ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
புனர்வாழ்வு பெற்று வெளியேறியவர்களில் இதுவரை 103பேர் இறந்துள்ளது என்பது ஓர் பாரதூரமான பிரச்சணை இதனை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு செல்லவேண்டிய அவசியம் உண்டு என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இறுதி யுத்தத்தின் பின்பு புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகளில் சமூகத்துடன் இணைக்கப்பட்ட 103பேர் ஒரே விதமான புற்றுநோய் அல்லது மர்மநோயின் காரணமாக இறப்பதனால் இது புனர்வாழ்வு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்காலத்தில் நிகழ்ந்த வைத்தியத்தில் ஏதாவது திட்டமிட்ட மோசடி இருக்குமா என அஞ்சப்படுவது தொடர்பில் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து இறுதி யுத்தத்தின் பின்னர் படையி…
-
- 10 replies
- 1.8k views
-
-
மடுதேவாலயம் முன்னர் பௌத்த விகாரையாகவும பின்னர் இந்து ஆலயமாகவும இருந்தது ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்திலேயே இங்கு மாதா சொரூபம் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாந்தை பகுதி மக்கள் கத்தோலிக்கர்களாக மத மாற்றம் செய்யப்பட்டனர் என எல்லாவெல மோனந்த தேரோ தெரிவித்தார். மடு திருச் சொரூபத்தினை மீண்டும் கொண்டு வருவதற்கு மன்னார் ஆயர் நிபந்தனை விதிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. என்றும் அவர் கூறினார். மடு தேவாலயத்தையும் அண்டிய பகுதியையும் புலிகள் தாக்குதல் மத்திய நிலையமாகவே பயன்படுத்தி வந்தனர். இந்நிலையிலே முப்படையினர் மடுதேவாலயத்தை மீட்டெடுத்தனர். ஆனால் மடுமாத திருச்சொரூபத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு மன்னார் ஆயா தலைமையிலான 30 மதகுருமார்கள் குழு நிபந்தனையை முன்வைத்துள்ளது. இதன…
-
- 5 replies
- 1.8k views
-
-
சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் யுத்த நிறுத்தத்திற்கு விடுதலைப் புலிகள் தயாரென அறிக்கையொன்றின் மூலம் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நாடேசன் தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி தெரிவித்துள்ளது. "தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடனும், உத்தரவாதத்துடனும் கிடைக்குமாயின் விடுதலைப் புலிகள் ஆயுதமேந்தத் தேவையில்லை"என அவர் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச சமூகம் யுத்தநிறுத்தமொன்றினை மேற்கொள்ள சர்வதேச சமூகம் சகல விதமன நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.அத்துடன் இராணுவ நடவடிக்கைகளாலன்றி அரசியல் தீர்வு மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்" எனவும் இணைத்தலைமை நாடுகளுக்…
-
- 9 replies
- 1.8k views
-
-
புலம்பெயர் அமைப்புகள் மீதான... தடையை நீக்கியது, அரசாங்கம். இலங்கை அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ளது. உலகதமிழர் பேரவை மற்றும் அதன் பேச்சாளர் சுரேன்சுரேந்திரன் மீதான தடைகளை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவை, கனடா தமிழ் காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் மீதான தடையையும் இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடை நீக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/133487?fbclid=IwAR0BlNvSchaz2DpfXZ0wQ02QbjM6vj0iuIpB5q6jD6vVobVGxukdp2m28dc
-
- 30 replies
- 1.8k views
- 2 followers
-
-
