ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143500 topics in this forum
-
புலிகளின் இறுதிக் கட்டம்.. சிவசங்கர் மேனன் பயண சர்ச்சை! 'தென் இலங்கையோடு இணைந்து, வட இலங்கையிலும் சிங்கள அரசின் வெற்றிக் கொடி பறக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!' என தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை உரையில் பெருமிதப்பட்டிருக்கிறார் அதிபர் மகிந்தா ராஜபக்ஷே. இந்நிலையில், இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளர் சிவசங்கர் மேனன் இரண்டு நாள் பயணமாக இலங்கைக்குச் செல்லவும்... போர்முனையை விட சூடாகிக் கிடக்கிறது இலங்கை அரசியல் களம்! இந்நிலையில், நடுநிலையான சில பத்திரிகையாளர்கள், ''1985-ம் வருடம் முதல் ஈழப் போரின்போது, ராணுவ போலீஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி கிளிநொச்சியைக் கைப்பற்றிய நாளிலிருந்து... தற்போது அதை இழந்தது வரைக்குமான இடைப்பட்ட காலங்களில், …
-
- 1 reply
- 2.9k views
-
-
மகிந்தவிற்கு இறுதி நேரத்தில் கைகொடுத்த சுமந்திரன் நேற்று பி.பி சி சிங்கள சேவையான சந்தேசயவிற்கு செவ்வியளித்த கொழும்புமாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம். பி சுமந்திரன் அவர்கள், இலங்கை அரசால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்வதாகவும், அப்பரிந்துரைகளை செயற்படுத்தத் தவறுமிடத்து மட்டுமே சர்வதேசத் தலையீடு தொடர்பில் ஆராயப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், இவ்வாறான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது ஒரு சில வருடங்களில் நடத்தி முடிக்கப்படக் கூடிய காரியம் அல்லவெனவும், அவை நீண்ட வருடங்களில் செயற்படுத்தப்படவேண்டியவை என்பதை 30 வருடகாலத்தில் கம்போடியா போன்ற நாடுகளின் செயற்பாடுகள…
-
- 25 replies
- 2.8k views
-
-
புலிகள் மீள ஒருங்கிணையக் கூடிய சாத்தியம் கிடையாது - இராணுவம் 17 ஏப்ரல் 2013 தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் ஒருங்கிணையக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். முழு வீச்சில் ஆயுதக் குழுவாக மீளவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில் தலையெடுக்க முடியாது என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். பிரபல சர்வதேச ஊடகமொன்று இலங்கையில் மீண்டும் புலிகள் ஒருங்கிணையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறியிருந்தது. வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் பெருமளவிலான தமிழர்கள் புலிகளுக்கு நிதி வழங்க முனைப்பு காட்டி வருவதாக தி எக்கனோமிஸ்ட் தெரிவித்திருந்தது. வெளிநாட்டு சக்திகள் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே உள்நாட்டில் இவ்வாறான போராட்டங்கள் வெ…
-
- 1 reply
- 2.8k views
-
-
வாஷிங்டன் : விடுதலைப் புலிகளுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் வடகொரியா ஆயுதங்களை வழங்கியிருக்கக் கூடுமென அமெரிக்கா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க காங்கிரஸூக்கான அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரமானது பயங்கரவாத நாடுகள், அமைக்புகளின் பட்டியலிலிருந்து வடகொரியாவை நீக்கிவிடும் அமெரிக்காவின் திட்டத்தை சிக்கலாக்கி விடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. காங்கிரஸ் ஆய்வுச் சேவையால் தயாரிக்கப்பட்ட அறிக்கை கடந்த புதன் கிழமை ராய்ட்டருக்கு கிடைத்துள்ளது. இந்த ஆய்வுச் சேவையானது அமெரிக்கா காங்கிரஸூக்கு சுயாதீனமான ஆய்வுகளையும் மேற்கொண்டு அறிக்கை சமாப்பித்து வருகின்றது. வாஷிங்டன் பயங்கரவாத அமைப்புகள் என்று கருதும் போராளிக் …
-
- 4 replies
- 2.8k views
-
-
