ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
-
- 6 replies
- 1.5k views
-
-
வடக்கில் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு போராட்டம் வடக்கில் தலையெடுக்கும் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு, யாழில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. தமிழ் பத்திரிகையின் மீது ஊர்காவற்றுறை கிறிஸ்தவர்கள் தாக்குதல் நடத்த முற்பட்டது ஆபத்தானது என குறிப்பிட்டு யாழ்.ஆயர் இல்லத்திற்கு முன்பாக சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் இந்தப் போராட்டத்தை இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்துள்ளார். இந்த போராட்டம் தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் மத வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இங்குள்ள கிறிஸ்தவர்களே மத வன்முறையை தூண்டி வருகின்றனர். இதனால் சை…
-
- 21 replies
- 1.5k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.குப்பிளான் பகுதியில் மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். குப்பிளான் தெற்கு மயிலங்காடு பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு கண்ணன் (வயது 48) அவரது சகோதரியான கந்தசாமி மைனாவதி (வயது 52) மற்றும் ரவிக்குமார் சுதா (வயது 38) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். யாழில்.இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் மழை பெய்தது. அதன் போது வீட்டு க்கு அருகில் உள்ள தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த மூவரும் மழையின் காரணமாக தென்னை மரம் ஒன்றின் கீழ் அமைக்கப்பட்டிருந்த கொட்டகைக்க…
-
- 14 replies
- 1.5k views
- 1 follower
-
-
யாழ்ப்பாண மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் கடல் நீரை சுத்திகரிக்கும் திட்டம் யாழ்ப்பாணம் வடமராட்சி தாளையடி பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடல் நீர் மிகவும் சுத்தமான நன்னீராக மாற்றப்படவுள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள 70,000 குடும்பங்கள் அத்திட்டத்தின் மூலம் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக செலவிடப்பட்ட தொகை 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதுடன், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் தாளையடி பிரதேசத்தில் புதிய திட்டத்தின் மூலம் யாழ்ப்பாண மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. …
-
- 24 replies
- 1.5k views
- 2 followers
-
-
நேற்று முந்தினம் கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தை ராஜசிங்க வீதி அருகில் தமிழர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டும், பத்துக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதலானது சிவிலுடையில் நின்றிருந்த சிறிலங்கா படையினர் ஒருவராலேயே நடத்தப்பட்டதாகவும், குண்டை வீசி எறிந்த கொலையாளி, வெள்ளவத்தை பொலிஸ் நிலையம் நோக்கி ஓடிச் சென்று மறைந்ததாகவும், குண்டு வெடிப்பை அடுத்து அப்பகுதியில் கடமையில் நின்ற பொலிஸாரோ, படையினரோ பெரிதாக அலட்டிக் கொள்லவில்லை என நேரில் கண்ட தன்னை அடையாளம் காட்ட விரும்பாத ஒருவர் குறிப்பிட்டார். இக்குண்டு வீச்சு சம்பவத்தை அடுத்து வெள்ளவத்தை பொலிஸார் அவ்விடத்தில் நின்றோர…
-
- 1 reply
- 1.5k views
-
-
V.I.P நிகழ்வுகளில் பல உயர்மட்ட அரசியல்வாதிகள் கலந்து கொள்வது ஒன்றும் புதிய விடயமோ அல்லது வழக்திட்குமாரானதுமோ அல்ல. எனினும் இங்கே (மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு) கலந்து கொண்டவர்கள் அனைவரும் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள். கூடவே இவர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் மிகவும் நெருங்கிய உறவினர்கள். இலங்கை திடீர் கோடீஸ்வரர் குடும்ப திருமண விழாவில் கலந்து கொண்ட ராஜபக்ஷ (Pvt) Limited அனைத்து நெருங்கிய உறவினர்கள் மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகளின் பட்டியல். மணமகன் மனோஜ் ராஜபக்ஷ - கோத்தபாய ராஜபக்ஷவின் மகன். இதோ அந்த விழாவில் சமூகம் தந்தவர்களின் பட்டியல். 1. கோத்தபாய ராஜபக்ஷ - (தந்தை, பாதுகாப்பு செயலாளர், "மிக் ஒப்பந்த" ராஜா, இன்னும் எண்ணில் அடங்கா அரசிய…
-
- 10 replies
- 1.5k views
-
-
