ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இரத்தினபுரியில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்ததுக்கு 27 ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைமையின் தடையையும் மீறி சமூகமளித்திருந்ததையடுத்து கட்சியில் பாரிய பிளவு ஏற்படுவது உறுதியாகியுள்ளது. அத்துடன், மகிந்த ராஜபக்ஷவுக்கான ஆதரவு மீண்டும் பெருகிவருகின்றதா என்ற கேள்வியையும் இது ஏற்படுத்தியுள்ளது. பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராகப் போட்யிட வேண்டும் எனக்கோரி நடத்தப்பட்ட இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்குகொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மகாஜன எக்சத் பெரமுன, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, பிவித்துறு ஹெல உறுமய ஆகிய கட்சிகள் இணைந்தே இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. மகிந்தவு…
-
- 1 reply
- 595 views
-
-
யாழில் ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் வாள்களுடன் கைது! யாழில் பெரும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்பட்டு வந்த ஆவா குழுவைச் சேர்ந்த மூவர் சுன்னாகம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 3 அடி நீளமுள்ள 7 வாள்களும் மீட்கப்பட்டன என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர். அண்மையில் வடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது தாக்கப்பட்ட சம்பவத்துடன் சந்தேகநபர்கள் மூவருக்கும் தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதனைவிட அவர்களுக்கு எதிரான பல வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் கடந்த சில தினங்களால் 20இற்கும் மேற்பட்டோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்…
-
- 6 replies
- 1.2k views
-
-
தெற்கிலிருந்து தமிழர்களையும் வடக்கிலிருந்து புலிகளையும் வெளியேற்ற நடவடிக்கை! -விதுரன்- நாட்டை பாதுகாப்பதற்காக பிரிவினைப் போராட்டத்திற்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறிவந்த இலங்கை அரசுகள், இன்று தலைநகர் கொழும்பையும் தெற்கையும் பாதுகாப்பதற்காக வடக்கு - கிழக்கில் பெரும் போர் நடத்துகின்றன. 25 வருடங்களுக்கும் மேலாகத் தொடரும் இந்தப் போரில் அரச படைகளால் புலிகளை வெற்றிகொள்ள முடியவில்லை. இதுவரை அரசுக்கு வெற்றி கிடைக்கவில்லையென்றால் அவர்கள் தோல்விகளையே சந்திக்கிறார்களென்று பொருள்படக்கூடும். ஆனாலும், வடக்கு - கிழக்கை துவம்சம் செய்யும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. கிழக்கிலிருந்து விடுதலைப்புலிகளை முற்றாக வெளியேற்றுவதாகக் கூறி மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய நட…
-
- 3 replies
- 1.7k views
-
-
ராஜிவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளனின் கருணை மனுக்கள்- ஜனாதிபதி நிராகரிப்பு முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நிராகரித்துவிட்டார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் முருகனின் மனைவி நளினி ஆகியோருக்கு 1999ம் ஆண்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த மரண தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. நளினியின் மரண …
-
- 3 replies
- 1.3k views
-
-
குடாநாட்டின் சில பிரதேசங்களில் நிலத்தடிநீர் மாசடைந்திருப்பது தொடர்பில் பொதுமக்களின் கரிசனைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த பல்வேறு தரப்பினரும் முயன்று வருவதுடன் இது தொடர்பில் வடமாகாண சபை அசமந்தப் போக்கில் உள்ளது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்க முனைந்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளதாக வடமாகாண முதலமைச்சர் கவலை வெளியிட்டுள்ளார். அவர்களுடைய நடவடிக்கைகள் பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதை நோக்கிச் செல்லாது பிரச்சினைக்கான குற்றச்சாட்டினை எம் மீது முன்வைப்பதனை மையமாகக் கொண்டு நகர்ந்து செல்கின்றது. இவ்வாறான செய்கைகள் குடிநீர்ப் பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வினைப் பெற்றுத்தரப் பயன்படப் போவதில்லை என்பதுடன் பொதுமக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுகி…
