ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143590 topics in this forum
-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன. எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்படவுள்ளது. எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களின் போது ஐனநாயகத் தேசியக் கூட்டமைப்புடன் சந்திரிக்காவை இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளுடன் சந்திரிக்கா தனித்தனியாக சந்திப்புக்களை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=80915&category=TamilNews&language=tamil
-
- 6 replies
- 1k views
-
-
வடமாகாணத்தில் தமிழ் பேசும் அரசு நிறுவப்பட வேண்டும் என்பதில் ஒவ்வொரு தமிழனும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் - என்று தமிழத் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது: தேர்தல் காலத்தில் மட்டும் தேனாகப் பேசி, தேர்ந்தெடுக்கப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய அரச தரப்பினர் முன்வருன்றார்கள். அதன் பின் எங்களை மறந்து விடுகின்றார்கள். வாக்குரிமை என்பது அவர்களுக்கு ஒருவித பண்டமாற்றாகி விட்டது. நாங்கள் இதைத் தருகின்றோம். நீங்கள் அதைத் தாருங்கள் …
-
- 6 replies
- 674 views
-
-
எம்.மனோசித்ரா வலுவான உள்நாட்டுப் பொறிமுறைகளினூடாக முன்னோக்கிச் செல்லும் போது வேறு எந்த வெளிப்புறப் பொறிமுறைகளையும் இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளினதும் நலன் கருதி இனப்பிரச்சினைகளுக்குப் பின்னர் எஞ்சியிருக்கும் பிரச்சினைகளுக்கு நியாயமானதும் நீதியானதுமான தீர்வுகள் அவசியம் என்பதை இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் பக்க அம்சமாக இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்…
-
- 6 replies
- 1k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசு நாடு கடந்த தமிழீழ அரசின் 115 உறுப்பினர்கள் அதரிவு செய்யப்பட்டுவிடுவார்கள். நியமிக்கப்படும் 20 உறுப்பினர்கள் தேர்தல் நடத்த முடியாத இடங்களில் நியமிக்கப்படுவார்கள். இவர்களில் 5 பேர் இந்தியாவில் நியமிக்கப்படுவார்கள் அது யாராகவிருக்கும். நான் அறிந்தவரை அறிவுமதி , தாமரை, ...............
-
- 6 replies
- 1.8k views
-
-
இலங்கையை விசாரிக்க ஐரோப்பியர்களுக்கு என்ன உரிமை? - பூலோக அழகியின் சர்ச்சைக்குரிய கேள்வி. [saturday 2014-08-02 20:00] இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக விசாரணை நடத்த ஐரோப்பியர்களுக்கு உரிமை கிடையாது என 2013 பூலோக அழகி (மிஸ் ஏர்த்) பட்டத்தை வென்ற கார்டியா வெக்னர் கூறியுள்ளார். கொழும்பில் தொலைக்காட்சிக்கு ஒன்று வழங்கிய செவ்வியில் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐரோப்பியர்களுக்கே உரித்தான கலாசாரம் உள்ளது. இலங்கையர்களுக்கே உரித்தான தனியான கலாசாரம் உள்ளது.ஐரோப்பியர்களின் கலாசாரம் வேறானது, அதனை இலங்கையர்கள் புரிந்து கொள்ள முடியாது. இலங்கையுடன் நான் மிகவும் பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளேன். இலங்கை என்பது மோதல்கள் இன்றி மிகவும் அமைதி…
-
- 6 replies
- 622 views
-
-
சந்தேகத்துக்கிடமானவர்களின் நடமாட்டம் நேற்று இரவு கட்டுக்கடங்காமல் அதிகரித்தமையால் பெரும் அல்லோலகல்லோலப்பட்டது குடாநாடு. மக்கள் நித்திரையின்றிப் பீதியில் உறைந்தனர்.யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் நேற்று இரவு சந்தேகத்துக்கிடமானவர்களின் நடமாட்டங்கள் அதிகமாகக் காணப்பட்டமையால் மக்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் விடியும் வரை நித்திரை இன்றி விழித்திருந்தனர் என எமது பிரதேச செய்தியாளர்கள் உறுதிப்படுத்தினார்கள். சில இடங்களில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியவர்களைத் துரத்திச் சென்ற இளைஞர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே முறுகல் நிலையும் ஏற்பட்டது. இந்த இடங்களில் இளைஞர்களை அச்சுறுத்துவதற்காகப் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களைத் …
