Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமெரிக்கா சன்பிரான்சிக்கோவில் நடைபெற்ற இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்கள் வயது வந்தோர்கள் மட்டுமே பார்பதற்கு ஏற்றவை. http://picasaweb.google.com/105536458618873064653/SanFranciscoStreetFair20100509?authkey=Gv1sRgCIGNhcDXqeXaqAE#slideshow

    • 13 replies
    • 3.5k views
  2. இலங்கை இராணுவத்தின் தடுப்பு கைதியாக இருப்பதாகவும் நாட்டைவிட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படும் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பிலிருந்து வெளிவருகின்ற தமிழ் நாளிதழ்களினில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரால் நிர்வகிக்கப்படுவதாக கூறப்படும் செஞ்சோலை,அன்பு சிறுவர் இல்லம் மற்றும் பாரதி சிறுவர் என்பவற்றின் பேரினில் வாழ்த்து செய்திகள் பத்திரிகை அலுவலகங்களிற்கு அனுப்பப்பட்டு விளம்பரமாக இன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.இதற்கான விளம்பரக்கட்டணமும் செலுத்தப்பட்டுள்ளது. சூழ்நிலைக்கைதியென சிலதரப்புக்களும் அவராகவே சரணடைந்தவர் என சிலதரப்புக்களும் அவர் பற்…

    • 13 replies
    • 851 views
  3. கடற்கரும்புலி மேஜர் பாலன் உட்பட்ட ஏழு மாவீரர்களின் வீரவணக்க நாள் 28.06.1997 அன்று திருமலைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் தாக்குதலைத் தொடர்ந்து இடம்பெற்ற படகு விபத்தின்போது வீரச்சாவைத் தழுவிய ஆறு மாவீரர்களினதும் இதன்போது படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் தனது நாக்கினை தறித்து தலையை கட்டிலுடன் மோதி தற்கொடை செய்த கடற்கரும்புலி மேஜர் பாலனினதும் வீரவணக்க நாள் இன்றாகும். தென்தமிழீழத்திலிருந்து போராளிகள் படகுகள் மூலம் வன்னிக்கு வந்து கொண்டிருந்தபோது சிறிலங்கா கடற்படையினரால் தாக்கப்பட்டது. இதன்போது ஒரு விபத்திற்குள்ளாது. படகு விபத்தைத் தொடர்ந்து நீந்திக் கரையையடைந்த கடற்கரும்புலி மேஜர் பாலன் மயங்கிய நிலையில் படையினரால் கைது செய்யப்பட்டார். படையினரின் தடுப்பில் …

  4. இலங்கையில் தற்போது தோன்றியுள்ள நிலைமைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியமும், இந்தியாவும் நேற்று கூட்டாக இந்திய தலைநகர் புதுடில்லியில் கலந்து ஆலோசித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 13 replies
    • 2.8k views
  5. நாட்டினுடைய சுதந்திர தின நாள் தமிழர்களின் வாழ்வில் கரிநாள் – சுமந்திரன் ஜனநாயகம் என்ற போர்வையிலே பேரினவாத ஆட்சி காரணமாகவே சுதந்திரம் கிடைத்தும் 75 ஆண்டுகளாக தமிழர்களுக்கு சுந்தந்திரம் கிடைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சிங்கள மக்களுக்கு அரசியல் சுதந்திரம் இருந்தாலும் இன்றைய சூழ்நிலையை பார்க்கின்ற பொழுது சிங்கள மக்களுக்கும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்பது தெட்டத் தெளிவாககின்றது என்றும் குறிப்பிட்டார். சுதந்திரதினம் என்ற போர்வையில் வெவ்வேறு நிகழ்ச்சி நிரல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை நாடும் கடனாளியாக இருக்கின்றது நிலையில் 75வது சுதந்திர தினத்தை ஜனாதிபதி கொண்டாட வ…