கடற்படையினரால் பத்து வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு. - பண்டார வன்னியன் Friday, 13 April 2007 11:31 தீவகத்தில் உள்ள மண்கும்பான் பகுதியில் சிறுமி மீது கடற்படையினர் பாலியல் வல்லுறவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். வீட்டிலிருந்து வெளியே விளையாடச் சென்ற பத்து வயது சிறுமி மீது அப்பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரே இந்தப் பாலியல் வன்செயல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனை இரண்டு கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர். கடற்படையினரின் கட்டுபாட்டில் உள்ள மண்கும்பான் பகுதியில் இருந்து இந்த குறிப்பிட்ட சம்பவத்தின் பின்னர் சிறுமியின் பெற்றோர்கள் தமது வீட்டிலிருந்து வெளியேறி யாழ்ப்பாணத்திற்கு வர முயற்சித்த போதிலும் கடற்படையினர் அவர்களை பயமுறுத்தி யாழ்ப்ப…
-
- 7 replies
- 2.8k views
-
-
விடுதலைப் புலிகளின் ஓர் விமான ஓடுபாதையைக் கைப்பற்றியுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு இலங்கையின் வடக்கே மாங்குளத்திற்குக் கிழக்கே அம்பகாமம் பகுதியில் விடுதலைப் புலிகளின் 350 மீட்டர் நீளமுள்ள மேலும் ஒரு விமான ஓடுபாதையை இராணுவத்தினர் புதன்கிழமை காலை முழுமையாகக் கைப்பற்றியிருப்பதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்திருக்கின்றது. இதனிடையில், பரந்தன் மற்றும் முகமாலை பகுதிகளில் விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது நான்கு தடவைகள் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. ஆனால் பரந்தன் சந்திக்கருகில் உள்ள கத்தோலிக்கர்களின் திருக்குடும்ப கன்னியர் மடத்தின் மீதும். அதற்கருகில் இருந்த தேவாலயம் ஒன்றின் மீதும் வான்வழி தாக்குதல் நடத்தப…
-
- 3 replies
- 2.8k views
-
-
பயங்கரவாத தடை தட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விபூசியாவின் அம்மாவுக்கு இன்றும் பிணை வழங்காத நிலையில் அம்மாவுக்காக காத்திருந்த விபூசிகாவின் பூப்புனித நீராட்டு விழா அம்மா இன்றிய நிலையில் நடந்தது. தனது பூப்புனித நீராவிட்டு விழாவுக்காக அம்மா பாலேந்திரன் ஜெயக்குமாரியை பிணையில் அனுப்புமாறு விபூசிகா ஜனாதிபதி மைத்திரிக்கு கடிதம் எழுதியிருந்தாள். இந் நிலையில் விபூசிகாசின் தயார் ஜெயக்குமாரிக்கு இன்று பிணை வழங்க நீதிமன்றம் மறுத்திருந்தது. தனது தயார் பூப்பூனித நீராட்டு விழாவுக்கு வருவார் என்று எதிர்பார்த்திருந்த விபூசிகா இன்று ஏமாற்றம் அடைந்தாள். கிளிநொச்சியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் சிஐடியினரால் சேர்க்கப்பட்ட விபூசிகாவின் பூப்புனித நீராட்டு விழா இன்று இடம்பெற்ற…
-
- 5 replies
- 2.8k views
-
-
EX-Foreign Minister Mangala house arrested. :P :P :P [ jpq;fl;fpoik, 12 ngg;uthp 2007 ] [ n[auhrh ] It is being reported to NITHARSANAM that police are heavily guarding the house belonging to Samaraweera after he arrived to the island where he received a warm welcome from thousands of supporters. Another group of supporters had come to his house to speak to him but the police had only allowed the relatives of Samaraweera to enter the premises. Samaraweera had shown his dissatisfaction to the police officers regarding this. Meanwhile JVP Parliamentarian Anura Kumara Dissanayake was also not permitted to enter Samaraweera's house. Those who are close to him…
-
- 7 replies
- 2.8k views
-
-
இராணுவத்தால் முழுவதுமாக மீட்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட வவுனியா - மன்னார் வீதியில் இன்று மோதல்கள் இடம்பெற்றுள்ளன. மன்னார் வவுனியா கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பல கள முனைகளில் மோதல் நடந்துள்ளதாக இராணுவத்தை மேற்கோள் காட்டி பிபிசி/தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. இம்மோதல்களில் இராணுவத்துக்கு ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.
