Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தாங்கள் இன்னமும் சினிமா என்ற மோகத்தில் வீழ்ந்து கிடப்பவர்கள் என்பதையும் மட்டக்களப்பில் உள்ள சில மாக்கள் இன்று நீரூபித்து காட்டினர். இன்று 10.01.2014 ஆம் திகதி அஜித் நடித்த வீரம் திரைப்படம் திரையிடப்பட்டதை இட்டு மட்டக்களப்பு கல்லடியில் உள்ள சாந்தி திரையரங்கில் சி மாக்கள் அவருடைய கட் அவுட்டிற்கு பால் அபிசேகம் செய்து தேங்காய் உடைத்து மலர்தூவி பட்டாசு கொழுத்தி கொண்டாடினர்.

    • 17 replies
    • 4.5k views
  2. முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பாரிய துரோகம் இழைத்து விட்டதாக, அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் நேற்று வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நேற்று வரையில் அமைச்சராக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன, குடும்ப அரசியல் பற்றி எவ்வாறு குற்றம் சுமத்த முடியும்? சிறிமாவோ பண்டாரநாயக்க நாட்டை சிறந்த முறையில் ஆட்சி செய்தார். எனினும் அவரது மகள் சந்திரிகா, மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து சூழ்ச்சி செய்கின்றார். மக்களுக்கு நலன்களை ஏற்படுத்திய மதத் தலைவர்கள் அரசியல் தலைவர்களுக்கு எதுவும் நடக்காது. மைத்திரிபாலவின் நடவடிக்கை பாரியளவிலான துரோகமாகும்.சர்வதேச சூழ்ச்சித் திட்டமொன்று ம…

  3. உண்மையிலேயே உடைகின்றதா தமிழரின் தேசியத் தலைமை? [ செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் ஆளும் கட்சியான ஐ. ம. சு. முன்னணியில் இணைந்து போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த காலங்களில் அரசாங்கத்துடன் இணைந்து இவர்கள் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இவர்களுக்கு ஆசன ஒதுக்கீட்டை வழங்க கூட்டமைப்பின் தலைமை மறுத்துவிட்டதை அடுத்தே ஆளும் கட்சியில் இணைந்து தோ்தலில் போட்டியிட இவர்கள் தீர்மானித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி, வன்னி மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின…

    • 17 replies
    • 2.6k views
  4. மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினரும் ஜாதிக பலசேன அமைப்பின் தலைவருமான வட்டரெக்க விஜித்த தேரர் தாக்கப்பட்டு கை,கால்கள் கட்டப்பட்டு நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய தாக்குதலுக்கு உள்ளான தேரர் நேற்றுக் காலை பண்டாரகமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹிரண பாலத்துக்கு அண்மித்த பகுதியில் வைத்து மீட்கப்பட்டு பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசியவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். தேரரின் உடலில் வெட்டுக்காயங்கள் காணப்படும் அதேவேளை அவரது அந்தரங்க உறுப்பிலும் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேரர் நிலை தற்போது சாதாரணமாக இருப்பதாக பொலிஸ் ஊட…

  5. கைவிடப்பட்டுள்ள முன்னாள் போராளிக் குடும்பம் எனக்கு ஒரு காலும் இல்லை கையும் இல்லை அரசு முதல் அரசியல் வாதிகள் வரை எங்கள் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாது விட்டாலும் பரவாயில்லை ஒரு கால் மற்றும் கை இல்லாத நான் சிரமம் இன்றி மலசலம் கழிப்பதற்கு ஒரு மலசலக் கூடத்தையாவது அமைத்துதாருங்கள் என்று பலரிடம் கேட்டப்போதும் எவரும் எம்மை கண்டுகொள்ளாமை மிகுந்த மனவருத்தம் தருகிறது. சாதாரன மலசல கூடம் ஒன்றில் ஒரு பக்கத்தில் சீமெந்து கல் ஒன்றை வைத்து பயன்படுத்துகிறேன். நான் மட்டுமல்ல என்னைப் போன்ற நூற்றுக்கணக்கான் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களின் நிலைமையும் இப்படிதான் ஏதோவொரு வகையில் பாதிக்கப்பட்ட நிலையில் விரக்தியில்…