  6. தமிழரசுக் கட்சியின்(TNA) தேசியப் பட்டியல் தொடர்பிலான சர்ச்சை நிலைகள் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் தற்போது வலுப்பெற்று வருகிறது. எனினும் தமது கட்சிக்கு கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கான உறுப்பினர்களின் பெயர்களை அக்கட்சி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அந்த நியமனங்களில் ஒருவராக கருதப்படும் பா. சத்தியலிங்கத்தினது உள்வருகையானது முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரனின் திட்டமிடலின் ஒரு அங்கம் என்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. அந்த வகையில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மா. இளம்பிறையன் தமிழரசுக் கட்சிக்குள் இடம்பெறும் பல்வேறு முரணான கருத்துக்களை எடுத்துரைத்திருந்தார். மேலும், சுமந்த…

      • Thanks
      • Haha
    • 13 replies
    • 870 views
  7. வீரகேசரி நாளேடு 8/31/2008 7:29:38 PM - சென்னை, காமராஜருக்கும், எம்.ஜி.ஆருக்கும், மூப்பனாருக்கும், நெடுஞ்செழியனுக்கும் துரோகம் இழைத்தவர் முதல்வர் கருணாநிதி தான் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். முதல்வர் கருணாநிதியை விமர்சித்து நெடுமாறன் கட்டுரை எழுதியிருந்தார். இதற்குப் பதிலாக கவிதை மூலம் நெடுமாறனை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார் கருணாநிதி. அதற்கு விளக்கம் அளிப்பதாக குறிப்பிட்டு நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, முத ல்வர் கருணாநிதி அடுத்தமுறை, தான் முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை என கூறியதை விமர்சித்து நான் எழுதிய கட்டுரையில் எழுப்பப்பட்ட வாதங்களுக்கு எவ்வித பதிலும் கூற…

    • 13 replies
    • 2.3k views
  8. கொழும்பு துறைமுகத்திலிருந்து 9.5 கடல் மைல் தொலைவில் தீப்பற்றி எரியும், எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல், கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிக்க முன்னதாக இந்தியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிலுள்ள இரு துறைமுகங்களுக்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளதாகவும் எனினும், குறித்த இரண்டு துறைமுகங்களுக்குள் பிரவேசிக்க இக்கப்பலுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கவில்லை எனவும் எக்ஸ்பிரஸ் பேர்ல் நிறுவனத்தின், நிறைவேற்றுப் பணிப்பாளர் டிம் ஹார்ட்னொல் புது தகவலை வெளியிட்டுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போது, இதனைத் தெரிவித்த அவர், இந்த கப்பலில் ஏற்றிச்செல்லப்பட்ட இரசாயன திரவியம் கசிந்ததால் இந்த தீ ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார். இந்த கப்பலில் ஏற்றிச்செல்லப்பட்டிருந்த 1,4…

  9. தமிழீழ மண் மீட்ப்புப் போரில் வீரச்சாவை தழுவிக் கொணட மாவீரர்களுக்கு என் வீரவணக்கம். எல்லோரும் அவர்களின் கனவை விரைவாக்க இன் நாளில் முழுவீச்சாக செயல்படவேண்டும். - போரியல்(இராணுவம்), அரசியல், பொருளியல்(பொருளாதாரம்), மற்றும் மக்கள் பலப்படுத்தப்படவேண்டும். - சிறீலங்காவின் பொருளியலை பலவீனப்படுத்தப்படவேண்டும். புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் சிறீலங்காவுக்கான ஏற்றுமதி மற்றும் அன்னிய செலவாணியைக் குறைக்க வேண்டும். உங்கள் எல்லோரின் ஆக்க பூர்வமான கருத்துக்களை எதிர்பார்த்து நிற்கின்றேன். - நன்றி -

    • 13 replies
    • 3.1k views
  10. வடக்கு கிழக்கு மக்கள் எதிர்வரும் தேர்தலில் எங்களுக்கு ஆணை வழங்க வேண்டும் – கஜேந்திரகுமார் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இதனை உள்ளூராட்சி தேர்தலாக கருதாமல் ஆணை வழங்கும் தேர்தலாக கருத வேண்டும் என அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். சமகாலநிலை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள விரும்பாது. தேர்தல் எதையும் வைக்காமல் இருந்தால் சர்வதேசம் தவறாக கருதும் என்ற அடிப்படையில் உள்ளூராட்சி தேர்தலை அறிவித்து பின்னர் வழக்குகளை தாக்கல் செய்து தேர்தலை இழுத்தடிக்க முற்படலாம். நாட்டின் பொருளாதார நெருக்கடியில்…

