Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. முதலமைச்சர் பதவி தொடர்பாக இணக்கப்பாடு ஏற்படாததே இந்த தோல்விக்குக் காரணம் என இரு தரப்பும் கூறுகின்றன. கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம் தொடர்பாக இன்று வரை இரு தரப்பினருக்குமிடையில் மூன்று சுற்றுப் பேச்சுக்கள் நடந்துள்ளன. இறுதியாக இன்று திங்கட்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பும் இணக்கப்பாடு இன்றி தமது பேச்சுவார்த்தையே முடிவுக்கு கொண்டு வந்துள்ளன. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் தமது கட்சிக்குமிடையிலான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தோல்வி காரணமாக நாளை உத்தேசிக்கப்பட்…

    • 11 replies
    • 871 views
  2. இரா.சம்பந்தன் எங்களுடைய அரசாங்கத்திலும் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகிப்பார் October 31, 2018 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தங்களுடைய அரசாங்கத்திலும் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகிப்பாரெனத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 54 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த தங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டுமென தாம் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்த போதும் நல்லாட்சி அரசாங்கம், 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே எதிர்க்கட்…

    • 11 replies
    • 1.2k views
  3. அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபை முறைமையினை உடனடியாக முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலையும் வடக்கிற்கு இடைக்கால நிர்வாக சபையினையும் ஏற்படுத்த சர்வகட்சி பிரதிநிதிகளும் கட்சித்தலைவர்களும் முடிவெடுத்த நிலையில் அதனை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இறுதி தீர்வு நோக்கிய நடவடிக்கையினை விரைவுபடுத்தவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

  4. ஈபிடிபியின் தலைமைப் பணிமனையான யாழ்ப்பாணம் சிறீதர் திரையரங்கில் ஈபிடிபியின் முக்கிஸ்தர்கள் இருவர் ஒருவருடன் ஒருவர் மோதிக் கொண்ட சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்.மாநகரசபையில் அங்கம் பெறுகின்ற ஈபிடிபி உறுப்பினர்களுக்கான ஒன்று கூடல் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள ஈபிடிபி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றிருக்கின்றது. நிகழ்விற்கு ஈபிடிபியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) தலைமை தாங்கினார். நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் உரையாற்றிய பொழுது, யாழ்.மாநகர சபையின் பிரதி முதல்வர் றீகன் உரை நிகழ்த்தியிருக்கின்றார். அவர் தனது உரையில், யாழ்.மாநகர சபையும் ஈபிடிபி கட்சியும் முற்றுமுழுதாக வியாபார நோக்கத்துடனேயே செயற்பட்டு…

  5. இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக விடுதலைப்புலிகளின் முன்னால் போராளி எழிலனின் மனைவி ஆனந்தி தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்தார். இம்மாதம் வருகை தரவுள்ள நவநீதம்பிள்ளையை அவர்களைச் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது ஒரு குறிப்பிட்ட சில நேரம் காணமல்போனவர்கள் உறவுகளைச் சந்திக்க நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யுத்தத்தின் சாட்சியமாக நாங்கள் இருப்பதால் காணமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அவரின் நேரடிக்கவனத்திற்கு கொண்டு வருவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?…

    • 11 replies
    • 1.3k views
  6. முதல்வர் விக்னேஸ்வரனுக்கு பகிரங்க கடிதம் – ஜெயபாலன் *‘போர்க்குற்ற விசாரணை நடத்தாவிட்டால் பொறுமை இழக்க நேரிடும்’’ என இலங்கைக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. *இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் அடையாளம் காட்டப்பட வேண்டும். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதுதான் நம்முடைய கோரிக்கை. தொடர்ந்து நாம் அந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம்.- நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை இராணுவத்தின் பாலியல் வன்முறைகள் இனக்கொலைகள் தொடர்பாக உலகின் எதிர்ப்பு வலுவடைந்து வருகிறது. விசாரணைகளுக்குக்கூட இலங்கை அரசு இன்னும் தயாராக இல்லை. தமிழ் மாணவ மாணவிகள் போரின் மனவடுக்களில் இருந்து இலங்கை இராணுவத்தின் கொலை பாலியல் வல்லுறவுப் பயத்தில் இருந்து இன்னமும் மீழவில்ல…