-
- 2 replies
- 2.8k views
-
-
முல்லைத்தீவின் விஸ்வமடு சந்தியை 58ஆவது படைப்பிரிவினர் இன்று கைப்பற்றியுள்ளனர். இன்றும் சில மணி நேரங்களில் முல்லைத்தீவு முற்று முழுதாக இராவணுவத்தினரின் வசமாகிவிடும் என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பல்குழல் பீரங்கித் தாக்குதலையடுத்து விடுதலைப் புலி உறுப்பினர்களில் ஏராளமானோர் பலியானதாகவும் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. http://www.paristamil.com/tamilnews/?p=25305
-
- 23 replies
- 2.8k views
-
-
பிரபாகரனின் உருவம் பொறிக்கப்பட்ட முத்திரை வெளியிடப்பட்டது. திங்கட்கிழமை, 02 ஜனவரி 2012 22:08 .தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தினையும் விடுதலைப் புலிகளின் இலட்சினையையும் கொண்ட நான்கு வகையான முத்திரைகள் இன்று பிரான்ஸில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் அவை பாவனைக்கும் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த முத்திரைகளை பிரான்ஸ் தபால் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது.பிரான்ஸில் வாழும் தமிழர் அமைப்பின் வேண்டுகோளையடுத்து வெளியிடப்பட்டுள்ள இந்த முத்திரை ஒவ்வொன்றினதும் பெறுமதி அந்நாட்டு நாட்டு நாணயப்படி 60 சதமாகும். புலிகளின் தபால் முத்திரைக்கு பிரான்ஸ் அரசாங்கம் அங்கீகாரம் அளிக்கவில்லை – தயான் ஜயதிலக்க தமிழீழ விடுதலைப் புலிகளினா…
-
- 25 replies
- 2.8k views
-
-
செய்தி பிரணாப் முகர்ஜியை இப்போதும் அனுப்ப தயார்; ஆனால் இலங்கை அரசு விரும்பவில்லை: டி.ஆர். பாலு [ செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 12:31.43 PM GMT +05:30 ] பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப நாங்கள் இப்போதும் தயாராகவே உள்ளோம். ஆனால் அதற்கு இலங்கை அரசு தயாராக இல்லை. இலங்கை அரசு விரும்பாமல் நமது அமைச்சரை அங்கு அனுப்ப முடியாது என்று மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர். பாலு தெரிவித்தார். இது குறித்து அவர் இன்று செவ்வாய்க்கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்னொருவர் வீட்டுக்கு விருந்தாளியாகச் செல்ல நாம் விரும்பினால், நம்மை வரவேற்க அவர்கள் தயாராக இருக்க வேண்டும். ஆனால் அவர்களே விரும்பாவிட்டால், நாம் எப்படி அவர்கள் வீட்டுக்குச் …
-
- 19 replies
- 2.8k views
-
-
இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி January 27, 2021 இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட (இந்தியா)தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே தமிழக மீனவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர். சமீபத்தில் இலங்கைதீவினை அண்டிய கடற்பரப்பில் தமிழக மீனவர்களது படகொன்று மூழ்கடிக்கப்பட்டிருந்ததோடு, அதில் இருந்த நான்கு மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் எம்மை பெருங்கவலையில் ஆழ்…
-
- 30 replies
- 2.8k views
-
-
தமிழக முதல்வர் கருணாநிதி தமிழீழ போராட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், நக்கீரன் இதழுக்கு இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில்விக்ரமசிங்கே அளித்துள்ள பேட்டியில் ரணில் கூறியிருப்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். 2005 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்ட ரணில் தோல்வி அடைய சுமார் 7லட்சம் தமிழ் வாக்காளர்கள் வாக்களிக்க இயலாத நிலைதான் காரணம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும், விடுதலைப்புலிகள் சார்பாக அவசரப்பட்டு அன்று எடுக்கப்பட்ட அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின?எங்கே போய் முடிந்தன?என்பதை எண்ணிப்பார்த்து நான் மவுணமாக அழுவதை யார் காதில் விழப்போகிறது. நம்முடைய மவுன வல…