    • 13 replies
    • 819 views
  11. ஈழத்தமிழர் சிறந்த வெளிநாட்டவராக நோர்வேயில் தெரிவு. நோர்வேயின் பத்து முதன்மை (TOP10) வெளிநாட்டவர்களில் ஒருவராக, தமிழரான மூத்த பொறியியலாளர் ஸ்ரீவன் புஸ்பராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். நோர்வே சமூகத்தின் சமூகக் கலாச்சார மற்றும் தொழில்சார் விடயங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய 10 முதன்மையான வெளிநாட்டவர்களை வருடந்தோறும் சுயாதீனமாக ஓர் அமைப்பு தெரிவு செய்து வருகிறது. 16 வயதிற்கு மேல் நோர்வே நாட்டுக்குப் புலம்பெயர்ந்து, மற்றைய வெளிநாட்டவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் தலைமைத்துவ பண்புகளைக் கொண்ட வெளிநாட்டவர்களையே இவ் அமைப்பு தெரிவு செய்து வருகிறது. இவ்வமைப்பு முதன்மையான வெளிநாட்டவர்களில் ஐந்து ப…

    • 13 replies
    • 1.5k views
  12. இலங்கை அரசை கை விட்டது இந்தியா! ஆதரவு திரட்டித்தர மறுப்பு!- அதிர்ச்சியில் உறைந்துள்ள கொழும்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தனக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையைத் தோற்கடிக்க உதவுமாறு இலங்கை அரசு இராஜதந்திர மட்டத்தில் இந்தியாவிடம் விடுத்த வேண்டுகோளை புதுடில்லி நிராகரித்துள்ளது என நம்பகரமாகத் தெரியவருகிறது. ஜெனிவா மாநாடு நெருங்கிவரும் நிலையில், அவசரமாகக் கொழும்பிலிருந்து புதுடில்லிக்குச் சென்ற உயர்மட்ட இராஜதந்திரிகள் குழுவொன்று, அந்நாட்டின் உயர்மட்டத் தூதுக்குழுவிடம் விடுத்த வேண்டுகோளை சாதகமான முறையில் பரிசீலிப்பதற்கு இந்தியா மறுத்துவிட்டது என்று அறியமுடிகின்றது. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை ஆதரிப்பதற்கு பலம்பொருந்திய நாடுகள் சில தீர்ம…

  13. இலங்கைத் தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் காப்பதற்காக இலங்கையில் மீண்டும் போர் மூளும் என்றும் அதை பிரபாகரன் தலைமையேற்று நடத்துவார் என்றும் மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் விழிப்புணர்வு பிரசாரப் பயணம் ராமேஸ்வரத்தில் இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வைகோ பேசியது: 1983-ல் இருந்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது. இலங்கையில் உரிமைக்காகப் போராடிய லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த அத்துமீறல்களை நடத்திய இலங்கையை நமது மத்திய அரசு எச்சரிக்கவில்லை. இந்தச் சூழலில் நாதியற்று கிடக்கும் தமிழக மீனவர்களையும் ஈழத் தமிழர்களையும் பாதுகாக்க இலங்கையில் மீண்டும் போர…

    • 13 replies
    • 2.3k views
  14. நேற்றிரவு போர்க்களமானது யாழ். ஐந்து சந்தி! – மோதலில் மோட்டார் சைக்கிள், சைக்கிள் எரிப்பு. Top News [Monday 2014-12-15 09:00] யாழ்ப்பாணம்- ஐந்து சந்தியில் நேற்றிரவு இருதரப்புகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் பதற்றநிலை ஏற்பட்டது. யாழ்ப்பாணம் நாவந்துறை, ஐந்து சந்தியில் நேற்றுமுன்தினம் முஸ்லிம் இளைஞர் ஒருவருக்கும், இரு தமிழ் இளைஞர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு இடம்பெற்றது. யாழ்ப்பாணம்- ஐந்து சந்தியில் நேற்றிரவு இருதரப்புகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் பதற்றநிலை ஏற்பட்டது. யாழ்ப்பாணம் நாவந்துறை, ஐந்து சந்தியில் நேற்றுமுன்தினம் முஸ்லிம் இளைஞர் ஒருவருக்கும், இரு தமிழ் இளைஞர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து கைகலப்ப…