  7. முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) பொய் கூறி திரிவதாக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பிமல் ரத்னாயக்க(Bimal Ratnayaka) குறிப்பிட்டுள்ளார். மேலும், சுமந்திரனுக்கோ, சிறீதரனுக்கோ, டக்ளஸூக்கோ யாருக்கென்றாலும் எமது அரசாங்கத்தில் பதவிகள் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பொய் கூறும் டக்ளஸ் தொடர்ந்தும் தெரிவிக்கையில், மக்களின் காணி மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. உண்மையில் பாதுகாப்பு பிரச்சினை இல்லையென்றால் மக்களின் காணிகளை கையளிக்குமாறு நாங்கள் படைத் தளபதிகளுக்கு அறிவிக்கவுள்ளோம். அதற்காக மக்…

  8. http://www.e-jaffna.com/archives/56077 இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம்! பணிகளை ஆரம்பித்தது தமிழ் மக்கள் பேரவை உப குழு! Written by Chief Editor | January 2, 2016 | Comments Off on இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம்! பணிகளை ஆரம்பித்தது தமிழ் மக்கள் பேரவை உப குழு! வடகிழக்கு தமிழர்களின் நீண்டகால் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தமிழ் மக்கள் அவை உருவாக்கிய அரசியல் தீர்வு திட்டத்தை தயாரிப்பதற்கான உபகுழு இன்றைய தினம் உத்தியோகபூர்வமான தமது பணிகளை ஆரம்பித்துள்ளது.நல்லூர் மற்றும் யாழ்ப்பாணம் பேராலயங்களில் சிறப்பு வழிபாடுகளுடன் பணிகளைத் தொடங்கியுள்ளன. தமிழ் மக்கள் அவை மிகுந்த விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் மத்தியில் கடந்த வருடம் டிசம்பர் …

    • 11 replies
    • 756 views
  9. மனிதம் தலைகுனிந்துவிட்டது : யாழில் இடம்பெற்ற துன்பியல் சம்பவம் ( காணொளி இணைப்பு) ( மயூரன் ) யாழ் நகரிலுள்ள உணவகமொன்றின் முன்பாக யாசகர் ஒருவரை உணவகத்தில் வேலை செய்யும் நபர் ஒருவர் நீர் ஊற்றி துரத்தும் காணொளி காட்சிகள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது. குறித்த கடை முன்பாக யாசகம் பெற்றுவந்த வயோதிபரை கடையில் வேலை செய்யும் நபர் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நோக்குடன், நீரினை அவர் மீது ஊற்றி அங்கிருந்து அவரை அப்புறப்படுத்தியுள்ளார். http://www.virakesari.lk/article/12586

  10. ஜனாதிபதி சற்றுமுன் லண்டன் பயணம் வீரகேசரி இணையம் 11/29/2010 4:17:36 PM ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ சற்று முன் லண்டன் சென்றடைந்தாக விமான நிலைய செய்தியாளர் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி நாளை லண்டனுக்கு விஜயம் செய்வார் என குறிப்பிட்ட போதும் ஜனாதிபதி இன்று மாலை 4.15 மணியளவில் யு.எல்.509 என்ற விஷேட விமானத்தில் சென்றடைந்தாக மேலும் தெரித்தார்.