-
- 0 replies
- 624 views
-
-
2,763 கிராம அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 2023 டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், “இலங்கையில் 14,022 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன. ஒரு கிராம அலுவலர் பிரிவுக்கு ஒரு கிராம அதிகாரி வீதம் 14,022 பதவிகள் உள்ளன. 30.06.2023 ஆம் திகதி அன்றைய நிலவரப்படி 2,763 கிராம அலுவலர் பணியிடங்கள் வெற்றிடங்களாக உள்ளன. அந்த வெற்றிடங்களை உடனடியாக நிரப்பும் வகையில், 28.05.2023 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் 31.03.2023 அன்று வெற்றிடங்களை நிரப்புவதற்கான பர…
-
- 4 replies
- 431 views
- 1 follower
-
-
அண்மையில் கோத்தபாய சித்தம் குழம்பி ஐநா தொடங்கி அமெரிக்கா ஈறாக மேற்குலக நாடுகள் மீது பாய்ந்து விழுந்ததை பிபிசி வரிக்குவரி எழுதி சர்வதேசத்துக்கு சிறீலங்காவின் மனப்புழுங்கலை வெளிப்படுத்தியுள்ளது..! Sri Lanka accuses 'bullying' West "This is international bullying," Mr Rajapaksa, who is President Mahinda Rajapaksa's brother, told the BBC and Reuters. "We won't be isolated. We have all the Saarc [south Asia Association of Regional Co-operation] countries, the Asian countries." "Britain, or Western countries, the EU countries, they can do whatever. We don't depend on them. They think that they we get aid. No, they are not giving anything." "We have …
-
- 0 replies
- 1.6k views
-
-
வவுனியா நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பில் வன்முறையில் ஈடுபடச் சென்ற மர்ம மனிதர்களை இராணுவ வாகனம் கிராம இளைஞர்களிடம் இருந்து காப்பாற்றி ஏற்றிச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நெடுங்கேணிப் பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் மர்ம மனிதர்களை யாரும் கண்டால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டாம் என்று இராணுவத்தினர் தொடர் அறிவிப்புக்களை ஒலிபெருக்கிகள் மூலம் விடுத்து வருகின்றனர். இந்த அறிவித்தலை அடுத்து அந்தப் பகுதி இளைஞர்கள் உசார் நிலையில் தமது கிராமத்தினைக் கண்காணித்து வருகின்றனர். கடந்த இரவு 8.30 மணியளவில் மர்ம மனிதர்கள் அறுவர் அந்தக் கிராமத்தில் ஊடுருவிய தகவல் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டதை அடுத்து அந்தப் பகுதி மக்கள் ஒன்றிணைந்து கிராமத்தினை…
-
- 0 replies
- 765 views
-
-
அரசியல் ஆடுகளம் சூடான பாதையில் அடுத்தடுத்த வாரங்களில் பயணிக்கும் பொறுத்திருந்து பார்க்கலாம்.10 ஆண்டுகால அண்ணன் தம்பி ஆட்சி மீண்டும் மலருமா? - See more at: http://www.canadamirror.com/canada/41114.html#sthash.HJraMWnj.dpuf
-
- 0 replies
- 541 views
-
-
December 21, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிறப்புரிமைகளை மீறுகின்றார் என்று தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, ஜனாதிபதியை கொலைச் செய்வதற்கான சூழ்ச்சியில் தன்னுடைய பெயர் இல்லையென்பது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (சி.ஐ.டி) அறிக்கையிலிருந்து தெளிவாகியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய அவர், கொலைச்சூழ்ச்சி தொடர்பில் அறிக்கையிடும் போது, மிகவும் கவனமாக அறிக்கையிடவேண்டுமென, ஊடகங்களுக்கு அறிவுறுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். …
-
- 0 replies
- 443 views
-
-
