ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143576 topics in this forum
-
கிளிநொச்சிப் பகுதியில் இரவு வேளைகளில் இளைஞர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி, கரடிப் போக்குச் சந்திக்கும் பரந்தன் சந்திக்கும் இடைப்பட்ட ஏ9 வீதிப் பகுதி யில் இரவில் கூடும் இளைஞர் குழுவின் அட்டகாசத்தால் அந்த வீதியால் இரவு நேரத்தில் பயணிப்போர் அச்சத்துடனேயே செல்வதாகக் கூறப்படுகின்றது. இந்த ஏ9 வீதிப் பகுதி தற்போது மக்கள் வசிக்கும் வீடுகள் அற்ற உடைந்த கட்டடங் களும் பற்றைகளும் வயல் வெளிகளும் நிறைந்து காணப்படுகின்றன. வீதியும் இடை யிடையே குன்றும் குழிகளைக் கொண்டதுமாக உள்ளதுடன் இரவில் வீதி விளக்குகள் இன்றி இருள் மண்டிக் காணப்படுகின்றது. இந்த நிலையில் இந்த வீதியில் இரவில் கூடும் இளைஞர் குழு வீதியால் துவிச்சக்கர வண்டி, உந…
-
- 7 replies
- 812 views
-
-
அதிக மாத வருமானம் பெறும் வேட்பாளா்களின் விபரம் வெளியானது! ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் அதிக மாத வருமானம் பெரும் வேட்பாளராக திலித் ஜயவீரவும், குறைந்த மாத வருமானம் கொண்ட வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இலஞ்சம், ஊழல் மற்றும் சொத்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவலுக்கமைய, மௌபிம ஜனதா கட்சியில் இருந்து இவ்வருட ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வர்த்தகர் திலித் ஜயவீரவின் மாத வருமானம் 1 கோடியே 65 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அதிகூடிய மாதாந்த வருமானம் சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ எனவும் அவரது மாத வருமானம் 13 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ர…
-
-
- 7 replies
- 599 views
- 2 followers
-
-
மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி.)யினர் நடத்திய போராட்டத்திற்கும் விடுதலை புலிகள் நடத்திய போராட்டத்திற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. ஜே.வி.பி நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தவில்லை. புலிகள் நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தினார்கள். எனவே, இவ்விரு தரப்பினரதும் போராட்டங்களுக்கு இடையில் இருக்கும் வேறுபாட்டை பல்கலைக்கழக மாணவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள் என, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேஷனிடம் தெரிவித்துள்ளார். ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனின் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக மனோ கணேசனுக்கு இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இருந்த வேளையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத…
-
- 7 replies
- 591 views
-
-
புலம்பெயர் நாடுகளில் சிறீலங்கா அரசின் இனப்படுகொலைக்கு ஆதரவாகவும், தமிழ் மக்களிற்கு எதிராகவும் பரப்புரைகளில் ஈடுபட்டுவந்த சிங்களவர்கள் தற்பொழுது வன்முறை நடவடிக்கைகளிலும் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். நியூசிலாந்தின் பல பாகங்களிலும் (ஒக்லாந்து, வெலிங்டன், கிறைஸ்சேர்ச்) தமிழ் மக்களால் ஒழுங்கு செய்யப்படும் கவனயீர்ப்பு நிகழ்வுகள், அமைதிப்பேரணி ஆகியனவற்றிற்கு எதிராக ஒவ்வொரு தடவையும் நியூசிலாந்த்தில் உள்ள சிங்களவர்கள் எதிர்செயற்பாடுகளை மேற்கொள்வதுடன் அங்கு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ் மக்களை நிழற்படங்கள் எடுப்பதும், அவர்களுக்கு இடையூறு விளைவிப்பதும் வழமையான செயற்பாடாக இருந்து வருகின்றது. கடந்த சனிக்கிழமை (21.03.2009) நியுசிலாந்து தமிழ் இளையோரால் ஒழுங்கு செய்யப்பட்ட “உ…
