங்கை மீதான தீர்மானத்திற்கு ஆதரவாக23 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன. 12 நாடுகள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தன. இந்தியா வாக்கெடுப்பிலிருந்து விலகிக் கொண்டது. இந்தோனேசியாவும் வாக்கெடுப்பிலிருந்து விலகிக்கொண்டது. பாகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவாக தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது. இலங்கை தொடர்பான விசாரணைகளுக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையத்திடம் போதுமான நிதிவளம் இல்ல…

    • 25 replies
    • 2.7k views
  3. மாவீரகள் நினைவுடன் ஆரம்பமானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் பொதுக்கூட்டம்! அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசில் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)யின் முதலாவது மாபெரும் பொதுக்கூட்டம் வரலாறு புகழ்மிக்க வல்வை மண்ணில் நடை பெற்று கொண்டு உள்ளது. கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவுவிடம் மற்றும் மூத்த தளபதிகள் லெப் கேணல் குமரப்பா, லெப் கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் நினைவுவிடம் அமைந்துள்ள தீருவிலில் நினைவிடத்தில் 1989 ஆம் ஆண்டு இந்திய இராணுவதால் படுகொலை செய்யப்பட பொதுமக்களின் நினைவுநாள் இன்று அதனால் அவர்களுக்கு மாவீரர்களுக்கும் அஞ்சலி செலுத்திய பின்னர் மாவீரகள் நினைவு பாடலுடன் பொதுக்கூட்டம் ஆரம்பமானது . மேலதிக செய்திகள் விரைவில்.. …

  4. வெள்ளை வானில்... 20 வயது யுவதி கடத்தல் – யாழில் சம்பவம் யாழ்ப்பாணம் – நீர்வேலி வடக்கில் வெள்ளை வானில் சென்ற இனந்தெரியாத மர்ம கும்பல் இளம் யுவதி ஒருவரை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு வெள்ளை வானில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, வீட்டில் இருந்த 20 வயது யுவதியை பலாத்காரமாக கடத்திச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற…

    • 25 replies
    • 3k views
  5. தோழர் சனார்த்தனம் மறைவு, ஈழத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெரிய இழப்பு அறிஞர் அண்ணா அவர்களால் ஈர்க்கப்பட்ட மாணவர் பட்டாளம், இந்தி எதிர்ப்புப் போர்க்களம் கண்டு வெற்றிவாகை சூடி, வீர வரலாறு படைத்த தளபதிகளின் வரிசையில், மாணவர் தலைவராய் விளங்கியவர் தோழர் இரா. சனார்த்தனம். அனைத்துக் கல்லூரி மாணவர்களின் சார்பில் ஜனநாயகப் பாதுகாப்பு மாநாடு நடத்தினார். அன்றைய தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் கலந்து கொண்ட அந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். ஈழத்தின் தந்தை செல்வா அவர்களோடு நெருங்கிப் பழகியதுடன், அன்னாரைத் தமிழகத்துக்கு அழைத்து வந்து ஈழத் தமிழர்களுக்காகப் பல கூட்டங்களை நடத்தினார். உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பை நடத்தி வந்தார். தன் வாழ்நாள் முழுவதும் ஈழத்…

    • 25 replies
    • 1.2k views
  6. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பொதிகளை நகர்த்திக் கொண்டிருந்த ஊழியர் ஒருவரின் காதில் அறைந்து மிரட்டியுள்ளார். மேலும் பல பாதுகாப்பு அதிகாரிகளையும் அவர் அச்சுறுத்தியதால் பரபரப்பான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணமொன்றுக்காக அரசியல்வாதியின் மனைவி உட்பட பலர் நேற்று முன்தினம் அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக கூறப்படுகிறது. அரசியல்வாதியின் அடாவடித்தனம் அவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக இராஜாங்க அமைச்சர் தனது மெய்பாதுகாவலர்களுடன் சென்று டிக்கெட் வாங்காமல் பிரதான வாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசித்ததாக விமான நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் தெரிவித்தனர். …

  7. குமரன் பத்மநாதனுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை – கெஹலிய ‐ கனிய வளங்கள் காணப்படுவதனால் பலம் பொருந்திய நாடுகள் இலங்கை மீது ஆதிக்கம் செலுத்த முயற்சி – ஊடக அமைச்சர் 08 துரநெ 10 01:37 யஅ (டீளுவு) தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் அது தொடர்பில் ஆச்சரியமடையப் போவதில்லை என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள குமரன் பத்மநாதன்இ புலிகளின் பல்வேறு நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குமரன் பத்மநாதனின் தகவல்களின் அடிப்படையில் தமி…