    • 17 replies
    • 1.4k views
  6. முஸ்லிம் தனித்தரப்பு கோரிக்கை: மகிந்த நிராகரிப்பு இலங்கை அமைதிப் பேச்சுகளில் முஸ்லிம்கள் தனித்தரப்பாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார். முஸ்லிம்களை தனித்தரப்பாக பேச்சுகளில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. முஸ்லிம்களை தனித்தரப்பாக இணைத்தால் சிங்களவர்களும் தனித்தரப்பாக தங்களை இணைத்துக் கொள்ள கோரிக்கை விடுப்பார்கள் என்பதால் அதை நிராகரிப்பதாக மகிந்த கூறியுள்ளார். இதனிடையே இதுவிடயத்தில் ஒருமித்த முடிவை மேற்கொள்வதற்காக அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆலோசனை நடத்த முஸ்லிம் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது தகவல்மூலம்;-…

  7. ஜேர்மனியின் தேசிய மட்ட சாதனை மாணவர்களில் ஒருவராக தமிழ் சிறுமி! ஜேர்மனியின் தேசிய மட்ட கல்விச் சாதனையாளர்களில் ஒருவர் என்கிற பெருமை இலங்கைத் தமிழ் மாணவியான வீரசிங்கம் துர்க்கா (வயது 17) என்பவருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. “talent in the country” என்கிற அங்கீகாரத்தை இவ்வருடம் அங்கு பெற்றிருக்கும் 50 மாணவர்களில் இவரும் ஒருவர். சராசரி மாணவர்களை விட அதி கூடிய திறமை உடையவர்கள் என்று இவர்கள் 50 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஜேர்மனை தளமாக கொண்டு இயங்கும் Robert Bosch and Baden-Württemberg Foundation என்கிற சர்வதேச புகழ் வாய்ந்த உயர்கல்வி ஸ்தாபனத்தால்தான் இப்பெருமையும், அங்கிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. துர்க்கா இந்நிறுவனத்தின் புலமைப் பரிசிலுடன் உயர்க…

  8. லண்டனில் பிரபல இலவச தினசரி பத்திரிகையான லண்டன் லைட் (london lite) தனது 26/03/2007 மாலைப்பதிப்பிலே கட்டுநாயக்கா தாக்குதலை படத்துடன் பிரசுரித்திருந்தது முக்கிய இடத்தை பெறுகிறது. அதுவும் லண்டன் சிட்டி (london city) க்குள்ளே இலவசமாக விநயோகிக்கப்படும் இப்பத்திரிகை பல ஆயிரக்கணக்கான மக்களாலே வாசிக்கப்படுவது. நான் நினைக்கிறன் கனபேர் தங்கட இலங்கை விமானச்சீட்டை இரத்துச்செய்திருப்பினம். மேலும் ஒருசில தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள் ஏனைய பத்திரிகைகளிலும் இச்செய்தி வருவதற்காக முயற்சிகளை மேற்கொண்டவண்ணமுள்ளனர். வான்புலிகள் வானேற கப்பலேறியது மகிந்தவின் மானம்!!!!!!! செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது

    • 17 replies
    • 5.6k views
  9. உறங்காத உண்மைகள் - சேரமான் ஆக 27, 2010 Font size: Decrease font Enlarge font வன்னிப் போரின் இறுதிக் கணங்களில் நிகழ்ந்தேறிய அவலங்கள் தொடர்பான பல உண்மைகள் முள்ளிவாய்க்காலில் புதைந்து கிடக்கின்ற பொழுதும், இவற்றை அரங்கேற்றி முடித்த சிங்களத்திற்கு உடந்தையாக விளங்கிய பலரது அசிங்க முகங்கள், அண்மைக் காலங்களில் முகமூடி கழன்று முழுமையாக வெளிப்படத் தொடங்கியுள்ளன. சிங்களத்தின் எதிர்ப்புரட்சி நிகழ்ச்சித் திட்டத்தின் நடுநாயகமாக விளங்கும் கே.பி அவர்களை ஒரு சந்தர்ப்பக் கைதியாக வர்ணித்து, பொய்மை என்ற முகத்திரைக்குள் தம்மை மறைத்துக் கொள்வதற்கு கே.பியின் சகபாடிகளான வி.உருத்திரகுமாரன், வே.மனோகரன் போன்றோர் பகீரத பிரயத்தனங்களை மேற்கொள்கின்ற பொழுதும், உண்மை என்ற வெளிச்சத்தில் இருந…