-
- 7 replies
- 1.8k views
-
-
27 வருடங்களாக சொந்த நிலத்தில், சொந்த வீட்டில் வாழ முடியாமல் நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் எங்களுடைய நிலத்தில், எங்களுடைய வீட்டில் சிங்கள மக்கள் தங்கியிருக்கின்றார்கள் எங்களுடைய கடலில் நீராடி மகிழ்கிறார்கள் என வலி.வடக்கு மக்கள் கவலையுடன் கூறியுள்ளனர். இன்றைய தினம் ஊறணி, மயிலிட்டி மற்றும் நல்லிணக்கபுரம் பகுதிகளை சேர்ந்த மக்கள் கடற்றொழில் செய்வதற்காக ஊறணி பகுதியில் 400 மீற்றர் கரையோர பகுதியும், 2 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு வ லிவடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பெருமளவில் வந்திருந்தனர். இதன்போது படையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள மக்களுடைய வீடுகளில் சிங்கள மக்கள் தங்கியிருந்து குடும்பம் குடும்பமாக கடலில் நீர…
-
- 7 replies
- 850 views
-
-
இலங்கை: விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் பலவற்றை கடந்த வாரம் இலங்கை அரசு பறிமுதல் செய்திருக்கிறது. அவற்றை விரைவில் ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை திறைசேரிக்கு வழங்க இருக்கிறது. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு பின் இலங்கை அரசு அவர்கள் மீது எடுத்து வரும் தொடர் நடவடிக்கையில் கடந்த வாரம், விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான சுமர் 120 கோடி ரூபாய் சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது இலங்கை அரசு. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை அனைத்தும் விரைவில் ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதியை திறைசேரிக்கு வழங்க உள்ளதாக இலங்கை அரசின் குற்றப்புலணாய்வு பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ''புலிகளுக்கு சொந்தமான நிலங்கள், அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள், அச்சகங்கள், இயந்…
-
- 7 replies
- 1.4k views
-
-
எனது விசா இரத்துக்கு இந்தியாவின் மத்திய அமைச்சில் இருக்கக்கூடிய தமிழ் அமைச்சர் ஒருவரே காரணம் என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைப் போராளி மருத்துவர் எலின் ஷான்டர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக 'விகடன்' குழுமத்தின் 'ஜூனியர் விகடன்' வாரம் இருமுறை இதழ் வெளியிட்ட நேர்காணல் விபரம் வருமாறு: டொக்டர் எலின் ஷான்டர்... போர்க்குணம் கொண்ட இந்தப் பெண்மணி, அமெரிக்காவின் புகழ்பெற்ற டொக்டர் கூடவே மனித உரிமை போராளி! ஈழத் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளைக் கடந்த நான்கு ஆண்டுகளாக எதிர்த்து உலகெங்கும் கர்ஜித்துக் கொண்டே இருக்கிறார். வட அமெரிக்காவில் ஒரு மாநாட்டில், இவரது உரையைக் கேட்ட கவிஞர் வைரமுத்து, "எலின் ஷான்டர் வெள்ளைக்கார தமிழச்சி..." என்று வியந்தார்! இலங்கை அகதி முக…
-
- 7 replies
- 1k views
-
-
சிறீலங்கா சிங்கள சிறப்பு அதிரடிப்படையினர் மீதான தாக்குதலை அடுத்து மைத்தானத்தில் நின்ற இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற படையினர்..அவர்களைப் புலிகள் என்று கூறுகின்றனர்..! மட்டக்களப்பு பாலமீன்மடுப் பகுதியில் 5 இளைஞர்கள் அதிரடிப் படையிரால் சுட்டுக்கொலை. மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்ட பாலமீன்மடு பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் 5 தமிழ் இளைஞகள் நேற்று வியாழக்கிழமை மாலை 7.30 மணியளவில் சுட்டுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் பாலமீன்மடு பகுதியில் உள்ள விளையாட்டு மைதானமொன்றில் நின்ற போது இவர்கள் சுடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்டவர்களில் செங்கலடி பகுதியைச் சேர்ந்த தர்மராஜா ஆனந்தராஜா வயது 28 மற்றும் மட்டக்கள்பபு புண்ணச்சோலையைச் சேர்ந்…