    • 11 replies
    • 1.3k views
  11. அருந்தவபாலன் ‘….’ சாதி; நீங்கள் எந்த சாதியென கூற முடியுமா?; விக்னேஸ்வரன் எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார்: பொ.ஐங்கரநேசன் அதிர்ச்சி தகவல்! by PagetamilApril 14, 2023 அருந்தவபாலன் “….“ சாதியென சொல்கிறார்கள். உங்களைப்பற்றியும் சொல்கிறார்கள். நீங்கள் என்ன சாதியென குறிப்பிட முடியுமா என க.வி.விக்னேஸ்வரன் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் என, தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஐங்கரநேசன் குறிப்பிடுகையில், விக்னேஸ்வரனை அகற்ற வேண்டுமென தமிழ் அரசு கட்சியின் ஒரு அணி விரும்பியது. விக்னேஸ்வரனை அப்போது கவர்ச்சியான வேட்பாளராகத்தான் அப்போது நினைத்தேன். ஆனால் இப்பொழுது வேறு விதமாக அப்பிராயமுள்ளது. விக்னேஸ்வரனை…

    • 11 replies
    • 1.1k views
  12. தமது உறுப்பினர்களை கொலை செய்யும் விடுதலைப்புலி;களை கைது செய்ய கருணா அரசிடம் கோரிக்கை : கிழக்கில் தமது உறுப்பினர்களை கொலை செய்யும் விடுதலைப்புலி உறுப்பினர்களை உடனடியாக கைதுசெய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கருணா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில தினங்களில் மாத்திரம் தமது கட்சியை சேர்ந்த சுமார் 15 உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளதாகவும் கிழக்கில் வன்முறையை நிறுத்த அவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தை முழுமையாக விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றி, ஜனநாயகத்தை ஸ்தாபித்துள்ள வேளையில், விடுதலைப்புலிகள் சிற்சில இடங்களில் இருந்து கொண்டு இவ்வாறான கொலைகளை செய்து வருவதால், க…

  13. மூன்று மாணவர்கள் விஷம் குடித்தனர் இலங்கையில் போரை நிறுத்த கோரி அமைதி ஊர்வலம் நடத்த அனுமதி வழங்காததால் பெரிய குளத்தில் மூன்று மாணவர்கள் விஷம் குடித்தனர் . அவர்களுக்கு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது . இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது . http://www.dailythanthi.com/FlashNews/FlashNews.html

    • 11 replies
    • 2k views
  14. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் சகாதேவன் மற்றும் பொருளாளர் புஸ்பராஜா புவிலன் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான துண்டுபிரசுரங்களை யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இவர்கள் இன்று காலை முதல் விநியோகித்துள்ளனர். பின்னர் அதை தொடர்ந்து நகரப்பகுதிக்கு செல்ல பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த வேளை அவர்கள் மீது இன்று திங்கட்கிழமை மதியம் 2.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நான்கு மோட்டார் சைக்கிள்களில் தலா மூவராக சென்றவர்களே தாக்குதல்களை நடத்தியதாக சகாதேவன் தெரிவித்தார். தாக்குதல் நடப்பதற்கு சிறிது நேரம் முன்பதாக வாகன தொடரணியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்பகுதியால் சென்றிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்…

    • 11 replies
    • 1.2k views
  15. கிளி நொச்சியில் இராணுவத்திற்குச் சொந்தமான ஆயுதக் கிடங்கு சற்று முன்னர் திடீர் என தீப்பற்றி எரிவதாக தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து வெடிச்சத்தம் கேட்டவாறே உள்ளதாக கூறப்படுகிறது....