சிறீலங்காவின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான பெயர்களுடைய அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட ஓர் இன சமூகத்தையோ அல்லது வேறு நாட்டை பிளவுபடுத்தக் கூடிய வகையிலான பெயர்களைக் கொண்டிருக்கும் கட்சிகளுக்கு தடைவிதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, குறித்த கட்சிகளின் தற்போதைய மற்றும் கடந்தகால செயற்பாடுகள் குறித்து ஆராயப்படவுள்ளது. செயற்படாத அரசியல் கட்சிகளை ரத்து செய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டில் சுமார் 40 க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருந்த போதிலும் 10 அரசியல் கட்சிகளே செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. புதிய சட்டத்தின் பி…
-
- 13 replies
- 1.5k views
-
-
Channel 4 News uncovers a WikiLeaks cable which appears to show the United States believes responsibility for alleged war crimes in Sri Lanka rests with its leaders, including President Rajapakse. http://www.channel4.com/news/wikileaks-sri-lanka-leadership-responsible-for-crimes
-
- 5 replies
- 1.5k views
-
-
வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன்: அமைச்சர் டக்ளஸ் வட மாகாண சபைக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தான் போட்டியிடவுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஈ.பி.டி.பி கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். வட மாகாண சபைக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவீர்களா? என ஊடகவியலாளரொருவர் அமைச்சர் டக்ளஸிடம் வினவியதற்கு, இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரை நானே தீர்மானிப்பேன் என கூறினார். இந்த முதலமைச்சர் பதவியின் ஊடாக தமிழ் சமூகத்திற்கு இன்னும் பல சேவ…
-
- 2 replies
- 1.5k views
-
-
http://naathamnews.com/2012/02/09/maldives-mahinda/ மாலைதீவில் பதவி துறந்த முன்னாள் அரசுத் தலைவர் மொகமெட் நசீட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். மாலைதீவின் புதிய அரசுத் தலைவராக பதவியேற்றுள்ள மொகமெட் வாஹிட் ஹஸனிடம் இந்தக் கோரிக்கையினை சிறிலங்கா அரசுத் தலைவர் முன்வைத்துள்ளார். சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்கிய நண்பர்களில் ஒருவராக பதவி துறந்துள்ள மொகமெட் நஷீட் உள்ளாதோடு சிறிலங்காவின் தமிழின அழிப்பினை ஐ.நா மனித உரிமைச் சபை உட்பட பல்வேறு சர்வதேச அரங்குகளில் நியாயப்படுத்தி இருப்பவர். இதேவேளை சிறிலங்கா அரசுத தலைவர் மகிந்த ராஜபக்சவின் பணிப்புக்கமைய மொகமெட் நசீட்டின் குடும்பத்தினருக்கு சிறி…
-
- 13 replies
- 1.5k views
-
-
மணலாறு கொக்குதொடுவாயில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வுத்தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 15-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
மனமாற்றம் வராமல் களமாற்றம் வராது! 14.12.2007 ஆட்கள் காணாமல் போகும் வீதத்தில் இலங்கைதான் முன்னணியில் திகழ்கின்றது என்று இலங்கைக்கு உலக சாதனைக் கிரீடம் சூட்டியிருக்கின்றது ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு. தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் குறுகிய ஒரு வாரகால அமர்விலும் ஆறாவது கூட்டத் தொடரிலும் இலங்கை குறித்து ஒரு பிடி பிடிக்கப்பட்டிருக்கின்றது. அந்தக் கூட்டத் தொடரில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கையில் சீர்கெட்டு வரும் மனித உரிமைகள் விவகாரம் குறித்து பல்வேறு விடயங்களை விலாவாரியாக சுட்டிக்காட்டியிருக்கின்றா
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான எமது இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று சிறிலங்கா பாதுகாப்பு பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கேகலிய ரம்புக்வெல கூறியதாவது: தற்போதைய இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக நோர்வே சிறப்புத் தூதுவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் எழுதிய கடிதத்துக்கு நாம் பதில் கடிதம் அனுப்பியுள்ளோம். எமது இராணுவ நடவடிக்கைக தொடர்ந்து மேற்கொள்ளப்படும். எந்த ஒரு தற்காப்புத் தாக்குதலையும் மேற்கொள்ள எமக்கு உரிமை உண்டு என்றார் அவர். puthinam
-
- 2 replies
- 1.5k views
-
-