-
- 6 replies
- 1.3k views
-
-
இன்றைய பூகோள அரசியலிலே, இரு சக்திமிக்க நாடுகளுக்குகிடையிலான உறவென்பதுவும், உறுதித் தன்மையென்பதுவும் பொருளாதரா நலன்களை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகிறது. மாறாக அரசியல் என்பது பொருளாதாரத்துக்கு நிகராக செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஒன்றாக முக்கியத்துவப்படுத்தப்படவில்லை. இது, நான்காம் கட்ட ஈழப்போரில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தாலும், ஈழத்தமிழர்களுடைய இருப்புக்கான போராட்டம் இனியும் உத்வேகத்துடன் தொடரலாம் என்பதற்கான நம்பிக்கை, சமிஞ்சை. போராட்டம் என்பது தனித்து போர்க்கலங்களால் மட்டும் நகர்த்தப்படுவதல்ல. போராட்டத்தை முன்னெடுப்பதற்கு பொருளாதாரம், ஊடகம், மற்றும் இராஜதந்திரம் போன்றவையும் ஆயுதங்களாக மாற்றமடையும். களம், காலம், சூழல் போன்றவற்றை வைத்தே போராட்டத்தின் …
-
- 6 replies
- 1.4k views
-
-
வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 114 வாக்ககுகளும் எதிராக 67 வாக்குகளும் பெற்று மேலதிக 47 வாக்குகளால்வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜே.வி.பியினர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத போதும் நந்தன குணதிலக்க அரசுக்கு சார்பாக வாக்களித்துள்ளார். அரசிலிருந்து விலகிச் சென்ற மு.கா உறுப்பினர்கள் எதிராக வாக்களித்திருக்கின்றனர். 38 பா.உக்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஐ.தே.க, தமிழ்க் கூட்டணி, மு.கா, மங்கள, சிரிபதி எதிர்த்து வாக்களித்தனர். எதிர்க்கட்சி வரிசையில் சென்றமர்ந்த அநுரா, விஜேயதாச ராஜபக்சா ஆகியோரும் ஜே.வி.பியினரும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. ஜானா
-
- 6 replies
- 3.7k views
-
-
தமிழ் மக்களை பலி எடுப்பதில் சிங்கள அரசு குறியாக இருக்கிறது…. March 14, 2020 வெளி நாட்டிலிருந்து வரும் பயணிகளின் கொரேனா வைரஸ் தடுப்பு மையமாக வவுனியா-மன்னார் வீதியில் உள்ள பம்பைமடு பெண்கள் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாட்டிற்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு, கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து விதமான செயற்பாட்டு நிலையங்களையும் வடக்கு கிழக்கு தமிழர் நிலங்களில் இருந்து அகற்றி சிங்களப்பிரதேசத்தில் அமைத்துக் கொள்ளுமாறும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார் -இவ்விடையம் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், நடந்து முடி…
-
- 6 replies
- 735 views
-
-
கொழும்பு: கிளிநொச்சியைப் பிடிக்க முயலும் ராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய கடும் தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கிளிநொச்சியைப் பிடிக்க ராணுவம் கடுமையாக முயன்று வருகிறது. விமானப்படையின் துணையுடன் கடந்த பல நாட்களாக ராணுவம் போராடி வருகிறது. முதலில் கிளிநொச்சி நகருக்கு அருகில் வந்து விட்டோம் என்று கூறினர். ஆனால் இதுவரை அப்படி நடந்ததாக தெரியவில்லை. விடுதலைப் புலிகள் அதிரடியான போர்த் திட்டங்களை வகுத்து இலங்கை ராணுவத்தினரை தற்போது நிலை குலைய வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3 முனைகளில் ராணுவம் தாக்குதலை தொடுத்து வருகிறது. கிளிநொச்சிக்கு வடக்கில் இருந்து ஒரு படையும், தெற்கில் இருந்து ஒரு படையும் மேற்கு பகுதியில்…
-
- 6 replies
- 2.9k views
-
-
“HRC இன் தீர்மானத்திற்கு ஆதரவாக புதுடெல்லி வாக்களிக்கும்” ஈடேறுமா சுமந்திரனின் எதிர்பார்பு! March 20, 2021 இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பாக, அடுத்த வாரம் கொண்டுவரப்படவுள்ள ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என தாம் நம்புவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். HRC இன் தீர்மானத்திற்கு இந்தியா வாக்களிப்பதா அல்லது விலகுவதா என்பது “அவர்கள் தீர்மானிக்கும் ஒரு விடயம்”, ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்பார்ப்புகள், தீர்மானத்தை இந்தியா “தெளிவாக” ஆதரிக்க வேண்டும், வாக்களிக்க வேண்டும் என, வரவிருக்கும் HRC இ…