  10. இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக தீக்குளித்ததாக கூறப்படும் திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் ஒரு விவசாயி. 2 நாட்களுக்கு முன்பு உடல் முழுவதும் தீயில் கருகிய நிலையில் அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக அவர் தீக்குளித்ததாக கூறப்பட்டது. ஆனால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே ரவி தீக்குளித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ரவியின் மனைவி சித்ராவும், மூத்த மகன் பிரபாகரனும் மறுத்திருந்தனர். நேற்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரைக்கு வந்து ரவியைப் பார்…

    • 17 replies
    • 1.9k views
  11. கல்முனையில் நீதிமன்றத் தடையை மீறி, திருவள்ளுவர் சிலை Sunday, January 19, 2025 செய்திகள் (பாறுக் ஷிஹான்) நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட நிலையில் சர்ச்சைக்கு மத்தியில் 10 அடி உயரமான திருவள்ளுவர் சிலை கொட்டும் அடை மழைக்கும் மத்தியில் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிட்டங்கி வீதியில் அமைந்துள்ள கல்முனை தமிழர் கலாசார பேரவை வளாகத்தில் குறித்த சிலை பொலிஸாரின் பாதுகாப்பிற்கும் மத்தியில் இன்று(19) மாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த சிலை தி…

  12. தமிழக மீனவர்களின் இழுவைப்படகுகளை மீளக் கைய்யளிக்க முடியாது - வடமாராட்சி மீனவர்கள் அண்மையில் தமிழக மீனவர்களுடன் பிடிக்கப்பட்ட இழுவைப்படகுகளை மீளக் கைய்யளிக்க முடியாது என்று வடமாராட்சி மீனவர் சமூகத்தைச் சேர்ந்த 500 இற்கும் மேற்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளதாக தமிழ்நெட் செய்தி வெளியிட்டிருக்கிறது. சம்பவம் நடந்த இடத்தில் டக்கிளஸ் தேவானந்தா பிரசன்னமாகி இருந்ததாகவும் ஆனால், பத்திரிக்கையாளர்களின் கண்னில் படாதவாறு பார்த்துக்கொண்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது. தமிழக மீனவர்களின் படகுகளை மீள ஒப்படைக்குமாறு இலங்கை ராணுவத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கையையும் வடமாராட்சி மீனவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு, இப்பிரச்சனைக்குத் தீர்வொன்றைத் தருமாறு அதிகாரப் பீடத்தை வலியுறுத்தியிருப…

  13. [ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2007, 04:43 ஈழம்] [அ.அருணாசலம்] ஓமந்தை, மணலாறு, மன்னார் ஆகிய பகுதிகளில் உள்ள சிறிலங்காப் படையினரின் முன்னரங்க நிலைகளில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை படையினரால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது வலிந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இத்தாக்குதல்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட 57 ஆவது படையணியைச் சேர்ந்த சிறப்பு காலாட் படையின் பட்டலியன் துருப்புக்களும் இராணுவத்தினரின் சிறப்பு அணியினரும் ஈடுபட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இப்படையணிக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை அதன் முதலாவது தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் போது 4 சிறப்பு படையினர் கொல்லப்பட்டதாகவும் 23…

    • 17 replies
    • 3.6k views
  14. முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படையின் வேவு வானூர்தி வீழ்ந்தது [வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2007, 15:13 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு கொக்கிளாய் களப்புப் பகுதியில் சிறிலங்கா வான் படைக்குச் சொந்தமான தானியங்கி வேவு வானூர்தி ஒன்று வீழ்ந்து சேதமாகியுள்ளது. சிறிலங்கா வான்படைக்கு வீடியோப் படங்கள் மூலம் வேவுப்பணி செய்யும் ஆட்கள் அற்ற தானியங்கி வேவு வானூர்தி இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலை - முல்லைத்தீவு கடற்பரப்புக்கு மேலாக வேவுப் பறப்பை மேற்கொண்டு படம் பிடித்துக் கொண்டிருந்த போது, அந்த வேவு வானூர்தி கொக்கிளாய் களப்புக்கு மேலாக பறந்த போது களப்புக்குள் வீழ்ந்து சேதமாகியுள்ளது. முதலில் வீழ்ந்ததாக சிறிலங்கா படைத்தரப்பு …