tweeted by Duncan Stone Sri Lankan 'welcome' for Ch 4 News. For once it's not the BBC taking the flak. tweeted by Duncan Stone Channel 4 News team surrounded by local media on available at Colombo airport in Sri Lanka tweeted by Jonathan Miller nofirezone director Callum Macrae mobbed by lka press accusing him of being anti sri lanka (twitter)
-
- 19 replies
- 1.5k views
-
-
தமிழர்களின் போராட்டவலுவைச்சிதைத்ததிற்கான பலனை இந்தியா அனுபவிக்கத்தொடங்கியுள்ளது. தமிழர்களைப்போராடத்தூண்டிவிட்டு பின்னர் ஒட்டு மொத்த தமிழர்களையே கொன்று குவிக்கவும், கொன்றுகுவித்தும்நாடகமாடிய இந்தியா இன்று 'பிள்ளையார் பிடிக்கக்குரங்கு வந்தது" போல் சீனாவின் பிடியில் மும்முனைகளிலும் அகப்பட்டு என்னசெய்வது என்று தவிதவியாய்த் தவிக்கின்றது. சீனாவோ தன்பிடியைமேலும் வலுப்படுத்திக்கொணடு செல்கின்றது. தமிழர்களை ஒழிக்க இலங்கை அரசிற்கு இந்தியா உதவி இருந்தாலும் இந்திhவின் பலவீனத்தைப்பாவித்து தமிழர்களை ஒழித்தது இலங்கை. மீண்டும் இந்தியா இப்பிராந்தியத்தில் வலுவாக இருந்தால் இலங்கையில் அமைதி நிலவாது என்பதை ராஜபகஸ 1986களில் ஐபிகேஎவ்ஆக இலங்கையில் காலடி வைத்தபோதே கூறியுள்ளார். புலிகளை வளர்த்…
-
- 9 replies
- 1.5k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பிரனர் எஸ்.ஸ்ரீதரனின் அலுவலகத்திலிருந்து சீ - 4 ரக வெடிமருந்து இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டதையடுத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அமைப்பாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/56793-2013-01-12-12-29-36.html
-
- 23 replies
- 1.5k views
-
-
கொடுமையான இலங்கை அரசிற்கு சர்வதேச் உதவி கிடைத்தது சிங்கள அரசியலாளர்களின்தொடாச்சியான் இராஜதந்திரமே இலங்கையானது ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுபட்டபின் (சுதந்திரம் என்ற வார்த்தை பாவிக்கமுடியாது. ஏனெனில் எல்லா மக்களும் சுதந்திரத்துடன் வாழவில்லை) சிங்கள மக்களின் மேலாண்மை அதிகாரத்தால் தமிழ்பேசும் மக்களிள் அடிப்படை உரிமைகள் சிறிது சிறிதாகப் பறிக்கப்பட்டது. அரசியலமைப்பு அதிகாரத்தில் தமிழர்களின் உரிமைகள் உதாசீனப்படுத்தப்பட்டன. பண்டாரநாயக்கவினால் சிங்களம் மட்டும் அரசமொழி என்ற சட்டம் அமூல்படுத்தப்பட்டது. 1957 களில் தமிழ் அரசியலாளர்கள் இதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தபோது தாக்கப்பட்டும், அவர்கள் வாய்களில் சிறுநீர் கழித்தும், பின்னர் கொழும்பு வாழ் தமிழர்கள் அடித்தும் நொருக்க…
-
- 17 replies
- 1.5k views
-
-
இலங்கையர்களுக்கு வீசா வழங்குவதில் இந்தியாவின் புதிய நடைமுறை இலங்கையர்களுக்கு வீசா வழங்குவது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்தினால் புதிய நடைமுறை ஒன்று பின்பற்றப்படவிருப்பதாக கூறப்படுகிறது. இதன் படி இந்தியாவில் நடைபெறவுள்ள கருத்தரங்குகள், நிகழ்வுகளில் இலங்கை உள்ளிட்ட எட்டு நாடுகளில் இருந்து பங்கு பற்றுபவர்களுக்கு விசா பெற்றுக் கொள்வதில் அதிக கெடுபிடிகள் காணப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த நிகழ்வு நடைபெறுவதற்கு 6 வாரங்களுக்கு முன்னதாகவே இந்திய உள்துறை அமைச்சிடம் அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், வீசா பெறவிருப்பவர் குறித்தும் முறையாக உள்துறை அமைச்சிடம் தெரிவித்து, அனுமதி பெற வேண்டும் என கோரப்பட்டு…
-
- 12 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இன்று இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என மக்கள் எண்ணும் அளவிற்கு மூலை முடுக்கெல்லாம் இராணுவத்தினரின் ஆட்சியே ஆட்டிப்படைக்கின்றது என்று ஐக்கிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது. ஐக்கிய பிக்குகள் முன்னணியின் பொதுச்செயலாளர் தீனியாவள பாலித ஹெமி கூறுகையில், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கோரி வெலிவேரிய ரத்துபஸ்வெல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது இராணுவம் மேற்கொண்ட தாக்குதல் சம்பவமாகவே இராணுவ ஆட்சியின் உச்ச நிலையை வெளிப்படுத்துகின்றது. அரசு தனது பிழையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக நடத்திய இக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் சம்பவத்தில் அப்பாவி மக்கள் இருவரின் உயிர் சூறையாடப்பட்டுள்ளன. ஜனநாயக ஆ…
-
- 16 replies
- 1.5k views
-
-