யாழ். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அனலைதீவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கனேடியப் பிரஜைகளைத் தாக்கிப் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலாளிகள் கொள்ளையிடும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும், ஓர் ஆவணத்தைத் தருமாறு கோரியே தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் தெரியவருகின்றது. கனடாவிலிருந்து 75 வயதுடைய ஒருவரும் அவரது மனைவியும் அனலைதீவிலுள்ள வீட்டுக்கு வந்து நின்றுள்ளனர். அவர்களது வீட்டில் ஏற்கனவே ஆசிரியர் ஒருவர் தங்கியுள்ளார். வாள்களுடன் வந்தவர்கள் அத்துடன் வீட்டு மின் இணைப்பு திருத்தத்துக்காக ஒருவரும் கடந்த 21ஆம் திகதி இரவு அங்குத் தங்கியிருந்துள்ளார். அன்றைய தினம் இரவு வீட்டுக்க…
-
- 24 replies
- 1.8k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் கெரில்லா யுத்தத்தை நடத்தும் அபாயம் உள்ளதாக தலைப்பிட்டு பிரான்ஸ் செய்திச்சேவை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி விபுல் பொட்டேஜேவின் கருத்தாகவும் பிரான்ஸ் செய்திச் சேவை வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிளிநொச்சி நகரமும் படையினரின் கட்டுப்பாட்டில் வரும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையை அடுத்தும்; தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் தின உரையை அடுத்துமே இந்த கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் கெரில்லா யுத்தத்தை முன்னெடுத்தால் அது பாரிய சேதங்களை கொண்டு வரும் என அந்த செய்திச் சேவ…
-
- 6 replies
- 1.8k views
-
-
ஈழத் தமிழர்கள் தமிழகத்தில் சொத்துக்கள் வாங்குவது தடுக்கப்பட்ட வேண்டும் அவ்வாறு நடக்காமல் தமிழகக் காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று கருணாநிதி அறிவித்திருப்பதற்கு தமிழக கட்சிகள் பலவும் தமது கடும் கண்டனத்தை கேசரி வார வெளியீட்டிற்கு தெரிவித்த போது வெளிப்படுத்தியுள்ளன. தமிழகத்தில் பிற இனத்தவர்கள் மட்டும சொத்துகளை வாங்கும் நிலை உள்ளபோது தமிழர்கள் மட்டும் தமிழகதில் சொத்துக்களை வாங்க முடியாதா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறாh தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பழ.நெடுமாறன். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் : பொதுவாக வெளிநாட்டு வாழ் இந்திய வம்சாவளியினர் இந்தியாவில் சொத்துக்கள் வாங்க தடையேது கிடையாது. என்.ஆர்.ஐ எனப்படும் அத்தகைய இந்திய வம்சாவ…
-
- 2 replies
- 1.8k views
-
-
மணலாறு களமுனையில் கடந்த மாதம் 27 ஆம் நாள் வான் புலிகளின் வீசிய 5 குண்டுகளால் சில கட்டடங்களும், 6 வாகனங்களும் சேதமடைந்ததாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே ரைம்ஸ்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.8k views
-
-
Posted on : Fri Jun 15 6:00:32 EEST 2007 பெரும் குண்டுச் சத்தத்தால் நகரில் நேற்று பரபரப்பு நேற்று நண்பகல் 11.45 மணியளவில் யாழ். நகரம் பெரும் வெடிச்சத்தத்தால் அதிர்ந்தது. அது எதனால் உண்டான சத்தம், சம்பவம் எதுவாக இருக்கும் என்பது தெரியாமல் நகரப் பகுதி எங்கும் பெரும் பரபரப்பு நில வியது. கிளைமோர் தாக்குதலாக இருக்குமோ அல்லது குண்டு வீச்சுத் தாக்குதலாக இருக் குமோ என்று ஒருவரை மற்றவர் மாறி மாறி விசாரிக்கும் பதற்ற நிலை பல நிமிட நேரம் தொடர்ந்தது. யாழ். பொலீஸ் நிலையத்தில் வைத்து, குண்டு ஒன்று செயலிழக்கச் செய்யப்பட் டது என்ற தகவல் பரவிய பின்னரே முதலில் உண்டான பரபரப்பு அடங்கியது. யாழ். நீதிமன்ற வழக்கு ஒன்றின் தடயப் பொருளான குண்டு ஒன்று பொலிஸ் நிலையத்துக்குச் சமீபமாக…
-
- 0 replies
- 1.8k views
-
-