-
- 7 replies
- 4.5k views
-
-
கொலை வெறிப்பாடல் வெளிவந்ததை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலைஞர்களும், ரசிகர்களும் பல்வேறுபட்ட பாடலின் பதிப்புக்களை வெளியிட்டவண்ணம் உள்ளனர். அதன் புதிய வடிவமாக தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள “என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா” இவ் இசைக் காணொளியில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி நகரின் தோற்றத்தினை காண்பிக்கும் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன் யாழில் முதன் முதலாக அதி உயர் வடிவத்தில் (1080p HD)தயாரிக்கப்பட்டுள்ளது. கொலவெறிப்பாடலின் வரிகளை முற்றிலுமாக மாற்றியமைத்து இசைக்கு மேலும் மெருகூட்டிய பாடலின் பரிணாமம் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இளம் இசையமைப்பாளர் எஸ்.ஜே.ஸ்ரலின் அவர்கள் பாடல் வரிகளை எழுதி, பாடலையும் பாடியுள்ளார். அண்மையில் இவர் இசையமை…
-
- 7 replies
- 2.4k views
-
-
யாழ். அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் அத்தியடி பிள்ளயார் ஆலயத்தில் இன்று சதுர்த்தியை முன்னிட்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. அது தொடர்பில் அறிந்து கொண்ட பொலிஸார், ஆலயத்துக்கு விரைந்து பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 17 பேரை கைது செய்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கடுமையாக எச்சரித்த பின்னர் , பொலிஸ் பிணையில் அவர்களை விடுத்துள்ளனர். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/ஆலய-வழபடடல-ஈடபடடரநதவரகள-கத/71-249309 ஆண்டவா இது தொரியமல் போய்விட்டதே, கோவில் முன் பக்கத்து வீடுகள் எல்லாம் சொந்தக்காரர் …
-
- 7 replies
- 1.4k views
-
-
நான் பேஸ்புக் பார்க்கமாட்டேன் : யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு எமக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்த வடக்கு, தெற்கு மற்றும் வெளிநாடுகளில் உள்ள நிறைய பேர் சதி செய்கின்றனர். இதனை பேஸ்புக் ஊடாக அவதானிக்க முடியும். குறிப்பாக நான் பேஸ்புக் பார்ப்பதும் இல்லை. இது போன்ற விடயங்களை தொடர்ந்து பார்ப்பதால் ஒரு பயனும் இல்லை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழில் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு இன்று சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்” எனும் மக்கள் குறைகேள் நிலையத்தை திறந்து வந்துவிட்டு உறையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இன்று உங்கள் பிரதேசத்திற்கு வருகை தந்ததையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். 2017 ஆம் ஆண்டு …
-
- 7 replies
- 550 views
- 1 follower
-
-
(இராஜதுரை ஹஷான்) அரசியல் செய்வதற்கு ஏதும் இல்லாத காரணத்தினால் எதிர்க்கட்சிகள் பொருளாதார மீட்சிக்கான சிறந்த திட்டங்களையும் எதிர்க்கிறார்கள். பொய்யான விமர்சனங்கள் எழுந்த போது மக்களுக்காக அதிகாரத்தை விட்டுக் கொடுத்தோம். மக்கள் தற்போது உண்மையை விளங்கிக் கொண்டுள்ளார்கள். தேவையாயின் பலமிக்க சக்தியாக ஒன்றிணைந்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் பொரள்ளை கெம்பல் மைதானத்தில் திங்கட்கிழமை (01) இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு மக்களாணை உண்டு என்பது மே தின கூட்டத்தில் மீண்டும் உறுதிப்படுத…
