Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மீண்டும் யுத்தம் தொடங்கிவிட்டது என்று கிட்டத்தட்ட உறுதியான நிலையில் நார்வே முயற்சியால் இலங்கையில் சமாதானம் ஏற்பட்டது. உடனே புலிகளும் புதிதாக பிடித்த இடங்களைவிட்டு வெளியேறி தங்கள் இடங்களுக்கு திரும்புவதாக அறிவித்தார்கள். கொஞ்சம் பதட்டம் குறைந்து நம்பிக்கை துளிர்த்தது. ஆனால், அன்றே இலங்கை போர் விமானங்கள் குண்டுமழை பொழிய மீண்டும் பதட்டம். எந்த நேரத்தில் எந்த இடத்திலும் குண்டு வெடிக்கலாம் என்னும் நிலை. இந்நிலையில் யாழ்ப்பாணம் எப்படி இருக்கிறது. ஒரு நேரடி ரிப்போர்ட். யாழ்ப்பாணம் மாநகராட்சி நூலகம் எரிக்கப்பட்ட 25ஆவது நினைவாண்டு இந்த வருடம். ஆனால், இப்போது, நூலகம் புதுப்பிக்கப்பட்டு, சிதைக்கப்பட்டதற்கான எந்தச் சுவடும் இல்லாமல் பார்க்க புத்தம் புதியதாக அழகாக இருக்கிறது. கிட்…

  2. உள்நாட்டு விசாரணைக்கு அரசாங்கம் இணங்கியமை சர்வதேச சதி : ஜீ.எல்.பீரிஸ் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பில், உள்நாட்டு விசாரணைக்கு அரசாங்கம் இணங்கியுள்ளமையானது சர்வதேச சதியென முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், தற்போதைய அரசாங்கம் சர்வதேசத்தின் கைப்பாவையாக மாறியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கை இனப்பிரச்சினைக்கு, இன அடிப்படையில் கோட்டாக்களை அறிமுகப்படுத்தி அனைத்து துறைகளிலும் அதனைக் கடைப்பிடித்தாலே போதுமானதென குறித்த செவ்வியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்பிற்கு முரணான வகையில் செயற்படுவதாக குறிப்பிட்ட…

  3. மட்டக்களப்பில் துணை இராணுவக்குழுவின் முன்னாள் ஊடக இணைப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு [திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2008, 08:50 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் பிள்ளையான் துணை இராணுவக்குழுவின் முன்னாள் ஊடக இணைப்பாளர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை இரவு 7:45 மணியளவில் மட்டக்களப்பு கல்லடியில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ராதிகா தேவகுமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகளே துப்பாக்கிச் …

  4. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் உள்ள தமிழ் சிவிலியன்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்க இராணுவப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களின் போது அப்பாவி சிவிலியன்கள் பாதிக்கப்படக் கூடாதென இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்ரனியிடம், இலங்கையின் யுத்த நிலவரம் தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்திய மத்திய அரசாங்கம் வன்னிப் பிரதேசத்தில் உள்ள சிவிலியன்களின் நிலைமை குறித்து அரசாங்கத்திற்கு ஏற்கனவே அறிவித்துள்ளதாக அவர் …

  5. வாக்குச் சீட்டு அச்சிடும் பணி 50 சதவீதம் நிறைவு பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள், அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் எதிர்வரும் நாட்களில் அச்சிடப்படும் என அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே கூறியுள்ளார். இம்முறை பொதுத் தேர்தலுக்காக ஒரு கோடியே 70 இலட்சம் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படவுள்ளன. http://www.tamilmirror.lk/செய்திகள்/வககச-சடட-அசசடம-பண-50-சதவதம-நறவ/175-251878

  6. மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கைவிடுமாறு சிறிலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் துணைப்படைக் குழுவின் தலைவர் பிள்ளையானிடம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு காத்தான்குடியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை குறித்து துணைப்படை பிள்ளையானுடன் ரவூப் ஹக்கீம் இன்று வியாழக்கிழமை தொலைபேசி ஊடாக பேச்சு நடத்தினார். இப் பேச்சு நடைபெற்றதனை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுதிப்படுத்தியுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கைவிடுமாறும் பிள்ளையான் குழு உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்த விரிவான விசாரணைகளை நடத்த தாம் ஒத்துழைப்பதாகவும் பிள்ளையானிடம் தொலைபேசியில் ஹக்கீம் கூறியதாகவும் தெரியவந்துள்ளத…