  15. மன்னார் மறைமாவட்ட ஆயர் – பிரான்சின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கலந்துரையாடல் April 5, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகைக்கும், பிரான்ஸ் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நேற்று வியாழக்கிழமை மாலை மன்னார் ஆயர் இல்லத்தில் நடை பெற்றது. இதன் போது மன்னார் மாவட்டத்தில் காணப்பட்ட மனித புதைக்குழி தொடர்பாகவும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. விசேடமாக இந்தக் கலந்துரையாடலில் முக்கியமாக மன்னார் மாவட்ட மாணவ மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்கான உதவிகள் தொடர்பாகவும், இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாகவும், அபிவிருத்தி வ…

  16. 13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது. September 26, 2020 சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கையின் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது கட்டாயமானதென இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் மகிந்த ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளார். காணொளி தொழில்நுட்பத்தினூடாக இருநாட்டு பிரதமர்களுக்கும் இடையில் இன்று முற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பாரத பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். மகிந்த ராஜபக்ஸ பிரதமராக பதவியேற்றதன் பின்னர் அரச தலைவர் ஒருவருடன் இடம்பெற்ற முதலாவது காணொளி கலந்துரையாடல் இதுவாகும். வலய மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் இன்றைய கலந்துரையாடலின்…

  17. 2012 க.பொ.த சா/த தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு 2012 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர சாதாரணத்தரப்பரீட்டை பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, இணையத்தளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிடுவோருக்கு பரீட்டைகள் திணைக்களத்தினால் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. 1 உங்களது பெறுபேற்றினைத் தெரிந்துக்கொள்வதற்கு உங்களது பரீட்சைச் சுட்டெண்ணைத் திருத்தமாக உட்படுத்துக. வேறொரு சுட்டெண்ணை உட்படுத்துவதால் வேறொருவரது பெயரும் பெறுபேறும் பெறப்படும். 2 இப்பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் முறைப்பாடுகளோ விசாரணைகளோ இருப்பின், இலங்கை பரீட்சைத்திணைகளத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளது. மூலம்/ஆக்கம் :…

  18. மஹிந்தவும் நானும் இணைவோம் ; சம்பந்தன் (க.கமலநாதன்) எமது நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் சம உரிமை கொண்ட ஒரே மக்களாவர் . இந்த நாடு என்றும் பிளவுபடவும் கூடாது. எமது பிரச்சினைகளையும் இலகுவாக தீர்த்துக்கொள்ள முடியும். எனவே அதனை புரிந்துக்கொண்டு முன்னாள் ஜனாதிபதியும் நானும் இணைந்து ஆட்சிபுரிய வேண்டும் என்று விரும்புகின்றேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் வினைச்சொற்கள் விபரித்தல் என்ற தலைப்பில் ஜுலம்பிட்டியே மங்கள தேரரினால் இன்று மேல்மாகாண காலாசார சதுக்கத்தில் இடம்பெற்றது இந்நிழ்வில் விசேட விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு…

  19. இலங்கை கடற்படை அட்டூழியம்: கலைஞர் கண்டனம் நேற்று இரவு கடலில் மீன் பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம் மாவட்டம், வெல்லப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் என்ற மீனவர், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இது குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’7-7-2010 பிற்பகல் 12 மணி அளவில் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு காவல் சரகத்தைச் சேர்ந்த வெல்லப்பள்ளம் கிராமம், மீனவர் காலனியைச் சேர்ந்த செல்லப்பன் உள்ளிட்ட நான்கு பேர் கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் இருபது கடல் மைல் தொலைவில் இரவு பத்து மணி அளவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை க…