    • 25 replies
    • 3.3k views
  8. தமிழ் மக்கள் பேரவையில் விரைவில் இணைவேன்! ஒட்­டு­மொத்த தமிழ் மக்­களின் குர­லாக தமிழ் மக்கள் பேரவை திகழும் என்­கின்ற நம்­பிக்கை தனக்­குள்­ள­தாகக் குறிப்­பிட்ட முன்னாள் பிர­தி­ய­மைச்சர் விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் (கருணா), விரைவில் அப்­பே­ர­வையில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இணைந்­து­கொள்­ள­வுள்­ள­தா­கவும் கூறினார். புதி­தாகத் தோற்­று­விக்­கப்­பட்­டுள்ள தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் கேட்­ட­போதே அவர் இதனைத் தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், யுத்­தத்தின் பின்னர் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை முறை­யாக கையாள்­வ­தற்கு சகல தமிழ் மக்­க­ளாலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட அமைப்­பொன்­று…

  9. விவாதப் போர் இன்று ஆரம்பம் ஜெனிவாவில்; நெருக்கடியைச் சமாளிக்க இலங்கை பகீரதப்பிரயத்தனம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட் டத்தொடரில் இன்று வியாழக்கிழமை இலங்கை விவகாரம் குறித்து தீவிரமாக ஆராயப்படவுள்ள நிலையில், இலங்கையின் நீதித்துறைக்கு அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு அரசு முயற்சித்துவருகின்றது எனச் சுட்டிக்காட்டி பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், அரசசார் பற்ற நிறுவனங்களும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் புதிய குற்றச்சாட்டுக்களை அடுக்கிவைத்துள்ளன. இதேவேளை, மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக இலங்கை இது வரை எதுவித நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை. நான்கு வருடங்களுக்கு முன்னர் இதுபோன்ற மீளாய்வுக் கூட்டத்தில் இலங்கை அளித்த உறுதிமொ…

    • 25 replies
    • 2.3k views
  10. மாவீரர் நாள் உரையினை புலிகளின் குரல் வானொலி நேரடி ஒலிபரப்பில் கேட்கலாம்

    • 25 replies
    • 8.3k views
  11. மஹிந்தவின் கைகளுக்குள் மீண்டும் நாடு சிக்கினால் எவராலும் மீட்கமுடியாது – சுமந்திரன் இரண்டாவது தடவையாகவும் இந்த நாட்டின் ஆட்சி மஹிந்தவின் கைகளுக்குள் சிக்குமாக இருந்தால் அதனை நாங்கள் ஒருபோதும் திரும்ப பெற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நத்தார் ஆராதனையின் போது சுட்டுக்கொல்லப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13 வது நினைவு தினம் இன்று பிற்பகல் அனுஸ்டிக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட…

  12. அமைச்சர் டக்ளசை எரிச்சலூட்டியுள்ள பாடகர் உன்னி கிருஷ்ணனின் மன்னிப்பு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் நற்பெயரைப் பெறும் நோக்குடனே தென்னிந்திய பாடகர் உன்னி கிருஷ்ணன் மன்னிப்பு கோரியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று காலை யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளுக்கான விருந்தில் கலந்துகொண்ட சமயம் ஊடகவியலாளர்கள் மத்தியில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். உன்னி கிருஷ்ணன் கலந்து கொண்ட நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு இந்தியதுணைத் தூதரகம் மற்றும் வடக்கு மாகாண சபையின் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் என்பன அழைப்பு விடுத்தமையாலே தான் அந்த நி…

    • 25 replies
    • 1.9k views
  13. மன்னார் - முல்லைத்தீவு மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள பெரிய மடுப் பிரதேசத்தை இராணுவம் இன்று கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 7 சதுர கிலோமீற்றர் பரப்பளவுப் பகுதி விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் கூறுகிறது. பெரியமடுப் பகுதி முன்னரும் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு பின்னர் ஓயாத அலைகள் 3 இன் போது விடுவிக்கப்பட்ட பகுதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. போர்நிறுத்த கால எல்லைக் கோட்டில் இருந்து மன்னார், வவுனியா கள முனையில் இராணுவம் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டு பல முனைகளில் விடத்தல் தீவை நோக்கி நெருங்கி வருகின்ற போதும் மணலாறு மற்றும் யாழ்ப்பாண கள முனைகளில் அதற்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Heavy fighting in Vavuniyaa fr…

  14. தமிழக தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி புலம்பெயர் தமிழர்களிடம் பணம் வசூலிக்கும் வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரத்தியேகமாக கையடக்கத் தொலைபேசிகளுக்கு இந்தத் தகவல் நண்பர்கள் மூலம் பகிரப்படுவதாக புலம்பெயர் தமிழர் ஒருவர் எமது இணையத்திற்குத் தெரிவித்தார். தமிழக அரசியலில் தமிழர், தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற பதங்களை பெருவாரியாக பயன்படுத்தும் நாம் தமிழர் கட்சி, தமிழர்களே தமிழகத்தை ஆழவேண்டும் என்ற கோசத்தை முன்வைத்து தமது பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. இதனை மையப்படுத்தியே, தமிழகத்தில் தமது தேர்தல் பணிகளுக்காக புலம்பெயர் தமிழரிடம் இவ்வாறு நிதி சேகரிக்க ஆரம்பித்துள்ளதாக எமக்குத் தகவலளித்த புலம்பெயர் இலங்கைத் தமிழர் தெரிவித்தார். …