    • 11 replies
    • 3.6k views
  16. ஈஸ்டர் தாக்குதல்; நாடாளுமன்றத்தில் சஜித் தெரிவித்த கருத்தால் பரபரப்பு! தாஜ் ஹொட்லில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து அவர் தெரிவித்ததாவது” ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சனல் 4 கருத்து வெளியிடும்முன்னரே நாம், தான் பின்னணியில் உள்ளவர்கள் யார், மூலக்காரணம் என்ன என்பது தொடர்பாக பல தகவல்களை வெளியிட்டிருந்தோம். மலல்கொட அறிக்கையை அரசாங்கம் ஒழித்துக் கொண்டிருந்தது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக தான் இது வெளியே வந்தது.தெரிவுக்குழுவின் அறிக்கையில் பகுதி ஒன்றை மட்டும்தான் எமக்கு பார்க்க முடியும். இரண்டாம் பாகத்தைப் பார்க…

  17. சிங்களவர்களுக்கும் பௌத்தர்களுக்கும் சொந்தமான யாழ்ப்பாணத்தை யுத்தத்திற்குப் பின்னர் மீண்டும் பெற்றுக்கொள்ளும் முயற்சியிலேயே சிங்கள மாணவர்கள் யாழ்பாணத்திற்கு தற்போது செல்கின்றார்கள் என சிரேஷ்ட விரிவுரையாளர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்தார். நேற்றையதினம் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் சிங்கள மாணவர்கள் சிங்களத்தையும் பௌத்தத்தையும் மனதில் வைத்துக்கொண்டே செயற்படுகின்றனர். அங்கு செல்லும் மாணவர்களின் முகநூலைப் பார்த்தால் இதனைப் புரிந்துகொள்ளமுடியும். இவர்களின் இத்தகைய செயற்பாடுகள் சரியா தவறா என விவாதிக்கத் தேவையில்லை. தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களின் வ…

  18. சங்கர் புரம் கண்ணகி அம்மன் கோவிலில் ஆயுத வேட்டை! December 19, 2020 மட்டக்களப்பு வெல்லாவெளி காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட மண்டூர் சங்கர் புரத்தில் உள்ள கண்ணகியம்மன் கோவில் வளாகத்தில், காவற்துறைனர் நேற்று (18.12.20) சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். யுத்தக் காலத்தில் அந்தக் கோவில் வளாகத்தில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக காவற்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்தே காவற்துறைனர் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். நேற்று மாலை வரையில் ஆயுதங்கள் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தபோதிலும், எந்தவிதமான ஆயுதங்களும் காவற்துறைனரால் மீட்கப்படவில்லை. https://globaltamilnews.net/2020/154571/

  19. உலகில் அதிகமாக விஷத்தினை உண்ணும் நாடு இலங்கை – விசேட வைத்திய நிபுணர் உலகில் அதிகமாக விஷத்தினை உண்ணும் நாடு இலங்கை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெணிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “நாம் உண்ணும் உணவுகளின் தரவுகளுக்கு அமைய உலகில் அதிகப்படியான விஷத்தினை இலங்கையர்கள் உண்கின்றனர். இவ்விடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் உள்ளதால் நான் ஒரு கோரிக்கை விடுக்கிறேன். நாம் 2010ஆம் ஆண்டில் இருந்து இந்நாட்டில் விஷத்தினை சேர்க்க வேண்டாம் என கோருகிறோம். நாடாளுமன்றம் உங்களின் க…

  20. புலியெதிர்ப்பின் அரசியல் – ஆய்வு By : தேசபக்தன்! 1 புலிகளின் அழிவுக்கு முன்பு எமது விடுதலைப் போராட்டத்தில் பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்திய விடயங்களில் கருணாவின் வெளியேற்றமும் அது தொடர்பாக நடைபெற்ற வாதப்பிரதிவாதங்கள் மற்றும் சம்பவங்களும் முக்கிய இடத்தை பெற்றுள்ளன. அதனால் புலியெதிர்ப்பின் அரசியல் என்ற விடயத்தை நாம் கருணாவின் வெளியேற்றம் என்ற விடயத்திலிருந்து தொடங்குவது பொருத்தமனாததாக இருக்கும் என்று நினைக்கிறேன். கருணாவின் வெளியேற்றத்துடன், தமிழ் மக்களது தேசியத்தில் மிகவும் ஆழமாக ஊடுருவியிருந்த பிரச்சனை ஒன்று முன்னுக்கு வந்தது. யாழ்மையவாதமே அந்த பிரச்சனையாகும். ஆனால் இந்த பிரச்சனையை, அதற்கே உரிய அரசியல் தளத்தில் வைக்க முடியாத கருணாவின் அரசியல் வறுமை கார…