வடமாகாண ஆளுநராக திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸை நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அவர் விரும்பினால் அதற்கான நியமனம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை நேற்று சந்தித்து பேசிய அவர் ஆளுநர் விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; வடமாகாண ஆளுநராக பதவியேற்குமாறு முத்தையா முரளிதரனை கோரியிருந்தேன். ஆனால் அவர் அதனை ஏற்பதற்கு மறுத்துவிட்டார். ஆளுநராக பதவியேற்பதற்கு தகுதியானவர்கள் இன்னமும் கிடைக்கவில்லை. தற்போது திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸை நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. …
-
- 15 replies
- 1.8k views
-
-
அலம்பில் கடற்பரப்பில் வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணிமுதல் சிறிலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளிற்குமிடையே கடுமையான மோதல்கள் நடைபெற்றுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்புத் தெரிவித்துள்ளது. ஏழு தாக்குதல் படகுகளும் மூன்று கரும்புலிப்படகுகளும் இந்த மோதலில் பங்கெடுத்தாகவும் அவற்றில் இரு படகுகள் அலம்பில் பகுதியில் தரையிறக்க முயற்சியையும் மேற்கொண்டதாகவும் படைத்தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது மூன்று கடற்கலங்கள் சிறு சேதமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பினால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- 5 replies
- 1.8k views
-
-
கடந்த மாதம் சுவிஸ் நாட்டில் இருந்த குடும்பமாக யாழ்ப்பாணத்திற்கு வந்த நபா் ஒருவா் தனது மனைவியி்ன் தங்கையுடன் தலைமறைவானார். தீவகப் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பத்தில் மனைவி தற்போது தனது கணவனையும் தங்கையையும் தேடி வருவதாகத் தெரியவருகின்று. தலைமறைவான நபருக்கு வயது 38 என்றும் மனைவியின் தங்கைக்கு 20 வயது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மனைவியின் தங்கையுடன் கணவா் வெளிநாட்டில் இருக்கையில் தொடா்ந்து ஸ்கைப்பில் கதைத்து வருவதும் அவளுக்கு பல தடவைகள் தனிப்பட்ட முறையில் பணம் அனுப்பியமையும் தனக்கு தெரிந்திருந்தாலும் தனது கணவா் இந்த நோக்கத்திற்காகத் தான் இவ்வாறு செய்தார் எனத் தெரியவில்லை என மனைவி அழுதபடி உள்ளதாக தெரயவருகின்றது. இரு குழந்தைகளின் தந்தையான குறித்த நபா் தற்போது மனைவியி்ன…
-
- 18 replies
- 1.8k views
-
-
சிறிலங்காவில் படையினருக்கான தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவையினை இராணுவம் ஆரம்பிக்கவிருப்பதாக உயர் படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.8k views
-
-
தலைவரை விட தன்னை பலம் மிக்கவராக காட்ட முயலும் கே.பி ஆக 20, 2010 Font size: Decrease font Enlarge font தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே பிரபாகரன் அவர்களை விட பலம் மிக்கவராகவும் திறமை மிக்கவராகவும் தன்னை காட்டிக்கொள்ள சிறீலங்கா அரசிடம் சரணடைந்த குமரன் பத்மனாதன், அல்லது செல்வராசா பத்மனாதன் முயன்று வருகின்றார். கே.பி சமீபத்தில் கொழும்பில் உள்ள சிறீலங்கா அரசின் ஆதாவு ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில் பல முரணான கருத்துக்களை பதிவு செய்துள்ளதோடு, தலைமை மீது குற்றம் சுமத்துவதோடு புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் செயற்பாட்டினாலேயே தலைவர் வீரச்சாவடைந்ததாக மீண்டும் மீண்டும் தெரிவித்துள்ளார். தோற்றுப்போய்யுள்ள சிறீலங்கா அரசு தமது பிடியில் இருக்கும் சிலரை வைத்து ம…
-
- 5 replies
- 1.8k views
-
-
பொரலஸ்கமுவ பிரதான நீர்வழங்கல் குழாயில் பாரிய வெடிப்பு ஏற்பட்டதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. [Thursday December 07 2006 06:36:20 AM GMT] [யாழ் வாணன்] லபுகமவிலிருந்து கொழும்பிற்கு நீர் விநியோகிக்கும் பிரதான நீர்வழங்கும் குழாயில் நேற்று இரவு 11.30 மணியளவில் பாரிய வெடிப்பு ஏற்பட்டதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பொறலஸ்கமுவ பெலன்விலவிலுள்ள குழாயிலேயே வெடிப்பு சம்பவம் இஅடம்பெற்றுள்ளது.அதி சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் இவ் வெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரும் குண்டு செயலிழக்கும் பிரிவினரும் தெரிவித்துள்ளனர்.. இதனையடுத்து பல்லாயிரக்கணக்கான வீடுகளிற்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.எனினும் இவ் வெடிப…