  15. தென்னிலங்கையை உலுக்கும் தாக்குதல்கள் -அருஸ் (வேல்ஸ்)- இலங்கையின் அமைதி முயற்சிகளை நியாயப்படுத்தவென மேற்குலகின் கைகளில் இருந்த துரும்புச்சீட்டு கடந்த புதன்கிழமையுடன் நழுவி வீழ்ந்துவிட்டது. படை நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தும் திராணியற்ற போர் நிறுத்த ஒப்பந்தமும், தங்களுக்குள்ளேயே பெரும் குத்து வெட்டுக்களை நடத்தி வரும் அனைத்துக்கட்சிக்குழுவும் இனப்பிரச்சினைக்கு ஒரு முடிவைக் கொண்டுவரும் எனக்கூறி மேற்குலகம் போட்ட நாடகத்தை தவிர்க்க முடியாத காரணத்தால் அரசே சிதறடித்துள்ளது. போர்நிறுத்தத்தில் இருந்து விடுதலைப் புலிகள் தன்னிச்சையாக வெளியேறி விடுவார்கள் என கடந்த இரு வருடங்களாக அரசினாலும், அரசிற்கு ஆதரவு வழங்கிவரும் சர்வதேச நாடுகளினாலும் கருதப்பட்டது. அதற்காகவே …

    • 17 replies
    • 3.3k views
  16. அடுத்தடுத்து படையினரிடம் வீழ்ச்சிடையும் கேந்திர இடங்கள், படையினரின் விரைவான முன்னேற்றம், உக்கிரமான விமான மற்றும் பீரங்கித் தாக்குதல்கள், இலட்சக்கணக்கான மக்களின் பெயர்வு அலவலம் என்று முன்னேப்போதும் இல்லாத நெருக்கடிக்குள் இருந்தாவர்று எதிர்வரும் 27ம் திகதி தலைவர் வே. பிரபாகரன் மாவீரர் நாள் உரையை நிகழ்த்தவிருக்கிறர். புலிகள் இயக்கம் இதுவரை சந்தித்திராதளவுக்கு நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கின்ற நிலையில் புலிகளின் தலைவர் இந்த நிலையிட்டு என்ன சொல்லப் போகிறார்? புலிகளின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்று அறியும் ஆதங்கம் தமிழ்மக்களிடத்தில் மட்டுமன்றி தென்னிலங்கையிலும் சர்வதேச மட்டத்திலும் எழுந்திருக்கிறது. தலைவர் பிரபாகரன் வருடாந்தம் மாவீரர் தினத்தன்று நிகழ்;…

  17. மட்டக்களப்பில் அமைக்கப்பட்டிருந்த, இந்திய தேசப்பிதாவான மகாத்மா காந்தியின் சிலை உடைக்கப்பட்டமைக்கு இந்தியா கடும் ஆட்சேபத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளதுடன் இச்சிலையை மீளமைப்பதற்கு உதவ வழங்கவும் முன்வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் ஆட்சேபத்தை தெரிவித்ததாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.இச்சிலைஉடைப்பு குறித்து விசாரணை நடத்துமாறு சம்பபந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்துமாறு அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர கூறினார். மட்டக்களப்பில் இனந்தெரியாத குழுவினால் அழிக்கப்பட்ட 5 சிலைகளுள் மகாத்மா காந்தி சிலையும் ஒன்றாகும்.இந்தியாவின் ஆட்சேபனையின் பின்னர், இச்சிலையுடைப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்த…

  18. சிறிலங்காவுக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்துக்கு இந்தியா எதிர்ப்பு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையில் சிறிலங்காவுக்கு எதிரான வரைவு தீர்மானத்தை எதிர்க்கும் நிலைப்பாட்டை இந்தியா கைவிட வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் ஆசிய மனித உரிமைகள் ஆணையம் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தில் சிறிலங்கா தொடர்பில் வரைவுத் தீர்மானத்தை பின்லாந்து கொண்டுவந்துள்ளது. இந்தத் தீர்மானத்தை எதிர்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது கவலையளிக்கிறது. பின்லாந்தின் தீர்மானத்தை ஏற்பது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் சபை நாளை முடிவு செய்ய…