-
- 7 replies
- 448 views
- 1 follower
-
-
யாழ். கச்சேரி வீதியில் இளம்பெண் வெட்டி எரியூட்டப்பட்டுக் கொலை சந்தேக நபரும் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி [Friday, 2011-07-15 17:23:09] யாழ். கச்சேரி நல்லூர் வீதியில் இன்று பட்டப் பகலில் இளம் பெண்ணொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார். 28 வயதான சுதாகரன் அகிலா என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப்பெண்ணை படுகொலைசெய்தவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி பெண்ணின் உடலை எரியூட்ட முயன்ற போது சந்தேக நபரும் கடும் எரிகாயங்களுக்குள்ளாகிய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ் பொலிஸார் ம…
-
- 7 replies
- 1.4k views
-
-
கிழக்கு மாகாண சபை தேர்தலில் படுதோல்வியடைந்த பின்னர் ஏனைய கட்சிகளுக்கு முகம் கொடுக்க அஞ்சியே அரசு பாரளுமன்றை ஒத்திவைத்திருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. த.தே.கூட்டமைப்பின் யாழ். பாரளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இது தொடர்பில் தெரிவிக்கையில் : கிழக்கு மாகாணசபை தேர்தலில் பாரிய மோசடிகளை அரசு செய்யவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது. எனவே, நடக்கப் போகின்ற மோசடிகள் குறித்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்றில் குரல் எழுப்புவதை தடுப்பற்கும், தாம் மோசடிகளை செய்வதற்கு வசதியாகவும பாராளுமன்றை ஒத்திவைக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அத்துடன், கிழக்கு மாகாண சபை தேர்தலில் தாம் படுதோல்வி அடைவோம் என்பது அரசுக்கு நன்கு தெரியும். …
-
- 7 replies
- 1.4k views
-
-
வட மாகாணத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்த மார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை 59 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். வட மாகாணத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்த மார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை 59 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். மார்ச் முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் 18 நோயாளர்களும், ஒக்டோபர் மாதத்தில் 41 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒக்ரோபர்15 தொற்றாளர்களும், வவுனியா மாவட்டத்தில் 14 தொற்றாளர்களும், மன்னார் மாவட்டத்தில் 10 நோயாளர்களும், முல்லைத்தீவு 2 த…
-
- 7 replies
- 1.2k views
-
-
தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் அமைந்துள்ள அமேரிக்கத் தூதரகத்திற்கு முன் நடைபெற்ற புரட்சிப் போராட்டம். தமிழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழீழத்திற்கான புரட்சிப் போராட்டத்திற்க்கு ஆதரவாக இன்று மாலை பிருத்தானியத் தமிழ் மாணவர்களால் இன்னுமோர் புரட்சிப்போர் முன்னெடுக்கப்பட்டது. இப்பொராட்டம் மாலை நான்கு மணியளவில் Grosvenor Square பகுதியில் அமைந்துள்ள அமேரிக்கத் தூதரகத்திற்கு முன்னிலையில் நடபெற்றது. இதில் பெரும்பாலான தமிழ் மக்களும் கலந்து கொண்டதுடன் "நாங்கள் தமிழக மணவர்களை ஆதரிக்கின்றோம், அமேரிக்காவே இன அளிப்பை ஆதரிக்காதே, உலக நாடுகளே LLRC அறிக்கையை நிராகரி மற்றும் தமிழர்களுக்கு தமிழீழம்தான் ஒரே தீர்வு" போன்ற வசனங்களையும் தாங்கியவண…