    • 25 replies
    • 1.9k views
  15. ஈழத்தமிழ் மக்களுக்காகவும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட படுகொலைக் கெதிராகவும் தனது தள்ளாத வயதிலும் குரல் கொடுத்த பிரான்சு ஈழத்தமிழ் மக்களால் வெள்ளை தமிழிச்சி என்று அழைக்கப்பட்ட மடம் பவுல் சாவடைந்துள்ளார். நீண்ட காலமாய் தமிழர்களின் உரிமைப்போராட்டங்களுக்கு கால நேரம் பார்க்காமல் முதல் ஆளாய் நிற்பவர். பிரான்ஸ் தொட்டு ஜெனீவா முன்றல் வரை கால் பதியாத இடமே இல்லை. அத்தனை எம் போராட்டங்களிலும் கலந்து கொண்டு எமது விடுதலை பயணத்தில் தன்னை இணைத்துகொண்டவர் மடம் பவுல் லுயிய் வியோலெத் .இவரது நல்லடக்கம் தொடர்பான தகவல் பின்னர் அறியத்தரப்படும். மேலதிக தொடர்புகளுக்கு : தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு 01 43150421 குறிப்பு - அவரின் இறுதி நிகழ்வில் பிரான்சு வாழ் தமிழீழ மக்களை கலந்துகொள்ளு…

  16. குடாநாட்டு யுத்தம் தொடர்கின்றது. கரையோரப்பிரதேசங்கள் புலிகள் வசம். தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. யாழ் குடாநாட்டின் பல முக்கிய பிரதேசங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கரையேரப் பிரதேசங்களான மாதகல், கிளாலி, ஊர்காவற்துறை ஆகிய பிரதேசங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை முகமாலையில் இருந்து முன்னேறிய படையினருக்கும் தாக்குதல் கட்டளை நிலையத்துக்கும் இடையில் இருந்த தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு முன்னேற்ற முயற்சியை மேற் கொண்ட படையினர் புலிகளின் முற்றுகைக்குள் சிக்க வைக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. யாழ் குடாநாட்…

    • 25 replies
    • 8k views
  17. முள்ளிவாய்க்காலிற்குக் கொள்ளி வைத்தவர்கள் யார்? : கீர்த்தி கீர்த்தி அனுப்பியிருந்த இந்தக் கட்டுரை இனியொருவின் கருத்தல்ல. இங்கு கூறப்பட்ட சம்பங்களிற்கும் கருத்துகளுக்கும் நாம் பொறுப்பாளிகளுமல்ல. எது எவ்வாறாயினும் ஏதோ ஒரு புள்ளியில் புலம் பெயர் தமிழர்களாயினும் புலத்தில் வாழும் தமிழர்களாயினும் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். எதிர்காலம் இலங்கையில் மக்கள் யுத்தமொன்றை உருவாகுமானால் அங்கு மக்கள் விடுதலை பெற வாய்புண்டு. விடுதலைக்காகவே பங்களித்த மக்கள் தன்னம்பிக்கை இழத்தலாகாது என்ற வகையில் இக்கட்டுரை ஒரு உரையாடல் வெளியை உருவாக்குமானால் மகிழ்ச்சியடைவோம். -இனியொரு மூன்று தசாப்த கால போராட்டம் முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்றது நம்புதற்கரிய இழப்பொன்று. எனினும் அந்த உண்ம…

  18. Shanghai Cooperation Organisation (SOC) இந்த குழுமத்தில் முழு உதவியே புலிகளை அழிக்க உதவியுள்ளது. இந்த நாடுகளின் அதிசிறந்த தொழில் நுடப உதவியே புலிகளின் ஆயுதபலத்தை நிர்மூலமாக்கியது! குறிப்பாக மனித உடல் வெப்பநிலையை வைத்து கண்ணகாணிக்கும் ராடர் தொழில்நுடபம் முதல் ஆட்லறிகள் மோட்டர்கள் மற்றும் சுடுகலன்களின் இருப்பிடம் அறிந்து உடன் தாக்கும் ஏவுகணைகள் பல இந்த யுத்தத்திற்கு கொடுத்து உதவப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் முதல் நோக்கு பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தை தம் வலயத்தில் இல்லாது ஒழிப்பது. இன்று இந்த அமைப்பில் இந்தியா பாகிஸ்தான் ஒரு பார்வையாளராக வந்துள்ளதுடன் இலங்கையும் அங்கந்துவத்தை வேண்டி நிற்கிறது! 2 லட்சம் ஆட்பலம் அமரிக்காவை விஞ்சும் சீனாவின் யுத்த தொழில் நுட்ப உ…