-
- 18 replies
- 2.8k views
-
-
நாட்டின் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் பொருளாதார கொள்கைகள் காரணமாக ஏதோ ஒரு வகையில் நாடு வங்குரோத்து நிலைமைக்கு சென்றால், நாட்டில் முதலீடுகளை செய்துள்ள வெளிநாட்டவர்கள், தமது முதலீடுகளை வேறு நாடுகளுக்கு கொண்டு செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைப் பிரிவின் பேராசிரியர் ஆனந்த (Prof.Ananda) தெரிவித்துள்ளார். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை வேறு நாடுகளுக்கு எடுத்துச் சென்றால், அதுவும் நாட்டின் பொருளாதாரத்தின் மீதான மரண அடியாக இருக்கும் எனறும் அவர் எச்சரித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் பேராசிரியர் ஆனந்த இதனை குறிப்பிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு மொத்தமாக 7 ஆயிரம் மில்லியன் டொலர் கடனை …
-
- 32 replies
- 2.8k views
-
-
இரகசிய பொலிஸின் பதில் பொறுப்பதிகாரி நீதவான் பாதுகாப்பு பிரிவின் தலைவர் மீது தாக்குதல் இரகசிய பொலிஸின் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் சந்தன சில்வா, நீதவான் பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் தலைவர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சீசர் ரணவீர மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொம்பனித்தெருவில் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசேட விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பயணித்த வாகனத்தை கொம்பனி வீதியில் வைத்து வெள்ளை வான் ஒன்றினால் வழி மறித்ததாகவும், அதிலிருந்து இறங்கிய நபர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மீது தாக்குதல் நடத்த…
-
- 2 replies
- 2.8k views
-
-
இன்று காலை 6:35 மணியளவில் ஒட்டிசுட்டானில் அமைந்திருக்கும் விடுதலைப்புலிகளின் முகாம் மீது தமது ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக விமானப்படை பேச்சாளன் ஊடகங்களுக்கு தற்போது தெரிவித்துள்ளார். ஜானா
-
- 5 replies
- 2.8k views
-
-
இராணுவ தளபாடங்கள் மயிலிட்டி, காரைநகர் பகுதியில் இறக்கப்படுகின்றன. வன்னியின் மீது பாரிய இராணுவ நடவடிக்கைக்கு இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றார்கள். இதன் ஒரு கட்டமாக காங்கேசன்துறை முகத்தில் பாரிய கப்பல்களில் இருந்து இராணுவ தளபாடங்கள் இறக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக யாழ்ப்பாணத்திற்கு கப்பல்கள் மூலம் எடுத்துவரப்படும் பொருட்கள் மயிலிட்டி காரைநகர் பகுதிகளில் வைத்து இறக்கப்பட்டு வருகின்றன. காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கப்பல் பயணிகள் எடுத்துச் செல்லப்படும் போது கூட பேரூந்துகள் வெளியில் தெரியா வண்ணம் மூடப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்பட்டு இருட்டான நிலையில் கப்பலில் பொது மக்கள் ஏற்றப்பட்டு வருகின்றார்கள். இதே நேரம் காங்கேசன்துறை வீதி வழியாக கடந்த மூன்று…
-
- 11 replies
- 2.8k views
-
-
யாழ்ப்பாணத்தில் கமரோன் பொதுநலவாய மாகாநாடு தொடக்க நிகழ்வின் பின்னர் விசேட விமானம் மூலம் யாழ் சென்று யாழ் மத்திய நூலகத்தில் வட மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனை சந்திதித்து அரை மணி நேரம் உரை யாடிய பிரிட்டிஷ் பிரதமர், உதயன் பத்திரிகை அலுவலகத்தினையும் சென்று பார்த்தார். சுதந்திரம் கிடைத்த பின்னர் வடக்கே சென்ற முதலாவது பிரிட்டிஷ் பிரதமர் தான் என்று சொன்னார் டேவிட் கமரோன் யாழ் நூலகத்துக்கு வெளியே 200 பேர் வரையான காணாமல் போனோரின் உறவினர்கள் திரண்டு இருந்தனர்.