  21. வெள்ள நிவாரணத்துக்காகச் சென்ற ஹெலிகொப்டர் விழுந்து நொருங்கியது! (படங்கள்) வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக சென்ற விமானப்படையினரின் ஹெலிகொப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானியின் கட்டுப்பாட்டை இழந்த குறித்த எம்-17 ஹெலிகொப்டர் காலி - பெத்தேகம பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் குறித்த விபத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லைனெவும், ஹெலிகொப்டர் முற்றாக சேதடைந்துள்ளதாகவும் விமானப்படை பேச்சாளர் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/20430

  22. புலிகள் அமைப்பால் மக்கள் உயிருடன் பிடிக்கப்பட்டு மின்விளக்கு கம்பத்துடன் ரயர்களால் கட்டப்பட்டு தீ மூட்டப்பட்டனர். நாங்கள் அவர்களது பாதி எரிந்த உடலங்களைப் பார்த்தோம். நான் இவற்றைப் பார்த்த போது பிரபாகரனின் தலைமைத்துவம் மற்றும் இவரது ஈழம் தொடர்பான கருத்தியல் மீது நான் கொண்டிருந்த மிகக் குறைந்த ஆர்வத்தையும் இழந்தேன் என்று கேணல் ஆர்.ஹரிகரன் தெரிவித்தார். இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படை பணியில் ஈடுபட்ட போது இந்திய இராணுவப் புலனாய்வுத் தலைமை அதிகாரியாகச் செயற்பட்ட கேணல் ஆர்.ஹரிகரன், தான் பெற்றுக் கொண்ட அனுபவம் தொடர்பாக விரிவாக விளக்குகிறார். இது இங்கு செவ்வி வடிவில் வழங்கப்படுகிறது. கேள்வி: நீங்கள் எங்களுடன் இணைந்து கொண்டமைக்கு நன்றி. நீங்கள் கிட்டத்தட்ட முப்பது பத்…

  23. கந்தக்காடு சிகிச்சை நிலையத்தில்... கைதிகளிடையே மோதல் – ஒருவர் உயிரிழப்பு – 500 இற்கும் மேற்பட்டவர்கள் தப்பியோட்டம். பொலனறுவை – கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் கைதிகளிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். 36 வயதான ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 500 இற்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் பொலிஸார் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://athavannews.com/2022/1288931 #…

  24. கல்முனை நோக்கி பயணித்த பேருந்து மன்னம்பிட்டி பாலத்தில் கவிழ்ந்து விபத்து - 9 பேர் பலி Published By: RAJEEBAN 09 JUL, 2023 | 09:40 PM கதுருவலையிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த பஸ் மன்னப்பிட்டி பாலத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 20க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் பொலன்னறுவை மற்றும் கதுருவெல வைத்தியசாலைகளுக்கு எடுத்து செல்லப்படுகின்றனர். மீட்பு பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன https://www.virakesari.lk/article/159613

  25. போர்க்குற்றங்களை இழைத்த படையினரை பிறிதொரு இராணுவக் குழு விசாரணை செய்வதா? - இராணுவ நீதிமன்றத்தை நிராகரித்தார் சம்பந்தன்! சிறிலங்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள இராணுவ நீதிமன்றத்தின் ஊடாக இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பிலான உண்மைத் தன்மைகள் வெளிவரும் என்ற நம்பிக்கை கிடையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன், இப்போரின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்த படைத்தரப்பினரை சிறிலங்காவின் பிறிதொரு இராணுவக் குழு விசாரணை செய்கின்றது என்றால், அதனை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்ப…

    • 11 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.