    • 7 replies
    • 1.8k views
  7. வியாழன் 17-08-2006 18:57 மணி தமிழீழம் [மகான்] அக்கரைப்பற்றில் த.பு.க சுப்பர் மார்க்கட் கருணா குழுவால் அடித்துடைப்பு. மட்டக்களப்பு அக்கரைப்பற்றில் அமைக்கப்பெற்ற தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சுப்பர் மார்க்கட் கட்டிடம் கருணா குழுவினரால் அடித்துடைத்து தேசமாக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 9 மணியளவில் சம்வம் இடம்பெற்றள்ளது. அங்கிருந்த தளபாடங்கள் அடித்துடைக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் அனைத்தும் கிளித்தெறியப்பட்டு நாசமாகியுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  8. யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக போலி வைத்திய சிகிச்சை நிலையங்கள் இயங்கி வருவதாக யாழ்.போதனா வைத்தியசாலை வைத்திய துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இயங்கும் சில வைத்திய சிகிச்சை நிலையங்கள் போலியானவை அங்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியர்களும் போலியானவர்கள். குறிப்பாக பல் சிகிச்சை நிலையங்கள் மூன்று அவ்வாறு இயங்குகின்றன. அங்கு சிகிச்சை அளிக்கும் போலி வைத்தியர்களின் சிகிச்சையினால் பலர் பாதிக்கபப்ட்டுள்ளனர். குறித்த சிகிச்சை நிலையங்களில் போலி வைத்தியர்கள் போலி தாதியர்கள் போலி தொழிநுட்ப உத்தியோகஸ்தர்களே கடமையாற்றுகின்றனர். அந்த வைத்திய சிகிச்சை நிலையங்களோ அங்கு வைத்திய சிகிச்சைக்கு பயன்படுத…

    • 5 replies
    • 1.8k views
  9. நாங்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல! [Tuesday 2020-01-21 08:00] “இந்திய உள்ளிட்ட, சர்வதேச வல்லரசுகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தெரிவித்துள்ளார். அத்துடன் தங்களது உரிமைசார்ந்த கோரிக்கைகளையே தாம் முன்வைப்பதாகவும் அவர் கூறினார். சர்வதேச அரசியல் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வல்லரசு நாடுகளுகளை, தாங்கள் எதிரிகளாக பார்க்கவில்லை என்றும் அவர்களுக்கு எதிரான கொள்கைகளை தாங்கள் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் கூறினார். இந்…

  10. நாட்டின் முழு நிர்வாகமும் இராணுவத்தின் கைக்குள் – ஏற்கமுடியாது என்கின்றார் சுமந்திரன் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது நாட்டின் நிர்வாகத்தை இராணுவத்திடம் தாரைவார்ப்பதற்கு சமானனது என கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், நாடு இராணுவ மயமாவதாக தாம் கூறியபோது அதனை அரசும் அரசுடன் இணைந்த கட்சிகளும் மறுப்பு தெரிவித்ததாகவும் குற்றம் சாட்டினார். நாட்டின் சிவில் நிர்வாகத்தை மேற்கொள்ளும் உள்நாட்டு அலுவல்கள் விடயங்கள் தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் செல்வதானது மிக மோசமான நிலையை ஏற்படுத்தும் அதேவேளை சகல அதிகாரிகளையும் இராணுவம் கட்டுப்படுத்…

  11. புலிகளின் விமானப்படை இந்தியாவுக்கு வலிப்பது ஏன்? (கலைஞன்) ஈழப்பிரச்சினையும் இந்தியாவும் தனது ஜென்ம விரோதியான பாகிஸ்தானின் விமானப் படையைவிட விடுதலைப் புலிகளின் விமானப் படை ஆபத்தானதென காட்டிக் கொள்வது போல் இந்திய அரசின் அண்மைக் கால நடவடிக்கைகள் அமைந்துள்ளதுடன் புலிகளின் விமானப் படையால் தமது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தாக்கப்படலாமென கூறிவருவது தொடர்பில் இராணுவ ஆய்வாளர்கள் ஆச்சரியம் வெளியிட்டுள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு ஏதாவது ஒருவகையில் நெருக்கடி கொடுக்க வேண்டுமென்ற முனைப்புடன் செயற்பட்டு வரும் இந்திய மத்திய அரசு தற்போது விடுதலைப் புலிகளின் விமானப்படை தொடர்பாக தனது கவனத்தை திருப்பியுள்ளது. புலிகளின் விமானப் படை தொடர்பாக கடந்த ப…