  19. இலங்கையில் போரை நிறுத்தம் ஏற்பட வழிவகுக்குமாறு இந்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் விடுத்து சட்ட மன்றத்தில் வெள்ளிக்கிழமை (23.01.09) முதல்வர் கருணாநிதி தீர்மானம் முன்மொழிகிறார் நன்றி: நககீரன்

  20. நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படும் திரிபோஷாவில் நச்சுத்தன்மை – இலங்கையர்களுக்கு பேரிடியான தகவல் நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களில் இருந்து சிசுக்கள் மற்றும் தாய்மார்களுக்கு விநியோகிக்கப்படும் திரிபோஷாவில் விஷம் கலந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். திரிபோஷவில் அடங்கியிருக்க வேண்டிய அளவை விட அஃபலரொக்சின் அளவு அதிகமாக இருப்பதன் காரணமாக திரிபோஷ தயாரிப்பு நிறுவனம் அவற்றை சேகரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மாதம்பையில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார். நச்சுத்தன்மை வாய்ந்…

  21.  உதயசிறி விடுதலையானார் சிகிரியா சுவரோவிய சுவரில் எழுதினார் என்ற குற்றச் சாட்டின் பேரில் சிறைப்பட்டிருக்கும் சித்தாண்டி யுவதி சின்னத்தம்பி உதயசிறி இன்று வியாழக்கிழமை காலை எட்டு மணிக்கு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் உதயசிறிக்கு ஏப்ரல் மாதம் முதலாம் திகதியன்றே ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார். எனினும், உதயசிறியை உடனடியாக விடுதலை செய்வதற்கு அவர் சார்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று புதன்கிழமை வரை அவரது விடுதலைக்கு தடையாக இருந்து வந்தது. இந்நிலையில் உதயசிறி, சார்பில் வழக்குத் தொடர்ந்த நல்லாட்சிக்கான மனித உரிமைகள் இயக்கமும், மனித உரிமைகள் …

    • 17 replies
    • 1.4k views
  22. மோடி பதவியேற்பு விழாவில் மஹிந்த பங்கேற்பு கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 மே, 201 Twitteroogle+ நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை ஜனாதிபதி கலந்து கொள்வார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, எதிர்வரும் திங்கட்கிழமை(26.5.14) பிரதமராகப் பொறுப்பேற்கிறார். அந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு தெற்காசிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதை ஏற்றுக் கொண்டு பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வார் என, புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூத…

  23. தன்னைப் படுகொலைச் செய்ய சதிசெய்வதாக இந்தியப்புலனாய்வு அமைப்பு மீது ஜனாதிபதி சிறிசேன குற்றச்சாட்டு. நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன தன்னை இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோ படுகொலைசெய்ய முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனாலும் பிரதமர் நரேந்திர மோடி இந்தத் திட்டம் தொடர்பாக ஒருவேளை அறிந்திருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளதாக அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறியபோது தாம் அதிர்ச்சியடைந்ததாக தம்மை இனங்காட்டிக் கொள்ள விரும்பாத அந்த வட்டாரத்தினர் கூறியுள்ளனர். இந்த விடயத்தினை உறுதிப்படுத்துவதற்…

    • 17 replies
    • 1.5k views
  24. மிருசுவில் படுகொலை குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். 2000ம் ஆண்டு மிருசுவில்லில் இடம்பெற்ற 8 தமிழர்களின் படுகொலை தொடர்பில் இராணுவ சிப்பாய் ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. சிறிலங்காவின் சட்டத்தில் மரண தண்டனை இருக்கின்ற போதும், அது நிறைவேற்றப்படுவதில்லை. இந்த நிலையில் குறித்த சிப்பாயும் மரண தண்டனை பெற்றுள்ள போதும், அவர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து ஒரு காலத்தில் விடுவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே அவருக்கான மரண தண்டனையை நிறைவேற்றுவதன் மூலமே இந்த படுகொலை சம்பவத்துக்கு நியாயத்தை வழங்க முடியும் என்று அரியநேத்திரன் தெரிவித…

    • 17 replies
    • 900 views
  25. ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை! இஸ்லாம் மதத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டமைக்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. https://athavannews.com/2024/1375370

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.