-
- 6 replies
- 586 views
-
-
நாங்கள் எதிர்காலத்தில் சுயநிர்ணய உரிமையுடன் எங்களை நாங்களே ஆளக் கூடிய ஆட்சியை வடக்கு, கிழக்கில் அமைப்பதற்கு சுயதொழில் வாய்ப்புகள் மிக முக்கியமானது. ஒவ்வொருவரும் எங்கள் குடும்பங்களை அபிவிருத்தி செய்யப் பழகிக் கொண்டோமானால் எதிர்காலத்தில் எங்கள் பிரதேசத்தை, மாவட்டத்தை , மாகாணத்தை நாங்களே ஆளக் கூடிய சகல உரிமைகளையும் பெற்று வாழக் கூடிய நிலையை உருவாக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். ஏறாவூரில் இடம்பெற்ற சுயதொழில் கடன் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த கருணாகரம் மேலும் கூறுகையில் ; இந்த நாட்டின் அரசாங்கம் வடக்கு, கிழக்கை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் த…
-
- 6 replies
- 732 views
-
-
சமஷ்டியை உச்சரிக்கத் தமிழரசுக் கட்சிக்கே உரித்துண்டு ! – சுமந்திரன் விளாசல் சமஷ்டி என்ற வார்த்தையை உச்சரிப்பதற்குத் தமிழரசுக் கட்சியைத் தவிர வேறு எவருக்கும் எந்தத் தகுதியும் கிடையாது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை ‘இருள் சூழ்ந்த சுதந்திரம்’ எனப் பிரகடனப்படுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சி மேற்கொண்ட போராட்டம் மட்டக்களப்பில் இன்று (04) நடைபெற்றது. அதன்பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலங்களில் சமஷ்டியைப் பழித்துப் பேசியவர்கள் இன்று அதைக் கட்டிப்பிடி…
-
- 6 replies
- 897 views
- 1 follower
-
-
எமக்காய் உரத்துக் குரல் கொடுங்கள் உறவுகளே......: நெளரு தீவு தமிழ் அகதிகள் கண்ணீர் வேண்டுகோள் [புதன்கிழமை, 20 யூன் 2007, 15:26 ஈழம்] [சி.கனகரத்தினம்] ஐக்கிய நாடுகள் சபையால் அனைத்துலக அகதிகள் நாள் கடைபிடிக்கப்படும் இன்றைய நாளில் நெளரு தீவில் (அவுஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு) "இலங்கை அகதிகள் தடுப்பு முகாம்"-இலிருந்து தமிழீழ உறவுகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் கண்ணீர் வேண்டுகோள்: இலங்கை அகதிகள் தடுப்பு முகாம், நெளரு 20.06.2007 எமது உறவுகளுக்கு, நீங்கள் எங்களுக்கான உதவிகளை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதனை நாம் அறிவோம். அதற்காக முதலில் உங்களுக்கு எங்களது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் உங்களுக்கு எழுதிக்கொள்…
-
- 6 replies
- 1.6k views
-
-
சிறிலங்காவை புறக்கணிக்கும் கோரிக்கைக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தது இந்தியாதான். சிறிலங்காவில் அடுத்த வரும் பொதுநலவாய உச்சிமாநாடு நடத்தப்படுவதற்கு கனடாவும் வேறு சில நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், இம்மாநாடு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட விடயம் என்பதால் இதையிட்டு பேசுவது பொருத்தமற்றது எனக்கூறி இலங்கையின் கௌரவத்தை இந்தியா காப்பாற்றியது என இந்திய அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். . இலங்கையின் மனித உரிமை விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் தான் பங்குபற்றாமல் போகலாம் என கனேடிய பிரதமர் ஸ்ரிபன் ஹார்பர் முன்னர் தெரிவித்திருந்தார். . அரசியல் நல்லிணக்கம், ஜனநாயக விழுமியங்கள், பதிலளிக்கும் கடப்பாடு என்பவற்றில் முன்னேற்றம் …
-
- 6 replies
- 1.3k views
-
-
பொலன்னறுவை மாவட்டத்தில் நிலவும் அதிக வரட்சியுடனான வானிலை காரணமாக, பராக்கிரம சமுத்திரம் நீரின்றி வற்றியுள்ளது. இந்நிலையில், குறித்த சமுத்திரத்தை அப்பகுதி இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காகப் பயன்படுத்தி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 20 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டு விளங்கும் பராக்கிரம சமுத்திரம், தற்போது நீரின்றி வற்றிக் காணப்படுகிறது. பல வருடங்களுக்குப் பின்னர் பராக்கிரம சமுத்திரம் இவ்வாறு வரட்சியால் வற்றிக் காணப்படுவதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், பராக்கிரம சமுத்திரத்தை நம்பி விவசாயச் செய்கையில் ஈடுபடும் நூற்றுக்கணக்கான விவசாயிகள், விவசாயச் செய்கையை மேற்கொள்ள பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கியுள்ளர். http://www.tamilmirror.lk/செ…