மாவீரர் நினைவேந்தலுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி! மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரிய மனுவை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பொலிஸாரினால், தமது பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தத் தடை விதிக்கக் கோரி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த மனு மீதான விசாரணை நேற்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்ட போது ”நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது” எனத் தெரிவித்து குறித்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. https://athavannews.com/2023/1359412
-
- 1 reply
- 160 views
-
-
தொடரும் சிங்களப் பாசம்: தமிழக மீனவர்களை காட்டிக் கொடுக்கும் "இந்து" தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "இந்து" நாளிதழ் தனது சிங்களப் பாசத்தை வெளிக்காட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் மீது அபாண்டமாக பழிசுமத்தி காட்டிக் கொடுக்கும் துரோகத்தனத்தைச் செய்துள்ளது. இராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது கடந்த ஜூன் 17 ஆம் நாள் சிங்கள மீனவர்கள் குண்டுவீசித் தாக்குதல் நடத்தினர். இதில் தமிழக மீனவர்களின் படகு தகர்க்கப்பட்டு 4 பேர் படுகாயமடைந்தனர். சிங்கள மீனவர்கள் நடத்திய இந்த வெறியாட்டத்தில் இராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் பிரவீன்குமார் (வயது 20), பாலமுருகன் (வயது 35), சூசை(வயது 45), போதகராஜ் (வயது 30) ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர். சிறிலங்கா அரசாங்…
-
- 2 replies
- 1.3k views
-
-
Aug 27, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / அவசரவேண்டுகோள்... உடனடியாக..! முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குதண்டனை எந்த நேரத்திலும் நிறைவேற்றப்படகூடும். மூவரினதும் வாழ்வின் நாட்கள் நிமிடங்களாகவும், செக்கன்களாகவும் சுருங்கிக்கொண்டே போகின்றன. கலகம் அடக்கும் காவல்துறையும், மத்திய ரிசேவ் ஆயுதக்காவல் பிரிவும் குவித்து வைக்கப்பட்டுள்ளார்கள். சட்டம் - ஒழுங்கை காரணம்காட்டி நாளையோ மறுநாளோகூட தண்டனையை நிறைவேற்ற ஆளும்தரப்பு அவசரம் காட்டுகின்றது. தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் அவர்களை தூக்குகயிறு நெரிப்பதற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது. பேரறிவாளனின் தாயின் கதறல் எமது எல்லோரினதும் தாயினதும் கதறலாகவே நாம் கேட்கவேண்டும். இந்த தள்ளாத வயதிலும் அந்த தாய்படும் வேதனை நம் த…
-
- 1 reply
- 455 views
-
-
சர்வதேச மனக்கணிதப் போட்டி: யாழில் 19 மாணவர்கள் தெரிவு. மலேசியாவில் நடைபெறவுள்ள இவ்வாண்டுக்கான சர்வதேச மனக்கணித போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 59 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதேவேளை குறித்த போட்டியில் யாழிலிருந்து மாத்திரம் 19 மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 03ஆம் திகதி நடைபெறவுள்ள குறித்த போட்டியில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1361308
-
- 0 replies
- 242 views
-
-
72 மணிநேரத்தில் மயூரனுக்கு மரணதண்டனை! - பாலித் தீவுக்கு உறவினர்கள் அழைப்பு [saturday 2015-04-25 20:00] இந்தோனேசியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் அவுஸ்திரேலியா பிரஜைகளான 34 வயதான மயூரன் சுகுமாரன் மற்றும் 31 வயதான சேன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை அதிகாரிகளை அவுஸ்திரேலிய தூதரக பிரிநிதிகள் சந்தித்துள்ளனர். அடுத்த 72 மணிநேரத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. பாலிக்கு அருகில் நஷகம்பாங்கான் தீவில் இருக்கும் சிறையில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.மரண தண்டனை நிறைவேற்றப்படுவது தொடர்பாக இன்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மூன்று நாட்…
-
- 51 replies
- 4.2k views
-
-
ஊடகவியலாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள யாழ்.மாநகர சபை யாழ்.மாநகரசபையின் மாதாந்த மற்றும் விசேட அமர்வுகளில் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு முதல்வரினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. யாழ். மாநகரசபையின் மாதந்த மற்றும் விசேட அமர்வுகளில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதாயின் குறித்த ஒவ்வொரு அமர்வின்போதும் யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டிடம் எழுத்துமூல அனுமதி பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ். மாநகரசபை வளாகத்தில் மாநகரச் செயலாளரின் ஒப்பத்துடன் அறிவுறுத்தல் ஒட்டப்பட்டுள்ளது. குறித்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “யாழ்.மாநகரசபையின் மாதாந்த, விசேட கூட்ட அமர்வுகளினை பார்வையிடுவதற்கு வரு…
-
- 0 replies
- 309 views
-
-
தமிழக முதல்வர் கருணாநிதியுடன் ரணில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் முக்கிய சந்திப்பு வீரகேசரி நாளேடு மங்கள சமரவீர 20 ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதிக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இவ்விருவருக்கும் இடையிலான இந்த முக்கிய சந்திப்பு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாகவும் அதற்கான ஆரம்பகட்ட வேலைகளை தமிழக அரசாங்க முக்கியஸ்தர்கள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விருவருக்கும் இடையில் தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் மு…
-
- 1 reply
- 1.1k views
-
-
யுத்தத்தால் பாதிப்புற்றவர்களுக்கான தொழில்வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் சிறு சிறு தொழில் முயற்சிகளுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். இவ்வகையில் வவுணதீவு மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசம் என அழைக்கப்படும் மண்முனை மேற்கு (வவுணதீவு) பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அரிசியாலை அமைப்பதற்கான ஏற்பாடொன்றினை மேற்கொள்கிறோம். யுத்தத்தால் பாதிப்புற்ற குடும்பங்கள் சிலவற்றைத் தெரிவு செய்து முதல்கட்டம் 4குடும்பங்களை உள்வாங்கி அவர்களுக்கான தொழில் வாய்ப்பினை ஏற்படுத்த இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். மேற்படிபிரதேசத்தில்அரிசியாலைஅமைவதனால்ஒப்பீட்டளவில்அதிகபலனைப்பெறமுடியும். (அ) இந்த ஆலை அமையும் பிரதேசத்தில் அரவ…
-
- 4 replies
- 930 views
-
-
இந்து மதத்துக்கும் அரசமைப்பில் முன்னுரிமை யாழ். வரும் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்க முடிவு பல்லாயிரம் ஆண்டுகாலமாக வரலாறு கொண்ட இலங்கையின் இந்து சமயத்துக்கு அரசமைப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது உள் ளிட்ட சில கோரிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைக்க இந்து அமைப்புகள் தீர்மானித்துள்ளன. இந்து அமைப்புகளின் ஏற்பாட்டில் வட மாகாணத்தில் சைவ அமைப்புகள் எதிர் நோக்கும் சமயரீதியான பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் நல்லை ஆதீன திருஞானசம்பந்தர் மண்டபத்தில் சிவசேனை அமைப்பின் தலைவர் மற வன்புலவு சச்சிதானந்தம் தலைமையில் இடம்பெற்றது. இந்து அமைப்புகளின் கோரிக்கைகள் இதன்போது அடையாளம் காணப்பட்டு அவை அரசமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும், ஜனாதிபதியின் யாழ…
-
- 0 replies
- 459 views
-
-
"மகிந்தவின் வெற்றிவிழாவும் அடுத்த இலக்கும்" அவ்வாறெனில், வடக்கு - கிழக்கு தமிழர்களின் தேசம் என்பதையும் அது இன்னொருநாடு என்பதையும் சிறீலங்கா அங்கீகரித்து விட்டதாகவே கருத முடிகிறது. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று கூறும் சிங்கள அரசு, பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் போரையே தாம் முன்னெடுத்து வருவதாக சர்வதேசத்திற்கு பரப்புரை செய்கிறது. இப்பரப்பரைக்கு சாதகமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் அனைத்துலக நாடுகள் சிறீலங்காவிற்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. உண்மையில் விடுதலைப் புலிகளை தோற்கடிக்க வேண்டுமானால் போரில் அவர்களுக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு ஆளணி, ஆயுத இழப்புக்களை ஏற்படுத்தவது£டாகவே அதனை மேற்கொள்ள முடியும். சிறீலங்காப் படை…