-
- 6 replies
- 1.8k views
-
-
குடாநாட்டில் திறக்கப்பட்ட புதிய களமுனை -அருஸ் (வேல்ஸ்)- சிறிலங்காவில் நடைபெற்று வரும் போரில் தற்போது ராடார்களின் சொற்பிரயோகங்களும் அதன் பாவனையும் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. இதற்கான காரணியாக அமைந்தவர்கள் வான்புலிகளே. அதாவது விடுதலைப் புலிகளின் வான், கடல் நடமாட்டங்களை அதிக செயற்திறனுடன் அவதானிப்பதற்காக சிறிலங்கா படையினர் தமது ராடார்களின் வலிமையை அதிகரிக்கும் அதே சமயம் அவற்றை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் நிறுவி வருகின்றனர். இந்த அவதானிப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் நெடுந்தீவும் ஒன்று. இது வடபகுதியில் யாழ். குடாநாட்டிற்கு தென்மேற்காக அமைந்துள்ள 7 தீவுகளில் உள்ள பெரிய தீவாகும். நெடுந்தீவு யாழ்ப்பாணத்தில் இருந்து அதிக தொலைவில…
-
- 0 replies
- 1.8k views
-
-
மகிந்த ராஜபக்சவின் பங்காளி நிறுவனமான லைக்கா மொபைல் நிறுவனம் தற்போது தமிழர்களின் தாயகத்திலும் தமிழகத்திலும் எதிர்ப்புக்களை சம்பாதித்து வரும் நிலையில் தற்போது ஐரோப்பாவிலும் தமிழர்களின் எதிர்ப்புக்களுக்கு முகங்கொடுக்க ஆரம்பித்துள்ளது. புலம்பெயர் தேசங்களில் லைக்கா மொபைல் தொடர்பாக தமிழர் அமைப்புக்கள் மௌனமாக இருக்கும் இவ்வேளையில் இவ்வெதிர்ப்பலைகள் ஐரோப்பாவில் பரவலாக ஆரம்பித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக பிரான்சில் தமிழர் வர்த்தக மையங்களிலும் ஏனைய பிரதேசங்களில் பரவலாகவும் லைக்கா மொபைல் நிறுவனத்தின் மீதான எதிர்ப்புக்கள் அவர்கள் ஒட்டும் சுவரொட்டிகள் மீது காட்டப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது. நாளாந்தம் பரவலாக காணப்படும் லைக்கா விளம்பரங்கள் பதாதைகள் இனந்தெரியாத நபர்களா…
-
- 10 replies
- 1.8k views
-
-
சிறீலங்கா வான்படையிருக்கிடையில் மோதல் Sunday, February 20, 2011, 6:32 சிறீலங்கா வான்படையின் தற்பேதைய தளபதி ஏயர் சீஃப் மார்சல் றொசான் குணதிலகா இந்த மாத முடிவுடன் ஓய்வுபெற்றுச் செல்வதால் அடுத்த வான்படை தளபதி யார் என்பதில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாதத்துடன் 55 வயதை பூர்த்திசெய்யும் குணதிலக எதிர்வரும் 28 ஆம் நாளுடன் ஓய்வுபெற்றுச் செல்கிறார். படைகளின் பிரதி பிரதம அதிகாரியாகவும் அவரே பணியாற்றி வருகின்றார். சிறீலங்கா வான்படையின் பிரதம அதிகாரி ஏயர் வைஸ் மார்சல் ஜி எம் பிரேமச்சந்திராவும் ஓய்வுபெறுவதால் அடுத்த வான்படை தளபதி யார் என்பதில் ஏனைய அதிகாரிகளிடம் போட்டி ஏற்பட்டுள்ளது. சிறீலங்கா வான்படையின் மூத்த அதிகாரிகளான ஏயர் வைஸ் மார்சல் எச் டி அபயவிக்க…
-
- 6 replies
- 1.8k views
-
-
இலங்கையில் மீறல்களுக்குப் பொறுப்புக்கூறும் பொறிமுறை அவசியம்! – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அறிக்கை. [Tuesday 2014-09-23 09:00] இலங்கையில் இடம்பெற்ற குற்றச்செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது தவிர்க்க முடியாதது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இளவரசர் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான அவர் நாளை சமர்ப்பிக்கவுள்ள வாய்மொழி அறிக்கையின் வரைவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த கால மற்றும் நிகழ்கால மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் இதில் வலியுறுத்தியுள்ளார். seithy.com