மட்டக்களப்பில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அலுவலகம் மீது கைக்குண்டு வீச்சு இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் மீது நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. இத்தாக்குதலில் அலுவலகம் முன்பாக நிறுத்தி வைக்கப்படடிருந்த 3 வாகனங்களில் ஒரு வாகனம் முற்றாகச் சேதமடைந்துள்ளது. அலுவலகத்தின் ஜன்னல்இ கதவுகளும் குண்டுவெடித்து சிதறியதில் சேதமடைந்துள்ளது. மட்டக்களப்பு நகரில் உயர் பாதுகாப்பு வலயம் என கருதப்படும் லேக் வீதியில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது. 3 சோதனைச் சாவடிகள் அமைந்துள்ள இந்த வீதியிலேயே ஈ.பி.ஆர்.எல்.எஃப். வரதர் அணியின் அலுவலகம் அமைந்துள்ளதோடு போர் நிறுத்த …
-
- 5 replies
- 1.5k views
-
-
கல்மடு பகுதியில் சிறிலங்கா படையினரின் தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 8 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 பேர் பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.5k views
-
-
ஒரு தலைபட்சமான சுதந்திரப் பிரகடனங்கள் - ஒரு பார்வை தமிழீழத் தனியரசுப் பிரகடனத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட உள்ளதாக சிறிலங்காவின் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே அண்மையில் தொடர்ந்து கூறி வருகிறார். பல "ஒரு தலைபட்சமான சுதந்திரப் பிரகடனங்களை" சந்தித்துதான் இன்றைய உலக ஒழுங்கு உருவாக்கம் பெற்றுள்ளது. இந்த சுதந்திரப் பிரகடனங்களில் அனைத்துலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவையும் நிராகரிக்கப்பட்டவையும் உள்ளன. அதேபோல் அனைத்துலக ஆதரவுக்காக காத்திருக்கும் பிரகடனங்களும் உள்ளன. ஒரு தலைபட்சமான பிரகடனங்களுக்குப் பின்னரும் கூட அடிமை நாடுகளாகவும் போரை நடத்த வேண்டியதான நிலையிலும் கூட பல நாடுகள் இருந்துள்ளன. இருந்தும் வருகின்றன.விபரங்களுக்கு
-
- 0 replies
- 1.5k views
-
-
பாதுகாப்புச் செயலாளராக மீண்டும் கோட்டாபய ராஜபக்ஷ! இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராக மீண்டும் கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்கவுள்ளதாக சண்டே ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றும் கபில வைத்தியரத்னவின் இடத்திற்கு கோட்டா நியமிக்கப்படவுள்ளதோடு, அடுத்த வாரம் அவர் தமது கடமையை பொறுப்பேற்பாரென குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை கோட்டா நேற்று சந்தித்துள்ளார். இதன்போது பிரதமர் மஹிந்தவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நல்லாட்சி பிளவுற்று புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ள நிலையில், நாட்டின் முக…
-
- 11 replies
- 1.5k views
-
-
சென்னை: இலங்கையில் தமிழர்கள் படும் துயரத்தைக் கருத்தில் கொண்டு தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிக்க நினைத்தேன். ஆனால் கட்சி நிர்வாகிகள்தான் வற்புறுத்தி போட்டியிட வைத்தனர் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி விருது வழங்கும் விழா மயிலாப்பூர் மாங்கொல்லையில் நேற்று இரவு நடந்தது. கவிஞர் அறிவுநிதி, சுப.வீரபாண்டியன், தமிழருவி மணியன், குணங்குடி அனிபா, தாமரை பெருஞ்சித்திரனார் போன்றவர்களின் சமுதாய பணிகளை பாராட்டி அவர்களுக்கு திருமாவளவன் விருதுகள் வழங்கி கவுரவித்தார். கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், சூது, சூழ்ச்சி, வஞ்சகம் நிறைந்த தேர்தல் அரசியல்களத்தில் என்னால் தாக்கு ப…
-
- 2 replies
- 1.5k views
-
-
யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான மருந்து, உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்தப் பொருட்களை நாகப்பட்டனம் கொண்டு சென்று அங்கிருந்து படகு மூலம் தானே யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு செல்லப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். யாழ் தீபகற்பத்தையும், இலங்கையின் இதர பகுதிகளையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையை இலங்கை அரசு மூடி விட்டது. இதனால் யாழ் தீபகற்பத்திற்கு உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவை செல்வது தடைபட்டது. இதனால் யாழ்ப்பாணத்தில் செயற்கையான உணவுப் பஞ்சம் உருவாக்கப்பட்டது. சரியான முறையில் உணவு, மருந்து கிடைக்காமல், ஏராளமான தமிழர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. கிடைத்த உணவு…
-
- 3 replies
- 1.5k views
-