  12. திலீபனின் 38வது நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு 15 Sep, 2025 | 12:08 PM ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த “தியாக தீபம்” என அழைக்கப்படும் திலீபனின் 38வது நினைவு தின நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை (15) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. யாழ்ப்பாணம், நல்லூர் பின்வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில், அவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரமான காலை 9.45 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாயின. இந்த நினைவேந்தலின்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, திலீபனின் திருவுருவப் படத்துக்கு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. திலீபன் முன்வைத்த கோரிக்கைகளான 1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத் தீவின் வடக்கு, கிழ…

  13. கே.பி பத்மநாதன் அவர்கள் வெளி நாட்டில் புலம்பெயர் கட்டமைப்புக்களை சிதைக்கும் பணிக்கு ஒத்துக்கொண்டதாலேயே அவர் நடமாட விடப்பட்டுள்ளாராம். டெய்லிமிரர் கோத்தபாய அண்மையில் அமெரிக்காவிடம் புலம்பெயர் மக்கள் எப்படி விடுதலைப்புலிகளுக்கு நிதி உதவி செய்கின்ரார்கள் என்ற விபரங்களையும் புலம்பெயர் கட்டமைப்புக்களையும் அடங்கிய ஆவணத்தை கையளித்துள்ளாராம். - டெய்லி மிரர் இந்த கட்டுரையினை படியுங்கள் மொழி பெயர்ப்பின் சுருக்கம் நாளை தருகின்றேன் http://www.dailymirror.lk/print/index.php/opinion1/16864.html

    • 0 replies
    • 1.8k views
  14. இலங்கையில் உண்மை நிலையை அறிய அனைத்து கட்சியை சேர்ந்த 10 பேர் எம்.பி.க்கள் குழுவை அனுப்புங்கள் என்று முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து, பா.ம.க. சார்பில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே. மூர்த்தி எம்.பி., பொன்னுச்சாமி எம்.பி., பாடலாசிரியர் அறிவுமதி, இயக்குனர் சீமான், ஓவியர் வீரசந்தானம் உள்பட பா.ம.க. எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:- …

  15. வணங்காமண் உணவு கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்தால் அழிக்கும் உரிமை எமக்குள்ளது - கடற்படை வன்னியில் இராணுவத்தின் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கம் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பாத நிலையில் புலம்பெயர் மக்களினால் சேகரிக்கப்பட்ட பொருட்களை கொண்டுவரும் "வணங்காமண்" உணவு கப்பல் மீது தாக்குதல் நடாத்தப்படும் என இலங்கை கடற்படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிரித்தானிய தமிழ் அமைப்பு ஒன்றினால் 2,000 மெற்றித் தொன் உணவுப் பொருட்கள் விடுதலைப்புலிகளின் வணங்காமண் என்ற கப்பலில் கொண்டு வரப்பட உள்ளதாகவும் இந்த தமிழ் அமைப்பு விடுதலைப்புலிகளின் வலையமைப்புடன் சம்பந்தப்பட்டது எனவும் இது குறித்த தகவல்கள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும்…

  16. மகிந்தவின் சகாசங்களும் தந்திரங்களும் எதுவரை? மகிந்த ராஜபக்ச நாட்டின் அதிபராக அவருடைய பிறந்த நாளிலேயே பொறுப்பேற்றார். இப்போது பட்ஜெட் வாக்கெடுப்பும் அவருடைய பிறந்த நாளுடனேயே வந்திருக்கிறது. முன்னைய பிறந்தநாளை அவர் உச்ச மகிழ்ச்சியோடு கொண்டாடினார். இன்னொரு பிறந்த நாளில் அவர் பதற்றத்தோடு இருந்தார். பொதுவாகவே மகிந்த ராஜபக்ச ஒரு சாகசக்காரனைப் போலவே இருக்கிறார். அவர் அப்படித்தான் தன்னையும் கருதிக் கொள்கிறார். அதன்படியே அவர் நடந்தும் கொள்கிறார். ராஜபக்சவின் அரசாங்கம் நித்திய கண்டம் பூரண ஆயுள் என்ற மாதிரியே ஆட்சியிலிருக்கிறது. மகிந்த ராஜபக்சவின் நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் இந்தநிலையை அரசாங்கத்துக்கு ஏற்படுத்தியிருக்கின்றன. தன்னுடைய ஆட்சியைத் தக்கவைக்க வேண்டுமானால் தொடர்ந…