    • 13 replies
    • 1.2k views
  20. 2011 உலக கிண்ண போட்டிகளுக்காக மூன்று கிரிக்கெட் விளையாட்டு அரங்கங்களை அமைப்பதற்காக பெற்றுக்கொண்ட கடன்களை செலுத்தவதற்கு 16 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நாடாளுமன்றில் நேற்று தெரிவித்தார். நீர்ப் பிரச்சினை காணப்படும் இந்த பகுதியில் நீர்ப்பாசன குளங்களை அபிவிருத்தி செய்யாமல் அரசாங்கம் விளையாட்டு மைதானங்களை அமைத்து பெருந்தொகை பணத்தை வீனடித்து விட்டதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார். சூரியவெவ விளையாட்டு மைதானத்தில் சர்வதேச போட்டிகளும் பாடசாலைப் போட்டிகள் மட்டுமே நடைபெறுவதால்…

  21. ஒரு கிலோகிராம் புண்ணாக்கின் விலை, ஆயிரம் ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சந்தைகளில் 1,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் புண்ணாக்கு, தற்போது 2,800 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Tamilmirror Online || புண்ணாக்கின் விலையும் அதிகரிப்பு

  22. [TamilNet, Saturday, 16 December 2006, 05:41 GMT] S. Raveenthranath, the Vice Chancellor of the Eastern University of Sri Lanka (EUSL), who was forced to resign his post recently following threats from paramilitary Karuna Group that abducted a Deen of the EUSL demanding the resignation of the Vice Chancellor, was reported missing since 01:15 p.m. Friday, Dehiwale Police in Colombo said. The VC was reported missing in High Security area in the Bauddhaloka mawatta. Mr. Raveendranath, who was working at University Grants Commission (UGC) where he had submitted his resignation, was on his way to attend a meeting at Vidya Mawatta near Bauddhaloka mawatta when he w…

  23. (எம்.எப்.எம்.பஸீர்) சிசேரியன் மகப்பேற்று சத்திர சிகிச்சைகளின் இடைநடுவே, வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் பெண்களுக்கு சட்ட விரோதமாக கருத்தடை அல்லது பலோப்பியன் குழாய்களில் தடையை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதை தாம் ஒரு போதும் காணவில்லை என குருணாகல் வைத்தியசாலையின் - சத்திரசிகிச்சைக் கூட தாதியர்கள் 69 பேர் சி.ஐ.டி.க்கு வாக்கு மூலமளித்துள்ளனர். சிசேரியன் சிகிச்சைகளின்போது அங்கு இருக்கும் ஏனைய வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு தெரியாமல் இவ்வாறான நடவடிக்கைகளை ஒரு போதும் முன்னெடுக்க முடியாது எனவும் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர். சட்ட விரோத கருத்தடை விவகாரம் …

    • 13 replies
    • 1.2k views
  24. பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் அத்வானி பாராளுமன்ற தேர்தலுக்கான பாரதிய ஜனதாவின் பிரச்சாரத்தை இன்று இரவு நாகர்கோயில் நாகராஜ திடலில் ஆரம்பித்தார். இரவு 8மணிக்கு பேச்சை ஆரம்பித்தவர் 8.45க்கு பேச்சை முடித்தார். அவர் பேசும்போது, ’பிஜேபி ஆட்சி அமைத்தால் தமிழர் வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 100 நாட்களில் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டும்’ என்று தெரிவித்தார்.

    • 13 replies
    • 1.4k views
  25. வன்னியில் பொது மக்கள் மீதான விமானத் தாக்குதல்களை கண்டித்து லண்டனில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட வுள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை லண்டன் நகரில் உள்ள பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டிடத்தின்; முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை நடைபெறவுள்ள போராட்டத்தில் அனைவரையும் பங்கேற்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடைகால விடுமுறை கழிந்து எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் பிரித்தானிய நாடாளுமன்றம் கூடுவதால், அதிகளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வருகை தரும் நேரத்தில் இந்தப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக பிரித்தானிய தமிழர் பேரவையின் பேச்சாள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.