-
- 6 replies
- 1.4k views
-
-
ஐ.நா வல்லுனர் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கமானது எந்தவொரு கருத்துக்களையும் வெளியிடவில்லை. அத்துடன் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதில் இந்தியாவானது தனது அழுத்தங்களை மேற்கொள்ளவுமில்லை. இவ்வாறு அமெரிக்காவை தளமாகக் கொண்ட The Wall Street Journal ஊடகத்தின் வெளியீடுகளில் ஒன்றான India Real Time வெளியீட்டில் [March 13, 2012] Tom Wright எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதன் முழுவிபரமாவது, சிறிலங்காவில் 26 ஆண்டு காலமாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது 2009ல் இறுதிக்கட்டத்தை அடைந்த வேளையில், தமிழ்ப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும், 12 வயதே நிரம்பிய அவரது மகனும் சிறிலங்காப் படைகளால் படுகொலை செய்யப்பட்டனர் என பி…
-
- 6 replies
- 1.1k views
-
-
சர்ச்சைக்குரிய குருந்தூர்மலைக்கு விஜயம் செய்த எம்.பி ரவிகரன்! December 9, 2024 07:01 pm முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களின் பூர்வீக கிராமங்களான தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் கிராமங்கள் மீள்குடியேற்றப்படவேண்டுமெனவும், அதற்க்காக உரியதரப்பினருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுமெனவும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று (08) வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது தண்ணிமுறிப்பு கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மக்கள் சிலருடன் கலந்துரையாடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். …
-
-
- 6 replies
- 368 views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் ஆயுள் தண்டனைக் கைதியை விட மோசமான நிலையல் தமிழக முதலமைச்சர் இருப்பாதாகத் தெரிவித்த கவிஞர் புலமைப்பித்தன், பிரான்சிலுள்ள சீக்கியரின் தலையிலுள்ள தலைப்பாகை குறித்து கவலைப்படும் இந்திய பிரதமர் தலைபோகும் நிலையிலுள்ள இலங்கைத் தொடர்பில் கவலை கொள்ளவதில்லையென்றும் குற்றம் சாட்டினார். ஒஸ்லோவில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் உரையாற்றும் போது மேலும் தெரிவித்தாவது : இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் புழல் சிறையில் அடைத்து வைக்கபட்டுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு இருக்கக் கூடிய அழுவதற்கான உரிமை கூட தமிழக முதலமைச்சருக்கு இல்லை. விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் உயிரிழந்த போது கருணநிதி எழுதிய இரங்கற்பாவிற்க…
-
- 6 replies
- 1.8k views
-
-
இன்று வன்னியில் இலங்கை விமானப்படையினர் நடத்திய வான் தாக்குதலில் சர்வதேசத்தில் தடைசெய்யப்பட்ட கொத்தணி குண்டுகள் பாவித்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொத்தணி (கிளெஸ்ரர்) ரக ஒரு குண்டில் இருந்து சுமார் 500, 600 வரையான குண்டுகள் வெடித்துச் சிதறும் தன்மை கொண்டது. இக்குண்டுகள் உடனடியான சேதத்தை மட்டுமல்ல அவை வெடிக்காத நிலையிலும் பின்னர் சேதத்தையும் அழிவுகளையும் ஏற்படுத்தக் கூடியது. சர்வதேசத்தால் தடை செய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகள் அண்மையில் இஸ்ரேல் லெபனான் மீதான தாக்குதலின் போது பாவித்தது குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/view.php?22OpDcc3n...9E2e2ILL3b37GYe
-
- 6 replies
- 2.2k views
-
-