  17. அநுராதபுரம் மருத்துவமனையில் அநாதரவாக இறந்த தமிழ்ப் பெண்- தவிக்கும் பச்சிளம் குழந்தை [வியாழக்கிழமை, 6 செப்ரெம்பர் 2007, 19:48 ஈழம்] [கொழும்பு நிருபர்] கிளிநொச்சி மாவட்டம் பரந்தனைச் சேர்ந்த சுப்பிரமணியம் அனித்தா என்ற பெண் மகப்பேற்றுக்காக அநுராதபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மகப்பேற்றின் பின் இறந்துள்ளார். அவரது சடலம் உறவினர் எவருமே இல்லாத நிலையில் அந்த மருத்துவமனையில் இருக்கின்றது. அவருக்குப் பிறந்த பெண் குழந்தை மருத்துவமனையின் பராமரிப்பில் உள்ளது. பரந்தனைச் சேர்ந்த சுப்பிரமணியம் அனித்தா (வயது 21) கிளிநொச்சி பொது மருத்துவமனையில் கடந்த மாதம் 12 ஆம் நாள் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக வவுனியாவுக்கு அனுப்பப்பட்டு …

  18. இலங்கை பிரச்சனை: தமிழக தீர்மானம் இறுதி எச்சரிக்கையல்ல - காங்கிரஸ் இலங்கை பிரச்சனை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இறுதி எச்சரிக்கையல்ல என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஸ்திவாரிஇ இலங்கை பிரச்சனை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இறுதி எச்சரிக்கையல்ல. திமுக பொதுக்குழு கூடி முடிவெடுக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறட்டும் பார்க்கலாம் என்றார். இலங்கைப் பிரச்சனையில் மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவை திமுக விலக்கிக்கொண்டால்இ காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று செய்தியாள…

    • 0 replies
    • 1.8k views
  19. சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் நினைவஞ்சலி -எம்.றொசாந்த் டெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரத்தினத்தின் 30ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு, அமைப்பின் யாழ். மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் தலைமையில், அன்னார் சுட்டுக்கொல்லப்பட்ட கோண்டாவில் கிழக்கு கோகுலவீதி அன்னங்கை தோட்ட வெளியில் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை இடம்பெற்றது. - See more at: http://www.tamilmirror.lk/171752#sthash.adjj3IMf.dpuf

  20. விக்கியின் கட்சியில் திருமலை முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் ரூபன் தேர்தல் களத்தில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராகவும் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவன பொறுப்பாளராகவும் பின்னர் விடுதலைப்புலிகளின் தலைமை செயலக பொறுப்பாளராகவும் இருந்து சிறப்பாக பணியாற்றிய ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன்) களம் இறங்குகிறார். விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி ஊடாக இவருக்கு ஆசனம் வழங்கப்பட்டுள்ளது. இறுதி யுத்தம்வரை விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து போராடி பின்னர் பின்னர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார். 1985 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளியாக இணைத்துக்கொண்ட ரூபன் 24 வருடங்கள் போ…

    • 18 replies
    • 1.8k views
  21. சிறிலங்காவின் கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்தின் மீது வான்புலிகள் நேற்று நடத்திய கரும்புலி தாக்குதலையடுத்து வானூர்தி நிலையம் சில மணி நேரங்கள் மூடப்பட்டது. அத்துடன் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் தரையிறங்க வேண்டிய வானூர்திகள் அனைத்தும் இந்தியாவிற்கு திருப்பி விடப்பட்டன. வான் புலிகளின் கரும்புலித் தாக்குதலையடுத்து உடனடியாக வானூர்தி நிலைய பணிகள் அனைத்தையும் இடை நிறுத்துமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டது. இதனையடுத்து, கட்டுநாயக்காவில் தரையிறங்க வேண்டிய வானூர்திகள் இந்தியாவிற்கு திசை திருப்பி விடப்பட்டன. குறிப்பிட்ட சில வானூர்தி சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக, கரும்புலிகளின் தாக்குதலையடுத்து நேற்று வெள்…