-
- 25 replies
- 2.8k views
-
-
-
விடுதலைப்புலிகளை புதுக்குடியிருப்பில் சுற்றி வளைத்திருப்பதாகவும் அவர்களை சரணடையுமாறும் சிறிலாங்கா இராணுவம் கூறியிருந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால்; தற்பொழுது கிடைத்த தகவல் ஒன்றின்படி சுற்றிவளைப்பிற்குள் இருந்த புலிகள் கடுமையான எதிர்ச்சண்டை பிடித்துக் கொண்டிருந்தமையால் இராணுவத்திற்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டது. அவ்வேளையில் தான் இராணுவம் ஒலிபெருக்கி மூலம் சரணடையுமாறு கேட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின் எரி நச்சுக்குண்டை ஏவியிருக்கின்றார்கள். அதனால் அங்கு நின்ற போராளிகள் அவ் எரி நச்சுக்குண்டு பட்டு எரிந்த நிலையில் கீழே வீழ்ந்ததாகவும். பின் இராணுவம் முன்னேறிச்சென்று இவ்வீரர்களின் உடலங்களைக்க் கைப்பற்றியதாகவும் அறியமுடிகின்றது. இவ் எரி நச்சுவாயுவை…
-
- 8 replies
- 2.8k views
-
-
கொழும்பில் இந்திய அமைதிப்படை வீரர்களின் நினைவிடத்தில் அப்துல்கலாம் அஞ்சலி. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கே அவர், இந்திய அமைதிப் படை வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இலங்கையின் மும்மொழித் திட்டத் துவக்க விழாவிலும் கலந்து கொண்டார். இலங்கை நாட்டவர் அனைவரும், மூன்று மொழிகளையும் கற்றுக் கொள்ளும் நோக்கில், தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்ற மும்மொழித் திட்டம், கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தனது உரையில், இத்திட்டத்தை அப்துல் கலாம் வரவேற்றுப் பேசினார். பின், பண்டார நாயக்க சர்வதேச ஆய்வு மையத்தில் உரையாற்றினார். இதையடுத்து, கொழும்பின் புறநகர்ப் பகுதிய…
-
- 12 replies
- 2.8k views
-
-
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் மற்றும் நோர்வே சமாதான பிரதிநிதி யோன் ஹான்சன் பவர் ஆகியோரை நேற்று நியூயோர்க்கில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹோன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இலங்கையின் தற்போதைய யுத்தம், மற்றும் பொருளாதார நிலவரங்கள், எதிர்கால சமாதான நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் நோர்வே அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருக்கிடையில் நியூயோர்க்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது,…
-
- 3 replies
- 2.8k views
-
-
கிழக்கு மாகாண சபைக்கு நடைபெறவுள்ள தேர்தலில் தமது அணியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக பிள்ளையான் நியமிக்கப்படுவார் என அவ்வணியின் பேச்சாளரான அசாத் மௌரானா தெரிவித்தார். நேற்று நடைபெற்ற பிள்ளையான் அணியின் முக்கிய கூட்டம் ஒன்றிலேயே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்தே இத்தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட பிள்ளையான்குழு நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தலிலும் ஆளும் கட்சியுடன் இணைந்தே போட்டியிடுவதற்குத் தீர்மானித்திருக்கின்றது. ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ இ…
-
- 6 replies
- 2.8k views
-
-
கருணா, கேபி. ரங்கா ஆகியோருடன் இணைந்து செயற்படுபவர்கள் யார்? - தமிழ்மக்களே உசார் - ( அதிர்ச்சி தகவல்-1) தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கச் செய்யப்பட்டதோடு தமிழர்களின் உரிமைக்குரலை முழுமையாக நசுக்கிவிடலாம் என சிங்களதேசம் கனவுகண்டிருந்தது. அவர்களின் கனவுகளுக்கு ஆப்பு வைக்கும் விதமாக புலம்பெயர் தமிழர்களின் நடவடிக்கைகள் அமைந்துவிட்டது. இதனால் சீற்றமடைந்த இலங்கை அரசு அவர்களை இலக்குவைத்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக மேற்கு நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான போரைத் தான் முன்னெடுக்கப் போவதாக அண்மையில் இலங்கை வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது. இலங்கை அரசு இலண்டனுக்கு வந்து அவமானப்பட்டுத் திரும்பிய கையோட…
-
- 4 replies
- 2.8k views
-