-
- 2 replies
- 1.1k views
-
-
செவ்வாய்க்கிழமை, 20 செப்ரெம்பர் 2011, 00:28 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவுக்கு ஒன்பதாவது கட்ட நிதியை வழங்குவதை அனைத்துலக நாணய நிதியம் பிற்போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஓகஸ்ட் மாதம் ஒன்பதாவது கட்ட நிதியான 2.9 பில்லியன் டொலரை அனைத்துலக நாணய நிதியம் சிறிலங்காவுக்கு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் நிதியை வழங்க முன்னர், நாட்டின் பொருளாதார நிலை குறித்து மீளாய்வு செய்யப்படும் என்று ஏற்கனவே உடன்பாடு காணப்பட்டுள்ளது. ஒன்பதாவது கட்ட நிதியை விடுவிப்பதற்கு முந்திய பொருளாதார நிலை குறித்த மீளாய்வை அனைத்துலக நாணய நிதியம் இன்னமும் மேற்கொள்ளவில்லை. டிசம்பர் மாதம் வரை இந்த மீளாய்வை பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெர…
-
- 0 replies
- 465 views
-
-
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவுக்கு விளக்கமறியல் நீடிப்பு! [Monday 2015-05-11 20:00] சதோச நிறுவன நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவிற்கு விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது. ஜோன்ஸ்டன் பெனாண்டோ இன்று குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது அவரை எதிர்வரும் 25ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=131884&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 171 views
-
-
வடக்கின் அடையாளமாக றீ(ச்)ஷா சுற்றுலாத்தலம் மாறிவருகிறது. இங்கு பலதரப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இருப்பதோடு, வாழ்வை முன்னேற்றும் வகையிலான சிறுகைத்தொழில் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இயக்கச்சியில் அமைந்திருக்கும் இந்த பண்ணையானது, இலங்கையிலுள்ள சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுள்ளது. பல அனுபவங்களை கொடுக்கும் றீ(ச்)ஷாவில் பசுமை பண்ணை கால்நடை வளர்ப்பு, விவசாய பயிர்செய்கை மற்றும் காளான் வளர்ப்பு போன்றவையும் சிறப்பாக பேணப்பட்டு வருகின்றன. இவ்வாறு ஒரே சுற்றுவட்டத்தில் பல்வேறு பார்வைத்தளங்களை கொண்டுள்ள இந்த றீ(ச்)ஷா பண்ணை குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் ஈர்த்துள்ளது. https://tamilwin.com/article/most-tourist-arri…
-
- 1 reply
- 492 views
- 1 follower
-
-
SL asks: Can a banned terror group move judiciary in US? The Sri Lankan government yesterday said that in spite of accusing its military of massacring as many as 40,000 civilians, the LTTE had had to depend on an LTTE cadre, Vatsala Devi to move the US judiciary against President Mahinda Rajapaksa and Ambassador Shavendra Silva, former General Officer Commanding (GOC) of the celebrated 58 Division, over war crimes relating to the death of a hardcore terrorist, Thambirajah Ramesh. The LTTE couldn t still find an ordinary family to pursue its destabilisation project, the Defence Ministry said. …
-
- 0 replies
- 815 views
-
-
January 27, 2019 அடுத்து இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தன்னை போட்டியிடுமாறும் அதற்கான தயார்படுத்தல்களை செய்யுமாறும் தனது சகோதரரான மகிந்த ராஜபக்ஸ தன்னிடம் கூறியிருப்பதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். லங்கா தீப பத்திரிகையின் ஞாயிறு சிறப்பு பதிப்பிற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அமெரிக்க குடியுரிமை பிரச்சினை பெரும்பாலும் தீர்க்கப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அடுத்த தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் போ…
-
- 1 reply
- 377 views
-