சிறிலங்காவின் தேசிய கொடியை விற்பனை செய்த படையினர் செவ்வாய், 06 ஜனவரி 2009, 00:40 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான் ] மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் மற்றும் செங்கலடி சிறிலங்கா படையினர் ஆயுதமுனையில் ஆட்டோ சாரதிகளையும், வர்த்தகர்களையும் மிரட்டி, கட்டாயப்படுத்தி சிறிலங்கா தேசியக்கொடியை விற்பனை செய்துள்ளனர். இன்று திங்கக்கிழமை காலையில் இப்பகுதிகளில் வாகனங்களிலும், வர்த்தக நிலையங்களிலும் தொங்கவிடுமாறு மிரட்டியுள்ளனர். வர்த்தக நிலையங்களில் ரூபா 200பெற்றுக்கொண்டும், முச்சக்கரவண்டி உரிமையாளர்களிடம் ரூபா 100 பெற்றுக்கொண்டும் சிறிலங்காவின் தேசியக்கொடிகளை விற்பனை செய்ததோடு மட்டுமல்லாது, அவசியம் அவைகளை தொங்கவிடுமாறு மிரட்டியதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள். …
-
- 6 replies
- 1.7k views
-
-
வன்னியில் சிக்கியுள்ள நாலரை இலட்சம் மக்களுக்கு மருத்துவர்கள் போதாமல் உள்ள நிலையில் படையினரின் தாக்குதலில் சிக்கி தினந்தோறும் காயமடையும் மக்கள் பெரும் அவலங்களைச் சந்தித்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் சிறிலங்கா சுகாதர அமைச்சு வன்னியில் உள்ள 8 மருத்துவர்களையும் தாதிகளையும் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. இராணுவத்தினரின் உத்தரவிற்கு அமையவே அமைச்சினால் இந்த அறிவுறுத்தல் விடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சிறிலங்கா முப்படையின் தளபதியாக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தற்போது கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 8 மருத்துவர்களும் ஆயிரம் வரையான தாதிகளு…
-
- 6 replies
- 1.2k views
-
-
சீனாவின் எழுச்சியே ஆசியாவின் எழுச்சியை தீர்மானிக்கும் என்கிறார் மகிந்த! June 16, 2021 சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி இயக்கத்தின் ஆதரவு காரணமாக ஒரு அணிசேரா நாடாக சுதந்திர உலகில் முன்னேற முடிந்தது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நேற்று (15) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து தெரிவித்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு விழாவில், காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆற்றிய முழுமையான உரை வருமாறு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு விழா கொண்டாடப்படும் இச்சந்தர்ப்பத்தில் எமது அன்பான வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறோம். அக்கட்சியின் நூறாவ…
-
- 6 replies
- 799 views
-
-
வடக்கு,கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை வடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒரு போதும் அனுமதியளிக்க முடியாது. வடக்கு கிழக்கு இணையும் பட்சத்தில் கிழக்கில் இரத்த ஆறே ஓடும். மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படும் வகையில்புதிய அரசியலமைப்பு உரு வாக்கப்படக்கூடாது என மீள்குடி யேற் றம், புனர்வாழ்வு இராஜாங்க அமைச் சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் எச்ச ரிக்கை விடுத்தார். அரசியலமைப்பு சபையில் நேற்று புதன்கிழமை புதிய அரசியலமைப்புக் கான வழிநடத்தல் குழுவின் இடைக் கால அறிக்கை மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரை யாற்றுகையில் மேற்கண்டவாறு தெரி வித்தார். அவர…
-
- 6 replies
- 1.7k views
-
-
ஈ.பி.டி.பி யின் தோளில் ஏறி நின்று ஆட எவரையும் அனுமதியேன் – அமைச்சர் டக்ளஸ் சூளுரை என்னுடன் பழகிய பல அற்புதமான நெருக்கமான தலைவர்கள் பத்திரிகையாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போராளிகளை கொலை செய்தவர்களை – அவர்களுக்கு தலைமை வகித்தவர்களை எவ்வாறு ஏற்கமுடியும் என கேள்வியெழுப்பிய ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா யாழ்.மாநகரசபையின் பாதீட்டு விவகாரத்தை வைத்து அரசியல் செய்யும் நோக்கம் எமக்கு இல்லை எனவும் அதே சமயம் ஈ.பி.டி.பி யின் தோளில் ஏறி ஹையா ஹையா என ஆடவும் விட முடியாது என்றார். நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மாவீரர் தினம் மற்றும் திலீ…
-
- 6 replies
- 793 views
- 1 follower
-