-
- 4 replies
- 1.8k views
-
-
யாழ்.பல்கலைக்கழக மாணவன் லத்தீஸ் கடத்தப்பட்டுள்ளார் 28 நவம்பர் 2011 குளோபல் தமிழ்ச்செய்திகள் : யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவபீட மாணவனான வேதாரணியம் லத்தீஸ் (27 வயது) கடத்தப்பட்ட சம்பவம் மாணவ சூழலிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.நேற்றிரவு யாழ்.திருநெல்வேலியிலுள்ள பாலசிங்கம் விடுதியிலுள்ள தனது சக நணபர்ளை சந்தித்து விட்டு கைதடியிலுள்ள தனது விடுதிக்கு திரும்பிக்கொண்டிருக்கையிலேயே இவர் கடத்தப்பட்டிருக்கலாமென குடும்பத்தவர்கள் சந்தேகிக்கின்றனர். வடமராட்சி கிழக்கு மருதங்கேணியை சொந்த இடமாக கொண்ட இவர் வன்னியில் படையினரால் பிடிக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையிலேயே பூஸா தடுப்பு முகாமிலிருந்து இழுபறிகளின் பின்னர் விடுவிக்கப்பட்டிருந…
-
- 9 replies
- 1.8k views
-
-
ஈழத் தமிழர் கோரிக்கைக்கு ஆப்பு வைக்கும் ஜெயலலிதா! -த.எதிர்மனசிங்கம்- ஈழ தேசம் என்பது இன்று இல்லையாம் அதனால் ஈழத் தமிழர் என்ற இனமும் இல்லையாம். தமிழச்சியே அல்லாத இந்த அழகு சுந்தரிக்கு இப்படி ஒரு அதிசய சிந்தனை எழுவதில் எவருக்கும் வியப்பு ஏற்பட நியாயம் இருக்காது. வெள்ளிப் பணத்துக்கு வெள்ளித் திரையில் ஆட்டம் போட்ட அம்மணிக்கு பூர்வீகம் தமிழ் நாடு அல்ல. அதனால் அவர் தமிழச்சியும் அல்ல. அதனால் தமிழர் இனம் பற்றியும் தமிழர் நாடு பற்றியும் அவருக்கு பட்டறிவு கிடையாது. அவரது படிப்பறிவும் நாடுகள், இனம் அல்லது வரலாறு பற்றியதாக இருக்கும் வாய்ப்பே நிச்சயமாக இல்லை. அதுவல்ல, எமது பிரச்சினை. இங்கு ஈழம், ஈழத் தமிழர் பற்றிய அவரது பொன் மொழிகள் எமது தாய் மண் மற்றும் தமிழ்…
-
- 3 replies
- 1.8k views
-
-
டக்ளஸ் தேவானந்தா விரும்பும் அமைச்சர் பதவி எது? ஜனாதிபதி, பிரதமரிடம் கேட்கத் திட்டம் August 9, 2020 வட மாகாணத்தின் அபிவிருத்தியை மையப்படுத்திய அமைச்சை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோருவார் என்று இக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சராகவே இவர் மீண்டும் நியமிக்கப்படுவதற்கான சமிக்ஞைகளே ராஜபக்ஸக்களிடம் இருந்து கிடைத்து உள்ள நிலையில், வட மாகாண அபிவிருத்தி அமைச்சு என்று ஒன்றை உருவாக்கி வழங்குமாறு கோர உள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு அமைச்சரவை அந்தஸ்து…
-
- 14 replies
- 1.8k views
-
-
-
இலங்கைக்கு போதைப்பொருள்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்கு தம்மாலான அனைத்து முயற்சிகளையும் விடுதலைப் புலிகள் எடுத்துவருவதாக இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரான தம்பியண்ணா தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பாளரான இவர், இந்திப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோதே இந்தத் தகவலை அவர் வெளியிட்டிருப்பதாக இந்திய செய்தி நிறுவனமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் போதைப்பொருள் கடத்தில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை இந்த விசாரணைகளின்போது அவர் மறுத்திருப்பதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1991ம் ஆண்டு தான…
-
- 0 replies
- 1.8k views
-
-
ராஜீவ் கொலையின் உண்மைச் சதி குறித்து இந்தியாவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமியிடம் நார்கோ அனாலிசிஸ் எனப்படும் உண்மை கண்டறியும் சோதனையை நடத்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமியின் ஜனதா கட்சியின் முன்னாள் அகில இந்திய செயலாளர் திருச்சி வேலுச்சாமி வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.8k views
-