    • 0 replies
    • 1.8k views
  22. இலங்கைக்கு எதிராக இன்னொரு யுத்தம்!! இராணுவ தளபதி அச்சம் செவ்வாய், 22 பெப்ரவரி 2011 22:56 "இலங்கை மீது எதிரிகளால் மீண்டும் ஒரு யுத்தம் எந்நேரமும் தொடுக்கப்படலாம்.' கொழும்பு கலதாரி ஹோட்டலில் இன்று இடம்பெற்ற Cyber Warfare - 2011மாநாட்டில் கலந்து கொண்டு நீண்ட உரை ஒன்றை ஆற்றியபோது இவ்வாறு தெரிவித்து உள்ளார் இராணுவ தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய. இலங்கை அரசுக்கு எதிராக இணையத் தள பிரசார நடவடிக்கைகளையே இவர் இவ்வாறு வர்ணித்தார். இவர் இவ்வுரையில் முக்கியமாக தெரிவித்து இருந்தவை வருமாறு:- உலகம் பூராவும் உள்ள புலி ஆதரவு சக்திகள் மற்றும் இலங்கைப் படையினருக்கு எதிரான சக்திகள் ஆகியவற்றின் இணையத் தள பிரசார யுத்தத்தை எதிர்கொள்ள வேண்டிய பேராபத்தில் இலங்கை உள்ளது. …

    • 2 replies
    • 1.8k views
  23. தாயக மக்களுக்கு உதவுங்கள்: புலிகள் கோரிக்கை ஈழத்தில் துன்பப்படும் மக்களுக்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஒவ்வொரு உதவ வேண்டிய தலையாய கடமை உள்ளதென தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கூறியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இணைப்பாளர் இராமு சுபன் கையெழுத்திட்டு வெளியாகியுள்ள அறிக்கையில், “வெளிநாடுகளில் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் எவற்றிலும் நாம் ஈடுபடவில்லை. தாயகத்தில் துன்பப்படும் மக்களுக்கு ஒவ்வொரு புலம்பெயர் தமிழரும் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டியது அவர்களின் தலையாய கடமையாகும். தாயகத்து மக்களின் வாழ்வாதாரம் இன்று புலம்பெயர்ந்த தமிழர்களின் கைகளிலேயே பெருமளவு தங்கியுள்ளது. அதேவேளை, அம்மக்களுக்கான உதவிகள் வழங்கப்படும்போது சிறிலங்கா அரசாங்கத…

  24. ‘கோட்டாவே வேட்பாளரென நான் கூறவில்லை’ Editorial / 2019 ஜூலை 22 திங்கட்கிழமை, மு.ப. 09:58 Comments - 0 ‘கோட்டாவே வேட்பாளரென நான் கூறவில்லை’ அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக, கோட்டாபய ராஜபக்‌ஷவை களமிறக்குவதாக, தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று(21) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென, ஒருவர் தெரிவிக்கும் போது, மற்றொருவர் நாட்டில் பாதுகாப்பு இல்லையெனத் தெரிவிப்பதாகத் தெரிவித்த மஹிந்த, சரத் பொன்சேகா மாத்திரமே பயங்கரவாதம்…

  25. [size=3] கனடாவிற்கு குடிவருவது எப்படி என்ற கேள்வி பலரிடமும் இப்போது தக்கி நிற்கிறது. இந்த ஆண்டு முதல் கனடாவிற்குள் அனுமதிக்குப்படும் புதியவர்களின் விவகாரத்தில் பல மாற்றங்களை கனடா ஏற்படுத்தியுள்ளது.[/size][size=3] 2013ம் ஆண்டு கனடாவிற்குள் 260,000 பேரை கனடாவிற்குள் அனுமதிக்க கனடிய குரவரவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதில் தொழில்சார்ந்த பயிற்சியுடைய, கல்வித்தகுதி மற்றும் வியாபார முதலீட்டாளர்கள் என்ற வகையாறவிற்குள் அடங்கங்கூடிய 158,000 பேர் அனுமதிக்கப்படவுள்ளனர். இது முழுத்தொகையின் 62 வீதமாகும்.[/size][size=3] இவ்வாறு வருகை தருபவர்கள் ஐந்து வகையாறாவுக்குள் அடங்குவர். இந்த ஐந்து வகையாறாக்களும், இதற்கான படிமுறைகளும் கனடிய குடிவரவுத் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.