  19. சிறீலங்கா பாதுகாப்பமைச்சின் செய்தியின் படி புதுக்குடியிருப்புக்கு தெற்காக இதுவரை காலமும் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 59 படையணி மெளனிக்க இப்போ சிறீலங்காவின் நம்பிக்கைப் படையணியான 58 படையணி புதுக்குடியிருப்புக்கு மேற்கு மற்றும் தெற்கு நோக்கி நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது. அதுமட்டுமன்றி குடும்பிமலையில் என்ன கண்கட்டி வித்தைகளை காட்டினார்களோ அதை வன்னியிலும் அரங்கேற்றி சிங்கள மக்களை ஏய்த்து வருகிறது இராணுவம். பாதுகாப்பமைச்சோ மக்களோடு கலந்து வந்த 10 புலிகள் கைது எங்கின்றது. டெயிலிமிரரும் இராணுவமும் அதை திரித்து 10 புலிகள் சரண் எங்கிறது. ஆக 10 இளைய வயதினரைக் கைது செய்துவிட்டு கதை அளக்கிறது இராணுவம். இதற்கிடையே ஆயுதங்களைப் போட்டுவிட்டு வன்னி மக்க…

  20. இடைநடுவில் வெளியேறினார் முதலமைச்சர் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின்போது, கூழாமுறிப்பு பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு காணி வழங்கல் தொடர்பில் இடம்பெற்ற சர்ச்சையை அடுத்து இடை நடுவில் சபையை விட்டு வெளியேறினார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண மகளிர் விவகாரம், சமூக சேவைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் அனந்தி சசிதரனும் வெளியேறினார். http://uthayandaily.com/story/10734.html

    • 25 replies
    • 2.2k views
  21. “இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்” இலங்கையின் ஆதிக்குடிகள் என நம்பப்படும் வேடுவ இன மக்கள், ஐந்து இந்திய பழங்குடி இன மக்களுடன் நெருங்கிய மரபணு பிணைப்புகளை கொண்டுள்ளதாக ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது . இவர்கள் ஒடிசாவில் உள்ள சந்தால் மற்றும் ஜுவாங் பழங்குடியினருடனும், நெருங்கிய தொடர்பினை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள இருளர், பணியா மற்றும் பள்ளர் போன்ற திராவிட மொழி பேசும் பழங்குடியினருடனும் இலங்கையின் வேடுவர்கள் வலுவான மரபணு ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்வதாக இந்திய மற்றும் இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. மைட்டோகாண்ட்ரியன் என்ற அற…

  22. Published By: VISHNU 14 DEC, 2024 | 01:20 AM அரச அதிகாரிகளின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் செயற்பட்டமையால் , அரச அதிகாரிகள் தமது கண்டனங்களை யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பதிவு செய்தனர். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போது , அரச அதிகாரிகளால் திட்டங்கள் முன் மொழியப்பட்டு , அது தொடர்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. அதன் போது இடையில் குறுக்கிட்டு , கேள்விகளை கேட்டதுடன், அவர்களின் கல்வி தகமைகளையும் கேள்விக்கு உட்படுத்தினார். அதானல் சில அதிகாரிகள் அவரின் கேள்விகளை செவிமடுக்காது தமது விளக்கங்களை கூறி சென்றனர். …

  23. The Conclusion of the long drawn out war against the Liberation Tigers of Tamil Eelam (LTTE) organization has been welcomed by all sections of Sri Lankan society in particular and the international community in general. Even as war ravaged Sri Lankans breathe a collective sigh of relief and attempt to get on with their lives in a post – war scenario ,it is important to note that the armed conflict’s end does not necessarily mean the national question generally referred to as the “Tamil problem” has been satisfactorily resolved. Among the many aphorisms attributed to the Prussian soldier and military theorist Carl Von Clausewitz the most famous one defining war s…

  24. 12 வயது பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய மூவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கே.ஜெயசீலன் தெரிவித்தார். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்திற்குட்பட்ட திருச்செந்தூர் கடற்கரை பிரதேசத்திற்கு குறித்த சிறுமியை அழைத்துச்சென்று பாலியில் வல்லுறவிற்குட்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது. சிறுமியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய குற்றத்தின் பேரில் ஒருவரும் அவருக்கு உதவிய குற்றச்சாட்டின்பேரில் இருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார். பாடசாலையில் ஏழாம் ஆண்டில் கல்வி பயிலும் இச்சிறுமி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.