-
- 7 replies
- 588 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு இன்றைய நாள் தீபாவளி திருநாள் அல்ல. எப்பொழுது மகிந்த ராஜபக்சே எனும் நரகாசுரன் எம்மினத்தை விட்டு நீங்குகிறானோ அன்றுதான் நம்மினத்தவருக்கு தீபாவளி திருநாளாகும். நரகாசுரன் நம்மோடு இன்னும் உயிருடன் இருக்கின்றபொழுது நாம் எப்படி இந்நாளை தீபாவளி திருநாளாகக் கொண்டாட முடியும். நரகாசுரன் வன்னியிலே குடி கொண்டிருக்கிறான். நம்மினத்தை நாளும் பலி எடுத்துக் கொண்டிருக்கிறான். நரகாசுரன் உயிருடன் இருக்கும் பொழுது அவன் இறந்து விட்டதாக நாம் கருதி எப்படி நரகாசுரன் இறந்த நாளாக கொண்டாடுவது? தமிழா நீ கொஞ்சம் யோசித்துப் பார்... உங்கள் வீட்டில் செத்தவீடு நடந்து கொண்டிருக்கிறது அப்பொழுது உங்கள் வீட்டில் விளக்கேற்றி, புத்தாடையுடுத்தி கொண்டாடுவீர்களோ? இல்லையே. அதேபோன்று …
-
- 7 replies
- 2.1k views
-
-
வடமாகாண முதலமைச்சரை பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ள வைப்பதற்கான பொறுப்பு வாசுதேவாவிடம்? 03 நவம்பர் 2013 வடமாகாண முதலமைச்சரை பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ள வைப்பது தொடர்பாகவும் அரசாங்கத்துடன் இணங்கிச் செல்கின்ற விடயங்கள் தொடர்பாகவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார முதலமைச்சர் விக்னேஸவரனுடன் கலந்துரையாடுவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு நெருக்கமான கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் வாசுதேவ நாணயக்கார முதலமைச்சர் விக்னேஸவரனின் உறவினர் என்பதால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த ஏற்பாட்டை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார முன்னெடுப்பதாக கூறப்படுகின்றது. முதலில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் முதலமைச்சர் விக்னேஸவரனை முன் ஆசனத்தில…
-
- 7 replies
- 526 views
-
-
பாடசாலைத் தோட்டத்தில் பயிரிடப்பட்ட பச்சைமிளகாயால் இரு ஆசிரியைகள் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் கடந்த தி்ங்கட்கிழமை வலிகாமம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலையில் தோட்டம் ஒன்று மாணவா்களால் செய்யப்பட்டு வருகின்றது. இத் தோட்டத்திற்கு பொறுப்பாக ஒரு ஆசிரியா் நியமிக்கப்பட்டிருந்தார். அங்கு பயிரிடப்படும் விளை பொருட்களை பாடசாலையின் அபிவிருத்திக்காக அப் பாடசாலை ஆசிரியா்களுக்கு சந்தை விலையிலும் பார்க்க குறைவான விலையில் விற்கப்படுவதாகவும் தெரியவருகின்றது. குறித்த பாடசாலையில் குடை மிளகாய் என்னும் மிளகாய் பயிரிடப்பட்டிருந்ததாகவும் அவை சில சாடிகளில் வைக்கப்பட்டு அலங்காரத்திற்காக சில வகுப்பிற்கு முன் வைக்கப்டிருந்ததாகவும் தெரியவருகின்றது. மிளகாய்த் தட்டுப்பா…
-
- 7 replies
- 996 views
-
-
வடக்கு முதல்வரின் உரைகளின் தொகுப்பு- ‘நீதியரசர் பேசுகிறார்’ நூல் வெளியீடு ஆரம்பம்!! வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இதுவரை ஆற்றிய உரைகளின் தொகுப்பு நூலான ‘நீதியரசர் பேசுகிறார்’ நூலின் வெளியீட்டு விழா யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், ஈ.சரவணபவன் மற்றும் யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் இ.ஆர்னோல்ட், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பல அரசியல் பிரமுகர்…
-
- 7 replies
- 2k views
-
-
ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யோசிமசா அயாஸி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2019 ம் ஆண்டுக்கு பின்னர் ஜப்பான் நாட்டு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதற் தடவையாகும். தற்போது இடம்பெற்று வரும் கடன்மறுசீரமைப்பு திட்டம் தொடர்பில் இதன்போது ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கவனம் செலுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜப்பான் மற்றும் இலங்கை இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 28 மற்றும் 29 ம் திகதிகளில் 24 பேர் அடங்கிய தூதுக்குழுவினருடன் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் தங்கியிருப்பார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.…
-
- 7 replies
- 337 views
- 1 follower
-
-
யாழில் மாணவன் மீது தாக்குதல். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவன் மீது மேற்கொள்ளப்பட்ட பகிடிவதை காரணமாக குறித்த மாணவன் பலத்த காயங்களுக்குட்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், ஊடகவியலாளரும், பல்கலைக்கழக மாணவனுமான ப.சுஜீவன் என்பவரே இவ்வாறு காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழக வாளாகத்திற்குள் குறித்த மாணவனை சூழ்ந்த நான்காம் வருட மாணவர்கள், பகிடிவதை எனக்கூறி, அவர் மீது சரமாரியாகத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் தலைப்பகுதியில் படுகாயமடைந்த நிலையில் குறித்த மாணவன், சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். http://athavannews.com/யாழி…
-
- 7 replies
- 1.1k views
-
-
‘பொருளாதார வளர்ச்சிக்கு வர்த்தகர் ஆலோசனை’ Editorial / 2019 பெப்ரவரி 14 வியாழக்கிழமை, மு.ப. 08:40 Comments - 0 எஸ்.நிதர்ஷன் பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியனவற்றை புனரமைப்புச் செய்து, பிராந்திய, வர்த்தக விமான சேவை, அதேபோல் பயணிகள், வர்த்தக கப்பல் சேவையை ஆரம்பிப்பதன் ஊடாகவே வடமாகாணம் பொருளாதார வளா்ச்சியடைய முடியும். அதற்கான கோரிக்கைகளை தமிழ் அரசியல்வாதிகள், அரசாங்கத்துக்கு வழங்கவேண்டுமென்ற கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது, யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளா்களை நேற்று (13) சந்தித்த போதே, யாழ்ப்பாண வா்த்தகரான எஸ்.மனோகரன், மேற்கண்டவாறு பகிரங்கக் கோரிக்கையொன்றை முன்வைத்தார். பொருளாதார மட்டத்தில் வடமாகாணம் தாழ்ந்து காணப…
-
- 7 replies
- 1.3k views
-
-
மாவீரர் தினம் ஒன்றே எங்கள் பலத்தின் வெளிப்பாடு ! மாவீரரை மதித்து ஓரிடத்தில் ஒன்றிணைவீர். மாவீரர் ,அவர் மரணத்தால் மரணிக்க முடியா மாபெரும் பிறவிகள் ! மண்ணுக்காய் உயிரை அவர் உவகையோடு தந்தவர்உயிருக்கு அஞ்சி நாம் உடல் காக்க பிற நாடு வரை ஓடியபோது , எதிரிக்கு இங்கே இடம் இல்லை என்று உடலை குண்டாய் தந்தவர் ! பொன்னுக்கும் பொருளுக்கும் என்று வாழும் உலகில் சுதந்தரம் ஒன்றே மேல் என்று வாழ்ந்து சென்றவர் ! அவர்தம் நாளில் பிரிந்து நிற்பதா ? ஏன் ? தேசிய தலைவரின் அணியில் ஒன்றாய்தானே நின்றோம் ! விரும்பியோ விரும்பாமலோ இன்று ஏன் பிரிவு ? வெற்றியில் கைதட்டினோம் , ஆர்ப்பரிதோம் அல்லவா ! களத்தில் சிங்களவன் மண்ணின் மைந்தர்களை ஆயுத பலத்தால் அடக்க கூடாது என்று குளிரிலும் கூதளிலும் உழைத…
-
- 7 replies
- 1.6k views
-
-
புலம்பெயர் தமிழர்கள் நினைத்தால் ஈழத்தமிழர்கள் ராஜ வாழ்க்கை வாழலாம் - செல்வம் அடைக்கலநாதன் http://www.adaderana.lk/tamil/opinion_alindaya.php?nid=2676
-
- 7 replies
- 2.2k views
-